Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

PEARL CULTURE — ITS POTENTIAL AND IMPLICATIONS IN INDIA


STUDY OF PEARL CULTURE—ITS POTENTIAL AND IMPLICATIONS IN INDIA


Pearl fisheries o f India are of ancient origin. The pearl oyster resources are loca-ted mainlyin the Gulf of Kutch and Gulf of Mannar. They are subjected to wide fluctua-tions from year to year, particularly when they are exploited for natural pearls. In 1972, Veippalodai, near Tuticorin, was selected as a site for conducting experiments on pearl oyster farming and on the development of cultured pearls. Modem method of raft culture was adopted for raising mother oysters. This method proved successful despite the try-ing sea conditions prevailing during the monsoon months. The survival rate of the pearl oysters in the farm was about 78 % during the first year . The oysters grew fast in the farm in certain seasons and remained healthy throughout the experiments. Fouling by different organisms was a serious problem and, if not checked properly, led to mortality of oysters. Settlement of the spats of pearl oyster occurred at the farm from May to July.


by: K. ALACARSWAMI^ AND S.Z. QASIM^ 
Central Marine Fisheries Research Institute, Cochin-

ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரர் பேரில் பாடல்


எமைக்கண் பார்த்திடுவீர் - செபஸ்தியாரே
என்றுங் காப்பாற்றிடுவீர்

உம்மை அடைக்கலமாய் ஊரில் தெரிந்து கொண்டோம்
இம்மைத் துயர்பிணிகள் இடர் அற நேர்ந்து கொண்டோம்

வேத உண்மைக்காய்த் தந்தீர் - உயிர்ப்பலியாய்
வேதனை துன்பம் நொந்தீர்
பாதமுதல் சிரசில் பாழும் அம்பாலே நொந்தீர்
ஆதிக்கடவுள் திவ்ய அம்புயர் பதஞ்சோந்தீர்

நோயும் பிணியும் தீரும் - குடும்பமெல்லாம் 
நித்தம் உம் தஞ்சம் சேரும்
தாய்போல் அணைத்துக் காத்து சர்வ துன்பமும் நீக்கும்
சேயர்களாக எம்மைத் தினமும் தயவாய் நோக்கும்

நிம்பை நகரைப் பார்ப்பாய் - செபஸ்தியாரே
சொந்த மைந்தரைக் காப்பாய்
நிந்தைக்குரிய பேய்கள் நீடித்து ஆழல் ஏனோ
வந்துஉன் புஜவீர வலியைக் காட்டாததேனோ

MARITIME HISTORY OF THE PEARL FISHERY COAST

MARITIME HISTORY OF THE PEARL FISHERY COAST WITH SPECIAL REFERENCE TO THOOTHUKUDI

“Maritime History of the Pearl Fishery Coast with Special Reference to Thoothukudi - AD 1500-1658” is an attempt to highlight the maritime trade and commerce conducted by the Portuguese on the Pearl Fishery Coast between AD 1500 1658. Though the Portuguese had ports and trading centres in the Coromandel Coast which extends from Kanyakumari (Cape Comorin) to Pazhaverkadu (Pulicat) , the researcher has taken for her study the area lying between Kanyakumari (the southern most tip of India) and the island of Mannar which was called as the Pearl Fishery Coast by the Portuguese.




Prepared by: Rev. Sr. Decla

Download Link - 1
Download Link - 2

கடல் பட்டு



பழங்கால இத்தாலிய கலைகளில் ஒன்று ‘ கடல் பட்டு’ நெய்தல். இன்று பட்டுப் புழுக்களில் இருந்து பட்டு நூல்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் இத்தாலியின் சார்டினியன் தீவில் வசிக்கும் சியாரா விகோ, சிப்பியில் சுரக்கும் உமிழ்நீரில் உருவாகும் பட்டு நூலை எடுக்கிறார். தங்க நிறத்தில் ஜொலிக்கும் இந்தப் பட்டுத் துணியை பைசஸ் என்கிறார்கள். எகிப்து, கிரீஸ், ரோம் போன்ற இடங்களில் கடல் பட்டு உற்பத்தி ஒருகாலத்தில் இருந்திருக்கிறது. கடல் பட்டு எடை இல்லாதது. தொட்டால் சிலந்தியின் வலையைத் தொடுவதுபோல அத்தனை மென்மையாக இருக்கிறது. தண்ணீர், அமிலம், ஆல்கஹால் போன்றவற்றில் இருந்து காத்துக்கொள்ளக்கூடியது. வசந்த காலத்தில் கடல் பட்டுக்காக அதிகாலை கடலுக்குச் சென்று விடுகிறார் விகோ. ஒவ்வொரு சிப்பியிலும் உருவாகியிருக்கும் பட்டு நூலை, சிப்பிக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படுத்தாமல் வெட்டி எடுக்கிறார். 300 முதல் 400 தடவை வரை கடலில் மூழ்கி, 200 கிராம் பட்டு நூலைச் சேகரிக்கிறார். பைசஸ் அருங்காட்சியகத்தில் வைத்து, நூலைப் பக்குவப்படுத்தி நூற்க ஆரம்பிக்கிறார். கடல் பட்டு 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கலை. இதுவரை கடவுள், அரசர், போப் போன்றவர்களுக்கே கடல் பட்டு நெய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறிய அளவு கடல் பட்டுத்துணி ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு விலை போகிறது. ஆனால் இன்று சாதாரணமானவர்களுக்கும் கடல் பட்டை அளிக்கிறார் விகோ. இதற்காக பணம் எதையும் அவர் பெற்றுக்கொள்வதில்லை.




ஒரு சின்னச் சிப்பியில் இருந்து முத்து, பட்டு எல்லாம் ஆச்சரியமா இருக்கு!

இறால் பிரியாணி

தேவையான பொருட்கள் :

இறால்  – 1/2 கிலோ
பாசுமதி அரிசி – 400 கிராம்
பல்லாரி – 2
தக்காளி -3
பட்டை -1 துண்டு
ஏலம் – 3
கிராம்பு – 3பச்சை மிளகாய் – 2
இஞ்சிபூண்டு விழுது – 1 1/2 மே. கரண்டி
காயல் மசாலா தூள்- 3 மே.கர
மல்லி இலை- தேவைக்கு
புதினா இலை – தேவைக்கு
ரம்பா இலை – தேவைக்கு
எலுமிச்சை – 2
நெய் -3or4 மே.கரண்டி
எண்ணெய் – 4 மே.கரண்டி
தயிர் – 1 கப்
தேங்காய் பால் பவுடர் – 2 மே. கரண்டி
உப்பு தேவைக்கு


செய்முறை:
இஞ்சி பூண்டுடன் பட்டை கிராம்பு ஏலம் தயிர் ரம்பா சேர்த்து கலந்து வைக்கவும்.
1. இராலை நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
2. பல்லாரி , தக்காளி யையும் நீள வாக்கில் வெட்டி வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில்  எண்ணெய் , நெய் யையும் ஊற்றவும்.
4. எண்ணெய் காய்ந்த பின்பு  வெங்காயத்தை போடவும்.
5. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சிபூண்டு கலவையினை போடவும்.
6. பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
7. அடுத்து தக்காளி உப்பு காயல் மசாலாத்தூள் சேர்க்கவும்.
8. நன்கு வதக்கியதும் பச்சைமளகாய், மல்லி இலை, புதினா இலை போட்டு கிலறி பின்பு இராலை சேர்க்கவும்.
9. 5 to10 நமிடம் வேக வைத்து பின் தேங்காய் பால் பவுடர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அனைக்கவும்.
10. அரிசி நன்றாக கழுவி 1 க்கு 1 3/4 அளவு தண்ணீர் சேர்த்து rice cookerல் வேக வைக்கவும். அதில்  இரால் gravy ஐ கலந்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து குக்கரை on பண்ணவும். பிரியாணி ரெடியான பின்பு கடைசியாக எலுமிச்சை சாறு ஊற்றி பரிமாறவும்.
சூடான சுவையான இரால் பிரியாணி ரெடி…

வலம் புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும்

வலம் புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும்:-


1.ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ëந்து இருக்கும்.

2. கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது.

3. வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மகத்திதோஷம் இருப்பின் போய்விடும். இதையே தர்ம சாஸ்திரம். ``சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்'' என்று விளக்குகிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.

4. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.

5. வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.

6. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.

7. அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16-வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும்.

8.சுத்தமான உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.

9. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம்.

10. பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் விலகும்.

11. பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது...

சிங்கி ரால் வறுவல்

சிங்கி ரால் வறுவல்



தேவையானவை:

  • சிங்கி ரால் – 1/4 கிலோ
  • வற்றல் தூள் – 2 தேக்கரண்டி
  • உப்பு, மஞ்சள் – தாளிக்க எண்ணெய்
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • முருங்கை இலை – சிறிது

செய்முறை:


சிங்கிராலை சுடு நீரில் போட்டு வைத்து மேல் தோட்டை உடைத்து உள்ளே உள்ள பகுதியை எடுக்கவும். புட்டு மாதிரி உதிர்த்து வற்றல் தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தன் தண்ணீரில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முருங்கை இலை, சீரகம், மிளகாய் சேர்த்து தாளிக்கவும். சிங்கிராலையும் சேர்த்து கிளறி இறக்கவும்.



வாளை மீன் புட்டு


தேவையானப் பொருட்கள்

  • முள்வாளை மீன்(துப்புவாளை)-1
  • (வாளை மீன் போல ஆனால் நிறைய முள் இருக்கும்)
  • வெங்காயம்-2
  • தேங்காய்-3/4 கப்
  • சீரகம்-1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள்-2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை-2 கொத்து
  • உளுத்தம் பருப்பு-2 டீஸ்பூன்
  • கடுகு-1/2டீஸ்பூன்
  • எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
  • உப்பு


செய்முறை

மீனை சுத்தம் செய்து உப்பு 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

தேங்காய்,மிளகாய் தூள் மஞ்சள்தூள்,சீரகம்,சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றை கொரகொரப்பாக தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.

வேக வைத்த மீனிலிருந்து முட்களை நீக்கி உதிர்த்தது போல எடுக்கவும்.
முட்கள் அதிகமாக இருப்பதால் கவனமாக எடுக்கவும்

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து,கறிவேப்பிலை தாளித்து,வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

முக்கால் பாகம் வதங்கியதும்.உதிர்த்த மீன்,அரைத்த தேங்காய் கலவை,தேவையான உப்பு போட்டு 5 நிமிடம் நன்றாக கிளறி இறக்கவும்.

மீனை வேகவைப்பதற்கு உப்பு சேர்த்திருப்பதால் வெங்காயம்,தேங்காய்க்கு வேண்டிய அளவு மட்டும் உப்பு சேர்க்கவும்.


குறிப்பு:

மீனிலிருந்து முள் எடுப்பது சிரமமாக இருந்தாலும் மிகவும் சுவையானதாக இருக்கும். திருக்கை மீன்,சுறா மீனிலும் இதை போல் செய்யலாம்.

இறால் குழம்பு

தேவையானப் பொருட்கள்

இறால் - அரை கிலோ
சி. வெங்காயம் - ஐம்பது கிராம்
பூண்டு - மூன்று பல்
தக்காளி - மூன்று
மிளகாய்த்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்
உப்பு -ஒன்றரை டேபிள் ஸ்பூன்
எண்ணை - மூன்று டேபிள் ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - மூன்று கொத்து
தேங்காய்த் துருவல் - மூன்று டேபிள் ஸ்பூன்
சீரகம் - கால் டீ ஸ்பூன்


செய்முறை

* இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்கவும்.
* வெங்காயத்தை இரண்டிரண்டாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்கவும்.
* தேங்காய் & சீரகத்தை அரைக்கவும்.
* சோம்பை நன்றாக தட்டி வைக்கவும்.
* புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி சோம்பு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி இறாலை சேர்க்கவும்.
* இறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி புளியை ஊற்றவும்.
* ஐந்து நிமிடம் கழித்து தேங்காய் ஊற்றி மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

KERALA COAST THE PORTUGESE CONTRIBUTIONS

Rare Book Collection

KERALA COAST THE PORTUGESE CONTRIBUTIONS


by: P.J. TOMY M.Sc. (Agri.)

இலங்கை-கீழக்கரை இனிய தொடர்புகள்

Rare book Collection

இலங்கை-கீழக்கரை இனிய தொடர்புகள் (PDF வடிவம்)


by: மானா மக்கீன்

Studies on Pearl-Oysters and Pearls.-I.


