Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

மிக வந். பீட்டர் பர்னாந்து ஆண்டகைக்கு இறுதி அஞ்சலி

கத்தோலிக்க திருச்சபைக்கு முத்துக்குளித்துறை பரதவர்கள் அளித்த மூன்றாம் ஆயரும், முத்துக்குளித்துறை மறைமாவட்டத்தின் ஐந்தாம் ஆயரும், முத்துக்குளித்துறையின் இடிந்தகரை அளித்த இரண்டாம் ஆயருமாகிய மிக. வந். பீட்டர் பர்னாந்து ஆண்டகையவர்கள் இன்று (31.12.2016) காலை இறைவனடி சேர்ந்துவிட்டார்கள். மேமிகு ஆண்டகையவர்களின் இறுதிசடங்குகள் நாளை மறுநாள் (02.01.2017) அன்று காலை 10.00 மணியளவில் முத்துக்குளித்துறை மறைமாவட்ட மேற்றிராசன ஆலயத்தில் நடைபெறும் என்பதை தெரிவிக்கிறோம். 

மேமிகு ஆண்டகையவர்களின் ஆத்துமம் இறைவனின் சன்னதியில் நித்திய இளைப்பாறுதல் அடைய இறைவனிடம் இறைஞ்சும்.......
வேம்பாற்றுவாசிகள் 


ANCIENT INDIAN – ROMAN TRADE IN THE CONTEXT OF BOATS, ROUTES & HARBOURS.

Rare Article Collection

ANCIENT INDIAN – ROMAN TRADE IN THE CONTEXT OF BOATS, ROUTES & HARBOURS.

- Dr. Babita kumari

This paper addresses particular aspects of the mechanics of trade between Rome andIndia,briefly discussing the context, but focusing predominantly on a vital but little knownelement ofthis trade, that is the vessel of trade – the boat

திவ்ய பாலனின் பேரில் புகழ் பாடல்

வருவீர் சோதரர்காள் நமதுபவ
வடுவை ஒழிக்க நிமலன் குழுவியானர் - (வருவீர்)

தொழுவோம் ...ரீ... நாரிய மலரினோடு
உலகத்தியர் துதித்திடவோடு
(உ)வந்து செல்ல - (வருவீர்)

வானோர் தொழுதடி பணி புரவலன்
வறுமையோடு உலகில்
கோனார் குடிலிடை அதிசயமுறு குழவியானார் இரவில்
வானோர்கள் துதிபெற வீடுபெற
வருதிருமரி கருணாகரனாய் வந்தார் - (வருவீர்)

தோகை மயிலாடக் குயில் கூவிட
சுரும்போடு நிமிர்பாட
வாகை விருதுடையவனாரோடு மரியவள் பதம் பரவ
சருவேசன் திரையற வெல்லையினில்
நரருரு தரும வதாரமாயினார். - (வருவீர்)

ROMAN TRADE ROUTES IN SOUTH INDIA

Roman Ship 300 A.D.
Rare Book Collection

ROMAN TRADE ROUTES IN SOUTH INDIA:
GEOGRAPHICAL AND TECHNICAL FACTORS
(C. 1ST CENT. BC - 5TH CENT. AD)

By: JEAN DELOCHE

Download link

இரத்த பூமி - 17


மதுரை நாயக்க அரசின் மறுமொழி ஓலை வந்ததும் கீழக்கரையில் மரைக்காயரோடு குழுமியிருந்த பரதவ, மறவ‌ போர்துகீசியர் கூட்டணிக்கு இந்த செய்தி மீண்டும் கோபத்தை உருவாக்கியது. செல்வ செழிப்பு மிக்க மறக்காயர் இதை பொருட்படுத்தாது விட்டாலும் பரவரும் மறவரும் இதை தன்மானமாக கருதி வெகுண்டெழுந்தார்கள்.

நிதிக்காகவே அநீதியாக பரதவரின் பாரம்பரிய கடலை அபகரிக்க நினைக்கும் நாயக்கனுக்கு பணம் கொடுத்து பணிய மறுத்தனர். போர்துகீசியரோ.. ஒண்ட வந்த இடத்தில் சண்டை செய்ய மனமில்லாமல், சமரசம் செய்ய நினைத்தனர்.

குதிரை மறக்காயர் உரிமையோடு பாண்டியம் பதியிடம் சொன்னது “சின்னையா, கடல் நம்முடையது கடுகளவும் பொய்யில்லை..! ஆனால் இன்று நாம் யார்..? நம்ம பாண்டிபரம்பரை பட்டு போய்விட்டது. நீங்கள் கடலோரம் ஒதுங்கி போய்விட்டீர்கள் இன்னொரு கிளை தென்காசி பொதிகையோடு, புறம் தள்ள‌பட்டு விட்டது

போதாக்குறைக்கு உங்களுக்கு உதவ முடியாமல் உங்க சித்தப்பன்மார் , அதான் எல்லாம் வல்ல அல்லாவை கொண்டாடிய‌ எங்க வாப்பாமார் மதத்தாலே மூர்களுக்கு எங்களையும் முடமாக்கி விட்டார்களே ” என விரக்தியில் விசும்ப...

பாண்டியம் பதி சொன்னார், “ ஐயா..! சின்னையா..!

இது காலத்தால் அழிக்க முடியாதது. அன்றே எம்மில் இருந்து வந்த நீங்கள் இறை அல்லாவை ஏற்றுக் கொண்டது போல இன்றோ எங்கேயோ உதித்த இறை இயேசுவையும் நாங்கள் ஏற்றுக் கொண்டோம். ஆனால் சின்னையா இன்று மட்டுமல்ல எந்த காலத்திலும் நம் இரத்த சொந்தம் பரவனுக்கும் மறவனுக்கும் எங்க சின்னையா மரைக்காயனுக்கும் உள்ள சொந்தம் மறக்காது மறந்தாலும் இரத்தம் மணக்காமல் போகாது. வீண் கவலை வேண்டாம். என்ன செய்யலாம் சொல்லுங்கள் ” என ஒருமித்த குரலில் பரவரும் மறவரும் மரைகாயர் சகோதரர்களை தேற்றும் படி திட்டவட்டமாக கேட்டனர்.

உடன்பிறந்தோரின் உணர்வுபூர்வமான உரை கேட்ட மரைக்காயர் சொன்னார். “காலத்தின் கட்டாயத்தால் பாரம்பரிய கடல் தாய் அள்ளி தந்த அனைத்து செல்வங்களுமே பாண்டிய பரம்பரை நம் கைகளுக்குள் உள்ளது. இதை பற்றி கவலை வேண்டாம், இதை நானே பார்த்து கொள்கிறேன்.” என்றார்.

மரைக்காயரின் உரிமையான மொழி கேட்டு உணர்ச்சி வசப்பட்ட பாண்டியம்பதி. “ஏற்கனவே எமக்காக மரைக்காயர் சகோதரர்கள் பட்ட துன்பங்கள் போதும் அதுமட்டுமல்ல நாயக்க அரசுக்கு கடல் சார்ந்த வரி தெறி ஆனவற்றை மரைக்கயர் செலுத்துவது கடலோடு இனைந்த‌ பரதவர் எமக்கு உறுத்தலானது.பெரும் மனத்துடன் இதை பொறுத்து கொள்வீராக,

பரதவர் சார்ந்த பரதவரின் போர்துகீசிய அரசு இதனை செவ்வனவே செய்து முடிக்கும், இதற்க்காக நீங்கள் கவலை பட வேண்டாம் ”என மறுமொழி பகர்ந்தார் பாண்டியம்பதி. ஆனால் கூட்டமே போர்துக்கிசியரின் பதிலுரைக்காக காத்திருந்த போது போர்துகீசிய கேப்டன் கில் ப‌ர்னான்டஸ் டி கார்வெல்கோவும், தளபதி கோயல் கோவும் எதுமே பேசாமல் மெளனித்திருந்தனர்.

மெளனத்தின் அர்த்தத்தை உணர்ந்த மறவ தலைவர் பதற்ற‌த்தோடு “கேப்டனும் தளபதியும் பேசாதிருப்பது வேதனை தருகிறது. தாங்கள் செய்ய வேண்டியதை சொல்ல வேண்டியததை சொல்லுங்கள்” என அவசரபட்டு அவசரபடுத்தினார். மெளனம் கலைத்த கார்வெல்கோ கூறியது, “மன்னிக்க வேண்டும், இதற்கான முடிவை எங்களால் உடனடியாக எடுக்க முடியாது, காரணமும் கூற முடியாது.

எங்களிடையே பரதவர்களின் செல்வங்கள் அனைத்தும் வரியாக தெரியாக மதத்திற்கான கொடையாக ஒப்படைக்க பட்டாலும் அதற்கான வழிமுறைகள் கொச்சின் போர்துகீசிய தலைமை கோட்டையில் இருந்தும் லிஸ்பன் மாநகரத்து மாமன்னனின் ஆனையின்படியே செயல்படுத்த முடியும் ” என திக்கி திணறி பதில் கூற,

வீராவேசமான வீரபாண்டியனார், “நாயக்க அரசு வாளெடுத்து எம் தலைகளை கொய்த போதும் யாமறியா விஞ்ஞான விபரீத‌ துப்பாக்கி வெடிகுண்டுகளால் எம் இனத்தை சிதைத்த போதும் கடலையும் விடாது, கடற்புரத்தையும் பகைவர் தொடாது காத்தோம். காப்பதற்காகவே உம்மை தொடர்ந்தோம் உம் மதத்தையும் ஏற்று மறுப‌டியும் கடலை மீட்டெடுத்தோம்

செய் நன்றிகாக இன்று வரை செந்நீரை சிந்தி வருகிறோம் ஆனாலும் தங்களின் மேலாண்மை மிக்க அதிகாரம் இந்த பாமர‌ பரதவனின் மானம் காக்க‌ வழிமுறை விதிமுறை கூறும் போது வெட்கித்து போகிறோம்” என கூறியபடி... கண நேரத்தில் முடிவெடுத்த வீரபாண்டியனார், புரஞ்சேரனாரை அழைத்து மட மடவென்று மடல் ஓலை ஒன்றை வரைந்து, கொற்கை கோவிடம் அளிக்க அவசரகதியாய் அனுப்பி வைத்தார்.

