வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 7 August 2018

அகநானூறில் பரதவர்

அகநானூறில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்


பாடல் 280

நெய்தல்


பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப்

பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்,

திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி

அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்,

5

நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும்,

பெறல் அருங்குரையள்ஆயின், அறம் தெரிந்து,

நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு

இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,

பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும்,


10

படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம், இருப்பின்,

தருகுவன்கொல்லோ தானே விரி திரைக்

கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்

தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்

கானல் அம் பெருந் துறைப் #பரதவன் எமக்கே?


தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பட்டுப் போகாநின்றவன் சொல்லியதூஉம் ஆம், - அம்மூவனார்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com