Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

கீழடி


















கீழடி மீன் சின்னம்






கீழடியில் கிடைத்த பானைகளில் காணப்படும் பாண்டியர்களின் மீன் சின்னம். இந்தியாவின் மிகப்பழமையான ஆட்சியாளர்கள் பாண்டியர்களே என்பதற்கான ஆதாரம்.

  • நந்த வம்சம் - கி.மு. 4ம் நூற்றாண்டு
  • மௌரியர்களின் காலம் - கிமு 3ம் நூற்றாண்டு.

கிமு. 6ம் நூற்றாண்டு. அன்றே அரசாங்கம் அமைத்து செயல்படும் அளவுக்கு நாகரீகம் அடைந்தவர்கள் தமிழர்கள். இந்த எழுத்துகள் வடிவம் பெற இதற்கு முன் மேலும் பல நூற்றாண்டுகள் இருக்கும்.

எப்படியும் குறைந்தது 3500 - 4000 ஆண்டுகளுக்கு முந்தையது தமிழர்களின் வரலாறு.

ADAM BRIDGE Vs ADAM BEACH

கடந்த ஆண்டு எங்கள் வண்டி தனுஷ்கோடியைத் தாண்டி அரிச்சல் முனை நோக்கி விரைந்து கொண்டிருந்தது, அதிக வாகனங்கள் இல்லை. சாலையின் இருமருங்கிலும் ஆங்காங்கே வெள்ளை நிறப் பாறைத் துண்டுகள் வித்தியாசமாகத் தென்பட்டன. பவளப் பாறைகளாக இருக்குமோ. இறங்கிப் பார்த்தேன், ஆம். பவளப் பாறைகள்தான். அலைகளில் அலைக்கழிக்கப்பட்டு இந்த கடலோர சாலையில் ஒதுங்கியிருக்கின்றன. அப்படியென்றால் இங்கே வெகு அருகில் பவளப்பாறை தீவுகள் இருக்கவேண்டுமே.

பவளப்பாறை என்பது உண்மையில் பாறை அல்ல. CORAL (பவளம்) எனும் கடல்வாழ் உயிரினத்தின் தொகுப்புகளால் அமையப் பெற்ற சுண்ணாம்புக் கூடு (Calcium carbonate nests formed by coral colonies). இந்தியாவைப் பொறுத்தவரை, இராமேஸ்வரத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடைப்பட்ட பகுதியில் பவளப்பாறை தீவுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. பவளப்பாறைகள் வளர ஏற்ற இயற்கை சூழல் இங்கே நிலவுகிறது. மொத்தம் 21 தீவுகள் உள்ளன
சுமார் 160 கி.மீ நீளத்திற்கு சங்கிலித்தொடர் போல் அமைந்திருக்கும் இந்தத் தீவுகள் அனைத்தும் கடற்கரையிலிருந்து 10 கி.மீ. தொலைவிற்குள்ளேயே அமைந்துள்ளன. மிகச் சிறிய தீவு 0.25 ஹெக்டேர் (0.62 ஏக்கர்) பரப்பளவிலும் மிகப்பெரிய தீவு 130 ஹெக்டேர் (321.2 ஏக்கர்) பரப்பளவிலும் காணப்படுகிறது. தீவுகளின் மொத்தப் பரப்பளவு 6.23 ச.கி.மீ. இந்தப் பகுதி நடுவண் அரசால், பாதுகாக்கப்பட்ட உயிரியல்மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பவளப்பாறைகள் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழ்வதால் இவை FRINGE REEF என அழைக்கப்படுகின்றன. BARRIER REEF, ATOLL போன்றவை கடலின் வேறு பகுதியில் வாழும் பவளப் பாறைகள்.

