Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thirteen Classes of Paravas


According to Mr. Casie Chitty, the Paravas are dived into thirteen classes, viz;-



- Headman

- Dealers in cloth

- Divers for corals


- Sailors

- Divers for pearl -oysters

- Divers for chanks

- Packers of cloth

- Fishers who catch tortoises (turtles)

- Fishers who catch sharks and other fish

- Palanquin bearers

- Peons, who wait about the person of the Chief.

- Fishers, who catch crabs.




OUR CHURCH'S - 1


Our Lady of Snows Shrine Basilica, Tuticorin, Tamil Nadu, India


History of the church


Snows Basilica in Tuticorin is a famous church in Tamilnadu, India. One of the oldest and biggest, this church was built after the arrival of St. Francis Xavier in the 16th century. St. Francis Xavier was instrumental in bringing Christianity to Tamilnadu. His mission started from Kanyakumari and went until a village called Vembar covering all coastal villages for a distance of 200 kilometres. He installed several churches in and around these coastal villages.

The first church in Tuticorin was built during 1540 and dedicated to St. Peter. St. Francis Xavier who came here during this time was instrumental in building this church. Later on 5th August 1582, a new church was built and dedicated to “Our lady of Mercy”. In Rome 5th August was observed as the feast of Mother of Snows. Since then the annual feast is celebrated on August 5th and the church was gradually called as the “Church of our Lady of Snows” instead of “Church of our Lady of Mercy”.

The history of Mary’s statue – The statue was originally placed in the convent of Augustinian sisters, Manila, Philippines. When St. Francis Xavier was travelling to China after visiting the coastal areas of Tamilnadu he stayed in this convent for few days. He had a strong desire to take this statue back to Tamilnadu but the sisters refused to give as they were very fond of this. Later St. Francis Xavier died on the way to China in an island called Sancian which was a Portuguese occupied island during those times. Hearing this news the sisters decided to send this statue to Tuticorin as a mark of respect to the saint. The statue of Our Lady of Snows arrived from Manila, Philippines and is the statue which we see now in the Basilica.

Construction of the latest church which we see now started in 1712 by Fr. Vigilius. This church was completed in a very short span of time and it opened on 05th August 1713.

Since the new church was very big compared to the churches in other coastal villages in Tamilnadu it was called “Periya Koil” (big church). Even today people in Tuticorin refer this church as “Periya Koil”.

Arrival of the “Dutch” in coastal regions

During late 1650’s the Dutch fought with the Portuguese and conquered Tuticorin. Slowly they captured the entire coastal regions of Tamilnadu. Since the Dutch were against Catholicism they started demolishing many churches in this region. To protect the statue of Our Lady of Snows it was removed from the church by the village head and moved out of Tuticorin. This statue moved around coastal villages such as Sivanthakulam, Vembar, Punnaikayal to stay away from the hands of the Dutch.

In 1699 the Dutch did not have any progress in their trade because all locals around the Tuticorin region boycotted to support them. Realising a big loss in their business the Dutch called back all Jesuit priests and asked the local Catholics in Tuticorin to follow Catholicism again. During this time the statue of Our Lady of Snows came back to Tuticorin.

Golden Car

The golden car procession of Our Lady of Snows in Tuticorin is considered as one of the most important festivals. In 1702 the first Car procession ("Ther" of Our Lady of Snows) took place. The Golden Car procession first took place in 05th August of 1806 and then in the years 1872, 1879, 1895, 1905, 1908, 1926, 1947, 1955, 1964, 1977, 1982, 2000 and 2007.

Logic behind finalising the years when a golden car procession should take place is interesting. Though we are not aware how the initial years were decided the later part had logic:
We should note that in 1982 this church was raised as a Basilica.
Year 2000 was the Jubilee year and again golden car procession took place.
Year 20007 marked the 25th anniversary since the church was raised as a Basilica.
Year 2013 marked the completion of 300 years since the new church was built in 1713.

Interesting facts on Snows church and the Golden Car

“Das Nevis” means Our Lady of Snows in Portuguese.

She has been given the unique title of “Yelu Kadalthurai” (depicting seven coastal villages) or Yega Adaikala Thai (Mother of Refuge for the seven coastal villages). These villages were Vembar, Vaipar, Tuticorin, Punnaikayal, Virapandianpatinam, Alanthalai and Manapad.

In 1982 the Church celebrated the 400th anniversary. Pope John Paul II raised it to the status of Basilica on 30th July 1982.

The basilica houses the miraculous statue of Our Lady of Snows, which is completely carved out of wood and considered a great piece of art.

The altar against a heavenly background has the portrait of God the Father and Jesus Christ crowning Mother Mary. Mother Mary’s statue (Snows statue) stands at the centre and to her right is the statue of St. Ignatius and to her left stands St. Francis Xavier.

In the Golden Car instead of a Cross we can see a star at the top. It signifies the name of Our Lady as the Star of the Sea (Stella Maris). This star has five points to signify:
a) Divine Motherhood
b) Immaculate Conception
c) Perpetual Virginity
d) Channel of Divine grace
e) Gate of Heaven.

The heads of the four parrots found on the four corners of the basement in the Golden Car tell us that the people in and around Tuticorin (all coastal villages) were ruled by Pandyan Kings.

In the Golden Car four mermaids with human heads and bodies of fish are erected standing with folded hands symbolising sea faring people in this region.

The Car’s height is 53 feet depicting 53 Hail Mary’s in a rosary.