ஓரிரு நாட்களிலே பரதவ கடலோரம் எங்கும் பணம் திரட்டப்பட்டு அது தன்மானத்துடன் மரைக்காயர் மூலம் நாயக்க அரசுக்கு செலுத்தபட்டது. குறிப்பிட்ட நாளென்று முத்து நகர் கல் மண்டபத்திலே சிறைபிடிக்கபட்ட பிணையாளர்களை மீட்டெடுப்பதற்கான பரத மறவ போர்துக்கீசிய கூட்டமைப்பு ஒன்று கூடியது. பாண்டியம்பதி பட்டங்கட்டிமார், மறவ படையோடு, போர்த்துக்கீசியரும் காத்திருக்க பெரும்படையோடு வந்த விதாலன் அனைவரையும் ஒப்படைத்ததோடு போர்த்துக்கீசியர் இருக்க பரதவத் தலைவனைக் கட்டி தழுவிக்கொண்டான்.

பரதவத் தலைவனின் காதுகளிலே "நாம் இங்கே பிறந்த அண்ணன் தம்பிகள் பரங்கியரை மட்டும் நம்பாதே பாண்டியரே. உன்னை தனிமையில் சந்திக்கிறேன்" என்று பாசாங்காய் பாசத்தை பறிமாறினான். ஆனால் கர்மவீரன் காத்தவராயன் கைதிகளின் வரிசையில் இல்லாததைக் கண்ட பாண்டியனார் பதட்டமானார். "என் பிள்ளை காத்தவராயன் எங்கே ?" என அடக்க முடியாமல் அலறியபோது பினைக்கைதிகளின் வரிசையில் நின்ற‌ தூயத்தந்தை ஓலமிட்டு அழுதார்.

ஒன்றும் புரியாத வீரபாண்டியனார் "எம்குலம் காக்கும் புண்ணிய சாமியே..! புலிமறவன் காத்தவராயன் எங்கபோனான் சாமி" என தூயதந்தையை நோக்கி கேட்க ... தூய தந்தை பதிலுரைக்காது இன்னும் இன்னும் தேம்பி அழ‌‌...

இறுக்கமான மனதுடனே நாயக்கப்படை நா திறக்காது மெளனித்திருந்தது. அந்த மெளனமே மீண்டும் மீண்டும் பாண்டியருக்கு அச்சத்தையும் மட்டிலடங்கா சோகத்தையும் அதன் உள்ளூரான கோபத்தையும் கனலாய் உருவாக்கி வெடித்தது. "காத்தவராயனின் உடல் நிலை காரணமாக உரிய மருத்துவ சிகிச்சையில் உள்ளார், பரதவ தலைவரே நேரில் க‌ண்டு விசாரிக்கலாம்".

பதட்டமே இல்லாமல் பவித்திரமாய் விதாலன் பதில் பகர்ந்த்தான். ஆனால் பினையாளியாக இருந்து பரதவரின் போராட்டதாலும் பணத்தாலும் மீட்டெடுக்கப்பட்டு வந்த கேப்டன் கொட்டின் கோ போர்த்துகீசிய பாக்ஷையிலே “நம்பாதே ஏதோ சதி இருக்கிறது காத்தவராயன் இருக்கிறானா..? என்பதே சந்தேகமாய் இருக்கிறது ” என்று சொல்ல‌.

அதிர்ச்சியை தாங்கமுடியாத தலைவன் ஆக்ரோக்ஷமாய் கூச்சலிட்டார். போர் தர்மம் தெரியாதவர்களிடம் போரிட்டு என்ன இலாபம்? உயிரின் உன்னதம் அறியாத உன்மத்தனிடம் உண்மையை எதிர்பார்பதால் என்ன பலன்?...

"விதாலா..! பரதவரின் வீரம் வீணாகிப் போனதோ? பாண்டிய வம்சம் பாழாகி போனதோ? மண்ணாசை கொண்ட மன்னர்கள் மாந்தர்களை வதைத்தாலும் கடலரசர் எம்மை கடுகளவும் கரைக்கமுடியாது. காத்தவராயனின் உயிர் என்பது ஓராயிரம் பரதவரின் வீரமாகும். மறந்துவிடாதே பரதகுலம் என்றுமே மன்னிக்காது."

அதற்க்கு படைசூழ் விதாலன் "பாண்டியரே! அதிகமாக பேசாதீர். இந்த நாடு எமக்கு சொந்தம் விஜயனகர் பேரரசு இதன் வளங்களும் நாயக்கர் எமக்கு சொந்தம். மாதத்திற்கு நான்குமுறை எமக்கான‌ கொடையை செலுத்திய நீங்கள் தப்பிப்பதற்காக் காலங்காலமாக கொண்டாடிய தெய்வங்களை விட்டுக்கொடுத்தவர் நீங்கள்.

உங்கள் பாரம்பரிய மரபை உதறி தள்ளி உதவாக்கரைகளுக்கு உதவியவர்கள் நீங்கள். உங்களுக்கு வீரத்தையும் விவேகத்தையும் பேசுவதற்க்கு தகுதியிருக்கிறதா?" ஆக்ரோக்ஷக் கூச்சலிட்ட பாண்டியர் உடன்படிக்கைக்கான‌ உடன்பாட்டு கூட்டம் என்பதையும் மறந்து ஆணவத்தோடு விதாலனை நோக்கி பாய்ந்தார். அவருக்கு முன்பே விதாலனை நோக்கி பாய்ந்த மறவர்களை சபையினரே கெட்டிபிடித்து வெளியேற்றினர்.

நாயக்கரிடமிருந்து உயிர்பிழைக்க நினைத்த போர்த்துக்கீசியர்கள் பரதவதலைவனின் ஆவேசத்தை உணர்ந்தாலும் சுற்றி சூழ் பகைவரிடமிருந்து தப்பிப்பதற்காக பேசாது மௌனமாயிருந்தன‌ர். போர்த்துகீசிய தலைவர்களும் மறவகுல தலைவர்களும் நிலைமை தடுமாறுவதை உணர்ந்தப்படி பரதவரின் சார்பாக மேற்க்கத்தியான் புரஞ்சேரானாரை காத்தவராயனை காண அனுப்பி வைத்தனர்.


..............................

…. கடல் புரத்தான் ….

கடலும் கலமும்



















திவ்ய பாலனின் பேரில் புகழ் பாடல்

ஆதிகர்த்தர் எம்மைமீட்கப் பூதலத்தில் மீதிலே
ஓதுபெத்தலெம் புரியிலே தீது வெல்லைக் கிரியிலே
பாதி நள்ளிராவிலே பழைய மாட்டுக் குடிலிலே
பாலனாகக் கோலம் சொரிந்து பாரில் மனிதனாப் பிறந்து
சீலராக எம்மைப் புரந்து சிலுவை ஏறிக் கதியைத் திறந்தாயே

வானவர்கணங்கள் கூடி ஞானகீதம் பாடவே
ஈன அலகை வாடவே கோனர் பணிந்தேகவே
தீனதயாளர் நீடவே தீதகன்று ஓடவே
திகழும் மரியின் பாலனாக திருக் கண்ணோக்கும் சீலனாக
இகலில் மனுவேலனாக எமக்கென்றும் அனுகூலனாகவே

தாதை சூசையும் தாலாட்ட தாய்மரி பாலூட்டவே
மேதையோர்கள் போற்றவே சோதி வுடுத்தோன்றவே
சீதமலர் சாற்றவே சிறுபனித் தூற்றவே
செய்யப்பாலன் ஐயோ அழுது செகத்தை மீட்கும் நாள் இப்போழுது
துய்யமலர் தாளே தொழுது தோத்தரிப்போம் எப்பொழுதுமே

அண்டசாரசர மனைத்தும் உண்டுபண்ணும் கர்த்தனே
மண்டலத்தின் சுத்தனே அண்டர்பணி அத்தனே
மானிடதேகம் எடுத்தோனே
மாசில்லாமல் உற்பவித்து நேசத்தாய் வயிற்றுதித்து
சேசுவென்னும் பெயர் தரித்து செகத்தை மீட்டுப் பாதுகாத்தாயே

திவ்ய பாலனின் பேரில் புகழ் பாடல்

வேம்பாறு சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ அவர்களின் 

எழுத்தோவியத்தில் உருவாகிய திவ்ய பாலனின் பேரில் புகழ் பாடல் 




திரிலோக நாத தெய்வீகா

திவ்ய பாலன் ஆனீரோ



தேவசுரும் மேவு நரரும்

பாவிசைகளால் கூறவே

காவில் ஏவை செய்த பாவக்

கசடனைத்தும் தீரவே


வாச மெய்யதவா சூசை மாமுனி

ஆசையுற்றுத் தாலாட்டவே

மாசில்லாத தேவதாயார்

மகிழ்ந்தே அமுதூட்டவே


வெல்லை மலையில் அல்லிராவினில்

புல்லணைப் பசு மேடையில்

நல்லிடையர்கள் கண்டு போற்ற

நலிந்தே குளிர் வாடையில்


மின்னுமாமுடி மன்னர் மூவர்கள்

துன்னி வந்தடி போற்றவே

உன்னும் சவியேர் இஞ்ஞாசி துதி

பண்ணும் கவிகள் சாற்றவே

THE ECO BIOLOGY OF THE INDIAN PEARL OYSTER

Rare Book Collection

STUDIES ON THE ECO BIOLOGY OF THE
INDIAN PEARL OYSTER, Pinctada fucata
(GOULD)

By
T. S. VELAYUDHAN
Dept. Of Marine Biology, Microbiology and Biochemistry
School of Marine Sciences
Cochin University of Science and Technology
Cochin-682 016

Download Link

Caesar Frederic on Pearl fishing — 1600 AD


Caesar Frederick the celebrated Merchant of Venice, like Marco Polo had left detailed notes on the pearl fishery of the Gulf of Mannar.

What Marco Polo wrote on the pearl fishery was already covered in one of our earlier notes. The Pearl fishing spot, he describes, refers to KILAKKARAI, according to Bishop Caldwell. But the observations of Caesar Frederic relate to the pearl fishing at KAYAL or PUNNAIKAYAL.

