Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

அகநானூறில் பரதர்

அகநானூறில் இருந்து பரதர் பற்றிய வரலாற்று சான்றுகள்


300 நெய்தல்


நாள் வலை முகந்த கோள் வல் #பரதவர்

நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார்,

பறி கொள் கொள்ளையர், மறுக உக்க

மீன் ஆர் குருகின் கானல் அம் பெருந் துறை,

5

எல்லை தண் பொழில் சென்றென, செலீஇயர்,
தேர் பூட்டு அயர ஏஎய், வார் கோல்

செறி தொடி திருத்தி, பாறு மயிர் நீவி,

''செல் இனி, மடந்தை! நின் தோழியொடு, மனை'' எனச்

சொல்லியஅளவை, தான் பெரிது கலுழ்ந்து,

10

தீங்கு ஆயினள் இவள்ஆயின், தாங்காது,

நொதுமலர் போலப் பிரியின், கதுமெனப்

பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல்; அதனால்,

சேணின் வருநர் போலப் பேணா,

இருங் கலி யாணர் எம் சிறு குடித் தோன்றின்,

15

வல் எதிர் கொண்டு, மெல்லிதின் வினைஇ,

''துறையும் மான்றன்று பொழுதே; சுறவும்

ஓதம் மல்கலின், மாறு ஆயினவே;

எல்லின்று; தோன்றல்! செல்லாதீம்'' என,

எமர் குறை கூறத் தங்கி, ஏமுற,

20

இளையரும் புரவியும் இன்புற, நீயும்


இல் உறை நல் விருந்து அயர்தல்

ஒல்லுதும், பெரும! நீ நல்குதல் பெறினே.

பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. - உலோச்சனார் மணி மிடை பவளம் முற்றும்நித்திலக் கோவை

தொல்புகழ் படைத்த, தொண்டித் துறைமுகம்..!

பல்வேறு வகை கடல்கள் உள்ளன. அவை மாக்கடல், வளைகுடா, விரிகுடா, நீரிணை (ஜலசந்தி) என பல்வேறு பெயர்களைப் பெற்றுள்ளன. தமிழகக் கடல்களில் இவை நான்கும் உள்ளன. தெற்கெல்லையில் கிடக்கும் இந்துமாக்கடல் மிகப் பெரும் நீர்பரப்பு. அதற்கு வடக்கில் கிடக்கும் மன்னார் வளைகுடா வளைவான குடாக்கடல். குடாக்கடலைத் தாண்டி ஆழமின்றி ஆர்ப்பரிப்பு இல்லாமல் படுத்துக்கிடப்பது பாக் ஜலசந்தி, ஜலசந்தியைத் தாண்டி வடக்கில் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப்பாடி அலையெழுப்பிக் கொண்டிருப்பது வங்காள விரிகுடா, இது சோழமண்டலக் கடற்கரை எனவும் கூறப்படுகிறது.

இந்த நான்கு கடல் சகோதரிகளின் கரையிலிருக்கும் முக்கியபட்டினங்கள் பழம்பெரும் வரலாறுகளைப் பேசாமல் பேசிக்கொண்டிருக்கின்றன. பல்லவர்களின் கோநகரான மாமல்லபுரம், சோழர்களின் முக்கிய பட்டினமான காவிரிப்பூம்பட்டினம், பாண்டியர்களின் பழம்பெரும் துறைமுகமான தொண்டிமாநகர், கொற்கை, காயல், சேரர்களின் கடற்கரைப் பட்டினங்களாகன குளச்சல், தேங்காய்ப்பட்டினம் எனத் தமிழகக் கடலோரங்கள் பல்லாயிரமாண்டுகளின் கதைகளைச் சுமந்து நிற்பவை.

இவற்றில் நாம் இப்போது தொண்டித் துறைமுகத்தைப் பற்றி அறிந்து கொள்ளவிருக்கிறோம். அது நம் கருத்தில் பதியவைக்கும் சங்கதிகளைப் பற்றி புரிந்துகொள்ள விருக்கிறோம். இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை வட்டத்திலுள்ள துறைமுகப் பட்டினமாகும் இது.

தொண்டி என்பதற்கு துறை, துவாரம் என்று பொருள். ஐம்பதாண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட துளையுள்ள காலணா நாணயத்தை வடமாவட்டங்களில் தொண்டிக் காலணா என்றனர். கடலுக்கு துவாரம் போல துறைமுகம் அமைந்ததால் அதை தொண்டி என்றனர். எனவே கடல் துறையை முகத்துவாரம் எனவும் அழைத்தனர்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கீர்த்தியோடு விளங்கிய கிழக்குக் கரையோரப்பட்டினங்களின் ராணி நகர் இது. கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் இங்கு சமண மதம் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தது. இலவோன் எனும் சமண மன்னன் தொண்டியைத் தலைநகராக்கி ஆண்டபோது மதுரையிலுள்ள மலைக்குகைகளில் சமணத் துறவிகளுக்கு படுக்கைகள் அமைத்துக் கொடுத்துள்ளான். இதைப் பற்றிய கல்வெட்டுகள் மதுரை கீழவளவு குகைப் பகுதியில் உள்ளன.

1800 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் தொண்டியைப் பற்றிய பதிவுகள் உள்ளன. அதிலுள்ள ஊர்காண் காதையில் காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த இந்திர விழாவிற்கு தொண்டியை ஆண்ட அரசரால் அகிற்கட்டைகளும் துணிமணிகளும் வாசனைப் பொருட்களும் மரக்கலங்களில் அனுப்பப்பட்ட சங்கதி பாடலாக பதிவாகியுள்ளது. ‘வங்க வீட்டத்து தொண்டியோரிட்ட அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்’ என்ற சொற்றொடர் தொண்டியின் பழம்பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

வரலாற்று ஏடுகளிலும் இலக்கிய ஏடுகளிலும் பதிவாகியுள்ள மிகப்பழமையான துறைமுகப்பட்டினமான தொண்டிமாநகர் ஒரு நல்ல பெண்ணின் இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக கூறப்பட்டுள்ளது. எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையின் கீழ்க்கண்ட பாடலைப் பாருங்கள்.

“வான்கடல் பரப்பில் தூவதற்கு எதிரிய
மீன்கண் டன்ன மெல்லரும்பு ஊழ்த்த முடவுமுதிர் 
புன்னை தடவுநிலை மாச்சினைப்
புள்ளிறை கூரும் மெல்லம் புலம்ப
நெய்தல் உன்கண் பைதல் கலுழப்
பிரிதல் எண்ணினை யாயின் நன்றும்
அரிது துற்றனையால் பெரும் உரிதினில்
கொண்டாங்குப் பெயர்தல் கொண்டலொடு
குரூ உத்திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர்
மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி
மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளங்கெழு தொண்டி யன்ன இவள் நலனே!”
(குறு, நெய்தல் – பா10)

புலவர் அம்மூவனார் கூறுகையில், அழகான உவமையைக் கையாண்டுள்ளார். அதாவது, தலைவியின் அழகுக்கு சிறுசிறு உவமைகள் கூறாமல், தொண்டி என்னும் ஊரின் மொத்த அழகையும் உவமிக்கிறார். இதன்மூலம் தலைவியின் அன்பு யாராலும் அளவிட முடியாத அளவு மிகப் பரந்துபட்டது என்பதை நுட்பமாகவும் மிக அழகாகவும் கூறியுள்ளார் (தினமணி). இது போன்ற உவமைகள் சங்கப் பாடல்களுக்கே உரிய சிறப்புகளாகும்.

பாடியவர் யாரெனத் தெரியாத நற்றினைப் பாடல் சொல்லும் தொண்டியின் சீர்த்தியைக் கேளுங்கள்.

‘கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி
நெல்அரி தொழுவர் கூர்வாள் உற்றென
பல்இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்’

’கல்’ என ஒலிக்கும் பறவைக் கூட்டத்தையுடைய கடற்கரைச் சோலையாற் சூழ்ந்தது தொண்டு எனும் ஊர். அவ்வூர் வயலிலே நெற்கதிர் அறுக்கும் உழவரின் கூர்மையான அரிவாளால் நெய்தல் மலரும் அறுபடும். இலக்கியங்களிலும் வரலாற்று நூல்களிலும் ஆங்காங்கு காணப்படும் சங்கதிகள் தொண்டிமாநகரை முதன்மையான பட்டினமாக நமக்குக் காட்டுகின்றன.

கிரேக்கர், ரோமர், யவனர் என மேலைநாட்டினரும் சீனர், சாவகர், சிங்களர் என கீழை நாட்டினரும் கால்பதித்த துறைமுகப்பட்டினம் தொண்டிமாநகர். இதன் கடற்கரைத் தெருவுக்குப் பெயர் ‘பன்னாட்டார் தெரு’ என்பதாகும். பல நாட்டவரும் வந்து தங்கி வணிகம் செய்த தெரு. வாசனைப் பொருட்களும் துணிமணிகளும் ஏற்றுமதியான தொண்டிச் சீமையில்தான் கீழைத்தேச பொருட்களும் தேக்கு மரங்களும் அரபுக் குதிரைகளும் வந்திறங்கியதாக வரலாறு கூறுகின்றது. ஆண்டொன்றுக்கு 25,000 குதிரைகள் வந்திறங்கியதாக ஆவணங்கள் கூறுகின்றன.

மிடுக்காக நடைபயிலும் பெண்ணை இன்றும் தஞ்சைப் பகுதியில் தொண்டிக் குதிரை போல் நடக்கிறாள் எனக் கூறும் பழக்கம் உண்டு. இங்கு வந்து கரையேறிய பர்மாவின் தேக்கு மரங்கள்தான் செட்டிநாட்டு பங்களாக்களை அரண்மனையாக்கியுள்ளன. தொண்டியிலிருந்து புறப்பட்ட மரக்கலங்கள் கிழக்கையும் மேற்கையும் இணைத்தன. 1940 – களில் இங்கிருந்து கப்பலில் இலங்கை செல்ல வெறும் இரண்டு ரூபாய் தான் கட்டணம். விடுதலை பெற்றபின் கள்ளத் தோணியில் பயணம் செய்ய இருபத்தைந்து ரூபாய்தான் கட்டணம். இலங்கையில் கள்ளத்தோணியருக்கு ‘மரக்கல மினுசு’ எனப் பெயர்.