- Anton Niresh Vaz

பாண்டியன் தீவில் குடியேறிய வேம்பாற்றுவாசிகள்

தூத்துக்குடிக்கு எதிரே தற்போது மக்களால் பாண்டியன் தீவு அல்லது முயல் தீவு (HARE ISLAND) என்று அழைக்கப்படும் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள தீவு போர்த்துகீசியர் காலத்தில் "ராஜதீவு"  (ISLE DES RESIS) என்று அழைக்கப்பட்டது.  அக்காலத்தில் இத்தீவு முற்றிலும் கடலால் சூழப்பட்டிருந்தது. இன்றிருக்கும் தரைவழி அன்று இல்லை. போர்த்துகீசிய வியாபாரக் கப்பல்கள் ஏற்றி வரும் சரக்குகள் இத்தீவில் இருந்த பெரிய வணிகக் கூடங்களில் சேமிக்கப்பட்டு வந்தன. 

1603 ஆம் ஆண்டு மதுரையை ஆண்டு வந்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கன், முத்துக்குளித்துறை பரத மக்கள் மீது 6000 பணம் என்னும் தொகையை வரியாக விதித்தான். அவ்வாண்டில் முத்துக்குளிப்பு மிகவும் மோசமாக இருந்ததினால், பரத மக்களால் அவ்வரியைச் செலுத்த முடியவில்லை. எனவே, மதுரை நாயக்கன், கயத்தாறு குறுநில மன்னனோடு சேர்ந்து, ஒரு பெரும் படையுடன் வந்து தூத்துக்குடியை முற்றுகையிட்டுத் தாக்கி, மக்களின் வீடுகளைச் சூறையாடினான். அவனது படை வீரர்கள், இயேசு சபைத் தலைமை இல்லத்தை இடித்துத் தகர்த்தனர். அதோடு இணைந்திருந்த பனிமய மாதா ஆலயத்தையும், குருமடத்தையும், புனித இராயப்பர் கோவிலையும் நெருப்பு வைத்து அழித்தனர். பதினெட்டு நாட்களாக இருந்த முற்றுகைக்குப்பின் இயேசு சபை பொருளாளராக இருந்த சுவாமி கஸ்பார் தப்ரோ (Gaspar De Abreu) வை பிணைக் கைதியாகக் கொண்டு சென்றனர். 

அடுத்தடுத்து மதுரை நாயக்கன் தூத்துக்குடி மக்களுக்கும், பனிமய அன்னை ஆலயத்திற்கும் செய்த கொடுமைகளுக்கு ஒரு முடிவு காண,  பரதகுல சாதித் தலைவனும், எழுகடற்றுறை பட்டங்கட்டிகளும், புன்னைக்காயலில் கூடி வரிப்பிரச்சனை பற்றி கலந்துரையாடினர். இறுதியில் சிவந்தி நாத பிள்ளை என்னும் அதிகாரியை பரதகுல மக்களுக்காக பரிந்து பேசி வரியைக் குறைக்க கயத்தாறு மன்னனிடம் அனுப்பி வைத்தனர். அதற்கு கயத்தாறு மன்னன் இணங்க மறுத்ததால் மீண்டும் பரதகுல சாதித் தலைவனும், எழுகடற்றுறை பட்டங்கட்டிகளும், இன்னுமுள்ள முத்துக்குளித்துறையின் முக்கிய பிரதிநிதிகள் அனைவரும் மீண்டும் புன்னைக்காயலில் கூடினர்.

பேரவையின் இறுதியில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தூத்துக்குடி, வைப்பாறு, வேம்பாறு ஆகிய ஊர்களைச் சார்ந்த பரத மக்களும், பாதுகாப்பு தேடும் பிற சமய மக்களும் இக்கொடுமைகளிலிருந்து நிரந்திரமாகத் தப்பிக்க பரதகுல சாதித் தலைவருக்குச் சொந்தமான இராஜதீவில் குடியேறுவது என்றும், இனி தாங்கள் அனைவரும் இக்கொடிய மன்னர்களின் குடிமக்கள் இல்லை என்றும், அவர்களுக்கு தங்கள் மேல் எவ்வித அதிகாரமும் இல்லை என்றும் அறிக்கையிட்டனர்.

இத்தீர்மானத்தை நிறைவேற்றிய தலைவர்கள் பின்வருமாறு:

தொன் ஜான் டி பீரிஸ் - (முத்துக்குளித்துறை முழுவதுக்குமான சாதித் தலைவன்)

பிரான்சிஸ் டி மெல்லா - (தூத்துக்குடிக்கு மட்டுமான சாதித் தலைவன் அல்லது உள்ளூர் தலைவன்.)

