Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

The Indian Pearl Fisheries

Rare book collection

The Indian Pearl Fisheries of the Gulf of Mannar and Palk Bay


by James Hornell


The accompanying report upon the present condition and future prospects of the pearl banks off the coast of Madura and Tinnevelly is the outcome of a request for the loan of my services made by the Government of Madras to that of Ceylon in the spring of 1904.




Downliad link: www.forgottenbooks.com

கட்டுமரம்


கடற்பயணங்களின் கட்டுமரத்திற்கு "கட்டுமரம்" என்கிற மூலத்தமிழ்ச்சொல்லை விட உலகில் வேறு எந்த ஒரு மொழியிலாவது , வேறு ஏதாவது ஒரு சொல் பயன்படுவதை நிரூபிக்க முடியுமா? என்றால் அது முடியாது ஏனெனில் கடலின் பயணங்களுக்கான கட்டுமரமே, மனிதகுலத்தின் முதலாவது உன்னதமான கண்டுபிடிப்பு.

ஆரம்பத்தில் கடலைக் கண்டு பயந்த மனிதக்குலங்களிற்கிடையே, கடலையும் தாண்ட திராணியோடு நின்ற ஒரு மனிதக்கூட்டம் தமிழைப்பேசிய படி கட்டுமரங்களோடு புறப்பட்டது. கடலின் அமானுஷ்யங்களும் நாடுகாண் பயணங்களின் வேட்கையும் கடலை தமிழர்களோடு பிணைத்த வரலாறுகள் எல்லாமே மிகச் சுவாரசியமான கதைகள். இதற்கான தமிழர்களின் பெரும்பாய்ச்சலான ஒரு ஆரம்ப கட்ட கண்டுபிடிப்பே கட்டுமரம்.

இரண்டு அல்லது இரண்டுக்கு மேல் நன்கு நீளமான சிறிது அகலமான மரக்கீலங்களை சமாந்தரப்படுத்தி குறுக்கான இரண்டு கட்டுக்களால் இணைத்துவிட்டால் கட்டுமரம் தயார். மரத்தின் தன்மை , மரக்கீலங்களில் நீளஅகலம் , பயணத்தவர் எண்ணிக்கை , காலநிலை , பருவக்காற்றுக்கள் , கடலின் வற்றுப்பெருக்குக்கள் என்பவைகள் தொடர் அவதானிப்புக்கள் ஆராய்வுகள் மூலம் கட்டுமரங்களை பயன்படுத்தும் கடற்பயணங்களில் தமிழர்கள் உச்சம் கண்டார்கள்.


கட்டுமரத்தின் கண்டுபிடிப்பை தொடர்ந்து அதை வடிவங்களை காலப்போக்கில் மாற்றியமைத்து நீண்ட தூர ஆழ்கடல் பயணங்களையும் வெற்றிகரமாக செய்யத்தொடங்கினர் தமிழர்கள். அப்பயணங்களில் போகுமிடங்களிலும் அங்குள்ளவர்களுக்கு கட்டுமரங்களை தமிழர்கள் அறிமுகப்படுத்தியதற்கான மறுக்க முடியாத சான்றே உலகெங்கும் உள்ள அத்தனை மொழிகளிலும் பரவிக்கிடக்கின்ற "கட்டுமரம்" என்ற மூலத்தமிழ்ச்சொல்லின் வீச்சு ஆகும். 

பழந்தமிழர்களின் கண்டங்கள் தாண்டிய கடற்பயணங்களை பல உள்ளூர் , மேலைத்தேய ஆய்வாளர் பெருமக்களும் உறுதிசெய்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு கட்டுமரத்தொழில் நுட்பங்கள் மற்றும் பாய்க்கப்பல்களை பயன்படுத்தி இலங்கை மற்றும் தென்னிந்திய மக்கள் ஆழ் கடலில் பயணித்ததாகவும், இதன் மூலம் மாலைதீவுகள் லட்சதீவுகள் என்பவைகளையும் தாண்டி அவுஸ்திரேலியப்பகுதிகள் வரை மானுடவியல் நீட்சிகளை அம்மக்கள் கொண்டிருந்ததாக The Dispersal of Austonesian boat forms in the indian ocean என்கிற ஆய்வுக்கட்டுரைத்தொகுப்பொன்றில் Mahdi Waruon ஆய்வாளர்கள் எழுதியிருப்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். கி்மு1000களில் இருந்து இந்தப்பயணங்கள் இந்து சமுத்திரப்பகுதியில் நடைபெற்றது என்றும் ஊகிக்கின்றனர். 

காலப்போக்கில் கட்டுமரம் குறைவடைந்து படகுகள் வந்துவிட்ட பிறகு இன்னொரு தமிழ்ச்சொல்லான " படகு " என்பதை இந்தியமொழிகள் மற்றும் கிழக்காசிய மொழிகள் தமது மொழிகளில் வரித்துக்கொண்டன.

உதாரணமாக
  • Telugu - Padava
  • Kannada - padahu
  • Javanese - perahu
  • Kadazan - padau
  • Maranao - padaw
  • Cebuano - paraw
  • Samoan - folau
1697 இல் ஆங்கிலேய நாடுகாண் பயணி William Dampier உலகத்தை சுற்றும் தன் பயணத்தில் தென்கிழக்காசியாவின் தமிழர்களை கடலில் பயணிக்கும் வழியில் பல இடங்களில் கண்டதான பதிவுகளை செய்திருக்கிறார். அதில் கட்டுமரங்களை பற்றிய குறிப்புக்களையும் எழுதியிருக்கிறார். A New Voyage Round the World என்ற இந்நூலில் மலபாரிகளும் (தமிழர்களும்) கடற்கலங்களை கட்டுமரம் என்றே அழைப்பதாகவும் கூறுகிறார்.

கீழே உள்ள அட்டவணையில் உலகில் உள்ள அத்தனை பெரிய மொழிகளையும் அவற்றில் கட்டுமரத்துக்காக பயன்படுத்தப்படும் சொற்களை இணையத்தின் உதவியோடு தேடி அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. 

Afrikaans - catamaran
Albanian - katamaranas
Azerbaijani -  katamaran
Basque - katamaran
Belarusian - катамаран
Bosnian - katamaran
Bulgarian - катамаран
Burmese - ကွမ်းခြံကုန်း
Catalan - catamarà
Cebuano - catamaran
Chinese - 双体船
Chinese - traditional 潑婦
Corsion - catamaranu
Croatian - katamaran
Czech - katamarán
Danish - katamaran
Dutch - katamaran
Esperanto - katamarano
Estonian - katamaraan
Filipino - katamaran
Finnish - katamaraani
French - catamaran
Galician - cat amara
Georgian - კატამარანი
German - Katamaran
Greek - σχεδίας ( katkin)
Haitian - creole kata
Hausa - katamaran
Hawaiian - catamaran
Hindi - कटमरैन
Hmong - catamaran
Icelandic catamaran
Igbo katamaran
Irish catamaran
Italian catamarano
Javanese katamaran
Kazakh катамаран
Khmer catamaran
Kinyarvanda catamaran
Korean 뗏목
Kurdish katamaran
Kyrgyz катамаран
Lao katamaran
Latin catamaran
Latvian katamarāns
Lithuanian katamaranas
Luxembourg katamaran
Macedonian катамаран
Malagasy catamaran
Malay katamaran
Maltese katamaran
Maoris catamaran
Mangolian катамаран
Norwegian katamaran
Nyanja catamaran
Pashoto کټامران
Polish katamaran
Portuguese catamarã
Romanian catamaran
Russian катамаран
Sinhala කට්ටමරම
Spanish catamarán
Turkish katamaran
Turkmen katamaran
Ukraine сварлива жінка , катамаран
Uyghur catamaran
Uzbek katamaran
Welsh catamaran
Western frision katamaran
Yiddish קאַטאַמעראַן
Yoruba catamaran
- துவா