Caesar Frederic spent eighteen years in India between 1563 and 1581 and his visit to Tinnevely and the scene of pearl fishery is generally deemed to be 1563 — period of Portuguese domination in the eastern coast.

His report is so detailed and graphic that any attempt to tamper it by abridging or expanding would be a great disservice to the pleasures of the readers. Hence , here it is, as it was penned by Caesar Frederic– but of course as translated in English.

“The sea along the coast which extends from Cape Comarin to the low land of Kayal and the island of ZEILLAN (Ceylon) is called the pearl Fishery. This fishery is made every year beginning in March or April, and lasts fifty days. The fishery is by no means made every year at one place, but one year at one place and another year at another place: all however in the same sea.

When the fishing season approaches, some good divers are sent to discover where the greatest quantity of oysters are to be found under water; and then directly facing that place which is chosen for the fishery, a village with a number of houses, and a bazzar, all of stone, is built, which stands as long as the fishery lasts, and is amply supplied with all necessaries. Sometimes, it happens, near places already inhabited, and at other times at a distance from any habitations.

The fishers or divers are all Christians of the country, (Parawa converts) and all are permitted to engage in this fishery, on payment of certain duties to the King of Portugal and to the churches of the Friars of St. Paul on that coast.
Happening to be there, one year, in my peregrinations, I saw the order used in fishing which is as follows ;-

“During the continuance of the fishery, there are always three or four armed foists or galliots stationed to defend the fishermen from pirates.

Usually the fishing boats unite in companies of three or four together. These boats resemble our Pilot boats at Venice, but are somewhat smaller, having seven or eight men in each.

I have seen of a morning ,a great number of these boats go out to fish , anchoring in 15 or 18 fathoms water, which is the ordinary depth along the coast.

When at anchor, they cast a rope into the sea, having a great stone at one end. Then a man having his ears well stopped, and his body anointed with oil, and a basket hanging to his neck or under his left arm, goes down to the bottom of the sea along the rope, and fills his basket with oysters as fast as he can. When that is full, he shakes the rope, and his companions draw him up with the basket. The divers follow each other in succession in this manner till the boat is loaded with oysters and they return at evening to the fishing village. Then each boat or company makes their heaps of oysters at some distance from each other, so that a long row of great heaps of oysters are seen piled along the shore. These are not touched till the fishing is over, when each company sits down beside its own heap, and falls to opening the oysters which is now easy, as the fish within are all dead and dry. If every oyster had pearls it would be a profitable occupation but there are many which have none.

There are certain persons called Chittnis ( Chetty)who are learned in pearls. And are employed to sort and value them, according to weight, beauty, and goodness dividing them into four sorts.

The first sort which are round are named AIA of Portugal as they are bought by the Portuguese.

The second sort which are not round are named AIA of Bengal.

The third which are inferior to the second, are called AIA of Canara which is the name of the kingdom of Bijnagar or Narasinga into which they are sold.(VIjayanagar)

The Fourth or the lowest kind, is called AIA of Cambaia, being sold into the country.

Thus sorted, and prices fixed to each, there are merchants from all countries ready with their money, so that in a few days all the pearls are bought up according to their goodness and weight.

Commenting on this report of Caesar Frederic , The Census report of Tinnevely Census three hundred years later said

“The description of the pearl fishery of Caesar Frederic is applicable to the method of procedure at the present day, as when it was written nearly 300 years ago , except that from some causes but little understood, the banks of recent years have unfortunately ceased to furnish a supply of the valuable oysters yielding the pearl of commerce.”

Commenting on AIA –term used in classification of the pearl, Bishop Caldwell would say as follows;-

‘’It is not clear what word was meant by AIA.
HAYA, horse was the title of the eight varieties of pearls sent by King DEVENIPITISSA in BC 306 to King ASOKA.(Emerson Tennents Ceylon.)
Each of Caesar Frederic’s varieties, however was called The AIA of such and such Kingdom.

Can the ordinary word AYA—Ayam –meaning Tax – have been intended?
This is the impression of the Tuticorin traders as they pay the tax to the Portuguese ; and it was paid in pearls.”

Is there any one to throw more light on this?

Our next, on Pearl fishing will be ” PEARL FISHING IN 1700 –The Dutch Period ’’ as told by the Jesuit Fr. Martin.

- A.X Alexander

எரித்ரேயக் கடலில் பெரிப்ளசு(ஸ்) நூல் கூறும் பரதவரின் வணிகம்


“காட்டுமிராண்டி நிலையிலிருந்து கிரேக்கர்கள் எழுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தும் பழம்பெரும் இந்தியாவும் பாரசீக வளைகுடாவைத் தங்கள் வணிகத்திற்கான மையமாகக்கொண்டு, வணிகப் பொருட்களை வாங்க, விற்க ஒரு வணிகமுறையை உருவாக்கிக் கொண்டனர் என்பதோடு அவர்கள் அன்றே ஆப்பிரிக்காவோடும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். 

இந்தியாவில் (தமிழகத்தில்) உருவாகியிருந்த வளர்ந்த நாகரிகம் தம் சொந்த கப்பல் போக்குவரத்து மூலம் இந்த வணிகத்தை சாத்தியமாக்கியிருந்தது” என எரித்ரேயக்கடலில் பெரிப்ளசு(ஸ்) என்கிற கிரேக்க நூலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பின் முன்னுரையில், புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் திரு.சு(ஸ்)காப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(SOURCE ; THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF Page.3 ) கிப்பாலசு(ஸ்) (Hippalus) அவர்கள் பருவக்காற்றை கடல் பயணத்திற்கு பயன்படுத்தும் முறையை கண்டுபிடிப்பதற்கு பலநூறு நூற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழர்களும் (திராவிடியர்களும்), அரேபியர்களும் பருவக்காற்றை பயன்படுத்தி கடல் பயணம் செய்து கொண்டிருந்தனர் என்கிறார் சு(ஸ்)காப் அவர்கள்.

கென்னடி என்கிற மற்றொரு வரலாற்று ஆய்வாளர் தனது கட்டுரை ஒன்றில் (Journal of the royal asiyatic society 1898-pp;248-287), இதனை ஏற்றுக் கொண்டாலும் கி.மு. 7ஆம் நூற்றாண்டில் இருந்துதான், இந்திய - பாபிலோனிய வர்த்தகம் மிகப்பெரிய அளவில் திராவிடர்களாலும், சிறிய அளவில் ஆரியர்களாலும் நன்கு செழித்து வளர்ந்தது எனக் கொள்கிறார். 

இந்திய வணிகர்கள் அரேபிய, கிழக்கு ஆப்ரிக்கா, பாபிலோனியா, சீனா போன்ற இடங்களில் தங்கி வணிகம் புரிந்தனர் என்றும் குறிப்பிடுவதாக சு(ஸ்)காப் அவர்கள் தெரிவிக்கிறார்.

இதனை மறுத்து மிக நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே, கடல் வணிகம் நடந்து வந்ததை பேசவந்த சு(ஸ்)காப் அவர்கள், ஏழரா (eeEZRA) அவர்கள் யூதர்களின் பண்டைய வேத நூலை மறுபதிப்பு செய்ததன் காரணமாகவே (ஏழரா என்பவர் யூதர்களின் முக்கிய மதகுரு ஆவார். அவரால் பண்டைய எபிரேய சமய வழிபாட்டு நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டன. அதனால் அந்நூல் அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. அவருடைய காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு ஆகும்).

இந்த பண்டைய வணிகக் குறிப்புகள் இடம் பெறுகின்றன எனக்கருதி, கென்னடி அவர்கள் பண்டைய எகிப்திய வணிகத்தை மறுதலிக்கிறார் என்றும், ஆனால் பண்டைய எகிப்திய ஆவணங்களில், இந்திய மூலம் கொண்ட பொருட்கள் என்ன குறிப்பிடப்பட்டு உள்ளனவோ, அதே பொருட்கள்தான் ஏழராவின் மறுபதிப்பிலும் இடம்பெறுகின்றன என்கிறார். 

ஆகவே ஏழராவின் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்திய மூலம்கொண்ட வணிகப் பொருட்கள் சோமாலிய கடற்கரைக்கும், நைல் நதிக்கும் அப்பால் விற்கப்பட்டு வந்த ஒரு வணிகம், நடைபெற்று வந்துள்ளது என்பதே உண்மை என்கிறார்.

மேலும் நாகரிக வளர்ச்சி பெறா மிகப்பழங்காலத்தில் ஒரு பழங்குடியினரிடமிருந்து மற்றொரு பழங்குடியினருக்கும், ஒரு கடற்துறை நகரிலிருந்து பிறிதொரு கடற்துறைக்குமாக வணிகம் நடைபெற்றது என்கிறார். (SOURCE ; THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF Page.227,228 )

ஆக திரு. சு(ஸ்)காப் அவர்களின் கூற்றுப்படி கி.மு. 7 ஆம் நூற்றாண்டுக்கு மிக நீண்டகாலம் முன்பிருந்தே தமிழர்கள், அரேபியர்கள் மூலம் மெசபடோமியப் பகுதிகளுக்கும், கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும், எகிப்துக்கும், பாலஸ்தீனத்துக்கும், கிழக்கே சீனா வரையிலும் வணிகம் செய்து வந்தனர் எனலாம்.

திரு.சு(ஸ்)காப் அவர்களுடைய “எரித்ரேயக் கடலில் பெரிப்ளசு(ஸ்)” என்ற ஆங்கில நூல் மொத்தம் 325 பக்கங்களைக் கொண்டுள்ளது. அதில் பெரிப்ளசு(ஸ்) அவர்களுடைய மூல நூலின் பக்கங்கள் 28 ஆகும்.(பக்:22-49). மீதி உள்ள பக்கங்களில் 234 பக்கங்கள்(பக்:50-283), சு(ஸ்)காப் அவர்களின் விரிவான விளக்கக் குறிப்புகளைக் கொண்டவை.