தொண்டிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே முப்பது கல் தொலைவே உள்ளது. இவ்வூர் மக்கள் முற்காலத்தில் பாய்மரக்கப்பலேறி வைகறையில் சென்று வாணிபம் செய்து விட்டு மாலையில் ஊர் திரும்பி விடுவாராம். பயணக் கட்டணம் கால்ரூபாயாம். 1890 முதல் 1915 வரை தொண்டிக்கும் கொழும்புக்கும் நீராவிக் கப்பல் போக்குவரத்து இருந்ததாம்.

காலாதிகாலமாக இங்கு வந்து சென்று கொண்டிருந்த அரபுக்கள் இஸ்லாத்தின் வருகைக்குப் பின் – முஸ்லிம்களான பின் தொண்டித் துறைமுகத்தை வசிப்பிடமாகவும் கொண்டனர். இதை உறுதிப்படுத்துவது போல் அலைவாய்க்கரையை அடுத்து ஓடாவித் தெரு, சோனகர் தெரு, மரைக்காயர் தெரு, லெப்பைத் தெரு என தெருக்கள் பெயர் பெற்றுள்ளன. 2500 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டினரின் விருப்பமுள்ள நகராக விளங்கிய தொண்டி மாநகரில் கால் வைத்துத்தான் பலரும் மதுரையை அடைந்துள்ளனர்.

பூர்வீகக் குடிகளின் கணக்கோடு இங்குள்ள மீனவப் படையாட்சிகளும் உள்ளனர். பனிரெண்டாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கு சோழ நாட்டுப் படைக்கும் சிங்களப் படைக்கும் போர் நடந்தனத ஆர்ப்பாக்கத்தில் காணப்படும் கல்வெட்டு ஒன்றால் அறியக்கிடைக்கிறது. போர் நடந்த போது சிங்களர் வந்து பாளையம் இறங்கிய இடமே பிற்காலத்தில் ‘புதுப்பட்டினம்’ ஆனது.

போராளிகளாய் படைகளில் ஆட்சி செய்த படையாட்சிகளே பிற்காலத்தில் போரில்லா காலத்தில் மீன்பிடித் தொழிலில் இறங்கியுள்ளனர். வாள் பிடித்த கைகள் வாள் போன்ற வாளை மீன் பிடித்துள்ளன. ஆதிக்குடிகளோடு கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் இங்கு குடியேறியவர்களை அவர்களின் வீட்டுப் பெயர்கள் அடையாளம் காட்டுகின்றன. எக்க குடியார் வீடு, தெக்கத்தியார் வீடு, சேர் வாய்க்கால் வீடு, கண்ணங்குடியார் வீடு, அனுமந்தங்குடியார் வீடு, குணங்குடியார் வீடு என ஊர்ப் பெயர்களை அடையாளம் காட்டும் வீட்டுப் பெயர்கள்.

குணங்குடி மஸ்தான் எனப் பேசப்படும் ஞானியின் தந்தையின் ஊர் குணங்குடி; தாயாரின் ஊர் தொண்டி. இங்கு பிறந்து வளர்ந்து கீழைக்கரை அரூஸியா மதரசாவில் ஓதியவரே குணங்குடி மஸ்தான் எனும் சுல்தான் அப்துல் காதர். தொண்டித் துறைமுகத்தின் விரிவான வரலாறு பதிவாகாமல் இருந்தாலும் துணுக்குகளாக பல சங்கதிகள் கிடைக்கின்றன. இங்கு வந்து குடியேறிய அரபிகளில் மொரோக்காவிலிருந்து வந்து குடியேறிய சையிது லப்பை குடும்பத்தினரைப் பற்றி பன்னூலாசிரியர் தம் இஸ்லாமியக் கலை களஞ்சியத்தில் பதிவு செய்துள்ளார்.

பல்வேறு கால கட்டங்களில் அரபு முஸ்லிம்கள் தொண்டியில் வந்து குடியேறியிருந்தாலும் 13 – ஆம் நூற்றாண்டில் அரபகத்திலிருந்து கப்பல் கப்பல்களாக கிழக்குக் கடற்கரைப் பட்டினங்களில் வந்து குடும்பங்களோடு குடியேறினர். அவற்றில் தொண்டியும் ஒன்று. இவர்களின் அடையாளத்தை நாம் நன்கறிவோம். இவர்கள் தம் மாப்பிள்ளைகளை வீட்டோடு வைத்துக் கொள்வர். சொத்துக்கள் யாவையும் பெண்களுக்கு மட்டும் உரியவை. பழவேற்காட்டிலிருந்து காயல்பட்டினம் வரை பனிரெண்டு பட்டினங்களில் இன்றும் அவர்கள் தனித்த அடையாளத்துடன் வாழ்கின்றனர்.

வெளிநாட்டுத் தொடர்புகள் உள்ள ஊர்களில் பர்மாக்காரர் வீடு, சிங்கப்பூரார் வீடு, பினாங்கார் வீடு, கொழும்பார் வீடு என குடும்பங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். இவற்றில் ‘சீயத்தார் வீடு’ என வீட்டுப் பெயர் இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தொண்டியில் சீயத்தார் வீடு என ஒரு குடும்பத்தார் உண்டு. அதென்ன சீயத்தார். சயாம்தான் சீயமாக மாறியுள்ளது. சயாம் நாட்டில் வணிகம் செய்தவர்கள் சீயத்தார் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர். சயாமின் இன்றைய பெயர் தாய்லாந்து.

தொண்டித் துறைமுகத்திலிருந்து சென்று இலங்கை திருக்கோணமலை துறைமுகத்தில் தொழில் செய்த அலித் தம்பி மரைக்காயரின் மகன் சுல்தான் அபூபக்கர் அங்கு இரண்டு பள்ளிவாசல்களைன் நிர்மாணித்து வக்பு செய்துள்ளார். கி.பி.1770 – இல் இவர் கட்டிய பெரிய திருக்கோணமலை சோனகத் தெருவில் உள்ளது. 1781 – இல் கட்டிய சிறிய பள்ளி மரைக்காயர் பள்ளி எனும் பெயரில் என்.சி.சாலையில் உள்ளது. இரு பள்ளிகளுக்கும் வருவாய் பெற சில கடைகளையும் தோட்டங்களையும் வக்பு செய்துள்ளார். இவரின் மகன் சீனித் தம்பி மரைக்காயரும் மைத்துனர் முகம்மது அலீ மரைக்காயரும் பல நல்லறங்கள் செய்துள்ளனர். பல்வேறு பகுதி மக்கள் தொண்டியில் வந்து வாழ வழி வகுத்துள்ளனர்.

தொண்டியின் சகோதர ஊரான நம்புதாழையைச் சேர்ந்த கிதுர் முகம்மது எனும் நல்லத் தம்பிப் பாவலர் தொண்டி அரசும் பொது மருத்துவமனைக்கு எதிரில் பேரும் புகழோடு வாழ்ந்தார். இலங்கை கண்டியை அடுத்த கம்பளையில் பெரும் வணிகராகத் திகழ்ந்த பாவலர் ‘இசைத்தேன்’ எனும் இசைப்பாடல் நூலை வெளியிட்டுள்ளார். ‘இசைமுரசு’ நாகூர் அனிபா தன் முதலடிகளை இவர் மூலம்தான் வைத்துள்ளார். கம்பளை, மதுரை, தொண்டி, சென்னை என பாவலரின் வாரிசுகள் வாழ்கின்றனர். பாவலரின் புதல்வர்களில் இருவர் சென்னையில் டாக்டர்களாக உள்ளனர். அவர்கள் டாக்டர் காதர் மஸ்தான், டாக்டர் அக்பர் அலீ. பாவலரின் பேரர் லியாக்கத்தலி ‘பாவலர்’ என்ற பெயருடனேயே தொண்டியில் வாழ்கின்றார்.\

இன்றுள்ள மதுரை துணிக்கடைகளில் கணிசமானவை தொண்டிக்காரர்களுடையவை. தொண்டியின் ஊராட்சித் தலைவராக விளங்கிய ‘பாம்பாட்டி வீட்டு’ செய்யது அகமதுவின் புதல்வர்கள் துணி வணிகத்தில் பெரும் புள்ளிகள்.

குணங்குடி மஸ்தான் சாகிபின் மாமா கட்டை ஷைகின் கோரி இங்குள்ள வாழைத் தோப்பில் உள்ளது. இவர்களின் வழியில் தோன்றிய முகம்மது அப்துல் காதர் மதுரை ‘காஜியுல் குலாத்’ ஆக அரசால் நியமிக்கப்பட்டு அங்கேயே மறைந்தார். இவரின் மகன் முகம்மது இபுறாஹீம் சாகிபு தொண்டியில் காஜியாக இருந்தார். அடுத்தும் தொண்டிக்கு காஜியாக வந்தவர் முந்தைய காஜியின் புதல்வரான முகம்மது இஸ்மாயில் சாகிபே. இவர் மாபெரும் மார்க்க மேதையுமாவார்.