PEARL PAARS IN THE GULF OF MANNAR


I) Inner Pamban Group

· Pamban Karai Paar

· Pamban Velangu Paar


II) Pamban Periya Paar Group

· Pamban Periya Paar


III) Musal Tivu Group:


· Musal Tivu Paar

· Cholava Karai Paar


IV) Keezhakarai Group:


· Vallaimalai Karai Paar

· Vallaimalai Velangu Paar

· Anna Paar


V) Valinokkam Group:

· Valinokkam Paar

· Valinokkam Thundu Paar

· Nalla Thanni Tivu Paar


VI) Inner Vembar Group:

· Uppu Tanni Tivu Paar

· Vembar Karai Paar

· Kumulam Paar


VII) Outer Vembar Group:

· Vembar Periya Paar


VIII) Outer Vaipar Group:

· Vaipar Periya Paar


IX) Inner Vaipar Group:

· Devi Paar

· Pernadu Paar

· Padutha Maraikan Paar

· Padutha Maraikan Tundu Paar 


X) Cruxian Group:


· Cruxian Paar

· Tuticorin Kuda Paar

· Cruxian Thundu Paar

· Vantivu Arupagam Paar


XI) Uttipaar Group:


· Nagarai Paar

· Utti Paar

· Petha Paar

· Uduruvi Paar

· Kilathi Paar

· Athuvai Arupagam Paar

· Patharai Paar


XII) Pasipaar Group:

· Attonbotu Paar

· Pasi Paar


XIII) Tholayiram Paar Group:

· Tholayiram Paar

· Koothadiyar Paar


XIV) Kannativu Group:


· Thundu Paar

· Kannativu Arupagam Paar


XV) Pulippoondu Group:


· Vada Onbotu Paar

· Saith Onbotu Paar

· Pulipoondu Paar

· Kanna Pulipoondu Paar

· Aluva Paar


XVI) Nenchurichan Group :

· Parkudanjan Paar

· Nenchurichan Paar

· Mela Onbotu Paar

· Vadaolipathu Paar


XVII) Inner Kudamutti Group:

· Punnaikayal Sultan Paar

· Sandamaram Piditha Paar

· Rajavukku Sippi Soditha Paar

· Kudamutti Paar

· Saith Kudamutti Paar

· Pudu Paar


XVIII) Outer Kudamutti Group:

· Nillankallu Paar

· Sankuraiya pathu Paar

· Sattukuraiya pathu Paar


XIX) Kadiyan Group:


· Kadiyan Paar

· Kanawa Paar


XX) Karuvai Group:

· Nadumalai piditha Paar

· Periyamalai piditha Paar

· Karai karuval Paar

· Velangu Karuval Paar


XXI) Chodi Group:


· Chodi Paar


XXII) Thundu Group:

· Thundu Paar


XXIII
) Odakarai Group: 

· Odakarai Paar 

· Odakarai Thundu Paar 


XXIV) Manapadu Group: 

· Tiruchendur Poonthottam Paar

· Katil parakku Paar

· Sandamacoil piditha Paar

· Teradi pulipiditha Paar

· Semman pathu Paar

· Surukku Onbothu Paar


XXV) Inner Manapad Group:

· Kanawa parakku sodhi thundi Paar

· Paracherry Pathoor (Paar)

· Alanthalai Pathoor (Paar)

· Manpad Pathoor (Paar)


XXVI) Manapad Periya Paar Group:

· Manapad Periya Paar


XXVII) Ovari Group:

· Kallampulli Paar

· Ovari Anthoniar Koil vallai velai Paar

· Ovari Anthoniar Koil piditha Paar

· Kili Paar

· Kooduthalai Paar

· Pulli Kallu Paar


Reference by: 

SIGNORE SIGNORE DON DE CRUZ REX MOTHA BHARATHAVARMA PANDIYAN 

Bharatha Jathi Talaivamore, Tuticorin.

பரதவர் ... பரதர் / பரவர் .

கடலும் கடல் சார்ந்த நிலங்களில் வசித்து வந்த மக்கள் பரதவர் என்று இலக்கியங்கள் அழைத்தன. சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர் ஆகியோர் நெய்தல் நிலத்து மக்கள் என்றும் இந்த இலக்கியங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். பரதவர் என்பது பரதர் என்று குறுகி உள்ளது. பரவை என்ற சொல்லுக்கு பெரும் நீர்ப்பரப்பு அல்லது கடல் என்று பொருள். பரவை என்ற சொல்லிலிருந்து பரவர் என்ற சொல் பிறந்துள்ளது.

"பரதவர் நுளையரோடு பறியர், திமிலர் சாலர்
கருதியக் கடலர் கோலக்கழியரே நெய்தல் நில மக்கள்",
 
                      -சூடாமணி நிகண்டின் சூத்திரம் 77
 
நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்கள் இவர்கள் என்பது இதன் மூலம் புலப்படும். பாண்டிய வம்சத்தைத் தோற்றுவித்தவர்கள் இவர்களே என்பது ஆய்வாளர்களின் கூற்று. மீன் கொடியினை கொண்டு முதல் தமிழ் அரசை தோற்றுவித்தவர்களைத் தென் திசை ஆண்ட *குறுநில மன்னர்கள் எனவும் கழக அகராதி பொருள் கூறுகிறது. (*குறுநில என்பது ஆய்வுக்கு உரியது).  
 
'அரசர் முறையோ பரதர் முறையோ (சிலப்பதிகாரம் (23--160)'
  
என்ற சிலப்பதிகார வரியின் வாயிலாக பரத குலத் தலைவன் அரசனுக்கு நிகரானவன் என்று அறியலாம். தற்காலத்தில் கடற்புரத்தை ஒட்டி வாழும் மக்கள் பரதவ குல சத்திரியர்கள் என்ற குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். உப்பு விளைவித்தல், முத்துக் குளித்தல், மீன் பிடித்தல், கடலில் பெருமீன் வேட்டையாடுதல், கலம் செலுத்துதல் போன்ற வீரமிக்க தொழில்களில் பரதவர்கள் சிறந்து விளங்கியதாக சங்க இலக்கியங்கள் நமக்கு எடுத்துச் சொல்கின்றன. நெய்தல் நில மக்கள் முத்துக்களையும், வலம்புரிச் சங்குகளையும் காணிக்கையாகச் செலுத்தி, தங்கள் கடல் தெய்வத்தை வழிபட்டனர்.
 
பாண்டிய நாட்டுச் செல்வமாகத் திகழ்ந்த கொற்கை முத்து பற்றி சங்க இலக்கியங்களும் வடமொழி இலக்கியங்களும் புகழ்ந்து பேசுகின்றன. குறுந்தொகை பாடல் 123 இல் இடம்பெறும் மீன் வேட்டம். திமில் வேட்டுவர் போன்ற சொற்கள் மூலம் மீன் பிடித் தொழிலின் சிறப்பைத் தெரிந்து கொள்ள உதவுகின்றன.