Title: Studies on Pearl-Oysters and Pearls.-I. The Structure of the Shell and Pearls of the Ceylon Pearl-Oyster (Margaritifera vulgaris Schumacher): with an Examination of the Cestode Theory of Pearl-Production

பண்டைய கடற்கரை கிராமங்களில் காணப்பட்ட பப்பரபுளி மரம்


ஜீவனுள்ளவைகளில் வெகுகாலம் நீடித்திருக்கக்கூடிய பப்பரப்புளி யென்றமாம் 20,000 வருஷங்கள் ஆயுளுடையதாயிருக்கிறதென்று சொல்லுகிறார்கள். இம்மரம் தென்னிந்தியாவில் அங்கங்கே நாளது வரையும் காண்கிறோம். தென்னிந்தியாவிற்கு இது இயற்கையாயுள்ள மரமேயொழிய நூதனமான மரமல்ல. மேலும் இம்மரத்தின் தன்மையை அறிந்த சித்தர்கள் அதில் ஒரு சிறு துவாரஞ்செய்து துருசு சுண்ணத்தை அமுக்கி வைப்பார்கள்; சிறிது நேரத்துக்குள் அதிலிருந்து தண்ணீர் ஊறும்; அந்தத் தண்ணீரைச் சிறு பாத்திரங்களில் பிடித்துத் தங்களுக்கு வேண்டிய அளவு சாப்பிடுவார்கள். சாப்பிட்டபுடன் தங்களையறியாத மயக்கம் அவர்களுக்கு உண்டாக நாலுநாள் பரியந்தம் பிரக்கினையற்றுப் படுத்திருந்து பின் எழுந்திருப்பார்கள். இப்படி அதன் ரசத்தைச் சாப்பிடுவது அவர்கள் செய்யும் யோக சாதனைக்கும் கற்பசாதனைக்கும் அனுகூலமானதென்று எண்ணப்படுகிறது. ஒரு மரத்தின் உபயோகத்தை நன்றாய் ஒரு தேசத்தார் அறிந்திருப்பார்களானால் அந்த மரம் அத்தேசத்திற்கேயுரியதென்று சொல்லாமலே விளங்கும். தென்னிந்தியாவின் சில இடங்களில் இதைப் பூத விருக்ஷமென்று சொல்லுவார்கள். இது பரிசுத்தமான விருக்ஷமென்று பொதுவாக எண்ணப்படுகிறது. ஆகையினால் அதன் கிளைகளையாவது இலைகளையாவது ஒருவரும் சேதப்படுத்துகிறதில்லை. அதன் அடிப்பாகம் பெருத்து நுனிப்பாகம் சிறுத்துக் கோபுரத்தின் சாய்வாக வளர்ந்திருக்கும். 

இம்மரத்தைத் தஞ்சாவூர் ஜில்லாவிலும் ஏராளமாய்க் காணலாம். திருநெல்வேலி மதுரை முதலிய இடங்களிலும் அங்கங்கேயிருக்கிறது. தஞ்சாவூரில், சிவகங்கைத் தோட்டத்தில் ஒரு மரமும் வெண்ணாற்றங்கரையில் ஒரு மரமுமிருக்கிறது. இப்படியே காவேரிப் பாய்ச்சலிலும் அனேக மரங்களிருக்கலாம். இம்மரங்களைக் குறுக்காக அறுத்து அவைகளில் சுற்றிச் சுற்றியிருக்கும் ரேகைகளைக்கொண்டு இத்தனை வருஷமாக இம்மரங்கள் நிற்கின்றன. வென்று சாஸ்திரிகள் கண்டுபிடிக்கிறார்கள். இவைகளைக் கொண்டு நாம் சொல்லுகிற முதல் ஊழியின் காலம் அதிகமாகாதென்றே தோன்றுகிறது. இம்மரங்கள் வேறு சில இடங்களிலிருப்பதாக அடியில்வரும் வசனத்தில் காணலாம்.

Dravidian comparative Grammar by Bishop Caldwell, Page 66, Foot-note.

"Huge old specimens of the Baobab, or Adansonia Digitata, an African tree, of which the Hindus do not know even the name, may still be seen in or near various sites of foreign commerce in the extreme south of the Indian peninsula : e. g. in Kottar, near Cape Comorin, and near Tuticorin in Tinnevelly-possibly on the site of the ancient Kolkhi."

"இந்தியாவின் தென்கோடியில், அந்நிய தேசங்களோடு வர்த்தகம் நடத்திவந்த அநேக துறைமுகப் பட்டணங்களிலும் அவைகளுக்குச் சமீபத்திலும், பேயோபாப் அல்லது அடன்ஸோனியா டிஜிற்றாற்றா என்ற ஆப்பிரிக்காக் கண்டத்து மரம், நீண்டு பாரித்துப் பரிமாண்டமாய் வளர்ந்து நிற்பதைக் காணலாம். அவைகள் வெகுகாலத்து மரங்கள். உதாரணமாக, கன்னியாகுமரி முனைக்குச் சமீபமான கோட்டாற்றிலேயும் திருநெல் வேலியைச்சார்ந்த தூத்துக்குடிக்குச் சமீபமாகக் கொற்கையென்ற பழைய நகரிருந்த இடத்திலேயும் இம்மரங்கள் நிற்கின்றன. இவைகளின் பேர்முதலாய் இந்துக்களுக்குத் தெரியவில்லை."

மேலேகூறிய பேயோபாப் என்றமரம் ஆப்பிரிக்காக் கண்டத்து மரமென்றும் அன்னியதேச வியாபார சம்பந்தமான துறைமுகப் பட்டணங்களில் அது காணப்படுகிறதென்றும் அதன் பெயர் இந்துக்களுக்குத் தெரியவில்லையென்றும் சொல்லுகிறார். இம்மரத்தின் உபயோகத்தை அறிந் திருந்த தென்னிந்திய ஜனங்களுக்கு அது நூதனமான மரமல்ல. ஆனால் ஆப்பிரிக்காவுக்கும் தென்னிந்தியாவுக்கும் நடுவிலுள்ள பூபாகத்தில் இம்மரம் ஏராளமா யிருந்திருக்க வேண்டுமென்றும், அப்பூபாகம் அழிந்தபின் அதற்குச் சம்பந்தப்பட்டதான பூமிகளில் அங்கங்கே காணப்படுகிறதென்றும் நாம் நினைக்க ஏதுவிருக்கிறது. அம்மரத்தைப்பற்றி,

உவின்ஸ்லோ அகராதி பக்கம் 728.

"பப்பரப்புளி-(also பெருக்கமரம்) A species of large tree, Adonsonia digitata, L" என்றும், வாசுதேவநாயுடு எழுதிய

ஆயுர்வேத பாராவாரம் பக்கம் 676.

"யானைப்புளியமரம், பப்பரப்புளி, பூரிமரம், அடன்ஸோனியா டிஜிடாடா Adonsonia Digitata பேயோபாப் Baobab மங்கி ப்ரெட் டரீ Monkey-bread tree. ஆப்பிரிக்கா தேசத்திலும் இப்போது நமது தேசத்திலும் இந்த மரம் விஸ்தாரமாய்விட்டது. பழத்தின் சதைக்கு ஸங்கோசநி (நரம்புகளையும் சரீரதாதுக்களையும் சுருக்கி உதிரம் கீழ் முதலியவற்றை நிறுத்தும்) அந்தரஸ் நிக்தகாரி (உட்கொண்டால் தாதுக்களின் எரிச்சலைச் சாந்தி செய்து அவற்றைத் துவள்விக்கும்) செய்கைகளுண்டு. இதைச் சீதபேதிக்கும் சீதசுரங்களுக்கும் கொடுக்கலாம்."

என்றும் சொல்லியிருப்பதினால் மேலேகூறிய மரம் பப்பரப்புளி என்று அறியலாம். மேற்கண்ட வரிகளைக் கவனிக்கையில் நரம்புகளையும் சரீரதாதுக்களையும் சுருக்கி உதிரம் சீழ் முதலியவற்றை நிறுத்தக் கூடியதான சக்தி பப்பரப்புளி (பூத விருக்ஷம்) என்ற மரத்துக்கு இருந்ததினால் சித்தர்கள் அதை உபயோகப்படுத்துகிறதாகச் சொல்லப்படுகிறது மிகப் பொருத்தமாகத் தெரிகிறது. நீண்ட ஆயுளுள்ள இம்மரம் நீண்ட ஆயுளை விரும்பித் தவஞ்செய்த பெரியோர்களுள்ள லெமூரியாவில் அது பூர்வமாயிருந்திருக்க வேண்டும். லெமூரியா அழிந்துபோன பின் அதோடு நிலச் சம்பந்தம் பெற்ற ஆப்பிரிக்கா தென்னிந்தியா முதலிய பூபாகங்களில் காணப்படுவது இயற்கையே. பொதிகைமலையின் பக்கத்திலும் காவேரியாற்றின் பக்கங்களிலும் இருப்பதே அவைகள் மற்றத் தேசங்களிலிருந்து வரவில்லையென்பதைக் காட்டுகிறது.

Castes and Tribes of Southern India by E. Thurston Vol. I, Intro. P. XXIV.

"On the evidence of the very close affinities between the plants and animals in Africa and India at a very remore period, Mr. R. D. Oldham concludes that there was once a continuous stretch of dry land connecting South Africa and India."

"மிகப்பழமையான காலங்களில் ஆப்பிரிக்காவிலிருந்த ஸ்தாவரஜங்கமங்களுக்கும் இந்தியாவிலிருந்த ஸ்தாவரஜங்கமங்களுக்கும் இருக்கும் நெருங்கின ஒற்றுமையைக்கொண்டு, ஆர். டி. ஓல்ப்ஹாம் என்பவர், ஒருகாலத்தில் தென் ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் ஒரே தொடர்ச்சியான பெருந்தரை இணைத்துக் கொண்டிருந்தது என்று தீர்மானிக்கிறார்."

மேற்கண்டவரிகளை நாம் கவனிக்கையில் லெமூரியாக்கண்டமும் தென் ஆப்பிரிக்காவும் வெகுகாலத்துக்கு முன் தொடர்ச்சியான பூகம்பந்தமுடையதா யிருந்ததென்று தெரிகிறது. லெமூரியா அழிந்தபின் ஆப்பிரிக்காவின் தென் பாகத்திலும் தென்னிந்தியாவிலும் காணப்படும் தாபரவர்க்கங்களின் ஒற்றுமையே இதற்குக் காரணமென்றுஞ் சொல்லுகிறார். இதைக் கொண்டு பப்பரப்புளி என்ற மரம் ஆப்பிரிக்காவிலிருந்து, கொண்டுவரப்படவில்லை, தென்னிந்தியாவிற்கேயுரிய மரமென்று தெளிவாகத் தெரிகிறது.

மேலும் பதினாயிர வருஷங்களுக்கு முன்னாலேயே எகிப்தியர்களிருந்தார்களென்றும், அவர்கள் தண்டசக்கரம் முதலிய யந்திரங்களின் உதவியின்றிக் கையினாலேயே மண்பாண்டங்கள் செய்தார்களென்றும் காண்கிறோம்.

http://tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=166&pno=158

செங்கோல் மாமரி பேரில்



விண்ணின் கண்சிரண வெண்மை திகழ் தணமதியில்
மீ தெழுந்த கிருபை செய் செய் செய்

புண்ய செங்கோல் மாமரியே
புவனம் படைக்கு முன்னம் அமைந்த மணியே
பூவுலகே வைகைய பாவமோ நீவோர்
புதரனாகத் திவ்ய சேசரசர்தபை; பெற்றநற்றாயே

போற்றும் தாவீது மன்னர் கோத்தரியே
பூவிப் புகழ் அன்னம்மாளின் தவசப் புத்தரியே
பூரண ஆரண காரண செல்வியே ரங்கி
பூசனை செய் தேவணங் குந்தாச ரெங்கண்மீதே

பன்னிரெண்டு தாரகை மவுலி
பாதுவை நேதரமாய்ப் புனைந்த சுசீலி
பன்கைச் சென்னியைச் சின்னலால்றதமா
பாக்கியவதியே தமியோர் யோகயார் யத்தமை ஐயர

தேவலோக ராஜேஸ்வரி
சிறந்தோங் கிறம்ப நகரமா நிதவம் மரியே
தீதவை காதெமைப் பாதுகாற் ணடருள்
சேய ரெமக்காக வந்தனம் நய மைந்தனோடிருந்து 

கடல் உணவுகள் : மீன்

மீன் சம்மந்தப்பட்ட அருந்தக்கூய உணவுகள் இரண்டு வகைப்படும். அவை துடுப்பை மீன் மற்றும் ஓட்டுடலிகள் ஆகும்.
சத்துகளின் நிலை :
மீன் உணவு வகைகளில் புரதச் சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றன. சுமார் 20 சதவிகித புரதச் சத்துகள் அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கொழுப்பு சத்துக்கள் ஆடு மற்றும் கால்நடை இறைச்சியை காட்டிலும் குறைவாகவே காணப்படுகிறது. மேலும் மீன் உணவுகளில் சுண்ணாம்பு சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் மீன் உணவு வகைகளில் கரையும் வைட்டமின்களான  வைட்டமின் சி , நியாசின் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

கடல் உணவுகளின் சத்துகள் நிலை :
மீன்கள் பிடித்த மூன்று மற்றும் ஆறு மணி நேரம் கெடாமல் இருக்கும். ஆறு மணி நேரம் கழித்து பிறகு பராமரிக்கவில்லையெனில் கெட்டுபோய் பயனற்றுவிடும்.
  1. நுண்ணுயிரியல் மாற்றம்      பாக்டீரியா போன்ற நுண்ணியிரின் வளர்ச்சி அதிக அளவில் பெருக்கப்பட்டு நொதிகள் தாக்கப்படுவதால் தரம் குறைகின்றன.
  2. உயிர் வேதியில் மாற்றங்கள்

    மீள்களில் உள்ள பாஸ்போ கொழுப்பு மற்றும் கோலின் ஆகியவற்றில் பாக்டீரியா செயல்களினால் டிரைமீத்தைல்  அமீன் உருவாக்கப்பட்டு மீன் நாற்றத்தை விளைவிக்கின்றன.
பதப்படுத்துதல் மற்றும் சேமிப்பு :
மீன்கள் எளிதில் கெடுவதால்இ அவற்றை கடலில் பிடித்தவுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் குளிர் பெட்டகத்தில் இரண்டு நாட்களுக்கு மேல் மீன்களை சேமிக்க முடியாது.முன்னதாக பெட்டகப்படுத்தப்பட்ட மீன்கள் மட்டும் ஓட்டுடலிகள் மிக சிறிய கால அளவே சேமிக்க முடியும். உறைந்த மீன்களை வாங்கிய பிறகு உறையும் கருவியில் சேமிப்பதன் மூலம் மீன்களின் தரத்தை மேம்படுத்தலாம். உறையும் கருவியின் வெப்பத்தை சேமிக்கும் போது,நிற மாறுபடாமல் இழை நய அமைப்புஇ ருசி மற்றும் சத்துகளின் நிலை மேம்படுத்தப்படுகிறது.சீர்மையாக்கப்பட்ட மீன்கள் மூடிய நிலையில் குளிர் பெட்டகத்தில் சேமிப்பதன் முலம்இ அதிக நாட்கள் கெடாமல் பாதுகாக்கப்படுகின்றன.