இதுகாறும் நாம் பார்த்தது மன்னார் வளைகுடாவின் வடமேற்குக் கரையில் துத்துக்குடிக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடைப்பட்ட பகுதி. இதை அப்படியே விட்டு விட்டு மன்னார் வளைகுடாவின் கிழக்குக் கரைக்குப் போவோம் வாருங்கள். இங்கே இலங்கைத் தீவின் மேற்குக் கரையில் தலைமன்னார், மன்னார் போன்ற பகுதிகளிலும் இதற்குத் தெற்கேயும் FRINGE REEF வகை பவளப்பாறைத் தீவுகள் காணப்படுகின்றன. அங்கே தூத்தக்குடி –இராமேஸ்வரம் பகுதியில் உள்ளது போன்ற அதே அமைப்பு. மேற்குக் கரையிலும் அதே; கிழக்குக்கரையிலும் அதே. இரண்டையும் இணைக்கும் இடைப்பட்ட பகுதியைப் பார்ப்போமா.

இதுதான் ஆதம் பாலம்:

இந்தப் பகுதியில் தொலையுணர்வு தொழில்நுட்பதின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொண்டINDIAN SPACE RESEARCH ORGANISATION - ISRO வின் SPACE APPLICATION CENTER (SAC),சுமார் 30 கி.மீ நீளமுள்ள ஆதம் பாலத்தில் 1௦3 பவளத் திட்டுகள் காணப்படுவதாக தெரிவிக்கிறது. திட்டைகள் என அழைக்கப்படும் இந்தத் திட்டுகள் மணல்மேடுகளாகவே காட்சி அளிக்கின்றன.

Project: RAMESWARAM எனும் பணியின் கீழ், 2002-03 ஆம் ஆண்டுகளில் ஆதம் பாலம் பகுதியில் விரிவான ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட GEOLOGICAL SURVEY OF INDIA, இராமேஸ்வரம் தீவு சுமார் 1,25,000 ஆண்டுகளுக்கு முன் உருவாகியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. Thermo Luminescence முறையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் இங்குள்ள மணல் மேடுகள் சுமார் 600 – 700 ஆண்டுகளுக்கு முன் உருவாகியிருக்கக் கூடும் எனத் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மணல் மேடுகள் அமைந்துள்ள பூகோள அமைப்பு மற்றும் இந்த மணலில் கலந்து கிடக்கும் பவளப்பாறைத் துண்டுகள் இவற்றின் அடிப்படையிலும் இந்த மணல்மேடுகள் பவளப்பாறை திட்டுகளை மூடியுள்ள மேடுகள் என அறியலாம்.

தூத்துக்குடிக்கு அருகேயுள்ள வான் தீவில் துவங்கும் பவளத் தீவு சங்கிலித் தொடர் இராமேஸ்வரம் அருகேயுள்ள குருசடைதீவோடு நின்றுவிடவில்லை. அது தொடர்ந்து ஆதம்பால பவளத்திட்டுகள் வழியே இலங்கை தலை மன்னாரை அடைந்து அங்கிருந்து இலங்கையின் மேற்குக் கரை ஓரம் மன்னார் தென் பகுதியில் நீள்கிறது.

சரி, விஷயத்திற்கு வருவோம். தூத்துக்குடி – இராமேஸ்வரம் பகுதியில் பவளத் தீவுகளுக்கு மேற்கே தமிழக நிலப்பரப்பு உள்ளது. மன்னார் பகுதியில் பவளத் தீவுகளுக்குக் கிழக்கே இலங்கையின் நிலப்பரப்பு உள்ளது. இதே Fringe Reef வகையைச் சேர்ந்த ஆதம்பாலம் பவளத்திட்டுகளுக்கு வடக்கே ஏன் நிலப்பரப்பு இல்லை. இருந்தது. இருந்திருக்க வேண்டும். அது தற்போது பாக் நீரிணையின் கீழ் மூழ்கிக் கிடக்கிறது. அப்படியானால், பாக் நீரிணை இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் நிலப்பரப்பாக இருந்தபோது, அதன் தெற்கு குக் கரையாக ஆதம் பாலம் அமைந்திருந்திருக்கும். ஆம், இன்றைய ADAM BRIDGE, அன்றைக்கு ADAM BEACH ஆக இருந்திருக்குமோ...