நாகூரை புலவர் கோட்டை என்பர். தொண்டி புலவர் பேட்டை. இங்கு பல்வேறு எழுத்தாளுமைகள் வாழ்ந்துள்ளனர்.உலக மாந்தர்கள் தம் பெயருக்கு முன் தந்தையின் பெயரிலுள்ள முதல் எழுத்தை விலாசமாக பதிவிடுகின்றனர். பிரான்ஸ் போன்ற சில நாடுகளில் தாயின் பெயரிலுள்ள முதல் எழுத்தைப் பதிவிடுகின்றனர். பெரும்பாலோர் ஓரெழுத்தையே பதிவிட நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் ஈரெழுத்தையும் சிலர் சித.கண.பழ. என மூன்று தலைமுறையையும் பதிவிடுகின்றனர். இவற்றைப் பின்னுக்கு கொண்டு போன ஒரு விலாசத்தை அண்மையில் நான் கண்டேன்

-சமூக நீதி முரசு

நற்றிணை காட்டும் கடல் பறவைகளும் அவற்றின் வாழிடச் சூழலமைவும்

சங்க இலக்கியப் பாடல்கள் மனித வாழ்வு சார்ந்த, சாராத உயிரினங்கள் பற்றிய செய்திகளைத் தமக்குள்ளே பதிவுசெய்து வைத்திருப்பவை. அவற்றில் காட்டுயிரிகளைப் பற்றியும் கடலுயிரிகளைப் பற்றியும் ஏராளமான பதிவுகள் காணப்படுகின்றன. நெய்தல் திணைக்குரிய கருப்பொருள்களுள் ஒன்றான கடல் பறவைகள் குறித்த சங்க இலக்கியச் செய்திகள் வியப்பிற்குரியவை. கடல் பறவைகள், அவற்றின் வாழிடச் சூழலமைவு பற்றிச் சங்கப் புலவர்கள் கூர்நோக்குத் திறனோடும் அறிவியல் நுட்பத்துடனும் எடுத்துரைப்பது ஆழ்ந்து சிந்தித்தற்குரியது. நற்றிணைப் பாடல்களைச் சான்றாகக் கொண்டு கடல் பறவைகள் பற்றிய சங்கத் தமிழரின் அறிவையும் பல்லுயிர்ப் பரவலுக்கு இடமளித்த கடற்கரைச் சூழலமைவையும் ஆராய இக்கட்டுரை முற்படுகிறது.


கடல் பறவைகள்

கடலையும் கடல் சார்ந்த நிலம், மரங்கள், கழிகள் ஆகியனவற்றையும் சார்ந்து வாழும் உயிரிகள் கடல்சார் உயிரிகள் ஆகும். கடற்கரைகளையும் கழிமுகங்களையும் இருப்பிடங்களாகக் கொண்டு இவை உயிர் வாழ்கின்றன. கடல் பறவைகள், நீர்நாய், நண்டுகள், ஆமைகள், தாவரங்கள் ஆகியவற்றைக் கடல்சார் உயிரிகளாகச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.

இவற்றுள் நெய்தல் பாடல்களின் கருப்பொருளாகவும் அகப்பொருள் சுவைக்குச் சான்றாகவும் பாடப்பட்ட கடல் பறவைகள் பற்றிய செய்திகள், அவற்றின் வாழ்வியல் முறையை அறிந்து கொள்ளப் பெரிதும் துணை நிற்கின்றன. இவற்றை அறிய முற்படுவது, இன்றையச் சூழ்நிலையில் கடல் பறவைகளை இயற்கைச் சூழலோடு பாதுகாப்பதற்கும் அவற்றின் வாழிடச் சூழலை மேம்படுத்துவதற்கும் உதவும் என்னும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

நற்றிணையில் கடல் பறவைகள்

நற்றிணைப் பாடல்கள் குருகு, சிறுவெண்காக்கை, நாரை, அன்றில் என்னும் கடல் பறவைகளைப் பற்றிய செய்திகளை விரிவாகக் கூறுகின்றன. குருகு நீரில் வாழும் உயிரினங்களைத் தின்னும் பறவை. ‘கருங்கால் வெண்குருகு” 1 எனச் சங்கப் பாடல்கள் இதனைக் குறித்துக் கூறுகின்றன. சிறுவெண்காக்கை, ஆலாக்கள் (Terns) எனப்படும் நீர்ப்பறவையாகும். இவை நீர்நிலைகளில் கூட்டமாகக் காணப்படும். தலையும் வயிறும் வெண்ணிறமாகவும் உடல் சாம்பல் நிறத்திலும் இருக்கும். வெண்ணிறச் சிறகுத் தொகுதியும் கருநிற இறகுகளும் கொண்ட நீர் இறங்கு பறவை நாரை ஆகும். இவற்றின் கால்களும் அலகும் செந்நிறமானவை. சதுப்பு நிலங்கள், களிமண் நிலங்கள், நீர்நிலைகள் இவையே இவற்றின் வாழ்விடமாகும். அன்றில் பனைமரத்தில் கூடு கட்டி வாழும் பறவை. ஆணும் பெண்ணும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாது வாழும். இவை சதுப்பு நிலங்களில் கூட்டமாக இரை தேடக் கூடியவை.

இப்பறவைகள் உண்ணும் இரை, இரை தேடுதல், அவை தங்குமிடம், அவற்றின் வாழிடச் சூழல், வாழ்க்கை முறை, பிற உயிரினங்களுடனான அவற்றின் தொடர்பு ஆகிய செய்திகள் நற்றிணை வழி இங்கு விரிவாக ஆராயப்படுகின்றன.

உணவுச் சூழல்

’நெய்தல் திணை மண்டலம்’ என்பது கடலும் கடல் சார்ந்த பகுதியும் (coastal eco system) என்று இலக்கணப்படுத்தப்படுகிறது. இங்கு அதிக அளவில் கடலுடன் வண்டல் கலப்பு ஏற்படும். அத்துடன் உப்பு நீரும் நன்னீரும் இணையும். இந்த மாறுபட்ட சூழல் அமைப்பு வெப்ப மண்டலப் பகுதிகளில் அபரிமிதமான விளைச்சலைக் கொடுக்கிறது. வெப்ப மண்டல நெய்தல் நிலங்களில்தான் உலகத்தில் அதிக உற்பத்தித் திறன் வாய்ந்த அலையாத்திக் காடுகள், பவளத் திட்டுக்கள் காணப்படுகின்றன. இங்கு எண்ணற்ற மீன் இனங்கள் பல்கிப் பெருகுகின்றன. கடலின் உட்பகுதியில் அதிக அலையின் வேகமும் பிற உயிர்களின் தாக்குதலும் இருப்பதால் அலையாத்திக் காடுகள் உள்ள பகுதிகளில் மீன்கள் முதலிய கடல்வாழ் உயிரினங்கள் அதிக அளவில் குஞ்சு பொரிக்கின்றன’2 என்கிறார் சூழலியல் எழுத்தாளர் பாமயன். இதனால் கடல் பறவைகளுக்கான உணவுச் சூழல் இப்பகுதிகளில் இயல்பாக அமைந்திருப்பதை அறியலாம். கடல் பறவைகள் பெரும்பாலும் மீனையே உணவாக உட்கொள்கின்றன. குறிப்பாக இறாமீனைக் குருகுகளும் நாரைகளும் சிறுவெண்காக்கைகளும் உணவாகக் கொள்வதை நற்றிணை கூறுகிறது.

‘இறவு ஆர் இனக் குருகு’- 131: 6

‘சேயிறா எறிந்த சிறுவெண்காக்கை’ – 31:2

‘…………………………..ஈர்ம் புற நாரை

இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து’ – 127:1,2

இறா எனப்படும் இறால் மீன்கள் நன்னீரிலும் உவர் நீரிலும் காணப்படும் உயிரினம் ஆகும். இறால் குஞ்சுகள் கடல் அலைகளால் அடித்து வரப்பட்டு கடலோரங்களிலும் சதுப்பு நிலங்களிலும் ஒதுங்குகின்றன. இவ்விடங்களில் பறவைகள் இரைதேடி வருகின்றன. இதனை நற்றிணையும் எடுத்துரைக்கிறது.

‘………………………….இருங்கழி

இரை ஆர் குருகின் நிரை பறைத் தொகுதி’ – 123:1,2

‘சேயிறா எறிந்த சிறுவெண்காக்கை

பாயிரும் பனிக்கழி துழைஇ’ – 31:2,3


‘நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்

நெய்த்தலைக் கொழுமீன் அருந்த இனக்குருகு

குப்பை வெண்மணல் ஏறி’ – 291:1-3

இப்பாடலடிகள் கடல் பறவைகள் இரை தேடும் இடங்களான உப்பங்கழிகள், சதுப்பு நிலங்கள் பற்றிய குறிப்புகளைத் தருவதைக் காணலாம். மேலும் மீனவர் பிடித்து வரும் வலைகளில் உள்ள மீன்களையும் கடற்கரையில் உலர்த்தப்படும் மீன்களையும் இப்பறவைகள் உணவாகக் கொள்கின்றன.

‘முடிவலை முகந்த முடங்கு இறாப் பரவை

படுபுள் ஓப்பலின் பகல்

மாய்ந்தன்றே’ – 49:3,4


‘நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி

இனப்புள் ஓப்பும் எமக்கு’ – 45:6,7


கடல் பறவைகள் நாட்காலையிலும் பொழுது சாயும் வேளையிலும் இரை தேடும் செய்திகளை நற்றிணைப் புலவர்கள் பதிவு செய்து வைத்துள்ளனர்.


‘பெருஞ் சேயிறவின் துய்த் தலை முடங்கல்

சிறுவெண்காக்கை நாள் இரை பெறூஉம்’ – 358:8,9


‘எல்லை சென்ற பின் மலரும் கூம்பின

………………………………………

இரை நசை வருத்தம் வீட, மரமிசைப்

புள்ளும் பிள்ளையொடுவதிந்தன’ – 385:1-5


கடல் பறவைகள் கூட்டமாக இரைதேடி உண்பன. தவிர, தன் துணையோடும் இரை தேடுகின்றன.

‘வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ

…………………………………………..

கருங்கால் வெண்குருகு’ – 54:1-4


‘பாடு இமிழ் பனிக்கடல் துழைஇ பெடையொடு

உடங்கு இரை தேரும் தடந்தாள் நாரை’ – 91:3,4


இப்பாடலடிகள் வழி கடல் பறவைகளின் இரை, அவை இரை தேடும் இடங்கள், இரை தேடும் நேரம், இரை தேடும் முறை முதலிய உணவுச் சூழல் குறித்த செய்திகளை அறிய முடிகிறது.


வாழிடச் சூழல்

திணை என்ற தமிழ்ச் சொல்லுக்கு வாழிடம் என்பதோடு மட்டுமல்லாது ஒழுகலாறு என்ற மற்றோர் ஆழமான பொருளும் உள்ளது’3 எனக் கூறுகிறார் பாமயன். கடல் பறவைகள் கடலை ஒட்டிய கடற்கரைச் சோலைகளிலும் மரங்களிலும் தம் வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன. இப்பறவைகள் கடற்பகுதியிலுள்ள புன்னை மரங்களிலும் பனை மரங்களிலும் கூடு கட்டி வாழ்வதை நற்றிணையின் பல பாடல்கள் எடுத்துரைக்கின்றன.