குளிர் சேமிப்பு முறைகள் :
மூன்று பங்கு மீன்களை 1 பங்கு உப்பு கரைசலில் வெளிப்பூச்சுவதன் மூலம்உடல் அல்லது தலை நீக்கிய மீன்களை பதப்படுத்தப்படுகின்றன.

பதப்படுத்துதல் :
மீன்கள் கலன் அடைப்பு பதன முறை குளிர்விக்கும் முறை உடையும் முறை மற்றும் சீர்மை பதள முறை ஆகிய முறைகளைகட கொண்டு பதப்படுத்தலாம். மற்ற உணவு வகைகளை காட்டுலும் மீன்களின்நொதிகள் 50 டிகிரி செல்சியஸ் (தண்ணீர் வெப்பம்) அதிக  செயல்திறன் கொண்டுள்ளது. மீன்களை நீண்ட நாட்களுக்கு பிறகு  உபயோகப்படுத்த வேண்டும். கலன் அடைப்பு முறை உறையும் அல்லது சீர்மை பதன முறையில் பதப்படுத்த வேண்டும்.

கலன் அடைப்பு முறை:
இத்தகைய முறையில் மீன்கள் உடல் அல்லது தலைகள் நீக்கப்பட்டு கழுவிய பிறகு கலனில் அடைத்து பதப்படுத்தப்படுகிறது.

குளிரூட்டும் முறை :
குறைந்த அளவு வெப்பத்தில் மீன்களை கெட செய்யும் நொதிகளின் செயல்திறன் அதிகம் காணப்படுகிறது. ஏனெனில் மீன்களின்குறைந்ந வெப்பத்தில் ஆக்ஸிஜனேற்றம் அடைவதால் மீன் உறையும் வெப்பதிற்கு மேல் பிடிக்கப்பபடுவதால. வெகு விரைவில் கெட்டுப்போய் நாசமாகின்றன.

உறையும் முறை :
இம்முறையில் மீன்களின் சேமிப்பு காலம் நீளுவதோடு புத்துணர்வு கொண்ட மீன்கள் போல் காட்சியளிக்கின்றன.

சீர்மையாக்கம் முறை :
உப்பு கரைசலில் மீன்களின் சேமிப்புஇ உலர்த்துதல் ஊறுகாய் தயாரிபதன் மூலம் மீன்களை சீர்மை முறையில் பதப்படுத்லாம்.

மீன்களை உப்பிலிடுதல் மற்றும் மீன் கருவாடு :
மீன்களை உப்புக் கரைசலில் பதப்படுத்துவது  உப்பிலிடுவதாகும். (எ.டு) உப்பிலிட்ட கெரிங் வகைகள்இ ஸ்பிராட்ஸ் கானாங்கத்தி மற்றும் சால்மான் ஆகியவை உகந்ததாகும்.

உப்பிலிடுதல் மற்றும் உலர்த்தல் :
மீன் பதப்படுத்துதல் மற்றும் உலர்த்துதல் முக்கிய பதன முறையாக விளங்குகிறது.

மீன் சார்ந்த உப மற்றும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் :
மீன்கள் கடலில் பிடித்தவுடன் உட்கொள்ளப்படுகின்றன. சில வகை மீன்கள் பதப்படுத்தப்பட்ட பிறகு பயன் படுத்தப்படுகிறது. பதப்படுத்துதல் மற்றும் பதனிடும் பொழுது மீன் மற்றும் நண்டுகளின் பாகங்கள் கழிவுகளாக கருதப்படுகின்றன. அதுபோல் சில ருசியற்ற மீன்கள் மனித நுகர்வுக்கு அற்றதாகும். இத்தகைய மீன் கழிவுகள் உப மற்றும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கு மூலப்பொருட்களாக விளங்ககிறது.

மீன் புரதக் கலவை :
மீன் புரதக் கலவை என்பது நிலையான புரதக் கலவையாகும். இவை முழு மீன் மற்றும் இதர நீர்வாழ் இனங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

தோராய தொகுப்புகள் :
மீன் புரதக் கலவை மனிதனுக்கு  நுகர்வுக்காக தயாரிக்கப்பட்டாலும் அவை அப்படியே உட்கொள்ளகப்படுவதில்லை. இவை மனித உணவு கட்டுப்பாட்டில் புரத மேலிடுவதாக சேர்க்கப்பட்டுள்ளது.ரொட்டி மற்றும் பிஸ்கட் ஆகியவற்றில் 5 முதல் 10 சதவிகித அளவு புரதக் கலவை சேர்க்க அனுமதி அளிக்கப்படடடுள்ளது.
பாரம்பரிய மீன் உப பொருட்கள் யாதெனில்  மீன் உணவு அல்லது மீன் தூள்கள். மீன் உடல் மற்றும் மீன் ®ரல் எண்ணெய், பதப்படுத்திய மீன் சுவாசப்பை மற்றும் இதர பல பொருட்கள் ஆகும். மீன் புரதக் கலவை, மீன் வெள்ளைக் கரு, மீன் பசை, ஊன் பசை,இ முத்துசசாரம் , பெய்டோன்ஸ் அமினோ அமிலங்கள், புரோட்டமின் மீன் தோல்கள்ஆகிய  மீன் பதப்படுத்துதல் மற்றம் மீன் கலீவுகளின் மூலம் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.கைடின் மற்றும் கைட்டோசான் ஆகியவை இறால், நண்டு மற்றும் கணுக்காலி வகை கழிவுகளை பதப்படுத்தப்படுவதன் மூலம் தயாரிகிகப்படுகிறது. உயிர்வேதியில் மற்றும் மருந்து சம்மந்தப்பட்ட பொருட்களான பித்த உப்பு , இன்சுலின்இ குளுகோசுஅமின் மற்றும் பல மீன் சம்பந்தப்பட்ட உப பொருட்கள் ஆகும். சில முக்கிய உபபொருட்கள் கீழ் வருவன :

ஊன் பசை:
ஊன் பசை என்பது ஒர் வகை புரதமாகும். இவற்றில், டிரிப்ட்டோபேன் என்ற முக்கிய அமினோ அமிலம் பற்றாக்குறையாக இருப்பதால் மனித மற்றும் விலங்கு ஊட்டசத்துகளின் மூலதனமாக கருதப்படமாட்டாது. ஏனெனும் லைசின் , மீத்தியோனைன் ஆகிய அமினோ அமிலங்கள் அதிகம் காணப்படுகின்றன. உன் பசை , சில தொழிற்சாலை பொருட்கள் மற்றும் உணவு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப் படுகின்றன. இத்தைகய ஊன் பசை மழுன் தோல் மற்றும் எலும்புகளிருந்து தயாரிக்கப்படுகின்றன.

இன்சுலின் :
இன்சுலின் என்பது †ார்மோன் வகையை சார்ந்ததாகும். இவை மனிதனின் சர்க்கரை நோயான டையபடிஸ் மெலிடஸ் என்ந நோயை கட்டுப்படுதடதவல்லதாகும்.

மீன் வெள்ளைக் கரு:
மீன் வெள்ளைக் கரு பெளதிக மற்றும் வேதியியல் உடமைகள் முட்டைக் கருவின் உடமைகள் போல் காணப்படும். இவை மீன் கலிவுகள் மற்றும் மீன் ஓடுகளை பதப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன.

பயன்கள் :
மீன் வெள்ளைக் கரு மருந்து தயாரிப்பு பொருட்கள் மற்றும் உணவு பொருட்களான குளிர்களி , சூப் தயாரிப்பு, சாக்லேட் மற்றும் பேக்கிரி பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகின்றன.

இறைச்சி மற்றும் இறைச்சி சார்ந்த பொருட்கள் :
மீன் இறைச்சி என்பது மீனின் தோல் , செதில் மற்றும் எலும்புகளை எடுத்த பிறகு உள்ள சதை அல்லது மாமிசமாகும். இவை சில அதிக வர்த்தகம் வாய்ந்த மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புகளில் பயனடபடுத்தப்படுகின்றன.

மீன் இறைச்சி தயாரிப்பு :
மீன் இறைச்சியானது , வன் காற்று மீன் அல்லது மூழு மீன்களை  கொண்டு தயாரிப்பதாகும். வன்காற்று மீன்களிருந்து தயாரிக்கும் மீன் இறைச்சி நிறம் , தோற்றம் மற்றும் மணம் ஆகியவை மேம்படுத்தப்பட்டு அதிக தரம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

மீன் இறைச்சி சார்ந்த பொருட்கள்:
மீன் இறைச்சி பதப்படுத்தப்பட்ட பொருட்களான மீன் கண்டறிமானி கட்லெட் , பர்கர் மற்றும் தரம் குறைந்த உப்பு மற்றும் உலர் பொருட்கள் தயாரிப்பில் மூலதனமாக பயன்படுத்தப்படுகின்றன.

மீன் கண்டறிமானி :
மீன் இறைச்சியை , சதவிகித உப்புகளோடு கலந்து , செவ்வக பலகைகளாக உருவாக்கி , உறைய வைக்க வேண்டும். பிறகு உறைந்த இறைச்சியை சம அளசில் துண்டுகளாக வெட்டிய பிறகு , வெளித் தள்ளும் முறை (மாவு மற்றும் ரொட்டி தூளை) தோய்க்க வேண்டும். மாவு மற்றும் ரொட்டி தூளை கொண்ட மீன் கண்டற்மானிகளை எண்ணெயில் 180 முதல் 200 டிகிரி செல்சியஸ் வெப்பதில்  சுமார் 20 விநாடி வறுக்க வேண்டும் . பின்பு குளிர வைத்து , மீன் கண்டறிமானிகளை உறைய வைத்து சேமிக்க வேண்டும்.

மின் பர்கர்:
மின் இறைச்சிகளைக் கொண்டு பர்கர் தயாரிக்கப்படுகின்றன. சமைத்த மீன் இறைச்சியை உருளைக் கிழங்கு மற்றும் மிதமான நறுமணப் பொருட்களுடன் கலந்து தட்டை மற்றும் உருண்டை துண்டுகளாக்கி மாவு மற்றும் ரொட்டி தூள்களில் தோய்த்து பின்பு வறுக்க வேண்டும்.

உப்பிலிட்ட மீன் கேக் :
மீன் இறைச்சியை உப்புடன் கலக்க வேண்டும். உப்பு கலப்பதின் நோக்கம் யாதெனில் உப்பானது புரதத்தின் இயல்பு தன்மையை கலைத்து, நீர் உட்கொள்ளும் தன்மையை குறைத்து, நீரை அதிக அளவில் வெளியடச் செய்யும். பின்பு மின் உப்பு கலவையை நன்றாக அழுத்த வேண்டும். இறுதியாக உருவாகும் பொருட்களை உலர்த்த வேண்டும்.மேலும் கட்லெட் , மீன் உருண்டை, மீன் பசை ஆகியவற்றை மீன் இறைச்சியை பதப்படுத்துவதன் மூலம் தயாரிக்கலாம்.

மீன் கலன் அடைப்பு சார்ந்த பொருட்கள் :
கலன் அடைப்பு முறை இணவு வகை பொருட்களை வீணாகாமல் தீமை விளைவுகளை ஏற்படுத்தும் நுண்ணியிரிகளை வெப்பத்தை கொண்டு அழித்து பதப்படுத்தும் முறையாகும்.அதிக அமில உணவு வகைகளான மீன் மாரினேடு மற்றும் ஊறுகாய் வகைகளில் உள்ள அசிடிக் , சிட்ரிக் மற்றும் வெட்டிக் அமிலங்கள் ஆகியவை பேக்டீரியாவின் வளர்ச்சியை தடுப்பதில்லை , ஸ்போர் உருவாகும் நுண்ணுயிரிளின் வளர்ச்சி  தடைப்பட்டுவிடும். எனவே அத்தைகய உணவுகளை 100 டீகிரி செல்சியஸ் சூடாக்க வேண்டும்.தக்காளி குழம்புகளைக் கொண்டு தயார்த்த மீன்களானது மித அமிலம் உணவு வகையாகும். இத்தைகய உணவுகளை பதனமுறையில் சூடாக்குவதன் மூலம் க்ளாஸ்டிரியம் பொட்டுலினத்தின் பாதுகாக்கப்படுகின்றன.

