Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

The Periplus of the Erythraean Sea : travel and trade in the Indian Ocean

Rare Book Collection

The Periplus of the Erythraean Sea : travel and trade in the Indian Ocean

by Schoff, Wilfred Harvey, 1874-1932; Arrian

Published 1912
Publisher New York : Longmans, Green

Download Link

நண்டு ரசம்


தேவையானவை

நண்டு - 10
புளி - நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு
ஒரு முழு பூண்டு
ரச‌ப் பொடி - 3 தே‌‌க்கர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் பொடி - 1/2 தே‌க்கர‌ண்டி
காய்ந்த மிளகாய் - 4
கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு, எண்ணெய் - தா‌ளி‌க்க

செய்யு‌ம் முறை

நண்டின் கால்களை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்து அ‌ம்‌மி‌க் குழ‌வி அ‌ல்லது ம‌த்து வை‌த்து அத‌ன் ஓடுக‌ள் உடைபடு‌ம் அள‌வி‌ற்கு தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

பூ‌ண்டையு‌ம் நசு‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

பு‌ளியை ரச‌த்‌தி‌ற்கு ஏ‌ற்றவாறு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கரை‌த்து வை‌த்து‌க் கொ‌‌ள்ளு‌ங்க‌ள்.

பு‌ளி‌க் கரைச‌லி‌ல், ரச‌‌ப்பொடி, உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் பொடி, த‌ட்டி வை‌த்‌தி‌ரு‌க்கு‌ம் ந‌ண்டு கா‌ல்க‌ள், பூ‌ண்டு ‌விழுது ஆ‌கியவ‌ற்றை‌ப் போடவு‌ம்.

ரச‌த்தை தா‌ளி‌த்து அடு‌ப்‌பி‌ல் வை‌த்து கொ‌தி‌க்க ‌விடவு‌ம்.

ந‌ண்டு வெ‌ந்து, ரச‌ம் கொ‌தி‌த்தது‌ம் கொ‌த்தும‌ல்‌லி, ‌க‌றிவே‌ப்‌பிலை தழைகளை‌ப் போ‌ட்டு இற‌க்கவு‌ம்.

எகிப்தில் கோலோச்சிய தமிழ் பரதவர் - 1

தொல் பழங்குடிகளின் நாகரீகங்களில் சிந்து சமவெளி நாகரீகம் சிறப்பிடம் பெற்றுள்ளது. இங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிருபிக்கப்பட்ட உண்மை எனினும், சிந்து சமவெளியில் ஆய்வு மேற்கொண்ட ஹிராஸ் பாதிரியார் தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் தற்போது வாழும் பரதவ இனத்தவரே இப்பகுதியில் வாழ்ந்தவர் என்பதை உறுதிபடக் கூறியுள்ளார். 

சிந்து சமவெளி நாகரீகத்தின் சமகாலத்திய நாகரீகமே எகிப்து நாகரீகம் ஆகும். இவ்விரு நாகரீகத்திற்கும் குறிப்பிடத்தகுந்த பல்வேறு ஒற்றுமைகளும், இணைப்புகளும் காணப்படுகின்றன. இதன் காரணமாக தமிழர்கள் இங்கிருந்து எகிப்து சென்றனர் என்றும், எகிப்தியர் அங்கிருந்து இங்கு வந்தனர் என்றும் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இது குறித்து அறிஞர் பலரும் பல்வேறு நூல்களை எழுதியுள்ளனர். 

இன்றும் எகிப்துக்கும் சிந்து சமவெளிக்கும் இடையேயுள்ள பலுசிஸ்தானில் பேசப்படும் பிராகி என்னும் மொழி தமிழ் மொழி என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மாவீரன் அலெக்ஸ்சாண்டரின் இந்தியப் படையெடுப்பின் போது அவரை எதிர்த்த போரஸ் என்னும் மாமன்னன் பரவனே என புராதன இந்தியா என்னும் நூலில் கிருஷ்ணமூர்த்தி ஐயங்காரும், பாரத நாட்டு சரித்திரம் என்னும் நூலில் திருநாராயண ஐயங்காரும் தெளிவுபட உரைத்துள்ளனர்.

இதே கருத்தினையே பண்டைய தமிழரும் ஆரியரும் என்ற நூலில் சுவாமி வேதாச்சலமும் வலியுறுத்திக் கூறுகிறார். பரவன் என்ற இந்த மன்னனின் பெயர்தான் புரூரவன், புரூரவஸ், பரவாஸ், போரஸ், புருசோத்தமன் எனப்பல பெயர்களில் பல்வேறு மொழிகளில் வழங்கப்படுகிறது எனலாம்.

காலம் கி.மு 4500 ஆம் காலக்கட்டத்தில் செழிப்புற்று இருந்த சிந்துகரையில் உள்ள "மினு"நாட்டை ஆண்ட தமிழ் நெய்தல் நில மக்களாகிய பரதவர் இவர்கள் ஆப்பிரிக்காவின் வடபகுதியில் நீல ஆறுபாயும் "வளமுடைய வெளி" என்னும் எகிப்து நாட்டையும் ஆண்டனர் இந்த பரதவர். எகிப்து குருவாகிய "மனேதா" என்பவர் எகிப்தை அரசுபுரிந்த பரதவர் முதலிய 330 அரசரின் புராதன வரலாற்றை எழுதி வைத்துள்ளார்.

தமிழர் எகிப்திலிருந்தே வந்தனர் எனப் பல ஐரோப்பிய அறிஞர்கள் கூறுகின்றனர். இதையே தமிழுணர்ச்சி என்னும் நூலில் சச்சிதானந்த பாரதியாரும் கூறுகிறார். இது தொடர்பாக ஷில்பர்ட் ஷிலேட்டேர் என்னும் வரலாற்று அறிஞர் இக்கருத்தினை வலியுறுத்துவதுடன் எகிப்தினை ஆண்ட பாரவோன் என்னும் மன்னன் பரவனே எனவும் கூறுகிறார். 

