Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

மாதேவ தேவதாயே!


இன்ப கவிராயர் M.X.ஹென்றி லெயோன் 04.08.1908ல் 
தஸ்நேவிஸ் நாயகிக்கு பாடிய பதினான்கு சிரீரட்டை ஆசிரிய விருத்தம்


வானூடுலாவு மோரீராறு மீனைநின்
மகுடமெனவே வளைந்து
வையஞ் சிறக்க வொளிர் வெய்யோனை நினது திரு
வளராடையா யுடுத்து
மாசீததார காபதி யெனுந் திங்களை
மலர்ப்பதந் திணை மிதித்து
வானவர் துதிக்குநல லங்கார நாயகீ
மாதேவ தேவதாயே !

சோனைமழை பெய்து வளர்பயிர் செழித்தோங்கவுந்
தொடர் பஞ்சமே யகலவும்
துயர் தருங் கொள்ளை நோய்முற்றுமே யொழியவுந்
துன்பமென்பவை யெவையெனுந்
தொல்லுல கிலுனது மகரெம்மை யணுகாமலே
சுகிர்ததயை யொடு காக்கவும்
தோன்றலர்கள் குலதிலக ஆண்டவணீ வெளிவரத்
துணிபோ டெழுந்தருளும்.

ஆனவோர்பைம் பொன்னினாலமைத் தழகுபெற
அரதனங்களை யழுத்தி
அமரருங் கொண்டாடு முனது மாரதமதை
யலங்காரமாய்ப் புதுப்பித்
தன்னைநீ வரும்வழி யையுஞ் செப்பனிட்டாங்கு
அடர் மரக்கிளைகள் கொய்து
ஆயத்தமாயின் நின்வரவை யெதிர் பார்த்தியா
மனைவருங் காப்பதுண்மை.

தேனைநுகர்வண்டினஞ் செவ்வழிப் பாட்டினைத்
தீங்குரலினா லிசைப்பச்
செங்கமல வாவிதிகழ் திருமந்திர நகரின்மா
சீராலயத் தெழுந்த
செல்வமே பரதர்தஞ் செல்வதஸ் நேவிசாஞ்
செல்வமே மாற்றமில்லாச்
செல்வமே யெம்மைநீ கைவிடா தருள்புரிவை
செல்வ வாரி தியென்னனையே!

இரத்த பூமி - 12

பரத சமூகம் என்றைக்குமே ஒற்றுமையாய் வாழும்

இருள் கிழித்து வெளி வந்தது சூரியன் புன்னைக் கோட்டையில் மீண்டும் சிலுவைக்கொடி படபடத்து பறந்து கொண்டிருந்தது. அத்துடன் இப்போது மீன் கொடியும் ஏற்றப் பட்டிருந்தது. கோட்டை மைதானத்தில் மக்கள் வெள்ளம் வெளியூர் பரதவ மறவர்கள் கூட்டத்தில் சொந்தங்களை தேடி பிடித்து உளம் மகிழ உரையாடிக்கொண்டிருந்தனர். எங்கும் உற்சாகம் உறையூட கோட்டையே மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தில் குலுங்கியது.

கொற்கை கோ வாழியவே
அடப்பனார் வாழியவே
பட்டங்கட்டிமார் வாழியவே
பாண்டி பரதவர் குலம் வாழியவே
பரதவர் ஒற்றுமை வாழியவே

விண் முட்டும் கோஷங்கள் அதையும் தாண்டி அடப்பனார் அதட்டல் குரலேழுப்பி கோஷத்தை நிறுத்தினார். அடுத்த நொடியே அமைதியானது.

பாண்டியம்பதி மக்களே..!! பொறுங்கள் சொல்வதை கேளுங்கள்..

போர்த்துகீசியர் இல்லாமலே பரதவ குலம் ஒன்றிணைந்து பரதவ தலை நகர் புன்னை காயலை இரப்பாளியின் கொள்ளை கூட்டத்திடமிருந்தும் விதால நாயக்கனின் விஷமத்திலிருந்தும் மீட்டெடுத்திருக்கிறோம். இன்னும் முடியவில்லை நமது இடப்பாடுகள் தூயதந்தை என்னவானார் தெரியவில்லை. கேப்டன் குடும்பம் என்னவாயிற்று, நமது காத்தவராயன், போர்த்துகீசிய வீரர்கள் நிலமை நமக்கு இதுவரை தகவல் ஏதுமில்லை.

முதும் பரதவர் ஒருவர் பொறுக்கமுடியாமல் ஐயா நமது பெண்டு பிள்ளைகளும் எங்கே ஏது ஒன்றுமே தெரியவில்லை ஐயா கொள்ளைக்காரவனுவ கொன்னு போட்டுட்டானுவளா பயம்மாயிருக்கியா ....னு விசும்பினார். அடப்பனார் சொன்னார் பெரியய்யா பயப்படாதியும் கொஞ்சம் பொறுமை கடைபிடியுங்கள்.

இதுவரை நடந்தவை தாங்கள் அறிவீர்கள் ஆனாலும் மக்களுக்கு தெரியாதவை பல உண்டு அவைகளையும் தங்களுக்கு இப்போது தெரியப்படுத்த வேண்டியுள்ளது...

நமது பெண்டு பிள்ளைகளை இளம் தலைவர் கொற்கை கோ அவரது தாயார் அரண்மனையின் பாதாள நிலவறையில் வைத்து பாதுகாத்து உள்ளார்கள், அனைவரும் நலம், இதோ இப்போதே அவர்களை அழைத்து வருவோம். காணியாளா உடனே அவர்களை அழைத்து வா என ஆணையிட்டார்.

மேலும் சொன்னார் இதுவரைக்கும் நாம் நினைத்த மாதிரி முழுமையாக நடக்கவில்லை, ஆனாலும் உடனுக்குடன் முடிவெடுத்து சவால்களை சந்தித்து வெற்றிதான் பெற்று வருகிறோம். விஷவாள் குத்துப்பட்டு உயிருக்கு போராடிய தருணத்தில் இளம் தலைவர் கொற்கை கோ அவர்கள் என்னை அழைத்து அவர் சொன்ன திட்டத்தின்படி காட்டிய விவேகத்து பாதையில் நானும் பாடனும் மற்றவரும் பயணித்து  இரப்பாளியோடு இணக்கமாகி கொள்ளையர்களை கூட்டிக்கொண்டு போய் ஊருக்கு ஊராய் கொன்று புதைத்தோம்.
பரதவர் படையை கூட்டி வந்தோம் சத்தமில்லாமல் சங்காரம் செய்து....பரதவ சரித்திர அவலத்தை சரிசெய்தோம்......

குறிக்கிட்ட பாடன். இது தெரியாமல் ஏதோ அடப்பனும் பாடனும் பரதவரை காட்டி கொடுத்து இரப்பாளியின் பொன்னுக்கு மயங்கியதாக சில புரளிகாரனுவ பேசியிருக்கானுவ அதை பிறகு பேசிக்கலாம்... சரி, ஐயா நீங்க சொல்லுங்க....

அது மட்டுமல்ல நான் கோட்டையை விட்டு கிளம்பியதும் தனது உடல் நிலை சரியாகாத போதிலும் பாதாள நிலவறையிலிருந்து வெளி வந்து நெட்டையனைக் கொன்று இரப்பாளிக்கு மரண பயத்தை காட்டியதும் இளம் தலைவர்தான். ஆக பாண்டியம்பதியும் பட்டங்கட்டிமாரும் கொச்சின் சென்றுள்ள நிலையில் போர்துகீசியரும் இல்லாமல் பரத குலத்தை கூட்டி பாரம்பரியமிக்க தன்மானத்தை காத்த வெற்றிதனை நேற்றிரவு முன்னின்று பெற்று தந்தவரும் இளம் தலைவர்தான்.

அடப்பானார் சொல்ல சொல்ல பரதவர் கூட்டம் கொற்கை கோ வாழ்க என ஆர்ப்பரித்தது. எங்கிருந்தோ வந்த முத்தம்மை கொற்கை கோவை ஆரத்தழுவி, அழுது புலம்ப கொற்கையும் கண் கலங்கினார். அடப்பனார் பேசும்படி சைகைகாட்ட, கண்களை துடத்தபடி கொற்கை கோ பேசினார்.....

பாண்டிய பரதவர்களே

எங்கய்யா பாண்டியம்பதியின் பிள்ளைகளே

என் மக்களே........ நான் உங்களை மீண்டும் காண்பேனா..! என்று நினைக்க வில்லை. உங்களை பகைவரின் கைகளுக்கு இரையாக்கி விட்டு இறக்கிறேனே...... என நினைத்த பொது தான் விதியானது முத்தம்மை ஆத்தா உருவத்தில் வந்து என்னை காப்பாத்தியது, சட்டைக்குள்ளே கைவிட்டு எடுத்து மக்களுக்கு காட்டியபடி ஆத்தாவின் இந்த பாம்படம்தான் என்னை காப்பாத்தியது,

ஆத்தா உன் ஆசிர்வாதத்தால கோட்டையை பிடிச்சாச்சு.... இந்தா பிடி!! உன் பாம்படம், திரும்பவும் உன் காதை தைச்சி மாட்டிகோ..என கொற்கை பாம்படத்தை முத்தம்மையின் கைகளில் திணிக்க.... இல்லையில்லை அந்த ஈன இரப்பாளியை கொன்று அவன் இரத்தத்தை என் காதுல தடவின பிறகு தான், என மறுத்த முத்தம்மை.

அவனை எங்கெய்யா கொன்று போட்டியளா... எனக்கு அந்த வாய்ப்பை தரலையேனு விசனப்பட......

தற்போதைக்கு பொறு ஆத்தா பொறு 
அதுவரை கவனமா இதை வைச்சிறு.......னு 
முத்தம்மையின் கையில் திணித்தபடி ,தொடர்ந்தார்.........

மக்களே சோதனைக்கு மேல் சோதனை நமக்கு குமரிதுறைமுதல் வேதாளை வரை நமது சொந்தங்கள் திரண்டு வந்து மீண்டும் கோட்டையை கைப்பற்றி விட்டோம்.

ஆனால்......... ஆனால்.......... இதெல்லம் எதற்காக... ஏன் கொற்கையை விட்டொழித்து ...பாண்டியரசு மதுரை போன பின்பு மதுரை பாண்டி அரசில் குழப்பம் வரும் போதெல்லாம் இன்றைக்கு எப்படி உடனடியாக இணைந்து பகைவரை வென்று கோட்டையை காத்தோமோ அது போலவே அன்றைகும் கடலோரத்து பரதகுல மறவர்கள் இங்கிருந்து போய்தான் சரி செய்தோம் ...

பாண்டிய பரம்பரையின் தொன்மை கடலோரங்களில் தான் பாதுகாப்பாய் இருந்தது. பாண்டிய அரசு வாரிசுகள் இங்கே தான் வளர்ந்து வந்தன அரசுரிமை காலத்தில் தான்மதுரைக்கே சென்றனர். அரசியல் ரீதியான பகை கொண்ட சோழ அரசு தமிழ் சொந்தமென எண்ணாமல் பாண்டி பரதவ குலத்தை கூர்கூறாக பிளவு படுத்தியது அது அறியாமல் நாமே, உடன்பட்டோம்.

சோழன் தான் முதலில் நமது கடல் வழி தடம் தொடர்ந்து குதிரை கொண்டு வந்த இந்த அரபு கொள்ளையர்களை நமக்கு பதிலாக இங்கே அமர்த்தி வளர வைத்தான், நமது சொந்தங்களை துலுக்கனோடு இணைய வைத்தான். நாயக்கன், அதற்கு மேலே நமது கோவில்களை நம்மால் உருவாக்கப்பட்ட இறைபீடங்களை பறித்தான். நமது முதல் மரியாதைகளை சிதைத்தான், அவனும் பாண்டிய வம்சத்தின் ஆணி வேர் நாமென கண்டு நம்மை அழிக்கவே துடித்தான்.

அப்படித்தான் கடலையும் பறித்தான், அதை விடுங்கள். ஆனால் நாம், நமது எதிர்காலம் கருதி இந்த நிஜ வாரிசு களை காக்க புதிதாக பரதேசத்தவரின் பரம பிதாவை கடவுளாக ஏற்றுக் கொண்டோம். ஏன் நமது தனிதன்மைக்காக மட்டுமே பாண்டிய சமுகம், பர்னாண்டோ சமுகமாக, மாறி நம்மை காப்பாற்றி கொள்ள வேண்டிய கட்டாயம் இன்று இதை செய்து பரதேசத்தவரின் உதவி பெற்று நாம் நம்மை காத்து கொள்ளாது விட்டால். நாளை, பிற்கால சந்ததியில் பாண்டியன் பரவன் என்கின்ற வார்த்தைகளை கல்வெட்டில் தான் காண முடியும்.

இதோ புன்னையிலே புழுதி கிளம்பியதும் வடகோடியிலும் தென் கோடியிலும் வாழும் பரதவரின் கண்களிலே நீர்முட்ட நெஞ்சினிலே சுவாசமூட்ட புயலாய் எரிமலையாய் கிளர்ந்து வரும் ஆழி பேரலையாய் படை திரட்டி பாய்ந்து வந்து பரதவரின் மானம் காத்த பரதகுடி மறவர்களே..!
உங்கள் பாதங்களுக்கு என் நன்றி ஐயா

இதுதான் நமக்கு வேணும்... நமது காலகாலத்துக்கும் இதுவே தொடர வேண்டும்...இந்த பரத சமூகம் என்றைக்குமே ஒற்றுமையாய் வாழும் இல்லையேல் ஒன்றுபட்டே சாகும்.கொற்கை கோ உணர்ச்சி வசப்படுவதை உணர்ந்த அடப்பனார், தோள்களை தட்டி ஆசுவாசப்படுத்த.......

பாருங்கள் மக்களே, என் தந்தையின் வயதையொத்த, இந்த மாமனிதரை சின்னஞ்சிறியவன் நான் இந்த தாக்குதலுக்கு தலைமையேற்றதும் என் ஆணைகளை ஏற்று கொண்டதும். அவரது அனுபவத்திற்குறிய வயது கூடஇல்லாத நான் அவரது அறிவுரையை ஏற்று விவாதித்து திட்டமிட்டதும் தான் இப்போதைய தற்காலிக வெற்றி..