ஜான்  டி குருஸ் - (முத்துக்குளித்துறை முழுவதற்குமான பொருளாளர்)

அந்தோணி டி குருஸ் - (கொம்புத்துறைப் பட்டங்கட்டி)

ஜான் டி குருஸ் - (பரதகுலாதித்தன், தூத்துக்குடி)

ஜான் பெர்னாண்டஸ் கொரைரா - (தூத்துக்குடி)

தொம் பேதுரு காகு -  (முத்துக்குளித்துறை முழுவதற்குமான தலைமைக் கணக்குப்பிள்ளை)

பவுல் மச்சாது - (புன்னைக்காயல்)

தொம்மை டி குருஸ் - (வைப்பாறு)

தொம்மை டெனிஸ் - (மணப்பாடு)

தொம்மை வாஸ் டி லீமா - (வேம்பாறு)

தொம்மை பீரிஸ் - (வைப்பாறு)

பேதுரு வாஸ் - (தூத்துக்குடி)

தொம்மை டி குருஸ் வீர நாராயணத் தேவர்

மத்தேயு தல்மெய்தா வல்நாசியார்

மனுவேல் டி குருஸ் - தூத்துக்குடி

தாமஸ் குருஸ் - (வீரபாண்டியன் பட்டணம்)

மனுவேல் டி மேஸ்கித்தா - (வேம்பாறு)

ஜான் டி மிராண்டா  - (வேம்பாறு)

தொம்மை டி குருஸ் ஆரிய பெருமாள் - ( மணப்பாடு)

மத்தேயு டி மொறாய்ஸ் - (பழையகாயல்)

ஜான் டி குருஸ் - (தூத்துக்குடி)

தொம்மை பர்னாந்து குத்திப்பெரிலார் - (ஒவிதோர், தூத்துக்குடி)

பெர்த்தொலமே விக்டோரியா - (ஒவிதோர், தூத்துக்குடி)


ஆகிய தலைவர்கள் எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்து தூத்துக்குடி, வைப்பாறு, வேம்பாறு ஆகிய ஊர்களைச் சார்ந்த பரத மக்களும், பாதுகாப்பு தேடும் பிற சமய மக்களும் சிலரும் 1604 ஆம் ஆண்டில், தூத்துக்குடிக்கு எதிரேயுள்ள  இராஜ தீவில் (பாண்டியன் தீவில்) குடியேறினர். 

இப்புதிய குடியேற்றத்தை  இயேசு சபைக் குருக்களும், கோவாவிலிருந்த போர்த்துகிசிய ஆளுநர் ஐரஸ்  டி சூசாவும் முன்னின்று செயல்படுத்தினர். ஏறக்குறைய பத்தாயிரம் மக்கள் முயல் தீவில் குடியேறினர். அங்கு தங்களுக்கென்று தனித்தனி இல்லங்கள் அமைத்து வாழ்ந்தனர். அனைவருக்கும் குடிநீர் வழங்க பெரிய நீர்த்தேக்கங்களும் கட்டப்பட்டன. மேலும் தீவைச் சுற்றி பாதுகாப்பிற்காக ஒரு மதிற்சுவரும் அமைக்கப்பட்டது.

இயேசு சபையினரும் தூத்துக்குடியிலிருந்த தங்களின் தலைமை இல்லத்தை முயல் தீவுக்கு மாற்றினர். மொத்தம் பதினாறு அறைகளைக் கொண்ட புதிய தலைமை இல்லம் ஒன்றை அங்கு கட்டி எழுப்பினர். அதைச் சுற்றி மூன்று அரண்களும் அமைக்கப்பட்டன.

இயேசு சபையினரின் தலைமை இல்லத்திற்கு அருகே கற்களால் ஒரு பெரிய ஆலயம் கட்டப்பட்டது. இப்புதிய ஆலயத்திற்கு, இயேசு சபையின் கொச்சி மாநிலத் தலைவர் ஆல்பர்ட் லெர்சியோ, 1604 ஆம் ஆண்டு ஜூலை  2 ஆம் தேதி தேவ தாய் எலிசபெத்தம்மாளைச் சந்தித்த திருநாளில், அடிக்கல் நாட்டினர். இவ்வாலயம் தேவதாய் மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஆலயத்தை உருவாக்க மக்கள் 1000 தங்க நாணயங்களைக் காணிக்கையாகக் கொடுத்தனர். 

புதிய ஆலயத்தின் கட்டிட வேலைகள் 1606 ஆம் ஆண்டில் முற்றுப் பெற்றது. அதன் அகலமும் அழகும் மிக்க ஆலயம். ஆலயத்தினுள்ளே ஒன்பது பீடங்கள் இருந்தன. ஆலயத் திறப்பு விழாவிற்குப் பின் பாண்டியன் தீவு ஒரு தனிப் பங்காகவே இயங்கியது. இயேசு சபைக் குரு ஒருவர், இப்பங்கைக் கண்காணித்து வந்தார். அது 'தேவ மாதா பங்கு' (MADRE DE DEOS) என்று வழங்கலாயிற்று. அன்னையின் ஆலயம் நீங்கலாக மேலும் மூன்று சிற்றாலயங்களும் கட்டப்பட்டிருந்தன. தீவின் ஒரு கோடி முனையில் உயர்ந்ததோர் மரச் சிலுவையும் நடப்படிருந்த்து. (தகவல்: உரோமை இயேசு சபை பழங்சுவடி நிலையம் (ARSJ) Goa 55. 163-164)

பரத மக்கள், தூத்துக்குடியிலிருந்து பனிமய அன்னையின் அற்புத சுரூபத்தை பத்திரப்படுத்தி, அதனைத் தங்களோடு பாண்டியன் தீவுக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு உருவாகியிருந்த புதிய ஆலயத்தில் அன்னையின் சொரூபத்தை ஆடம்பரமாய் நிறுவி வணங்கி வந்தனர். முன்னர் தூத்துக்குடியில் பனிமய தாயின் சுரூபத்தைப் பக்தி பரவசத்தோடு வணங்கி, அதனால் அன்னையின் அற்புதக் காட்சிகளைக் காணும் பேரறு பெற்றிருந்த, இயேசு சபை சகோதரர் வணக்கத்திற்குரிய பேதுரு பாஸ்து என்பவர், பாண்டியன் தீவிலும் தங்கி, பனிமய அன்னைக்கு வழக்கம் போல் தனது பக்தி வணக்கத்தைச் செலுத்தி வந்தார். 