பெயர் வினையிடந்து னளரய ஈற்றயல் ஆஓ வாதலும் செய்யுளில் உரித்தே என்னும் நன்னூல் விதிப்படி கிழவன் எனும் சொல் கிழவோன் என வருவது போல பரவன் என்னும் சொல்லே பாரவோன் என வருவதாக தமிழறிஞர்கள் கூறுகிறார்கள். பாரவோனை எகிப்தில் பாரோ என்று அழைகிறார்கள். 

பர் என்ற சொல்லுக்கு வீடு என்றும் ரா என்ற சொல்லுக்கு பெரிய என்றும் பொருள் படும். எனவே பாரோன் என்றால் பெரிய வீட்டுக்காரன் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இதனால் தான் எகிப்தினை நிலைநாட்டி ஆண்ட இனத்தவர் பரதரே என தமிழர் பெருமை என்னும் நூலில் பண்டித டி. சவேரியார் பிள்ளை எனும் அறிஞர் குறிப்பிடுகிறார்.

Menes
வரலாற்று ஆசிரியர் "ஷீரன்" என்பவர் எகிப்தியர் மண்டையோடும் தமிழர் மண்டையோடும்... ஒத்திருக்கிறதென்று எடுத்துரைக்கிறார். எகிப்தின் ஆதித்தமிழரசன் ஆகிய இப்பரதவ மீனன் என்ற அரசன் தனது மீன் கொடியை அங்கே பறக்கவிட்டான். இவ்வரசன் மரபினராகிய பரதவர் 250 ஆண்டு எகிப்தை ஆட்சி புரிந்துள்ளனர். இந்த குலத்தில் தோன்றிய மன்னரான "அகன்" என்பவனின் உடலும், கலன்களும், ஆயுதங்களும், பொன்ஆபரனங்களும், "நாகதம்" என்ற ஈமக்காட்டில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன...

"சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர்,
தாழ்வையின் அடைப்போர் தாழியிற் கவிழ்ப்போர்".
- மணிமேகலை

மாந்தரின் இறுதி சடங்குகளில் ஒன்றாகிய "தாழ்வையின் அடைத்தல் " என்ற சமாதி கட்டி அடக்கம் செய்யும் தமிழர் முறையே இந்த எகிப்து தமிழ் பரதவரின் வரக்கமாய் இருந்தது. மாண்டோர் மீண்டும் உயிர்பெற்று எழும்புவோர் என்ற நம்பிக்கையை இந்த எகிப்து தமிழ் பரதவர் கொண்டிருந்தனர். அவ்வுடம்புகளே "மம்மி " என்று அழைக்கப்படுகிறது...

இறந்தவர்களை புதைப்பது தமிழர் மரபு. எரிக்கும் இடம் சுடுகாடு, புதைக்கும் (இடும்) இடம் இடுகாடு. எளிய மனிதர்கள் இறந்தால் சிறுகுழி வெட்டி அதில் இட்டு புதைப்பர். அதற்கு சிற்றிடு (சிறு +இடு) என்று பெயர். அரசன் போன்ற உயர்நிலை மக்கள் இறக்கும்போது, பெரும் அளவில் கட்டடம் எழுப்பி அதில் இடுவர். பெரிய அளவில் இடப்படுவதால் (அடக்கம் செய்யப்படுவதால்) அது பெரும்+இடு = ”பெருமிடு” என்று அழைக்கப்பட்டது. அதுவே ‘பிரமிடு’ என்று ஆனது.

ஆக, பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல். தூயத் தமிழ்ச் சொல் ஆளப்பட்ட இடம் தமிழர்கள் வாழ்ந்த இடமாகும் அங்குக் கட்டப்பட்டதும் அவர்கள் கட்டியவை என்பது உறுதியாகிறது.இதன் மூலம்  கி.மு.4000 ஆண்டில் மீனன் என்ற தமிழ் பரதவ மன்னன் எகிப்து அரசனாக விளங்கினான் என்பதை அறிய முடிகிறது.

...............(தொடரும்).............
- நி. தேவ் ஆனந்த்  

பன்மீன் கூட்டம் - பாகம் 5

கிளாத்தி

363. ஊமைக்கிளாத்தி 
364. உறுகிளாத்தி
365. தோல் கிளாத்தி
366. கறுப்புக் கிளாத்தி
367. வெள்ளைக் கிளாத்தி
368. பீச்சுக் கிளாத்தி
369. பேப்பர் கிளாத்தி
370. ஒலைக் கிளாத்தி
371. கட்டிக் கிளாத்தி
372. நெடுங் கிளாத்தி
373. காவா கிளாத்தி
374. காக்கா கிளாத்தி
375. முள்ளுக் கிளாத்தி (மூன்று முட்கள் உள்ள மீன், பிசின் போல ஒட்டும்)

கிளிஞ்சான்

376. பல் கிளிஞ்சான் (பெரியது)
377. பார்க் கிளிஞ்சான் (பச்சை நிறமானது ராணி கிளிஞ்சான்)
378. தம்பான் கிளிஞ்சான் (மேலே கறுப்பு, கீழே சிவப்பு வண்ணம்) 

பல்கிளிஞ்சான்

Parrot fish என்பதை நம்மவர்கள் எளிதாக கிளிமீன் என்று மொழிபெயர்த்து விடுகிறார்கள். ஆனால் தமிழில் பல் கிளிஞ்சான் என்பதே இந்த மீனுக்குச் சரியான பெயர்.

கிளிஞ்சான், பார் மீன். கிளிஞ்சான்களில் மஞ்சள், நீல நிறங்களில் கிளிஞ்சான்கள் உள்ளன. வண்ணமயமான கிளிஞ்சான் ஒன்றும், நீலநிறம் கலந்த வாய் கொண்ட கிளிஞ்சான்களும் உள்ளன.