மூத்தோரை மதிப்போம், தலைமைக்கு பணிவோம், இதுதான் நாளைய பரதவரின் வெற்றியின் சூட்சமமாக இருக்க வேண்டும். இனி பணயமாக பிடித்து செல்லப்பட்டவர்களை மீட்பதுதான் அடுத்தவேலை. அதற்கான நமது பிணையம் இதோ என கை தூக்கி சுட்டிக் காட்ட....

கோட்டை மதிற் சுவர் மீதினிலே கை விலங்கோடு பலியிட தயாரான நிலையில் இரப்பாளியின் கொள்ளைக் கூட்டம் உயிர் பயத்தில் உறைந்து போய் மண்டியிட்டிருந்தனர். இரப்பாளியை காணவில்லை.... என்ன ஆனான் தெரியவில்லை. இரப்பாளியை இரவோடு இரவாக கண்டதுண்டமாக வெட்டி நாயக்கனுக்கு அனுப்பிவிட்டதாக மக்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்

அப்போது பரதவ குமரிகளும் குழந்தைகளும் நிலவறையில் இருந்து அழைத்து வரப்பட சொந்தங்கள் ஒன்றோடொன்று, அணைத்து மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் வடித்தனர். அடப்பனாரிடம் கொற்கை கோ ஏதோ சொல்ல அடப்பனார் பெண்கள் அனைவரும் ஆயுதகிடங்குக்கு செல்லுங்கள், நாளை மறுநாளுக்குள் உங்கள் வீடுகள் சரி செய்யப்பட்டு விடும்.

காணியாளா உன் தோழர்களோடு முதலில் கிழக்கத்திமாரையும் வடக்கத்திமாரையும் கூட்டிட்டு போய் பாண்டியம் பதி அரண்மனையில் தயார் செய்துள்ள உணவளித்து உபசரியுங்கள். அப்புறம் ஊர்காரங்களுக்கு பரிமாறுங்கள். பரதவ துறைகளின் பட்டியலின் படி ஊருக்கு இரு பிரதிநிதிகள் வாருங்கள் போர்த்துக்கல் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் என்றபடி அடப்பானார் முன்செல்ல கொற்கை கோவும் ஏனையோரும் பின்தொடர அனைவரும் அலுவலக கதவு திறந்து உள்ளே நுழைந்தனர்.

உள்ளே முட்டங்காலிட்டபடி திருச்சிலுவை முன்பு மனமுருக பிராத்தித்துக் கொண்டிருந்தான் இரப்பாளி............

.

...........................கடல் புரத்தான்................................

சந்த செபஸ்தியார் பேரில் பாடல்

'சொன்ன சொல்லை என்ற மெட்டு"

இதயங்கனிந் தெமக்கிரங்கிட வாராய் இவ்வேளை
சதமெனவே எண்ணியாம் பதமே கூடினோம் இவ்வேளை
விதவிதவாத்தியம் முழங்கிடும் பெருமை இவ்வேளை
ததிகொண்டடி வீழும் தனையரெம்மைத் தாபரி   இவ்வேளை

தண்டமிழ் நாட்டில் விளங்கும் இவ்வூரில்
அண்டிடுவர் சேவடி அடைக்கலமாக இவ்வூரில்
பண்டிதமணியே படைக்கல அணியே இவ்வூரில்
மன்றாடிடும் மாந்தர் மயக்கம் தன்னை மாற்றிடும்   இவ்வூரில்

அன்புருவானோர் என்பையுமீவார் மெய்யோனே
விண்ணிறையிடம் கொண்ட அன்பதனாலே மெய்யோனே
உன்னரும் ஆவி உவகையோ டீன்றாய் மெய்யோனே
பண்பாகிடும் வீரம் விளைந்திடச் செய் எம்மில் மெய்யோனே

பருவ மழையுடன் பசுங்கதிர் மணிகள் இந்நாட்டில்
அறுவடைகள் மிகுந்திட அருள் சுரப்பாயே இந்நாட்டில்
கரமது கூப்பி சிரமதுபணிந்தோம் இந்நாட்டில்
மறையோனிடம் சென்று மனுக்கொடுப்பீர் மாதவ விண்ணாட்டில்

பன்மீன் கூட்டம் - பாகம் 4

களவா(ய்)
 ல் சிக்கிய களவாய் 
  1. கல்லுக் களவா
  2. குமரிக் களவா 
  3. சிவப்புக் களவா
  4. சிக் களவா
  5. தோக் களவா
  6. மஞ்சக் களவா
  7. மரக் களவா
  8. புள்ளிக் களவா
  9. பஞ்சிக் களவா 
  10. பாரக் களவா
  11. தலைக் களவா
  12. உள்ளக் களவா
 
காளா
  1. கட்டிக்காளா 
  2. கணாக் காளா 
  3. சீனாக் காளா 
  4. தாழன் காளா 
  5. உள்ளக் காளா

காரல்
  1. அப்புக்காரல் (மீன்பிடி வலையில் வந்து அப்பும் காரல்)
  2. அமுக்குக் காரல்
  3. கலிகாரல்
  4. பொட்டுக்காரல்
  5. நெடுங்காரல்
  6. மஞ்சக் காரல் 
  7. மரவுக்காரல்
  8. வரிக்காரல்
  9. வரவுக் காரல்
  10. உருவக் காரல் (குதிப்புக்காரல்)
  11. ஊசிக்காரல்
  12. ஒருவாக் காரல்
  13. பெருமுட்டிக் காரல்
  14. கவுட்டைக் காரல்
  15. நெய்க் காரல்
  16. வட்டக்காரல் 
  17. கண்ணாடிக் காரல் (சில்லாட்டை காரல், பளபளவென பாதரம் பூசிய கண்ணாடி போல மிளிரும்)
  18. குழிக்காரல்
  19. குல்லிக்காரல்
  20. ஒட்டுக்காரல்
  21. செவிட்டுக்காரல்
  22. சென்னிக்காரல்
  23. காணாக் காரல்
  24. காணாவரிக்காரல் (வரிக்காரலில் சிறியது)
  25. காசிக் காரல்
  26. சுதும்புக் காரல் 
  27. சலப்பக் காரல்
  28. சலப்ப முள்ளுக்காரல்
  29. சளுவக் காரல்
  30. சலப்பட்டக்காரல்
  31. சிற்றுருவக் காரல் (சித்துருவக் காரல்)
  32. பஞ்சக்காரல்
  33. விளக்குக்காரல்
  34. தீவட்டிக்காரல்
  35. கொம்புக் காரல்
  36. நாமக் காரல்
  37. பொடிக் காரல் (பூச்சிக்காரல்)
  38. பூட்டுக்காரல்
  39. முள்ளங்காரல்
  40. கார்வா(ர்)
  41. கானாங் கெழுத்தி
  42. காசியாபன்
  43. காடன்
  44. காக்கைக் கொத்தி (ஊசிமூக்கு உடையது)

காரை

  1. கூட்டுக்காரை
  2. சுதுப்புனம் காரை
  3. மஞ்சள் காரை
  4. காட்டாவு

கிளாத்தி (Trigger Fish)

பார்மீன்களில் ஓரினமான கிளாத்தி, பாலிஸ்டே குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் முதுகில் 3 முள்கள் காணப்படும். முதல்முள் தடித்த கனமான முள். இதையடுத்து வால் பக்கம் இருக்கும் 2 ஆவது முள்ளை முன்னே தள்ளினால் மட்டுமே இந்த முதல்தடிமுள் உறுதியாக நிற்கும். 2 ஆவது முள்ளை பின்னோக்கி தள்ளினால் தடித்த முள் தளர்ந்து விடும். இதில் 3 ஆவது முள், துப்பாக்கியில் உள்ள இழுவிசை போன்றது. அது கிளாத்தியின் உடல்வழியாக 2 ஆவது முள்ளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வகை மீன்களுக்கு டிரிக்கர் மீன் எனப் பெயர் வரக்காரணம் இந்த முள்தான்.

இந்த தடித்த முதல் முள், மேற்பாறைகளில் குத்திக் கொண்டு கிளாத்தி மீன் நீந்தாமல் ஓரிடத்தில் நிற்க உதவுகிறது. பிறசிறு மீன்களை விரட்டி இரை கொள்ளக்கூடிய கிளாத்தி, தனக்கு ஆபத்து எதிரிடும்போது பார்பொந்துக்குள் உடலைத் திணித்து, முதுகு முள்ளை பாரில்குத்தி தன்னை இறுக்கி ஒளிந்து கொள்ளும்.

கிளாத்தியின் முதுகுப்பின் தூவியும், வால்பக்க அடித்தூவியும், ஒரே அளவாக, பார்க்க ஒரே மாதிரியாக இருக்கும். கிளாத்தி மீனின் முக்கிய அடையாளங்களில் இதுவும் ஒன்று. கிளாத்தி அதன் பற்களை நறநறத்தோ, அல்லது எண்ணெய் கொண்ட வயிற்றுப் பள்ளையை அசைத்து சத்தம் எழுப்பக்கூடியது. இப்படி ஓசை எழுப்பாத கிளாத்தி ஊமைக் கிளாத்தி என அழைக்கப்படுகிறது.

கிளாத்தியில் பல வகைகள் உள்ளன.கிளாத்தியின் சற்று கனமான தோலைக் கழற்றிவிட்டு சிலர் அதை உண்பார்கள். சிலர் கிளாத்தியை உண்ணமாட்டார்கள்.


- மோகன ரூபன்

சிந்து சமவெளியில் கிடைத்த 4000 ஆண்டுகள் பழமையான தமிழ் செப்பேடு

அண்மையில் பாகிஸ்தானில் தனியார் தொகுப்பில் திரட்டி வைக்கப்பட்டிருந்த ஒன்பது செப்பேடுகள் வெளிவந்தன. சிந்துவெளி எழுத்தில் அமைந்த இந்த செப்பேடுகள் 2011 ஆம் ஆண்டில் ரிக்கு வில்லிசு என்பவரின் பார்வைக்கு வந்தன. XRF என்னும் அறிவியல் காலக்கணிப்பு முறையில் ஆராய்ந்து இதன் காலம் கி.மு 2600 – கி.மு 2000(4000 ஆண்டுகள் முந்தையது) என உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த செப்பேடு தமிழில் 34 குறியீடுகளை கொண்டுள்ளது. வடிவத்திலும் மிக பெரியது. இதுவரை 5000 தமிழ் செப்பேடுகள் சிந்துவெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த செப்பேட்டில் கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து உயிர் பிழைத்து வந்த நக்கணியனைப்பற்றி குறிக்கப்பட்டுள்ளது. செப்பேட்டின் இடப்புறத்தில் குள்ளநரித் தலையோடு ஓக நிலையில் அமர்த்த சித்தரின் உருவம் நக்கநியனைக் குறிப்பதாக இருக்கலாம்.

செப்பட்டில் இருக்கும் சொற்றொடர் :-” கூனயத்தம் சாஞ்சகன் அப்புந்தி தங்கவிகைப் பண்ணன் புணையன் காளண்ணன் பண்ணிவச்ச கப்ப(ல்) அவில்ந்து (அமிழ்ந்து) வந்த நக்கனியன் ”

பொருள் :- கூனயத்தம் என்பது ஊர்ப்பெயர். அவ்வூரில் வாழ்ந்த ‘ ‘சாய்ந்தகண் அப்புந்தி தண்கவிகை பண்ணன் ‘ என்பவனுக்கு காளண்ணன் என்னும் கப்பல் கட்டுபவன் புணையாக அதாவது உற்ற தோழனாக இருந்தான். காளண்ணன் கட்டிய கப்பல் கடலில் கவிழ்ந்தது. அதிலிருந்து உயிர் பிழைத்து வந்த நக்கணியன் என்பதே இந்த செப்பேட்டில் கூறப்பட்டுள்ள செய்தியாகும்.

இது 14 தமிழ் சொற்களை கொண்ட நெடுந்தொடர். இதனை மிகப்பெரிய கண்டுபிடிப்பாக கருதலாம். இந்த செப்பேட்டின் இடது புறத்தில் குள்ளநரி முகம் கொண்ட ஓக நிலையில் அமர்ந்த சித்தரின் உருவம் உள்ளது.

இதிலிருந்து இரண்டு செய்திகள் கிடைக்கிறது. 4000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் கப்பல் கட்டி கடலை ஆட்சி செய்துள்ளனர் மற்றும் ஓக கலையில் அப்பொழுதே சிறந்து விளங்கியுள்ளனர்.

இத்தகவல் பேராசிரியர் இரா.மதிவாணன் எழுதிய “சிந்துவெளியில் கிடைத்த முந்துதமிழ்ச் செப்புப் பட்டயம் ” என்னும் கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது.

நெல்லை மண்ணில் உள்நாட்டு பரதவர்கள்

தன்னுடைய சபையின் தலைவருக்கு 1644ல் அருட்தந்தை லோபே எழுதிய கடிதத்திலிருந்து திருநெல்வேலி பகுதி முழுவதும் கத்தோலிக்க பரதவக் குழுக்கள் பரவி இருந்தனர் என்பது தெரிய வருகின்றது.

திருவைகுண்டம் தாலுக்காவில் இத்தகைய உள்நாட்டு பரதவர்களின் பன்னிரு குழுக்கள் இருந்தன. உள்நாட்டு பரதவர்கட்கு தலைமை இடமாய் திருக்கழூர் இருந்தது.

ஆத்தூர், குரும்பூர், பேரூர், ஆழ்வார் திருநகரி, திருநெல்வேலி, சேந்தமங்கலம், மாரந்தலை, திருவைகுண்டம், இரண்டு மணக்கரைகள், பாளையங்கோட்டை, வையாபுரம் அல்லது கலியாவூர், அய்யனார், குளம்பட்டி, மேலப்பட்டி, கருங்குளம், செய்துங்கநல்லூர் ஆகிய ஊர்களில் இக்குழுக்கள் இருந்தன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை பரதவர் மதம் மாறிய ஆரம்ப நாட்களிலேயே உருவான குழுக்களாகும்.