அக்காலத்தில் முத்துக்குளித்துரைக் கிறிஸ்தவ மக்கள், இயேசு சபைக் குருக்களின் நேரடிக் கண்காணிப்பில் இருந்தாலும், முத்துக்குளித்துறை முயல் தீவு, மன்னார் தீவு அனைத்தும் கொச்சி மறைமாவட்டத்திற்கு உட்பட்டிருந்ததினால், அவை கொச்சி ஆயரின் ஞான அதிகாரத்தின் கீழ் இருந்தது. முயல் தீவு குடியேற்றத்தின் போது, கொச்சி ஆயராக இருந்தவர் அந்திரேயாஸ் என்பவர். அவர் பிரான்சிஸ்கன் சபையை சார்ந்தவர். அவர் இலங்கை சென்றிருந்த நேரத்தில் அவருக்குத் தெரியாமலேயே பாண்டியன் தீவுக் குடியேற்றம் நடந்து முடிந்தது. இதனால் ஆயர் அந்திரேயாஸ் மனம் நொந்தார். பாண்டியன் தீவு கிறிஸ்தவக் குடியேற்றத்தைத் தனது ஞான அதிகாரத்திலிருந்து விடுபட, இயேசு சபையினர் செய்த சூழ்ச்சி என்று தவறுதலாகப் புரிந்து கொண்டார்!

எனவே, பாண்டியன் தீவில் குடியேறிய கிறிஸ்தவ மக்களை, மீண்டும் நிலப்பகுதிக்கே திரும்புமாறு ஆயர் வற்புறுத்தினார். ஆனால் நிலப்பகுதி தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தினால், மக்கள் ஆயரின் ஆணைக்குப் பணிய மறுத்தனர். ஆயர் அந்திரேயாஸ் தீவில் குடியறியவர்களை திருச்சபையிலிருந்து விலக்கம் செய்ததுடன், மதுரை நாயக்கன், கயத்தாறு மன்னனுடன் போர் ஒப்பந்தம் செய்து கொண்டார். பின் கொச்சி மற்றும் கோவாவிலிருந்து ஒரு போர்த்துக்கீசியப் படையைத் திரட்டி வந்து, பாண்டியன் தீவை முற்றுகையிடும்படி செய்தார். 

இந்த முற்றுகை 22 நாட்கள் நீடித்தது. போதிய உணவும், குடிநீருமின்றி மக்கள் தவித்தனர். எனினும் ஆயரின் படைக்கு எதிராக இயேசு சபைக் குரு ஜான் போர்கஸ் என்பவர் தலைமையில் பரதர்கள் சண்டையிட்டனர். இறுதியில் போர்த்துகீசிய வீரர்கள், இராஜ தீவுக்குள் புகுந்து, அங்கிருந்த இயேசு சபை தலைமை இல்லத்தையும் தாக்கி அழித்தனர். மாதாவின் ஆலயமும், மக்களின் வீடுகளும் சேதமடைந்தன. இதனால் வேறு வழியின்றி மக்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர் திரும்பினர். இயேசு சபையினரும் மன்னார் தீவில் தஞ்சம் புகுந்தனர். ஆறு ஆண்டுகளாக நீடித்த பாண்டியன் தீவுக் குடியேற்றம் இவ்வாறு முடிவுக்கு வந்தது. ( தகவல் : AGSJ: Goa 56 (Malabarica) f. 178: Goa 55, ff 176 -178)

அனைவரும் சொந்த ஊருக்குத் திரும்பியதும் கொச்சி ஆயர் அந்திரேயாஸ் தூத்துக்குடி, வேம்பாறு, வைப்பாறு, புன்னைக்காயல், வீரபாண்டியன் பட்டணம் ஆகிய ஊர்களைக் கண்காணித்து வந்த இயேசு சபைக் குருக்களை நீக்கிவிட்டு கத்தனார்கள் எனப்படும் சிரியன் ரீதிக் குருக்களை நியமித்தார். இதனால் இந்த பங்குகளில் லத்தீன் வழிப்பாட்டு முறைகள் நீக்கப்பட்டு, சிரியன் ரீதியான வழிப்பாட்டு முறைகள் புகுத்தப்பட்டன.

போர்த்துகல் மன்னன் 3 -ஆம் பிலிப்பு முத்துக்குளித்துறையில் நிகழ்ந்த குறிப்பாக இராஜ தீவில் நிகழ்ந்த நிகழ்வுகளை அறிந்து வேதனையுற்று மீண்டும் இயேசு சபையினரிடம் முத்துக்குளித்துறையை ஒப்படைக்குமாறு கொச்சி ஆயருக்கும், கோவாவிலிருந்த போர்த்துகீசிய ஆளுநருக்கும் 1614 ஆண்டில் ஆணை பிறப்பித்தார். அதனை பல ஆண்டுகளாக செயல்படுத்தப்படவில்லை. எனவே மீண்டும் கோவா ஆளுநருக்கு கண்டிப்பான கட்டளையிட்டு கடிதம் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து 1621 ஆம் ஆண்டு இயேசு சபையினர் பரத குலத்தோரின் மிகுந்த வரவேற்பிற்கிடையே மீண்டும் முத்துக்குளித்துறைக்குத் திரும்பினர். இதனால் அதிர்ச்சியுற்ற கொச்சி ஆயர் தனது பதவியை உடனடியாக இராஜினாமா செய்தார்.