தமிழக பார்க்கடல்களில் பெரிய பல்கிளிஞ்சான் ஒன்றும், பச்சை நிற பார்க்கிளிஞ்சான் (ராணி கிளிஞ்சான்) ஒன்றும் உண்டு. மேலே கறுப்பும், கீழே சிவப்பும் கொண்ட தம்பான் கிளிஞ்சான் என்ற இனமும் உண்டு.

கிளிக்கு இருப்பதுபோன்ற கனமான தடித்தவாய் இருப்பதால் இவை கிளிஞ்சான் எனப் பெயர் பெற்றன. பலமான கூரிய பற்களும் கிளிஞ்சான்களுக்கு உள்ளன. பவளப்பாறைகளைக் கொரித்து அவற்றுக்குள் உள்ள சிறிய உயிர்களை இவை உண்ணக்கூடியவை.

கிளிஞ்சான் மீன்கள் Polyps எனப்படும் பவளப்பாறை மொட்டுகளை அவற்றின் ஓடுகளுடன் உண்ணக்கூடியது. பவள மொட்டு செரிமானம்ஆகி விடும் நிலையில் ஓடுகள் மீனின் வயிற்றில் சிதைந்து மணலாகி, கழிவாக வெளியேறுகிறது.

கிளிஞ்சான் மீன்கள் வெளியேற்றும் மணல்துகள்களாலேயே சிறுசிறு தீவுகள் உருவாவதாகக் கூறப்படுகிறது.உலகம் முழுவதும் கிளிஞ்சான்களில் 75 முதல் 100 இனங்கள் உள்ளன. பெரிய செதிள்களும், தடித்த அடர்த்தியான உடலும், கண்ணைப் பறிக்கும் வண்ணமும் இந்த மீன்களுக்குரிய தனிஇயல்பு.

கும்பலாக இவை காணப்பட்டாலும் கிளிஞ்சான்கள் கூட்டமீன்கள் (Schooling fishes) அல்ல. இவை உறுதியாக, ஆனால் மெதுவாக நீந்தக்கூடியவை. இரவில் தன்னைச் சுற்றி சளிபோன்ற ஒரு படலத்தைச் சுரக்கவிட்டு அதற்குள் தங்கியிருந்து, காலையில் அந்த போர்வையை விட்டு வெளியே வரும் கிளிஞ்சான் இனங்களும் உள்ளன. கிளிஞ்சான்கள் தனிஇன மீன்கள் என்று கருதப்பட்டாலும் இவை Wrasse இன பார் மீன்களுக்கு உறவுக்கார மீன்கள் எனக் கருதப்படுகின்றன.

கிழங்கான்
379. வெள்ளை கிழங்கான்
380. கிளக்கான்

381. கிளிப்பாளை 
382. கிள்ளை
383. கிளச்சி
384. கிளிசை
385. கிளிமீன்

கீளிமீன்

386. மஞ்சக்கீளி (சின்னக்கீளி),
387. கறுப்புக்கீளி
388. தாளான் கீளி
389. நெடுங்கீளி
390. பட்டாணிக் கீளி 
391. பாக்கீளி
392. புள்ளிக்கீளி
393. வரிக்கீளி
394. வண்ணாத்திக்கீளி 
395. முட்டாள் கீளி
396. பெருவாக்கீளி
397. சல(ம்) தின்னிக்கீளி.
398. கீரைமீன் (Yellowfin tuna) 
399. கீச்சான் (மொண்டொழியன்)
400. கோலக்கீச்சான்
401. கீட்டா
402. குறுவளை
403. குறுவா
404. குப்புளா
405. கும்பிளா (கும்பாலா)
406. குமுளா

குறிமீன் (வெள்ளையும், மஞ்சளும் கலந்த நிறம். முதுகில் முள் இருக்கும் செதிளில் இருநிறம். வயிற்றில் சினை இருக்கும்)

407. புள்ளிக்குறி மீன்
408. வெள்ளைக்குறி மீன்
409. குறுமீன் (குதிப்புச் சுவையுள்ளது. பன்னா, குட்டிக்கத்தாளை மாதிரியானது)
410. குழிமீன் (உருண்டு திரண்டிருக்கும்)
411. குழாய் மீன் (கலிங்கன் போன்றது. தும்பு போன்ற குழாய் போன்ற வாயால் இரையை உறிஞ்சக்கூடியது)
412. குதிப்பு (சல்லமீன்)
413. குருங்கை

குத்தா

414. செந்தலைக்குத்தா 
415. செம்பக் குத்தா
416. செந்தூரக்குத்தா
417. தாழக்குத்தா
418. தாடிக்குத்தா
419. சென்னிக்குத்தா
420. கன்னங்குத்தா
421 வீசக்குத்தா. 
422. குளச்சல்
423. குழிமுண்டான்
424. குட்டிலி (கூட்டிலி, சுட்டுத்தின்ன ஏற்ற மீன்)
425. குட்டோறு
426. குமளம்பாசு, 

கூரல் (வயிற்றில் பள்ளை என்ற காற்றுப்பை உள்ள மீன்)

427. மஞ்சள் கூரல் (அளக்கத்தாளை இனம்)
428. வெள்ளைக் கூரல்
429. கொடுவாய்க் கூரல்,
430. கூடுமுறிச்சான்
431. கூந்தா
432. கூறவு

கெழுது

433. மண்டைக் கெழுது
434. மடிக் கெழுது
435. மாம்பழக் கெழுது (மஞ்சள் கெழுது)
436. கட்டக் கெழுது
437. காயல் கெழுது
438. முழங்கெழுது
439. பொன் கெழுது
440. ஊசிக் கெழுது
441. சல்லிக் கெழுது
442. மொண்டைக் கெழுது
443. முள்ளங் கெழுது
444. பொதி கெழுது (பொரி கெழுது)
445. வெண் கெழுது
446. கூவங் கெழுது (குவ்வங் கெழுது, அரிய இனம்)
447. கருப்புக் கெழுது
448. சலப்பைக் கெழுது
449. வரிக் கெழுது
450. பீக்கெழுது
451 அங்காள் கெழுது
452. ஆணிக்கெழுது
453. செம்பாணிக் கெழுது (செம்பு ஆணி போன்ற மஞ்சள் முள் இருக்கும்)