பண்டைய தமிழகத் துறைமுகங்கள், நகரங்கள், வணிகப்பொருட்கள் பற்றி மட்டும் 40 பக்கங்கள்(பக்:203-242) உள்ளன. பெரிப்ளசு(ஸ்) காலத்தில் இருந்த நாடுகள், நகரங்கள், வணிகப் பொருட்கள் குறித்த முழுமையான வரலாறுகளையும், நிலவியல் தரவுகளையும், இன்ன பிறவற்றையும் திரு.சு(ஸ்)காப் அவர்கள் நன்கு அறிந்து கொண்டுதான் விளக்கக் குறிப்புகளை அளித்துள்ளார்.

தமிழகம் குறித்து பல்வேறு நூல்களை நன்கு படித்து, ஆழ்ந்து புரிந்து கொண்டு எழுதியுள்ளார். பொதுவாக அவரது இந்த நூல், பண்டைய காலத்திய கடல் வாணிகம் குறித்த, மிக முக்கியமான அதிகாரபூர்வமான ஆவணம் எனலாம்.

பிளினி, சு(ஸ்)ட்ராபோ, டாலமி போன்ற பண்டைய நூலாசிரியர்களை மட்டுமல்லாது வின்சென்ட் சு(ஸ்)மித், சு(ஸ்)வெல், கென்னடி போன்ற நவீன வரலாற்று ஆசிரியர்களையும் நன்கு ஆழ்ந்து படித்தே விளக்கக் குறிப்புகளை திரு. சு(ஸ்)காப் எழுதி உள்ளார்.

எகிப்தில் கோலோச்சிய தமிழ் பரதவர் - 2

கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் எகிப்தில் வாழ்ந்தனர். “Comparison of Badalian and primitive Indian Races" என்ற நூலில் பிரெந்தர் ஸ்தொதியார் என்ற ஆய்வாளர், 1927ல் எகிப்தில் தோண்டியெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையவை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

நீல நதி என அழைக்கப்பட்டு பின்னர் பெயர் திரிந்ததே இன்றைய நைல் நதியாகும். தமிழர்கள் நீல நதி என்று அழைத்ததை அப்படியே NILO (நீலோ) என இத்தாலியிலும், அதை NILE (நைல்) என்று ஆங்கிலத்திலும் சொல்லப்படுகிறது. எனவே நைல் நதி என்பதும் ஒரு தமிழ் வார்த்தை தான். இதனை ஒக்ரான் (Autran) என்ற ஆய்வாளர் நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என்ற கருத்துடன் உறுதிபடுத்துகிறார்.

Edward pokoke (1604-1691) என்ற ஆய்வாளர், Indian in Greece என்ற நூலில் சிந்து சமவெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனமக்கள், அவர்கள் சிந்து வெளிப் பகுதியிலிருந்து, பெர்சிய வளைகுடாவைக் கடந்து Oman, Hadramont, Yeman கரை வழியாக எகிப்து, நபியா, அபிசினியா பகுதியில் பரவினர் என்கிறார். சிந்து சமவெளி பகுதியிலும் தமிழ் நாகரிகம் இருந்ததற்கான பல ஆதாரங்கள் உள்ளது....

Adolf Erkman (1854-1937) Life in ancient Egypt என்ற நூலில் பாண்டிய நாட்டவர்கள் (தமிழர்கள்) எகிப்தில் பரவி எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்கிறார்.

Asiatic researchers (vol.III.1702) வெளிவந்த கட்டுரையில் British Lt.colonel wilford, பல சான்றுகளைக் காட்டி, பழங்கால தமிழர்கள் எகிப்தில் குடியேறியதைத் தங்கள் குடியேற்ற நாடாக்கினர் என்கிறார்.

"Heinrich Kari Brugsh" - "History of Egypt" என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் குடியேறி தங்கள் கலை மற்ற உன்னத நாகரிகத்தை அங்கு நிலை நாட்டினர்.

இதே கருத்தை Bengsch Bey என்ற எகிப்திய வரலாற்றாசிரியரும் கூறுகிறார்.

“எகிப்து நாகரிகம் பண்டைய தமிழர் நாகரிகம் என்பது ஐயத்திற்கு இடமின்றி தெரிகிறது, என்கிறார். Louis Jacolliot (1837 - 1890) என்ற பிரஞ்சுக்காரர் Bible dane l"Inde)

LIliane Hornbergar என்ற பிரஞ்சு அறிஞர் “எகிப்தின் முதல் வமிசத்து மன்னன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்த தமிழர்” என்கிறார்.

எகிப்து நாகரிகத்தின் முதல் ஐந்து ஆள்குடி (dynasty) மன்னர்களின் பிள்ளைப்பருவப் பெயர்கள் அத்தனையும் தமிழே. எகிப்து நாகரிகத்தை தமிழரே தோற்றுவித்ததாக விவேகானந்தர் கூறியுள்ளார்.

சிங்க உடலும் மனிதத் தலையும் உடைய வடிவம் பெருமிடுகளிலும் தமிழகக் கோயில்களிலும் காணப்படுகின்றன. திருவாதவூரில் தனிச் சிற்பமே வழிபாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

கி.மு.4000 ஆம் வரையில் எகிப்து-பண்டு இடையே நோவா காலம் தொடர்ந்தும் (கி.மு.2400) கப்பற் பயணங்கள் நடந்திருப்பதை பொறிக்கப்பட்டிருக்கும் எகிப்தியச் சின்னங்கள் தெரிவிக்கின்றன. எகிப்திலிருந்து நோவா என்பவர் கட்டிய கப்பல் கூட பண்டு (பாண்டியர்) நாட்டிற்காகச் செய்தவையாகும். இவை பற்றிய விபரங்களை முதலில் பட எழுத்துகளிலிருந்து மொழி பெயர்த்து ஹென்றிபுரோசு என்பவர் வெளியிட்டார். குமரித் தமிழர்கள் நிலப்பகுதிகள் கடலில் மூழ்க பல இடங்களுக்குக் குடிபெயர்ந்தனர்.

சுமேரியர்களை முன்னோடிகளாகக் கொண்டு மத்தியத் தரைக்கடல் கிழக்குப் பகுதியில் பனைமரங்களடர்ந்த இடங்களில் கோட்டை, கொத்தளம் அமைத்துப் பெரும் வணிகர்களாக வாழ்ந்த கடலாடிப் பகற்பரதவத் தமிழர் வழியினரே பொனீசியர். அவர் வழி வந்தவர்களே பிரிட்டானியர்.

...............(தொடரும்).............

அகநானூறு கூறும் பரதவரின் பாரம்பரிய மணமுறை


இன்று வரை கடற்கரை மீனவர் மத்தியில் தன் வீட்டு பெண்ணை ஆடவன் ஒருவனுக்கு மணமுடித்து கொடுப்பதற்கு முன்பு அவன் கடல்தொழில் நன்கு தெரிந்தவனா? வாடையிலும் கோடையிலும் தொழில் செய்து குடும்பத்தை காப்பற்றுவானா? என்று அறிந்து கொள்வதற்கு சிறிது காலம் தங்களோடு கடல் தொழில் செய்து அவனது திறமையை அறிந்து கொண்ட பின்னரே தன் வீட்டு பெண்ணை அவனுக்கு மணம் முடிக்க ஒத்துகொள்வர். இது நமது ஆதி பரதவர் வழி வந்த பாரம்பரிய மணமுறை என்பதனை இந்த அகநானுற்று பாடலிலே சங்க கால புலவர் அம்மூவனார் எடுத்து இயம்பியுள்ளார் .

செய்யுள் :

பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப்

பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்,

திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி

அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்,

நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும்,

பெறல் அருங்குரையள்ஆயின், அறம் தெரிந்து,

நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு

இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,

பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும்,

படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம், இருப்பின்,

தருகுவன்கொல்லோ தானே விரி திரைக்

கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்

தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்

கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே?

அகநானூறு  - 280


பொன்னன்ன செருந்தியொடு பன்மலரும் விரவி முடித்துக் கவினெலாம் திரண்ட கார் குழலாள்; ஆய்ந்த தொடியினை அணிந்த தலைமகள்; அடர்ந்த மணற்பரப்பின் தலைவன் மகள்.

கிடைப்பதற்கு அரிய, பொருளும், அணிகலன்களும் எவ்வளவுதான் அளித்தாலும் அவளை நமக்கு மணம் செய்து தரமாட்டான்; நமது ஊரைத் துறந்து அவனை அடைந்துவிட வேண்டியதுதான்;

அவனை சார்ந்து, பெரிய கடற்கரையின் கண்ணுள்ள அவனது உப்பளத்திற் சென்று ஆங்கு உழைத்தும், அவனது உப்புப் பொதியுடன் திருந்தி வருந்தியும்,

பெரிய அழ்கடலின்கண் அவனுக்காகக் கட்டுமரத்தில் சென்று மீன் வேட்டையாடி உழைத்தும், அவன் வயமாகித் தாழ்ந்தும், பணிந்தும், சூழ்ந்து தொண்டாற்றியும் வரின்,

பரந்த அலைகடலின் சிறந்த முத்தையெலாம் அள்ளிக் கரையில் குவித்துப் பங்கீடு செய்யும் நிறைந்த செல்வன்; சோலை சூழ்ந்த எழில்மிகு துறைக்குத் தலைவனான அவள் தந்தை .

அறநெறியினை உணர்ந்து, மனங்கனிந்து அப்பொழுதாவது தன் மகளை எனக்கு தரமாட்டானா ? தருவன்! இது உறுதி? " என முடிவு செய்கிறான்; அவ்வாறே செய்து இறுதியில் அவளை மனைவியாய்ப் பெற்று மனையறம் புரிந்து மகிழ்ந்து வாழ்கிறான்.

