வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 24 December 2016

திவ்ய பாலனின் பேரில் புகழ் பாடல்
ஆதிகர்த்தர் எம்மைமீட்கப் பூதலத்தில் மீதிலே
ஓதுபெத்தலெம் புரியிலே தீது வெல்லைக் கிரியிலே
பாதி நள்ளிராவிலே பழைய மாட்டுக் குடிலிலே
பாலனாகக் கோலம் சொரிந்து பாரில் மனிதனாப் பிறந்து
சீலராக எம்மைப் புரந்து சிலுவை ஏறிக் கதியைத் திறந்தாயே

வானவர்கணங்கள் கூடி ஞானகீதம் பாடவே
ஈன அலகை வாடவே கோனர் பணிந்தேகவே
தீனதயாளர் நீடவே தீதகன்று ஓடவே
திகழும் மரியின் பாலனாக திருக் கண்ணோக்கும் சீலனாக
இகலில் மனுவேலனாக எமக்கென்றும் அனுகூலனாகவே

தாதை சூசையும் தாலாட்ட தாய்மரி பாலூட்டவே
மேதையோர்கள் போற்றவே சோதி வுடுத்தோன்றவே
சீதமலர் சாற்றவே சிறுபனித் தூற்றவே
செய்யப்பாலன் ஐயோ அழுது செகத்தை மீட்கும் நாள் இப்போழுது
துய்யமலர் தாளே தொழுது தோத்தரிப்போம் எப்பொழுதுமே

அண்டசாரசர மனைத்தும் உண்டுபண்ணும் கர்த்தனே
மண்டலத்தின் சுத்தனே அண்டர்பணி அத்தனே
மானிடதேகம் எடுத்தோனே
மாசில்லாமல் உற்பவித்து நேசத்தாய் வயிற்றுதித்து
சேசுவென்னும் பெயர் தரித்து செகத்தை மீட்டுப் பாதுகாத்தாயே

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com