‘நீ உணர்ந்தனையே தோழீ வீ உகப்

புன்னைப் பூத்த இன் நிழல் உயர் கரைப்

பாடு இமிழ் பனிக்கடல் துழைஇ, பெடையோடு

உடங்கு இரை தேரும் தடந்தாள் நாரை

ஐய சிறுகண் செங்கடைச் சிறுமீன்

மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை,

தாய்ப் பயிர் பிள்ளை வாய் படச் சொரியும்

கானல் அம் படப்பை’ – 91:1-8


இப்பாடல் கடற்கரைச் சோலையில் உள்ள புன்னை மரக் கிளையில் கூடுகட்டித் தன் பெடையோடும் குஞ்சுகளோடும் வாழிடச் சூழலை அமைத்துக் கொண்ட நாரை குறித்த செய்தியை அழகுற எடுத்துரைப்பதைக் காணலாம்.

‘இறவு அருந்தி எழுந்த கருங்கால் வெண்குருகு

வெண் கோட்டு அருஞ் சிறைத் தாஅய், கரைய

கருங்கோட்டுப் புன்னை இறை கொண்டனவே’ -67:3-5

என்னும் பாடல் வரிகளும் குருகுகள் புன்னை மரத்தில் தங்கிய செய்தியை எடுத்துரைக்கின்றன.

புன்னை மரம் ஒரு நெய்தல் நிலத் தாவரமாகும். இது ஆழ வேரூன்றி வளர்வது. சங்கத்தமிழர் கடல் அரிப்பைத் தடுக்கப் புன்னை மரங்களைக் கடற்கரைகளில் நட்டு வளர்த்தனர். அவை கடற்கரைச் சோலையாக இன்நிழலைத் தந்தன. பேரலைகளைத் தடுத்தன. இதனால் கடல் பறவைகள் புன்னை மரங்களில் இளைப்பாறியும் கூடுகள் கட்டியும் தம் வாழிடச் சூழலை அமைத்துக் கொண்டன.

புன்னை மரம் போலவே பனை மரமும் கடல் பறவைகளின் வாழிடமாக அமைந்திருப்பதை நற்றிணைப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. பனை மரம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தாவரம். வறண்ட நிலப்பகுதிகளிலும் கடலோரங்களிலும் இவை ஏராளமாகக் காணப்படுகின்றன. நீண்டு உயர்ந்த இம்மரங்களின் மடல்களில் குருகுகளும் நாரைகளும் காகங்களும் கூடு கட்டி வாழ்வதையும், குறிப்பாக அன்றில் பறவைகள் இம்மரங்களைத் தம் வாழ்விடமாகக் கொண்டிருப்பதையும் நற்றிணைப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

‘ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை

வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு

நள்ளென் யாமத்து உயவுதோறு உருகி’ – 199:1-3


‘தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை

மன்றப் பெண்ணை வாங்கு மடல் குடம்பைத்

துணைபுணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும்’ – 303:3-5

புன்னை, பனை தவிர கடற்கரைச் சோலையில் உள்ள மரங்களிலும் பறவைகள் தம் வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன.


’வள் இதழ் நெய்தல் கூம்ப, புள் உடன்

கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர’ – 117:3,4

கூடுகட்டி வாழும் கடல் பறவைகள் இரைதேடும் பொருட்டும் பகல் பொழுதில் இளைப்பாறவும் தாழை (நற்.131), கப்பலின் பாய்மரம் (நற்.258), வயல்வெளிகள் (நற்.263), மணல்மேடுகள் (நற்.272, 291) இவற்றை நாடுவதைச் சங்கப் புலவர்கள் உற்றுநோக்கிப் பாடியுள்ள திறம் வியத்தற்குரியது.

கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் கூடுகட்டும் வழக்கத்தைக் கொண்டிருப்பது நீர்ப்பறவைகளின் தனிப்பண்பாகும். கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய பாதுகாப்பான மரங்கள் இருக்கும் நீர்நிலைகளில் அவை ஆயிரக்கணக்கில் கூடுகின்றன.


‘நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை

கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி’– 159:3,4


‘பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய

சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும்

துறை புலம்பு உடைத்தே’ -231: 2,3

ஒரு சூழல் செழிப்பாக, உயிர் வளத்துடன் குன்றாத வளர்ச்சியைத் தரும் தன்மையுடன் இருக்கிறதா, மாசுபட்டிருக்கிறதா, சீர் கெட்டிருக்கிறதா என்பதை அறிய பறவைகள் சிறந்த அடையாளமாகும். சுற்றுச்சூழல் சீர்கேடு, வாழிடச் சூழலில் ஏற்படும் பாதகமான மாற்றங்கள் காரணமாக நீர்ப்பறவைகள் புதிய இடங்களைத் தேர்ந்தெடுப்பது உண்டு எனச் சுற்றுச்சூழலியலார் கூறுகின்றனர். நற்றிணைச் செய்திகளை ஆழ்ந்து நோக்கினால் சங்க காலக் கடல் சூழல் பல்லுயிரிப் பெருக்கத்திற்கும் வளத்திற்கும் சான்று பகருவதாகவே அமைந்துள்ளது எனலாம்.

சூல் கொண்ட பெண் நாரை சூலினால் ஏற்பட்ட வருத்தத்தால் நெய்தல் நிலத்தை விடுத்து மருத நிலத்தில் தங்கியதாகக் கூறப்படும் பாடல் (263:4,5) தவிரச் சூழல் சீர்கேடு காரணமாகப் பறவைகள் இடம் பெயர்ந்ததாகச் செய்திகள் ஏதும் நற்றிணையில் பதிவாகவில்லை என்பது பழந்தமிழகத்தின் கடல் சூழல் வளத்திற்குச் சான்று எனலாம்.

உறவுச் சூழல்

‘கருப்பொருள்கள் தங்களுக்குள் கொள்ளும் உறவு, தமது சுற்றத்துடன் கொள்ளும் உறவு, அதாவது உயிருள்ளவற்றோடு, உயிரற்றவற்றோடு கொண்டிருக்கும் உறவுதான் திணையம் என்பதாகும். இந்த உறவுகளை நுட்பமாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப சூழலில் இயங்கும் போது அனைத்து உயிர்களுக்கும் வாழ்வதற்கான உறுதிப்பாடு ஏற்படுகிறது’4.

பறவைகளுக்கும் மனிதனுக்குமான உறவு என்பது நாகரிக வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் மாற்றங்களைச் சந்தித்தே வந்துள்ளது எனலாம். ஒரு காலத்தில் பறவைகளுடன் இணக்கமாக இருந்த மனிதன் தற்போது பறவைகளை நுகர்வுப் பொருளாகவோ அல்லது தனக்குத் தொடர்பில்லாத ஓர் உயிரினமாகவோ பார்க்கத் தொடங்கி விட்டானோ என்ற ஐயம் எழுகிறது.

பறவைகள் இணையாக வாழ்பவை. கூடு கட்டி, முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொரித்து, தம் குஞ்சுகளுக்கு இரை தேடித் தருபவை. இணையில் ஒன்று பறக்க இயலாத சூழலில் இருந்தால் அதற்கும் இரையைத் தேடித் தருபவை. சங்க அகப்பாடல்களில் தலைவன் தலைவியர் இணைந்து வாழ்வதற்கும் பிரிவுச் சூழலில் ஒருவரையொருவர் நினைத்து உருகுவதற்கும் பறவைகளின் வாழ்வியல் சூழல்களே சான்றாகக் காட்டப்படுகின்றன.

‘ஒன்று இல் வாழ்க்கை அன்றில் போலப்

புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை’ – 124:1,2


‘………………………………இரை வேட்டு

கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது

கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு

முடமுதிர் நாரை கடல் மீன் ஒய்யும்’ – 263:4-7



‘கடல் அம் காக்கைச் செவ்வாய்ச் சேவல்

‘……………………………கொடுங் கழி

இரை நசை வருத்தம் வீட, மரமிசைப்

புள்ளும் பிள்ளையொடு வதிந்தன’ – 385:3-5


இப்பாடல்களின் வரிகள் கடல் பறவைகள் தம் துணையோடும் குஞ்சுகளோடும் வாழ்ந்த உறவுச் சூழலை விளக்கி நிற்பனவாகும்.

பறவைகள் மரங்களோடும் உறவுச் சூழலைக் கொண்டிருப்பவை. இந்த உறவே பல்லுயிர்ப் பரவலுக்குக் காரணமாக அமைகிறது.


‘புது மணற் கானல் புன்னை நுண் தாது

கொண்டல் அசை வளி தூக்குதொறும் குருகின்

வெண்புறம் மொசிய வார்க்கும்’ – 74:7-9 


‘நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர

கோடு புனை குருகின் தோடு தலைப்

பெயரும்’ – 375:1,2

என்னும் பாடல் வரிகளில் கடல் பறவைகளால் மரங்களில் பூத்த பூக்களிலிருந்து மகரந்தத் தாதுக்கள் உதிரும் செய்தி கூறப்பட்டுள்ளதைக் காணலாம். இதனால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கான சூழல் உருவாவதை அறிய முடிகிறது. மகரந்தச் சேர்க்கை, மரங்களில் பூக்கள், பழங்கள், விதைகள் உருவாவதற்கும், மரங்கள் அதிக அளவில் தோற்றம் பெறுவதற்கும் அதனால் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் அடித்தளமாக அமைவதைக் காணலாம்.

கடற்கரைச் சூழலமைவு

நற்றிணை நெய்தல் திணைப் பாடல்கள் கடற்கரைச் சூழலமைவை அழகுறப் புலப்படுத்தி நிற்பனவாகும். கடற்கரைச் சூழலே கடல் பறவைகளின் வருகைக்கும் பெருக்கத்திற்கும் காரணமாக அமையக்கூடியது. பழந்தமிழகத்தில் இத்தகைய வளமான கடற்சூழல் இருந்ததைச் சங்க இலக்கியங்களில் காணலாம்.