இவை தவிர, ஓட்டப்பிடாரப் பகுதி கயத்தாற்றில் ஒரு பரதவக் குழு இருந்தது.

அம்பா சமுத்திரத்தில் ஆலயங்களுடன், ஆறு பரதவக் குழுக்கள் இருந்தன. அவை பத்தமடை, வீரவநல்லூர், மன்னார் கோயில், செட்டிப்புதூர், கருத்தப்பிள்ளையூர், கிறித்தவநல்லூர், ஆகியனவாகும் – கிறித்தவநல்லூரில் இன்னும் கல்லறையும் குருசடியும், உள்ளன. இங்கு இருந்த மக்கள் 1798 ஆம் ஆண்டிற்கு முன்னரே பொட்டல் புதூரில் குடியேறினர்.

நாங்குநேரிப் பகுதியில், மீன்குளம், மறுகால்குறிச்சி, களக்காடு ஆகிய இடங்களில் உள்நாட்டு பரதவக் குழுக்கள் இருந்தன.

இவை தவிர, வள்ளியூர், பேய்க்குளம், விஜயநாரணம் அருகே உள்ள சங்கமன்குளம், புதுச்சந்தை ஆகிய ஊர்களிலும், பரதவக் குழுக்கள் இருந்தன.
– பேராசிரியர் ம.ஜோசப் இருதய சேவியர்
தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

Rameswaram and its significance in Paravar History

From Vembar to Kanyakumari many of the coastal villages / towns have been touched upon in www.globalparavar.org. Recently I travelled along Rameswaram covering Ramanathapuram, Mandapam, Pamban, Thangachimadam etc. and I would like to provide information on the Paravar settlements in these areas.

Brief on Rameswaram

Rameswaram is one of the holiest places for Hindus in India similar to Varanasi in UP (Uttar Pradesh). Rameswaram Island including Dhanuskodi is associated with the epic Ramayana. The place name Rameswaram is a combination of two words Rama and Iswaram. A significant place for the Hindus, Rameswaram also inherited Buddhism, Jainism & Islam. Christianity entered during 16th century when Portuguese entered Tamilnadu specifically in the coastal areas.

Christianity in Rameswaram

St. Francis Xavier came till Mookaiyur (a village 20kms away from Vembar) but did not go till Rameswaram. Christianity spread around Rameswaram after St. Francis Xavier’s departure when Paravar fishermen who were already converted to Catholics came from nearby villages for fishing. The fishermen bought many Catholic faiths with them which they usually carry when they go for fishing. Catholic faith flourished when Fr. Antonie Criminalie came here around 1546. Fr. Antonie Criminalie was a Jesuit priest who was appointed to go to Vedhalai (village en route to Rameswaram) by St. Francis Xavier.

Around 1644 Thirumalai Nayak while ruling Rameswaram gave Portuguese the permission to build churches in the area. Madurai Nayak and Portuguese had a naval treaty wherein Portuguese helped Nayaks in their battles. St. James Church was built by the Portuguese at Verkadu near Thangachimadam.

Fr. ANTONIE CRIMINALIE (1520 – 1549)

Fr. Antonie Criminalie came to Rameswaram region from Italy in 1546 A.D. as a Jesuit missionary. His preaching was intense around the coastal regions and he rendered his services to the people in this area. In his letters to Rome, St. Francis Xavier regards Fr. Antonie Criminalie very much.

On St. Francis Xavier’s instructions Fr. Criminalie settled down at Vedhalai and started serving people around this area. The Nayaks who ruled Madurai at that time were not happy with Fr. Criminalie and Portuguese who were involved in spreading Christianity. They waged a war against the Portuguese and during this time Fr. Criminalie was killed by a spear which hit his chest. You can note that nearly after a century Nayaks befriended Portuguese to get their naval support.

There is a small church at Vedhalai which has become very famous just before Rameswaram and is dedicated to Fr. Antonie Criminalie. You can read more about Fr. Criminalie in an earlier article in www.globalparavar.org titled “THE BATTLES OF VEDHALAI – Fr . ANTHONY CRIMINALI S.J. —THE PARAVA CONNECTION” (dated May 26, 2013).

JOHN DE BRITTO (1647 – 1693)

Whilst talking about Christianity around Rameswaram & Ramanathapuram, yet another important Jesuit priest cannot be ignored. St. John De Britto, a Portuguese Jesuit priest is a very famous missionary who came to Madurai in 1673 and started spreading Christianity. He renamed himself as Arul Anandar (அருளானந்தர்) in Tamil. He learnt Tamil, started dressing in yellow cotton and lived like a Thuravi (sage), abstaining from animal food and wine. St. John de Britto taught the Catholic faith in concepts that would make sense to the local people.

John De Britto was responsible for spreading Catholicism around Madurai, Sivagangai, Ramnad & parts of Thanjavur. During this time king Sethupathi of Ramnad was not happy with what John De Britto was doing and ordered his arrest. The king ordered John De Britto’s execution and was taken to Oriyur (around 50 kms from Ramnad). Oriyur village never had a name at that time, it was “Oru Oor” (A village) in Tamil which gave its name Oriyur. John De Britto was tortured and beheaded at Oriyur. The sands of the place where his head fell turned into red colour due to his blood. Till today the church in Oriyur has this red sand dedicated to this great saint.

Paravar settlement around Rameswaram

Rameswaram is not included under the list of “Muthukulithurai” villages but it became a settlement for Paravars slowly. Though Paravars frequented Rameswaran for fishing there was no proper settlement here. Paravar settlement might have happened in Thangachimadam some 100 years back. Sea trade brought Paravars from coastal villages such as Vembar, Mukkur, Punnaikayal etc. into Thangachimadam.

The above mentioned facts shows us that Paravars used the coast of Rameswaram to expand their fishing and pearl business. In fact this was the major route to do business with Sri Lanka and Paravars had definitely used this. We cannot forget how Paravars flourished by expanding their trade with Lanka. Today Muthupettai in Ramnad, Pamban and Thangachimadam in Rameswaram hold a significant Paravar population.

  • Rameswaram which has a rich natural reserve in the seas has been undergoing several turbulences for the past several years. Paravars are having a tough time managing their livelihood in this area.
  • Fishing which was the primary occupation of Paravars is being sidelined. This profession has been taken over by many others and Paravars have been left languishing.
  • Takeover of Katchatheevu by Sri Lanka in 1974 has had a great impact on our fishermen. Once with India, Katchatheevu acted as an important island for fishing by Paravars.
  • The major problem comes from Sri Lankan Navy targeting our fishermen. Fear of attacks by Sri Lanksn Navy has put this profession at stake in Rameswaram.
  • Boats of our fishermen are seized by Sri Lankan Navy and they are never returned back. The fishing boat is a major investment of our fishermen. Many take loans to procure boats and once seized they come under tremendous pressure to pay back the debt.
  • Fear of SL Navy in the coast of Rameswaram has prompted many Paravars to go for fishing in places such as Mangalore, Goa & Vishakapatnam. It is a shame that we are not able to continue our profession in which we are so skilled within our state.

Anton Niresh Vaz

வேளா (வாள்சுறா) (Saw Fish)


சுறா போன்ற தோற்றத்தில், சுறாவின் உடல்வாகுடன் இருந்தாலும் வேளா, திருக்கை இன மீன்களுக்கு மிக நெருக்கமான மீன். திருக்கையைப் போல வேளாவும் கடலடியில் வாழும் மீன். ரம்பம் போன்ற, இருபக்கமும் கூரிய முள்கள் கொண்ட கொம்பு, வேளா மீனின் முக்கிய அடையாளம்.

இந்த முள்நிறைந்த கொம்பினால் மீன்கூட்டங்களை வேளா திரைய்க்கும். காயமடைந்து நீந்த முடியாமல் தத்தளிக்கும் மீன்களைப் பிடித்து உணவாக்கும். சிலவேளைகளில் கூரிய கொம்பு முள்களில் குத்துண்டு சிக்கிக் கொள்ளும் மீன்களை கடல்பாறைகளில் தேய்த்து அவற்றை நீக்கி இது உணவாக்கிக் கொள்ளும்.

வேளாவின் கொம்பு, கடலடி சகதியைக் கிளறி அங்கு மறைந்திருக்கும் கடல் உயிரினங்களை வேட்டையாடவும் உதவுகிறது. பிரிஸ்டிடே (Pristidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த வேளா மீன், 6 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. வேளாவின் நிறம் பழுப்பு சாம்பல். இதன் இருபெரிய முதுகுத் தூவிகள் தலையோடு இணைந்திருக்கும். தடித்த வாலை, உடலில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாது.

உடலின் மேற்புறம் கண்களும், அடிப்புறம் வாயும் அதன் கீழே இரு வேறு பகுதிளாக சுவாசிக்க உதவும் செவுள் துளைகளும் வேளாவுக்கு அமைந்திருக்கும்.திறந்த வெப்பக் கடல் மீனாக இருந்தாலும் வேளாவால் நல்லதண்ணீரிலும் வாழ முடியும். ஆப்பிரிக்க ஆறுகள் சிலவற்றிலும், நிகரகுவா நாட்டு ஏரியிலும் கூட வேளா மீன் காணப்படுகிறது.

வேளா கோபக்கார முரட்டு மீனாக இருந்தாலும் மனிதர்களை இது தாக்கியதாக பெரிய அளவில் பதிவுகள் எதுவுமில்லை. வலையில் சிக்கும் வேளா மீனைப் பிடிக்க வலைஞர்கள் அதன் கொம்பு முனையை மெதுவாகத் தொட்டு தடவி விடுவார்கள். இதனால் மெய்மறந்த நிலைக்குச் செல்லும் வேளாவை கயிறுகளால் பிணைத்து கைக்கொள்வார்கள். வேளாவின் முட்டைகள் உண்ணத்தகுந்தவை. யானையின் விட்டை அளவுக்கு பெரிய பொன்மஞ்சள் நிற வேளா முட்டைகள் கூழினால் நிறைந்தவை. இவற்றை மாவில் கரைத்து ஆப்பம் சுடும் பழக்கம் கடற்கரை ஊர்களில் உண்டு. வேளா முட்டை ஆப்பம், ஊர்முழுவதையும் மணமணக்க வைக்கும் ஆற்றல் உடையது.


- மோகன ரூபன்

இரத்த பூமி - 11

நடுநிசியில் முழங்கிய சங்கு

கொச்சின் போர்த்துக்கல் கோட்டையிலே பிரளயமாய் வெடித்த பாண்டியரின் ஆதங்க உரை பரதேசியருக்கு ஆவேச உரையாக தோன்றிற்று

ஒன்றுமேயில்லாமல் ஊர்காண உலகம் காண வந்தவருக்கு ... 

ஊழி காலத்தே ஆழியாண்டு

உலா வந்த உயர் பரவனோடு
 
உடன்பாடு கொண்டு உடன்பட்ட பிறகே பாண்டி மண்ணில் பாதம் பதித்து படை கூட்டி கோட்டை கட்டி பலமானதை உணர்ந்ததால், பட்டங்கட்டிமாரின் துணையோடு படை கூட்டவும் பரத எதிரிகளின் சிதைமூட்டவும் சித்தமானார்கள்.

கொச்சின் போர்த்துகீசிய கோட்டையிலிருந்து கில் பர்ணான்டஸ் கேப்டன் தலைமையில் தளபதி லோரன்கோ கோயல்கோ துணையோடு பரதவ தலைவரோடும் பட்டங்கட்டிமாரோடும் பெரும் கப்பற்படையானது பீரங்கிகள் மற்றும் வெடி குண்டு துப்பாக்கி போர் தளவாளங்களோடு சேர நாட்டு துறையிலிருந்து பாண்டி நாட்டு புன்னை கோட்டைக்கு விரைந்தது.

அடப்பனாரும் பாடனும், ஏனைய பரதவரும் இரப்பாளியின் பதவியேற்பை பறை சாற்ற வடக்கே ஒரு குழு அடப்பனார் தலைமையிலும் தெற்கே ஒரு குழு பாடன் தலைமையிலும் பரதவ ஊர்களுக்கு பாய்மர கப்பலிலே இரப்பாளியின் படையோடு பயணித்தனர்.

ஊருக்கு ஒரு கப்பல் கரை இறங்கியது, கடலோரத்து கரை எங்கும் வாளாலும் திருக்கை வாலாலும்...... பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டு, பரதவ கடலோரம் இரப்பாளியின் கொள்ளையர்கள் அனைவரும் கொன்று புதைக்கபட்டனர். அதிசயமாய் தப்பி பிழைத்தோர் ஆழியிலே ஆழ்த்தி அடக்கம் செய்யப்பட்டனர். இரப்பாளியின் கதை முடிக்க கடல்புறமே ஆர்ப்பரித்து திரண்டது.

அன்றய இரவே சாரை சாரையாக இரப்பாளியின் கொள்ளை கப்பல்களில் கொள்ளையர்களின் போராயுதங்களோடு புன்னை நோக்கி பரதவர் படை கிளம்பியது. அன்றய இரவு பொழுதினிலே புன்னைக் காயலிலே புன்னை பரணியாற்றின் தென்கரை தாண்டி தூரத்து கடலோரத்தில் கையிலே தீவட்டியோடு நடுநிசி வேளையிலும் ஓர் உருவம் பரதவரின் வருகைக்காக காத்து கிடந்தது

ஆழியிலிருந்து ஒளி கண்ட அத்தனை படகுகளும்  ஆரவாரமின்றி கரை ஒதுங்க அங்கே கொற்கை கோ கையில் தீவட்டியோடு தனியாளாய் நின்றிருந்தார். வடக்கத்தி பரதவரின் வருகைக்காக காத்திருந்து அடப்பனாரும் வேம்பாத்து சடையனாரோடு கரை வந்து சேர்ந்து கொற்கைக்கோவை ஆரத்தழுவிக் கொண்டார்

கணநேரமும் தாமதிக்காது தாக்குதல் தொடர்பான ஆலோசனைகள் முடிவெடுக்கப்பட்டு அத்தனை பெரும் படையும் இரவின் நிசப்த்தத்தோடு பரணி தென்கரை தாண்டி இருட்டிலே ஊடுருவி தவழ்ந்தவாரே கோட்டை மேலுள்ள கொள்ளையரின் பார்வைக்கு தப்பியபடி புன்னை கோட்டையை நெருங்கி சுற்றிவளைத்து ஆணைக்காக காத்திருந்தது.

நேரம் கடந்து செல்ல மயான அமைதி, திடீரென்று கோட்டைக்குள் சங்கோன்று நீளமாய் முழங்கி அடங்கியது.  கோட்டை காவல் கொள்ளையர்கள் பதட்டத்தோடு துப்பாக்கிகளை தூக்கி கோட்டைக்குள் குறி வைக்க அடுத்த நொடி கோவில் மணி இரண்டு அடி அடிக்கப்பட்டது. ஒரு அடி அடித்து மறு அடி அடிக்கும் போது, மணியின் ஓசையோடு கலந்து போனது அனைத்து கோட்டை காவல் கொள்ளையர்களின் உயிரை குடித்த பரதவரின் தோட்டாக்களின் வெடிச் சத்தம்.

கொள்ளையர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டு, கீழே விழுந்து மாண்டனர். குடியானவர் வீட்டின் வழியே பரதவர் கூட்டம் உள்ளே புகுந்தது

இரவோடு இரவாக, கொள்ளையர்கள் அனைவருமே கைது செய்யப்பட, ராஜ்ஜிய கனவுடன் ஏதுமறியாது நித்திரையில் களித்திருந்தான் இரப்பாளி.

........கடல் புரத்தான்.......

வலம் வரும் அன்னை--வளம் தரும் அன்னை

இஸ்பானிய நாட்டிலிருந்து:

பாப்பரசர் 5-ஆம் நிக்கோலாஸ், 1455--ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாளன்று "Romanus Pontifex" என்ற பாப்பிறைப் பத்திரத்தின் மூலம் "பதுரவாதோ" என்ற ஞான அதிகாரச் சலுகையை முதன்முதலாக போர்த்துக்கீசிய மன்னன் 5-ஆம் அல்போன்ஸ் என்பவருக்கு அளித்தார்.

பதுரவாதோ சலுகையின்படி போர்த்துக்கீசியர் அவர்கள் ஆட்சி செய்யும் இடங்களில் கத்தோலிக்கத் திருமறையைப் பரப்பி, ஆலயங்கள் அமைத்து, அவைகளைப் பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள வேண்டும். பதுரவாதோ சலுகை மூலம் புதிய நாடுகளில் கிறிஸ்தவ திருமறையைப் பரப்பப் பேராவல் கொண்டிருந்த போர்த்துக்கீசிய மன்னர் 3 ஆம் ஜான், தம் அரசுக்குக் கிழக்கே அமைந்த நாடுகளில் எல்லாம் ஞான அதிகாரக் கடமையை ஆற்றப் பெரிதும் விரும்பினார். 1521-ஆம் ஆண்டில் மேமேலன் என்னும் போர்த்துக்கீசிய மாலுமி ஒருவரால் பிலிப்பைன்ஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் அந்தத் தீவுகளில் பெரிதான ஓசோன் தீவிலுள்ள மணிலா நகர் கிறிஸ்தவ வழிபாடுகளில் முன்னோடியாக விளங்கியது.

மணிலாவில் அப்போது தோற்றுவிக்கப்பட்ட புனித அகஸ்தீனியன் சபை கன்னியர்களுக்கு அன்பளிப்பாக தேவ அன்னை சுரூபமொன்றை போர்த்துக்கீசிய மன்னர் 3 ஆம் ஜான் அன்பளிப்பாகக் கொடுத்தார்.

மணிலாவில் அன்னை:

இஸ்பானிய நாட்டைச் சார்ந்த புனித அகஸ்தீனியன் சபை கன்னியர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள மணிலாவில் ஒரு கன்னியர் மடம் தோற்றுவித்து இருந்தனர். அங்கு அவர்கள், போர்த்துக்கீசிய மன்னர் அன்பளிப்பாகக் கொடுத்த தேவ அன்னை சுரூபத்தை, "இரக்கத்தின் மாதா" என்று அளவற்ற பக்தியுடன் வணங்கி வந்தனர். 

பொன்முடியில் பன்னிரு விண்மீன்கள் ஒளி வீச, பொற்பாதத்தில் வெண்ணிலவு காட்சி தர, பொன்னாடை புனைந்து செந்தாமரைக் கரத்தில் செந்நிறப் பழம் ஒன்றிருக்க, இடக்கரத்தில் பாலன் இயேசு அமர்ந்திருந்தவாறு அன்னையின் சுரூபம் காட்சியளித்தது. 

மரத்தினால் செய்யப்பட்ட அன்னையின் சுரூபம் இஸ்பானிய நாட்டில் உருவாக்கப்பட்டதாகும்.

புனித சவேரியாரின் பேரவா:

சீனா நாட்டிற்குப் பயணித்த வேளையில், சவேரியார் மணிலாவில் சில காலம் தங்கினார். அங்கு புனித அகுஸ்தீன் சபைக் கன்னியர் மடத்தில் அன்னையின் சுரூபத்தைக் கண்ட அவர், அதன் அழகினால் ஈர்க்கப்பட்டு விம்மிதம் அடைந்தார்.

முத்துக்குளித்துறையின் பரத மக்கள் கிறிஸ்தவத் திருமறையைத் தழுவிய பின்னரும், இந்துப் பெண் தெய்வங்களான மதுரை மீனாக்ஷி, கன்னியாகுமரி பகவதி மீது கொண்டிருந்த பெண் தெய்வப் பற்றிலிருந்து மீட்க, அவர்களுக்கு அன்னையின் அழகு சுரூபத்தைப் பெற்றுக் கொடுக்க சவேரியார் பெரிதும் விரும்பினார். இது பற்றி அவர் அகுஸ்தீன் சபைக் கன்னியர்களிடம் மன்றாடிக் கேட்க, கன்னியர்கள் தர மறுத்துவிட்டனர்.

தூத்துக்குடி வந்த திருச்சுரூபம்:

சவேரியார் 1552-ஆம் ஆண்டு டிசம்பர் 2- ஆம் நாளன்று சான்சியன் தீவில் நல்மரணமடைந்த மூன்றாண்டுகளுக்குப் பின்னர் அவரை ஒரு புனிதர் என்று அவருடைய பிரதாபங்கள் மூலம் கேள்விப் பட்ட அகுஸ்தீன் சபைக் கன்னியர்கள், புனிதரின் வேண்டுகோளை நிறைவு செய்ய விரும்பினர். அவர்கள் அன்னையின் திருச்சுரூபத்தை பரத மக்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முன் வந்தனர்.

1555- ஆம் ஆண்டு ஜூன் 9--ஆம் நாளன்று, "சந்தலேனா" என்ற கப்பல் மூலம் அன்னையின் அற்புதத் திருச்சுரூபம் தூத்துக்குடி வந்து சேர்ந்தது.

முத்துக்குளித்துறை மக்கள் அனைவரும் அன்னையின் திருச்சுரூபத்தை கோலாகலத்துடன் வரவேற்க, கோவா மறை மாநிலப் பெரிய குரு மிக்கேல் வாஸ் சுவாமிகள், அன்னையின் திருச்சுரூபத்தை சம்பவுல் ஆலயத்தில், "பரதரின் மாதா" என்னும் நாமத்துடன் ஆடம்பரமாக நிறுவினார்.

அன்னையின் அற்புதச் சுரூப வருகைக்குப் பின்னர் முத்துக்குளித்துறைக்கு வசந்தமே வந்தது போலாயிற்று. பரத மக்களின் முத்துக்குளிப்பு வளம் பெற்றது; அவர்களின் விசுவாசமும் தழைத்தது.

பாண்டியன் தீவில் அன்னை:

மதுரை நாயக்கன், கயத்தாறு குறுநில மன்னன் ஆகியோரின் ஓயாத கொடுமைகளிலிருந்து நிரந்தரமாகத் தப்பிக்கும் வகையில், 1604-ஆம் ஆண்டில் தூத்துக்குடி, வைப்பார்--வேம்பார் ஆகிய ஊர்களிலுள்ள பரத கிறிஸ்தவ மக்களும் மற்றும் பாதுகாப்புத் தேடும் பிறமத மக்களும், தூத்துக்குடிக்கு எதிரேயுள்ள பாண்டியன் தீவில் குடியேறினர்.

பாண்டியன் தீவில் 1606--ஆம் ஆண்டில் கட்டப்பட்ட "தேவ மாதா ஆலய"த்தில், தூத்துக்குடி பனிமய அன்னை ஆலயத்தில் பரத மக்களால் பத்திரப்படுத்தப்பட்ட அன்னையின் திருச்சுரூபத்தை பரத மக்கள் ஆடம்பரமாக நிறுவினர்.

பாண்டியன் தீவில் அமைக்கப்பட்ட இயேசு சபைத் தலைமை இல்லத்தில் பணி புரிந்த சகோதரர் வணக்கத்திற்குரிய பேதுரு தி பாஸ்து என்பவர் அன்னை மரியாள் மீது தனிப்பற்றுதல் வைத்திருந்தார். தினந்தோறும் அன்னையின் அற்புதச் சுரூபத்திற்கு முன் மண்டியிட்டு மன்றாடும் அவருக்கு பனிமய அன்னை பலமுறை காட்சி அளித்ததாக அவருடைய வாழ்க்கை வரலாறை எழுதிய இயேசு சபை அறிஞர் குய்ரோஸ் கூறுகிறார்.

சகோதரர் பேதுரு தி பாஸ்துவுக்கும் பாப்பரசர் "முத்திப் பேறு பட்டம்" வழங்குவதற்குப் பனியமய அன்னை பாண்டியன் தீவில் அவருக்குத் தந்த காட்சிகளே முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவந்தாகுளத்தின் ஶ்ரீ:

பாண்டியன் தீவில் குடியேறிய முத்துக்குளித்துறை மக்கள் மீதும் இயேசு சபையினர் மீதும் தவறான எண்ணங்கொண்டு, அவர்களுடன் போர் தொடுத்து, அவர்களை 1610--ஆம் ஆண்டில் கொச்சி ஆயர் ஆந்திரேயாஸ் பலவந்தமாகத் தீவில் இருந்து வெளியேற்றினார்.

1610 ஆம் ஆண்டில் முத்துக்குளித்துறையை விட்டு வெளியேறிய இயேசு சபைக் குருக்கள், 1621--ஆம் ஆண்டில் மீண்டும் முத்துக்குளித்துறைக்குத் திரும்பி வரும்வரை, இயேசு சபை ஆண்டறிக்கைகள் ஏதும் எழுதப்படவில்லை. பாண்டியன்ன் தீவில் நடந்த போருக்குப் பின், அங்குள்ள தேவமாதா ஆலயத்தில் வழிபடப்பட்டு வந்த பனிமய அன்னையின் திருச்சுரூபம் பற்றி வரலாற்றுக் குறிப்புகள் ஏதுமில்லை.

தூத்துக்குடி மக்களிடையே பரவலாக நிலவி வரும் பாரம்பரியச் செய்தியின்படி பரத மக்கள் பனிமய அன்னையின் திருச்சுரூபத்தை தூத்துக்குடிக்கு அருகேயுள்ள, "சிவந்தாகுளம்" அல்லது, "சேர்ந்தான் குளம்" என்ற பரதர் குடியேற்றத்துக்குக் கொண்டு சென்றனர்.

மன்னாரில், 'சங்கிலி' என்ற கொடிய மன்னனால் 1544--ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டு வேத சாட்சிகளாக மரித்த 600 பேர்களின் நினைவாக, அன்றைய சாதித்தலைவன், தொன் எரோணிமுஸ் தெக்குருஸ் பீரிஸ் சிவந்தா குளத்தில் 'புனித ஸ்நாபக அருளப்பரின்' பெயரால் ஓர் சிற்றாலயம் கட்டியிருந்தார்.

அந்தச் சிற்றாலயத்தில் தான், பனிமய அன்னையின் சுரூபம் வைக்கப்பட்டது என்பதே மக்களின் பொதுக்கருத்து. சிவந்தாகுளம் என்ற ஊரானது அன்னையின் சுரூப வருகைக்குப்பின்னர் "ஶ்ரீவந்தாள் குளம்" என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் "சேர்ந்தாள் குளம்" என மருவி, தற்போது சிவந்தாகுளம் என்றே அழைக்கப்படுகிறது.

புதுப் பொலிவுடன் தூத்துக்குடியில்:

1621 ஆம் ஆண்டில் பனிமய அன்னை ஆலயம் புதுப்பிக்கப்பட்ட பின்னர், மீண்டும் பனிமய அன்னையின் திருச்சுரூபம் அங்கே நிறுவப்பட்டு, ஆண்டுதோறும் அன்னையின் திருநாள் ஆகஸ்ட் 5-ஆம் நாளன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

1648--ஆம் ஆண்டின் இயேசு சபை அறிக்கையில் சுவாமி பல்தசார் டி கோஸ்தா, அவ்வாண்டில் கொண்டாடப்பட்ட அன்னையின் திருநாளைப் பற்றி விமரிசையாகக் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் புலம் பெயர்ந்த அன்னை:

1658--ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் தூத்துக்குடியைக் கைப்பற்றிய பின்னர், பனிமய அன்னை ஆலயத்தைத் தங்களுடைய கால்வீனிய செபக்கூடமாக மாற்றினர். பனிமய அன்னையின் சுரூபத்தை அவர்களிடமிருந்து பத்திரப்படுத்தும் நோக்கத்துடன், அன்றைய பரதர் சாதித்தலைவர் தொன் சவியர் ஹென்றி தெக்குருஸ் கொரைரா, மீண்டும் சிவந்தாகுளம் எடுத்துச் சென்று, அங்குள்ள புனித ஸ்நாபக அருளப்பர் சிற்றாலயத்தில் நிறுவினார்.

மூன்றாண்டுகளுக்குப் பின்னர், டச்சுக்காரர்கள் சிவந்தாகுளத்தையும் தங்களுடைய ஆளுகையின் மேற்கு எல்லைக்கு உட்படுத்திக் கொண்டனர். அதனால் பரத மக்கள் பனிமய அன்னையின் திருச்சுரூபத்தை அழகிய பச்சைப் பல்லக்கில் வைத்து, பாண்டியரின் பூர்வீகத் தலைநகரான, 'கொற்கை'க்குச் சென்று, அங்கு பரத சாதித் தலைவர் தன் பெயரால் கட்டியிருந்த ஆலயத்தில் எழுந்தருளச் செய்தனர்.