- மோகன ரூபன்

Kings Warriors Traders Fishers - (Parathavars/Paravas/Bharathars) - 3

Paravas Conversion :

Da Cruz next writes to his benefactor in Lisbon in 1533, explaining his sad state, he even complains of being imprisoned and put into chains together with the black heathen. It appears that he then fled to Quilon to escape the authorities in Cochin. Quilon then was supplying pepper to the state of Vijayanagara and Bengal, and Da Cruz seizing the opportunity, offers to stop this and requests that he be made the factor at Quilon (did not happen). He also requests permission to take up the horse trade (the Portuguese Crown had the monopoly then). In 1535, he gets a reply extending his loan repayment by two more years and permission to trade horses. Accordingly he gets a hold of some 12 horses, goes to the southern kingdoms, sells them to the Sultan of Ma’abar, but never gets paid. What took place between then and 1537 is interesting. In 1537, he writes his last letter, accounting for the conversions of the Paravas, to the king and stressing his involvement in it.

Back at Tuticorin, things were not going well for the Paravas. They had been used to fishing for oysters and pearls and paid a small subsidy to the kings of Quilon/Travancore, Kayattar and Tumbichi Nayak. In 1516 it appears that Muslims took over the whole pearl fishery on a lease from Udaya Marthanda Varma. The Portuguese wanting a share of the profits managed to wrest out a share of the by way of a tribute from the local kings against threats of attack. Joao Froles was sent to take control of the area and with that what followed was a long 14 year war on the pearl fishery coast between the Muslims and the Portuguese. In 1528, following a defeat of the Moors by De Mello, retribution had to be paid to the Portuguese. The Moors forced the Paravas to pay additional tributes from the pearl fishing. The Paravas were soon reduced to virtual slavery, and the situation had become very tense indeed, for it was after centuries and for first time in history that the Paravars had lost their right over the pearl fishery.

It was on such a tense day in Tuticorin during 1534, when as usual, a Parava woman went out to sell her home made Paniyarams. As it appears from the texts of Teixeira, a Muslim insulted her and the lady promptly went home and complained to her husband. The enraged man went out and a fight ensured with the Muslim, during which the Muslim cut off an earlobe of the Parava, a great insult indeed for they wore large ornaments on their ears which extended down to their shoulders. So the honor of the entire community was compromised, as Schurhammer reports. The two groups went at each other’s throats and a great many were killed. The Muslims of neighboring towns joined the fracas and the Paravas were systematically decimated (in fact a bounty of 5 fanams per head were initially paid to the mercenaries, but as the heads piled up, this was reduced to one fanam). The Paravas had nowhere to go and were in a dire situation with no hope (A little exaggeration can be seen in these accounts - since the Muslims needed the Parava to eventually go out to sea and continue with their business and pay them the taxes).

It was into this mess that the indebted Joa Da Cruz strayed. The Paravas talked to him and explained their desperate plight. Seeing an opportunity to redeem himself, Da Cruz suggested that they convert and get allied to the Portuguese to save themselves. The Paravas, seeing no other alternative, agreed.

As the Portuguese patrol boats returned to Cochin, Cruz and 15 Parava patangatins (3 prominent chiefs and other seniors) sailed with them. Meeting Pedro Vaz the captain at Cochin, they requested for protection, agreeing to conversion and asked for more priests to effect the conversion of their people back home. Pedro Vaz was leery about the whole thing, perhaps considering Da Cruz’s precarious relationship with the Cochin bureaucracy and agrees only after the Paravas returned with another 70 of their people. Miguel Vaz, the friar from Goa was at Cochin at that time and quickly did the baptisms. Many of the people who converted including the chief took the name of their savior the Chetti/Nair Joao Da Cruz (resulting in confusion for historians who thought Joao da Crus went and settled among the Paravas as their headman).

The Moors(Muslims) getting wind of what was going on tried to prevent the conversions. They sent two of their heads to Cochin with eight expensive pearls, cotton goods and 20000 fanam to bribe the captain against it, through Cherina Marakkar who was a popular moor in the Portuguese good books. Pedro Vaz would not budge, and obtained further support from his boss Nuno Da Cunha at Diu. In Feb 1536, two ships sailed back to Tuticorin with Da Cruz, Miguel Vaz, the converted paravas and other priests. During the course of the next year, the entire caste of Paravas of many thousands had been converted, mainly by Miguel Vaz and his helpers Pedro Goncalves and some others from Cochin (Not St Xavier who came years later). The Paravas contributed 75000 fanams per annum to the Portuguese for protection; a figure considered exorbitant by Miguel Vaz, who complained and got it reduced to 60000.

As Teixiera was to write – And that is how our lord saved so many souls by means of one torn earlobe!!

Joao returned back to Cochin around 1537, stopping at Travancore on the way offering the King of Travancore horses if he would consent allowing fisher folk in his area also to convert like the Paravars. As you may recall the Travancore kingdom was soon going into war against the Vijayanagar king and desperately needed horses.

The Marakkars were not happy about the situation and their final desperate retaliation involved all three Pate, Kunhali and Ali Ibrahim. The resulting sea and land fight off Cape Comorin was an interesting one and best recounted another day, for that is not today’s topic. The Zamorin involved at the tail end died a broken man, in 1540.

Francis Xavier came to the Paravars in 1542-44, to work amongst them and go on to become a saint.

......continued...

இரத்த பூமி - 14


வலிந்து போய் பாண்டிய பரதரின் வல்லமையையும் வஞ்சினத்தையும் வரலாற்றில் பதிக்க பயணித்தனர்….!



ஏற்கனெவே…..!