திவ்ய பாலனின் பேரில் புகழ் பாடல்


வேம்பாறு சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ அவர்களின் 



எழுத்தோவியத்தில் உருவாகிய திவ்ய பாலனின் பேரில் புகழ் பாடல் 


வினை தீர்க்க வந்தவனே
இனிதாய் புவிதனிலே - ஆ ஆ ஆ

பாதிராவினிலே காவில் ஏழையுருவாய் எழுந்த நாதா
பரம கிருபாகரன் எனும் வேதா
பாக்யனே சிலாக்கிய பொற்பாதா - எமது வினை

இராஜராஜர்களும் போற்றிப் புகழ்ந்து தினம் வாழ்த்திடும் அனுகூலா
வானவர்கள் தோத்தரித்திடும் சீலா
நரர்கள் எமை மீட்டிடும் மனுவேலா - எமது வினை

பரதகுல பாண்டியர் பழமை

Rare Book Collection

பரதகுல பாண்டியர் பழமை

by: ஜெ.லேயோ சிம்மராய பரத பண்டிதர்

1892




Download Link - I

Download Link - II

பன்மீன் கூட்டம் - பாகம் 6


கெண்டை

454. கூராக் கெண்டை
455. பால் கெண்டை
456. கோலா கெண்டை
457. துள்ளு கெண்டை
458. மாராங் கெண்டை
459. மூரன் கெண்டை
460. செவ்வாய்க் கெண்டை
461. வெள்ளிக் கெண்டை
462. முண்டு கெண்டை
463. கௌக்கி
464. கேரா மீன் (கேரை) (ரத்தச்சிவப்பு சதை, பன்றிபோல தோல் உண்டு.)
465. கேலம் (கொம்பன்சுறாவின் இன்னொருபெயர்)
466. கைக்கொளுவை
467. கொய்மீன் (நுணலை)

கொடுவா (பைனி)

468. நரிக் கொடுவா
469. கொறுக்கைக் கொடுவா,
470. கொடுவை
471. கொப்பரக்குல்லா (கறுப்புநிறம், தளப்பத்து மீனைவிட நீளம் அதிகம், தலையில் சிறுதூவி உண்டு)
472. கொறுக்கை
473. கொள்ளுக் களவாய்
474. கொட்டிலி
475. கொப்பரன்
476. கொடும்புளி
477. கொண்டான் பிலால் (சுறா)
478. கொண்டை செவ்வாளை
479. கொண்டல் (கண்டல்)
480. கொதளிக்குட்டி (விளமீனில் சிறியது, தூண்டிலில் சிக்குவது, ஆடாங் கொதளி)
481. கொதலி
482. கொங்கணியான்
483. கொழஞ்சான் (ஓலைபோல வதங்கி விழும். முள் அதிகம், நாள்பட்ட மீன்போலத் தோன்றினாலும் குழம்பில் போட்டால் சுவையாக இருக்கும்)
484. கொடும்புலி
485. கோழிமீன் (முள் உள்ள மீன்)
486. கோலா,
487. கோளை
488. கோலக் கீச்சான்
489. கோழியான் அவரை
490. கோவாஞ்சி (கோவிஞ்சி)
491. கோப்பையன்
492. கௌக்கி
493. கெடுத்தல் (முள் உள்ளது)
494. கௌவாலன்
495. சடையன்
496. சஞ்சோன்
497. சட்டித்தலையன்
498. சங்கரா
499. சண்டுமணலை
500. சலம்தின்னி
501. சம்பான்
502. சலவாழைக்காய்
503. சவரன்
504. சரமீன்
505. சரள்
506. சவளம்
507. சல்லி
508. சதை மீன்
509. சள்ளை மீன் (பரடி மீன், செல்வேல்)
510. சப்பரே
511. சாத்தான்
512. சாத்தானி மிடாக்கா

சாளை

513. ஒழுகு சாளை
514. பூச்சாளை (தலை முதல் வால்வரை ஒரே அளவாக இருக்கும்)
515. பேச்சாளை (சிறிய வால், எண்ணெய் நாற்றம் உள்ள மீன்)
516. கறுப்புச்சாளை (நச்சாளை)
517. கன்னஞ்சாளை
518. பறவைச் சாளை (பரவை சாளை)
519. செவிட்டுச் சாளை
520. மாங்காய்ச்சாளை
521. கீரிமீன் சாளை
522. தடிக்கீரி சாளை
523. கொழுவச் சாளை
524. கொழி சாளை
525. தொழுவன் சாளை
526. ஊசிச்சாளை
527. வட்டச்சாளை (சூடை)
528. மேலா சாளை (சாளையில் பெரியது)
529. சாவாளை (அருகி விட்ட மீன்)
530. சாரல்
531. சிரையா
532. சிங்கானா
533. சிலந்தன்
534. சிமிழி
535. சீந்தி
536. மஞ்சள் சீந்தி
537. சீத்தலா
538. சீப்பு மீன்
539. சீப்புத் திரட்டை
540. சீனாவாரை, சீடை

சீலா

541. கட்டிச் சீலா
542. மானா சீலா
543. நெடுஞ்சீலா
544. நெட்டையன் சீலா (அறுக்குளா)
545. நெடுந்தலை சீலா
546. ஓரே சீலா
547. தடியன்சீலா
548. புள்ளிச்சீலா (மவுலடி)
549. நெய்ச்சீலா
560. கல்சீலா
561, சுங்கான் (சுக்கான்)
562. சுங்கனி (கெழுது)
563. சூடை தங்கான்

சூடை

564. வெள்ளைச் சூடை
565. கறுப்புச்சூடை
566. மட்டிச்சூடை
567. வட்டச்சூடை
568. பேச்சூடை

- மோகன ரூபன்

இரத்த பூமி - 16



இடது கையில் திருக்கை வாலும், வலது கையில் வேளா கொம்புமாக‌ பரதவ பாரம்பரிய ஆயுதத்தை தூக்கி சுழற்றியவாறே பகைவரின் கதை முடிக்க பாய்ந்தார் பரதவ தலைவன் வீரபாண்டியனார்
……………………………………..


ஆக்ரோஷமாய் பாய்ந்து வரும் மூர்படையை இன்னும் இன்னும் முன்னேறும்படி பரதவர் படை தெற்காலே பின்வாங்கி சென்று பெரும் மணல்மேட்டிலே நிலைபெற்று நின்றது. எதிர்த்து வரும் காலனின் படைக்கு தன்னை காவு கொடுக்கவும், எதிராளியாய் வரும் காலனின் படையை காவு எடுக்கவும் பரதவர் படை துணிவாய் நின்றது.

தன் இடத்துக்குள் அத்துமீறி நுழைந்து தன் இனத்தை அடிமைபடுத்திய இரப்பாளி என்கின்ற ஈனபிறவியை தெரியாத பரதவ பட்டங்கட்டிமார் ஒவ்வொருவரும் தானே இரப்பாளியை வஞ்சம் தீர்க்க வேண்டும், என்கின்ற வெறியோடு போர்களத்தில் புகுந்தாடி பகைவரை பந்தாடிட தினவெடுத்து காத்திருந்தனர்.

" அல்லாஹூ அக்பர் " என்கின்ற இனிமையான அல்லாவின் பெயரை கொலைவெறியோடு உச்சரித்த கொள்ளையர் படை பரதவர்களை கொன்று குவிக்க கடற்கரை மணலின் மேல் புழுதி கிளம்ப வடக்கே இருந்து தெற்கு நோக்கிஆரவாரித்து பாய்ச்சலாய் வந்தது. இதற்கு முன்னர் போர்துகீசிய கப்பற்படை தரை தட்டி நின்றதுமே வெறி பிடித்தது போல புரஞ்சேரனும், ஐயனாரும் தாவி குதித்து தரையில் விழுந்து ஓடிய போதும்.....

போர்துக்கீசீயரை நாடாமல் மேவாமல் படு கன பீரங்கிகளை ஏதோ மடி பொட்டி போல் தூக்கிக் கொண்டு கரைக்கு தாவி பாண்டியம் பதியின் பரதவரும் பட்டங்கட்டிகளும் வடக்கே இரப்பாளியின் படையை தாக்க முன்னேறி ஓடியதையும் இன்னும் கப்பலிலேயே இருந்து பார்த்து கொண்டிருந்த போர்துகீசிய வீரர்களுக்கும் கேப்டன் லோரன் கோயன்கோ விற்கும் என்ன நடக்கிறது என்பது தெரியாமல்  அதிர்சியில் இருந்தனர். பரதவரை பைத்தியக்காரராய் எண்ணிக் கொண்டனர்.

இப்போது பரதவ படை பின்வாங்கி மேட்டு பகுதிற்கு செல்லும்போது குழம்பிய கேப்டன். வடக்கே தூரத்திலிருந்து கொள்ளையர்படை தெற்காலே உள்ள பரதவர்களை தாக்க வரும் போது தரை தட்டிய கப்பலை கடந்து போகும் தருணத்தில் கொள்ளையர்படையை தாக்கத்தான் பரதவ படை தெற்கே நோக்கி நகர்ந்துள்ளது என கண நேரத்தில் புரிந்து கொண்டார்.

உடனடியாக கப்பலில் மீதமிருந்த பீரங்கிகளை அணியத்திற்க்கு மாற்றி வடக்கு மேற்கு தெற்க்காலே வரிசைபடுத்தவும் தாக்குதலுக்கு தயாராக பதுக்கி இருக்கவும் ஆணையிட்டார். கொள்ளையர் படை தெற்க்கு நோக்கி பாய்ந்து வர அப்போது வடக்காலே தூரத்தில் முழங்கிய சங்கு சத்தம் அனைவரையும் அதிர்சியில் ஆழ்த்தியது.

பெரும் ஆரவாரத்துடன் புரஞ்சேரனாரும் ஐயனாரும் குதிரையில் உடன்வர‌ புதுப்பட்டிணத்தின் மறவர் தலைவர் தன் பெரும்படையோடு பாண்டியர் மறவர் என்ற ஓங்கார‌ முழக்கத்தோடு மேற்கே இருந்து கிழக்காக கடற்கரைக்குள் நுழைந்தனர்.