இனிதுபெறு பெருமீன் எளிதினில்மாறி (நற்றிணை 239:3)

 குன்றியனார் என்ற புலவர் நற்றிணை வரிகள் மூலம் பரதவர் கடலில் பிடித்த சுறா இறால் போன்ற மீன்களைப் பரதவர் மகளிர் எளிதில் தானியத்துக்கு மாற்றியதைக் குறிப்பிடுகிறார். உப்பு விளைவித்து வணிகம் செய்தோர் உமணர் என்றும் பெயர் பெற்றிருந்தனர். "நோன்பகட் டுமணர் ஒருகையொடு வந்த" என்னும் சிறுபாணாற்றுப்படை வரிகள் மூலம் எருதுகள் இழுத்துச் செல்லும் உப்பு வண்டிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
 
உமணர் தந்த உப்பு கொடை நெல்
 
 
என்ற வரிகள் மூலம் "உப்பை நெல்லுக்கு மாற்றியதை" புலவர் உலோச்சனார் கூறுகின்றார்:

 
நெல்லும் உப்பும் நேரே, ஊரீர்
கொள்ளிரோ வெனச் சேரிதொறும் நுவலும் (அகநானூறு 390)
 
நெல் லின் நேரே வெண்கல் உப்பெனச்
சேரி விலை மாறு கூறலின் (அகநானூறு 44)
 
  
போன்ற அகநானூற்றுப் பாடல்கள் மூலம் நெல்லும் உப்பும் ஒரே மதிப்பில் இருந்தன என்று தெரிந்து கொள்ளலாம். பண்டமாற்று வணிகம் சங்க காலத்தில் நிலவியதும் இதன் மூலம் புலப்படுகிறது. பரதவர் சங்குகளுக்காக கடலுக்குள் மூழ்கியதையும் அவற்றை கள்ளுக்காக விற்றது பற்றியும் அக நானூறு கூறுகிறது. (அகம் 296- 8, 9, 350: 11-13).
 
 அகநானூறு பாடல்கள் 296- 8, 9; 350: 11-13 பரதவர்கள் சங்கு குளிப்பதற்காக கடலுக்குள் மூழ்கியதையும் இவ்வாறு கிடைத்த சங்கினை கள்ளுக்காக விற்றது பற்றியும் பேசுகின்றன. பத்துப்பாட்டு தொகை நூல்களில் ஒன்றானதும் ஆற்றுப்படை ஒன்றானதுமான பெரும்பாணாற்றுப்படை என்னும் சங்க இலக்கிய நூலின் 320 முதல் 335 வரையிலான வரிகள் பரதவர் பற்றிய விரிவான செய்திகளை நமக்குத் தருகின்றன.
 
 மதுரைக்காஞ்சி என்ற பத்துப்பாட்டு நூல் பாண்டிய நாட்டுக் கடற்கரை நெடுகிலும் சங்கும் முத்தும் விற்கப்பட்ட செய்தியினை நமக்குச் சொல்கிறது. பாண்டிய நாட்டுத் துறைமுகங்களில் அரபு நாட்டின் குதிரைகள் வந்து இறங்கிய செய்திகளை மதுரைக் காஞ்சி பதிவு செய்துள்ளது. குதிரை பயிற்றுவிப்போராகவும் இவர்கள் பணியாற்றியுள்ளனர்.
  
முத்துசாமி இராமையா A.D.I.Sc.,
 Information Science & Documentation,
 Indian Statistical Institute

நாகப்பட்டினம் - வரலாற்று அறிமுகம்


நாகை இயற்கை எழில் கொஞ்சும் ஓர் நகராக இருந்துள்ளமை நமக்கு வரலாற்றுச் செய்திகள் வழி தெரியவருகிறது. நாகை நகரத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் அந்த சிறப்புக்களை எல்லாம் இழந்து நிற்பதைப் பார்த்து கண்ணீர் வடிப்பார்கள். “பொன்னியின்செல்வன்” படித்தவர்களுக்கு நாகையின் சூடாமணி விகாரம் எனும் பௌத்த விகாரை நினைவிலே வருவதை தவிர்க்கவியலாது. இன்று நாகையின் நீதிமன்றம் இயங்கும் இடத்தில்தான் அந்நாளில் அந்த புகழ்பெற்ற சூடாமணி பெளத்த விஹாரம் வீற்றிருந்தது.

இப்போது காடம்பாடி என்று அழைக்கிறார்களே, அதன் பண்டைப் பெயர் காடவர் கோன் பாடி – அதுவே காடம்பாடியாக மருவியது. காடவர் என்றால் பல்லவர். பாடி என்றால் தற்காலிக கூடாரம். ஊரின் ஒதுக்குப்புறத்தில் படைவீரர்கள் தங்க கூடாரங்கள் அமைக்க ஒதுக்கப்பட்ட இடம் அது. கண்ணுக்கெட்டிய தொலைவில் இலந்தை மரங்கள் நிறைந்த, திட்டுத் திட்டாய் காட்சியளிக்கும் மேட்டுப் பகுதி. “பதரிதிட்டா” என்று பாளி மொழியில் அழைக்கப்பட்ட பகுதிக்கு  இலந்தை செறிந்த மேட்டுப் பகுதி என்று பொருள்.

நேர்த்திமிகு உட்கட்டமைப்பு கொண்ட நகரமாக நாகை ஒரு காலத்தில் விளங்கியது. அகன்று, பரந்த தேரோடும் வீதிகள்; தூண்டா விளக்கு மணி மாடங்கள்; அங்காடித் தெருக்கள்; ஆங்காங்கே தென்றல் தாலாட்டும் தோப்புகள்; நகரின் மேற்கிலும், வடக்கிலும் இருபுறமும் கலைநயமிக்க தோரண வாயில்கள். “மேலைக்கோட்டை வாயில்”, “வடக்கு கோட்டை வாயில்” அவற்றின் பெயர்களாக அந்நாளில் விளங்கியது.

பரண் அமைத்த வீடுகள்; உவலைக் கூரை அமைந்த பாடிவீடுகள், இலையும் தழையும் வேயப்பட்ட கூரை இல்லங்கள், இலைகளால் வேயப்பட்ட குரம்பை, மாட மாளிகைகள், மாட வீதிகள், செல்வம் கொழிக்கும் யவனர் மாளிகைகள், கொடிமர மேடைகள், வழிநெடுகிலும் சோழநாட்டு கொடிகள் அசைந்தாடும் கம்பங்கள், போரிட்டு மாண்ட மறவர்களின் நினைவாக நடுகற்கல்/ வீரகற்கள்

வணிகத்தின் பொருட்டு வந்திறங்கும் பன்னாட்டு வணிகப் பெருமக்கள், பலமொழி பேசும் மக்கள், கூலவாணிகர், மீன்வாணிகர், பொற்கொல்லர், கன்னார்; தச்சர், பூவணிகர், ஓவியம் தீட்டுவோர், கற்றச்சர், மாலுமிகள், புலவர், பாணர், இசைவாணர், முத்துவேலை செய்பவர்கள்; பட்டாடை, பருத்திஆடை, கம்பளி ஆடை நெய்பவர்கள், வணிகர், நிலக்கிழார், நாழிகை கூறுவோர், மறையவர், அரண்மனை அலுவலர்கள், படை வீரர்கள் என அனைத்து தரப்பினரும் உலா வரும் வீதிகள் என நாகை ஓர் கடல் வாணிபம் சார் நகராக இருந்தது. முழுநேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் துறைமுகம். இரவிலும் வெளிச்சத்தை உமிழ்ந்துக்கொண்டு தூங்காத நகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது.

ஊரை ஒட்டினாற்போல் சற்றே தூரத்தில் கூடாரங்களால் நிறையப்பட்ட திறந்தவெளி பூஞ்சோலை. வெளிப்பாளையம் என்றழைக்கப்படும் இப்பகுதிதான் நாகையின் மையப்பகுதி. இங்குதான் போர் வீரர்களின் குடியிருப்புகள் இருந்தன. அனைத்து வகை நாவாய், மரக்கலங்களும் நாகைவழியே வந்துதான் பின்னர் கீழைநாடுகளுக்கு தங்கள் பயணங்களை மேற்கொண்டு தொடர்ந்தன. பண்டங்களை சுமந்துக்கொண்டு வரிசை வரிசையாய் வந்து நிற்கும் பொதிவண்டிகள் முதலியன நாகையை சுறுசுறுப்பு வணிக மையமாக செயல்பட வைத்தன.

தௌ-இ-சிலு போன்ற சீன மொழிக் குறிப்புகளிலும் நாகப்பட்டினத்தின் துறைமுகச் சிறப்புகள் பேசப்படுகின்றன. பண்டைய புகார் நகரம் எப்படி மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்று இரு பிரிவுகளாக இருந்ததோ அதே போன்று நாகூரும், நாகப்பட்டினமும் வடநாகை, தென்நாகை என்று இரண்டு பிரிவுகளாக இருந்தன.

வடநாகைக்கும் (நாகூர்) தென்நாகைக்கும் (நாகப்பட்டினம்) இடையே, ஊரின் குறுக்கே அமைந்திருந்த சிந்தாறு, தற்போது பார்ப்பனர்சேரி என்று அழைக்கப்படும் இந்த இடத்தில்தான் அக்காலத்தில் மறையவர் அகரம் அமைத்து (அக்ரகாரம்) வாழ்ந்தனர். பிறகு இது காலப்போக்கில் இது “பால்பண்ணைச்சேரி” ஆகி விட்டது. தற்போது “நாகூர்” எனப்படும் வடநாகை, நாகூரில் வெட்டாறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் இயற்கையாகவே துறைமுகமாக இயங்குவதற்கான அத்தனை அடிப்படை வசதிகளையும் கொண்டிருந்தது. நாகூர் வெட்டாறுக்கு அருகாமையிலிருக்கும் பகுதிகள் வர்த்தக சேமிப்பு கிடங்குகளாக செயல்பட்டன. பண்டக சாலை, கல்பண்டக சாலை என்று பெயர் தாங்கி நிற்கும் வீதிகள் அழிந்துப்போன வர்த்தகச் சுவடுகளின் எச்சங்களாக இன்றும் காட்சி தருகின்றன.

நாகூர் ஆண்டவர் நாகூர் வந்து சேருவதற்கு முன்பே இஸ்லாம் மார்க்கம் இப்பகுதியில் தழைத்திருந்தது. ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர், சோழர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்த காலத்தில் தமிழர்களை ‘சூலியா’ (சோழியன் அதாவது சோழநாட்டான்) (Chulia) என்று அழைத்திருக்கின்றனர். சீனப்பயணிகள்கூட ‘Chu-Li-Yen’ என்று குறிப்பிட்டுள்ளனர். நாகூர் போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரஞ்சுக்காரர்கள் உரோமானியர்கள் அரேபியர்கள் இவர்களின் வணிகத்தலமாக மட்டும் விளங்கவில்லை. சீனர்களின் வியாபார கேந்திரமாகவும் திகழ்ந்து வந்ததற்கான ஆதாரங்கள் நம்மை வியக்க வைக்கின்றன.

தென்னிந்திய வரலாற்று ஏடுகளிலேயே “பகோடா” எனப்படும் சீனர்களின் புத்த ஆலயம் காணப்பட்ட ஒரே ஸ்தலம் நாகூர் மற்றும் நாகப்பட்டினம்தான். சீனப்பயணி யுவான் சுவாங் நாகூர் வந்துள்ளார். நாகூரைப் பற்றியச் சிறப்புகளை தன் பயண அனுபவ நூலில் குறிப்பிட்டுள்ளார். மிகவும் ஆச்சரியப்படுத்தும் செய்தி என்னவெனில் நூறு புத்த மடங்களும், பதினாறாயிரம் புத்தத் துறவிகளும் இப்பகுதியில் வசித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மதநல்லிணக்கம் என்பது வடநாகைக்கும் தென்நாகைக்கும் ஒன்றும் புதிதல்ல. பண்டு தொட்டு இவ்வூர் சைவ, வைணவ, சமண, பௌத்த இஸ்லாமிய சமயங்களின் சமத்துவ நகராகத் திகழ்ந்தது. இத்சிங், மார்க்கோபோலோ, இப்னு பதூதா, இரசீதுத்தீன் ஹுவான் சுவாங் மற்றும் மேற்கத்திய பயணிகளின் குறிப்புகளில் யாவும் நாகப்பட்டினத்தின் பெருமையை எடுத்துரைக்காத நூல்களே இல்லை எனலாம்.

10,11-ம் நூற்றாண்டுகளில் சோழ நாட்டில் ஆழமாக காலூன்றியிருந்த புத்தமதம் அடிச்சுவடே இல்லாமல் போனது. பிற்காலத்தில் நாகை மண்ணை ஆள வந்த மராத்திய மன்னர்கள் மற்றும் நாயக்க மன்னர்கள் ஆளாளுக்கு நாகையை போர்த்துகீசியகளிடமும், டச்சுக்காரர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும், அடகுவைத்தும், ஏலம்விட்டும், குத்தகை விட்டும் “எடுப்பார் கைப்பிள்ளை” ஆக்கினர். பிறகு பெரும் வணிக நகரம் தனது இயல்பை இழந்து வணிகப் புழக்கடையாக மாறியது என்பதே வேதனை.

மூத்த கடலோடிகள்


   (கடற்கரையில் வாழ்ந்த தமிழர் கடலோடு ஒன்றிணைந்து வளர்ந்த அனுபவத்தை ஆதாரங்களுடன் விளக்குகிறது இக்கட்டுரை)

தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த கடலோடிகளாகப் பரதவர்களும், இஸ்லாமியரும் அமைகின்றனர். நெய்தல் நில மக்களைக் குறிக்க பரவர், பரதர், பரதவர் என்ற சொல்லாட்சிகள் சங்க இலக்கியங்களிலும், காப்பியங்களிலும் இடம் பெற்றுள்ளன. பரவர் என்ற சொல் பொதுவாக மீனவர்களைக் குறிக்க, பரதர் என்ற சொல் வணிகர்களைக் குறிக்கிறது. கடலில் சிறு படகுகளைச் செலுத்தி மீன்பிடித்து வந்த மக்களுள் ஒரு பிரிவினர் அவ்வனுபவத்தின் வளர்ச்சி நிலையாக ஆழ்கடலில் மரக்கலங்கள் செலுத்தி வணிகர்களாக மாறிய பின்னர் பரதர் என அழைக்கப்பட்டுள்ளனர்.