மீன் எண்ணெய்கள் :
மீன் எண்ணெய் என்பது மீன்களின் முழு உடல் அல்லது ®ரலிருந்து எடுக்கப்படும் வகையை சார்ந்தாகும். இத்தைகய மீன்  உடல் எண்ணெய்களை உலர் மற்றும் அரை உலர் முறை என்று இரண்டு வகைகளாக பிரிக்கலாம். உலர் எண்ணெய் என்பது சாளை , சால்மோன்  , கெரிங் காணாங்கத்தி நெத்திலி மற்றும் வெள்ளை மீன் வகைகளின் எண்ணெய்கள் ஆகும். சிப்பி மற்றும் கெண்டை மீன் வகைகளை கொண்டு தயாரிக்கும் எண்ணெய்கள் மித உலர் எண்ணெய்களாகும். மேலும் மித எண்ணெய் வகைகளில் குறைந்த அயோடின் அளவே காணப்படும். மீன் உடல் எண்ணெய் சமைப்பது மற்றும் தொழிற்சாலை பதனப்படுத்தும் பொருட்களாக தயாரிப்பில்  பயன்படுத்தப் படுகின்றன. ®ரலிருந்து தயாரிக்கும் எண்ணெய்களில்  வைட்டமின் ஏ அதிகம் காணப்படுவதால் மருந்து பொருட்கள் தயாரிப்பில்  முக்கிய பங்கு வகின்றது.

மீன் ®ரல் எண்ணெய் :
மீன் ®ரல் எண்ணெயில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின்  டி ஆகியவை அத்கம் காணப்படுகின்றன. இவற்றுள்ள வைட்டமின் ஏ வின் ஆக்ஸ்ஜனேற்றத்தை தடுப்பதில் முக்கிய பங்க வகிக்கின்றன.

காட் மீன் ®ரல் எண்ணெய் :
இத்தைகய ®ரல் எண்ணெயானது , பல வகை காட் மீன்களான கேடஸ் களாரியஸ் , கேடஸ் மொர்யுவா மற்றும் இதர காட்மீன் வகையிலிருந்து தயாரிப்பதாகும் .ஈரல் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஏ வானது வெயில் வெளிப்பாட்டினால் அழிக்கப்படுகிறது. எனவே இத்தைகய எண்ணெய்களை பாதுக்காப்பான முறையில் சேமிப்பதன் மூலம் வைட்டமின் ஏ அழிவுகளை தடுக்கலாம். மேலும் பதனப்படுத்தும் வேதி பொருட்களான நார்டி†டுரோகுளுடாரிக் அமிலம் (0.05 சதவிகிதம்) மற்றும் அஸ்கார்பைல் பால்மிட்டே (0.01 சதவிகிதத்தை) கலப்பதன் மூலம் வைட்டமின்  வைட்டமின் ஏ அலிவுகளை தடுக்கப்படுகிறது.

சுறா ஈரல் எண்ணெய் :
இந்திய கடலில் உள்ள சில வகை சுறாக்கள் அதிக ஈரல் எண்ணெய் தரவல்லதாகும். இவற்றில் வைட்டமின் எ அத்கம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.(சராசரியாக 12,000 சர்வதேச குறியீடு 1 கிராம் எண.ணெய்). புதியதாக தயாரித்த எண்ணெய் மஞ்சள் , ஆரஞ்சு அல்லது பழுப்பு நிறம் மிதமான மீன் நாற்றம் மற்றும் குறைந்த அமிலத்தன்மை கொண்டதாக உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கடலெண்ணெயுடன் வைட்டமின் டி -யை  கலப்பதன் மூலம் ஜதான சுறா ஈரல் எண்ணெய் தயாரிக்கப்படுகின்றன.

மீன் மாவு:
மீன் உணவானது , வர்த்கரீதியாக கரைப்பான் பிரித்தெடுத்தல் செயல்பாட்டின் மூலம் தயாரிக்கப்படுகிறது. இவற்றை கோதுமை அல்லது சோள மாவுடன் கலந்து ரொட்டி  கேக் இனிப்பு வகைகள் மற்றும் சூப் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

மீன் அப்பளம் :
லோமியா மற்றும் கெளுத்தி மீன் வகைகளைக் கொண்டு மீன் அப்பளம் தயாரிக்கப்படுகின்றது. மீன் மாமிசத்தை நன்றாக வேக வைத்து , மைதா உப்புடன் கலந்து பின்பு அப்பளம் தயாரிக்க வேண்டும்.

இறால் ரொட்டி மற்றும் மீன் குச்சி :
இறால்ன் உடல் ஓடு மற்றும் ஜீரன குழாய்களை அகற்றி சுமார் 15 நிமிடம் 7 சதவிகித உப்புக் கரைசலில் வேக வைக்க வேண்டும். பின்பு நன்றாக கழுவி 10 செ. மீட்டர் மற்றும் 1 செ . மி சிறு துண்டுகளாக  வெட்டி , முட்டை , மைதா மற்றும் உப்பு கலவையில் நனைத்து பின்பு ரொட்டி தூள்களுடன் சோர்த்து மீன் குச்சிகள் தயாரிக்கப்படுகின்றது.

மீன் சாலட் :
மீன்களை நன்றாக கழுவிய பிறகு ஆவியில் வேக வைக்க வேண்டும். வேக வைத்த  மீன் அல்லது இறால்களை தக்காளி , உப்பு , பூண்டு , மைதா , மிளகு எண்ணெய் கலவையுடன் சோர்த்து மீன் சாலட் தயாரிக்க வேண்டும்.இவற்றை தயாரித்த உடனே பயன்படுத்தலாம் அல்லது சிறிது நாட்கள் சேமித்த பிறகும் பயன்படுத்தலாம்.

மீன் குடல் இறைச்சி :
மீன் மாமிசத்தை நனடறாக மசித்து சார்கரை , எண்ணெய் மாசாலா பொரருட்கள் , பதனிடும் வேதிப் பொருட்களுடன் கலக்க் வேண்டும். சிற பைகளாக உருவாக்கி , வேகவைப்பதன் மூலம் மீன் குடல் இறைச்சியை தயாரிக்கலாம்.

மீன் ரொட்டி தயாரிப்பு :
டூனா மற்றும் காணாங்கத்தி மீன் வகைகள் மீன் கேக் தயாரிக்க பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. மீன்கள் கழுவிய பிறகு , ஆவியில் வேக வைத்து பின்பு அடுக்குகளாக பிரிக்கப்படுகின்றன. உருளைக் கிழங்குகளை உப்பு , மிளகு மற்றும் சிட்ரிக் அமிலத்துடன் வேக வைக்க வேண்டும். அடுக்குகளாக்கப்பட்ட மீன்களை மேற்கூறிய கலவையுடன் சேர்த்து காற்றில்லாத முறையில் பெட்டகப்படுத்துவதன் மூலம் மீன் ரொட்டிகளை தயாரிக்கலாம்.

மீன் புரதங்கள் :
மீன் புரதங்கள் அதிக ஜீரண சக்தி உயிரியல் வளர்ச்சி மேம்படுத்துத் திறன் கொண்டதாக உள்ளது. எனவே இவை மனித ஊட்ச்சத்துகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மீன் புரதங்கள் லைசின் மற்றும் மீத்தியோனைன் ஆகிய அமினோ அமிலங்கள் அதிகம் காணப்படுகின்றன. மீன் புரதங்கள் பேக்கிரி பொருட்கள் , ஜஸ் கூழ் மற்றும் பொருட்கள் தயாரிப்பில் பயன் படுத்தப்படுகின்றன.

சுறா துடுப்புகள் :
பெரிய சுறாவில் வால் துடுப்புகளை தவிர அனைத்து  துடுப்புகளும் வேர் பகுதியில் வெட்டப்பட்டு கடல் நீர் கொண்டு கழுவிய பிறகு மர சாம்பல் , எலுமிச்சையுடன் கலந்து , வெயிலில் உலர்த்த வேண்டும் அல்லது புகையூட்டப்பட வேண்டும். இத்தகைய பொருட்கள் சூப’ தயார்ப்பதில் பயன்படுத்தப் படுகின்றன.