 - நி. தேவ் ஆனந்த் 

சமயத்தில் சங்கமித்த சமூகம் - 2


பரதவர் தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ளவர்கள், தங்கள் வாழிடங்களிலுள்ள பனை மற்றும் புன்னை மரங்களில் வாழும் பழம்பெரும் தெய்வத்தை வழிபட்டனர் என்பதை 

‘தொன்முது கடவுள் சேர்ந்த பராரை

மன்ற பெண் ணை – (அகம் 304 :3-4)

கடவுள் மரத்த முன்மிடை குடம்பை – (அகம் 270: 12)

என்ற வரிகள் எடுத்தியம்புகின்றன.
பரதவர்கள் கடல் தெய்வத்தை வணங்கினர் என்பதை ‘பெருங்கடற் றெய்வம் நீர் நோக்கித் தெளிந்து (கலி 131:1) என்ற அடிகளும், அதற்கு நச்சினார்க்கினியரின் கூற்றுக்களும் உரைக்கின்றன.

தெண் டிரைப் பெருங்கடற் பரப்பில் அமர்ந்துறை யணங்கோ

இருங்கழி மருங்கின் நிலை பெற்றனையோ ( நற்றி 150 : 5-7)

என்ற வரிகளில் ‘பெரிய கடலகத்தே விரும்பியுறையும் கடல் தெய்வமோ, கரிய கழிக்கரையின் கண் நிலை பெற்றிருக்கும் தெய்வமகளோ’ எனப் பொருள் கொள்ளத்தக்கதாகும். 


தொல்காப்பியத்தில் மட்டுமே வருணன் பரதவரின் கடவுள் என்றும் மற்ற இலக்கியங்களில் வருணன் பெயரிடம் பெறாமல் பெருங்கடல் தெய்வம், அமர்ந்துறை யணங்கு எனப் பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதும் கூர்ந்து நோக்கக் கூடியதாகும். இன்றும் பரதவ மக்களிடம் கடலை வழிபடும் வழக்கம் இருப்பினும் அது வருண வழிபாடாகவோ அல்லது சுறா முள் நட்டு வழிபடும் வழக்கமோ இல்லை. 

வீசும் காற்றினை காத்தவராயன் எனவும், ஞாயிற்றுக் கடவுளையும் வழிபடுவர் என்பதை 

‘ஓங் குதிரை முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி

ஏமுற விளங்கிய சுடர்’  (நற் 286: 6 -8)

என்ற வரிகள் விளக்குகின்றன. இவ்வாறு மரங்கள், கடல், காற்று, சூரியன், என இயற்கையை தெய்வமாக வழிபாடும் தன்மையை இயல்பிலே கொண்டிருந்தனர். மேலும் துஷ்ட தேவதைகள் எனப்படும் சிறு தெய்வங்களால் துன்பம் உண்டாகும் என அறிந்திருந்தனர் என்பதை

‘ உருகெழு தெய்வமும் சுரந்துறையின்றே

வரிகதிர் ஞாயிறும் குடக்கு வாங்குமே’ (நற் 398 :1-2)

என்ற வரிகள் புலப்படுத்துகின்றன. பரதவரின் தெய்வ வழிபாட்டில் பெண் தெய்வ வழிபாடு முக்கியமாகத் திகழ்கிறது. ஊர் தேவதைகளான கன்னியம்மன், முத்தாலம்மன், மாரியம்மன், படைவேட்டம்மன், எல்லையம்மன் போன்ற தெய்வங்களுடன் சப்த கன்னியர்களை வழிபடும் வழக்கமும், அவர்களுக்கு ஊர் தோறும் கோவில் அமைக்கும் வழக்கமும் இருந்தன.

பெண்தெய்வ வழிபாட்டில் உச்சகட்டமாக திருஉத்திரகோசமங்கை மங்களநாயகியையும், மதுரை மீனாட்சி அம்மனையும், கன்னியாகுமரி பகவதி அம்மனையும்,  முருகனின் மனைவி தெய்வானையும், கொற்கை, தூத்துக்குடியில் சந்தனமாரியையும், பறக்கையில் ருக்குமணியையும், கோட்டாறில் முத்தாரம்மன்னையும், அதிவீராம்பட்டினத்தில் செங்கழுநீர் அம்மனையும்,  பூம்புகார் கண்ணகியையும் வழிபட்டனர்.

 - தொடரும் - 

- நி. தேவ் ஆனந்த்

இறால் தொக்கு


தேவையான பொருட்கள் :

இறால் – 1/2 கிலோ
வெங்காயம் – 2 பெரியது
தக்காளி – 2 நடுத்தரமானது
இஞ்சி அரைத்து -1/2தேக்கரண்டி
பூண்டு அரைத்தது 1 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
சோம்பு தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
மல்லித்தூள் -2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை சிறிதளவு
வெந்தயம் – 5
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி

செய்முறை :

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும். அது சூடானவுடன் சோம்பு வெந்தயம் போடவும். லேசாக நிறம் மாறியதும் வெங்காயம் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போடவும். நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு கலவையை போடவும் பச்சை வாசனை போக வதங்கியதும் தக்காளியை போடவும்.