இது ஒரு கருத்துதான்.....முடிவு அல்ல. 

கொற்கைத் துறைமுகம்

தென்தமிழகத்தில், வரலாற்றுக் காலத்தில் கடல்கோளின் போது சுமார் பத்து கி.மீ. வரை, கடல் நிலப்பகுதிக்குள் சென்று அதன்பின், பின் வாங்கியதற்கான சான்று கொற்கைப் பகுதியில் தென்படுகிறது. கொற்கை சங்க காலத்தில் ஒரு கடற்கரைப்பட்டினமாக இருந்தது என்பதற்கு இலக்கியத்தில் பல்வேறு சான்றுகள் உள்ளன.
அவற்றில் சில:

ஈண்டுநீர் முத்துப்படு பரப்பின் கொற்கை முன்றுறை - நற்றிணை 23

கொற்கை முன்றுறை இலங்கு முத்து உறைக்கும் - ஐங்குறுநூறு 185.

நற்கொற்கையோர் நசைபொருந - மதுரைக்காஞ்சி 138

புரவிக் கால்வடுத் தபுக்கும் நற்றேர் வழுதி கொற்கை முன்றுறை - அகம் 130-11

பல்மீன் கொள்பவர் முகந்த இப்பி நார் அரி நறவின் மகிழ்நனைக் கூட்டும் - அகம் 296-10

வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர் ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக் கலிகெழு கொற்கை எதிர்கொள - அகம் 350-13

நளிநீர் முத்தம் வாள் வாய் எருத்தின் வயிற்று அகத்து அடக்கி – உமட்டியர் – புதல்வரொடு கிலிகிலி ஆடும் - சிறுபாணாற்றுப்படை 62

கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை வைகறை மலரும் நெய்தல் போல – கண் - ஐங்குறுநூறு 188

வடவயின் வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை மறப்போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும் கொற்கை அம் பெருந்துறை முத்தின் அன்ன நகை - அகம் 27-9

புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்துறை அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து தழையணி பொலிந்த – பழையர் மகளிர் பனித்துறை பரவ - அகம் 201-4

பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலனைக் கொன்ற தன் குற்றத்தை உணர்ந்து உயிர் துறந்த பின்னர் கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் என்பவன் மதுரை வந்து அரியணை ஏறினான். (சிலப்பதிகாரம் காதை 27 உரைபெறு கட்டுரை)

பாண்டிய மன்னர்களின் துறைமுக நகரமாகத் திகழ்ந்த கொற்கை தற்போது 7 கி.மீ. உள்தள்ளி யுள்ளது. இதன்மூலம் சங்க காலத்திற்கும் தற்காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், இந்தப் பகுதியில் கடல் ஏழு கி.மீ. பின்வாங்கியுள்ளது என அறிய முடிகிறது.

கொற்கை – மண்டபம், கொற்கை – கன்னியாகுமரி இவற்றிற்கு இடைப்பட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள மணல்மேடுகளும், நில அமைப்பும் இவ்விடங்களில் கடல் 7 – 10 கி.மீ. உள் சென்றிருக்கலாம் என உணர்த்துகின்றன.


மேற்சொன்ன தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது சுமார் ஆறாயிரம் அல்லது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டின் கடற்கரையில் பெரும்பாலான் பகுதிகளில் (எல்லா இடங்களிலும் இருக்கக்கூடும்- ஆனால் தரவுகள் போதாது) கடல் நீர் 7-9மீ. வரையிலும்,(வட தமிழ்நாட்டில் புலிகாட் பகுதியில் 18மீ. வரையிலும் கோடியக்கரை பகுதியில் 35மீ. வரையிலும்) நிலப் பகுதியில் முன்னேறி சென்றிருக்கிறது என்பது திண்ணமாகிறது. அதாவது பல நூறு சதுர கி..மீ. பரப்பளவுள்ள நிலம் கடலுக்கு அடியில் சென்றுவிட்டது.(அந்த நிலம் இப்போது மீண்டு விட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்) ஆனால் நாம் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது “இது ஒரு நாளிலோ ஒரு ஆண்டிலோ அல்லது பத்து ஆண்டுகளிலோ நடந்தது அல்ல. பல நூறு ஆண்டுகளில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு.” 