மூலதனம் :
http://bieap.gov.in/capturefisheriesandpostharvesttechnology.pdf

மீன் மற்றும் மீன் சார்ந்த பொருட்கள் சேமிப்பு விவரங்கள் :
வ. எண்பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள்அங்கீகாரம்
1.நீர்வாழ் உலக ஏற்றுமதி நிறுவனம்
†ால் எண்.1 – ஏ , ‘Y’ பிளாக்
நிம்மா பிராஸசிங் மற்றும் குளிர் சேமிப்பு வளாகம்
85 – 101 , ஜிஏ சாலை. சென்னை - 600021
புதிய அல்லது குளிர்வித்த மீன்கள் மற்றும் மீன் சம்பந்தப்பட்ட பொருட்களை பெட்டியிடுதல்
2.பிரிட்டோ ஏற்றுமதி நிறுவனம்
சி -1, பகுதி இ சிப்காட் தொழிற்சாலை வளாகம் ,
மடத்தூர் அஞ்சல் ,
தூத்துக்குடி - 628008
தமிழ்நாடு.
புதிய, குளிர்வித்த மீன் பொருட்கள் மற்றும் உடனே சாப்பிடும் மீன் வகை பொருட்களை ஜரோப்பிய நாடுகள் மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பெட்டியிடுவதாகும்
3.தேவி சீ உணவுகள் நிறுவனம்
எண் : 3 -79 / 2இ
மூலகுணட்டபாடு , ஜி.டி.சாலை , சிங்கராயாகொண்டா, பிரகாசம் மாவட்டம் , ஆந்திர பிரதேசம்.
திரு. ப. பிலம்மானந்தம் , நிர்வாவ இயக்குநர்
தொலைபேசி எண் : 08598 -236397
தொலைநகலி :08598 - 236330
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுவதாகும்
4.அலைடு எக்ஸிம் உணவுகள்
நிம்மா உறை மற்றும் குளிர் சேமிப்பு வளாகம் ,
பகுதி -III ,85-101 ,ஜி.ஏ. சாலை, தண்டையார்பெட் , சென்னை - 600021
பச்சை மீன் , குளிர்வித்த மீன்கள் பெட்டியிடுதல் மற்றும் உறையிடுதல்
5.டைமண்ட் சீ உணவு ஏற்றுமதிகள்
3152, கிருஷ்ணராஜபுரம்இ
தூத்துக்குடி-628002
திரு.டி.துரைராஜ், நிர்வாக பங்காளர்,
தொலைபேசி எண் : 23603461952
தொலைநகலி :0461-23626931 / 2361109
மின் அஞ்சல் : ttn_kanni@sancharnet.in
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் உறையிடுதல்
6.எஸ் .எஸ்.எஃப் லிம்டெட்
47-1-5 , ஜகன்நாயக்பூர்,
காக்கினாடா-  533002
ஆந்திரா பிரதேசம்
பச்சை மீன் மற்றும் மீன் உறையிடுதல்.
7.பூண்டி அன்னை பிஸ்சரி‰
வழுக்கம்பாறை,
சுசிந்தரம் - 629 704
கன்யாகுமாரி மாவட்டம்
தமிழ்நாடு
பச்சை மீன் , குளிர்வித்த மீன்கள் பெட்டியிடுதல் மற்றும் உறையிடுதல்
8.கண்யா சீ  ஏற்றுமதியாளர்கள்
15/6 ,துறைமுக சாலை ,
சின்னமுட்டம் -629 704
கன்யாகுமாரி மாவட்டம்
தமிழ்நாடு.
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்கள் பெட்டியிடுதல்.
9.லி. ஆர் .ஏ. சீ ஏற்றுமதி
பிரைவெட் லிட்
நிம்மா உரையிடுதல் மற்றும் குளிர் சேமிப்பு வளாகம் (பகதி-1 85-101, ஜி.ஏ சாலைஇ தண்டயார்பேட்டை,  சென்னை - 600021, தமிழ்நாடு.
புதிய, குளிர்வித்த மீன் பொருட்கள் மற்றும் உடனே சாப்பிடும் மீன் வகை பொருட்களை ஜரோப்பிய நாடுகள் மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பெட்டியிடுவதாகும்
10.மரியா அக்குவாகான் பிரைவெட் லிட்,
எண் 1,மரியா டவர் , பிரதான சாலை. குட்டாபுலி -627127.
தமிழ்நாடு.
பச்சை மீன் , குளிர்வித்த மீன்கள் பெட்டியிடுதல் மற்றும் உறையிடுதல்
11.விஜயலட்சுமி சீ உணவுகள் ,
ஆர் . எஸ் .எண் 47811,
கணப்பவரம் சாலை ,
உண்டி மண்டல் -534199
ஆந்திர பிரதேசம்
பச்சை மீன் , குளிர்வித்த மீன்கள் பெட்டியிடுதல் மற்றும் உறையிடுதல்
12.மதர் தெரஸா ஏற்றுமதி மற்றும் இறக்குமதி,
எண் -117152, எம் .எஸ்.கோவில் தெரு,
ராயபுரம், சென்னை -600013, தமிழ்நாடு.
புதிய அல்லது குளிர்வித்த மீன்கள் மற்றும் மீன் சம்பந்தப்பட்ட பொருட்களை பெட்டியிடுதல்
13.கிளேடுசன் ஏற்றுமதியாளர்கள்,
5-99, ஜேம்ஸ் நகர், முட்டம்,
கன்யாகுமாரி மாவட்டம் , தமிழ்நாடு.
புதிய, குளிர்வித்த மீன் பொருட்கள் மற்றும் உடனே சாப்பிடும் மீன் வகை பொருட்களை ஜரோப்பிய நாடுகள் மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பெட்டியிடுவதாகும்
14.விண்செண்ட் சீ பிரைவேட் லிட் ,
நிம்மா பிரிசிங் மற்றும் குளிர் சேமிப்பு வளாகம் , எண் 85-101, ஜி.ஏ சாலை, சென்னை - 600021, தமிழ்நாடு.
புதிய, குளிர்வித்த மீன் பொருட்கள் மற்றும் உடனே சாப்பிடும் மீன் வகை பொருட்களை ஜரோப்பிய நாடுகள் மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பெட்டியிடுவதாகும்.
15.மிச்வின் ஏற்றுமதி பிரைவெட் லிட்,
நிம்மா பிரிசிங் மற்றும் குளிர் சேமிப்பு வளாகம் , எண் 85-101, ஜி.ஏ சாலை, சென்னை - 600021, தமிழ்நாடு.
புதிய, குளிர்வித்த மீன் பொருட்கள் மற்றும் உடனே சாப்பிடும் மீன் வகை பொருட்களை ஜரோப்பிய நாடுகள் மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பெட்டியிடுவதாகும்.
16.ஜி.எம்.கே கடல் உணவுகள் பிரைவெட் லிட்,
எஸ்,-272 / 2 , போதபலெம், வெலங்கி ஆனந்தபுரம் ,
விசாகப்பட்டினம் - 531163
ஆந்திர பிரதேசம் .  
பச்சை மீன் மற்றும் மீன் பெருட்களை உறையிடுதல்.
17.ஒசியானிக் பிஸ்சரிஸ் (இந்தியா) லிட்
படதலாமுடு அஞ்சல் ,
கன்யாகுமாரி மாவட்டம் - 629190 ,
தமிழ்நாடு.
பச்சை மீன் , குளிர்வித்த மீன்கள் பெட்டியிடுதல் மற்றும் உறையிடுதல்
18.நலமட்டி சீ உணவு பிரைவெட் லிட்,
சீசலி , கலமண்டலம் ,
பிம்மவரம் - 543 237
திரு. எம்.டி.ஆர். செளத்ரி , மேலாளர் ,
தொலைபேசி எண் : 08816 241315
தொலைநகலி : 08816 241265 
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுவதாகும்
19.அஸ்வினி பிஸ்சரீ‰  பிரைவெட் லிட்,
ராமச்சந்திரபுரம் ,
பழயகாயல் , தூத்துக்குடி - 628 152
தமிழ்நாடு.
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுவதாகும்
20.‚. வெங்கடபத்மாவதி கடல் உணவுகள் பிரைவெட் லிட்,
மோகளு , பிம்மவரம் -534 209.
திரு.எஸ்.ஆர்.ராஜீ
தொலைபேசி எண் : 08816 248969, 248533
தொலைநகலி : 08816 2485534  
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுவதாகும்.
21.ஓம்சன்ஸ் மெரைன் லிமிடெட் ,
5/15 , மரிக்க வலசா ,
பரதேசிபவேர் ,
விசாகப்பட்டினம்.
ஆந்திர பிரதேசம் - 531 163
திரு.கே. கிே„ரார் குமார் , நிர்வாக இயக்குநர்,
தொலைபேசி எண் : 0891 27392731 / 283
தொலைநகலி : 0891 - 2739819
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுதல் மற்றும் பதப்படுத்துதல்
22.கஜீலா எக்ஸிம்  பிரைவெட் லிட்,
பி.தர்மாவரம் கிராமம்
எஸ். ராயவரம் மண்டல்
விசாகப்பட்டினம் மாவட்டம் -531 083
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுவதாகும்.
23.கோல்டுமெரைன் எக்ஸ்பேர்ட்ஸ்  பிரைவெட் லிட்,
எண் .16 , தர்மராஜா கோவில் தெரு,
சிந்தாரிபேட்டை , சென்னை -600002
புதிய குளிர்வித்த மீன் மற்றும் உறையிட்ட பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை ஜரோப்பா அல்லாத மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக பெட்டியிடுதல்.
24.கடல்கன்னி புரோசன் புட்ஸ் ,
3 / 52 , ஏ. கிரு‰ணராஜபுரம் ,
தூத்துக்குடி - 628 002,
தொலைபேசி எண் : 2360346 / 952
திரு.டி.துரைராஜ் , நிர்வாக பங்காளர்,
தொலைநகலி : 0461 2362693 / 2361109
மின் அஞ்சல் :ttn_kanni@sancharnet,in  
பச்சை மீன் மற்றும் மீன்
பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் உறையிடுதல்.
25.ஆனந்தா அக்குவா அப்ளிகேஷ்ன்ஸ் ,
ராமயணபுரம் , திருசுமாரு ,
பிம்மவரம் , 534 201
திரு. ப.கே.வி. ராஜீ இ நிர்வாக இயக்குநர் ,
தொலைபேசி எண் : 08816  272507 , 272607
தொலைநகலி : 08816 272707
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுதல்.
26.கொசல்யா அக்குவா மெரைன் ப்ரோடக்ட் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிட் ,
பகுதி - 1 , கொச்சின் கடல் உணவுகள் ,4 / 209 , எம் ஜி ஆர் சாலை ,
பலவாக்கம் , சென்னை - 600 040
பச்சை / குளிர்வித்த / உறையிட்ட மீன்கள் மற்றும் மீன் பொருட்களை பெட்டியிடுதல்.
27.பிலிப்ஸ் புமஸ் இந்தியா  பிரைவேட் லிட் ,
ப்ளாட் எண் சி -75 / 76,
சிப்காட் தொழிற் சாலை வளாகம் ,
தூத்துக்குடி -628 008
திரு.அலெக்ஸ்.கே. தாமஸ் , நிர்வாக இயக்குநர்,
தொலைபேசி எண் : 0461 - 2340113.
தொலைநகலி : 0461 - 2340115
மின் அஞ்சல் : psntuticorin@ philipsfoods.com
மீன் மற்றும் மீன் சார்ந்த பொருட்களை பதப்படுத்துதல்.
28.பை ஸ்டார் மெரைன் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிட் ,
55 , வெங்கடேசன் தெரு , சிந்தாரிபேட்டை , சென்னை - 600 002, திரு. கே .ரவிக்குமார் , நிர்வாக இயக்குநர் ,
தொலைபேசி எண் : 044 - 28546387.
தொலைநகலி : 044 - 28521480
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுதல்.
29.கோஸ்டல் கார்பரேஷன் லிட் ,
15-1-37 / 3 , நெளரோஜி சாலை , மகராணிபேட்டை ,
விசாகப்பட்டினம் , ஆந்திர பிரேதசம் – 2,‚.டி.வல்சாராஜீ ,நிர்வாக இயக்குநர் ,
தொலைபேசி எண் : 0891 - 2567132.
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுதல்.
30.சாந்தி சீ புட்ஸ் பிரைவெட் லிட் ,
4 / 364 , அண்ணா சாலை , பலாவாக்கம் , தமிழ்நாடு.
உறையிட்ட பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை பதனிடுதல்.
31.எம்.எஸ்.சி மெரையன் எக்ஸ்போர்டர்ஸ் , சீசலி , காலா மண்டலம் , பிம்மவரம் - 534 237.
திரு.என.எஸ். குமார் , நிர்வாக பங்காளர்,
தொலைபேசி எண் : 08816 - 241738 , 241838.
தொலை நகலி : 08816 - 241739.
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுதல்.
32.சவுகான ஏக்ஸ்போர்ட்ஸ் லிட் ,
3-2-62, மிண்டி,பிஎச்பிவி அலுகில் ,
விசாகப்பட்டினம் -530 012
‚.அஜித் பால் சிங் சவுகான் , நிர்வாக , இயக்குநர்,
தொலைபேசி எண் : 0891 - 2514056 ,2514060
தொலை நகலி : 0891-2511347.
புதிய அல்லது குளிர்வித்த மீன்களை பெட்டியிடுதல் மற்றும் பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுதல்.
33.ரெலிஷ் புட்ஸ் பிரைவேட் லிட்,
எண். 17 / 98 , திருநெல்வேலி சாலை ,
மாதவபுரம்,
கன்னியாகுமாரி , தமிழ்நாடு.
புதிய அல்லது குளிர்வித்த மீன்கள் , மீன் பொருட்களை ஜரோப்பா அல்லாத மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக பெட்டியிடுதல்.
34.உஷா சீ புட்ஸ் ,
3-510 , சர்ப்பவரம் ,
கக்கினர் -533 005, ஆந்திர பிரதேசம்.
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுதல்.
35.கன்யாகுமாரி மெரையின் புட்ஸ்,
10 / 14 ஏ , ராஜா சங்கீதா தெரு ,
கன்யாகுமாரி -629702, திரு.ஜே.வின்சென்ட் , மேலாளர் ,
தொலைபேசி எண் : 04652 – 247468
தொலை நகலி :04652 - 246174.
மூலதனம் : www.eic.india,org/eic/units/fish-noneu-chennai.htm.

சங்கத்தமிழரின் வணிக வளம்


அது 1836ம் ஆண்டு.

கப்ரன் (ஜேம்ஸ்) குக் என்ற ஐரோப்பியர் அங்கு கால் பதித்து 66 ஆண்டுகள் ஆகியிருந்தன. நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள மாவோரி பூர்வீகக்குடியினர் வாழும் கிராமம்.

அந்தக்கிராமத்துக்கு ‘வில்லியம் கொலின்சே’ என்ற கிறிஸ்தவ திருச்சபை ஊழியர் வருகிறார். அங்கு கண்ட ஒரு காட்சி அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. உலோகப் பாவனையை அதிகம் அறிந்திராத அந்தப் பழங்குடி மக்கள் ஒரு வெண்கலப் பாத்திரத்தில் உருளைக்கிழங்கை வேகவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாத்திரத்திற்கும் அவர்களது வாழ்வியலுக்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை அவர் உணர்கிறார். அந்தப் பாத்திரத்தைப் பற்றி அவர்களிடம் கேட்கிறார். அவர்கள் தமது மூதாதையர் வழியே அந்தப் பாத்திரம் வந்ததாகச் சொல்கிறார்கள். கொலின்சே வேறொரு இரும்புப் பாத்திரத்தைக் கொடுத்து அந்த வெண்கலப் பாத்திரத்தைப் பெற்றுக் கொள்கிறார்.

கொலின்சே அந்தப் பாத்திரத்தை ஆராய்ந்தபோது அது ஒரு வணிகக் கப்பலினுடைய மணி என்பது தெரியவருகிறது. அந்த மணியில் அந்தப் பிரதேசத்துக்குத் தொடர்பில்லாத எழுத்துகள் இருக்கின்றன. அவ்வாறாயின் அங்கு ஐரோப்பியருக்கு முன்பே யாரோ வந்து போயிருக்க வேண்டும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த மணி நியூசிலாந்து அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படுகிறது. அவர்களுக்கும் அதிலிருந்த எழுத்துகள் எந்த மொழியைச் சேர்ந்தவை என்பது தெரியவில்லை. அவர்கள் அதைப் புகைப்படம் எடுத்து இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கிறார்கள். இங்கிலாந்தில் ஆய்வாளர்கள் அது ஒர் இந்திய மொழி என்பதை எழுத்து வடிவத்திலிருந்து கண்டறிகிறார்கள். அந்தப் படத்தை இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள்.

இந்தியாவில் அதைப் பார்த்ததும் அது என்ன மொழி என்பது தெரியவருகிறது. அத்தோடு அந்த எழுத்துகள் எழுதப்பட்டிருந்த விதத்திலிருந்து அது கி.பி 1450ம் ஆண்டைச் சேர்ந்தது என்பதையும் அறிகிறார்கள். இது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அந்த மொழியைப் பேசுபவர்கள் கப்ரன் குக் கால் பதிப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னரேயே நிய+சிலாந்துக்குப் போயிருக்க வேண்டும்.

அந்த மொழி “தமிழ்” அதில் எழுதப்பட்டிருந்த வசனம் “முகையிதீன் பக்ஸ் கப்பல் மணி” என்பதாகும்.