‘……………………………தழையோர்

கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்

தெண் திரை மணிப்புறம் தைவரும்

கண்டல் வேலி நும் துறை

கிழவோற்கே’ – 54:8-11


நீர்த் திவலைகள் தடவும் ஞாழல் மரங்களும் தாழை மரங்களும் நிறைந்த கடற்கரை எனவும்,

‘கோட் சுறா வழங்கும் வாள் கேள் இருங்கழி

மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய

பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்

வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்’ – 78:1-4

சுறாமீன்கள் உலவும் உப்பங்கழியிடத்தே பூத்த நெய்தலின் மலர்கள் நிறையுமாறு புன்னையின் தாதுக்கள் உதிர்ந்து சிந்துவதும், விழுதுகள் தாழ்ந்த தாழையின் பூமணம் நிறைந்து விளங்குவதுமாகிய கடற்கரைச் சோலை எனவும் கடற்கரைச் சூழல் பற்றிய செய்திகளை நற்றிணைப் பாடல்கள் வழி அறிய முடிகிறது.

இத்தகைய அழகிய சூழலை விளக்கும் பாடல்கள் சங்க இலக்கியம் எங்கும் நிரம்பிக் காணப்படுகின்றன. வளமான கடற்கரைச் சூழலைக் கண்டுகளித்த சங்கப் புலவர்களின் சிந்தையிலும் பாக்களிலும் அச்சூழல் இயல்பாகப் பதிந்து பாடுபொருளாக மாறியிருக்கக் கூடும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

இன்று கடற்கரைச் சோலைகளும் இல்லை. புன்னையும் தாழையும் ஞாழலும் பனைமரங்களும் கடற்கரையை அணி செய்யவும் இல்லை. கடற்கரைகள் கண்ணையும் மனத்தையும் கவரும் கேளிக்கை விளையாட்டுத் தலங்களாகவும் நட்சத்திர விடுதிகளாகவும் வானுயர்ந்த கட்டடங்களாகவும் உருமாறி வருகின்றன. பறவைகள் இடம்பெயர்ந்து சென்று விட்டன. பல்லுயிர்ப் பரவல் பழங்கதையாகி விட்டதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.

சங்கத் தமிழரின் கூர்நோக்குத் திறனும் பல்லுயிர்ப் பரவலைப் பாடிக் களித்த விதமும் பறவைகளைக் கொண்டாடிய அறிவும் வியக்க வைக்கின்றன. இதில் நற்றிணை சிறிய சான்று. சங்க இலக்கியம் முழுமையும் ஆய்வுக்குட்படுத்தினால் பழந்தமிழகத்துப் பறவைகளின் வாழ்வியலையும் அவற்றைப் சங்கத்தமிழர் தம் வாழ்வியலோடு போற்றிப் பாராட்டிய தன்மையையும் தெளிவாக அறிய இயலும்.

இன்று அறிவியல் தொழில் நுட்பங்களாலும் ரசாயனக் கழிவுகளாலும் கடல் வளத்தையும் பல்லுயிர் வளத்தையும் இழந்து பெரும் மாறுதல்களைச் சந்தித்து வரும் கடற்கரைகளின் மீது கவனத்தைத் திருப்பி அவற்றைச் சோலைகளாகவும் மரங்கள் நிரம்பிய சிறு காடுகளாகவும் மாற்றியமைத்தால் கடல் பறவைகளோடு பல்லுயிர் வளமும் பெருகும் என்பதில் ஐயமில்லை.

******

அடிக்குறிப்புகள்

குறுந்தொகை, பா. 325

பாமயன், ‘நெய்தல் நில வேளாண்மை’, சூழலியல் கட்டுரை (நிலமும் வளமும்),

தி இந்து, நாள். 03.02.2018

பாமயன், திணையியல் கோட்பாடுகள், ப. 11

மேலது, ப. 27
******

முனைவர் இரா.சுதமதி

கட்டுரையாசிரியர்,

உதவிப் பேராசிரியர்

தமிழ்த்துறை

ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி

திருநெல்வேலி

விடிந்தகரை 3.02

அரச மரத்தடி நிழலில் கையில் உலக்கை போன்ற தடி ஒன்றை ஊன்றியபடி கிணற்று திண்டின் மேல் அமர்ந்திருந்தார் பூபாளன் ஆராச்சார் ………………………………….. கங்கனார் பரதவ வர்மனின் மண்டைக்குள் மாமுனி சாமிப் பிள்ளையின் வார்த்தை எதிரோலித்துக் கொண்டேயிருந்தது:(ஆனாலும் புதிய யாகமுறை நாளை செய்வோம். அதுவும் பரதவ இடத்தில் தான். அரச சபை எனக்கு ஆகாது தக்சயா. உன் தரவாட்டுக்கு அரசனை வரச்சொல் குமரி துறையிலே வெள்ளியலிலே இருந்து அவனுக்கு விளக்கம் சொல்கிறேன்,)……… என்றதை நினைக்க நினக்க மாமுனி சாமிப் பிள்ளையின் கட்டளையாகவே பரதவ வர்மனுக்கு தோன்றியது.

வெள்ளியல்... தரவாடு...அரசர் ...சாமிப் பிள்ளை என பலவித நெருக்கடி தாண்டி அரசரும் சித்தரும் சந்திக்க எவ்விடத்தை தேர்ந்தெடுப்பது என கங்கனார் பரதவ வர்மன் குழப்பத்தில் இருந்தார். 1600 களில் கொமரிமொனை இப்படித்தான் காட்சியளித்தது முக்கடல் சூழ முனையில் அமைந்திருந்த கொமரி அம்மச்சா ஆத்தா கோவிலை ஒட்டி கிழக்கு வடக்கு கடலோர மணல் வெளியில் 40,50 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மன்னாரின் மன்னவர்கள் பரதவர்களின் வாழ்விடம் அழிந்து பட்ட நிலையிலிருந்தது.

கடல் உரிமைக்காக போராடி இன அழிவிலிருந்து தப்பிப் பிழைக்க இடம் பெயர்ந்து போன கொமரி பரதவரின் குடுகைகளின் சிதைவும் பாண்டி பரதவ நடுகல்களும் சிதிலமடைந்த சிப்பி சுண்ணாம்பு மணற்கல் குவியலுமாய் விரைவிக் கிடந்தது. அதனையும் தாண்டி மேக்காலே ஓங்கி எழுந்து மணல்மேடுகளில் நடுவே பனைமரக்காடும் சற்று தள்ளி புளியமரக் கூட்டமும் சேர்ந்து அடர்ந்த மேட்டு பூமியாகவே கொமரிமொனை இருந்தது. ஆனாலும் அங்கே அம்மனை தேரேற்றி சுற்றி வந்து கொண்டாடு வதற்காகவே மணல் மேட்டை சீர் திருத்தி அம்மச்சா ஆத்தாளின் பாண்டி பரதவர்கள் அவர் சார்ந்த ஆச்சாரியார்கள் கடும் உழைப்பினால் உருவாக்கிய இரதமும் இரதவீதியும் இருந்தது.

"கல்தேர் ஓட்டிய பரதவர்களுக்கு மணலிலே தேரோட்ட கற்றா கொடுக்க வேண்டும்."

இரத வீதியின் மேற்கே ஆராச்சார் ஆன ஆச்சாரியாரின் கொட்டாரம் முப்பது நாற்பது வருடங்களாக பாழடைந்து கிடந்தது. காரணம் 1544கில் தமது சொந்த பரத இனம் தங்கள் கண்கள் முன்னே கொலையாடப்படுவதை வடுகபடையினரால் கருவருக்கப்படுவதையும் கண்டபின்பும் உதவ முடியாமல் தன் உயிர் காக்க பயந்துபோய் அம்மச்சா கோவிலுக்குள் ஒளிந்து கொண்டார்கள் பரதவ ஆச்சாரிமார்கள்.

அதே நேரம் மதத்தின் பிரதிநிதியாய் இருந்தாலும் மனித நேயத்தின் தலைவனாய் எங்கிருந்தோ வந்த பரங்கிய பாதிரி பரதவ புனிதர் சவேரியார் பரதவ பட்டங்கட்டிமாரோடு படை பலம் கூட்டி கொமரிமொனை வந்தார். கடும் போர் நடத்தி பரதர்களை காப்பாற்றி மணப்பாட்டுக்கு அழைத்து சென்று உடலை தேற்றி பொருளாதாரத்தை தேற்றினார். அப்போது குமரித் துறையிலே கோலோச்சிய கங்கன் இரவிந்திர கங்கனாரின் ஏற்ப்பாட்டால் திருவிதாங்கூர் சமஸ்தானது அரசன் உன்னி கேரள வர்மாவை சந்தித்து கிறித்துவ பரதவர்களுக்கு வடுகரிடமிருந்து பாதுகாப்பு அளிக்க உடன்படிக்கை செய்தார் பரதவ புனிதர் சவேரியார்.

ஆனாலும் உணர்வு ரீதியாக பரதவர்கள் அம்மச்சா ஆத்தாளை கொண்டாட துவங்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் அம்மச்சா கோவிலை அடுத்து இருந்த குடியிருப்புகளை மாற்றி வடக்காலே இரண்டு மூன்று காத தூரங்கள் தள்ளி குமரியிலே ஆறு குடும்பங்களை மட்டும் குடியேற்றினார். அவர்களுக்காகவே புத்தம்புது கிறித்துவ கூரைவேந்த ஆலயத்தை கட்டியேழுப்பி தந்தார். இந்நிலையில் மூதாதையர் வில்லவராயர் கட்டின கோவிலுக்குள் ஒளிந்து கிடந்த ஆச்சாரிமார்கள் எனும் ஆராச்சார்கள்.

ஆத்தாளுக்கு பூசை செய்து பயனென்ன கொண்டாட வேண்டியவர்கள் கொலை வாளுக்கு இரையான பின்னர் கும்பிடுவதற்கு ஆள் ஏது ??? தாங்கள் மட்டும் இருந்து பயனென்ன என பலவாறு நினைத்தப்படி கோவிலை விட்டுவிட்டு ரத வீதியிலே இருந்த தன் கூடகோபுரங்களை விட்டுவிட்டு தூரமாய் கூட்டமாய் இருந்த கடற்புரத்து குடியோடு ஒன்றினைந்து வாழ இடம்பெயர்ந்தனர்.