மேடான‌ பெரும் மணற்பரப்பில் பரதவ படையோடு உச்சியில் நின்ற பரதவ தலைவர் வீரபாண்டியனார் முழங்கினார், "ஏ பாண்டியனே ஏ பரவனே..! இதோ வருகிறான் உன் பங்காளி பாண்டிய‌ மறவன். இடையிலே மாட்டிகொண்டான் எங்கிருந்தோ வந்த துலுக்கன் பாய்ந்து தாக்கு ,பகைவரை இல்லை என ஆக்கு ,காணுகின்ற யாவருமே இரப்பாளி தான் நமக்கு இன்றோடு முடித்துவிடுவோம் மூர்களின் கணக்கு" என முழக்கமிட்டவாறே வீரபாண்டியனார்

இடது கையில் திருக்கை வாலும், வலது கையில் வேளா கொம்புமாக‌, பரதவ பாரம்பரிய ஆயுதத்தை தூக்கி சுழற்றியவாறே தெற்க்கு மணற் பரப்பிலிருந்து எதிரிகளை நோக்கி பாய்ந்தோடினார். அவர் பின்னால் வெறிபிடித்த பரவ மறவர்கள் கடும் சினத்தோடு பாண்டியர் பரதவர் என்ற முழக்கத்தோடு காட்டாறாய் கிளம்பி ஓடினர்.

மூர்களின் படை அருகாமையில் வந்த போது தரை தட்டிய கப்பலிலிருந்து கிளம்பிய பீரங்கி குண்டுகள் கடற் மணல் பரப்பிலே விழுந்து எதிரிகளை கிலியாக்கிட நாலா புறமும் கொள்ளையரும் மூர்களும் சிதறி ஓடினர்.

மணல்மேட்டிலிருந்து கீழ் நோக்கி பாய்ந்து பரதவ படை கிளப்பிய புழுதியும் போர்துகீசிய கப்பலின் பீரங்கி குண்டுகள் கடல் மணற் பரப்பில் வெடித்து, கிளப்பிய புழுதியும், கொள்ளையரின் பின்னால் திரண்டு வந்த மறவர் படையின் தாக்குதல் புழுதியும் அந்த கடற்கரை எங்கும் சுற்றி சுழன்று மணல் திரையாகிப் போனது. 

நடப்பது என்னவென்று எவருக்கும் தெரியாத நிலையிலும் பாண்டியர் பரவர்!!!!......... பாண்டிய மறவர்!!!!....... எனும் வீரமிகு தமிழ் வார்த்தை மட்டும் புழுதிகாட்டில் எதிரொலித்தது.

ஆக்ரோஷமான போர் …………!

தன் தாய் பாண்டி பரதவ மண்ணை அபகரித்து அவமதித்த வந்தேறிகளுக்கு எதிரான வரலாற்றின் முதற்போர்

புழுதிகாட்டிலே பரதவரின் ஓங்கார தமிழோசை கேட்டு கிலியான அரேபிய துலுக்கன் எழுப்பிய அர்த்தமற்ற மொழி அறிந்து மூடு புழுதியிலே முகங்களை அறியாது அவன் தான் எதிராளி என தீர்மானித்து பரதவர்களும் மரவர்களும் அவர்களை வெட்டி சாய்த்தனர்.

ஆனாலும் " ஐயா ! காப்பாற்று என்கின்ற பரவ மறவர்களின் தமிழ் குரல் கேட்கவே இல்லை.

கொள்ளையரின் எண்ணிக்கை குறைய குறைய புழுதி படிய படிய கடலுக்குள் தாவி எதிராளிகள் தப்பி பிழைக்க நினைக்க முடிய… முடிய…. முடியவே….யில்லை.

இரப்பாளியின் கொள்ளைக்கூட்டத்தையே இரப்பாளியாக நினைத்து பரதவ மண்ணிலே கால் பதித்து பரதவரை அவமதித்த காரணத்திற்காக பரதவர் வெறியாய் வெட்டி கொன்றனர். குத்துயிரும் கொலையுயிருமாக கிடந்தவரை குழிவெட்டி புதைத்தனர்.

பரதவரும் போர்த்துக்கீசீயரும் கடும்போரின் அயர்வாலே கடலோரம் இளப்பாறி கிடக்க புதுப்பட்டின மறவர் மட்டும் கடலுக்குள் தாவிப் பாய்ந்தும்
தீவுக்குள் தேடி நுழைந்தும் கொள்ளையரை வெட்டிசாய்ந்தனர்.

[ஆனால் அப்படி பரவனுக்காக சூர்த்தெடுத்த அந்த மறவ‌ சொந்தங்கள் இன்று அவரெங்கே நாமெங்கே..? ]

அனைவரையும் சங்காரம் முடித்த போர்த்துக்கீசிய பரதவ படையும் மறவர் படையும் மீண்டும் கீழக்கரையை பொறி வைத்து தாக்கி அங்குள்ள மூர்களை அழித்ததோடு பரதவ சொந்தங்களான மரைக்காயர்களோடு மகிழ்ந்து கொண்டாடியது. சங்கு மரைக்காயர் குதிரை மரைக்காயர்
இல்லங்களில் பரதவ போர்த்துக்கீசியருக்கு விருந்து வைபவம் விமர்சையாக 
நடந்தேறியது.

அன்றிரவே கில் ப‌ர்னான்டஸ் டி கார்வெல்கோ கையெழுத்தோடு மதுரை நாயக்க அரசருக்கு போர்த்துக்கீசிய தலைமையின் ஆணை ஓலை சங்கு மரைக்காயர் வழியாக அனுப்பப்பட்டு கைது செய்யப்பட்ட தூயத்தந்தை, கேப்டன் கொட்டின்கோ மற்றும் அவரது குடும்ப்பத்தார், காத்தவராயன் மற்றும் போர்த்துக்கீசிய படை வீரர்கள் திருப்பி ஒப்படைக்க வேண்டப்பட்டது.

ஒரிரு நாட்களிலே மறுமொழியாக தூத்துக்குடியில் குறிப்பிட்ட நாளன்று முத்து ந‌கர் முருகன் கோவில் கல் ம‌ண்டபத்திலே அவர்களை ஒப்படைப்பதாகவும் பாக்கியாக தரவேண்டிய ஒரு இலட்சம் பணம் போர்த்துக்கீசியர் தரவேண்டும் என்று நாயக்க அரசரிடம் இருந்து சங்கு மரைக்காயருக்கு பதில் ஓலையும் வந்து சேர்ந்தது.

பரதவ மானத்தை வென்றெடுத்த சரித்திர புருஷர்களோடு மமதையுடன் பயணப்படும் உங்கள்.....

….…. கடல் புரத்தான் ……

பழைய ஏற்பாடு கூறும் பரதவரின் கடல் வணிகம்

யூதர்களின் ஆதிசமயத் தலைவரான மோசஸ் (MOSES), தாம் நிகழ்த்திய இறை வழிபாட்டில் வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் மிக அதிக அளவில் பயன்படுத்தினார் என பழைய ஏற்பாடு தெரிவிக்கிறது.

மோசசு(ஸ்) கோயில் கட்டி வழிபாடு செய்த ஆண்டு கி.மு. 1490 ஆகும். மோசசு(ஸ்) அவர்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டிய தங்கம் முதலான பொருட்களோடு, இறுதியாக வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் குறிப்பிடுகிறார்.

மேலும் வாசனைத் திரவியங்களை எப்படி ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அந்த புனிதமான வாசனைத் திரவியங்களைக் கொண்டு எந்தெந்த பொருட்களை புனிதப் படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.

குருமார் மற்றும் அவரது புதல்வர்களைக்கூட இந்த வாசனைத் திரவியங்களைக் கொண்டே புனிதப்படுத்த வேண்டும் என்கிறார் மோசசு(ஸ்). (ஆதாரம்: 1. பழைய ஏற்பாடு- EXODUS, 35: 4-9, 37: 29 & 40: 9-15. 2. தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்- டாக்டர் கே.கே. பிள்ளை பக்: 50,51).

ஆக கி.மு. 15ஆம் நூற்றாண்டில், வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் மிகச்சிறந்த புனிதப் பொருட்களாக யூதர்களின் சமயத்தலைவரான மோசசு(ஸ்) கருதி, அவைகளை அன்றே பெருமளவு பயன் படுத்தியுள்ளார் என்பதை பழைய ஏற்பாடு மிகத் தெளிவாகவும் மிக விரிவாகவும் குறிப்பிடுகிறது.

Solomon and the Queen of Sheba,
 painting by Giovanni Demin (1789-1859)
கி.மு. 1000 வாக்கில், இசு(ஸ்)ரேலை ஆண்ட சாலமன் (SOLOMON) மன்னனுக்கு தென் அரேபிய நாட்டு அரசி சேபா (SHEBA), மிக அதிக அளவான வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும், தங்கத்தையும், மதிப்புமிக்க கற்களையும் பரிசாக வழங்கினார்.

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை டயர் நாட்டு மன்னன் கிராம் (HHIRAM) அவர்களின் கப்பல்களுடன், சாலமனின் தார்சிசு(ஸ்) (TARSHISH) கப்பல்களும் சேர்ந்து ஒபீர் (OOPHIR) துறைமுகம் சென்று நிறைய தங்கத்தையும், அகில் மரங்களையும், மதிப்புமிக்க கற்களையும், வெள்ளி, குரங்குகள், மயில்கள், தந்தங்கள், முதலியனவற்றையும் கொண்டு வந்தன (ஆதாரம்: பழைய ஏற்பாடு-KINGS 1, 9:27,28, & 10:2,10,11,22,25).

சாலமன் மன்னனுக்கு வந்து சேர்ந்த பண்டங்களில் பல தமிழ்ப் பெயர்களின் சிதைவுகளே என்கிறார் கே.கே.பிள்ளை அவர்கள்.

உதாரணம்:

1.துகிம்- தோகை, மயில்தோகை;

2.ஆல்மக் மரங்கள்- அகில் மரங்கள்

3.Kகஃபி- கவி, (பழந்தமிழில் கவி என்பது குரங்கு என பொருள்படும்). முதலியன ஆகும் (தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்- பக்: 50,51). பாண்டிய நாட்டின் தலைநகராய், துறை முகமாய் கடலைத் தொட்டுக் கொண்டிருந்த கொற்கை நகரம் இப்போது கடலிலிருந்து ஏழு மைல் தூரத்தில் உள் நாட்டுப் பகுதியில் அமைந்துள்ளது.