பெருஞ்சிறப்புக்குரியதான தமிழரது கடல் வணிகம் நீண்டகாலத்திற்கு முன்பே கிழக்கே மாவோரி மக்களுடனும் தொடர்புபட்டிருந்தமையி;ன் சான்றாக இம் மணியைக் கருதலாம் என்கின்றனர் ஆய்வாளர். மாவோரி மக்கள் பேசும் மொழிக்கும் தமிழுக்கும் பலவித தொடர்புகள் இருப்பதாக டெய்லர் என்னும் மற்றுமொரு துறவியார் குறிப்பிட்டிருக்கின்றார் என ந.சி. கந்தையாபிள்ளை தமது நூலொன்றில் எழுதியிருக்கின்றார்.

இது போன்ற தமிழரது கடல் கடந்த வணிகச் சான்றுகள் பல அண்மைக்காலத்திலே கிடைத்துள்ளன. அவற்றை அறிவதற்கு முன்பாக பண்டைக்காலத் தமிழரது வணிக மேலாண்மையைச் சற்றே விரிவாக நோக்குவோம்.

அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்வதில் தன்னறைவு கண்ட ஒரு சமூகத்தின் அடுத்த நிலை வளர்ச்சியானது வணிகத்தை நோக்கி நகர்ந்ததாக இருக்கலாம் என்பதற்கமைய தமிழர் வரலாறு பல்வேறு வணிகச் சிறப்புகளைத் தாங்கி நிற்கின்றது. பொருட்களை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளுதல், கொடுத்து வாங்குதல் என்ற பண்புநலன்களின் அடிப்படையில் தோற்றங்கொண்ட வாணிப இயல்பைத் தமிழ் இலக்கியங்கள் போற்றி நிற்கின்றன.

பொருள் ஈட்டுவது என்ற குறிக்கோள் மட்டுமின்றி, உலக நன்மைக்காகவே வணிகம் நடைபெற்றதாக முன்னோர் கருதினர். பல இடங்களில் விளையும் பொருட்களை ஓரிடத்தில் சேர்த்து அவை கிடைக்காத வேறிடங்களுக்கு அனுப்பி யாவரும் வறுமையற்றிருக்க வணிகர் வழி தேடினர். அத்தகைய வணிகரின் பண்பைப் பண்டைய இலக்கியங்களிலே காணலாம்.

“நெடுநுகத்துப் பகல் போல
நடுவுநின்ற நன்நெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் மொப்பநாடிக்
கொள்வதூஉ மிகைகொள்ளாது
கொடுப்பதூங் குறைபடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்”

‘சமன்செய்யும் கோல் போல் நடுநிலை தவறாத நெஞ்சோடு, குற்றங்களுக்கு அஞ்சி கனிவாகப் பேசி, உறவினர், பிறர் என வேறுபாடின்றி ஒப்ப நோக்கி, பெறுவதை அதிகமாகப் பெறாமலும் கொடுப்பதைக் குறைவின்றிக் கொடுப்பதாயும் பல்பண்டங்களையும் பகிர்ந்து கொடுப்போரே நல்வணிகர்’ என்கிறது பட்டினப்பாலை.

திவாகரம் என்னும் நிகண்டு வணிகர் இயல்பை மேலும் சிறப்புறக் கூறுகின்றது. 

“தனிமை யாதல் முனிவி லனாதல்
இடனறிந் தொழுகல் பொழுதொடு புணர்தல்
உறுவது தெரிதல் இறுவதஞ் சாமை
ஈட்டல் பகுத்தல் என்றிவை யெட்டும்
வாட்டம் இல்லா வணிகர தியற்குணம்”

தமிழர் சிறப்பாகப் போற்றிய அறுவகைத் தொழில்களான உழவு வணிகம், நெசவு, தச்சு, மட்பாண்டஞ் செய்தல், கொல்லர் என்பவற்றுள் வணிகம் உழவுக்கு அடுத்து இரண்டாம் இடம் பெறுவதைக் காணலாம்.

வள்ளுவரும்,
“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தம்போற் செயின்” என்கின்றார்.

“இருவகையா னிசைசான்ற
இருகுடிப் பெருந்தொழுவர்” என்ற மதுரைக்காஞ்சி எனும் இலக்கிய வரிகளுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் “ உலகத்துத் தொழில்களில் மேலாகச்; சொல்லும் உழவு, வணிகம் என்ற இரண்டு கூற்றாலே...” என்கின்றார்.

பழம்பெரும் இலக்கணமான தொல்காப்பியம் கடல் கடந்த வணிகத்தை ‘முந்நீர் வழக்கம்’ என்கின்றது. பெரும் மரக்கலங்களைக் கட்டுவோர் ‘கலம்புணர் கம்மியர்’ என இலக்கியங்களால் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

தமிழர்களால் பெரிதும் போற்றப்பட்ட வணிகத்தொழில் உள்நாட்டிலும், கடல் கடந்தும் பெருஞ்சிறப்புப் பெற்றிருந்தது என்பதைத் தமிழ் இலக்கியங்களும், வெளிநாட்டார் குறிப்புகளும், செப்பேடுகள், கல்வெட்டுகள் எனபனவும், அண்மைக்கால அகழ்வாராய்ச்சிகளும் ஆழ்கடல் கண்டுபிடிப்புகளும் வெளிப்படுத்தி நிற்கின்றன.

கடல் கடந்த வணிகம்

இயேசு பிறப்பதற்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் மேற்குத் திசையில் பபிலோனியா, எகிப்து, பாலஸ்தினியம், மெசபத்தோமியா, உரோமாபுரி, கிரேக்கம் போன்ற நாடுகளுடனும், கிழக்கே சீனம் சாவகம், ஜாவா போன்றவற்றுடனும் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்திருக்கின்றனர்.

ஏலம், இலவங்கம், மிளகு போன்ற தமிழகத்துப் பொருட்கள் பிற நாடுகளில் பெரும் விலைக்கு வாங்கப்பட்டன. கி.மு.1490இல் யூதர்களின் தலைவராகிய மோஈசன் தமது வழிபாட்டின் போது ஏலக்காயைப் பயன்படுத்தியிருக்கின்றார். 

மேற்காசிய நாடுகளான பபிலோனியா, மெசப்பத்தோமியா போற்றவற்றோடு தமிழர் நெருக்கமான வணிகத் தொடர்புகளை வைத்திருந்தமைக்கான சான்றுகள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. பபிலோனியாவில் நிப்பூர் இடத்தில் நாணயம் பரிமாறப்பட்டு வணிகம் நடந்நதாகவும், களிமண் தட்டுகளில் வரவு செலவுக் கணக்குகள் பதியப்பட்டிருந்தததாகவும், அதில் தமிழ் வணிகக் கணக்குகளும் இடம் பெற்றிருப்பதாகவும் முனைவர் அ. தட்சணாமூர்த்தி குறிப்பிடுகிகின்றார்.

கி. மு எட்டாம் நூற்றாண்டில் இசுரேல் நாட்டை ஆட்சி செய்த சொலமன் என்னும் மன்னனது கப்பல்கள் வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை, அகில் தோகை, குரங்கு, தங்கம், வெள்ளி போன்ற பல அரிய பொருட்களை இக்கப்பல்கள் கொண்டு வந்தன என்ற செய்தி பைபிளின் பழைய ஏற்பாட்டில் முதலாம் அரசர் ஆகமத்தில் 10ம் அதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ளது. எபிரேபிய மொழியில் காணப்படுகின்ற குரங்கினைக்(கவி); குறிக்கும் ‘கபிம்’, தோகையைக் குறிக்கும் ‘துகிம்’, அகிலினது நறுமணத்தைக் குறிக்கும் ‘ஆல்மக்’ என்ற என்ற சொற்கள் தமிழில் இருந்து சென்றவையே என்று கூறும் டாக்டர் கே. கே. பிள்ளை இப் பரிசுப் பொருட்கள் தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவையே எனத் தென்னிந்திய வரலாறு எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

சொலமனைக் காணச் சென்ற தென் அரேபிய அரசியான சோபா என்பவள் கையுறையாக ஏகப்பட்ட வாசனைப் பொருட்களை எடுத்துச் சென்றதாக பைபிள் மேலும் கூறுகின்றது. இந்த வாசனைப்பொருட்கள் யாவும் தமிழகத்திலிருந்து சென்றவையே முனைவர் அ. தட்சணாமூர்த்தி பண்பாடும் நாகரிகமும் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.


Pசipடரள என்ற கப்பற் பயணவழி நூலை மீள்பதிப்புச் செய்த றுடைகசநன ர்யசஎநல ளுஉhழகக என்பவர் “கிரேக்க மக்கள் அநாகரிகத்திலிருந்து விழித்தெழுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தும் பண்டைய இந்திய நாடுகளும் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தன. பாரசீக வளைகுடாவுக்கு வடக்கே இந்நாடுகள் ஒன்றோடு ஒன்று பண்டமாற்றுச் செய்துகொண்டன” எனக் கூறியுள்ளதாக முனைவர் அ. தட்சணாமூர்த்தி தன நூலில் ஆமலும் குறிப்பிடுகின்றார்.


தமிழகத்திற்கும் சுமேரியருக்குமான வணிகத் தொடர்புகள் குறித்தும் பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ன. சுமேரியரின் தலைநகரின் பெயர் ‘ஊர்’ ஆகும். அங்கே காணப்படுகின்ற சிதைவுகளில் சேரநாட்டுத் தேக்கு மரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கி.மு. மூவாயிரத்திற்கு முன்னர் அழிவுற்றமையால் இம்;மரத்துண்டுகள் ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை எனக் கருதுகின்றனர்.


தமிழர் எகிப்தியரோடு கொண்டிருந்த வணிகம் மிகவும் தொன்மையானது. கி.பி 15ம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்டதாகக் கருதப்படும் எகிப்திய கல்வெட்டொன்றில் இலவங்கப்பட்டை பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது. இது சேரநாட்டுப் பொருள் என்பதில் ஐயமில்லை. எகிப்திய மன்னர் மெல்லிய மசுலின் துணி வகைகளையும் கருங்காலிக்கட்டைகளையும் இலவங்கம் பட்டைகளையும் தமிழகத்திலிருந்து பெற்றதாகத் தென்னிந்திய வரலாறு என்னும் நூல் கூறுகின்றது.


கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதப்டும் தமிழ் பிராமி எழுத்துகளைக் கொண்ட சிதைந்த களஞ்சியச் சாடி ஒன்று எகிப்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ‘இந்த எழுத்துகள் கி;.மு. முதலாம் நூற்றாண்டுக்குரிய தமிழ் லிபி எழுத்துகளே’ என ஐராவதம் மகாதேவன் உறுதியிட்டுக் கூறியுள்ளார். இந்த எழுத்துகள் ‘பானை ஓரி’ என்ற பொருள் தருகின்றது. ஓரி என்பது உரியைக் குறிக்கும் என்பர். இது போன்ற இரு சாடிகள் 30 ஆண்டுகளுக்கு முன்பும் செங்கடலின் கரையோரம் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சாடிகள் தமிழர் வணிகத்தொடர்புகளுக்குப் பெருஞ்சான்றாகத் திகழ்கின்றன.

தமிழகம் வந்த எகிப்தியர் கரிகாலன் கட்டிய கல்லணையைக் கண்டு வியந்ததாகவும், கரிகாலனின் பொறியியலாளரே நைல்நதிக்குக் குறுக்கே அணை கட்ட உதவியதாகவும், சிக்காக்கோ பல்கலைக்கழகக் குறிப்புகளை ஆதாரம் காட்டி ஐக்கிய நாடுகள் மன்றம் வெளியிட்டு வரும் கூரியர் இதழின் முன்னாள் ஆசிரியர் மணவை முஸ்தபா தெரிவித்திருக்கின்றார். நைல் ஆற்றின் துறைமுகப் பட்டினமான அலெக்சாந்திரியாவில் நூற்றுக்கணக்கான இந்தியர் குடியேறியிருந்தனர் என்ற செய்தியையும் தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூல் தெரிவிக்கின்றது.


தென்னாபிக்காவுக்கும் தமிழருக்குமாக பண்டைய வணிகத் தொடர்புகள் குறித்துத் தற்போது வெளிவரும் தகவல்கள் வியப்பைத் தருகின்றன. தென்னாபிக்க வரலாற்றாசிரியர் னுச. ர்சழஅnமை என்பார் பண்டைய ஆபிரிக்க வரலாற்று உண்மைகளைக் கண்டறிந்த போதும் நிறவெறி ஆட்சியின் முடிவுக்குப் பின்னரே அவற்றை வெளியிட முடிந்தது என்கின்றார். இவர் வெளிப்படுத்தும் பல உண்மைகள் ஆபிரிக்கா குறித்து நிலவிவந்த பல கருத்துகளைத் தகர்த்து வருகின்றன.

அங்கு கண்டெடுக்கப்பட்ட சிற்பம் ஒன்றில் செதுக்கப்பட்டிருக்கும் கடற்பயணக்காட்சி தென்னிந்தியர்களின் வருகையை உறுதிப்படுத்துவதாக ஆய்வாளர் குறிப்பிடுகின்றார். தங்கம், தந்தம் போன்றவற்றைத் தமிழ் வணிகர் மொசாம்பிக், சிம்பாவே போன்ற இடங்களில் இருந்து பெற்றதாக இச்செய்திகள் தெரிவிக்கின்றன. தங்கச் சுரங்கங்களைக் கண்டறிந்து அவற்றைக் குடைந்து தங்கம் பெறுவதற்காகத் தமிழர் தனித்துவமான குடியிருப்புகளை ஏற்படுத்தி அங்கு தங்கியிருந்தனர் எனவும் இவர் தெரிவிக்கின்றார். hவவி:ஃஃதழாடெடிசயனகநைடன.உழஅ என்ற இணைத்தளம் இச் செய்திகளை வெளியிட்டிருக்கின்றது.

கி.மு எட்டாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர் மேலைநாடுகளோடு வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். எனினும் கி.மு. 500 க்குப் பின்னரே ஐரோப்பியரோடான வணிக உறவுகள் ஏற்பட்டன. தமிழக வணிகர் பொருட்களை மேற்காசியாவரை எடுத்துச் செல்ல, கிரேக்கர்களே அவற்றை ஐரோப்பாவுக்கு எடுத்துச் சென்றனர். தென்னிந்தியப் பொருட்கள் பலவற்றின் பெயர்கள் இன்றும் கிரேக்க மொழியி;ல் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பின்னர் கடற்பயண வழிகளைக் கண்டறிந்த கிரேக்கர் தமிழகத்திற்கு வந்து பொருட்களைக் கொள்வனவு செய்யத் தொடங்;கினர். பொருளாதாரம் மட்டுமன்றி இரு தரப்பாருக்கும் இடையே அரசியல் உறவுகளும் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

தமிழகப்பொருட்கள் பற்றி உரோமர் கிரேக்கர்களிடமே தெரிந்துகொண்டனர். கிரேக்க மன்னன் ஒகஸ்டஸ் கி.பி. 30இல் எகிப்தை வெற்றிகொண்டான். அதன் பின்னரே தமிழகத்தோடான வணிகத் தொடர்பை உரோமர்கள் ஏற்படுத்தினர். ஒகஸ்டஸ் காலத்தைச் சார்ந்தவரான ‘ஸ்டிராபோ’ என்பார் கி.பி. 60இல் எழுதிய பெரிப்புளுஸ் என்னும் பயணவழிநூல் தமிழக வணிகத் தொடர்புகளை மிக விரிவாகக் கூறுகின்றது. பிளைனி கி.பி. 70இல் எழுதிய ‘இயற்கை வரலாறு’, தொலமி எழுதிய ‘பூகோள விவரணம்’ போன்ற நூல்களும் தமிழகத்திற்கும் ஐரோப்பியருக்கும் இடையே நடைபெற்ற வணிகத் தொடர்புகளுக்குச் சான்றாகத் திகழ்கின்றன.

அரிக்கமேடு என்னுமிடத்தில் இடம்பெற்ற அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த பல பொருட்களோடு, கண்டெடுக்கப்பட்ட உரோம நாணயங்களும் இவ்வணிகத் தொடர்புகளை உறுதிசெய்கின்றன.

அரேபிய, கிரேக்கக் கப்பல்கள் முசிறி என்னும் துறைமுகத்தில் நிறைந்து நின்றதாகப் பெரிப்புளுஸ் தெரிவிக்கின்றது. பாண்டிய மன்னனின் தூதுவர் ஒகஸ்டஸ் மன்னிடத்தே சென்றதாகவும், உரோமக் குடியிருப்புகள் மதுரையில் அமைந்திருந்ததாகவும் இவர் குறிப்பிட்டிருக்கின்றார். உரோம வணிகத்தின் விளைவாக ஆண்டுதோறும் 6 இலட்சம் பவுண் தங்கம் தமிழகத்திற்குக் கிடைத்ததாகக் குறி;ப்புகள் கூறுகின்றன. கி.பி 68க்குப் ‘பின்வெஸ்பேசியன்’ என்னும் மன்னன் உரோமிற்கு அரசனானான் எனவும், அவன் ஆடம்பர வாழ்க்கையை வெறுத்ததன் விளைவாகத் தமிழகத்தோடான வணிகம் வீழ்ச்சியடைந்ததாகவும் முனைவர் தட்சணாமூர்த்தி எழுதுகின்றார். கி.பி. 3க்குப் பின் வெளியான உரோம நாயணங்கள் தமிழகத்தில் கிடைக்கவில்லை. 4ம் நூற்றாண்டுக்குப் பின்னான நாணயங்கள் கிடைத்துள்ளன. ஐரோப்பியர்களைத் தமிழர் ‘யவனர்’ என்றே இலக்கியங்களில் குறித்துள்ளனர்.

இவ்வாறான வெளிநாட்டார் குறிப்புகளோடு ஒத்திசைந்து பல்வகைச் சான்றுகளை வெளிப்படுத்துகின்றன சங்க இலக்கியங்கள்.

வெளிநாட்டார் பொன்னோடு வந்து மிளகோடு சென்ற செய்தியை,

“யவனர் தந்த வினைமான் நன்கலம்
பொன்னொடு வந்து கறியோடு பெயரும்” 
என அகநானூறு தெரிவிக்கின்றது.

தமிழகத்தில் பொன் பெருகுவதற்குக் காரணமான சிறந்த பண்டங்களை பெரிய மரக்கலங்களில் ஏற்றிச் சென்றனர் என்ற செய்தியை,

“பொன்மலிந்த விழுப்பண்டம்
நாடார நன்கிழிதரும்
ஆடியற் பெருநாவாய்” 
எனக் கூறுகின்றது மதுரைக் காஞ்சி.

யவனர் குளிர்மையான மது வகையறாக்களை எடுத்து வந்தனர் என்னும் செய்தியை,

“யவனர் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத் தேந்தி நாளும்
ஒண்டொடி மகளிர் மடுக்க” 
எனப் புறநானூறு கூறுகின்றது.

மேலாடை அணிந்து ஐரோப்பியர் காவல் காத்த செய்தியை,

“மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கவர் யவனர்” 
என மற்றுமொரு புறநானூற்றுப் பாடல் தெரிவிக்கின்றது.

மேலை நாடுகளைப் போன்றே கீழைநாடுகளுடனும் தமிழர் பெருவணிகம் நடத்தினர். சீனாவுடனான வணிகம் குறித்துப் பல சான்றுகள் கிடைத்துள்ளன. கி.மு. 1000 ஆண்டுகளு;ககு முன்பே சீன வணிகம் வளர்ச்சி பெற்றிருந்ததாகக் கருதுகின்றனர். கி;மு. 7ம்நூற்றாண்டில் தமிழகத்துப் பொருட்கள் சீனாவில் விற்கப்பட்டிருப்தாகவும், சீனப் பொருட்களான சீனப்பட்டும், சீனியும் தமிழகத்திற்கு வந்தன என்றும் முனைவர் தட்சணாமூர்த்தி கூறுகின்றார். சீனாவில் இருந்து வந்தமையினாலேயே சக்கரைக்குச் சீனி என்ற பெயர் வழங்கப்பட்டதாகக் கூறுவர். கி.மு. 2ம் நூற்றாண்டுக்குரிய சீன நாணயங்கள் தாலிக்கோட்டை என்னும் கிராமத்திலும், ‘ஒலயக் குன்னம்’ என்னும் ஊரிலும் அதிகளவில் கிடைத்துள்ளன. தமிழர் கீழைத்தேய நாடுகளிற் பொருட்களைப் பெற்று வந்து மேலைநாடுகளுக்கு அனுப்பினர் என்ற குறிப்புகளும் உண்டு.

சாவகம், ஜாவா, வடபோர்னியா போன்ற அக்காலக் கீழைத்தேய நாடுகளுடன் பெருவணிகம் நடைபெற்றுள்ளது. பிலிப்பைன் தீவுகளில் கி.மு 1000 காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பழமையான தமிழர் கோடாரிகள், ஈட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழகத்திற்கும் வடநாட்டுக்கும் இடையேயான வணிகம் கி.மு மூன்றாம் நூற்றாணடிலேயே மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கின்றது. மெகதனிஸ் என்பார் பாண்டிய நாட்டு முத்துகளைப் போற்றியிருக்கின்றார். கௌடில்யரின் அர்த்தசாத்திரம் என்னும் நூல் தாமிர வருணி, பாண்டிய கவாடம் போன்ற இடங்களின் முத்துக்கள் பற்றியும், மதுரை பருத்தி ஆடைகள் பற்றியும் பேசியுள்ளது.

வடநாட்டார் கடல்கடந்து வணிகம் செய்வதை வேதங்கள் அனுமதிக்கவில்லை. ஆரியரின் கடல் வணிகத்தைப் போதாயனர் என்பார் கண்டித்துள்ளார். சாணக்கியர் என்பார் தமிழர் விலையுயர்ந்த பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுளள்ளார். தமிழக மரக்கலங்கள் மேற்கு கிழக்குக் கரையோரங்கள் வழியாக வடக்கு நோக்கிச் சென்றன.

பண்டைத் தமிழரது வெளிநாட்டு வணிகம் சங்ககாலத்தில் பெருஞ்சிறப்புற்றிருந்ததை மேற்கூறப்பட்டுள்ள சான்றுகள் வழியாக நாம் அறியலாம். தமிழர் மேற்கு, கிழக்கு, வடக்கு என முத்திசைகளுக்கும் சென்று வணிகத்தில் வரலாறு படைத்துள்ளனர். பிறநாட்டாரைக் கவர்ந்த தமிழகப் பொருட்களாக முத்து, பவளம், ஆரம், அகில், வெண்துகில், சங்கு, மிளகு, இலவங்கம், ஏலம் போன்றவை விளங்கின. தங்கம், குதிரை, இரும்பு, கம்பளி போன்றவற்றைத் தமிழகம் பெற்றுக்கொண்டது.

துறைமுகங்கள்.

தமிழகத்தின் பண்டைய துறைமுகங்கள் பற்றிய செய்திகள் பலவாறாக் கிடைக்கின்றன. மேற்குக்கரையோரமான சேரநாட்டுத் துறைமுகங்களாக நயவு, முசிறி, தொண்டி, பொற்காடு என்பவை திகழ்ந்துள்ளன. தெற்கே குமரியும், கிழக்கே கொற்கை, காவிரிப்பூம் பட்டினம், எயிற்பட்டினம், அழகன்குளம், அரிக்கமேடு, மருங்கூர்பட்டணம் மசுலிப் பட்டினம், மரக்காணம் போன்றவை திகழ்ந்துள்ளன. ஈழத்தில் மாந்தை பெருந் துறைமுகமாகத் திகழ்ந்துள்ளது.

காவிரி;பபூம் பட்டடினத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் இடையறாது நிகழ்ந்தன. அது எவ்வாறு இருந்ததெனில், மலையில் பெய்த நீர் கடலில் கலப்பது போலவும், வான் கொண்ட நீர் மலையில் பொழிவதைப் போன்றும் இருந்ததாகப் பட்டினப்பாலை கூறுகின்றது.

துறைமுகங்கள் தோறும் பண்டகசாலைகள் இருந்திருக்கின்றன. அப்பண்டக சாலைகளில் இறக்குமதி, ஏற்றுமதிப் பொருட்கள் மீது அரச அலுவர்கள் முத்திரையிட்டிருக்கின்றனர். அங்கு சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனை,

“அளந்தறியாப் பல்பண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி
அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கியும்
மலிநிறைந்த மலிபண்டம்” 
எனப் பட்டினப்பாலை கூறுகின்றது.

துறைமுகங்கள் அருகே பொருட்கள் பொதிகளாகக் கட்டப்ப்டடு அடுக்கப்பட்டிருந்தன. அவற்றின் மேல் நாய்களும் ஆட்டுக்கடாக்களும் ஏறிக்குதி;த்து விளையாடின. இது மலைச்சரிவுகளில் வருடை மான்கள் துள்ளி விளையாடுவதை ஒத்திருப்பதாக மற்றுமொரு பாடலில் பட்டடினப்பாலை தெரிவிக்கின்றது.

“பொதிமூட்டைப் போரேறி
மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன்
வரையாடு வருடைத் தோற்றம் போலக்
கூருகிர் ஞமலிக் கொடுந்தான் எற்றை
ஏழகத் தகரொடு உகளும் முன்றில்” 

பாண்டிய அரசின் ஆட்சி;க்குட்பட்ட கொற்கைத் துறைமுகம் பெரும் செல்வாக்கோடு விளங்கியது. முத்து, சங்கு விளைகின்ற இடமாகவும் இது திகழ்ந்தது என அகநானூறு கூறுகின்றது.

வெளிநாட்டார் குறிப்புகளில் பெரிதும் இடம் பெற்ற முசிறித்துறையில் மேற்கு நாடுகளுடனான வணிகம் பெருமளவில் நடைபெற்றிருக்கின்றது. வெளிநாட்டார் வணிகத்திற்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகக் கடற்கொள்ளையரை அடக்கி ‘கடற்பிறக்கோட்டிய’ என்னும் பட்டத்தைப் பெற்றான் செங்குட்டுவன். சேரநாட்டு மலைவளங்களில் பெருமளவில் மிளகு விளைந்தது. ஐரோப்பியர்களால் பெரிதும் விரும்பப்பட்ட மிளகே இங்கு முதன்மையான ஏற்றுமதிப் பொருளாகியது.

இத்துறையில் நடைபெற்ற ஏற்றுமதி இறக்குமதி வணிகம் பற்றிப் புறநானூறு (பாடல் 343) விரிவாகக் கூறுகின்றது. பொன்னும், இரத்தினமும், மென்மையான புடவைகளும், சித்திர வேலைப்பாடமைந்த ஆடைகளும், பவளமும், செம்பும், ஈயமும், கோதுமையும் இங்கு இறக்குமதி செய்யப்பட்டதாகப் ‘பெரிப்புளுஸ்’ நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

சிறுபாணாற்றுப்படை என்னும் சங்க இலக்கியம் ‘எயிற்பட்டினம்’ என்ற கடற்கரைப் பட்டினம் பற்றிக் குறிப்பிடுகின்றது. ஒய்மாநாட்டு நல்லியங்கோடன் இதனை ஆண்டதாக இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் கூறுகின்றார். இதன் பின்னராக துறைமுக வரலாறுகளில் எயிற்பட்டனம் காணப்பெறவில்லை.

அண்மையில் அரவிந்த் என்ற ஆழ்கடல் நீச்சல் வீரர் புதுச்சேரிக்கு அருகே கடலில் நீண்ட மதில் போன்ற ஒன்றைக் கண்டுள்ளார். தொடர்ந்து, பெருங்கடற் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்தி வரும் ஒரிசா பாலுவிற்குத் தெரிவிக்க, அவர் குறிப்பிட்ட பகுதியில் கடல் ஆய்வுகளை மேற்கொண்டார்.

ஆய்வுகளின் முடிவில் இது பழங்கால எயிற்பட்டினமாக இருக்கலாம் என ஒரிசா பாலு தெரிவித்திருக்கின்றார். எயில் என்பது மதில் எனப் பொருள் படும். மரங்கலங்கள் உள்ளே பாதுகாப்பாக வருவதற்காகவோ அல்லது கடற்கோள் போன்ற பேரழிவுகளைத் தடுப்பதற்காகவோ இம்மதில் கட்டப்பட்டிருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்.

கடற்கோளினால் கொள்ளப்பட்ட இப்பட்டினம் குறி;த்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈழத்தில் பெரும் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடம் மாந்தை துறைமுகப் பகுதியாகும். வங்கம் மலிந்து நி;ன்ற மாதோட்டப் பகுதி ஈழ வணிகத்தின் வாசலாகும். பல வரலாற்றுக் குறிப்புகளில் மாந்தைத் துறைமுகத் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்போது இன்னொரு காட்சியைப் பார்ப்போம். தமிழ்நாட்டின் வடமேற்கில் கொடுமணல் என்றொரு நகரம். அங்கு ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மாணிக்கக்கற்களைப் பட்டை தீட்டுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். அருகிலிருந்த தொழிற்சாலைகளில் இன்னும் பலர் செம்பு, இரும்பு போன்ற உலோகங்களை உருக்கி பல்வேறு பொருட்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பலர் நூல் நூற்று ஆடைகளைத் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். யானைத் தந்தத்திலான அணிகலன்களை ஒரு பகுதியினர் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில் சங்குகள் அழகாக அறுபட்டு எழில் மிக்க வளையல்களாகிக்கொண்டிருக்கின்றன. 

இன்னொரு பகுதியில் தமிழ் வணிகர்கள் வேறு நாடுகளிலிருந்து வந்த வணிகர்களுடன் எந்த இலக்கணப் பிழையுமற்ற மொழியில் வர்த்தக ஒப்பந்தங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். உருவாக்கப்பட்ட பொருட்கள் பொதி செய்யப்பட்டு ஏற்றுமதிக்காக வண்டிகளில் ஏற்றப்படுகின்றன. ஒரு வணிக நகரத்துக்குரிய சுறுசுறுப்புடன் கொடுமணல் நகரம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இது நடந்தது அண்மையில் அல்ல. 2500 வருடங்களுக்கு முன்பு. இது நடந்து கொண்டிருந்தபோது இங்கிலாந்து ஒரு பேரரசாகவல்ல ஒரு நாடாகவே உருவாகியிருக்கவில்லை. ஐரோப்பாவின் பெரும்பகுதியில் காட்டுமிராண்டிகளே வாழ்ந்துகொண்டிருந்தனர். இப்போது வல்லரசாக இருக்கின்ற பல நாடுகளில் இரும்பின் பாவனை கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. கிறிஸ்தவ மதம் உருவாவதற்கு இன்னும் இயேசுநாதரே பிறந்திருக்கவில்லை.

பெருவியப்பை ஏற்படுத்திய இச்செய்திக்கு களமான கொடுமணல் நகரம் மண்ணுக்குக் கீழிருந்து மீண்டும் கண்டறியப்பட்டது 2013இல்தான். 

அங்கு தொன்மையான பொருட்கள் சில கிடைக்கின்றன எனச் செய்;தி வரவே, பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கா. ராஜன் தலைமையில் ஓரு குழு கொடுமணல் ஆய்வில் ஈடுபட்டது. அங்கே 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு தொழிற்கூடம் இயங்கியதற்கான சான்றுகளும் ஓரு ஈமச்சின்னமும் கண்டறியப்பட்டன.

விலையுயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு உருக்கப்பட்தற்கான தொழிங்கூடங்களும் இனங்காணப்பட்டன. நூல் நூற்கப் பயன்படுத்தப்பட்ட தக்களி மூலமும், சங்கறுத்து வளையல் செய்யப்பட்ட சான்றுகளும், யானைத் தந்தத்தாலான அணிகலன்களும் கிடைத்துள்ளன. 500க்கு மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துகளும் இங்கு பெறப்பட்டுள்ளன. அதிந்தை, ஆதன் சுமணன், பன்னன் பாகன் போன்ற பெயர்கள் அங்கு காணப்பட்டுள்ளன.

கண்டறியப்பட்ட பொருட்கள் நில கரியமிலக் காலக்கணிப்புக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு அவை கி.மு. 5ம் நூற்றாண்டைச் சார்ந்தவை என உறுதிப்படுத்தப்பட்டது. 

வெளிநாட்டு வணிகம் ஓங்கியிருந்த காலத்தே ஏற்றுமதிக்காகவும் உள்நாட்டுப் பயன்பாட்டிற்காகவும் உயர்ந்த அணிகலன்கள் இங்கே உருவாக்கப்ட்டுள்ளதாக ஆய்வாளர் கருதுகின்றனர்.

சேரரின் தலைநகரான கரூரையும் முசிறித் துறைமுகத்தையும் இணைக்கும் பெருவழியில் இது அமைந்துள்ளது. இது ‘கொங்கப் பெருவழி’ என அழைக்கப்பட்டிருக்கின்றது. இவ்வழியில் கிடைக்கப்பெற்ற ஏராளமான வெள்ளி, தங்க, உரோம நாயணங்கள் இத்தொழிற்கூட வாணிபத்தை உறுதிப்படுத்துகின்றன.

பதிற்றுப்பத்து என்னும் இலக்கியத்தில் கபிலர் “கொடுமணல்பட்ட..... நன்கலம்” என்றும், அரிசில்கிழார் “கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம்” என்றும் கொடுமணல் எனும் ஊர்ச் சிறப்பைக் குறிப்பிடுகின்றனர்.

ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தைப் பெருமளவில் கொண்டிருந்த தமிழகம் ஏற்றுமதிக்குரிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்களையும் கொண்டிருத்தல் இயல்பு. அவ்வாறான தொழிற்கூடங்கள் பற்றிய ஆதாரங்கள் ஆங்காங்;கே இலக்கியங்களில் காணப்பட்டாலும் தனித்துவத் தலைப்பாக இது நோக்கப்படவில்லை என்றே தோன்றுகின்றது.

தமிழக நாளிதழான தினமலர் மே17, 2013 இதழில் இவ்வாய்வு குறித்துக் கட்டுரை வெளிளிட்டுள்ளது.

தமிழர் வணிகத்தில் நாணயங்கள்.

உலகலாவிய பண்டைய வணிகத்தில் தனியிடம் பெற்றிருந்த தமிழகம் நாணயப் பயன்பாட்டிலும் சிறப்புற்றிருக்கின்றது. உள்நாட்டு வணிகம் பெருமளவு பண்டமாற்று முறையில் தொடர்ந்தாலும் வெளிநாட்டு வணிகங்கள் பெரும்பாலும் நாணயங்களை அடிப்படையாகக் கொண்டே நடைபெற்றன. மூவேந்தர்களும் தனித்தனியாகத் தம் இலச்சனைகள் பொறித்த நாணயங்களைப் பயன்படுத்தினர். குறுநில மன்னர் சிலரும் நாணயங்களைப் பயன்படுத்தியுள்ளனர். முதன்முதலாக முத்திரை நாணயங்களை வெளியிட்டவர் பாண்டியர் ஆவர். அதில் பெருவழுதி என பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இவை கி.மு 3ம் நூற்றாண்டைச் சார்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
சோழர் நாணயங்களும் கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கின்றன.

இவ்வேந்தர் நாணயசாலைகள் வைத்துத் தாமே நாணயங்களை வார்த்துள்ளனர். செப்பு போன்ற உலோகங்களை உருக்கி சதுர, வட்ட வடிவில் நாணயங்களை வார்ப்பதோடு, முத்திரைகளையும் எழுத்துகளையும் பொறிக்கத் தெரிந்து கொண்டிருந்தனர்.

கிரேக்க, உரோம, சீன நாணயங்கள் பெருமளவில் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன. அதே போன்று தமிழக நாணயங்கள் பிறநாடுகளிலும் கிடைத்துள்ளன.

வடநாட்டார் பயன்படுத்திய நாணயங்கள் தமிழகத்தில் கிடைத்தமை பற்றிய சான்றுகள் எதுவும் இதுவரை இல்லை.

நிறைவில்...

உலகின் பெரும்பாலான பகுதிகள் பண்பாட்டு வளர்ச்சி பெற்றிராத காலப்பகுதிகளில், வளர்ச்சி பெற்றிருந்த நாடுகள் அனைத்தோடும் தமிழகம் வாணிபம் செய்திருக்கின்றது. கடலையும் பயண வழிகளையும் நன்கறிந்த தமிழர் காற்றின் துணை கொண்டே பெருங்கடல்களைக் கடந்தனர்.

வணிகர்ளுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. சிறந்த வணிகர்கள் அரசர்களால் ‘எட்டி’ என பட்டமளி;த்து மதிப்பளிக்கப்பட்டனர்.

உலகளவிலான பண்டைய வணிக வரலாற்றில் தமிழகத்தின் அமைவிடம் முக்கியத்துவம் வாய்ந்திருந்தது. கிழக்கு நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே சிறப்பான கடல் வழிப்பாதைகளைக் கொண்டிலங்கிய தமிழகம் உலகம் தழுவிய வணிகத்தில் உச்சம் தொட்டிருந்தது எனலாம்.

இஸ்லாமிய - கிறி;த்தவப் போர் தொடங்கிய பின்னர் பாரசீக வளைகுடாப் பாதைகள் பாதுகாப்பற்றுப் போயின. இதனால் ஐரோப்பியரது தமிழக வணிகம் துண்டிக்கப்படவே, ஐரோப்பியர் தமிழகத்திற்கான புதிய கடற்பாதைகளைத் தேடினர். தமிழகத்தோடான வணிகம் அவர்களுக்கு அத்தியாவசியத் தேவையாக இருந்தது. எனவேதான் கொலம்பஸ் மேற்கு வழியாகவும், கொடகஸ்காமா கிழக்கு வழியாகவும் இந்தியாவைத் தேடிப் புறப்பட்டனர். ஐரோப்பியர் இந்தியா எனக் கருதியது தென்னிந்தியாவையே என்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும்.

மேற்கு நாடுகளுடான வணிகம் துண்டிக்கப்பட்டமையைத் தொடர்ந்து தமிழர் கீழைத்தேய நாடுகள் மீது பேரார்வம் காட்டினர். கீழைத்தேய நாடுகள் மீதான சோழப் படையெடுப்புகளும் இதையே உறுதி செய்கின்றன.

வாழ்வியலில் பெருவளர்ச்சி கண்ட இனத்தோராற்றான் இத்தகைய வணிக வளர்ச்சியைப் பெற முடியும். சிறந்த அரசியல் அறமும் சமூக வளமும் இயைபுற்றிருக்கும் காலத்தில்தான் பொருளாதாரம் உயர்வு பெறும். அவ்வாறான உயர்ந்த உலகத் தரம்மிக்க வாழ்வை என் முன்னோர் கொண்டிருந்தனர் என்பது பெருமைக்குரிய வரலாற்றுண்மையாகும்.

பொன்னையா விவேகானந்தன் 



உதவிய நூல்களும் இணையத்தளங்களும்:


தென்னிந்திய வரலாறு - டாக்டர் கே. கே. பிள்ளை 
தமிழர் நாகரிகமும் பண்பாடும் - முனைவர் அ. தட்சணாமூர்த்தி
சங்ககாலம் - முனைவர் முத்துராசன். 
பண்பாட்டுப் படையெடுப்புகள் - முனைவர் க.ப. அறவாணன்
பட்டனப்பாலை
புறநானூறு
அகநானூறு
மதுரைக்காஞ்சி 
தினமலர் (மே 17, 2013) 
http://lakkiyam.nakkheeran.in

About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com