புன்னக்காயலை கைப்பற்றி பரதவரை அடிமையாக்க இரப்பாளியை பின் தொடர்ந்து வந்த கொள்ளையர் படையின் ஒரு பிரிவு பரதவக்கடலின் சீற்றத்தால் வழிதப்பி முயல்தீவை தாண்டி கீழக்கரையை அடைந்திருந்தது. அங்கிருந்தபடி புன்னைகரை இரப்பாளியின் வசமாகி போனதை அறிந்து மகிழ்ந்து கொண்டாடிய கொள்ளையர் படை அங்கிருந்த மூர்களின் உதவியோடு புன்னக்காயலில் நடை பெறவிருக்கும் இரப்பாளியின் முடிசூட்டுவிழாவிற்க்கு மீண்டும் புன்னயை அடைய திட்டமிட்டிருந்தது.

அறியாத கடலின் ஆக்ரோஷ‌த்துக்கு அஞ்சிய கொள்ளையர்கள் அங்கேயே கீழக்கரையில் நாட்களை கடத்தி வந்தனர். ஆனால் இந்நிலையில் இரப்பாளியின் முடிசூட்டுவிழாவிற்க்கு வடக்கு பரதவ கடற்கரை பரதவர்களை அழைக்க அடப்பனார் தலைமையில் வந்த கொள்ளையர்களுக்கு வேம்பார் சடையனார் அளித்த வரவேற்பையும் அவர்களை மண்ணுக்குள் புதைத்து ஒழித்த கொடூரத்தையும் அறிந்து சீறினார்கள்.

மேலும் இதுபோலவே தெற்கு தென் மேற்கு பரதவகடலோரம் எங்கும் இரப்பாளியின் கொள்ளைக்கூட்டம் கொல்லப்பட்டதும், இரப்பாளியே புன்னைகாயலில் சிறைப்பட்டதும் தெரியவந்து நிலை குலைந்து போனார்கள். பரதவ தலை நகர் புன்னை மீது மறு தாக்குதல் நடத்த உத்தேசித்து பெரிய பட்டண‌த்திலிருந்த மறவர்களின் உதவியை இரப்பாளியின் கப்பற்படை நாடியது.

மறவத்தலைவனை தளபதியாக்கி புன்னைக்காயலில் சிறைப்பட்டு இருக்கும் இரப்பாளியை மீட்டு எடுப்பதற்கும் ஆலோசனை செய்து சதியில் இறங்கியது. இதற்கு மறவர்கள் உடன்படவில்லை ஆனாலும் காலகாலமாய் பரதவரொடு பயணிக்கும் பரதவ பங்காளி மறவர்கள் ஆபத்தான நிலமையை பரதவருக்கு எடுத்து கூற..... 

கீழ‌க்கரையில் மூர்களின் பாதுகாப்பில் இருக்கின்ற இரப்பாளியின் கப்பற்படைப் பற்றிய தகவல்களை தாக்குதல் ரகசியங்களை கொச்சின் போர்த்துகீசிய கோட்டைக்குப் படை திரட்ட‌ போயிருந்த‌‌ பரதவ தலைவன் விக்கிரமாதித்த பாண்டியனுக்கு விரைந்து சென்று சதிவலை பின்னலை விவரித்தனர்.

புன்னைக்கரையை மீண்டும் தாக்க திட்டமிட்டிருக்கும் கடற்கொள்ளையரையும், புன்னைக்கரையில் சிறைப்பட்டிருக்கும் இரப்பாளியையும் கொன்று ஒழிக்கவும், விதாலனால் பிடித்து செல்லப்பட்ட பிணையக்கைதிகளை மீட்கவும், போர்த்துக்கீசிய கேப்டன் கமாண்டர் லோரல் கோயன்கோ மற்றும் பரதவத்தலைவன், பட்டங்கட்டிமாரும் பெரும் படையுடன் புன்னைக்கரையை நோக்கி விரைந்தனர்.

இரு நாட்கள் கழித்து புன்னைக்கரையை நெருங்கிய போது மணப்பாட்டு தாவிலே கிடந்த மடிக்காரர்கள் போர்துகீசிய கப்பலை கண்டு கூச்சலிட்டு குறுக்கே பாய்ந்தனர். கப்பலிலிருந்த பரதவ தலைவரும் பட்டங்கட்டிமாரும் நங்கூரம் போட்டு நலம் விசாரித்த போது அவர்களது வாய் வழி செய்தி கேட்டு அதிர்ச்சியாயினர்.

அதாவது புன்னைக்கோட்டைக்குள் சிறைப்பிடிக்கப்பட்ட‌ இரப்பாளியும் அவனது கொள்ளையர் படையும் தாக்குதல் நடத்தி தப்பி சென்று விட்டது, அப்படி தப்பி செல்ல நினைத்த பொழுது கோட்டைக்கு கிழக்கே புதைக்கப்பட்டிருந்த வலைகளில் கொள்ளையர் படையில் சிலர் சிக்கி மாண்டு போனதாகவும் இரப்பாளியும் ம‌ற்றும் சிலரும் கடல் வழியே கீழக்கரைக்கு தப்பிச் சென்றதாகவும். அவர்கள் சொல்ல சொல்ல வீரபாண்டியனார் விக்கித்து போனார்.

விரக்தியின் விளிம்பிற்க்கு சென்றவர் சொன்னார், இந்த வீரபாண்டியனோடு பரதவனின் வீரமும் விவேகமும் விடைபெற்றுவிட்டது. திறம்பட திட்டங்களை தீட்டி தந்த பிறகும் கொற்கை கோ கோட்டை விட்டு விட்டாரே ஆறாப்பழி அனைத்தும் பாண்டியம்பதிக்கு அல்லவா?

அடுத்த தலைமுறையை காக்க முத்துகுழி தலைமை தாங்க தகுதி இழந்தாரோ இளம் தலைவன் என புலம்பி தவிக்கும் போது.... அனைத்தூர் பட்டங்கட்டிமார் புடை சூழ பரதவ தலைவனை தேற்றினர்

ஐயா ராசா பாண்டியம்பதி 
இளைய ராசாவை 
குறைவாக நினைக்காதிங்க 
குலம் காக்க வந்த நம்ம 
குமரவேள் பாண்டியன் ஐயா

குத்து வாளுக்கு இரையாகி குத்துயிரும் குலையுயிருமாய் கிடந்தபடி பாண்டிய வம்சத்தையே பகைவனிடமிருந்து பாதுகாத்தவர் ஐயா, உண்மையை அறியாமல் ஒன்றுமே சொல்வதற்கில்லை, ஆனாலும் ஐயா தற்போது நிலைமை புரிந்த பிறகு புன்னை கரைக்கு சென்று பயனில்லை.

தப்பி சென்ற இரப்பாளியும் கொள்ளையர்களும் கீழக்கரையிலோ பரதவ தீவுகளில் தான் இருக்க வேண்டும் எனவே அங்கேயே சென்று எதிரியின் கூடாரத்திற்கே சென்று இராப்பாளியையும் கொள்ளையரையும் பின்புலமாக இருக்கும் மூர் இனத்தையும் சங்காரம் செய்வோம் என சடுதியில் பரதவ பட்டங்கட்டிமார் சூளுரைத்து பகைவரின் குருதியின் சுவையறிய துடியாய் துடித்தனர். 

இதை கேட்ட போர்துகீசியரும் புன்னைக்கரையை தொடாமல் கீழக்கரை திசையை நோக்கி செல்ல கப்பற்படையின் பாயை திருப்பி தாவுக்குள் வளிந்தனர்…….?

வலிந்து போய் பாண்டிய பரதரின் வல்லமையையும் வஞ்சினத்தையும் வரலாற்றில் பதிக்க பயணித்தனர்….!


….……. கடல் புரத்தான்………

அர்ச் செசிசிலியம்மாள் பேரில் பாடல்

வேம்பாறு தூய இஸ்பிரித்து ஆலயத்தில்  
அர்ச் செசிசிலியம்மாள் பேரில் பாடப்பட பாடல் 


சங்கீத செல்வியாம் செசிலியே - நின்
இங்கீத ஒலியின் இன்னிசையே - நல்
மங்காத கதி பெற வைத்தாயே - நலமுற மோட்சத்தில்

உத்தம கோத்திரத்தில் பிறந்தாய் - ஞானம்
அற்ற வலேரியானை மணந்தாய் - ஆனால்
சத்திய மறையதனைக் காட்டினாய் - சம்மனசருளினால்

பாவலர் போற்றிடும் பாக்கியமே - நின்
பாதுகாவல் எங்கள் சலாக்கியமே - எம்
பாக்களுக்கருள் கூறும் நேயமே - பரனருள் நிறையுற

வாத்திய மீட்டும் ஜெயசீலியே - எம்
உபாத்தியரான குணசீலியே - நின்
நேத்திரங் கொண்டணையும் லீலியே - நிம்பநகரத்தின்

கவர் எழுப்பமும், கவர் அடக்கமும்


கடல் என்ற நீலநிற மேடையில் நாள்தோறும் அரங்கேறும் ஒரு நாடகம்தான் கவர் எழுப்பமும், கவர் அடக்கமும்.

அவையடக்கம் என்றால் தெரியும். கவர் அடக்கம் என்றால் என்ன என்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.


கடல்நீரில் வெறும் கண்களுக்குத் தெரியாத Diatom என்ற ஒருசெல் உயிரி உள்ளது. அகராதியில் Diatom என்றால் என்ன என்று தேடினால் இருகூற்று நுண்பாசி என்று வரும். சிறிய வட்டவடிவ பெட்டி மாதிரியான தோற்றத்தில் Diatom இருக்கும். (பெட்டி எப்படி வட்டவடிவில் இருக்கும் என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஏறத்தாழ வட்ட வடிவம்). இந்த நுண்பாசி, இதனுடன் சேர்ந்து Flagella என்ற இன்னொரு வகை நுண்பாசி ஆகியவை கடலில் மிதக்கும் தாவர நுண்உயிர்கள். கடலின் மிகப்பெரிய உயிர்அடிப்படை, உயிர் ஆதாரம் இந்த நுண்பாசிகள்தான். நிலத்துக்கு புல் எப்படியோ அப்படியே கடலுக்கு இந்த நுண்பாசி.

வெறும் கண்களால் காண முடியாத இந்த நுண்பாசிகளே கடலின் நிறமாற்றங்களுக்கு காரணம். உலகம் முழுவதும் இந்த நுண்பாசிப் படலம் எங்கே அதிகம் இருக்கிறதோ அங்கே மீன்வளம் அதிகம் இருக்கும். இவை பூத்துக்குலுங்கினால் மீன்வளம் பெருகும். Diatom என்ற நுண்பாசி, அது சார்ந்த தாவரங்களுக்கு பைட்டோபிளாங்டன் என்ற பெயரும் உண்டு. பிளாங்டன் (Plankton) என்றால் அலைந்துதிரிபவை என்று பொருள் கொள்ளலாம்.

Diatom அதனுடன் Flagella என்ற இன்னொரு வகை நுண்பாசி போன்றவை மளமளவென பிளந்து கோடிகோடியாகப் பெருகக் கூடியவை. ஒரு மணி நேரத்தில் 300 முதல் 400 பில்லியன் Diatom, நுண்பாசி உருவாகக் கூடும். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி)

அலை, காற்று, நீரோட்டத்தின்படி அங்குமிங்கும் மிதந்தலையும் இந்த நுண்பாசிகள், உணவு உற்பத்திக்காக பச்சையம் தயாரிக்க சூரியஒளி தேவை. அதனால், இவை கடல் மேற்பரப்பில் மிதக்கின்றன. முடிஇறகு, ஒரு துளி எண்ணெய் இந்த ஏதோ ஒன்றைப் பயன்படுத்தி இவை மிதக்கின்றன.