அதனால்தான் ஆச்சாரிமாரின் மாளிகைகள் பாழடைந்து போனது. அம்மச்சா ஆத்தா கோவிலை ஒட்டி வாழ்ந்த மன்னாரின் மன்னவர்கள் பரதவர்களின் வாழ்விடமும் அழிந்துபட்டும் போனது. இதையெல்லாம் உணர்ந்து அறிந்து தெளிந்து கொண்ட கங்கனார், அரசரது ஒப்புதலோடு ஆச்சாரிமார்களான ஆராச்சார் கொட்டாரத்தை அரசர் மற்றும் பரத முனியின் சந்திப்பிற்காக தேர்ந்தெடுத்தார்.

ஆராச்சார் குடும்பங்கள் அம்மச்சா ஆத்தா கோவிலை விட்டுப் பிரிந்து வந்து பரதவர் குடிகளுக்கு வடமேற்கே உள்ள விளை காடுகளுக்குள் குடியேறி இருந்தனர். ஆராச்சார்களைப் பார்க்க பூட்டிக்கிடக்கும் கொட்டாரத்தை பற்றிய விவரம் அறிய தனது குதிரையின் மேல் ஏறி விரைந்தான் பரதவ வர்மன் கழிந்த நாற்பது ஐம்பது வருடங்களில் ஓரிரு ஆராச்சார் தங்களது பூஜை புனஸ்காரங்களை விட்டுவிட்டு கிருத்துவமதம் தழுவியிருந்தனர் ஆனாலும் அதிகமானோர் இன்னும் தன் இடங்களிலே அடையாளங்களை உருவாக்கி அம்மச்சா ஆத்தாளை வழிபட்டு வந்தனர்.

காலகாலமாக கடல் தொழிலைப் பற்றி அறியாதவர்கள் இப்போது கால்நடைகளை வளர்கவும் அவைகளை தங்கள் காட்டுக்குள் மேய்க்கவும் ஆட்களை வைத்து பயிர் செய்யவும் பழகி இருந்தனர். கங்கனார் அந்த விளைக் காட்டுக்குள் நுழையும்போதே ஆரவாரமாய் இருந்தது ஆங்காங்கே ஆட்டுக் கொட்டடியும் மாட்டுத் தொழுவங்களுமாய் அந்த விளைக் காட்டில் நிரம்பி இருந்தது.

வேலையாட்கள் அங்குமிங்குமாக சுறுசுறுப்பாக பணியாற்ற அவர்களை அதட்டி உருட்டி வேலை வாங்கியபடி அரச மரத்தடி நிழலில் கையில் உலக்கை போன்ற தடியை ஒன்றை ஊன்றியபடி கிணற்று திண்டின் மேல் அமர்ந்திருந்தார் முதியவர் ஒருவர். முதியவரை கண்டதுமே இவர்தான் தான் தேடி வந்த பூபாளன் ஆராச்சார் என்பதை உணர்ந்துகொண்ட பரதவவர்மன், குதிரையிலிருந்து கீழே இறங்கி உடனடியாக அவரை மண்டியிட்டு வணங்க, யாரது கங்கனா என முதியவர் கேட்க, நொடியில் மருண்டு போனான் பரதவ வர்மன்.

போத்தி நல்லா இருக்கீளா!

எப்படி கண்டுபிடிச்சீங்க நான்தான் கங்கனார் என்று இதுவரை நீங்க என்னை பார்த்தது கூட இல்லையே என ஆச்சரியமாய் கேட்க.... 

அதான் கங்காதேவியை கொண்டையில வைச்சி வழியவிட்டு இருக்கியே மாப்பிள என உரிமையோடு பேரனை கிண்டல் அடித்தார். புரியாது கங்கனார் பரதவ வர்மன் விழிக்க பூபாளன் ஆராச்சார் இப்படி சொன்னார். மாப்பிள உங்களுக்கு இந்த கொண்டையும் வாளும் அரச முத்திரை மோதிரமும் அடையாளங்கள் எங்களுக்கு பூணூலும் கொண்டையும் கையில் உள்ள இந்தக் கோலும் அடையாளங்கள், முதியவர் சொல்லச்சொல்ல பரதவரின் ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு அடையாளங்களா? ஆச்சரியப்பட்டுப் போனார் பரதவ வர்மன்.

அதன்பின்னர் பரஸ்பர குடும்ப நல விசாரிப்பு உரையாடல் முடிய பரதவ வர்மன் தான் வந்த நோக்கத்தை எடுத்துக்கூற கோபாவேசத்துடன் மடைதிறந்த வெள்ளமாய் சீறிப்பாய்ந்தார் பூபாளன் ஆராச்சார். கங்கனாரை…. பரதவ வர்மனை….பூபாளன் ஆராச்சார் சீராட்டினாரா...? சினப்பட்டாரா...? இல்லை சிறைப் பிடித்தாரா...? பார்ப்போம்

உங்களைப் போல் பதட்டத்துடன் 
…….கடல் புரத்தான்……….

சர்வம் ஜெகத் சாக்ஷாத் பிரஹ்மம்

எட்டையாபுரத்தில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11 ஆம் நாள் பிறந்த மகாகவி பாரதிக்கும் மணப்பாட்டில் 1875 ஆம் ஆண்டு பெப்ரவரி திங்கள் 7ஆம் நாள் பிறந்த வித்வான் ஜே. ஆர்.மிராந்தாவுக்கும் நல்ல பரிச்சயம் இருந்ததென்று பின்னவரின் குறிப்புகளிலிருந்து தெரிகிறது. 'சுதேச கீதங்கள்' என்னும் தலைப்பில் பாரதியின் பாடல் தொகுப்பு முதன்முதலில் 1908ல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு வெளிவந்தவற்றில் பிலஹரி இராகத்தில் அமைந்த ‘விடுதலை’ என்னும் பாடலும் ஒன்று. அதன் முதல் சரணத்தில் 

பறையருக்கும் இங்கு தீயர் 
புலைய ருக்கும் விடுதலை 
பரவ ரோடு குறவ ருக்கும் 
மறவ ருக்கும் விடுதலை

என்று எழுதப்படிருந்த வரிகள் மிகவும் உறுத்தலாகவே இருந்தன. அந்த கால கட்டத்தில் இலங்கையின் வணிகத்துறையில் பரவரின் கொடி வானுயரப் பறந்த காரணத்தால் செல்வா செழிப்பில் தலைநிமிர்ந்து, ஐரோப்பிய நாகரிகத்தை உள்வாங்கிக் கொண்ட ஆடம்பரத்தின் தாக்கம் தூத்துக்குடி, மணப்பாடு, வீரபாண்டியன்பட்டணம், ஆலந்தலை போன்ற ஊர்களின் மாளிகை போன்ற வீடுகளின் பிரமாண்டத்திலும், பரவரின் வாழ்க்கை முறையிலும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. (Madras District Gazetteers, Tirunelveli-Published in 1917 –by H.R. Pate I.C.S ., Volume I pages 121/122). 

பாரதியின் பாடல் தொகுப்பு வெளியான போது வித்வான் ஜே. ஆர்.மிராந்தா இலங்கையில் கொழும்பு நகர், கண்ணாரத் தெருவில் சொந்தமாக ஓர் அச்சுக்கூடம் நிறுவி ‘திராவிட மித்திரன்’ (வாரமொருமுறை), பரதன் (மாத இதழ்) இரண்டையும் ஆசிரியர் பொறுப்போடு நடத்திக் கொண்டிருந்தார். பாரதியின் பாடல் வரிகளைக் கேள்விப்பட்டவுடன் தூத்துக்குடி சென்று அங்கு வித்வான் எம். அலங்காரம் பீரிஸ் என்பவரையும் கூட்டிக் கொண்டு, அப்போது தூத்துக்குடி கைவல்யசுவாமி மடத்தில் தங்கியிருந்த பாரதியிடம் சென்று ‘ எந்த வகையில் நாங்கள் அடிமைகளானோம்? வர்ணாசிரமத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவருடன் பரவரையும் சேர்த்துப் பாடியது ஏன்? எதுகை, மோனைக்காகவா? அன்றி எங்களையும் தாழ்த்தப்பட்டவர் என எண்ணி விட்டீரோ? என்று ஆவேசத்தோடு கேட்டிருக்கிறார்கள். அப்போது தன்னை மறந்த நிலையிலிருந்த பாரதி ஒரு கவிதையில் பதிலை விலாசினாராம். 

"குமரி நாட்டின் மக்களாம் பரதர் 
விமரிசை வாழ்வை விளம்புவம் கேண்மிர் 
பரதரில் ஆடவர் பாவையர்க்கடக்கம் 
பாவையர் பாலர்முதற் பலசபைகளி லொடுக்கம் 
சபைகளோ கன்னியர் விரித்துள கண்ணிகள் 
அவர்களோ குருக்களின் ஐந்தாம்படைக் குழுவினர் 
குருக்களோ சர்வம் ஜெகத் சாக்ஷாத் ப்ரஹமம் 
ஆதலிற் பாடினேன் அவர்களுக்கும் விடுதலையே!” 

என்று (நிகழ்வும் பாடலும் 1954 இல் சில மாதங்கள் பாளையங்கோட்டையில் என் பாட்டனார் வித்வான் ஜே.ஆர்.மிராந்தா வீட்டில் தங்கியிருந்த போது அவர் சொல்லக் கேட்டு எழுதிய குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டது.) 

அந்தக் காலத்தில் ஐரோப்பிய குருக்கள் மீது கடற்கரைக் கிறிஸ்தவர் வைத்திருந்த அதீதமான மதிப்பும், மரியாதையும், பக்தியும், பணிவும் ஒரு வேளை பாரதியின் கண்களுக்கு அடிமைத் தனத்தின் அடையாளமாகக் காட்சி கொடுத்திருக்கலாம். என்றாலும் பரவர் கத்தோலிக்கம் தழுவிய நாள் முதல் 175௦ கள் வரை துவக்க கால போர்த்துக்கேய இயேசு சபைக் குருக்கள் பரவனின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் படிக்கற்களாக உழைத்தது போல் அல்லாமல் பிற்காலத்தில் 1838 ஆம் ஆண்டிற்குப் பிறகு வந்திறங்கிய தூலுஸ் மிஷன் பிரெஞ்சு இயேசு சபைக் குருக்கள் பரவரின் முன்னேற்றத்திற்கு தடை நின்று சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவித்த வரலாற்று உண்மையை புறக்கணித்துவிட முடியாது. அவற்றைக் கிளறிப் பார்ப்பது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. ஆனால் சமூகத்தையும், சமயத்தையும் குழப்பி ஒரே பைக்குள் திணித்துத் திண்டாடும் தவறை மீண்டும் மீண்டும் தலைமுறை தவறாமல் பரவர் செய்து கொண்டிருப்பதன் காரணம் தான் என்னவென்று விளங்கவில்லை. 