ஓஃபிர் அல்லது உவரி இவ்வூரின் பகுதியாகும். இப்போதும் இதே பெயரில் இங்கிருக்கும் மீனவர் கிராமத்தில் மணல் மேடுகள் உள்ளன. இம் மணல மேடுகள் ஒரு காலத்தில் தங்கச் சுரங்கங்களாய் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மழை பெய்தபின்னர் கிராமவாசிகள் அங்கு சென்று தங்கப் பொடியைப் பொறுக்குகின்றனர் என்கிறார் நரசய்யா அவர்கள்.( கடல் வழி வணிகம், பக்:63.)

ஆக சாலமன் மன்னனுக்கு வந்த பொருள்களில் பல பெயர்கள், தமிழ்ப் பெயர்களின் சிதைவுகளாக இருப்பதும், ஒஃபீர் (அ) உவரி என்ற பகுதி இன்றும் கொற்கைத் துறை அருகே இருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய தரவுகளாகும்.

Chevalier-IX-Pereira -1888-1951

The success story of F.X.Pereira of Tuticorin who went to Colombo and established business in 1889 and won the laurels of many islanders as well as Europeans including the British Governor and his wife Lady Ridgeway, has been briefly told in this web already.

F.X.Pereira who founded the business house F.X. PEREIRA and Sons passed away in Tuticorin in 1906, leaving the business to be tended by his sons. However the mantle of captaining and steering the business fell on the slender shoulders of I.X.PEREIRA , the eldest son, who was barely 18 at the time of taking over.

Chevalier-IX-Pereira-1888-1951
In his hands, business flourished so well in different fields like Shipping agencies, Manufacturing, Insurance , General stores etc that he was aptly called the Midas from Tuticorin, who turned everything Gold. Whatever business he launched into showered him with abundance.

The secret of this splendid success in business was attributed to the unbelievable unity among brothers; straight dealings ;his abundant kindness to his subordinates, and his affection and love for his fellow beings —especially for those who were in need and who were in suffering .

A few who were earthly, attributed the phenomenal success to his stocky and impressive physical frame immaculate dress and matching moustache he sported.

I.X. Pereira’s love for his business was matched with his love for human beings in general. Particularly, he was touched by the suffering conditions of Indian Tamils who were at the mercy of colonial estate masters and British business houses.

To provide succor and support, relief and hope, to Indian Tamils he turned his attention to Politics . With the equation he had developed through his business with the British officers. Government and Sinhala leaders he took up the petty causes of Indian Tamils personally to British bureaucracy and succeeded in getting them resolved initially without much noise and fanfare. Such helping attitude slowly won the admiration of Indian Tamils and he slowly emerged as a leader among the Tamils.

In 1924, when he was hardly 36 years old, he stood in the election for the legislative council in the seat reserved for Indians and won hands down defeating his Indian rival by a huge majority, and entered the Legislative council as a first member among the two Indians elected. As a member of the council, he fought many a battle on behalf of Indians on negotiating tables. Later he was nominated as a member of state council from 1931 to 1947. *He was also minister for Labour, Commerce, and Industry.(1946).*

Recognising the yeomen services he has rendered to Tamil community, Lord Willingdon Viceroy of india conferred on him in 1934 the title of *Dewan Bahadur* . Considering his philanthropy and services to the church , His Holiness the Pope in 1946, invested on him the Papal Knighthood and made him the knight commander of Sylvester.

In his political career he was always for a compromise on any issue. Sensing the dangers that would emerge in times to come for tamils, he remained abstaining in the voting when the house debated handing over Independence to Sinhalese majority.

He did not agree to the proposition of necessity of five years of continuous stay in Ceylon to merit Citizenship of Ceylon. He was also against the derogatory and humiliating conditions imposed for the certificate to be obtained for facilitating permanent settlement of Tamils in Ceylon. His argument, was being Tamils at next door, they can’t be expected to be glued to Ceylon when ships sailed to anf fro and when families remained in British India. On this score as well as for seeking representations in Donough more Commission he met the Secretary of Colonies,in London.

At times his detractors spread the canard that he spoke for the Tamil Mercantile community, and not for the plantation community of Tamils. This is far from truth. He spoke in support of beleaguered plantation Tamils whenever the estate management inveigled them into Criminal cases of trespass, instead of cases under Labour laws and afforded, to a certain, considerable amelioration to their suffering. He also spoke for schools for them with native language as medium of instruction in the estates when estate establishments were winding them up.

During his 23 years of public and political life, he was elected to serve on many committiees.

He was
1. Member , Port commission.
2. Member , Board of Indian immigration labour.
3. Member, war council,
4. President, Indian Club,
5. Vice president, Ceylon Tamil congress,
6. President, Indian mercantile chamber,
7. Member, Select draft group that merged Ceylon Tamil Congress with Ceylon National congress.

When Pandit Jawaharlal Nehru visited Ceylon to bring unity among Indians in Ceylon who were pursuing different policies in different formations,he visited I.X.Pereira’s, Vajira road residence, for dinner and it is said that he got the neighbours ‘compound knocked off to accommodate the crowd to afford dharshan of Pandit Nehru.

After Independence ,he was offered a place in the Ceylon senate. But he declined .

He passed away on 21st July 1951,when he was 63 years old.

To commemorate his birth centenary, in1988, a stamp was issued,by the postal department Srilanka; and subsequently , a street in Pettah, Colombo was named after him. There is I.X. Pereira Street in Colombo.A photograph of I.X. Pereira adorns the wall of parliament in Sri Jayawardanapura.

நண்டு சூப்


தேவையான பொருட்கள்:

  • நண்டு 100 கிராம் 
  • மீன் 100 கிராம் 
  • இறால் 100 கிராம் 
  • கேரட் 
  • வெங்காயம் 2
  • மிளகு 6
  • எண்ணெய் 1/2 குழிக் கரண்டி
  • தேவையான அளவு உப்பு.

செய்முறை;
முதலில் அரிந்துகொள்ளவேண்டிய வெங்காயம், கேரட் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் , மிளகை சேர்த்து தாளிக்கவும். அத்துடன் நண்டு, மீன், இறால், கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்கி, நீர் ஊற்றி உப்பு சேர்க்கவும். காய்கறியும், நண்டு வகையறாக்களும் நன்கு வெந்தவுடன் இறக்கி நண்டு, மீன், இறால் இவைகளை வெளியே எடுத்து சூப்பை பறிமாறவும். பறிமாறும்போது, ஒரு துண்டு நண்டையோ, மீனையோ, இறாலையோ சேர்த்து விருப்பத்துக்கேற்றவாறு பரிமாறலாம்.

நண்டு ரசத்தைப் போலவே ,நண்டு சூப்பும் உடலுக்கு தெம்பு தரும். இதை சாப்பிடதும் ஜலதோஷம் பிடித்திருந்தால், கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும்.

பரதவரின் கடல் வணிகச் சிறப்புக்கு மேலும் ஒரு ஆதாரம்!!


எகிப்து நாட்டில் தமிழ் எழுத்துகள் 2100 ஆண்டுகளுக்கு முற்பட்டவை (tamil brahmi inscription belonging to first century AD) கண்டுபிடிக்கப்பட்டன.

செங்கடல் கரையில் உள்ள குவெய்ர் அல் கடிம் (Quseir-al-Qadim, an ancient port with a Roman settlement on the Red Sea coast of Egypt) என்னும் துறைமுக நகரில் உடைந்த மண்ஜாடி ஒன்றில் தமிழ் பிரம்மி எழுத்துக்கள் உள்ளன என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறைமுகத்தில் ரோமானியர்கள் தங்கி வாணிபம் செய்துள்ளனர். இந்த எழுத்துகள் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதும் கண்டு அறியப்பட்டுள்ளது.

ஜாடியின் இரண்டு பக்கங் களிலும் இந்த எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. “பனை உறி” என்ற எழுத்துகள் உள்ளன. கயிறுகள் கட்டித் தொங்க விடப்பட்டு அதில் பானைகள் அடுக்கி வைக்கப்படும். அது உறி எனப் பெயர்ப்படும்.

எகிப்துத்துறைமுக நகரில் அகழ்வாராய்ச்சியை மீண்டும் தொடங்கிய இங்கிலாந்தின் சவுத்ஆம்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் பீகாக் மற்றும் புளு (Prof. D. Peacock and Dr. L. Blue of University of Southampton, U.K) ஆகியோர் இதைக்கண்டு அறிந்துள்ளனர். 

லண்டனில் உள்ள பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தின் மட்பாண்ட வல்லுநர் (Dr. Roberta Tomber) இதனை ஆராய்ந்து, இது இந்தியாவில செய்யப்பட்ட மண்பாண்டம் என சான்று அளித்துள்ளார்.

தமிழ் எழுத்தாய்வறிஞர் அய்ராவதம் மகாதேவன் (Iravatham Mahadevan) இவை தமிழ் எழுத்துகள் என்றும், 2100 ஆண்டுகளுக்கு முந்தையவை என்றும் உறுதிப் படுத்தியுள்ளார்.

புதுச்சேரியிலுள்ள பிரஞ்ச் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த பேராசிரியர் சுப்பராயலு (Prof. Y. Subbarayalu, French Institute of Pondicherry), நடுவண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராஜன் (Prof. K. Rajan of Central University, Puducherry) மற்றும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் செல்வகுமார் (Prof. V. Selvakumar, Tamil University, Thanjavur) ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்து இதனைக் கண் டறிந்து அறிவித்துள்ளனர்..

“பானை உறி” என்ற எழுத்துகள் மிகவும் தெளிவாகவே பொறிக்கப்பட்டுள்ளதாக அய்ராவதம் மகாதேவன் தெரிவிக்கிறார். இந்தப் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அகழ்வாராய்ச்சியில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட இரண்டு பானைகள் கண்டு எடுக்கப்பட்டன. இவை கி.பி. முதல் நுற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும். 