பைட்டோபிளாங்டன் என்ற வகைப்பாட்டில் Diatom, Flagella மட்டுமின்றி பல ஆயிரம்வகை நுண்பாசிகள் அடக்கம். அதில் குட்டியான Dino Flagella என்ற உயிரி, சாட்டை போன்ற ஓர் உறுப்பின் உதவியுடன் நீந்தக்கூடச் செய்யும். நாள் ஒன்றுக்கு இது 65 அடி தொலைவு சென்றால் அதிசயம். ஆனாலும் அது ஒரு நுண்பாசிதான். இதைச் சுற்றி ஒளிஊடுருவக் கூடிய விதத்தில் கண்ணாடி போன்ற கூடு உண்டு. Dino Flagella நீந்தாதபோது நீரில் மூழ்கிவிடும்.

அதுபோல Diatomம்களுக்கும் கண்ணாடி போன்ற கூடு உண்டு. இதில் நாம் ஏற்கெனவே பார்த்த Flagellaவுக்கு செல்லுலஸ் போன்ற அடர்த்தியான நிறம் உள்ளது. கடலின் நிறத்தை மாற்றுவதில் இந்த நுண்பாசிக்கு நிறைய பங்கு இருக்கிறது. தவிர, இதற்கு ஒளிஉமிழக்கூடிய திறமையும் உண்டு. ஆயிரம் மின்மினிப்பூச்சிகள் போல இது ஒளிவிடும். வசந்தகாலத்தில் இது அதிகம் ஒளிவீசும்.

தரையில் வளரும் தாவரத்துக்கு எப்படி சூரிய ஒளியும், உரமும் தேவையோ, அதுபோல மிதந்தலையும் நுண்பாசிகளுக்கு சூரிய ஒளியுடன், இதர ஊட்டச் சத்துகளும் தேவை. இந்த ஊட்டச்சத்துகள் இறந்த மீன்கள் மூலம் கடலின் அடியில் கிடைக்கக்கூடும்.

எனவே, சூரிய ஒளிக்காக கடலின் மேற்பரப்புக்கும், ஊட்டச்சத்துக்காக கடலின் கீழ்ப்பரப்புக்கும் நாள்தோறும் சென்றுவர வேண்டிய தேவை இந்த நுண்பாசிகளுக்கு உண்டு.

தமிழில் கவுர் என்று அழைக்கப்படும் இந்த நுண்பாசிகள், கடலின் மேலே ஒளிவீசியபடி வந்து சேர்ந்தால் அது கவர் எழுப்பம். கடல் அடியில் மீண்டும் அடங்கினால் அது கவர் அடக்கம்.

- மோகன ரூபன்

Kings Warriors Traders Fishers - (Parathavars/Paravas/Bharathars) - 2


Portuguese King's Expedition :

Portuguese king John II set a new objective for his captains: to find a sea route to Asia by sailing around the African continent.

The route meant that the Portuguese would not need to cross the highly disputed Mediterraneannor the dangerous Arabian Peninsula, and that the whole voyage would be made by sea. By the time Vasco da Gama was in his 20s, these plans were coming to fruition. In 1487, John II dispatched two spies, Pero da Covilhã and Afonso de Paiva, overland via Egypt, to East Africa and India, to scout the details of the spice markets and trade routes. The breakthrough came soon after when John II's captain Bartolomeu Dias returned from rounding the Cape of Good Hope in 1488, having explored as far as the Fish River (Rio do Infante) in modern-day South Africa and having verified that the unknown coast stretched away to the northeast.

of Mombasa – and there the expedition first noted evidence of Indian traders.

First Trip:

On 8 July 1497 Vasco da Gama led a fleet of four ships with a crew of 170 men from Lisbon. The distance traveled in the journey around Africa to India and back was greater than around the equator.[10][11] The navigators included Portugal's most experienced, Pero de Alenquer, Pedro Escobar, João de Coimbra, and Afonso Gonçalves. It is not known for certain how many people were in each ship's crew but approximately 55 returned, and two ships were lost. 

Reaching the legendary Indian spice routes unopposed helped the Portuguese Empire improve its economy that, until da Gama's discovery, was based mainly on trading along northern and coastal West Africa. The spices obtained were mostly pepper and cinnamon at first, but soon included other products, all new to Europe and leading to a commercial monopoly for several decades.

The King of Calicut, the Samudiri(Zamorin), who was at that time staying in his second capital at Ponnani, returned to Calicut on hearing the news of the foreign fleets's arrival. The navigator was received with traditional hospitality, including a grand procession of at least 3,000 armed Nairs, but an interview with the Zamorin failed to produce any concrete results. 

Vasco da Gama's request for permission to leave a factor behind him in charge of the merchandise he could not sell was turned down by the King, who insisted that da Gama pay customs duty—preferably in gold—like any other trader, which strained the relation between the two.
Annoyed by this, da Gama carried a few Nairs and sixteen fishermen (mukkuva) off with him by force.[17] Nevertheless, da Gama's expedition was successful beyond all reasonable expectation, bringing in cargo that was worth sixty times the cost of the expedition.

The expedition had exacted a large cost – one ship and over half the men had been lost. It had also failed in its principal mission of securing a commercial treaty with Calicut. Nonetheless, the spices brought back on the remaining two ships were sold at an enormous profit to the crown. Vasco da Gama was justly celebrated for opening a direct sea route to Asia. His path would be followed up thereafter by yearly Portuguese India Armadas.

Second Trip:

The follow-up expedition, the Second India Armada launched in 1500, was placed under the command Pedro Álvares Cabral, with the mission of making a treaty with the Zamorin of Calicut and setting up a Portuguese factory in the city. However, Pedro Cabral entered into a conflict with the local Arab merchant guilds, with the result that the Portuguese factory was overrun in a riot and up to 70 Portuguese killed. Cabral blamed the Zamorin for the incident and bombarded the city. Thus war broke out between Portugal and Calicut.