இன்னும் கூட பரவரின் சமூக ஏடுகளில் வெளியீடுதோறும் விவிலிய புதிர்களும், விழாக்கள் பற்றியும், வேதவிளக்கக் கட்டுரைகளும் சில பக்கங்களை நிரப்பிகொண்டுதான் வருகின்றன. சமூக முன்னேற்றத்தின் எதிர் நோக்குப் பார்வையோடு கூடிய அறிவார்ந்த கட்டுரைகள் அரிதாகவே வருகின்றன. வரலாற்றுப் பெருமைகளை நினைவு படுத்துவது தவறில்லை. ஆனால் அவை வெறும் நினைவுகளாக மனத்திரையில் நிழலாடி மறைந்துவிடாமல் இழந்த பெருமைகளை மீட்டெடுக்கும் முயற்சி வித்துகளாகப் பரிணமிக்கும் பான்மையில் வெளிவந்தால் நன்மை பயக்கும். 

- ஜெ.எச். செல்வராஜ் மிராந்தா 

காலனியம் | சமயம் | பரவர் நூல்

A Historical Survey of the Pearl Fishery Coast

Rare Collection

A Historical Survey of the pearl fishery coast

Download Link

Korkai, Srivaikundam, Thoothukudi

Korkai is a small village in the Srivaikundam taluk of Thoothukudi district in Tamilnadu, India. It was called Pandya – Kavada in the Kapatapuram in Kalithogai. It is situated about 3 km north of the Thamirabarani River and about 6 km from the shore of Bay of Bengal. Korkai was the capital, principal center of trade and important port of the Early Pandyan Kingdom. At that time, it was located on the banks of the Thamiraparani and at the sea coast, forming a natural harbour. Due to excessive sedimentation, the sea has receded about 6 km in the past 2000 years, leaving Korkai well inland today. The famous urn burial site, Adichanallur, is located about 15 km. from Korkai.
In ancient times, Korkai was a well-known center of pearl fishery; it is mentioned often in the Sangam literature and in classical western literature. Ptolemy, refers to the place as Kolkhai and says that it was an emporium. The Periplus says that the Pandyan kingdom extended from Kumari towards the north, including Korkai, where the pearl fisheries were. Correct identification of Korkai by archaeological excavations came in 1838. The finding of megalithic burial urns at Korkai indicates that it was fairly well populated during megalithic times.

In the excavation a structure with nine courses of bricks in six rows was unearthed at the depth of 75 cm from surface level. Below the structure three large sized rings placed one over the other (probably soakage jars) were found. Inscribed potsherds bearing Tamil Brahmi letters assignable, to 300 BCE to 200 CE were also found. Charcoal samples were collected which were assigned to 785 BCE, by the Tata Institute of Fundamental Research, Mumbai.

Carbon dating of the artifacts in the area indicates an age of 785 BC. The finds of black and red pottery ware with old Tamil Brahmi scripts (two to four letters in a line or two), apart from drawn graffiti of the sun, fish, bow and arrow have been dated to a period between 3rd century BC and 2nd century AD. The occurrence of Roman ware and rouletted ware indicates external links. Archeologists have found ruins of Chanku cutting factories, centres for split opening of pearl oysters at the site.

Palaeo-channels traced from the satellite imagery scenes all around Korkai indicate that the Thamiraparani River has shifted its course progressively east and south and earlier it had mixed with sea near Thoothukudi. Interpretation of satellite imagery indicates that in the 1st and 2nd century CE, the Thamiraparani River might have flowed towards northeast from Eral, parallel to the coast and joined the sea south of Thoothukudi. Korampallam tank, Peykulam, and Arumugamangalam tank might be the relicts of palaeo channel of the Thamiraparani River.

Within a short span of nearly 2000 years, now Korkai is nearly 6 Kilometers away from Bay of Bengal and 3 Kilometers north of Tamirabarani, which was once a port and in the banks of the Tamirabarani and Thoothukudi has no river.

Korkai ancient port city of Pandian dynasty in the Sangam period is located on the main road from Thiruchendur to Thoothukudi. It is 29km from Thiruchendur. The Tank of Korkai is said to be Korkai kulam with an extent 250 acres. An ancient Vettrivelamman Temple is also situated here. Many numbers of tourists visit this temple.

Attractions

Vanni tree in Korkai is believed to be 2,000 years old that lies twisted on the ground. Around it are several idols, including one of the Buddha, believed to have been installed by the Pandya kings, who are said to have offered prayers here and meditated under the tree.

The other is an excavated site, the ruins of Korkai, which is under the control of the Archaeological Survey of India. The ASI unearthed pottery dating back to the Harappa civilization. Also found were large bowls and urns in black and red, now housed in the Government Museum, Chennai.

Work is still on to find the exact location of the port. Folk beliefs, geology and geomorphology are being applied to learn more about life in the port city where the Cholas, Cheras and Pandyas are believed to have lived together. This is evident from the numerous temples scattered around which reflect the architecture of each era.

அகநானூறில் பரதவர்


அகநானூறில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்


பாடல் 280

நெய்தல்


பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப்

பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்,

திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி

அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்,

5

நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும்,

பெறல் அருங்குரையள்ஆயின், அறம் தெரிந்து,

நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு

இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,

பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும்,


10

படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம், இருப்பின்,

தருகுவன்கொல்லோ தானே விரி திரைக்

கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்

தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்

கானல் அம் பெருந் துறைப் #பரதவன் எமக்கே?


தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பட்டுப் போகாநின்றவன் சொல்லியதூஉம் ஆம், - அம்மூவனார்

நாவாய் சாத்திரம்

Rare Book Collection


நாவாய் சாத்திரம்

பதிப்பாசிரியர் : டாக்டர்.எஸ். சௌந்தர பாண்டியன்

பதிப்பாளர்: சென்னை : அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்

பனிமயம் பாடும் பாவலர்கள்

”கடலைத் தாயாக நினைக்கின்ற மீனவனுக்கு வளங்களை அள்ளித்தரும் கடல், அதே வேளையில் மரணத்தையும் அவ்வப்போது பரிசாகத் தருகிறது” என்கிறார் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஷ் (அணிந்துரை – கடலோர கவிச்சோலை) கடல் அன்னையின் கருவறையில் உருவாகும் மீன்வளம், முத்து, பவளம், சங்கு போன்றவையே மீனவனின் வாழ்வாதாரம். இவ்வாறு மீனவனுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் கடல் அன்னையின் கருவறையே அவனுக்கு கல்லறையாக மாறி உயிரைக் குடிக்கும் ஆழிப்பேரலையாக, சுனாமியாக, மீன்பிடிக்கும் போது உயிரை சுருட்டிப்போடும் சூறாவளியாக மாறிவிடுவதும் உண்டு! இயற்கை இவ்வாறு சதி செய்யும் போது, மனிதனும் செயற்கையாக, கடல் அன்னையின் கருவறைகளில் கருசிதைவுகளை அரங்கேற்றி விடுகிறான். அணுஉலைக் கழிவுகளை, தாமிர உருட்டாலைக் கழிவுகளை, நச்சு வாயுக்களை, அனல் மின் நிலைய நிலக்கரி சாம்பல் கழிவுகளை, ரசாயன தொழிற்சாலைக் கழிவுகளைக் கடல் நீரோடு கலந்து மீன்வளத்தைக் கருச்சிதைவு செய்து விடுகிறான். 

இது தவிர, கடல் அன்னையைத் துகிலுரிவதைப் போல கடற்கரை கார்னெட் மணல் கொள்ளையும் நடக்கிறது! இது போதாதென்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை அடுத்திருக்கும் சுண்டைக்காய் நாட்டிலிருந்து வரும் இராணுவம் காயப்படுத்தி, சிறைப்பிடித்து, கொன்றொழித்தக் கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் எதிர்க்க தகுந்த தலைமை, அரசியல் முனையம் இன்றி மீனவன் தவிக்கிறான். இவ்வாறு, தன் தாயாக மதித்துப் போற்றும் கடல் அம்மாவின் மடியிலேயே தனக்குப் போதிய பாதுகாப்பில்லை என்று மீனவன் உணர்கிறான்! எனவே, கரையிலே கோயில் கொண்டிருக்கும் பனிமயத் தாயைத் தன் தாயாக வரிந்து கொண்டு, கடலிலே கிடைக்காத பாதுகாப்பைக் கரையிலே காண முயலுகிறான். கடலோரக் கவிஞர்களும் அதனால் இன்ஹா அன்னையைத் தங்கள் கவி மலர்களால் அர்ச்சனை செய்து, பாதுகாப்பு வேண்டி ஓயவில்லை! 

கடலோர மக்கள் பனிமய அன்னையைப் பாடிப் பரவுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. கிறிஸ்தவம் தழுவுவதற்கு முன் அவர்கள் சார்ந்திருந்த இந்து சமய பாரம்பரியத்தில் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் சிவனுடைய ஆற்றலுக்கு ‘சக்தி’ என்ற பெண்ணுருவம் கொடுத்து “சக்தி வழிபாடு” தோன்றியதாகக் கூறப்படுகிறது. இறைவழிபாடு பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து பல உருவங்களில் வளர்ச்சி அடைந்ததாகத் தெரிகிறது. முதலில் ஆவிகளின் வழிபாட்டில் வடநாட்டில் ‘பகாரி மாதா’ என்றும், தென்னாட்டில் ‘முனி’ வழிபாடொன்றும் வழக்கிலிருக்கிறது. அடுத்து இச்சக்தி வழிபாடு தென்னாட்டில் ‘அம்மன்’ வழிபாடாகவும், வடநாட்டில் ‘சீதளமாதா’ என்றும், தொடர்ந்து தேவதை வழிபாடாக வடநாட்டில் ‘துர்க்கா’ என்றும், தென்னாட்டில் ‘காளி’ என்றும் தொடர்ந்து, சக்திவழிபாடாக (பெண் தெய்வம்) பார்வதி அல்லது கௌரிவழிபாடாக வளர்ந்து, தேவியர் வழிபாடாக பராசக்தி, லெட்சுமி, சரஸ்வதி வழிபாடாக முதிர்ந்து, இறுதியில் ஆண்பாலரான தேவர்கள் மட்டில் பக்தி வழிபாடாக விளங்கிற்று. 