இதே காலத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் 1995 இல் பெரனைக் என்னும் ரோமானியர் வசித்த பகுதியில் (Berenike, a Roman settlement, on the Red Sea coast of Egypt) கண்டு எடுக்கப்பட்டன என்கிற விவரத்தை அய்ராவதம் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் செங்கடல் வழியே ரோம நாட்டுடன் கடல் வணிகம் செய்து வந்தனர் என்று தமிழ்ச் சங்கப் புலவர்கள் எழுதிய பாடல்களிலும் மேலை நாட்டின் பழைய இலக்கியவாதிகளும் எழுதியதற்கு ஆதாரமாக இவை அமைந்துள்ளன. கடலோடிகளாகக் கப்பல் மூலம் வணிகம் செய்து உலகில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பரதவர்கள் சிறந்து விளங்கினர் என்பதனை இதனாலும் விளங்கிக் கொள்ளலாம்.

இரத்த பூமி - 15


வரலாற்றில் தன் இனம் மாண்பு வீரம் தன்னை நிலை நிறுத்த பரதவர் படை நிலை பெற்று நின்றது தன்னை காவு கொடுக்கவும் பரதவர் படை துணிந்து நின்றது......?
.................................................................

உலகத்து நிலபரப்பில் எங்கு சென்றாலும் புவியின் மிகுதியான பகுதி சூழ் ஆழியிலெ பரதவன் எங்கேயேனும் தத்தளித்தாலும் அங்கே வானவியல் கொண்டும் இயற்கை கொள்வாரம் கொண்டும் தாம் வாழும் கணியத்தை தடத்தை அறுதியிட்டு கூறுகின்ற பேரறிவும் உச்சபட்ச நுண்ணறிவும் கொண்டு கணியம் கணிக்கும் பரதவன்….. அந்த‌ பரதவ காணியாளனின் மூதாதை ஆதி உயிரியலின் வழிவந்தவர் தாம் எனும் உன்னதத்தை அறிந்துணர்ந்த‌ பாண்டி பரதவ புலவன் கணியம் பூங்கொன்றன் சொன்னது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதாகும் அதனால் தானோ...? என்னவோ பாண்டிய பரதவரின் பாரம்பரிய அரசியற் கொள்கை பண்பட்ட பகைவரற்ற தேசம் என்பதே ஆகும். ஆனால் காலத்தின் ஏற்பாட்டால் புயற் கடல் வெள்ள சீற்றத்தால் கொற்கை தூர்ந்து போய் பாண்டி தலைநகர் மதுரைக்கு மாறிப் போனது பரதவரின் வழி வந்த பாண்டிய சொந்தம் தூரமாகிப் போனது.

முத்து சிலாபத்திலே முரண்பட்ட‌ பரதவ பாண்டியனே பாண்டி பரதவரின் பகைவரான போதுதான் பரதவரின் தாக்குதல் எனும் பேராண்மை எழுகிறது மதுரை காஞ்சி யின் பாடலுக்கான சூழ்நிலை உதயமானது. பிந்தைய‌ காலத்தில், பாண்டிய அரசு முடிவுக்கு வந்து சோழ அரசு மறைந்து போன பின்பு நாயக்கன், மூர்களோடு சேர்ந்து நேருக்கு நேராக‌ ஒத்தைக்கு ஒத்தையாக மோதாமல் துப்பாக்கி வெடிக்குண்டு என‌ அன்றைய நவீன ஆயுதத்தோடு பரதவனை சூரையாடிய போது தன் இனத்தை தற்காத்து கொள்ள சிலுவையை நாடினான்.

அந்த திரு சிலுவை தான் பின்நாளில் பாரமான சிலுவையாகி இன்று வரை தூக்கி தூக்கி சுமை தாங்கியாகிப் போனான். பக்தி எனும் ஆன்மீக சுழிக்குள் சிக்கி அமிழ்ந்தே போனான். சரி அது பற்றி பிறகு தொடருவோம்

வடுகரின் ஆதிக்கம் அழிந்த பின் நாட்களில் பரதவனுக்கு தற்காத்தல் தேவை இல்லாதாகி போனது. ஆனாலும் பாண்டியபரதவரின் பண்பட்ட பகைவரற்ற தேசத்தில் பிணக்குகள் உருவான காலங்களில் ஏன் 70வது 80களில் கூட‌ இடிந்தகரை ஆனாலும், உவரி ஆனாலும், குமரியிலும் கூட பகைவரின் இடம் தேடி செல்லும் தாக்குதல் போரே நடந்தேறி உள்ளது..

இத்தகைய கலிமாக்களாக‌ பயமறியா பரதவர்களாக போரிடும் மரபு சார்ந்த விந்தை நமக்குள் விளைய காரணாமாய் அமைந்த களம் தான் இது. இதுபோலவே அன்றும் புன்னைக்கரையை மீண்டும் தாக்க திட்டமிட்டிருக்கும் கடற்கொள்ளையரையும், இரப்பாளியையும் கொன்று ஒழிக்கவும் விதாலனால் பிடித்து செல்லப்பட்ட பிணையக்கைதிகளை மீட்கவும், போர்த்துக்கீசிய படையுடன் பரதவர்கள் கீழக்கரைக்கு விரைந்தனர்.

புன்னைக்கரையை தாக்க கீழக்கரைக்கு வடக்கே திட்டமிட்டு காத்திருந்த மூர்படைக்கும்…..?  கொள்ளையர்களுக்கும் பரதவரோடு இணைந்த போர்த்துக்கீசியரின் வருகை பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. பதற்றத்தில் கொள்ளையர்கள் போர்துகீசிய கப்பற்படை மீது கடும் ஆக்ரோஷ தாக்குதல் தொடுத்தனர்.

தொடர்ந்து கடலிலே கர்ண கொடூரமான போர் நடந்தது. போர்த்துக்கீசியரின் ஒரு பிரிவு கில் ப‌ர்னான்டஸ் டி கார்வெல்கோ, தலைமையிலும் ம‌ற்றொரு பிரிவு கமாண்டர் லோரல் கோயன்கோ தலைமையில் பரதவப் பட்டங்கட்டிமாரோடு இணைந்து போராடியது. 36 மணி நேரமாக‌ நடந்த‌ போரில் போர்த்துகீசிய படை பெரும் பின்னடைவையே சந்தித்தது

முன்னேறிய கில் ப‌ர்னான்டஸ் டி கார்வெல்கோ படை பரதவக் கடலின் கடுஞ்சீற்றத்தாலும், நீரோட்டத்தாலும் வடக்கே எதிராளியின் திசை நோக்கியே வளிந்து சென்றது. வடக்கே செல்ல செல்ல கொள்ளையர்களின் தாக்குதலுக்கு ஆளாகியது. போர்த்துகீசிய கப்பல்கள் அக்னி காட்டில் அலும்பி தழும்பி அலைகளில் அமிழ போர்த்துகீசியர்கள் தப்பிப் பிழைத்து தீவுகளில் பதுங்கினர்.

தீவுகளில் பரிதவிக்கும் போர்துகீசியரை காக்க பரதவ தலைவரும், பட்டங்கட்டிமாரும் நிறைந்திருந்த மற்றொரு கப்பல் பிரிவை வடக்கே நோக்கி நகர தளபதி கோயால் கோ ஆனையிட்டார். ஆவேசப்பட்ட பாண்டியம்பதி கெண்டலும் தெரியாது, கச்சானும் தெரியாது, வாணுவாடு தெரியாது, சோணுவாடு தெரியாது, வசமா இவனுவகிட்ட மாட்டிகிட்டோம் என்று தனக்குள் புலம்பி கொண்டு கேப்டன் பாய திருப்பாம‌ கரைக்கே விடுங்க என அதட்டினார்.

பரதவ தலைவனின் , பட்டங்கட்டிமாரின் விடாப்புடியான மூர்க்கத்தனமான‌ காட்டு கூச்சலாலும் போர்துகீசிய பாய்மரகப்பல் கரை நோக்கி செலுத்தப்பட்டு கரையேறி தட்டி நின்றது. பரதவ தலைவர் ஏதோ சொல்ல‌ புரஞ்சேரனும் அய்யனாரும் கரைக்கு தாவி குதித்து மேற்காலே கருவேல காட்டுக்குள் ஓடி மறைந்தனர்.

கண நேரத்தில் புயலாய் செயல்பட்ட பரதவ மறவர்கள் பாய்மரக்கப்பலின் பீரங்கிகளை குண்டு கட்டாக தூக்கி கடற்கரை மணற் பரப்பிற்க்கு விசிறி அடித்தனர். ஒன்றிரண்டு பீரங்கிகள் கடலுக்குள் அமிழ்ந்து போனாலும் கரையில் விழுந்தவைகளை நிமிர்தி் நேராக்கிகரையில் இருந்தாவாரே கடலுக்குள்ளும் கரையிலும் இருந்த‌ எதிரிகளை நோக்கி சுட்டுத் தள்ளினர்.

தீவுகளில் பதுங்கிய கில் பர்னான்டஸின் படைகளை வேட்டையாடிய கொள்ளைகார மூர் படையின் கவனம் கடலோர பரதவர் படை மீது திரும்பியது. தன் படையனைத்தையும் திருப்பி பரதவர் மீது தாக்குதல் நடத்த‌ ஆணையிட்டது. மூர் படையோடு ஒப்பிடுகையில் குறைவாயிருந்த பாண்டியம்பதி பட்டங்கட்டிமாரின் படை நோக்கி தரையிரங்கி சூறாவளியாய் தாக்க தலைப்பட்டது.

ஆக்ரோசமாய் பாய்ந்து வரும் மூர் படையை இன்னும் இன்னும் முன்னேரும் படி பரதவர் படை தெற்க்காலே பின் வாங்கி சென்று பெரும் மணற்மேட்டிலே நிலை பெற்று நின்றது. 

ஆம் வரலாற்றில் 
தன் இனம் 
தன் மாண்பு 
தன் வீரம் 
தன்னை நிலை நிறுத்த பரதவர் படை 
நிலை பெற்று நின்றது

தன்னை காவு கொடுக்கவும் பரதவர் படை 
துணிந்து நின்றது......?

......கடல் புரத்தான்......

St. Francis Xavier

Rare book collection

St. Francis Xavier

Picture book

By:
Disgeni: Walter Cappella
Coloritura: Laura Miggiori

Colle Don Bosco (Asti) 1968

Download link
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com