கடலில் சிறு படகுகளைச் செலுத்தி மீன்பிடித்து வந்த மக்களுள் ஒரு பிரிவினர் அவ்வனுபவத்தின் வளர்ச்சி நிலையாக ஆழ்கடலில் மரக்கலங்கள் செலுத்தி வணிகர்களாக மாறிய பின்னர் பரதர் என அழைக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி என்ற ஊரிலுள்ள பழமையான பிராமிக் கல்வெட்டொன்றில் “மாப்பரவன்” என்ற சொல் இடம் பெற்றுள்ளது. ‘மா’ என்ற சொல் ‘பெருமை’ ‘செல்வம்’ ஆகியவற்றைக் குறிக்கும். (திவாகரம், 1363, 1539). எனவே பெருமை மிக்க பரவன், செல்வமுடைய பரவன் என்ற சொல்லுக்கு முன் ‘மா’ என்ற அடைமொழி இடம் பெற்றுள்ளது. பெரும் வணிகர்களாகப் பரதவர் விளங்கியதைச் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கிறது. காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்த வணிகர்கள், மன்னனும் விரும்பும் அளவுக்குச் செல்வமுடையவர்களாக விளங்கியதை ‘அரசு விழைதிருவிற் பரதவர் மலிந்த பயங்கெழு மாநகர்’ என்று குறிப்பிடுகிறது.

எனவே கரையோர மீன்பிடிப்பை ‘திமில்’ (மீன் பிடிக்கவும், முத்துக் குளிக்கவும் பயன்படுத்தப்பட்ட திமில் என்ற கலனைக் ‘கொடுந்திமில்’, ‘திண்திமில்’ எனச் சங்க இலக்கியங்கள் பாகுபடுத்துகின்றன. போன்ற சிறு படகுகளின் துணையுடன் நிகழ்த்திய பரதவர்களில் ஒரு பிரிவினர் ஆழ்கடலில் செல்லும், மரக்கலங்களின் உரிமையாளர்களாகவும்,அதைச் செலுத்தும் தொழில் நுட்பம் அறிந்த கடலோடிகளாகவும், மரக்கலங்களில் பொருட்களை அனுப்பி வாணிபம் செய்பவர்களாகவும் மாறியுள்ளனர் என்று உய்த்துணரலாம்.

இவர்கள் தென்தமிழ்நாட்டின் கடற்கரை ஓரப்பகுதிகளில் மட்டுமின்றி இலங்கைக் கடற்கரைப் பகுதியிலும் கடல் தொழில் புரிந்துள்ளனர். இலங்கையில் கிடைத்துள்ள தொல்தமிழ்க் (தமிழ்ப்பிராமி) கல்வெட்டுகளில் பரத என்ற சொல்லாட்சி இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பரதவர்களிடமிருந்து ஈழநாட்டுப் பரதவர்களைப் பிரித்துக் காட்டும் வகையில் ஈழப் பரத என்ற சொல் அனுராதபுரம் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்செய்திகள் பரதவர்களின் தொன்மைச் சிறப்பினை வெளிப்படுத்துகின்றன.

மனுச் சஞ்சாரம் அருமையாயிருந்த அக்காலத்தில், அவ்விடங்களில் அடப்பன்மார் என்று வழங்கப்பட்ட பரவர் வனாந்தரத்துக்குள் மறைந்திருந்த மெழுகு, மயில்தோகை, புலித்தோல், யானைத் தந்தம் முதலிய திரவியங்களை முன் காசுகொடுத்து வாங்கி, பிற தேசங்களுக்குக் கொண்டு போகும்படி காலிக்கு வந்திருந்த ஐரோப்பிய வியாபாரிகளுக்கு விற்று வந்தார்கள் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. இதைக் குறிப்பிடும் ஜே. ஆர்.மிரண்டாவும், ஜே. வி. ரோட்ரிகோபும் (1947 : 3) (சந்தன மாதவின் கோவில் சரிதை) என்ற நூலில் இலங்கையிலுள்ள காலி என்ற துறைமுக நகரத்தின் கோட்டைக்குள்ளிருக்கும் முக்கிய தெருக்களில் ஒன்று பரவத் தெரு என்று அழைக்கப்பட்டு வருவதாக எழுதியுள்ளனர். இச்செய்தியின் படி இப்பரதவர்கள் வணிகர்களாகவும், மரக்கலங்களின் உரிமையாளர்களாகவும், மரக்கலங்களின் தலைவர்களாகவும், அரசுத் தூதுவர்களாகவும் விளங்கியுள்ளனர்.

பதினாறாம் நூற்றாண்டில் அரேபிய மூர்களுடன் ஏற்பட்ட மோதலையடுத்து இராமேஸ்வரம் தொடங்கிக் கன்னியாகுமரி வரையிலான கடற்கரைப் பகுதியில் வாழும் பரதவர்கள் அனைவரும் போர்ச்சுக்கீசியர்களின் துணையுடன் கத்தோலிக்கர்களாக மதம் மாறி, இன்று வரை அதில் நிலைத்துள்ளனர். இத்தகைய பாரம்பரியம் கொண்ட பிரிவினர் கடலோடிகளாகவும் விளங்கி வருகின்றனர். தோணியில் இயந்திரம், சிப் போன்ற நவீன சாதனங்கள் பொருத்தப்படும் வரை, தம் அனுபவ அறிவின் அடிப்படையிலேயே இயற்கையின் செயல்பாடுகளை அறிந்து அதற்கேற்பத் தோணியைச் செலுத்தி வந்துள்ளனர். பரதவர்களை அடுத்து, இஸ்லாமியர் கடலோடிகளாக விளங்கியுள்ளனர். குலசேகரன்பட்டிணம், காயல்பட்டிணம், கீழ்க்கரை அதிராம்பட்டிணம், முத்துப்பேட்டை போன்ற கடற்கரை ஊர்களில் இஸ்லாமிய வணிகர்கள் மற்றும் கடலோடிகளின் செல்வாக்கு அதிக அளவில் இருந்துள்ளது.
நியூசிலாந்து நாட்டில் வெல்லிங்டன் நகரிலுள்ள தோமினியன் அருங்காட்சியகத்தில் கப்பலில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இம்மணியின் மீது முகைதீன் பக்சுடைய கப்பலுடைய மணி என்ற தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. மணியின் மீது பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்தின் எழுத்தமைதியின் அடிப்படையில் பதினெட்டு அல்லது பத்தொம்பதாவது நூற்றாண்டைச் சேர்ந்ததாக இம்மணியின் காலத்தை இரா.நாகசாமி கருதுகிறார். பா.ஜெயக்குமார் (2001:91) இம்மணியின் எழுத்துப் பதிப்பு பதினோராம் நூற்றாண்டைச் சார்ந்தது என்கிறார். அத்துடன் கடற்பயணத்தின் போது ஓசை எழுப்புவதற்காக இம்மணி பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்கிறார். தமிழக இஸ்லாமியர்களின் தொலைதூரக் கடற்பயணத்திற்கான சான்றாக இக்கப்பல் மணி அமைகிறது. இவ்வாறு பதரவர்களையடுத்து இஸ்லாமியர்கள் கடலோடிகளாகத் திகழ்ந்துள்ளனர்.

