பணிப்பொறுப்பு ஏற்பு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயருக்கான வரவேற்பு மற்றும்
பணிப்பொறுப்பு ஏற்பு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி
பணிப்பொறுப்பு ஏற்பு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி
மன்னார் மறைவாவட்டத்தின் மூன்றாவது புதிய ஆயராக பொறுப்பேற்கும் நிகழ்வு சனிக்கிழமை (30.12.2017) நடைபெற இருப்பதால் மன்னார் நகரம் விழாக்கோலம் பூண்டு வருவதுடன் சகல ஆயத்தங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் வட்டாரம் தெரிவிக்கின்றது.
புதிய ஆயரை வரவேற்பதற் அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு மன்னார் தள்ளாடிச் சந்தியில் இருந்து மோட்டார் வாகனப் பவனி ஆரம்பமாகி மன்னார் பிரதான பாலத்தை வந்தடையும். மன்னார் பெரிய பாலத்தடியில் புதிய ஆயர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்கப்படுவார். பின்னர் அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் நாதஸ்வரம், பாண்ட் மற்றும் இன்னிய வாத்தியம் முழங்க புதிய ஆயர் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்குப் பவனியாக அழைத்துச் செல்லப்படுவார்.
மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தை அடைந்ததும் பேராலயத்தின் பிரதான வாயிலில் சர்வமதத் தலைவர்கள்இ சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் போன்றோர் புதிய ஆயருக்கு வாழ்த்துத் தெரிவிப்பர். பின்னர் புதிய ஆயர் உட்பட அனைத்து ஆயர்கள் குருக்கள் பேராலய மண்டபத்திற்கு சென்று அங்கு திருப்பலிக்குரிய ஆடையை அணிந்துகொள்வர். பின்னர் பேராலய மண்டபத்திலிருந்து வீதி வழியாகப் பவனியாக வரும் இவர்களைத் தமிழ்ப் பண்பாட்டு முறைப்படி சிறுமியர் நடனமாடி வரவேற்று பேராலய வாசல்வரை அழைத்து வருவர்.
பேராலய வாசலில் மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு. விக்ரர் சோசை அடிகளார் திருச்சிலுவையை வழங்க புதிய ஆயர் அதனை முத்திசெய்வார். தொடர்ந்து பேராலயப் பங்குத்தந்தை அருட்திரு. பெப்பி சோசை அடிகளார் ஆசிநீர் குவளையை புதிய ஆயருக்கு வழங்க புதிய ஆயர் அதனைப் பெற்று தானும் ஆசிநீரைப் பூசிக்கொண்டு சூழ நிற்கின்றவர்களுக்கும் ஆசிநீரைத் தெளிப்பார். பின்னர் வருகைப்பாடலுடன் குருக்கள் ஆயர்கள் புடைசூழ புதிய ஆயர் பீடம் நோக்கிப் பவனியாகச் செல்வார்.
மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்கள் திருப்பலியை ஆரம்பிப்பார். திருப்பலியின் வாழ்த்துரைக்குப் பின்னர் புதிய ஆயரின் நியமனம் தொடர்பான திருத்தந்தையின் மடல் (Pயியட டீரடட) திருத்தந்தையின் பிரதிநிதி பேராயர் மேதகு நியூஜன் வன் ரொட் ஆண்டகை அவர்களினால் ஆங்கிலத்தில் வாசிக்கப்படும். தொடர்ந்து அதனுடைய தமிழ் மொழிபெயர்ப்பும் வாசிக்கப்படும். திருத்தந்தையின் நியமன மடல் வாசிக்கப்பட்டவுடன் இந்தப் புதிய நியமனத்தை வரவேற்பதன் அடையாளமாக அனைவரும் கரவொலி எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
தொடர்ந்து மன்னார் மறைமாவட்டத்தைப் புதிய ஆயருக்குக் கையளிப்பதன் அடையாளமாக அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை பேராலயத் திறப்பை புதிய ஆயருக்குக் கையளிப்பார். தொடர்ந்து பேராலய நற்கருணைப் பேழையின் திறப்பை பேராலயப் பங்குத்தந்தை புதிய ஆயருக்குக் கையளிப்பார்
.
பின்னர் ஆயருக்குரிய ஆட்சியதிகாரங்களைக் குறிக்கும் செங்கோலை அப்போஸ்தலிக்க பரிபாலகர் புதிய ஆயருக்கு வழங்குவார். தொடர்ந்து அப்போஸ்தலிக்க பரிபாலகரும்இ கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை அவர்களும் புதிய ஆயரை அழைத்துச்சென்று மறைமாவட்ட ஆயருக்குரிய பேராலயத்தின் அதிகாரபூர்வ இருக்கையில் அமர்த்துவர். பின்னர் மன்னார் மறைமாவட்டக் குருக்களும்இ மன்னார் மறைமாவட்டத்தில் பணி செய்யும் குருக்களும் வரிசையாக வந்து புதிய ஆயரின் மோதிரத்தை முத்தமிட்டு தமது வாழ்த்துக்களையும்இ வணக்கத்தையும் கீழ்ப்படிவையும் தெரிவிப்பர்.
தொடர்ந்து குருக்கள் புதிய ஆயரைச் சூழ்ந்து நிற்கும் நிலையில் தமக்கு வணக்கமும் கீழ்ப்படிவும் வழங்குதற்கான உறுதிமொழியை புதிய ஆயர் குருக்களிடமிருந்து பெற்றுக்கொள்வார். தொடர்ந்து துறவற சபைகளின் தலைவர்கள்இ பிரதான திருச்சபைகளின் தலைவர்கள்இ மன்னார் மறைமாவட்டத்தின் பொதுநிலைப் பிரதிநிதிகள் போன்றோர் புதிய ஆயருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பர். தொடர்ந்து உன்னதங்களிலே கீதத்துடன் புதிய ஆயரின் தலைமையில் திருப்பலி தொடர்ந்து இடம்பெறும்.