கொற்கையில் பனிமய அன்னையின் திருச்சுரூபம் ஏழாண்டு காலம் எழுந்தருளி இருந்த போது அனைத்து மக்களும் சாதி, மத வேறுபாடின்றி வணங்கி வந்ததால், பரதர் மாதாவான பனிமய அன்னை, 'கொற்கை மாதா" என அழைக்கப்படலானாள்.

1697--ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு கலவரத்தில் முகமதியர்கள் கொற்கையை நெருப்பால் அழித்தபோது, அன்றைய பரத ஜாதித்தலைவர் பனிமய அன்னையின் அற்புதச் சுரூபத்தை மீண்டும் தூத்துக்குடிக்கே கொண்டு வந்து, தம் அரண்மனையான, "பாண்டியபதி"யில் வைத்து வணங்கி வந்தார்.

எட்டாண்டுகள் தனி அறையில்:

1699--ஆம் ஆண்டில் தூத்துக்குடியின் பங்குக் குருவாக விஜிலியுஸ் சவேரியுஸ் மான்சி சுவாமிகள் பொறுப்பேற்றவுடன், பரத ஜாதித் தலைவர் அன்னையின் அற்புதச் சுரூபத்தை அவரிடம் ஒப்படைத்துவிட்டார்.

டச்சுக்காரர்களால் அன்னையின் சுரூபத்திற்கு மீண்டும் ஆபத்து வரக்கூடும் என்று அஞ்சிய சுவாமி மான்சி, சுரூபத்தைத் தம் இல்லத்தில் உள்ள தம் அறையிலேயே வைத்து மிகுந்த பக்திச் சிறப்போடு வணங்கி வந்தார்.

1707--ஆம் ஆண்டு ஏப்ரல் 4--ஆம் நாளன்று சுவாமி விஜிலியுஸ் மான்சியின் அறையினுள் விழுந்த இடியிலிருந்து அவரையும் அவருடைய ஊழியர்களையும் அற்புதமாகக் காப்பாற்றியது, அன்னையின் திருச்சுரூபப் புதுமையே!

புதிய ஆலயத்தில் அன்னை:

அன்னையின் புதுமையை உலகெங்கும் பறைசாற்ற கடமைப்பட்டவராக சுவாமி மான்சி, 1713--ஆம் ஆண்டில் பனிமய அன்னைக்கு அழகுமிகு ஆலயமொன்றைக் கற்களால் கட்டியெழுப்பினார்.

புதிய ஆலயத்தின் பீடப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த அழகுமிக்க சிலைமாடத்தில் பனிமய அன்னையின் அற்புதத் திருச்சுரூபம் அலங்காரமாய் நிறுவப் பட்டது.

வலம் வரும் அன்னை:

புதிய ஆலயத்தில் பனிமய அன்னையின் திருச்சுரூபத்தை ஆடம்பரமாகவும் சாஸ்வதமாகவும் நிறுவியதன் நினைவாக, 1720 ஆம் ஆண்டில் பரத குல சாதித் தலைவர் தொன் கபிரியேல் ஆரோக்கிய தெக்குருஸ் கோமஸ், அன்னைக்கு ஓர் அழகிய சிறு தேரினை உருவாக்கினார். இதுவே பனிமய அன்னை தூத்துக்குடி வீதிகளில் வலம் வந்த முதல் தேர்.

பரத மக்கள் முத்துச் சிலாபங்களில் செழிப்படைந்திருந்த ஆண்டுகளில் மட்டுமே இந்த அழகிய சிறு தேரினை நகர்வலம் வரச்செய்து, அன்னையை மகிமைப்படுத்தி நன்றி தெரிவித்துள்ளனர்.

பனிமய அன்னையின் திருச்சுரூபம் தூத்துக்குடி நகரை வந்தடைந்த 250 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதத்திலும், டச்சுக்காரர்களிடமிருந்து தம்மைக் காப்பாற்றிய அன்னைக்குத் தோத்திரமாகவும், முத்துச் சிலாபங்களில் தமக்குக் கிடைத்த அபரிமிதமான இலாபத்தைக் கொண்டு அன்றைய பரத குல சாதித்தலைவர் தொன் கபிரியேல் தெக்குரூஸ் வாஸ் கோமஸ், பனிமய அன்னைக்கு ஒரு சித்திரத் தேரைச் செய்வித்தார்.

1806--ஆம் ஆண்டு பிப்ரவரி 2--ஆம் நாளன்று மாதாவின் சுத்திகரத் திருநாளில் முதன்முதலாக வலம் வந்த அன்னையின் பொற்றேர், அதன் பின்னர் பனிமய அன்னையின் திருநாளான ஆகஸ்ட் 5--ஆம் நாளன்று, சீர் பரவர் திரு மந்திர நகராம் தூத்துக்குடி நகரில் பன்னிரு முறை, (1872, 1879, 1895, 1905, 1908, 1926, 1947, 1955, 1964, 1977, 1982 மற்றும் 2000) ஆண்டுகளில் வலம் வந்துள்ளது.

பனிமய அன்னை ஆலயம் கட்டப்பட்ட நானூறாவது ஆண்டின் நிறைவு நினைவாக, பாப்பரசர், 2-ஆம் அருள் சின்னப்பர், 1982--ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் நாளன்று, தூத்துக்குடி பனிமய அன்னை ஆலயத்தைப் "பேராலயம்" என்ற சிறப்பு நிலைக்கு உயர்த்தினார்.

பேராலய நிலையின் இருபத்தைந்து ஆண்டின் நினைவாக, 2007--ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5--ஆம் நாளன்று பதின்மூன்றாம் முறையாக பொற்றேரில் வலம் வரவிருக்கிறார்கள், புதுமைக்கரசியான பரதர் மாதாவென்னும் திவ்விய சந்த மரிய தஸ்நேவிஸ் அன்னை!

கடந்த 450 ஆண்டுகளுக்குள் பல முறை புலம் பெயர்ந்து வலம் வந்து தன்னுடைய பிள்ளைகள் அனைவர்க்கும் வரம்பிலா வளம் தந்த பரிசுத்த பனிமய அன்னை, நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இல்லத்திலும் வலம் வர வேண்டும்! வளம் பல தர வேண்டும்!

தி.சொர்ணராஜன் விக்டோரியா

Fr. Adrian Caussanel – on Paravas



Rev. Fr. Adrian Caussanel ( 1850- 1930 ) was one of the French Jesuit missionaries who began his mission in Tuticorin in 1889 –and served in erstwhile Tinnevely District till 1930. Fr. Caussanel sj, took up recording history of the communities he served and wrote “storical notes on Tinnevely district.” Two chapters of this document deal with Paravas. And these were written between 1910 and 1916.

Fr. Caussanel was the founder of the order of brothers of Sacred Heart of Jesus and one of the founders of St. Xaviers college , Palyamcottah through the portals of which many of our boys have passed through.

We reproduce a paragraph from this document. — Editor

Another remark truly worthy of notice — so extraordinary it is —, should be drawn from the fact that Paravas alone have survived all kingdoms, rulers, disasters, all persecutions, oppressions and contempts. The Cheras , Cholas, and Pandyas have vanished away, the mighty powers the Carnatic and Bisnagar (Vijayanagar) have gone, the empires of Delhi do exist only in annals of the times. The formidable armies of the great Moghul the Maharattas, the Naiks, the Nawabs of Arcot, have gone for ever. Portuguese and Dutch domination have come to a close. Hundred times the surface of India has changed ,its rulers and ruled. What caste could claim a single corner of the territory not for the last 3000 years but for one thousand and less. The Paravas alone remain on their Paralia amongst the universal ruins accumulated all around. They continue to be fishermen and fishers of pearls. You may dispossess the Poligars. and Pattadars of their estates, You may deprive the ghats of its forests, You will not deprive the Paralia of its Paravas. You may free their villages and reduce to ashes their boats and do as Salmanasar and Nabuchodosor did with the inhabitants of Israel of Judea who were dispersed in Assyria, and Mesopotomia by these tyrants. You may replace the Paravas by what sort of people you like; the Paravas will not lose their Paralia……. England lost its Aborigines ; so did Spain; and Italy and all countries. The Paralia keeps its aborigines. The Gulf of Mannar is still their kingdom. Contemplate one morning the the whole sea from Cape Comarin to Manapad covered with boats mounted by Paravas who joyfully sing the powers of God and say whether the Paralia has passed to strangers.

It is on record that the Pearl Fishery was going on from the first century after Christian era.

One famous Greek Mariner by the year 80 A.D. went round the whole Arabian Sea from the mouth of the Red Sea to the Bay of Bengal and wrote the details of this circumnavigation in a book known as Periplus Maris. This book describes the Paralia as starting south of Quilon and proceeding to the Korkai emporium through the Cape of Comarin. The ghats ridges are called Pyrrhos. He calls Korkai, the head quarters of the pearl fishery. We have gone through the Christian centuries,but before Christ the Pearl Fishery did exist on the Paralia.


The Geographer Ptolemy who wrote by the year 130 AD assures us that the Korkai emporium is mentioned in all ancient geographies and repeats what has been said by Periplus that the emporium is the headquarters to the King of Pandiya. It has been proved historically that the king of Pandiya had sent an embassy to the Emperor Augustus of Rome.


It is also incontestable that the Greeks were in constant touch with Paralia at least 400 years before Christ. The Embassy of Selukas Nicator to the Pandiya king is an historical fact and Periplus frequently refers to the writings of Megastenes who was the personage deputed by the successor of Alexander the Great, to India by the year 305 BCc . Megastenes narrates what he saw, the pearl fishery is held in the Pandiyan kingdom and the Malabar coast also belongs to Pandiyan king. Had not the Paralia been known to the Greeks, there should have been no reason to send an ambassador to Pandiyan.

We possess historical proof in favour of the acquaintance of the Phonetians with the Paralia in our sacred writings both in the third book of Kings and in the second book of the Paralipomenon. We see Solomon constructed a fleet at Asiongabar on the banks of the Red Sea ;and this fleet, once in three years was going to Ophir with the Phenitians who were the most experienced navigators of the world. Salianus states that Ophir is the same as Taprobanum and we know that Taprobanum is the Greek name of Tambaraparani at the mouth of which stood the emporium of Korkai. Besides in both the aforesaid books, it is stated that the vessels when coming back from Ophir were carrying amongst most valuable products splendid pears, gemmas, precious issimas.

The Queen of Saba or Arabia had also offered to Solomon beautiful pearls , and Marco Polo says that all the pearls of the world were coming from Paralia and that there was constant mercantile exchange between several people of Arabia and the people of Paralia. Again in the same holy books it is said that all the the princes of Arabia were paying tribute to Solomon.

Therefore we are irresistably brought to the conclusion that thousand years before Christ there were fishers of pearls and the sailors of Indian ocean were the inhabitants of the Paralia and the sailors of Indian ocean were inhabitants of the Paralia and were keeping commercial intercourse with the mariners of Phenicia who once in three years were coming for exchanging products.The fact of going along the coast rendered at that time the navigation between the Indian Ocean and the Red Sea most barbarous and tedious. But the Greek Mariner Hippalus having successfully attempted to go straight assisted by South West monsoon , the Greeks from the time were used to go frequently to India. Did the Phenitian navigators exist or learn the profession of mariners before the Paravas , this is what could not be decided historically.Were the Paravars merely a colony of Phoenicians who after the discovery of the richness of The Gulf of Mannar settled themselves on that coast. This is merely possible but it seems more probable that the discoverers of the pearls were the aboriginal fishers of that coast. None could conceive the fishery of pearls and the Paralia without Paravas.

It is not out of place to make a few remarks in respect of the Paravas . Are the Paravas mixed race? The opinion advanced by writers is certainly untrue and ungrounded historically. Not a single caste in India is more cautious in matrimonial union. The supposition that there had been intermarriages with Portuguese is merely a fable. Any man who has deeply examined matters comes to the conclusion that Paravas are scrupulous to excess in their contracting marriages and this results from the autonomy of the caste before their conversion.

If the Paravas are so strict in their marriage matters, it is not only by the spirit of their caste. They are moved by the same motives the Jews had to marry in their tribe. They are Paravas and want nothing but to remain as Paravas. Other castes are in need of caste titles. The Paravas need no titles, but wish to be Paravas simply. The addition of Pattangatti or Fernadez etc in some place is given, as it is customary now to say SIR. But the Paravas acknowledge it as a title of their caste. So by caste denomination the Paravas are quite different from the rest of Indians.

(This was written by Fr. Adrien Caussanel in 1901. Now there is a change noticed due to migration from shores, education, employment, erosion of commitment to Faith and above all due to regressive dowry system– Ed)

(Paralia ;- The coast between Trivancore back waters near Kanyakumari and as far as Adams Bridge.)
[The spellings and words are reproduced as found written by Father. Ed]



Rare Collection

CARTAS Y ESCRITOS DE
SAN FRANCISCO JAVIER

ÚNICA PUBLICACIÓN CASTELLANA COMPLETA
SEGÚN LA EDICIÓN CRITICA DE «MONUMENTA
HISTÓRICA SOC. IESU» (1944 - 1945)

ANOTADAS POR EL PADRE
FÉLIX Z U B I L L A G A , S. I.
REDACTOR DE MON. HIST. SOC. IESU
TERCERA EDICIÓN


BIBLIOTECA DE A U T O R E S C R I S T I A N O S
MADRID • MCMLXXIX

சூட்சுமம் திறந்த திருமந்திரம்

புலன்களை வசப்படுத்துதல் குறித்த திருமந்திரப் பாடலில்  காணலாம்.

"குட்டம் ஒருமுழம் உள்ளது அரை முழம்
வட்டம் அமைந்தது ஓர் வாவி உள் வாழ்வன
பட்டன மீன் பல பரவன் வலைகொணர்ந்து
இட்டனன் யாம் இனி ஏதம் இலோமே.'
-திருமந்திரப் பாடல் எண்: 2031

ஒரு முழம் ஆழமும் அரை முழம் அகலமும் உள்ள ஒரு குளம் (வாவி) உடலில் உள்ளதாம். இந்தக் குளத்தில் பல மீன்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கின்றனவாம். ஒரு மீனவன் (பரவன்) வந்து ஒரு வலையை வீச, குளத்தின் மீன்கள் அந்த வலையில் சிக்கிக் கொண்டன. அவற்றின் துள்ளலும் அடங்கிப் போயிற்று என்பதே இப்பாடலின் சுருக்கமான பொருளாகும்.

இதில் குளமாக உருவகம் செய்யப்பட் டுள்ளது நமது முகம் (தலை). நமது தலையின் உச்சியிலிருந்து கழுத்து வரை உள்ள ஆழம் ஒரு முழம். ஒரு காது முதல் மற்றொரு காது வரையுள்ள அகலம் அரை முழம். நமது ஐம்புலன்களே இந்தக் குளத்தில் துள்ளிக் கொண்டிருக்கும் மீன்களாக உருவகப்படுத்தப் பட்டுள்ளன.

நமது மூளையே புலன் இச்சைகள் உருவாகும் இடமாகும். எனவே திருமூலர் "வாவி' என தலையினுள் இருக் கும் மூளையைக் குறிப் பிடுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

வலையை வீசி இந்தப் புலன்கள் எனும் மீன்களைப் பிடிக்கும் மீனவன் பரம்பொரு ளாகிய சிவன். அவனையே "பரவன்' என்று வர்ணிக்கிறார் திருமூலர். எங்கும் நீக்கமற பரந்து நிற்பவனாக இறைவன் இருப்பதால் "பரவன்' என்ற பட்டமும் அவனுக்குப் பொருத்த மானதே.இப்பாடலில் உள்ள சூட்சுமம் என்ன? மனித முயற்சியால் நாம் எவ்வளவுதான் முயன்றாலும் நமது புலன்களை நம்மால் முழுமையாக வெற்றிகொள்ள முடியாது. இறைவன் தனது அருள் எனும் வலையை வீசினால் ஒரு நொடிப் பொழுதில் இந்தப் புலன்களின் துடிப்பும் துள்ளலும் நின்று போகும். ஆக, இறையருள் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்பதே இப்பாடலில் பொதிந்து நிற்கும் சூட்சுமமான பொருளாகும்.

நண்டு பிரட்டல்

தேவையான பொருட்கள் :

நண்டு 500 கிராம்
வெங்காயம் 4 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது 50 கிராம்
பச்சைமிளகாய் 3 நறுக்கியது
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
மிளகாய்தூள் 2 டீஸ்பூன்
தனியா தூள் 2 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் 2 எண்ணிக்கை
துருவிய தேங்காய் 50 கிராம்
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 100 மில்லி
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்


செய்முறை :

முதலில் நண்டை சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 'மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலம் இவற்றை லேசாக வறுத்து எடுத்து, அதனை பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வதக்கிய வெங்காயத்தில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பிறகு நண்டை இதிலே போட்டு நன்றாக பத்து நிமிடம் கிளரி, ஒரு மூடியால் மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து இதிலே வறுத்த பொடி, அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும், நண்டிலிருந்தே தண்ணீர் வரும். அதனால் தண்ணீர் ஊற்ற தேவையில்லை. 15 நிமிடம் அப்படியே நன்றாக மூடி வைத்து வேக வைக்கவும். இப்போது நன்றாக மசாலா வாசனை வரும். நண்டும் நன்றாக வெந்து அப்படியே கிரேவியாக பிரண்டு வரும்போது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழ்மொழியின் பெருமை


‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடித் தமிழ்’ எனப் புகழ் பெற்ற செம்மொழித் தமிழின் பெருமையினைச் சங்க இலக்கியங்களும், கல்வெட்டுகளும், புராதனச் சின்னங்களும் வெளிப்படுத்தியுள்ளன. ஆயினும், கடலுக்கடியில் மூழ்கிக்கொண்டிருக்கும் தமிழ் தொடர்பான செய்திகளை வெளிக்கொணர்வது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமாகிறது.

தற்போதைய, உலகளாவிய ஆய்வில் கண்டுபிடித்த செய்தியின் அடிப்படையில் மடகாசுகருக்கும், ஆஸ்திரேலியாவிற்கும் தெற்கு பரந்துபட்ட இந்துமகா சமுத்திரத்தில் மூழ்கிய லெமூரியாக் கண்டம், குமரிக் கண்டம் என அழைக்கப்படுகிறது. பங்கியா-குமரி இருந்த நிலப்பரப்பில்தான் உயிரினம் மனிதனின் வழித் தோன்றல்கள் தோன்றியுள்ளன.அமெரிக்க, ஆஸ்திரேலியக் கண்டங்களில் ஆரம்பகால உயிரினமோ, மனிதவழித் தோன்றலோ, பிறந்ததாக, வாழ்ந்ததாக அடையாளங்கள் இல்லை.

பங்கியா(பாண்டியா) என்ற நிலப்பகுதி பிளவுபட்டு லுரேசியா, கோண்டுவானா என்று இருந்த குமரிக் கண்டம் பகுதியில் இயற்கைச் சீற்றத்தினால் பல்வேறு மாறுபாட்டினை அடைந்தன.

கி.மு.300இல் தென்கடலில் பயணம் செய்த கிரேக்கத் தூதுவர் மெகஸ்தனீஸ் பங்கியாவைப் ‘பண்டேயா‘ எனக் குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து உடையத் தொடங்கிய நிலப்பரப்பு கோண்டுவானா. வடக்கிலிருந்து பிரிந்த நிலப்பரப்பு இலாராசியா. கோண்ட்வானா மீண்டும் உடைந்து தென்னமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என்று பிரிந்தது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் கோண்ட்வானா பெருங்கண்டம் அமைந்திருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

கன்னியாகுமரி வரலாற்றுச் சிறப்புமிக்க இதனைத் தென்கடலில் மூழ்கிப் போன குமரியத்தின் எஞ்சிய நிலமாகக் குமரிமுனை, இலங்கை, இலட்சத் தீவுகள் அறியப்படுகின்றன.

”பஃறுளி-…………………………………………

………………………………கொடுங்கடல் கொள்ள”…….சிலம்பு கா. காதை (19-20) பாடலடிகள் தமிழ்மொழியின் பெருமையை அறியச் செய்துள்ளது. குமரிக்கோடு என்ற மலைநிலத்தைச் சுற்றி குமரி ஆறு, மலை, அதனைச் சுற்றி நாடுகள் பல இருந்தன. அவைகளே பஃறுளியாறு, குமரிக்கோடு. குமரிமுனையின் வரலாறு குறித்து

• ஸ்டிராபோ-கி.மு.74-கி.பி-24

• தாலமி—கி.பி.119-161

• மார்க்கோபோலோ—கி.பி.1254-1324 போன்றோர் ஆய்வு செய்து பல கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

தாலமி இந்தக் குமரி முனையை ‘புரோமன்போரியம் குமரி‘ என்று குறிப்பிட்டுள்ளார். முதலில் பஃறுளி ஆறு அழிந்து, குமரிக்கோடு கடலில் மூழ்கிய பின், முசிறியின் பல பகுதிகளும் கடலில் மூழ்கின. கடல்கோள் நடந்த செய்திகள் கி.பி. 79 ஆகஸ்டு 23-24 அத்துடன் கி.மு.மூன்றாம் நூற்றாண்டின் (300) இறுதி எனவும், காவிரிப்பூம்பட்டினம், மலங்கே என்ற மகாபலிபுரம் என்ற மாமல்லபுரம் ஆகியன கடலில் மூழ்கியவற்றைக் கூறுகின்றனர்.

”குமரியக் கிழக்கு மலையாளப் பாண்டியப் பண்டு நாட்டிலிருந்து செங்கடல் வழியாக வந்து நைல் நதிக்கரையில் குடியேறிய (தமிழர்) மக்கள் எகிப்தியர் என்று ” புராதன கிழக்கு வரலாறு” (The Ancient History of the Near east) என்ற தமது நூலில் ஆர்.எச்.ஹால் என்பவர் கூறுகிறார்.. அவரே திராவிட மக்களும் எகிப்தியரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்” என்றும் கூறுகிறார். இதே கருத்தினை( outline of history by H.G Wellman”s place in nature and other essays P.23 Thoms Huxle) மற்றும்” ருக்வேத இந்தியா ” என்ற தமது நூலில் அபினஸ் சுந்தரதாஸ் என்பவரும் ” புராதனக் கலைஞன் ” என்ற தமது நூலில் பண்டிதர் சவுரிராயர், மற்றும் மெகஸ்தனீஸ் ஆகியோரும் குறிப்பிடுகின்றனர்.

ஏராளமான சங்கச் செய்திகள் சமகாலமான சங்க இலக்கிய எழுத்துகளில் கிடைத்துள்ளன. புகலூர் ஆறுநாட்டார் மலையில் பதிற்றுப் பத்து 7,8,9 ஆம் பத்துக்குரிய செல்வக்கடுங்கோ வாழியாதன் பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ பெயர் பொறித்த பழந்தமிழ்க் கல்வெட்டு கிடைத்துள்ளது. தேரிருவேலி அகழாய்வில் நெடுங்கிள்ளி பெயர் பொறித்த பானை ஓடும், மாக்கோதை, கொல்லிப்பாறை, கொல்லிரும்பொறை, குட்டுவன்கோதை என்ற சேரர் பெயரும், பெருவழுதி என்ற பாண்டியர் பெயரும் பொறித்த காசுகளும் கிடைத்துள்ளன.

அண்மைக்காலத்தில் கிழக்கு நாடுகளிலும், மேற்கு நாடுகளிலும் பல சங்ககாலச் சோழர் புலிக்காசும், பெரும்பத்தன் கல் என்று பழந்தமிழ் எழுதப்பட்ட தங்கம் உரைத்துப் பார்க்கும் உரைகல்லும் கிடைத்துள்ளன. எகிப்து நைல் நதிக்கரை ஊரான குவாசிர் அல்காதிம் என்ற ஊரில் கண்ணன், சாத்தன், பனை ஒறி என்று எழுதப்பட்ட பானை ஓடுகளும், பெறனிகே என்ற இடத்தில் “கொறபூமான்” என்று எழுதப்பட்ட பானைஓடும் கிடைத்துள்ளது. இவை சங்ககாலத்தின் இருப்பையும், தொன்மையையும், காட்டுகின்றன. (செவ்வியல் ஆய்வுக்கோவை, உலகத் தமிழ்ப்படைப்பாளர் நூல் வெளியீட்டகம், திருச்சிராப்பள்ளி, மு.பதி.2011)

விழுப்புரம் கீழ்வாலை மலைப்பாறைப் பகுதிகளில் காணப்படும் ஓவியங்கள், குறியீடுகள் போன்றவை பழங்காலத்து வரலாற்றுடன் தொடர்பு கொண்டுள்ளனவாக அமைந்துள்ளன. இங்கு காணப்படும் ஓவியங்கள் ஆப்ரிக்க, ஆஸ்திரேலியா ஓவியங்களை ஒத்துள்ளது.

செங்கோன் தரைச்செலவு குறித்த நூல் குமரிக்கண்டம் குறித்த பழமையான செய்திகளைத் தரலாம் என ஆய்வுகள் மூலம் அறியப்படுகிறது. சமவயங்க சுத்த என்ற சமண நூல் (18 மொழி-தொகுப்பு) வாயிலாகத் தமிழ்மொழி குறித்த பல செய்திகளை அறியலாம். லலிதா விஸ்தாரம் என்ற பௌத்த நூல் தொகுப்புப் பட்டியலில் தமிழ்மொழி குறித்த செய்திகள் கிடைக்கலாம்.

கி.மு 4500-இல் எகிப்து நாட்டை மீனன் என்ற தமிழன் ஆண்டான். இதுபற்றி எகிப்திய அக்கால குருவான மனேதா என்பவர் மீனன் முதல், 300 புராதன அரசர் வரலாற்றை அவர் அங்கு எழுதி வைத்தார். எகிப்தில் மீனன் சவ உடல் மதமதக்கத் தாழி என்ற குழு தாழியில் தைலம் பூசிப் புதைக்கப்பட்டுள்ளது. கி.மு.4000 ஆண்டில் பரவன் என்ற தமிழ் மன்னன் எகிப்து அரசனாக விளங்கினான். அவர்கள் பேசிய மொழி தமிழ்மொழி எனப் பலநூல்கள் குறிப்பிட்டுள்ளன.

கி.மு.4000 ஆம் வரையில் எகிப்து-பண்டு இடையே நோவா காலம் தொடர்ந்தும் (கி.மு.2400) கப்பற் பயணங்கள் நடந்திருப்பதை பொறிக்கப்பட்டிருக்கும் எகிப்தியச் சின்னங்கள் தெரிவிக்கின்றன. எகிப்திலிருந்து நோவா என்பவர் கட்டிய கப்பல் கூட பண்டு(பாண்டியர்)நாட்டிற்காகச் செய்தவையாகும். இவை பற்றிய விபரங்களை முதலில் பட எழுத்துகளிலிருந்து மொழி பெயர்த்து ஹென்றிபுரோசு என்பவர் வெளியிட்டார். குமரித் தமிழர்கள் நிலப்பகுதிகள் கடலில் மூழ்க பல இடங்களுக்குக் குடிபெயர்ந்தனர்.

சுமேரியர்களை முன்னோடிகளாகக் கொண்டு மத்தியத் தரைக்கடல் கிழக்குப் பகுதியில் பனைமரங்களடர்ந்த இடங்களில் கோட்டை, கொத்தளம் அமைத்துப் பெரும் வணிகர்களாக வாழ்ந்த கடலாடிப் பகற்பரவத் தமிழர் வழியினரே பொனீசியர். அவர் வழியினரே பிரிட்டானியர். இச்செய்திகளின் வழி தமிழ்மொழி மிகவும் பழமை வாய்ந்தது என அறியப்படுகிறது.