சேதுபதி மன்னரின் ஆரதவு பெற்ற பெரிய தம்பி மரக்காயர் என்பவர் பதினேழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டுக் கடற்கரையில் ஆதிக்கம் செலுத்திய டச்சுக்காரர்களின் வாணிப நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளார். (சிவசுப்பிரமணியன், ஆ., 2006 : 69 ‡ 74) தொன்மையான கடலோடிகளான நம் முன்னோர் உருவாக்கிய தோணி என்ற மரக்கலம் இன்று பல்வேறு மாறுதல்களை உள்வாங்கி தூத்துக்குடியில் நிலைத்து நிற்கிறது.

 - அருட்சகோதரி. விமலி FIHM,

                    இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்

சதுரங்கப்பட்டினம்

சதுரங்கப்பட்டினம் என்ற ஊர் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்திற்கும் கல்பாக்கத்திற்கும் இடையே அமைந்துள்ளது . இந்த ஊர் மெல்ல துணி (Muslin) நெசவுக்கும், செங்கல் உற்பத்திக்கும் பிரசித்தி பெற்றது. 400 வருடங்களுக்கு முன்பு ஐரோப்பாவை சேர்ந்த போர்த்துகீஸ், டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்கள் இந்தியாவின் செல்வ செழிப்பபாலும் இயற்கை வளர்த்தாலும் ஈர்க்கப்பட்டு வர்த்தகம் செய்ய நம் நாட்டை நாடி வந்தனர். பதினேழாம் நூற்றாண்டில் டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி சட்ராஸ் என்கின்ற சதுரங்க பட்டினத்தில் வர்த்தக மையத்தை அமைத்தது. 

பாதுகாப்புக்காக அந்த மையத்தை சுற்றி உயரமான சுவர்கள் மற்றும் அரண்கள் அமைத்து வலுவான கோட்டையை கட்டியது. வர்த்தக ரீதியான போட்டியால் ஆங்கிலேயர்களுக்கும் டச்சுக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. பலம் பொருந்திய ஆங்கிலேயர்கள் கடற்படை தாக்குதலில் ஈடுபட்டு அந்தக் கோட்டையை குண்டுகள் வைத்து தகர்த்து 1796இல் கைப்பற்றினர். அதன் பிறகு சிறிது காலம் 1818 இல் டச்சு மீண்டும் கைப்பற்றி 1854 ஆங்கிலேயரிடம் பறிகொடுத்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய தொல்லியல் துறை இந்த கோட்டையை பராமரித்து வருகின்றது. எனினும் தற்போது பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. 

2003இல் இந்தியத் தொல்லியல் ஆய்வு மையத்தால் பெரும் செலவில் கோட்டை கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டன. கோட்டையின் நுழைவாயில் மேல் அழகிய மணி கோபுரமும் (bell tower) கீழே இருபுறமும் பீரங்கிகள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. கோட்டை செவ்வக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டையை சுற்றி உயரமான சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. நான்கு புறமும் அரண்கள் அமைக்கப்பட்டு தற்போது மூன்று அரண்கள் மட்டுமே உள்ளன. தெற்குப் பகுதியில் அழகிய கல்லறை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 1620 முதல் முதல் 1769 வரை தேதியிட்ட 20க்கும் மேற்பட்ட கல்லறைகள் அங்கு உள்ளன. 

கல்லறை ஒட்டியவாறு தென்மேற்குப் பகுதியிலும் வட மேற்குப் பகுதியிலும் ரகசிய அறைகள் உள்ளன . கோட்டை வளாகத்தில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமாக அழிந்த நிலையில் அடித்தளம் மட்டுமே காணப்படுகின்றன. இந்தியத் தொல்லியல் ஆய்வு மையத்தால் 2003இல் சீரமைக்கப்பட்ட இரண்டு பெரிய கிடங்குகள் கோட்டையின் கிழக்குப் பகுதியில் உள்ளன. யானை மேல் ஏறுவதற்கான தலங்கள் உள்ளன. உணவு அருந்தும் அறைகள் மற்றும் நடன அறைகள் தற்போது தரைமட்டமாக காட்சியளிக்கின்றன.

கோட்டையின் சுற்றுப்புற சுவர் மீது ஏறி பார்த்தால் நூறு அடி தொலைவில் கடற்கரையும் பரந்து விரிந்த வங்காள விரிகுடா காட்சியளிக்கின்றது. தற்போது கோடைகாலப் வெப்பத்தால் கோட்டை சுற்றி உள்ள பசுமையான புல்வெளிகள் காய்ந்து பொட்டல் காடாக காட்சி அளிக்கின்றது. இந்த கோட்டையை காண வருபவர்கள் மிகக் குறைவு என்பதை பார்வையாளர்கள் பதிவேட்டில் உள்ள உள்ளீடுகளை பார்க்கும்போது தெரிகிறது. இந்திய தொல்லியல் துறை இந்த நினைவு சின்னத்தை சீரமைத்து பராமரிப்பு செய்து மக்களிடையே பிரபலப்படுத்தினால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து மக்களிடையே வரலாற்று விழிப்புணர்வு ஏற்படும்.

மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு கோபுரம்


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வடக்கு கோபுரம் 1564-72 ல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது என்றபோதிலும், அந்த கோபுரம் மட்டும் கட்ட கட்ட இடிந்து விழுந்தது. அதனால் தான் அதற்கு இன்றளவும் மொட்டை கோபுரம் என்று பெயர்.

பின்குறிப்பு:-

தீவிர மீனாட்சி அம்மன் பக்தரான அமராவதிபுதூர், வயிநாகரம் நாகப்ப செட்டியார், ஒவ்வொரு நாளும் அன்னையை வழிபட்ட பின்னரே இரவு உணவு உட்கொள்வார். மீனாட்சி அன்னைக்கு தங்க தாம்பாலமும், தங்க குடமும் வழங்கி மகிழ்ந்தார்.

ஒரு நாள், வெளி ஊரில் இருந்து வந்த போது, அவரது வண்டி மாடு மேலும் இழுக்க மறுத்ததால், அங்கேயே தங்கி விட்டார். மீனாட்சி அன்னையை காண முடியாத வருத்தம் அவருக்கு. இரவு உணவு உண்ணாது அன்னையையே நினைந்துருகினார். அப்போது மீனாட்சி அம்மன், ஒரு சிறுமியாக, பச்சை பாவாடையுடன் தங்க தாம்பாலத்தில் அவருக்கு உணவு அளித்தாள். மறுநாள் காலை, கோவில் அர்ச்சகர்களும், அதிகாரிகளும், அந்த தங்க தாம்பாலத்தை காணவில்லை என்று பதரினர். காலை மதுரை வந்த நாகப்ப செட்டியார், அந்த தாம்பாலத்தை கொடுத்து, தனக்கு நிகழ்ந்த அந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். அன்று முதல், அவர், மதுரை எல்லையை விட்டு செல்வதில்லை என முடிவெடுத்து மதுரையிலே அன்னையை நித்தம் வணங்கியே வாழ்ந்தார்.

அத்தகைய அன்னையின் அருள் பெற்ற பக்தரான வயிநாகரம் நாகப்ப செட்டியார் தான் மொட்டை கோபுரமாக இருந்த வடக்கு கோபுரத்தை, தனது செலவில் 152 அடி உயர பிரம்மாண்ட கோபுரமாக, 1878 ஆம் ஆண்டு கட்டி முடித்தார்.

The Bharathas of Sri Lanka: Roots and Tales


Bhāratha’s, பரதர், භාරත

Jeremy De Lima, 
In The Ceylankan Number 1 of February 2020, 
Journal 89 Volume XXIII…… 

India and Sri Lanka are geographically very near, but yet so far in culture, civilisation and genetic diversity. As depicted in the map above, the sub-oceanic existence of the hitherto mystical “Adams Bridge” between Dhanushkodi in India and Talaimannar in Sri Lanka has now been conclusively shown to exist through aerial mapping. It is thus reasonable to conclude that natural movement would have occurred between India and Sri Lanka over the aeons. While there is much documented history about Sinhalese and Tamils, there appears to be a relative dearth of public knowledge of a smaller migrant race called the Bhāratha’s. The writer hopes this compilation will improve the knowledge of this now vanishing group who have unobtrusively and yet so selflessly contributed so much to the history of this Island nation.

First documented in Indian literature of Sangam anthology (1) Bhāratha’s originated from Paravar’s or Parathar’s who are an ancient aristocratic seafaring warrior caste of Tamil Nadu and Kerala. Delving further into history, Edgar Thurston (2) referring to Church records (Latin Historica Eccliasastica) states that the Paravar’s and the Paravaims referred to in the Bible are the same. The Paravar’s derive their origins from the Indus Valley, a Bronze Age civilisation recorded together with Egypt and Mesopotamia dating from 3300 BCE(3). Moving to the south coast of India the Paravar’s acquired their title from the classic Tamil denotation of PARAVAN – Man of the Sea. In 712 AD, there began the Arab Muslim invasion of the Indus Valley, locally called the Sindhus valley which lies in the north of India, at the base of the Himalayan mountain ranges. This invasion which lasted till the 1300’s prompted the movement of the Paravar’s to the Coromandel Coast on the South-east of the India where they began to utilise their knowledge by combining mathematics and astronomy in plotting sea voyages. Boat building flourished and the first recorded catamaran with two hulls was made by Paravar’s (6). Gaining experience of the sea as fisherman, they widened their purview of the ocean by mapping areas where Oyster beds flourished. Bhāratha folklore has is that Pearl divers were always anchored by a rope to their brothers in law because if the diver drowned, the survivor would be beholden to care for the sister of the perished one!

Pearl diving is where the connection of the Paravar’s (now the Bhāratha’s) to our Island begins. Legend has it that in the 1400’s, Arab Horse Traders, ensconced in Puttalam, were monopolising the very valuable Pearl trade. Incensed by an encroachment on what they considered to be their domain, the Paravar’s, using their sea-faring skills, sailed across the Indian Ocean to make regular forays into this monopoly. Over time, they completely displaced the Arabs, and as a reward, the King of Sri Lanka at that time, King Parakrama Bahu VI of Kotte welcomed them as his subjects. Integrating very well with the natives, they initially settled down on the coast at Mannar where many of the descendants of the original families still remain. 

Paravar Pearl Divers in Mannar  (Wilkipedia Common source material)

In the late 1490s & 1500s began the Portuguese occupation of India and Sri Lanka with natural proselytising of the natives to Catholiscm. A notable arrival at this time was Saint Francis Xavier who converted almost all Paravar’s from Hinduism to Christianity – the first entire Indian community to change. In October 1542 he initially baptised over 10,000 and the total swelled to over 30,000. Their Hindu link is still retained in today’s Bhāratha tradition, where the Thali or Thirumangalyam, the southern Indian symbol of marriage, tied around the bride’s neck, features the Catholic image of the Holy Ghost.

The most popular Bhāratha’s name, Fernando, comes from the Portuguese race. Others, too numerous to list completely, but still retaining the Portuguese heritage are names like Almeida, Britto, Carwallio, Coonghe, Corera, Costa, Croos, Dabrera, De Rose, De Silva, Feldano, Figurado, Fernandez, Gomez, Lobo, Mascarenhas, Mirando, Moraes, Paldano, Paiva, Peeris, Pereira, Pinghe, Prasagna, Rayan, Rayer, Rodrigo, Roche, Rubeiro, Soris, Soza, Victoria and Vaaz(4) .

Bhāratha’s soon moved away from their traditional sea-faring roots into commerce. The first prominent Colombo trader was S. Miguel Fernando, a Milliner & Draper “Specialist in Gents Outfitting” and was located at 106, Main Street Colombo, (Pettah). This was soon followed by what became iconic merchant icons like M.P Gomez, J.L. Carwallio & F.X Pereira’s- the first departmental store in Ceylon. Many the stories abound of Christmas shopping not being complete without a visit to buy crackers, cake ingredients and of course liquor! In their heyday they imported everything from drapery to hardware and became agents for Insurance and shipping. The Bhāratha’s also left a legacy which became historical in Sri Lanka – the kerosene bullock cart. Starting from importing onions from India, they acquired the agency to distribute petroleum products and even exported kerosene to India. There were over 50 “Rising Sun” petrol and oil depots throughout the island, all of them run by Bhāratha’s. A traditional must in most Sri Lankan meals, Dry Fish was also handled by the Bhāratha’s. This trading success encouraged the Bhāratha’s to venture into other commercial ventures and soon they were into Coconut farming, Land ownership and Arrack licencing moving on the coast from Mannar to Panadura and inland into Kandy and Kurunegela. Establishing himself with the then burgeoning planting industry was another Bhāratha S.T Soris. Using his father’s business success, he pioneered Bhāratha land ownership (5). This was soon followed by the de Croos family who became one of the biggest Bhāratha’s philanthropists, gifting land for Maris Stella College.

It is appropriate to mention here the origin of this title. Maris Stella in Latin means “STAR OF THE SEA” which displays the reverence the Bhāratha’s have for Mother Mary who carried them safely across the seas. Displaying their forward thinking, the de Croos also donated land to the government to commence building the Negombo Colombo railway line (6). Their progeny have continued their dedication to Negombo and made this town, which is now a city, the stronghold of Bhāratha’s. In the pioneering spirit, they began the Negombo Bhāratha’s Association which has a recorded history of over 75 years and is still remaining, albeit not as active as in the past. In its heyday, it had its own newsletter called the Bhāratha Herald and even its own website which is sadly now defunct. A fair concentration of Bhāratha’s also exists in and around Kotahena, mainly businessmen who have organised themselves as the All Ceylon Bhāratha Association. In the villages of Ettukal in Negombo and Vankali in Mannar 99% of the residents are Catholic Bharathas with exclusive places of worship and burial grounds.

The 2001 census showed that there were a total of only 1,688 but this was thought to be due to discrepancies, with the majority of Bhāratha’s registering themselves as Sinhalese, Tamils and even Burghers! They proved their success by integrating so well and yet retaining their own unique identity and culture as law-abiding and peaceful citizens of Sri Lanka. Philanthropy has always been their second nature with even the Chapel at St Bridget’s Convent being donated by a Bhāratha, not to mention “Lin Hathara” public baths in Kochikade.

The Bhāratha community estimates that there are over 10,000 across the island. The younger generation are very fluent in Sinhala with many Doctors, Engineers, Finance professionals and sportspeople flying their flag. Their biggest contribution is to religious orders and the present Bishop of Mannar, His Lordship Emmanuel Fernando is a Bhāratha, together with Chairman/ Directors of leading companies like Forbes & Walker & Finlays. The present chairman of the Pership/Asha group of companies, Mr Manik Pereira is the grandson of Chevalier I X Pereira, a past chairman of F X Pereira. It is a fervent wish that Bhāratha’s continue to flourish and contribute to the development of that paradise isle to which we are so fondly endeared.