இவ்வாறு பெண் தெய்வங்கள் வழிபாடு மிக்க இந்திய சமய பாரம்பரியத்தில் வந்த தென்கிழக்குக் கடலோர மீனவர்கள் கிறித்தவம் தழுவுவதற்கு முன் திருச்செந்தூர் முருக பெருமானையும், மண்டைக்காடு பகவதி அம்மனையும், மதுரை மீனாட்சி அம்மனையும் வழிபட்டு வந்ததற்கான சான்றுகள் உள்ளன. கொற்கைத் துறைமுகத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மாறவர்மன்கள், செழியன்கள், இம்மீனவரின் முன்னோர்கள். கொற்கையிலும் அதை அடுத்த மாறமங்கலத்திலும் இன்றும் மீனவர் சமூகத்தினர் வாழ்வது குறிப்பிடத்தகுந்தது. இரட்டை மீன்கள் (இணைகயல்) சின்னத்தை தம் இலட்சினையாகவும், கொடியாகவும் கொண்ட இம்மன்னர்கள், கொற்கைத் துறைமுகம் தாமிரபரணி ஆற்றின் களிமுகத்தால் தூர்ந்து போனபோது, மதுரையைத் தலைநகராமாகக் கொண்டு, பாண்டியர்கள் என்று பெயர் தாங்கி, ஆளத் தொடங்கினர். அப்போதும் அவர்களின் இலச்சினையும், கொடியும் இரட்டைமீன் சின்னம் தாங்கி இருந்தன என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இப்பாண்டியர் காலத்தில் கட்டப்பட ஆரம்பித்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், தென்கிழக்குக் கடற்கரை மீனவர்கள் நுழைய ‘வடக்கு வாசல்’ என்ற சிறப்பு நுழைவாயில் இருந்ததாக செய்திகள் உள்ளன. மீனின் ஆட்சி (மீனாட்சி) என்றிருந்த பெயருக்கு, ஆரியர்கள் தாங்கள் வடபுலத்திலிருந்து கொண்டு வந்த தேவர்களோடு மீனாட்சி அம்மனைத் தொடர்புபடுத்த “மீனைப் போன்ற கண் உடையவர்கள்” என்று பொருள் கூறத் தொடங்கினர். 

கடற்கரை மக்களுக்கும் மீனாட்சி அம்மனுக்குமிடையே உள்ள தொடர்பைக் குறிக்க, கிறிஸ்தவம் தழுவிய பின் கடலோர மீனவர்களின் குலாதிபர்களாக இருந்தவர்களின் 21 விருதுகளில் ஒன்றாக, மீனாட்சி அம்மனின் கையிலிருக்கும் கிளியும் அமைந்தது! கிறிஸ்தவம் தழுவிய பின் தென்கிழக்கு மீனவர் சமுதாயத்தில் முற்காலத்தில் தேவாலயத்தில் திருமணச் சடங்கிற்காக வரும் மணப்பெண் ஏந்திவரும் மலர்க்கொத்தொடு துணியால் செய்யப்பட்ட உருவமும் சேர்ந்திருந்தது என்று பார்த்தவர்கள் சான்றுபகர்ந்துள்ளனர். 

இவ்வாறாக, அம்மன் வழிபாட்டில் இணைந்திருந்த தென்கிழக்குக் கடலோர மீனவர்கள், கிறிஸ்தவம் தழுவிய பின் அன்னை மரியாவை, தங்கள் அம்மன் ஆக, அம்மையாகக் கருதினார்கள். 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த மணப்பாடு அந்தோணிக்குட்டி அண்ணாவியார், அன்னை மரியாவை அம்மை என்றும் அழைத்துப் பாடினார். அவர் காலத்தில் ‘பனிமய அன்னை’ என்ற பெயர் பரவலாக அறியப்படவில்லை என்று கொள்ளலாம். “இரக்கத்தின் மாதா” என்றே அன்னை மரியா அழைக்கப்பட்டார். (1889 முதல் 1914 வரை) குலத்தலைவனாக இருந்த தொன்கபிரியேல் தெக்குரூஸ் மோத்தா வாஸ் என்பவரின் அரசவைக் வித்துவானாக இருந்த மணப்பாடு வித்துவான் 2 ஆம் இன்ப கவிராயர் மரியான் சவியேர் என்றி லெயோன் ‘பனிமய/ ஆத்தாள் பதிகம்’ பாடினார். 

· மணப்பாடு வித்துவான் சூசை ரபேல் மிராந்தா 

· உவரி புலவர் ஜான் ஜேசுவடியன் கர்டோசா 

· கூட்டப்புளி புலவர் லாசர் கோஸ்தா 

· வேம்பாறு சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகஸ் 

· தூத்துக்குடி புலவர் மரிய பூரணம் மஸ்கரனாஸ் 

· தூத்துக்குடி வித்துவான் மரிய அலங்கார பீரீஸ் 

· தூத்துக்குடி பனிமய வெண்பா” படிய புலவர் அந்தோணி தாசன் பீரீஸ் 

· தூத்துக்குடி “பனிமய உலா” பாடிய மிக்கேல் தல்மெய்தா 

· தூத்துக்குடி பண்டித மரியான் சேவியர் ரூபின் வர்மா 

· தூத்துக்குடி பாவலர் T. சேசையா வாஸ் 

· தூத்துக்குடி தென்றல் M.A.S.A. சகாயராஜ் 

· தூத்துக்குடி பாவலர் முறாயிஸ் 

· தூத்துக்குடி கவிஞர் அருள்திரு பிரான்சிஸ் முறாயிஸ் சே.ச 

· தூத்துக்குடி கவிஞர் தேவதாசன் வாஸ் 

· தூத்துக்குடி கவிஞர் தாமஸ் வாஸ் 

· தூத்துக்குடி புலவர் M.J. முத்தையா பர்னாந்து 

· உடன்குடி வித்துவான் ஜே.எம். விக்டோரியா 

· கொழும்பு புலவர் ஏ.பி.வி. கோமஸ் 

· கொழும்பு பாவலர் அ..விஜயன் விக்டோரியா 

· இலங்கை பேசாலை ச.தாவீது பீரீஸ் அண்ணாவியார் 

· சிப்பிக்குளம் கவிதேன்றல் A.F.மாறன் 

என்ற பனிமயம் பாடிய பாவலர் வரிசை நீள்கிறது! இப்பாவலர்களில் ஒன்றிரண்டு பேர் தவிர மற்ற அனைவருமே யாப்பிலக்கணத்தின்படி பாடியவர்களே. புலவர்கள் அரசர்களையோ, தெய்வங்களையோ புகழ்ந்து பாடும்போது உயர்வு நவிற்சி அணியில் பாடுவது தமிழ் இலக்கிய மரபு. அவ்வாறே, கடலோரக் கவிஞர்கள் அன்னை மரியாவைப் பாடும்போது, தங்களின் முன்னாள் சமய பாரம்பரியத்தின் தாக்கங்கள் தங்கள் பாடல்களிலும் படிவதைத் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதனால் பனிமயம் பாடிய பாவலர்களும் அன்னை மரியாவை, தெய்வமும் நீயே, சக்தியும் நீயே, இம்மையும் மறுமையும் நீயே, இறைவியே, தேவியே என்று பாடிப் பரவியுள்ளனர். உணர்ச்சிப் பிழம்பாகப் பாடிய இச்சொற்களைக் கத்தோலிக்கத் திருச்சபையின் மரியியலில் உள்ள இறையியல் உண்மைகளின் அடிப்படையில் ஆய்வு செய்ய இயலாது. அது புலவர் மரபு என்று ஏற்றுக் கொள்வதே சரி. திருச்சபை மரபு அல்ல. 

மீனவனுக்குக் கடல் அன்னையின் மடியில் கிடைக்காத பாதுகாப்பும் அபயமும் அன்னை மரியாவின் மடியில் கிடைக்கும் என்னும் உணர்வுப் இப்பாக்களில் மேலோங்கி நிறத்து காணத்தக்கது. 

“சிந்தலை கடலில் சென்றிடும் தோணி 
செய்தொழி லாளர்கள் அந்தோ! 
சீரலை குமறிப் பெரும்புயற் காற்றில் 
சேர்துறை தெரி யாமல் 
சித்தமே கலங்கும் தருணமே விரைந்துன் 
சேயனை இனிதுமன் றாடி 
சிறந்தநல் லுதவி புரிந்தவர் மனதில் 
திடமருள் சமுத்திர ராணி! 
கரையும் மறைந்துஉன் ஆலயக் கோபுரக் 
காட்சியும் மறைந்துஆழ் கடலில் 
கலம்விசைப் படகைக் செலுத்திமீன் பிடிப்போர் 
காவல் நீ காலங்கள் யாவும் 
கடும்புயற் காற்றில் மின்இடி மழையில் 
கலங்கிடும் தருணமே விரைந்து 
கருணையோ டெமெக்கு அபயமே தந்து 
காத்தருள் அடைக்கலம் நீயே” 

என்று பலவாறு பனிமய அன்னையை, கடல் அன்னையோடு இணைத்துப் பாடி, சிந்தாயாத்திரை மாதாவாகச் சிறப்பித்துள்ளனர். 

- அருள்திரு. ஸ்டீபன் கோமஸ் 

ஞானதூதன் இதழ் – ஆகஸ்ட் - 2013 

(இக்கட்டுரையின் ஆசிரியர் தென்கிழக்குக் கடலோர மீனவர்கள் என்று பரதர் அல்லது பரவர் என தற்காலத்தில் அழைக்கப்படும் பரதவர்களைக் குறிக்கிறார்.)
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com