யோனாகுனி தீவை ஒட்டிக் கடலில் மூழ்கித் தேய ஆய்வாளர்கள் கடல் மட்டத்திலிருந்து 100 அடி ஆழத்தில் பிரமிடுகள் போன்ற வடிவத்துடன்கூடிய கட்டுமானங்களைக் கண்டறிந்தனர்.கற்களால் ஆன இந்தக் கட்டுமானங்கள் இயற்கையா? இலெமூரியாக் கண்டத்தின் நாகரிக எச்சங்களா என்ற ஆய்வு நிலை நீடித்து வருகிறது.

இலெமூரியாக் கண்டம் என்பதை மூ என்று சொல்வார்கள். இந்தியாவிலும், பர்மாவிலும் உள்ள இந்து மடாலயங்களில் கிட்டும் ஆவணங்கள் இது பற்றிப் பேசுகின்றன.

ஆங்கில அமெரிக்க ஆய்வாளர் சேம்சுசர்ச்சுவார்டு 1931 இல் எழுதிய காணாமற்போன மூ அல்லது இலெமூரியாக் கண்டம் ஹவாய் தொடங்கி மரியானாவரை பரவி இருந்ததாகவும், கடற்கோள் ஏற்பட்ட பிறகு தென்னமெரிக்கா வழியாக அட்லாண்டிசுக் கண்டத்தின் கடலோரம் வழியாக ஆப்பிரிக்காவுக்கும் அகதிகள் பரவினர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரெஞ்சு எழுத்தாளர் அகசுதசு லெ பிளாஞ்சீயோன்(1825-1908) 19 ஆம் நூற்றாண்டில் மூ கண்டம் குறித்துக் குறிப்பிட்டுள்ளது சிறப்பானது. மாயன் சுவடிகளை அவர் மொழியாக்கம் செய்தபோது மூ என்னும் கண்டம் இருந்தது குறித்தும், அக்கண்டத்திலிருந்து தப்பித்தவர் மாயன் நாகரிகத்தை உருவாக்கியதாகவும் எழுதியுள்ளார். இதன்வழி இலமூரியாக் கண்டம் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

எட்கார் காய்சி(1877-1945) அட்லாண்டிசு பற்றியும், மூ பற்றியும் அறிந்தவரான இவரே முதன்முதலில் இலெமூரியாக்கண்டம் எனப் பெயரிட்டார். துறவி தந்த சுவடிகள் வழி மூ என்னும் பழம்பெரும் நாகரீகம் குறித்து அறியப்பட்டுள்ளதாக நந்திவர்மன் குறிப்பிடுகிறார் (கடலடியில் தமிழர் நாகரீகம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.,மு.ப.2010) .

மேலும், மூழ்கிக் கிடக்கும் அட்லாண்டீசு தென் சீனக் கடலில் இருப்பதாயும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூழ்கிய குமரிக்கண்டம் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கனடா நாட்டின் புகழ்பெற்ற ஆங்கில ஏடான ஏட்டில் திசம்பர் 7,இல் செய்தியாளர் மைக்கேல் கியூபா நாட்டருகே கடலடி நாகரிகம் குறித்த சான்றுகள் குறித்துப் பதிவு செய்துள்ளார்.

கியூபா நாட்டு மாந்த உயிரியல் (Anthropology) அகாதமியின் ஆய்வாளர் ஒருவர் அந்தப் பாறையின் மீது குறியீடுகளும், கல்வெட்டு எழுத்துகளும் தெளிவாகப் பார்க்கமுடிந்ததையும், அது எம்மொழி எனத் தெரியவில்லை எனவும் குறித்துள்ளார்.

இதன்வாயிலாகத் தமிழ்மொழியின் பெருமை அறியப்படவேண்டிய நிலையிலேயே இன்னமும் அமைந்துள்ளது. இவ்வாய்வு முடிவுகள் வெளிவரின் தமிழ்மொழியின் பெருமை தழைத்து வளரும்.இது குறித்து இன்னமும் ஆய்வுகள் வெளிவர தமிழ்மொழி செழித்து வளரவேண்டும். சுவடிகள் படிக்கவும், கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகள் குறித்தும் அறிய மக்கள் முன்வரவேண்டும்.

- முனைவர்.பி.ஆர்..லட்சுமி.

கணியம்

 'கணியம்'. இது மீனவர்களின் தொழிலோடு சம்மந்தப்பட்ட ஒரு வார்த்தை.

மீன் பிடி வலைகளிலே பல வகை .....

1. செவ்வக வடிவிலான, நீண்ட வலையை வீசி ஓரு மணி நேரத்தில் அவற்றை உடனே எடுத்து மீன்களை கண்ணிகளிலிருந்து உருவி எடுப்பது ஒரு வகை. இவற்றில் கண்ணிகளில் சிக்கி கொண்ட மீன்களே நம் கைக்கு வருகின்றன. கண்ணிகளில் மாட்டிக் கொண்ட மீன்கள் தண்ணீரிலிருந்தாலும் கூட சிறிது நேரத்தில் இறந்து விடுகின்றன. எனவே முடிந்த அளவு விரைவாக அவை அழுகு முன் கரை சேர்ப்பது அவசியம்.

2. மிக சிறிய கண்ணிகளை கொண்டு, நம்மூர் மூதாட்டிகள் வைத்திருக்கும் 'சுருக்கு' போன்று வடிவமைக்கப் பட்ட இவ்வகை பை போன்ற வலையை குமரி மாவட்ட மீனவர்கள் 'மடி' என்று அழைக்கிறார்கள். குறைந்தது 40 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் கொண்ட மெகா பைக்குள் கூட்டமாக வரும் தன்மை கொண்ட மீன் வகையை லாவகமாக ஒரு சேர உள்ளே தள்ளி ,கண்ணிமைக்கும் நேரத்தில் சுருக்கை பூட்டிக் கொண்டு மொத்தமாக மீன்களை அள்ளிக் கொள்ளும் முறை இது.

3. சந்தையில் மிக விலையுயர்ந்த கல் இரால் (lopstar) போன்ற உயிரினங்கள் பாறை பகுதிகளில் கிடைக்கின்றன. இருந்தாலும் இவை மீன்களை போன்று பெரும் எண்ணிக்கையில் வருவதில்லை. இதன் சிறப்பு இவை வலைகளில் மாட்டிக் கொண்டாலும் இறப்பதில்லை. கரைக்கு வந்த பின்பும் நீண்ட நேரம் உயிரோடிருக்கும் தன்மை கொண்டவை. எனவே இவற்றை கரை சேர்ப்பதில் அவசரம் காட்ட தேவையில்லை. எனவே இவற்றை பிடிப்பதற்கு ஏறத்தாழ முதல் வகை வலையையே பயன்படுதினாலும் அவற்றை உடனே எடுத்து வருவதில்லை.

குறிப்பிட்ட இடத்தில் இந்த வலைகளை தண்ணீருக்குள் அமுக்கி விட்டு, அடையாளத்திற்கான மிதவைகள் மட்டும் வெளியே தெரியும் வகையில் வலையை விட்டு விட்டு மீனவர்கள் கரை வந்து விடுவார்கள். மீண்டும் 2 அல்லது 3 நாட்கள் கழித்து வலையை போட்ட இடத்தில் சென்று எடுத்து வர வேண்டும். ஆழ் கடலில், கிட்ட தட்ட நிலம் மறைந்து, மலை உச்சிகளும், சில உயரமான கோபுரங்களும், தேவாலய உச்சிகளுமே மட்டும் தெரிகிற பரந்து விரிந்த தண்ணீர் பரப்பில் குறிப்பாக தாங்கள் விட்டுச் சென்ற வலையின் இருப்பிடத்தை கணித்து கொள்வதற்கு, மீனவர்கள் கோவில் கோபுரங்களையும், மலை முகடுகளையும் ஒரு சேர்த்து ஒரு கணக்கை மனதுக்குள் வைத்துக்கொள்கிறார்கள். இதனை அவர்கள் 'கணியம்' என்றழைக்கிறார்கள்.

- ஜோ மில்டன் 

தமிழரசுகளின் கடல் வல்லமை


தமிழரசுகள் அன்று மாபெரும் கடல் வல்லரசுகளாக இருந்தன. இது குறித்து வின்சென்ட் ஆர்தர் சுமித் என்கிற புகழ்பெற்ற வரலாற்றறிஞர், “தமிழ் அரசுகள் வல்லமை மிக்கக் கடற்படைகளை வைத்திருந்தனர். கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வணிகக் கப்பல்கள் தமிழகம் நாடி வந்தன” எனத் தனது இந்திய வரலாறு என்கிற நூலில் குறிப்பிடுகிறார்(1). அவர் தனது அசோகர் என்கிற மற்றொரு நூலில் “தென்னிந்திய நாடுகள் வலிமை வாய்ந்த கடற்படைகளைப் பல நூற்றாண்டுகளாகப் பராமரித்து வந்துள்ளன” எனக் குறிபிடுகிறார்(2). அன்று தென்னிந்திய நாடுகள் என்பன தமிழக நாடுகளே ஆகும்.

பண்டையத் தமிழக அரசுகள் வலிமை மிக்கக் கடற்படைகளைக் கொண்டிருந்த போதிலும் அவர்களிடையே நடைபெற்ற போர்கள் அனைத்துமே நிலப் போர்களாக இருந்தன. அவர்களுக்கிடையே கடற்போர்கள் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஆனால் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகிய இருவரும் கடம்ப மன்னர்களை, தமிழகக் கடல் வணிகத்துக்குத் தடையாக இருந்த அவர்களின் கடற்கொள்ளைகளைத் தடுக்கும் பொருட்டு, தங்கள் கடற்படை கொண்டு அவர்களைத் தாக்கி அடக்கினர் எனப் பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. 

ஆக கடற் பகுதியையும், கடல் வணிகத்தையும் பாதுகாக்க மட்டுமே கடற்படை பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. கடல் வணிகத்தை பாதுகாப்பதில் தமிழக அரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி இருந்ததாகவும் தெரிகிறது. அதனால் தான் தமிழரசுகளுக்கிடையே கடற்போர் எதுவும் நடைபெறவில்லை. வடக்கே சென்று வணிகம் புரியவும், கடல் வணிகத்தை பாதுகாக்கவும், வடக்கிலிருந்து வடுகர்கள் போன்ற அநாகரிக மக்களைக் கட்டுப்படுத்தி வைக்கவும், மொழிபெயர் தேயப் பகுதியைப் பாதுகாக்கவும், வடக்கேயிருந்து வந்த படையெடுப்புகளைத் தடுக்கவும் தமிழக அரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி ஒன்று மிக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. புகழ்பெற்ற நெடியோன் எனப்படும் நிலந்தரு திருவிற்பாண்டியன் கி.மு.5 ஆம் நூற்றாண்டிலேயே மிகப்பெரும் கடற்படை வைத்திருந்தான் எனவும் “சாவகம்” எனப்படும் இந்தோனேசியா தீவுகள் அன்றே அவனது கடற்படை கொண்டு கைப்பற்றப்பட்டது எனவும், அப்பாதுரை அவர்கள் குறிப்பிடுகிறார்(3). அதன்மூலம் “கிராம்பு” எனப்பட்ட வாசனைப் பொருள் வணிகம் தமிழர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. கிராம்பு என்பது உலகிலேயே இந்தோனேசியாவில் மட்டுமே விளைந்தது எனவும், உலகம் முழுவதும் அதற்கு மிக அதிகத் தேவை இருந்தது எனவும் அறிகிறோம்.

கி.மு.5-ம் நூற்றாண்டிலிருந்தே அத்தேவை கடல் வணிகம் மூலமே பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. அதனால் தான் அவ்வணிகத்தைத் தமிழர்கள் தமது கடற்படை கொண்டு தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். சங்ககாலத்தில் சாவகத்தில் தமிழ் பேசப்பட்டதாக மணிமேகலை காப்பியத்தின் கூற்று அச்செய்தியை உறுதிப் படுத்துகிறது(4). மேலும் நரசய்யா அவர்களின் “கடல் வழி வாணிகம்” என்கிற நூல் தமிழர்களின் பண்டையக் கடல் வணிகம் குறித்துப் பல விரிவான தகவல்களைத் தருகிறது. கி.மு.5-ம் நூற்றாண்டிலிருந்தே பண்டையத் தமிழக அரசுகள் கடற்போரிலும், கடல்வணிகத்திலும் புகழ் மிக்கவர்களாக, வலிமை மிக்கவர்களாக இருந்து வந்துள்ளனர்.

தாமிரபரணி ஆற்றின் பெயரில் இலங்கையின் வடமேற்கே அமைந்திருந்த தம்பப்பண்ணி எனப்படும் நகரம் கி.மு.500 வாக்கில் புகழ் பெற்றதாக இருந்தது. அதே காலகட்டத்தில் கங்கை ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்த தாமிரலிபத(Tamaralipta) நகரமும் புகழ் பெற்றதாக இருந்துள்ளது. மெகத்தனிசு இந்த தாமிரலிபத என்கிற நகரம் குறித்து எழுதியுள்ளார். ‘பண்டைய ஒரியாவின் கடல்வணிகப் பெருமை’ என்கிற கட்டுரையை ஒரிசா ரிவியூ என்கிற மாத இதழில் எழுதிய பாலபத்ர காதை அவர்கள், ‘தந்தபுர’ என சமண, புத்த நூல்களில் குறிப்பிடப்படும் பண்டைய கடற்கரைத் துறைமுகம் என்பது பண்டைய பாளூர் துறைமுகமாகும் எனவும், தமிழில் பல்+ஊர்= பாளூர் என்பதன் வடமொழிப்பெயர் தான் ‘தந்தபுர’ என ஆயிற்று எனவும், அதாவது தமிழில் பல் என்பது வடமொழியில் தந்த எனவும் தமிழில் ஊர் என்பது வடமொழியில் புரம் எனவும் ஆகியது எனவும் குறிப்பிட்டுள்ளார்(5). ஒரியா இரிவியு(ORISSA REVIEW) என்கிற அதே மாத இதழில் 2011 நவம்பரில் டாக்டர் பிரபுல்லா சந்திர மொகந்தி (DR.PRAFULLA CHANDRA MOHANTY) அவர்கள் எழுதிய வேறொரு கட்டுரையில் ஒரிசாவில் உள்ள பாளூர் என்கிற பண்டைய துறைமுகத்தின் பெயரானது தந்தபுரா என்ற வடமொழிப் பெயருக்கு இணையான தமிழ் பெயராகும் என பேராசிரியர் எஸ். இலெவி (PROF. S. LEVY) என்பவர் கருதுவதாகச் சொல்லியுள்ளார்(6).