REFERENCES & BIBILOGRAPHY
http://bharathacommunity.blogspot.com/
https://en.wikipedia.org/wiki/Bharatha_people
https://globalparavar.org/the-origin-of-paravas/
https://en.wiktionary.org/wiki/Appendix:Indian_surnames_%28Paravar%29
The Indo-Lankans by S.Muthiah – ISBN: 955-8790-00-1
People of Sri Lanka – Published by the Sri Lankan Ministry of National Coexistence, Dialogue and Official Languages


Source: 
www.thuppahi.wordpress.com

கடலன் கல்வெட்டு

அநுராதபுர சாசனம் தமிழர்களாகிய சமணர்களைப் பற்றியும் கப்பலோட்டும் தமிழர்களை பற்றியும் குறிப்பிடுவதோடு, இளபரத எனும் ஒருவனையும் குறிப்பிடுகிறது. பரதர் சமூகத்தவரையே இலங்கைப் பிராமிச் சாசனங்கள் குறிப்பிடுகின்றன என்ற கருத்தை முன்பு இளைஞரான இத்தாலிய ஆய்வாளர் ஒருவர் முன்வைத்தார்.

அந்த குறிப்பு அண்மைக்கால ஆய்வுகளினால் உறுதியாகிவிட்டது. பொலன்னறுவையிற் கிடைத்த கல்வெட்டு ஒன்று பரதன் ஒருவனைப் பற்றி குறிப்பிடுகின்றது. அது அவனைச் ‘சாகரிக’ என்று வர்ணிக்கின்றது.

‘சாகரிக’ என்பது கடலன் என்பதன் பிராகிருத மொழிபெயர்ப்பாகும்.

கடலன் என்பது புராதனமான தமிழகத்துச் சாசனங்களிற் பாண்டியர்கள் தொடர்பாகச் சொல்லப்படுகிறது. கடலன் வழுதி என்பது அவற்றில் காணப்படுகின்ற ஒருவகை வர்ணனை. அவன் கடல் வாணிபம் செய்பவன் என்ற விளக்கம் இந்த கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ள கப்பல் வடிவத்தினால் உறுதியாகின்றது.

பரத என்று குறிப்பிடப்படுபவர் மீனவர் என்று கொள்வதற்கு நாணயம் ஒன்றில் காணப்படுகின்ற விபரங்கள் ஆதாரமாகின்றன.

Polanaruwaஅந்த நாணயத்தின் ஒரு புறத்தில் ‘பரத திசக’ (பரதனாகிய திசனுடையது) என்ற வாசகம் பிராகிருத மொழியிலும் பிராமி வரி வடிவங்களிலும் எழுதப்பட்டுள்ளது. மறுபுறத்தில் மீன் உருவம் அமைந்திருக்கின்றது. பரத எனும் திசன் குலத்தால் மீனவரோடு தொடர்புடையவன் என்பது இதனாற் புலனாகிறது. பரதனைப் பற்றி 20க்கும் மேற்பட்ட சாசனங்களில் காணப்படுவது குறிப்பிடக்கூடியது.

புராதன காலத்து இலங்கையில் வாழ்ந்த பிராமணரிற் சிலர் தமிழராய் இருந்தனர். அரண்மனையிற் பிராமணரைப் புரோகிதராக நியமிப்பது வழக்கம். அநுரா என்ற அரசி அதிகாரம் செலுத்திய காலத்தில் நீலிய என்ற தமிழ்ப் பிராமணன் புரோகிதராக இருந்தான் என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது. கிழக்கிலங்கையிலும் சைவசமய தொடர்புடைய பிராமணர் இருந்தனர் என்பதை அந்நூல் மூலமாக அறிய முடிந்தது. கலந்த என்ற பெயருடைய கிராமத்திற் சிவலாயம் இருந்தமை பற்றிய குறிப்பு அதிலே உண்டு. 

சாசனங்களிலும் மகா வம்சத்திலும் காணப்படுகின்ற குறிப்புகளின் அடிப்படையிற் பரத, வணிகர், பிராமணர் எனப் பல தொழில்கள் புரிகின்ற சமூகத்தவர்கள் இலங்கையில் தமிழ் சமுதாயத்தில் அடங்கியிருந்தார்கள் என்பது இப்போது தெளிவாகின்றது. வட இலங்கையில் உள்ள வரலாற்றுச் சார்புடைய தமிழ் நூல்களில் ஆதிகால வரலாற்றைப் பற்றி அறிவதற்கு அவை எந்த வகையிலும் பயன்படவில்லை.அவை காலத்தாற் பிற்பட்டவை. 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. 

ஆரிய சக்கரவர்த்தியின் குலத்து, யாழ்ப்பாணத்து அரசர்களுக்கு முற்பட்ட சமுதாய நிலைகள் பற்றி அவற்றின் ஆசிரியர்கள் எதனையும் அறிந்திருக்கவில்லை. பெருங்கற்காலப் பண்பாடு பரவியபோது காலப்போக்கில் சில ஊர்களை மையமாகக் கொண்டு சிற்றரசுகள் தோன்றியமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன. ஆனைக்கோட்டையில் பெருங்கற்காலக் கல்லறை ஒன்றிற் கண்டெடுக்கப்பட்ட வெண்கல மோதிரம் ஒன்றில் கோவேதன் என்ற சொல் காணப்படுகின்றது.

கலாநிதி சி.பத்மநாதன்
ஓய்வுநிலை பேராசிரியர்
பேராதனை பல்கலைக்கழகம்

இலஞ்சிவேள்

இலஞ்சிவேள் (Ilanji Vel) இவர் யது இராச்சியத்தின் பண்டைய வேளிர்களில் ஒருவர் ஆவார். இவர் குற்றாலம் அருகே இலஞ்சி என்ற பிரதேசத்தை ஆட்சி செய்தார். இவர் பண்டைய பாண்டியர்களின் குலத்தைச் சேர்ந்தவராவார். 2003 ஆம் ஆண்டில், இலஞ்சி வேள் மற்றும் அவரது வம்சாவளியைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் ஒரு குகை வேலைப்பாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு இலஞ்சி மன்னர் பெரிய பரவனின் மகன் என்று கூறுகிறது. இந்த பரவர்கள் இன்று 1530 களில் கிறித்துவ மதத்திற்கு மாற்றப்பட்டு கடலோரப் பகுதியில் வாழ்கின்றனர். எனவே இந்த கல்வெட்டு பாண்டியன் பரம்பரை பரதவர்களிடமிருந்து வந்திருக்க வேண்டும் என்று தெளிவான சித்திரத்தைத் தருகிறது. கல்வெட்டு, "இலஞ்சி வேள், மா பரவன் மாகன் நல் மழுக்காய் கொடுப்பிதவன்", ("ஒரு பெரிய பரவர் தலைவரின் மகன் இலஞ்சி வேள் இந்த புனிதமான குகை வாசஸ்தலத்தை வழங்கியுள்ளார்" என்று கூறுகிறது. )

குறிப்புகள்:

"Arittapatti inscription throws light on Jainism". 15 September 2003.

About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com