அகநானூறில் பரதவர் பற்றிய சான்றுகள்
அகநானூறில் இருந்து பரதர் பற்றிய வரலாற்று சான்றுகள்
பாடல் 340
நெய்தல்
பல் நாள் எவ்வம் தீர, பகல் வந்து,
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி,
மாலை மால் கொள நோக்கி, பண் ஆய்ந்து,
வலவன் வண் தேர் இயக்க, நீயும்
5
செலவு விருப்புறுதல் ஒழிகதில் அம்ம
''செல்லா நல் இசை, பொலம் பூண், திரையன்
பல் பூங் கானற் பவத்திரி அன்ன இவள்

கழியே ஓதம் மல்கின்று; வழியே
10
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்;
சென்றோர் மன்ற; மான்றன்று பொழுது'' என,
நின் திறத்து அவலம் வீட, இன்று இவண்
சேப்பின் எவனோ பூக் கேழ் புலம்ப!
பசு மீன் நொடுத்த வெண் நெல் மாஅத்
15
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே;
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டு இமிர் நறுஞ் சாந்து அணிகுவம் திண் திமில்
எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் #பரதவர்
20
கூர் உளிக் கடு விசை மாட்டலின், பாய்பு உடன்,
கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடு வலை
தண் கடல் அசைவளி எறிதொறும், வினை விட்டு,
முன்றில் தாழைத் தூங்கும்
தெண் கடற் பரப்பின், எம் உறைவு இன், ஊர்க்கே?
பகற் குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரர்