வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 6 October 2015

மீன் சம்பல்

தேவையான பொருட்கள்:

  • மீன் – 4
  • தக்காளி – 5
  • பெரிய வெங்காயம் – 5
  • பூண்டு – 10 பல்
  • மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
  • மிளகாய் வற்றல் – 5
  • மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி
  • தேங்காய் பால் – கால் கப்
  • எலுமிச்சை பழம் – அரை மூடி
  • உப்பு – ஒன்றரைத் தேக்கரண்டி
  • எண்ணெய் – கால் கப்


செய்முறை:

மீனின் தலை மற்றும் வால் பகுதியை நீக்கி, சுத்தம் செய்து நடுப்பகுதியில் கத்தியால் கீறி விடவும். மிகவும் பெரிய அளவிலான மீன்கள் இதற்கு நன்றாக இருக்காது. கொஞ்சம் பெரிய மீன்களை மூன்று அங்குல நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பூண்டினை தோலுரித்துக் கொள்ளவும். மிளகாய் வற்றலை வெந்நீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து எடுக்கவும். இரண்டு தக்காளி, இரண்டு வெங்காயத்தை எடுத்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

மீன் துண்டங்களை மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து பிரட்டி வைத்து சுமார் 10 நிமிடங்கள் ஊற விடவும்.

ஊற வைத்த மிளகாயுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

மீதமுள்ள மூன்று வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக அரிந்து கொள்ளவும். மீதமுள்ள மூன்று தக்காளிகளையும் சிறு துண்டுகளாக நறுக்கவும்.

வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய்த்தூளில் பிரட்டி வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

மீன் துண்டங்கள் அனைத்தையும் பொரித்து எடுத்தப் பிறகு அதே வாணலியை சுத்தம் செய்து அல்லது மற்றறொரு வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நீளவாக்கில் நறுக்கின வெங்காயம், அரைத்த மிளகாய் விழுது போட்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும்.

வெங்காயம் விழுது ஒன்றாய் சேர்ந்து நன்கு வதங்கிய பிறகு நறுக்கின தக்காளி, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.

பிறகு அதனுடன் தேங்காய் பால் ஊற்றி பிரட்டி விட்டு அதில் பொரித்து எடுத்து வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு லேசாகப் பிரட்டி விடவும்.

வாணலியை ஒரு மூடி கொண்டு மூடிவிட்டு சுமார் ஒரு நிமிடம் வேகவிடவும். தீயின் அளவு மிதமாகவும், சீராகவும் இருக்க வேண்டும்.

ஒரு நிமிடம் கழித்து திறந்து எலுமிச்சை பழம் பிழிந்து விட்டு மேலும் மூன்று நிமிடம் மூடி வைக்கவும்.

அதன்பிறகு திறந்து, மீன் உடைந்துவிடாமல் கவனமாக பிரட்டி விட்டு இறக்கி விடவும். இதனை சூடான சாதத்துடன் பரிமாறவும்.

ஒருமுறை செய்து பார்த்துவிட்டு அடுத்த முறை செய்யும் போது காரம், உப்பு அளவுகளைத் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்ளவும்.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com