மன்னாரின் புதிய ஆயர் கொழும்பு உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், அந்த மறைமாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பல ஆண்டுகள் பணி செய்தமையினாலும் கொழும்புப் பேராயர் மேதகு கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை உட்பட கொழும்பு உயர் மறைமாவட்த்தைச் சேர்ந்த குருக்கள், துறவியர், பொதுமக்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன் இலங்கையில் உள்ள ஏறக்குறைய அனைத்து ஆயர்களும் இதில் பங்குபற்றுவதாக அறிவித்துள்ளனர். தென் பகுதியில் இருந்து வரும் ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுமக்களில் பெரும்பாலானோர் 29ஆம் திகதி மாலையே மடுத்திருப்பதிக்கு வந்து தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலர் காலையில் மடுத்திருப்பதிக்கு வந்துசேர்வதாகவும் அறிவித்துள்ளனர்.
அனைவரும் காலை 8.30 மணிக்கு மடுவில் இருந்து புதிய ஆயரை வாகனப்பவனியாக மன்னார் நோக்கி அழைத்துச் செல்வர். மன்னார் தள்ளாடிச் சந்தியை இவர்கள் அடைந்தவுடன் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் பவனியாக புதிய ஆயர் மன்னார் பாலம்வரை அழைத்துச் செல்லப்படுவார்.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராலயத்தில் நடைபெறும் திருவழிபாடுகளில் பங்கேற்கும் எல்லாரும் பேராலயத்திற்குள் உள்வாங்கப்படமுடியாத நிலையில் பேராலயத்திற்கு வெளியே பிரமாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளே நடைபெறும் திருவழிபாடுகளை பந்தல்களுக்குள் இருந்து காண்திரையில் காண்பதற்கு ஏற்ற வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய ஆயர் தள்ளாடியை வந்தடைந்ததும் அங்கு இரானுவத்தினரால் வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படும் என இராணுவ வட்டாரம் தெரிவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(வாஸ் கூஞ்ஞ)
வேம்பார் இல்ல வரலாறு
தூய ஆவி இல்லம்
ஏழு கடல் துறையின் முதல் துறையான வேம்பார் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இவ்வூர் தூத்துக்குடியிலிருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தூத்துக்குடி மறை மாவட்டத்திற்கு உட்பட்ட இவ்வூரில் கிறிஸ்தவ வேதத்தினை பரப்ப புனித சவேரியார் (1542 - 1547) இவ்வூருக்கு வந்து, ஆற்றங்கரையின் ஓரத்தில் குடிசையை அமைத்து, மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். குளத்தில் விழுந்து இறந்த ஒரு பெண் குழந்தைக்கு உயிர் கொடுத்து மக்களின் விசுவாசத்தை வளர்த்திருக்கிறார். அதைத் தொடர்ந்து மறை பரப்ப வந்த வெளிநாட்டுக் குருக்களும் விசுவாசத்தை வளர்க்க உழைத்துள்ளனர்.
1883-ல் பங்குத் தந்தையாக இருந்த ராயப்பன் சுவாமி அவர்களால் ஆரம்ப பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு இரு பால் மாணவரும் கற்று வந்தனர். பின் 1905-ல் ஆண், பெண் தனித்தனியாக பிரிக்கப்பட்டு ஆண்களுக்கு 5-ம் வகுப்பு வரையிலும், பெண்களுக்கு 4-ம் வகுப்பு வரையிலும் நடைபெற்றுள்ளது. இப்பள்ளியை உள்ளூர் வாசிகளே (அமலோற்பவ மாதா ஜூபிலி கிளப்) நிர்வகித்து வந்துள்ளனர். 1920-21ல் தலைமை ஆசிரியருக்கும் (தாமஸ்பிள்ளை) நிர்வாக உறுப்பினர்களுக்குமிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பள்ளியை 1925-ல் வால சுப்பிரமணியபுரத்திற்கு (தெற்கு வேம்பார்) புனித தோமையார் ஆலய வளாகத்திற்குள் மாற்றியுள்ளனர்.
1923-ல் சங்.S.மரியதாஸ் சுவாமிகள் காலத்தில் திரு.குருஸ் மிக்கேல் விக்டோரியா அவர்களின் பெரும் முயற்சியால் புனித செபஸ்தியார் பாடசாலை பரிசுத்த ஆவி ஆலய வளாகத்தில் துவங்கப்பட்டது. பெண்களின் ஆன்மீகக் காரியங்களைக் கவனிக்க கன்னியர் தேவை என்பதை உணர்ந்த மரியதாஸ் சுவாமிகள் அப்பொழுது தூத்துக்குடி மறைமாவட்டத்தில் ஆயராக இருந்த ரோச் ஆண்டவரின் பரிந்துரையின் பேரில் திருச்சியில் 1854 –ல் துவங்கப்பட்டு சீரும் சிறப்புமாக பணியாற்றிக் கொண்டிருந்த புனித வியாகுல மாதா சபைக் கன்னியரை வேம்பார் (பரிசுத்த ஆவி) பங்குக்கு அழைத்தனர். 1925-ஆம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி புனித வியாகுல மாதா சபைக் கன்னியர் நால்வர் வேம்பார் வந்து சேர்ந்தனர். அவர்களை ஊர்மக்கள் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சி ஆரவாரத்தோடும் வரவேற்றனர்.
கன்னியர்கள் தங்குவதற்கு இப்போது இருக்கும் இடத்திலே முக்கால் ஏக்கர் பரப்பில் 54 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட இல்லம் ஒன்றும் 110 அடி நீளமும் 22 அடி அகலமும் கொண்ட அழகிய பள்ளியும் கட்டினர். கன்னியர்களுக்கென கட்டப்பட்ட இல்லமானது, 1925 மே மாதம் பரிசுத்த ஆவியின் பெருவிழாவன்று (31-ம் தேதி) வணக்கத்துக்குரிய ரோச் ஆண்டகை அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு அர்ச்.மார்கரீத் மரியம்மாள் மடம் என்ற பெயரால் திறந்து வைக்கப்பட்டது. அர்ச்.மார்கரீத் மரியம்மாள் பெயரே பள்ளிக்கும் வழங்கலாயிற்று. இப்பள்ளியில் நான்கு வகுப்புகள் வரை மட்டுமே இருந்தன. நான்கு வகுப்புகளிலும் கன்னியரே கற்பித்தனர்.
இக்கால கட்டத்தில் வேம்பாரில் நாயக்கர்கள் மறவர்கள் ஊடுருவல்கள் அதிகமாக இருந்தது. பெரும்பாலும் பரதவ குல மக்களே இங்கு வாழ்ந்து வந்தனர். இவர்கள் இலங்கை வணிகத்தாலும், உள்ளூர் கடல் தொழிலால் கிடைத்த பொருளாதார வசதியாலும் செழிப்புற்று வாழ்ந்தனர். இதன் காரணமாக ஏராளமான குடும்பங்கள் இருந்ததால் பள்ளிகளில் போதுமான அளவு மாணவர்கள் இருந்தனர்.
இதனிடையே 1930 - ஆம் ஆண்டு மூக்கையூரிலும், 1942 - ஆம் ஆண்டு பெரியசாமிபுரத்திலும், 1949 - ஆம் ஆண்டு சிப்பிகுளத்திலும், 1951 – ஆம் ஆண்டு வேம்பார் தோமையார் பங்கிலும் புதிய கன்னியர் மடங்கள் உருவாகின. இந்நான்கு மடங்களும் வேம்பார் மடத்துடன் இணைக்கப்பட்டு வேம்பார் செர்வைட் சொசைட்டி என்ற அறக்கட்டளையாக உருவானது. மேற்கண்ட ஐந்து மடத்தை சேர்ந்த கன்னியர்களுக்கான தியானகளும், பயிற்சிகளும் வேம்பார் மடத்திலே நடைபெற்றன. அக்காலத்தில் கன்னியர்களுக்கான தியானங்கள் நடைபெறும் போது வேம்பார் கன்னியர் மடம் திருவிழா கோலம் பூண்டு காணப்படும்.
1948-ல் இலங்கை விடுதலை பெற்றதும் அங்கு சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட்டதால் குடும்பங்கள் அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. எனவே பள்ளியில் மாணவர்கள் குறைந்தனர். அப்பொழுது பங்குத்தந்தையாக இருந்த சூசைநாதர் சுவாமிகள் அர்ச்.மார்கரீத் மரியம்மாள் பள்ளியை 1964 – ஆம் ஆண்டு புனித செபஸ்தியார் பள்ளியோடு இணைத்து நடுநிலைப்பள்ளியாக்கினர். புனித செபஸ்தியார் நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக இருந்த திரு.ராஜகுலசேகரன் பர்னாந்து அவர்கள் தலைமைப் பொறுப்பை அருட்சகோதரிகளுக்கு கொடுத்தார். அருட்சகோதரி பெனிட்டா மேரி ஒருங்கிணைந்த புனித செபஸ்தியார் நடுநிலைப்பள்ளியின் முதல் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார்.
பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க இராமநாதபுரம் மாவட்டம் கிராமங்களில் உள்ள குழந்தைகள் தங்கி படிக்கும் வகையில் சூசைநாதர் சுவாமிகள் 1964 ல் கருணை இல்லத்தை உருவாக்கினார். 1965-ல் கருணை இல்லம் சகோ.பொனவெந்தூர், கொன்சப்தா, திரு. தம்பிராஜ் கர்வாலோ இவர்களின் பெரும் முயற்சியினால் அரசு அங்கீகாரம் பெற்றுள்ளனர். ஆண் குழந்தைகள் தங்குவதற்கு முதலில் மார்க்ரீத் பள்ளியாக இருந்த பள்ளிக் கட்டிடமும், பெண் குழந்தைகள் தங்குவதற்கு ஊரிலிருந்து திரு. வெல்ச்சர் கர்வாலோ கொடுத்த நிலத்தில் திரு. செல்வம்காகு கட்டிக் கொடுத்த கட்டிடமும் பயன்பட்டது. பின்னாளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்ததால் மறைமாநிலம் மூலம் பெண் குழந்தைகள் தங்க மாடி கட்டிக் கொடுக்கப்பட்டது.
1951 – ஆம் ஆண்டு வேம்பார் தோமையார் பங்கிலும் புதிய கன்னியர் மடங்கள் உருவாகினும் அங்கு கன்னியர் இல்லம் கட்டப்படும் வரையிலும் வேம்பார் (பரிசுத்த ஆவி) மடத்திலிருந்தே கன்னியர்கள் புனித பீற்றர் பள்ளிக்கு பணி செய்ய சென்று வந்தனர்.
1977-ல் கருணை இல்ல குழந்தைகள் மற்றும் வேம்பார் மக்களின் உடல்நலத்தினை கருத்தில் கொண்டு வியாகுல அன்னை சபைக் கன்னியர்களை பணியாளர்களாகக் கொண்டு சிறிய மருந்தகம் (DISPENSARY) கருணை இல்லத்தின் அருகே கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. பல குழப்பங்களுக்கு மத்தியில் அம் மருத்துவமனை புனித தோமையார் ஆலயப் பங்கிற்கு மாறி 7.10.77-ல் சாக்ரோஸ் மருத்துவமனை என்ற பெயரில் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.
10.8.1997 ல் மதுரை மாநிலத் தலைவி அருட்சகோ.ரோகாசிற்றா மேரி அவர்கள் வேம்பார் இல்லத்தை பார்வையிட்டு பரிந்துரை செய்ததின் அடிப்படையில் 07.10.97 அன்று பெரிய இரும்புக்கதவு அமைக்கப்பட்டது. மதுரை மாநிலத்திலிருந்து தூத்துக்குடி மரிய நட்சத்திர மாநிலம் என்னும் பெயரில் தனியாக 1998-ல் நிறுவப்பட்டது.
02.12.2000 இல்லம் துவங்கி 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இல்லம் பழுதுபார்க்கப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டது. மின் இணைப்புகள் அனைத்தும் பழுதாகியிருந்தால் அனைத்து இணைப்புகளும் சரிசெய்யப்பட்டது. 6.2.2001 பெரியசாமிபுரம் பங்குத்தந்தை இல்லாத கால கட்டத்தில் திருவழிபாடுகளில் பங்கு கொள்ள வசதியாக அங்கிருந்த சகோதரிகள் இவ்வில்லத்தில்வந்து தங்கி பள்ளிக்குச் சென்று வந்தார்கள்.
2௦16 ஜூன் மாதத்திலிருந்து நான்கு மறைமாநிலங்கள் இரண்டு மறைமாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. வேம்பார் யூனிட் பாளையங்கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்ட மரிய நட்சத்திர மறைமாநிலத்தில் சேர்க்கப்பட்டது. வேம்பார் இல்லத்தின் மேல்தளம் பாதிக்கப்பட்டு கட்டைகள் விழும் நிலையில் இருந்ததால் கட்டிடம் பழுதுபார்க்கும் வேலை 25.01.2017 ல் ஆரம்பமானது. சுண்ணாம்பு சுவர் அனைத்தும் கொத்தி பூசப்பட்டது. அறைகளிலும் கோவிலிலும் புதிய டைல்ஸ் போடப்பட்டது. ௦6-௦6-17-ல் கான்கிரீட் போட்டப்பட்டு அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் பங்குத்தந்தை சகாய ராஜ் வல்தாரிஸ் அவர்கள் புதுப்பிக்கப்பட்டிருந்த நற்கருணைப் பேழையை மந்திரித்து, திரு இருதயப் படத்தையும் ஸ்தாபித்தார். 28-06-17 இல்ல வேலைகள் முழுவதுமாக முடிந்த நிலையில் கன்னியர் இல்லம் சுத்தம் செய்யப்பட்டு இல்லக் கோவிலில் புதிய பங்குத்தந்தை பிரதீபன் லிபோன்ஸ் அவர்களால் நன்றித்திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
- நி. தேவ் ஆனந்த்
Servite Convent of Vembar
Dev Anandh Fernando
17:49
புனித லூர்து அன்னை ஆலயம், இடிந்தகரை
ஆலய வரலாறு:
கோவில் கட்டுவதற்கான செலவில் பெரும் பகுதி ஊர் மக்களால் கொடுக்கப்பட்டது. ஒரு சிறு பகுதி மட்டும் பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தது. இடிந்தகரை முதலில் போர்ச்சுக்கல் நாட்டு துறவிகளின் பொறுப்பில் இருந்தது. புதிய கோவில் கட்டும் சமயத்தில் பிரான்ஸ் நாட்டு துறவிகளின் பொறுப்பில் இருந்தது. அக்காலத்தில் பிரான்ஸ் நாட்டில் லூர்து மலையில் லூர்து அன்னை காட்சி அருளியதன் காரணமாக உலகெங்கும் லூர்து அன்னை பக்தி பரவியது. இதன் காரணமாக புதிதாக அமைக்கப்பட்ட ஆலயம் லூர்து அன்னைக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது.
அன்னையின் சிலை பிரான்சிலிருந்து கொண்டு வரப்பட்டது. முற்றுப் பெறாத நிலையில் 1906ம் ஆண்டு பெப்ரவரி 2ம் தேதி ஆலயம் திறக்கப்பட்டது. அதுவரை ஆலயக் கட்டுமானச் செலவு ரூ.20,000/-.1928ம்ஆண்டு கோவில் முகப்பில் 91 அடி உயரமுள்ள இரு ஊசிக் கோபுரங்களும், ஒலி எழுப்ப பெரிய மணியும் அமைக்கப்பட்டன. திருமுழுக்கு வழங்கப்பட்ட கோவில் மணியின் பெயர் சுந்தரி. 1932ம் ஆண்டு மலையுடன் கூடிய கெபி கோவிலைச் சுற்றி அமைக்கப்பட்டது. இவ்வளவு பெரிய கெபியும், ஒழுங்காக அமையப்பெற்ற தேரோடும் வீதியும் வேறெந்த நெய்தல் கிராமத்திலும் இல்லை.
இக்கெபியில் அழகிய ஸ்தலங்கள் இருந்தன. அழகுணர்வு இல்லாத பாதிரியார் ஒருவரால் 1983-87ல் ஸ்தலங்கள் மற்றும் கோவில் பீடம் இடிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டு விட்டன. 1954-55ல் கோவில் முன் மேடை அமைக்கப்பட்டது. 1955-57ல் தேரும் அதற்க்கான பிறையும் அமைக்கப்பட்டன. இதே காலத்தில் முதலில் சுவரில் குடைந்து அமைக்கப்பட்டிருந்த லூர்து அன்னை, புனித இராயப்பர் மற்றும் புனித சின்னப்பர் சிலைகள் அழகிய தேக்கு மரப்பீடம் அமைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டன. 1962ம் ஆண்டு லூர்து மலையில் அன்னையின் பாதம்பட்ட கல் ஒன்று இவ்வாலயக் கெபியில் உள்ள மலையில்அமலோற்ப்பவ அன்னை சிலையின் நேர் கீழாக பதிக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் திருமுழுக்குப் பெற்ற இருவர் ஆயர்களாகவும், 35க்கும் அதிகமானோர் துறவிகளாகவும், 100க்கும் அதிகமானோர் கன்னியர்களாகவும் ஆகியிருப்பது உலகில் வேறு எந்த ஆலயத்திற்கும் கிடைக்காத பெருமை.
ஆலய அமைப்பு:
தென் தமிழகத்தில் இதன் வயதை ஒத்த ஆலயங்களில் இதுவே கொள்ளளவில் பெரிய ஆலயம்.கோவிலின் நீளமும், அகலமும் உயரமும் மற்ற கோவில்களை விடக் கூடுதல்.கோவிலின் நடுவில் மொத்தம் பக்கத்திற்கு 7 வீதம் 14 பெரிய தூண்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 4 உருண்டை கல் தூண்களால் ஆனவை. பக்கச் சுவர்களில் பக்கத்திற்கு 7 வீதம் 14 தூண்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 3 உருண்டை கல் தூண்களால் ஆனவை. பிற்காலத்தில் இவற்றின் மீது சாந்து பூசப்பட்டதால் இன்று ஒரே தூண் போல காட்சி அளிக்கிறது.
மிக உயரமான, பெரிய, பாரமுள்ள கோவில் மாடத்தை இத்தூண்களே தாங்குகின்றன. இவ்வளவு நீளமான கல் தூண்களை எங்கிருந்து, எப்படி கொண்டு வந்து கட்டினார்கள் என்பதை எண்ணும்போது வியப்பு மேலிடுகிறது. ஒவ்வொரு நான்கு கல்தூண்களையும் இணைத்துப் பிடிக்க அடியிலும்,மேல்முகட்டிலும் வட்ட வடிவ கல் பொருத்தப்பட்டுள்ளது.ஏராளமான தூண்கள் இருந்தாலும், கோவில் பீடத்தை கோவிலின் எல்லாப் பாகங்களிலிருந்தும் தெளிவாகப் பார்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. மக்கள் ஆலயத்திற்குள் நுழைய முன்புறம் கிழக்குப்பகுதியில் பெரிய மேடையும், அதை அடுத்து 3 வாயில்களும், வடக்குப்பகுதியில் 2ம், தெற்குப் பகுதியில் 2மாக , மொத்தம் 7 வாயில்கள் உள்ளன.
பாதிரியாரும் கோவில் பணியாளர்களும் உள்ளே நுழைய சிறப்பு வழி உள்ளது. அனைத்து வாயில்களின் முன் ஒழுங்கான படிக்கட்டுகள் கைப்பிடி வசதியுடன் உள்ளன. கோவிலின் முன் மேடை கட்டப்பட்டதால் முன் தோற்றம் குட்டையாகத் தெரிகிறது. முன்பகுதியில் 2 ஊசிக் கோபுரங்களும், அவற்றினிடையே 4 சிறு கோபுரங்களும் உள்ளன. கோவில் மாடம் முழுக்க பக்கத்திற்க்கொன்றாக 11 வீதம் 22 சிறு கோபுரங்கள் உள்ளன. இதற்கு அடுத்த அடுக்கில் பக்கத்திற்க்கொன்றாக 9 வீதம் 18 சிறு கோபுரங்கள் உள்ளன.
கோவில் மாடத்தில் அலங்காரம் செய்ய வசதியாக பெரிய துளைகள் உள்ளன. 800 கிலோ எடை கொண்ட கோவில் மணி இடது புறம் உள்ளது. இதன் நாதம் 3 கிமீ அப்பால் வரை ஒலிக்கக் கூடியது.கோவில் மாடம் செல்ல வலதுபுறம் வளைவுப் படிக் கட்டுகள் உள்ளன.திருமுழுக்குத் தொட்டி கோவிலின் முதன்மை வாயிலின் அருகில் உள்ளது. ஜன்னல் மாடங்களில் வண்ணக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. அழகிய பீடம் தேக்கு மர வேலைப்பாடுகள் நிறைந்தது. இதன் உச்சியில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. நடுவில் அன்னையின் ஆளுயரச் சிலையும் இருபுறமும் ஊர்ப் பாதுகாவலர்களான புனித இராயப்பர், சின்னப்பர் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. முன்பு இருந்த தரை ஓடுகள் அகற்றப்பட்டு பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. சிலுவைப்பாதை வழிபாட்டுக்கென கோவிலின் உள்ளும் புறமும் ஒழுங்கான வழி உள்ளது.கோவிலின் வலது புறம் கெபி அருகில் உள்ள கிணறு, மாதா கிணறு என்று அழைக்கப்படுகிறது.
எல்லாவற்றிக்கும் மேலாக நூறாண்டுகளைத் தாண்டியும் வரும் மக்கள் கூட்டத்தை தாங்கும் திறன் கொண்ட இக்கோவிலின் உள்ளே நுழையும் போது மனதில் தோன்றும் அமைதியையும், அன்னையின் எழில் உருவைக் காணும் போது எழும் பெருமகிழ்ச்சியை வர்ணிக்கவும் என்னிடம் வார்த்தைகள் இல்லை.
(நன்றி: இடிந்தகரை நூற்றாண்டு விழா மலர், திரு.யு.ப.மில்ட்டன்)
OUR CHURCH'S - 6
Dev Anandh Fernando
22:38
அகநானூறில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்
70 நெய்தல்
கொடுந் திமிற் #பரதவர் வேட்டம் வாய்த்தென,
இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி,
கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன்
5
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற,
பலரும் ஆங்கு அறிந்தனர்மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றை, புதுவது
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
10
கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப்
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
வென் வேற் கவுரியர் தொல் முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,
15
வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த
பல் வீழ் ஆலம் போல,
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.
70 உரை
வி - ரை.) ஆன்றிசின் - அமைக. ஈதலால் இன்ப முண்டாகு மென்பதனை, 1'இத்துவக்கும் இன்பம்’ என்பதனால் அறிக. செய்பொருட்டிறவர் - பொருள் செய்யும் கூற்றினர். மோரியர் வடநாட்டின்கண் ணிருந்த அரச வகுப்பினர். இவர்கள் சில பகைவரோடு போர் கருதித் தெற்கே சென்ற காலை, குறுக்காக நின்றதொரு மலையைத் தேருருள் செல்லுமாறு குறைத்து வழிசெய்துள்ளார் என்ற வரலாறு, ‘தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர், பணியா மையிற் பகைதலை வந்த, மாகெழு தானை வம்ப மோரியர், புனைதேர் நேமி புருளிய குறைத்த, இலங்குவெள் ளருவிய வறையா யும்பர்’ (251) எனவும், ‘முரண்மிகு வடுநர் முன்னுற மோரியர், தென்றிசை மாதிரம் முன்னிய வரவிற்கு, விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத், தொண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த, அறையிறந் தவரோ சென்றனர்’ (281) எனவும் இந்நூலுள்ளும், 2'வென்வேல், வெண்பொரு நெடுங்கடைக் கொடித்தேர் மோரியர், திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த, உலக விடைகழி யறைவாய்நிலைஇய’ எனப்புறநானூற்றிலும் வருவனவற்றான் அறியப்படும். சிலை - ஒரு மரமுமாம். நன்கலம் தரூஉம் - பெற்ற கலன்களைப் பாணர் முதலாயினார்க்குத் தரும் என்றுமாம்.
அகநானூறில் பரதவர்
Dev Anandh Fernando
21:07
அகநானூறில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்.
65 பாலை
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும்
அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம்
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்
சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்;
5
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற்
பாடிச் சென்ற பரிசிலர் போல
உவ இனி வாழி, தோழி! அவரே,
பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச்
செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும்
10
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி,
மீன் கொள் #பரதவர் கொடுந் திமில் நளி சுடர்
வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு,
மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை
உயவல் யானை வெரிநுச் சென்றன்ன
15
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி,
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல்
ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம்; ''பணைத் தோள்,
நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை,
நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு
20
அரியவால்'' என அழுங்கிய செலவே!
வேறுப்பட்ட தலைமகட்குத் தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி சொல்லியது. - மாமூலனார்
வருங்காலை, யிடைச்சுர மருங்கிற் றவிர்த் லில்லை, யுள்ளம் போல வுற்றுழி யுதவும், புள்ளியற் கலிமா வுடைமை யான” எனத் தொல்காப்பியனார் கூறுமாற்றானும் அறிக: ஐதியம்புதல் - நடக்க நடக்க விட்டி சைத்தல் என்றலுமாம்.
(மே - ள்.) 1'எருமையும் மரையும் பெற்றமம் நாகே’ என்னம் சூத்திரத்து, பெற்றத்திற்கு நாகு எனும் பெண்பாற் பெயர் வந்ததற்கு, ‘உடனிலை வேட்கையின் மடநாகு தழீஇ’ என்பதனை எடுத்துக் காட்டினர், பேரா.
அகநானூறில் பரதவர்
Dev Anandh Fernando
20:20
அகநானூறில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்
பாடல்
140 நெய்தல்
பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் #பரதவர்
இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,
என்றூழ் விடர குன்றம் போகும்
5
கதழ் கோல் உமணர் காதல் மடமகள்
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி,
''நெல்லின் நேரே வெண் கல் உப்பு'' எனச்
சேரி விலைமாறு கூறலின், மனைய
விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- அம்மூவனார்
பாடல்
140 நெய்தல்
பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் #பரதவர்
இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,
என்றூழ் விடர குன்றம் போகும்
5
கதழ் கோல் உமணர் காதல் மடமகள்
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி,
''நெல்லின் நேரே வெண் கல் உப்பு'' எனச்
சேரி விலைமாறு கூறலின், மனைய
விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய
10
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு,
இதை முயல் புனவன் புகைநிழல்j கடுக்கும்
மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வம் தீர வாங்கும் தந்தை
கை பூண் பகட்டின் வருந்தி,
15
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு,
இதை முயல் புனவன் புகைநிழல்j கடுக்கும்
மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வம் தீர வாங்கும் தந்தை
கை பூண் பகட்டின் வருந்தி,
15
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- அம்மூவனார்
அகநானூறில் பரதவர்
Dev Anandh Fernando
21:13
கிபி. 3 ஆம் நூற்றாண்டில் அசோக மன்னரின் உறவினரான மகிந்தர் இலங்கை செல்லும் வழியில் காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கி 7 புத்த விகாரங்களைக் கட்டியதாக சிலப்பதிகாரமும், மணிமேகலையும் கூறுகிறது. பௌத்தர்களின் சிறு தெய்வங்களில் ஒன்றாகிய தாராதேவி என்னும் மணிமேகலை தெய்வம் கடல் காவல் தெய்வமாகும். இது கோவலனின் குல தெய்வமுமாகும். இதனாலேயே தனக்கும் மாதவிக்கும் பிறந்த மகளுக்கு மணிமேகலை எனப் பெயரிட்டான் கோவலன். இத்தெய்வத்தை சமுத்திர மணி மேகலை, முதுமணிமேகலை என்றும் வழங்குவர். பௌத்த மத குறியீடுகள் எட்டில் இரட்டை மீன் குறியீடு, சங்கு குறியீடு, கப்பலை ஓட்டும் சருக்கியின் குறியீடு என கடல் சார்ந்த 3 குறியீடுகள் இடம் பெற்றிருப்பதும் கவனத்திற்குரியது.
சிலம்பில் அழற்படுகாதையில் மதுரையில் கண்ணகியின் கோவத்தைத் தவிர்க்க மதுராபதி தெய்வம் முயலும் காட்சியுள்ளது. பத்தினி தெய்வ வழிப்பாட்டில் கண்ணகியின் பங்கு மிகவும் முக்கியமானது. சேரன் செங்குட்டுவன் சுருளி மலையில் கண்ணகிக்கு கோவில் எழுப்ப பாண்டியன் நெடுஞ்செழியன் மகன் வெற்றி வேல் செழியன் கொற்கையில் கோயில் எழுப்பினான். வெற்றி வேல் அம்மன், செழிய நங்கை, செழுகை நங்கை என அழைக்கப்பட்ட அவ்வம்மன் சிலை தற்போது காணாமல் போய் அவ்விடத்தில் துர்க்கையம்மன் சிலை மட்டுமே உள்ளது. கண்ணகி வழிபாடே நாளடைவில் பகவதி அம்மன் வழிபாடாக உருப்பெற்றது. பகவதி வழிபாடு பரதவரிடம் காணப்பட்ட வழிபாடுகளில் ஒன்றாகும். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை கட்டியது பரதவ சிற்றரசன் வில்லவராயனே. இன்றுவரை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கொடியேற்ற நிகழ்வில் பரதவர்கள் முக்கிய இடம் பெறுவதும் வழக்கிலுள்ளது.
பரதவர்கள் கடல் தொழில், உப்பு வணிகம், பண்டமாற்றுதல் (வணிகம்) என வேலை சார்ந்த பிரிவினைகள் உருவான போது செல்வம் பெருக பெருக கடற்கரையை ஒட்டிய ஊர்களில் குடியேறி வணிகத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இவர்கள் தமது சமூக அந்தஸ்தையும், பூர்வாசிரமத்தையும் நிலைநாட்ட சமண மற்றும் பௌத்த சமயங்களை தழுவினர். மீன்பிடித்தலும், வேட்டையாடுதலும் கொலைத் தொழில் என சமணம் கூறியது. இதனையே பட்டினப்பாலை பின்வருமாறு கூறுகிறது.
‘வலைஞர் முன்றில் மீன் பிறழ்வும்
விலைஞர் குரம்பை மா ஈண்டவும்
கொலை கடிந்து’ ....
இதன் பொருளாக மீன் பிடிப்போரையும், இறைச்சி விற்போரையும் தமக்குப் பகையாகக் கொண்டு, தாம் முற்பட்ட கொலைத் தொழிலை அவர்களிடமிருந்து போக்கி வாழ்ந்து வந்தனர் என்பதாகும். அவர்களில் ஊண் உண்போர் பௌத்த சமயத்தையும், ஊண் உண்ணாதோர் சமண சமயத்தையும் ஏற்றுக் கொண்டனர். இவர்களே ‘குலத்தில் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்’ என அழைக்கப்பட்டனர்.
முற்காலத்தில் மூக்கையூர், வேம்பாறு, வைப்பாறு ஆகிய பகுதிகளில் வாழ்ந்த பரதவர்களின் முக்கிய மீன் பிடி தலமாக அமைந்த நல்ல தண்ணி தீவுப் பகுதியின் கரைப் பகுதியில் காணப்படும் கீழமுந்தல் கிராம தெய்வமாக ‘தாராதேவி’ இருந்தாகவும், தற்போது ‘சேது வந்த அம்மன்’ என்னும் பெயரில் குறிக்கப்படுவதாகவும் அறிய முடிகிறது. இவ்வூருக்கு அருகே காணப்படும் மாரியூர் கடற்கரையோரக் கோவிலில் ‘பவள நிற வல்லியம்மன்’ என்னும் பெயரில் உமையாள் வழிபாடு நடைபெறுகிறது.
மதுரையை அடுத்த அரிட்டாபட்டி கழிஞ்ச மலை குகையில் காணப்படும் சமணர் படுகைகளை இலஞ்சியின் தலைவன் மாபரவன் மகன் இமயவன் அமைத்துக் கொடுத்ததாகக் காணப்படும் கல்வெட்டின் மூலம் சமணம் தழைக்க பரவர்கள் காரணமாக இருந்ததை உறுதி செய்ய முடிகிறது. தவிர கொற்கையிலும், பழைய காயலிலும், வேம்பாற்றிலும் சமணர் கால கற்பீடங்களும், சிலைகளும் காணப்படுவதும், கடலோர கிராமங்கள் பலவற்றிலும் சமணர் சிலைகள் காணப்படுவதும் சமண வழிபாடு கடலோரத்தில் காணப்படுவதை உறுதிப்படுத்த முடிகிறது.
பரதவர்கள் வழிபாட்டில் ஊர் தேவதைகள் எனப்பட்ட அம்மன்களே பெரிதும் இடம் பெற்றனர். எனினும் மீனாட்சியே இவர்களின் குல தெய்வமாகும். மீன்பிடித்தலிலும், முத்தெடுத்தலிலும் ‘மீனாட்சி பங்கு’ என்று எடுத்து வைத்தனர். குமரி அம்மன் இவர்களின் முக்கிய தெய்வங்களில் ஒன்றாகும். இவ்வம்மனை ‘கடல் கெழு செல்வி’ என அழைத்து மகிழ்ந்தனர். குமரி அம்மனும், கொற்கை மாரியம்மனும் பரதவர்களின் முக்கிய கடல் காவல் தெய்வங்கள் ஆகும். இவ்விரு அம்மன்களின் கோவில் சன்னிதிகளும் கடலை நோக்கியவாறு அமைந்திருக்கிறது.