கடந்த 18000 ஆண்டுகளில் நிகழ்ந்த இந்த மாற்றங்கள் “ “HOLOCENE SEA LEVEL CHANGES” என்று அறியப்படுகின்றன. “ஹோலோசீன் கடல்மட்ட மாற்றங்கள்” என நாம் அழைக்கலாம். இப்போது முதல் 18000 ஆண்டுகள் முன்பு வரை இருந்த காலம் புவி வரலாற்றில் “ஹோலோசீன்” காலம் என்று அழைக்கப் படுகிறது. ஆக, ஓத அலைகளாலோ, புயல் அலைகளாலோ, சுனாமியலைகளாலோ ஒரு பெரும் நிலப்பரப்பை விழுங்க இயலாது. மாறாக நீண்டகாலப் போக்கில் நிகழும் கடல்மட்ட ஏற்றம் , கடல்மட்டத்திலிருந்து ஒருசில மீ. உயரமேயுள்ள பெரும் நிலப்பரப்பை ஆக்ரமிக்க முடியும் என்பது தெளிவாகிறது.

திருப்புல்லாணி – உத்திரகோச மங்கை


தென் தமிழகத்தில் இராமநாதபுரம் – இராமேஸ்வரம் அருகே உள்ள திருப்புல்லாணி, வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் 96 ஆவது திவ்யதேசமாகப் போற்றப்படுகிறது. பன்னிரு ஆழ்வார்களில் இளையவரும் இறுதியானவருமாகிய திருமங்கை ஆழ்வார் இத்திருத்தலத்தைப் பற்றிப் பாடிய பாசுரங்கள், நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் (1768 முதல் 1787 வரையிலான இருபது பாசுரங்கள்) இடம் பெற்றுள்ளன. அவற்றுள் எட்டுப் பாசுரங்களில் புல்லாணியின் புவியியல் / பூகோள அமைப்புப் பற்றிய நேரடியான குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. இடம் கருதி அந்தப் பாசுரங்களின் ஈற்றடிகளை மட்டும் தொகுத்துக் கீழே தருகிறேன்.


“......பெருகுகா தன்மை யென்னுள்ள மெய்தப் பிரிந்தானிடம்

பொருதுமுந் நீர்க்கரைக் கேமணி யுந்து புல்லாணியே“ 1769
“....தணரி லாவி தளருமென அன்பு தந்தானிடம்,

புணரி யோதம் பணிலம் மணியுந்து புல்லாணியே ” 1772
”....பவ்வத் திரையுலவு புல்லாணி கைதொழுதேன்
தெய்வச் சிலையாற்கென் சிந்தைநோய் செப்புமினே” 1780

திருமங்கை ஆழ்வார் தன் பாசுரங்களில் முந்நீர், பவ்வம், புணரி எனும் சொற்களால் கடலை வர்ணனை செய்கிறார். திருப்புல்லாணிக் கடற்கரையில் அலைகள் முத்துக்களையும் சங்குகளையும் கொண்டு வந்து சேர்த்தனவாம். அங்கே கடற்கழிகளும், கானலும், புன்னைக் காடுகளும் இருந்தனவாம். இவற்றின் மூலம் அவர் பாடிய காலத்தில், அதாவது எட்டாம் நூற்றாண்டில், திருப்புல்லாணி, கடற்கரையில் இருந்தது என்பது வெள்ளிடைமலை. (திருக்கோவிலின் முகப்பில் இருக்கும் மண்டபத்தில் உள்ள தூண்கள் கடற்கரையோரத்தில் அண்மையில் உருவான பாறைகளால் ஆனவை).

இன்று திருப்புல்லாணிக்கும் கடற்கரைக்கும் இடையே உள்ள தூரம் 4.5 கி.மீ. 1200 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளின் போது இந்த ஊர் வரை அல்லது இன்னும் வடக்கே கடல் பரவியிருந்திருக்கிறது இந்தப் புவியியல் வரலாற்று உண்மையை நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்.நமக்குக் காட்டுகிறது.

இங்கிருந்து வடமேற்கு திசையில் 10 கி.மீ. தொலைவில் உள்ள உத்திரகோசமங்கை அருகேயும் கடல் இருந்ததா எனும் வினா நம்முள் எழுகிறது. தேவாரத்தில் இந்தத் தலம் இடம் பெறவில்லை. திருவாசகத்தில் நீத்தல் விண்ணப்பத்தில் உள்ள 50 பாடல்களும், உத்திரகோசமங்கையில் பாடப்பட்டவை. ஆனால் ஒன்றில் கூட இத்தலத்தின் புவியியல் அமைப்பு பற்றிய குறிப்புக் கிடைக்கவில்லை.

ஆயினும், உத்திரகோசமங்கையைப் பற்றி இணையத்தில் காணப்படும் குறிப்புகள் அனைத்திலும்,

“ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன் விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதும்காண் அம்மானாய்!’

என்று மணிவாசகர் அண்ணாமலையில் இருந்து கொண்டு பாடியது இங்கே நடந்த நிகழ்வு பற்றித்தான்.” எனும் செய்தி காணப்படுகிறது.

“திருவிளையாடற் புராணத்தில் 57 ஆவது படலமாக வரும் வலை வீசிய திருவிளையாடல் நிகழ்வு, உத்திரகோசமங்கையில்தான் நிகழ்ந்தது, புராண காலத்தில் கடல் இங்கே இருந்தது, பின்வாங்கி, பின்வாங்கி தற்போது ஏர்வாடிக்குச் சென்றுவிட்டது, இங்கே கோவிலிலுள்ள திருக்குளத்தில் இன்றும் உப்புத் தண்ணீர்தான் உள்ளது. இந்தக் குளத்தில் வாழும் மீன் இனங்கள் யாவும், உவர் நீரில் வாழக்கூடியவையே, கடல் இங்கே இருந்தது என்பதற்கு இவையே சான்று” என்று புராணீகர்கள் சொல்லி வருகிறார்கள்.

புராணம் உண்மையா அல்லது கற்பனையா என்பது பற்றி நாம் இங்கே பேசப் போவதில்லை. இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளைக் கொண்டு, அந்நாளில் கடல்கோள் நிகழ்ந்ததா இல்லையா என அறிவதே நம் நோக்கம். கடந்த ஆண்டு, இந்த ஊருக்குப் போயிருந்தபோது, மக்கள் “திருக்குளத்தில் இன்றும் உப்புத் தண்ணீர்தான் உள்ளது” என்றார்கள்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொலையுணர்வுத் துறை வல்லுநர் பேராசிரியர் இரமேஷ் அவர்கள், இந்தப் பகுதிக்கான புவி அமைப்பியல் வரைபடம் ( Geomorphological map based on remote sensing data with limited field checks) ஒன்றை அனுப்பியிருக்கிறார். பேராசிரியருக்கு நன்றி. 

இந்தப் படத்தில், திருப்புல்லாணி பகுதியில் அந்நாள் கடற்கரை முகடுகள் (BEACH RIDGES) காட்டப்பட்டுள்ளன. மேலும், திருப்புல்லாணிக்கு வடக்கே சில கி. மீ. தூரத்தில் PALAEO LAGOON காட்டப்பட்டுள்ளது. கடல் ஓரிடத்தில் உயர்ந்து பின் தாழும்போது உருவாகும் நீர்நிலையே LAGOON, தமிழில் காயல் என்கிறோம். மேலும் உத்திரக் கோச மங்கையருகே, உப்பளங்களும் உள்ளன. இவற்றின் வாயிலாக, கடல்கோளின் போது, இந்தப் பகுதியி கடல் 7 கி.மீ. அகல நிலப்பரப்பை தன் கீழ் கொண்டது என அறியலாம்.


கீழடி மின்னூல்

கீழடி  - வைகை நதிக்கரையில் சங்க நகர நாகரீகம் 



தமிழக அரசின் அதிகாரபூர்வ மின்னூல் 

பதிவிறக்கம்: http://bit.ly/2kVdwJN

Fernando

The origin of the name Fernando

The people belonging to the Paravar caste in Tamil Nadu and Kerala in southern India, and in the west coast in Sri Lanka are coastal inhabitants, fishermen, seafarers, maritime traders. The Paravars are also known as Parava, Parathavar, Bharathar, Bharathakula Pandyar, Bharathakula Kshathriyar and so on.

During the thirteenth and fourteenth centuries, the powerful seafaring Middle Eastern Arabs having the support of local South Indian rulers started forcing the under-privileged Tamil Paravars of the caste-ridden Hindu society to embrace Islam. They converted a significant number of Paravars to Islam through preaching and by marrying Tamil Paravar women thus giving rise to a new generation of Muslim Paravars.

From 1532 onwards the majority of the Tamil Hindu Paravar community was converted ‘en masse‘ to Catholicism by the Portuguese and were baptized with Portuguese names as surnames. The most popular name amongst these was “Fernando.”

Currently, the Paravars in Sri Lanka are an officially gazette-notified separate ethnic community. There are significant numbers of Paravars in Colombo, Negombo and Mannar. In Colombo, most of the Bharatha community members are prosperous traders and are socially and economically active. Most Paravars in Negombo and Mannar are seafaring fishermen. 

Majority of the people belonging to the Paravar Community in India and Sri Lanka bear the surname “Fernando.” In Tamil Nadu, the question: “Are you a Fernando?“ is construed as, “Are you a member of the Paravar Community?“

In Sri Lanka, many Sinhalese people use the name Fernando irrespective of whether they are Catholics or Buddhists.

First, let us look at the origin of the name Fernando.

There were two main branches of the East Germanic tribe known as “Goths”: the Visigoths and the Ostrogoths. The Romans labelled them as “barbarians.“ The Romans initially settled the migrating Goths in their realms. Between 376 and 476 these aggressive outsiders dismantled the Roman Empire in western Europe. In 410, a Visigothic force led by Alaric I, the first King of the Visigoths from 395–410 sacked Rome. By 476, the Goths achieved total independence from the declining Roman Empire. The Goths extended their power from the Loire in France to the Straits of Gibraltar that connects the Atlantic Ocean to the Mediterranean Sea. 

The Visigoths conquered Spain in the 6th century, and as a result, many Spanish surnames are of Germanic origin.

A Visigothic tribal personal name, Frithnanth, composed of the elements “frith”, meaning peace along with “nanth”, meaning daring or brave gave rise to some twenty different spellings ranging from Ferdinand, Fernandez, Fernando, and Ferrandiz, to Hernan, Hernando and Hernandez. In this case, the given name as Ferdinand was introduced into most parts of Europe from the 15th Century. The Hapsburg dynasty took it to Austria where it became a hereditary name and owes its popularity in large measure to King Ferdinand III of Castile and Leon (1198 – 1252), who recaptured large areas of Spain from the Moors and was later canonized.

The Iberian Peninsula also known as Iberia, located in the southwest corner of Europe, is principally divided between Portugal and Spain. The Iberian and Italian name equal to the Germanic name Ferdinand is Fernando and Ferdinando respectively.

Fernando became the Spanish and Portuguese form of Ferdinand. The feminine form of Fernando is Fernanda in both Spanish and Portuguese.

Spanish surnames ending in -ez originated as patronymics denoting “the son of”; thus originated the name Fernández (son of Fernando). And in Portuguese, surnames ending in -es are used as patronymics denoting “the son of” for example Fernandes (son of Fernando).

By the way, I am a Tamil Catholic belonging to the Paravar community and my surname is Fernando. 

By T. V. Antony Raj Fernando

வடம் பிடித்தவர்கள் தடம் பதித்த வரலாறு

தேர் இழுத்தல், சப்பரம் தூக்குதல், வெட்டம் போடுதல், குடைபிடித்தல், பரிவட்டம் கட்டுதல், கும்பிடுசேவை, நேர்ச்சை பொன்றவைகள் கத்தோலிக்க திருமறையால் கலாச்சாரக் கண்ணோட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இவைகள் திருச்சபையின் சடங்குகள் என்று எண்ணிவிடலாகாது. மேற்கண்ட நிகழ்வுகள் ஒரு இன அடையாளம் என்பதை மாத்திரம் நினைவில் கொள்ள வேண்டும்.

இத்தகைய நடைமுறைகளைச் சிதைப்பதுவும், தடுத்து நிறுத்துவதும், தடை செய்வதும் தொன்றுதொட்டு தொடர்ந்த பாரம்பரிய வரலாற்றின் தடை கற்களாகும். கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வேரறுப்பதாகும். இவ்விதமே திருமறை தழுவிய பின் தம் முன்னோர்களின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை உணர்தல் வேண்டும்.

1713-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் நாளன்று இயேசு சபை மாநிலத்தலைவர் எம்மானுவேல் பெரைறா அவர்கள் ஏழு குருக்களுடன் தூத்துக்குடி பனிமய அன்னையின் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது என்ற குறிப்பு இயேசு சபை ஆவணத்தில் காணமுடிகிறது. 1714 முதல் தூத்துக்குடி மக்களுக்கு முறைப்படி பங்குகோவிலாக அறிவிக்கப்பட்டு ‘பெரிய கோவில்’ என்று பிரபலமானது. முன்னூறு ஆண்டுகால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டு தலைமுறை தலைமுறையாக விசுவாச சான்றாக நிற்கிறது.

சிஞ்ஞோர் தொன் கபிரியேல்
தெக்குரூஸ் வாஸ் கோமஸ்
 
1779-1808 கால அளவு பரதகுல சிம்மாசனத்தை அலங்கரித்த தொன்கபிரியேல் தெக்குருஸ் பரத பாண்டியன் அன்னையின் அருளால் கிடைக்கப்பெற்ற முத்துசிலாபம், கடல் வணிகம், சிறப்பான மீன்பிடித்தல் வருவாய், பிணக்கற்ற சமூக உறவினை மனதிற் கொண்டு அன்னைக்கு ஒரு அற்புதத்தேரை உருவாக்க எண்ணினார். மறைபோதகர்களிடம் உரிய அனுமதி பெற்று கடற்றுரை பரதகுல மக்களிடமும் கலந்து பேசி இன்று நாம் காணும் அற்புதத் தேரை தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னைக்கு உருவாக்கினார். 1805 ஆண்டுஅன்னையின் 250 ஆண்டு நிறைவை மனதிற்கொண்டு தெர்வலம் வர எத்தனித்தபோதும், தேர் வேலைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு பெறாததால் 1806-ஆம் ஆண்டு பெப்ரவரி திங்கள் 2-ம் நாள் அக்கோமான் வடம் பிடிக்க பொற்றேர் வலம் வந்தது. முறையே 1872, 1879, 1895, 1905, 1908, 1926, 1947, 1955, 1964, 1977, 1982, 2000, 2007 ஆகஸ்ட் 5-ம் நாள் அன்னையின் உற்சவ பெருவிழாவின் போது உலா வந்தது. 1806 முதல் 1947 வரை சாதித் தலைவர் வடம் பிடிக்கும் நிகழ்வு இருந்தது. ஏனெனில், தொன்று தொட்டு தேர்வடம் பிடிப்பதுவும், துவேஜ மரியாதை பெறுவதும் மரபாக இருந்து வந்துள்ளது.