அதுபோன்றே அதே மாத இதழில் டாக்டர் கார்த்திக் சந்திரா இரூட் (DR.KARTIK CHANDRA ROUT) என்பவர் எழுதிய கட்டுரையில் பாளூர் என்பது தமிழர்கள் தந்த பெயர் எனச் சில விமர்சகர்கள் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் காரவேலன் தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணியிடம் இருந்து கைப்பற்றிய கலிங்கத்தின் முக்கியத்துறைமுக நகராக இருந்த பித்துண்டா நகரம் சிறிதுகாலமே காரவேலனுடைய அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்(7). அப்படியானால் மீண்டும் அது தமிழர்களின் பொறுப்பில் வந்துவிட்டது எனப் பொருள் கொள்ளலாம். மேற்கண்ட தரவுகளின் படி, பாளூர் மட்டுமல்ல கலிங்கத்தில் இருந்த பண்டைய முக்கியத் துறைமுகங்களான கலிங்கப்பட்டினம், மசூலிப்பட்டினம், மாணிக்பட்டினம், கல்கதா பட்டினம், தாமரலிபத (KALINGA PATANAM, MASULI PATANAM, MANIK PATANA, KHALKATA PATANA, TAMARAL IPTA) ஆகிய அனைத்தும் தமிழ்ப் பெயரோடு தொடர்புடையனவாகும். MARITIME TRADE OF ANCIENT KALINGA, MARITIME HERITAGE OF GANJAM ஆகிய இரு ஆங்கிலக் கட்டுரைகளில் சொல்லப்பட்ட பண்டைய கலிங்க நகரங்கள் தான் இந்த 5 நகரங்களும் ஆகும்(8). இந்நகரங்களில் ‘தாமிரலிபத’ தவிர பிற அனைத்துத் துறைமுக நகரங்களும் இறுதியில் ‘பட்டினம்’ என்கிற தமிழ் பெயரைக் கொண்டுள்ளன.

பொதுவாகத் தமிழில் நெய்தல் நிலத்து ஊர்கள் பட்டினம் என்கிற பெயரைப் பெறும். தமிழில் பட்டினம் என்றால் நெய்தல் நில ஊர் என்பது போக, பட்டினர் என்பது நெய்தல் நிலத்தில் வசிக்கும் மீனவரையும், பட்டினச்சேரி என்பது நெய்தல் நில மீனவர் வசிக்கும் ஊர் அல்லது அவர்களது தெருவையும், பட்டினவாசி என்றால் நகர மக்களையும் குறிக்கும். ஆகப் பட்டினம் என்பது மூலத்தில் ஒரு தமிழ் பெயராகும். ஆகவே கலிங்கத்தில் உள்ள பட்டினம் என்கிற பெயர்கொண்ட பண்டைய பெயர்கள அனைத்தும் தமிழோடும், தமிழர்களோடும் தொடர்புடையன எனலாம். அதுபோன்றே தாமிரலிபத(Tamaralipta) என்பது இலங்கையின் தம்பப்பண்ணி போன்று தாமிரபரணி என்கிற தமிழக ஆற்றின் பெயரில் அமைந்த பெயராகத் தோன்றுகிறது. கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலிங்க மன்னன் காரவேலன் தனது அத்திக்கும்பா கல்வெட்டில் கலிங்கத்தின் பித்துண்டா நகரம் தமிழரசுகளின் காவல் அரணாக இருந்தது எனக் குறிப்பிட்டதும், தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி 1300 ஆண்டுகள் பழமையானது எனச் சொல்லியதும், கங்கை நதிவரை இருந்த கலிங்கத்தின் பண்டைய நகரங்கள் தமிழ்ப் பெயர்களோடு இருப்பதும் தமிழர்களின் கடல் ஆதிக்கத்தையும், வணிக மேலாண்மையையும் பறைசாற்றும் சான்றுகளாகும்.

வரலாற்றுப்பெரும்புலவர் மாமூலனார் தனது பாடல் ஒன்றில் ‘தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஎத்த’ என்கிறார்(9). அதாவது தமிழ் மூவேந்தர்கள் மூவரும் இணைந்து மொழிபெயர்தேயம் எனப்படும் இன்றைய கர்நாடகா, ஆந்திரா, மராட்டியத்தின் சில பகுதிகள் ஆகிய பிரதேசங்களை பாதுகாத்து வந்தனர் என்கிறார். அதன்மூலம் தமிழ் அரசுகளிடையே ஒரு ஐக்கிய கூட்டணி இருந்தது என்பதை அவர் உறுதிப்படுத்துகிறார். மேலும் இத்தக்காணப்பகுதியில் இருந்த வணிகப்பாதைகளை, அதன் கிழக்கு, மேற்குக் கடற்கரைத் துறைமுக நகரங்களை தமிழரசுகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர் என்பதையும் இப்பாடல் வெளிப்படுத்துகிறது எனலாம்.

மேற்கண்ட தரவுகள் தமிழர்களின் கடலாதிக்கத்தையும், கி.மு. 550 முதல் கி.பி. 200 வரையான 750 வருடங்களாக தமிழக வணிகம் இடைவிடாது உலகளாவிய அளவில் நடைபெற்று வந்ததையும் உறுதிப்படுத்துகிறது எனலாம். பண்டைய வணிகம் குறித்துக் குறிப்பிடப்படும் வணிகப் பொருட்களில் பெரும்பாலானவை தமிழகம், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில் விளைகிற, உற்பத்தியாகிற பொருட்களே ஆகும். பண்டைய காலத்தில் இவை அனைத்தும் சிந்துவெளிப் பகுதி, பாரசீக வளைகுடா நாடுகள், மேற்குலக நாடுகள் ஆகியவைகளுக்குத் தமிழகம் வழியாகவே அனுப்பி வைக்கப்பட்டன. தமிழர்களின் கடலாதிக்கம் இதற்கு ஒரு மிக முக்கியக் காரணமாக இருந்தது.

தமிழர்களின் கடலாதிக்கம்-இலக்கியத்தரவு:

கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்ணிக்குயத்தியார் என்கிற பெண்பாற் புலவர் சோழன் முதல் கரிகாலன், சேரன் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனை இரண்டாம் வெண்ணிப்பறந்தலைப் போரில் தோற்கடித்தான். அப்போரில் தோற்றதாலும், போரில் முதுகில் விழுப்புண் பெற்றதாலும் சேரலாதன் நாணி வடக்கிருந்து உயிர் துறந்தான். இந்நிகழ்வை, ‘இப்பாடலில் தோற்ற சேரலாதன் உன்னை விட நல்லவனும் புகழ் பெற்றவனும் ஆவான்’ என வெற்றிபெற்ற கரிகாலனிடமே நேரடியாகப் பாடியவர் இவர். இவர் ஒரு குயத்தி வகுப்பை சேர்ந்த பெண்பாற் புலவர். அதே சமயம் நேர்மையும், தைரியமும், புலமையும் உடையவர். அவர்,

‘நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி, வளிதொழில் ஆண்ட உரவோன் மருக”(10)

எனப் பாடலைத் தொடங்குகிறார். “பெருங்கடலில் காற்றின் தொழில்நுட்பம் அறிந்து அதனைக் கட்டுப்படுத்தி ஆள்வதன் மூலம் பெரும் மரக்கலங்களைச் செலுத்தி வருகிற மரபில் வந்தவனே” எனச் சோழ மரபின் கடலாதிக்கப் பெருமையைப் பாடுகிறார். அதன்மூலம் சோழர்கள் மிக நீண்ட காலமாகவே கடலோடிகளாக இருந்தவர்கள் என்பதையும், சோழ மண்டலத்தை ஒட்டிய கடல்பரப்பையும், இந்தியாவின் மேற்குக் கடற்பரப்பு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தவர்கள் என்பதையும் நாம் அறிய முடிகிறது. பெருங்கடலில் வீசும் காற்றின் தொழில் நுட்பம் அறிந்து அதனைக் கட்டுப்படுத்தி, பெரும் மரக்கலங்களைச் செலுத்தி வருகிற மரபில் வந்தவன் இந்தச் சோழன். இப்பாடலின் மூலம் பருவக்காற்று குறித்தும், கடல் நீரோட்டம் குறித்தும் அறிந்து கடலில் பெரும் மரக்கலங்களை செலுத்திய மரபில் வந்தவர்கள் சோழர்கள் என்பதைப் புலவர் தெரிவிக்கிறார்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறோக்கத்து நப்பசலையார் என்கிற இன்னொரு பெண்பாற்புலவர், மலையமான் குறித்தத் தனது பாடலில் சேரர்களின் கடலாதிக்கம் குறித்து

“சினமிகு தானை வானவன் குடகடல் பொலந்தரு நாவாய் ஓட்டிய

அவ்வழிப் பிறகலம் செல்கலாது அனையேம்” என்கிறார்(11).

மேற்குக்கடலில் சேரன் தனது பெருங்கப்பல்களை செலுத்தும்பொழுது வேறு யாரும் அவனது ஆணையை மீறி மேற்குக் கடலில் கப்பல்களைச் செலுத்த இயலாது. அதுபோன்று கபிலன் பாடிய பிறகு பிறர் யாரும் மலையமானை அந்த அளவு உயர்த்திப் பாட முடியாது என்கிறார் புலவர். அதாவது, சங்ககாலப் பெரும்புலவன் கபிலன், அறிவில் சிறந்தவன், பெரும்புகழ் பெற்றவன், அவன் இனி யாரும் பாடமுடியாதபடி மலையமானைப் புகழ்ந்து உயர்த்திப் பாடியுள்ளான் என் கிறார் புலவர். இப்பாடல், மேற்குக்கடலில் சேரர்கள் கடலாதிக்கம் உடையவர்களாக இருந்தனர் என்பதை வெளிப்படுத்துகிறது. சேரர்களது அனுமதி இன்றி யாரும் மேற்குக்கடலில் கப்பல்களை செலுத்த முடியாது என்பதும், மேற்குக் கடலில் சேரர்கள் கடலாதிக்கம் உடையவர்களாக இருந்தனர் என்பதும் இப்பாடலின் அடிக் கருத்தாக உள்ளது எனலாம். மேற்கண்ட இரு பெண்பாற் சங்ககாலப் புலவர்களின் பாடல்களும் சேரர்கள் மேற்குக்கடலிலும், சோழர்கள் கிழக்குக் கடலிலும் கடலாதிக்கம் கொண்டவர்களாக இருந்தனர் என்பதையும், பருவக் காற்றையும், கடல் நீரோட்டத்தையும் பற்றிய தொழிநுட்பத்தை அறிந்து பெருங்கப்பல்களை கடலில் செலுத்தும் திறனைத் தமிழர்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பே பெற்றிருந்தனர் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன எனலாம்.

சங்க இலக்கியத்தரவுகளும், வெளி நாட்டினரின் குறிப்புகளும், நவீன எழுத்தாளர்களின் நூல்களும், கல்வெட்டுகளும், நாணயங்களும், தொல்லியல் சான்றுகளும், இன்னபிறத் தரவுகளும் தமிழர்கள் கிமு. 6ஆம் நூற்றாண்டு முதலே உலகின் பல நாடுகளுக்கும் சென்று அங்கு தங்கி வணிகம் செய்து வந்தனர் என்பதை, அவ்வணிகத்தைப் பாதுகாக்கத் தமிழரசுகள் பெரும் கடற்படைகளைப் பராமரித்து வந்தன என்பதை, தமிழகம் கி.மு. 550 முதல் கி.பி.200 வரை இடைவிடாத உலகளாவிய வணிகத்தை மேற்கொண்டிருந்தது என்பதை, இவ்வுலக வணிகத்தால் தமிழகம் பெரும் செல்வத்தைப் பெற்றது என்பதை உறுதி செய்கிறது எனலாம். பண்டையச் சங்ககாலத் தமிழகம் பொருள் உற்பத்தியிலும், தொழிநுட்பத்திலும், வணிக மேலாண்மையிலும் வேளாண்மையிலும் உயர்நிலையில் இருந்ததன் காரணமாக உலகளாவிய வணிகத்தில் 750 வருடங்களாக இடைவிடாது, தமிழகம் உயர்ந்து நின்று தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருந்தது எனலாம்.

பார்வை:

1.கார்த்திகேசு சிவத்தம்பி, பண்டையத் தமிழ் சமூகம், முன்னுரை.

2.அசோகர், வின்சென்ட் ஆர்தர் சுமித், தமிழில் சிவமுருகேசன் பக் :79

3, 4. கா.அப்பாதுரை, தென்னாட்டுப் போர்க்களங்கள், பக்: 43 – 48.

5.Maritime Heritage of Orissa – Orissa Review , July- 2009, Balabhadhra Ghadai, Principal M.K. College Khiching Mayurbhanj P. 62-64); www.orissa.gov.in/e-magazine/Orissareview/2009/July/…
MARITIME TRADE OF ANCIENT KALINGA –DR.PRAFULLA CHANDRA MOHANTY, ORISSA REVIEW, NOV-2011, PAGE: 41; odisha.gov.in/e-magazine/Orissareview/2011/Nov/engpdf/39…
7. MARITIME HERITAGE OF GANJAM- DR.KARTIK CHANDRA ROUT, ORISSA REVIEW, NOV-2013, PAGE: 42, 43; gov.in/e-magazine/Orissareview/2013/nov/…/41-45.pdf

8.MARITIME TRADE OF ANCIENT KALINGA, DR.PRAFULLA CHANDRA MOHANTY, ORISSA REVIEW odisha.gov.in/emagazine/Orissareview/2011/Nov/engpdf/39… & MARITIME HERITAGE OF GANJAM, www.orissa.gov.in/e-magazine/Orissareview/2009/July/…

9.அகநானூற்றுப்பாடல்: 31, வரி: 14, 15.
புறநானூற்றுப்பாடல்: 66.
புறநானூற்றுப்பாடல்: 126 வரி: 14-16.
 – ஈரோடு கணியன் பாலன் 
நன்றி: www.velveechu.com
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com