தக்காளி போட்டதும் உடன் உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் அதில் இறாலை போடவும் பத்து நிமிடம் வதக்கினால் போதும். இறக்கும்போது மிளகுத்தூள் சோம்புத்தூள் போட்டு கிளறி விடவும். சுவையான இறால் தொக்கு ரெடி.

பரதவர்களின் பதவி பெயர்கள்

பரதவர்களின் பழங்காலப் பதவி பெயர்கள் - 2

Tomb Stone in Vembaru,
Tamilnadu
முத்துக்குளித்துறைப் பரதவரின் நீண்ட வரலாற்றுச் சுழற்சியில் அவர்கள் கிறிஸ்தவம் தழுவிய நிகழ்விற்கு முற்பட்ட தொல்பழங்காலத்திலே அவர்களிடம் ஒரு வலிமை மிக்க கட்டுக் கோப்பான சமூகத் தன்னாட்சி அமைப்பு முறையும் (An Autonomous body and Rule) இருந்ததற்கான தடய எச்சங்களாக பட்டங்கட்டி, அடப்பன், ஞாயம் போன்ற பதவி பெயர்கள் தங்கிய குடும்பங்கள் இன்றும் கடலோரக் கிராமங்கள் சிலவற்றில் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காணும் போது அவை பற்றி ஆய்ந்தரியத் தூண்டும் எண்ணங்கள் எழுவது இயல்பு. 

அடப்பன்:

அடப்பன் என்றால் கடப்பமரம், பரவர் என பொருள் தருகிறது கழக அகராதி. அடப்பன் என்ற சொல் அடு என்ற வேர் சொல்லிலிருந்து பிறந்திருக்க வேண்டும். அடு + அல் = அடல், வலிமை என்றும், அடு + அப்பன் = அடப்பன் என்றால் வலிமை பொருந்தியவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

அடுநை ஆயினும் விடுநை ஆயினும்
நீ யளந் தறிதிநின் புரமை

என்ற 91 வது புறப்பாடல் (போரில் வென்றபின் பகைவனைக்) கொன்றாலும் (மன்னித்து) விட்டாலும் நீயளந்தறிதி என்று பொருள் தருவதால் அடு என்ற சொல்லடியாகப் பிறந்த அடப்பன் என்ற சொல் போர் சம்பந்தப்பட்டதாகவே இருந்திருக்க வேண்டும்.  

அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்

என்ற 768 வது குறளும் அடல் என்ற சொல்லை போரிடும் தகைமை என்ற பொருளிலே தருகிறது. சங்க காலத்துப் பரதவரின் வாழ்வியல் பற்றிய செய்தியை பட்டினப்பாலை படம் பிடித்துக் காட்டுகிறது. அவற்றில் குறிப்பாக

..... முதுமரத்த முரண் களரி
வரிமணல் அகந்திட்டை
இருங்கிளை யின னொகஂகறஂ
கருந்தொழிற் கலிமாக்கள்
கடலிறவின் சூடுதின்றும்
வயலாமை புழுக்குண்டும்
வறளடும்பின் மலர் மலைந்தும்
புனலாம்பற் பூச்சூடியும்
..................................
மலர் தலையும் மன்றத்துப் பலருடன் குழீகிக்
கையினும் கலத்தினு மெய்யுறத் தீண்டி
பெருந்சினத்தாற் புரங்கொடாது
இருங்செருவின் இகல் மெய்பினோர்

என்ற வரிகளுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கலிமாக்கள் என்ற சொல்லுக்கு பரதவர் என்றே பொருள் கொள்கிறார். எனவே சங்க காலத்தில் போர் முறை பயிற்றுவிக்கும் களரி என்ற பயிற்றகங்கள் இருந்தன என்பதும் கடலில் பிடிக்கின்ற இறால் என்ற புலாலையும் வயல் ஆமையின் இறைச்சியையும் தின்று உரமேறிய முடலையாக்கை முழுவலி மாக்களாகி பரதவர் அடம்பக் கொடியின் மலர்களை மாலையாகக் அணிந்து கொண்டு அக்களரிகளில் கைகளாலும், ஆயுதங்களாலும் மோதிப் போரிட்டனர் என்பது தெரிகிறது. என் நண்பரும் கல்வெட்டு ஆய்வாளருமான சென்னை உயர்திரு. எஸ். இராமச்சந்திரன் அவர்களுடன் இதுகுறித்து உரையாடியது இன்றும் நினைவிலிருக்கிறது.

அடம்பு  என்பது நெய்தலில் நீர்நிலைகளின் அருகில் வளரும் முயல்காது கொடிக்கீரையின் மலர்கள் ( Ipomoea pes-Capraea என்பது Botanical Name) எனவே அடம்ப மலர் சூடி போரில் தலைமையேற்று வழிநடத்துபவன் அடப்பன் என்று அறியப்பட்டிருக்கலாம். கொழும்பு பரதர் அசோசியேஷன் தலைவர் என்ற நிலையில் திவான் பகதூர் ஐ. எக்ஸ். பெரைரா அவர்கள் 1937 ஆம் ஆண்டு ஜனவரி 31 தேதி இலங்கை குடிவரவு கமிஷனருக்கு சமர்பித்த நீண்ட மகஜரில் 9ஆம் பக்கம் 2 வது பாராவில் ஆளும் பராக்கிராம பாகு (1410 – 1468) காலத்தில் புத்தளம் முற்றுகையிடப்பட்டபோது, ஆதி அரச அடப்பன், வர்ண சூரிய அடப்பன் என்ற இரு தளபதிகளின் கீழ் 7740 பரதவர்கள் கீழக்கரை, காவேரிப்பட்டணம் என்ற இடங்களிலிருந்து ஆறாவது பராக்கிரம பாகுவுக்கு உதவியாகச் சென்று முற்றுகையை முறியடித்ததாகச் சொல்கிறார். அடு, அடம்பு, அடப்பன் என்ற சொற்களுக்கு உள்ள தொடர்பை இது உறுதிப்படுத்துகிறது.