புதுச்சேரி, வீராம்பட்டினத்திலுள்ள செங்கழுநீர் அம்மனும் பரதவர் வழிபட்ட முக்கிய தெய்வம் ஆகும். ஒரே தேவதாரு மரத்துண்டினால் செய்யப்பட்டதே இவ்வம்மன் சிலையாகும். பட்டாரிகா, தேவகன்யா, பத்மகன்யா, சிந்து கன்யா, சுகல கன்யா, வனகன்யா, சமாதி கன்யா, என அழைக்கப்பட்ட சப்த கன்னியரின் வழிபாடும் பரதவரிடம் அக்காலத்தில் காணப்பட்டன.
சமயத்தில் சங்கமித்த சமூகம் - 6
Dev Anandh Fernando
20:55
Pope Francis appointed him bishop two days ago. He will meet diocese’s staff to understand its most urgent needs. The province is still feeling the consequences of the country’s civil war. The new bishop plans to continue in the footsteps of his predecessors. Politics and religion do not mix, but it is urgent to defend people.
Colombo (AsiaNews) – Mgr Fidelis Lionel Emmanuel Fernando is the new bishop of Mannar, a diocese in Sri Lanka’s Northern Province, scene of major fighting during the country’s civil war. Pope Francis appointed him two days ago.
His appointment will give him an opportunity to serve the Tamil people, "use my mother tongue and help the people in Mannar who are looking for a leader, who need someone who can speak to them, who can listen to them." The new bishop plans to be close to those who " lost their land" and to the relatives of those who "disappeared" or were "killed".
Born on 20 May 1948 in Jaffna, he was ordained in January 1973. In 1987 he obtained his doctorate in Moral Theology from the Catholic University, Washington. In February 2012, he was appointed auxiliary bishop of the Archdiocese of Colombo. He has held several positions, including professor, vice rector and rector at the National Seminary, Kandy.
Here is his interview with AsiaNews.
Your Excellency, what is your impression of this new appointment?
Well, I know Mannar is a big diocese. More than one hundred thousand Catholics. More than one hundred priests and also many religious. I have to serve this diocese so I look it as a big task given to me. I have to take on this responsibility and be prudent. Thus, I can only prepare myself with the help of the Lord to handle this huge task.
What is your plan for new pastoral work in the diocese?
Although the appointment was made three days ago I have not yet met the priests there, so I will work on a plan for the diocese only after I meet the priests and the religious in the diocese. I need to know what its urgent needs are, what its priorities are. Only afterwards will I be able to lay down a plan.
How are you going to identify the need of the people, especially the Tamils who suffered because of the long civil war?
I have recently visited Mannar and I know that it still has lot of problems. After the war, they [the Tamils] lost their land, their dear ones who disappeared. A lot of people were killed. Families have been suffering as a result of the absence of family members, especially the heads of families. They are still in a situation that has not yet been settled. There are a lot of things that need to be solved. Therefore, we have to help them find solutions to the many different types of problems they are facing.
For example, in some places their homes are near churches, and have been occupied by soldiers. So, they have to travel two, three kilometres just to come to church. We need to find various solutions to this kind of problem.
Your Excellency, previously you were auxiliary bishop in the south, in Colombo. Now you are going to take on a big responsibility as the bishop of Tamil people, in the northern part in the country. Soon after hearing about your appointment, some people, especially in social media, raised questions as to why a Sinhalese bishop was chosen for a Tamil area and Tamil People? They wonder: “What does he know about Tamil people to serve them . . . So what is your take on this challenge?
People who really know me, know that I studied at St Benedict's Collage in Tamil, in Kotahena, Colombo. So, I have a firm foundation in the Tamil language. I took pains to study Sinhalese in order to be close to the people in Colombo. It [Sinhalese] is not my mother tongue. My mother tongue is Tamil. And I would love to serve Tamil speaking people. I did that in Colombo, wherever it was possible to serve the Tamil people in Colombo. In fact, I feel sorry that I have to leave them because they depended on me for Tamil services in Colombo. But now I have the opportunity to use my own mother tongue and help the people in Mannar who are looking for a leader, who need someone who can speak to them, who can listen to them.
Bishop Rayappu Joseph led the diocese of Manar for a long time, and will never be forgotten. People wonder if the new bishop will follow his path.
Yes, in the Catholic Church, it is not like politics. When we accept a task, our main duty is to continue what our predecessors did. Mgr Thomas Savundaranayagam was the first bishop of Mannar. What he did was deepened by Bishop Rayappu Joseph who succeeded him. So, it is now my duty to continue from where Bishop Rayappu Joseph left off. I don't know whether I have the talent and the capacity to do so. It is up to God to give me the strength, to help me in continuing what Bishop Rayappu Joseph did for his people.
I of course will be very careful of not mixing politics with religion. Whatever we can do for the people, we will do. Even speak on their behalf. Speak of their rights. That is all that we will do. I have the support of other bishops. About three or four bishops have been with me at the National Seminary, either as staff or students. So, I know them. I also have the support of His Eminence Cardinal Malcolm Ranjith with whom I have served for many years. Therefore, on that score, the Catholic Church has seen it all before I was appointed to this important position.
My message is that God has entrusted me with a huge task. It is an episcopal ministry of very high order. I would be grateful to people who will cooperate with me, people who will pray for me, people who will give me a hand.
- Melani Manel Perera
Source : www.asianews.it
Mgr Emmanuel Fernando, the new bishop of Mannar, in the service of Tamils
Heritage Vembarites
07:18