‘மாபரத்தி சிறு பெண்ணாத்தாள்’ மதுரை மீனாட்சிக்கு தேர் ஓட்டி வடம் பிடித்த குலசேகர பரத பாண்டியன், என்ற வரலாற்றுக் குறிப்பும், கி.பி.18-ம் நூற்றாண்டு வரை மச்சான்சாமி முருகன் தேர் வடம் பிடித்த சான்றுகளும், உத்திரகோசமங்கையில் கற்றேர் ஓட்டிய பரதவர்கள் என்ற செவிவழி செய்தியும் காளையாவூர் என்ற கல்யாண வைபவ கட்டியமும் மரபை உறுதி செய்கிறது.

1806 ஆம் ஆண்டு தேர்வலம் வரக்காரணமாயிருந்த தொன் கபிரியேல் தெக்குருஸ் பரதபாண்டியன் “தேர்மாறன்” என்ற சிறப்பினைப் பெற்றான். அன்னையின் தங்கத்தேர் அன்று முதல் இன்று வரை அன்னையின் மங்கள மாலையாம் ஜெபமாலையை நினைவிற்கொண்டு 53 அடி உயரம் கொண்டது. அன்னையின் தேர் திருச்சபையின் போதனைக்கு உட்பட்டு மாதாவின் மகிமையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. விடியலின் வெளிச்சம் மீட்பின் முன்னோடி என்பதை மெய்ப்பிக்க உச்சியில் உதய தாரகையும் பரிசுத்த ஆவியின் கொடைகளை மெய்ப்பிக்க ஏழுகதிர்களும், சுழலும் விண்மீன்களூம், விண்ணவர்க்கரசி, மண்ணவர்க்கரசி என்பதை நினைவூட்ட மகுடமும், பிதாவின் குமாரத்தி என்பதற்காக பிதாவின் இருக்கை பீடமும், பன்னிரு கோத்திரங்களை நினைவுபடுத்தும் வகையில் பன்னிரு தூண்கள் தாங்கி நிற்கும் பீடமதில் சாதனை கரமேந்தி சுதனின் தாய் அமர்ந்திருப்பதும், அதற்கு மேலாக பரிசுத்த ஆவியின் பத்தினி இவள் என்பதை எடுத்துக்காட்ட புறாவடிவில் பரிசுத்த ஆவியும் உள்ளார்கள்.

மன்னருக்கு மன்னரான மாபரனை தந்தவள் என்பதால் விவிலியம் காட்டும் பன்னிரு வேந்தர்களும், வேத சாட்சிகளின் திட தைரியமானவள் என்பதால் வேதசாட்சிகளும், பரிசுத்தவான்களின் முன்மாதிரிகை என்பதால் புனிதர்களும், நற்செய்தியாளர்கள் கண்டு பாவித்த நற்செய்தி இவளென்பதால் நான்கு நற்செய்தியாளர்களும், சம்மனசுகளின் இராக்கினி இவள் என்பதால் வானதூதர்களும் தேரில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

இவைகளோடு இன அடையாளமான திருமாலின் மச்ச அவதார புருஷர்கள் மீனவர் என்ற பரதவர்கள் எண்பிக்க இரண்டு கடல் கன்னியரும், இரண்டு காளையரும் இடம் பெற்றுள்ளனர். மேலும் தாய் வழிபாடுமிக்க பரதவர்கள் அங்கயற்கண்ணியின் அடையாளமாக நான்கு கிளிகளும் உள்ளன.

- ப. பீற்றர் பிரான்சிஸ்

About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com