- தொடரும் -

- செல்வராஜ் மிராண்டா
நன்றி : பரவர் மலர் 2017

சமயத்தில் சங்கமித்த சமூகம் - 1



பெரும் புகழ் வாய்ந்த தமிழ் சமூகத்தின் தொல்பழங்குடி சமூகமாய் சங்கம் தழுவிய காலம் தொட்டு இன்று வரை சூரியன், சந்திரன், வானம், விண்மீன், மேகம், கடல், என இயற்கையோடு இயற்கையாகப் பிறந்து, வாழ்ந்து, இயற்கையையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் தென்பாண்டி பரதவ குலம், தான் பயணப்பட்ட காலங்களில் சந்தித்த சமயங்களின் மதிப்பீடுகளை உள்வாங்கி தற்காலத்திலும் வெளிப்படுத்தி நிற்பதை இக்கட்டுரை சுட்டி நிற்கிறது. 

“சங்கு விளையும் பாண்டிக்கடலிலே முத்துக் குளித்து முகிழ்ந்த பண்டிதர் மிகுதி” என்பது ஆன்றோர் வாக்கு. “பண்டிதம்” என்பதன் பொருளாக ஞானம் உடையவர்கள் (Profound)என்பது அமையும். அவ்வாறே பாண்டை / பண்டு மற்றும் பண்டிதன் என்ற சொற்கள், பண்டித என்ற சொல்லின் வேர் சொல்லாகும். பண்டை என்பது பழைய என்று பொருள் படும். 

அதாவது பழமையான மட்டுமல்லாது, பழமை மாறாத நிலை என்பதாகவும் நீட்சி பெறும். அப்படிப்பட்டவர்களை பாண்டை என்பதும் வழக்கு. இதிலிருந்தே பாண்டி என்பது பாண்டியர் என்பதாக விரிவடையும் சொல்லாகும்.
முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீர் மணலிலும் பலவே 

என்ற புறநானூற்று வரிகளில் பாண்டியரின் பழமையை அறியலாம். பாண்டியர் மீன் கொடியைக் கொண்டு ஆண்டதாலும், பாண்டியன், தென்னவன், மீனவன், மாறன், கடலன் வழுதி, பரதவன், முத்தரையன் எனப்பல பெயர்களாலும் அழைக்கப்பட்டதால் பரதவ இனத்தவரே பாண்டியர் என்பது கண்கூடாகும். அப்படியெனில் பாண்டியர் தொல் பழங்குடியினர் எனில் பரதவரும் தொல் பழங்குடியினரே. 

கடல் மேலாண்மையில் சிறப்பிடம் பெற்ற பரதவர்கள் உலகெங்கும் தங்களது எச்சங்களை உலகெங்கும் அமைத்துள்ளனர். சிறப்பாக ஹரப்பா, எகிப்து, சுமேரியா ஆகிய பழம்பெரும் நாகரீகங்களில் காணப்படும் மீன் மற்றும் படகு அடையாளங்கள் பரதவர்களின் தொன்மைக்கு மேலும் சான்றாக அமைகிறது. இப்பழம்பெரும் பரதவ இனம் பன்னெடும் காலம் தொட்டே இயற்கையை வழிபட்டதற்கான சான்றுகளை சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. எனினும் தொல்காப்பியம் 

‘வருணன் மேய பெருமணல் உலகம்’

என்கிறது. இதன் பொருளாக நெய்தல் நில மக்களாகிய பரதவர்களின் தெய்வம் வருணன் எனக் கொள்ளலாம். இதனை தொல்காப்பியர் தனது பொருளதிகார சூத்திரத்தில் கடலும் கடலைச் சார்ந்த நிலமும் ஆன நெய்தல் நில மக்களின் கடவுள் வருணன் என்று சொல்லுவார். நச்சினார்க்கினியர் நெய்தல் நிலத்தில் நுளையர்க்கு வலை வலிந்த பின் அம்மகளீர் கிளையுடன் குழிஇச் சுறவுக் கோடு நட்டுப் பரவு கடன் கொடுத்தலின் ஆண்டு வருணன் வெளிப்படும் என்கிறார்.

அவ்வாறே 

வெண்கூதாளத்துத் தண்பூங்கோதையர்

சினைச் சுறவின் கோடு நட்டு

மனைச் சேர்த்திய வல்லணங்கினான்

மடற்றாழை மலர்மலிந்தும்

பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்

புன்றலை இரும் பரதவர்

பனிதழை மா மகளிரொடு

பாயிரும் பனிக்கடல் வேடஞ் செல்லா

துவவுமடிந்துண்டாடியும்’’ (பட்டினப்பாலை 85-93)

என்ற அடிகளில் பவுர்ணமி நாட்களில் பரதவர்கள் சுறாமீனின் கோட்டினை கடற்கரை மணலில் நட்டு மலர் மாலை சார்த்தி வணங்கினர். அதில் தெய்வம் ஏறியதாக நம்பினர். பனங்கள்ளையும் நெற்கள்ளையும் அருந்துவர். மீனையும் இறைச்சியையும் கடவுளுக்குப் படைப்பர்.  (வருணனின் வாகனம் சுறா, முதலை, மகரமீன் என திருநெல்வேலி கழகத் தமிழ் அகராதி கூறுகிறது.)

தொடரும் 

- நி. தேவ் ஆனந்த் 

எகிப்தில் கோலோச்சிய தமிழ் பரதவர் - 4


தமிழர்களின் முக்கிய மாதங்களான தை, மாசி போன்றே எகிப்தியர்களின் மாதங்களான தைபிர், மெசிர் என்ற இரு மாதங்களும் அமைந்துள்ளன. இவ்விரு மாதங்களும் மிக நெருங்கிய தொடர்புள்ளவை. குறிப்பாக இவற்றின் பருவ காலங்களும் ஒரே காலத்தவையாகும். இவ்விரு மாதங்களும் தமிழர் மற்றும் எகிப்தியரிடையே காணப்படும் பன்னெடும் உறவிற்கு சான்றாக அமைந்துள்ளன.

தமிழ் பரதவர்கள் தை மாதத்தில் வரும் ஆரூத்ரா தரிசனம் நிகழ்ந்த பின்னர் தங்கள் கப்பல்களை அயல்நாடுகளுக்கு பயணம் செய்ய செலுத்துவர். ஏனெனில் இம்மாதங்களில் கடல் பரப்பில் ஏற்படும் காற்று கப்பல்களை எளிதில் செலுத்த வழி செய்யும். கீழை நாடுகளை நோக்கி பாய்மரக்கப்பல்கள் பயணம் செய்ய இவ்விரு மாதங்களும் பெரிதும் உதவும். குறிப்பாக எகிப்தியருடன் வணிகம் செய்ய இவ்விரு மாதங்கள் மட்டுமின்றி இக்காலத்தில் வீசும் காற்றும் உதவின. பரதவரின் கடல் வணிகத்தை அடிப்படையாகக் கொண்டே ‘தை பிறந்தால் வளி பிறக்கும்’ என்ற சொல்லாடல் உருவானது.

ஆனால் 'திரை கடலோடி திரவியம் தேடு' என்ற வணிகத்தினை அடிப்படையான காலம் மாறி உற்பத்தியை மையப்படுத்திய காலம் உருவான போது இச்சொல்லாடலே உருமாறி 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்றானது. இக்கருத்தை திரு.நரசய்யா அவர்களும் வலியுறுத்துகிறார்.

பரதவர்கள் தை மாதத்தில் தங்கள் கப்பல்களை அயல்நாடுகளுக்கு பயணம் செய்ய செலுத்துவர் என்பதை பிளினியும் பின்வருமாறு கூறுகிறார். Pliny says,"—Travellers set sail from India on their return to Europe, at the beginning of the Egyptian month of Tybia, which is our December, or at all events before the sixth day of the Egyptian month Mechir, the same as our January; if they do this they can go and return in the same year."

எகிப்துடனான தமிழ் பரதவர்களின் வர்த்தகத்திற்கு மேலும் சான்றாக பின்வரும் கருத்துகள் மேலும் வலு சேர்க்கின்றன......

கி. மு 1200 முதல், கி. பி 586 வரையிலான காலகட்டத்தைத்தான் எகிப்தில் இரும்புக்காலம் என்று தொல்லியலாளர் குறிப்பிடுகின்றனர். ஆனால் எகிப்திலுள்ள 'கெஃப்ரான் பெருமீடி'ல் கிடைத்த இரும்புத்தட்டைக் கரிய காலக்கணிப்பிற்கு ஆளாக்கியபோது, அது கி. மு 3800இலிருந்து கி. மு 2800க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததென்று தெரியவந்தது. அதாவது, எகிப்தில் இரும்புக்காலம் தொடங்காத காலத்தைச் சேர்ந்த அவ்விரும்புத்தட்டு, தேனிரும்பையும் சிறுங்கரிய இரும்பையும் மென்தகடுகளாகத் தட்டித்தட்டிப் பல்லடுக்குகளாக்கி, பின்பு வெப்பமூட்டிச் சம்மட்டியால் அடித்தடித்து ஒன்றிணைக்கும் முறையால் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்தது. இம்முறை, பண்டைத் தமிழகத்து முறையாகும்.

மேலும் குரங்குக்கும் யானைத் தந்தத்துக்கும் அவர்கள் மொழியில் வழங்கிய பெயர்கள் இன்றும் தமிழில் காணப்படுவன. அவை கவு, எவு என்பன. இவை கவி, இபம் என்னும் தமிழ்ச் சொற்களின் திரிபுகள். தமிழர்களிடையும் பழைய எகிப்தியரிடையும் காணப்பட்ட பழக்கவழக்கங்கள் பெரும் பாலும் ஒரே வகையின. அவர்கள் எழுதுவதற்கு ஓவியங்களைப் பயன்படுத்தினர். ஓவியங்களே தமிழ் மக்களின் எழுத்துக்களாக ஒருகாலத்தில் இருந்தன. எகிப்தியரின் மரக்கலங்கள் இன்றும் இந்திய நாட்டில் காணப்படுவன போன்றவை.

தேடல் தொடரும் 

முத்துக் குளிக்க வாரீகளா???


2007 ஆம் ஆண்டு தினகரன் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை 















About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com