Vasco da Gama invoked his royal letter to take command of the 4th India Armada, scheduled to set out in 1502, with the explicit aim of taking revenge upon the Zamorin and force him to submit to Portuguese terms. The heavily armed fleet of fifteen ships and eight hundred men left Lisbon on 12 February 1502. 

On reaching India in October 1502, da Gama's fleet set about capturing any Arab vessel he came across in Indian waters, most notoriously the Miri, a pilgrim ship from Mecca, whose passengers he massacred in open water.

He then appeared before Calicut, demanding redress for the treatment of Cabral. While the Zamorin was willing to sign a new treaty,[25] da Gama made a call to the Hindu king to expel all Muslims from Calicut before beginning negotiations, which was turned down. The Portuguese fleet then bombarded the city for nearly two days from the sea shore, severely damaging the unfortified city. He also captured several rice vessels and cut off the crew's hands, ears and noses, dispatching them with an insulting note to the Zamorin.

The violent treatment meted out by da Gama quickly brought trade along the Malabar Coast of India, upon which Calicut depended, to a standstill. But the Zamorin nonetheless refused to submit to Portuguese terms, and even ventured to hire a fleet of strong warships to challenge da Gama's armada

Third Trip and Death:

Setting out in April 1524, with a fleet of fourteen ships, Vasco da Gama took as his flagship the famous large carrack Santa Catarina do Monte Sinai on her last journey to India, along with two of his sons, Estêvão and Paulo. After a troubled journey (four or five of the ships were lost en route), he arrived in India in September.

Vasco da Gama immediately invoked his high vice regent powers to impose a new order in Portuguese India, replacing all the old officials with his own appointments. But Gama contracted malaria not long after arriving, and died in the city of Cochin on Christmas Eve in 1524, three months after his arrival.

Since the arrival of Gamma, the trade route from India to Portugal was established. During 1512 to 1537 another incident happened which led Paravas to meet Portuguese.

It was Da Cruz (John the cross) who was send send by Zamorin to Lisbon (Portugal) for trade. This person was welcomed by king and was converted to Christianity and got name Da Cruz. He learnt native language(Latin) and was rejected by Zamorin for getting converted. Back in India Da Cruz wrote letters to the Portuguese king for money to trade peppers and he got it. When he had send the ships with pepper it wrecked in the sea resulting in loss. Now Da Cruz was poor and was imprisoned for not paying his debt to the king. Again he wrote a letter to king to do another business to repay his debt and was granted and released. Accordingly, he gets a hold of some 12 horses, goes to the southern kingdoms, sells them to the Sultan of Malabar, but never gets paid. This period was around 1535-36. Here he meets Paratharas … and then the conversion starts… let us see that in next week. continued........

வேம்பாற்றில் சங். ரெமிஜியுஸ் மிஸ்ஸியர் சுவாமிகள்

திருமந்திர நகராம் தூத்துக்குடியில் உதித்து, 17.12.1922 குருவாக 1927 ஆம் ஆண்டு முதல் 1933 ஆம் ஆண்டு வரை வேம்பாற்றின் பங்கு சுவாமியாகப் பணியாற்றி வேம்பாற்று மக்களை ஆன்மீக வாழ்வில் வழிநடத்திச் சென்றதுடன் வேம்பாற்று மக்களின் பேரன்பிற்கு பாத்திரமானவரே சங். ரெமிஜியுஸ் மிஸ்ஸியர் சுவாமிகள் ஆகும். இவரது பணிக்காலம் வேம்பாற்று பரிசுத்த ஆலய பங்கு வரலாற்றில் பொற்காலம் என்றால் அது மிகையாகாது. 

இவரது பணிக்காலத்தில் தான் வேம்பாற்றில் வதியும் பெண்குழந்தைகள் கல்வியறிவு பெற வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு பரிசுத்த ஆலய பங்கு அர்ச். மார்கரீத் மரியன்னை கன்னியர் மடத்தில் இயங்கி வந்த அர்ச். மார்கரீத் மரியன்னை ஆரம்ப பாடசாலைக்கென புதிய விசாலமான கட்டடம் கட்டுவிக்கப்பட்டு கன்னியர் மடத்தினூடே இணைக்கப்பட்டது. (1964 ஆம் ஆண்டு அர்ச். மார்கரீத் மரியன்னை ஆரம்ப பாடசாலை அர்ச். செபஸ்தியார் பாடசாலையுடன் இணைக்கப்பட்டு அர்ச். மார்கரீத் மரியன்னை ஆரம்ப பாடசாலை செயல்பட்ட கட்டடம் அர்ச். சூசை சிறுவர் கருணை இல்லமாக மாறியது.) 

வேம்பாற்று பரிசுத்த ஆலய பங்கு சுவாமிகள் வசிக்கும் மாளிகையின் மேல்மாடம் 1929 ஆம் ஆண்டு இவராலே கட்டுவிட்டப்பட்டு புனித சூசையப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சுவாமிகள் கோவில் உரிமைகளை நிலைநாட்ட எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளும் இன்றும் புத்துணர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றால் அது மிகையாகாது.

மேல்மாந்தை ஜமீன் வகையறாகளாலும், பிற இனத்தவராலும் ஏற்பட்ட பல்வேறு இடைஞ்சல்களை தமது ஊக்கத்தாலும், அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்போடும் வென்றெடுத்தார்கள். குறிப்பாக பழைய அர்ச். செபஸ்தியார் குருசடியினை சீரமைப்பதில் ஏற்பட்ட பலவித கலகங்களின் மத்தியில்  அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்று அவரை கடல் மார்க்கமாக வேம்பாற்றுக்கு வரவழைத்து உண்மை நிலையை அறிய செய்து  அவரது உத்தரவின் பேரில் சீரமைத்து அதனை அசைக்க முடியாதவாறு கற்களால் இருத்தியதும்,   ஆலய மரக்கொடிமரத்தை (இதற்கு முந்தையது) அசைக்க முடியாதவாறு இருத்தியதும் இவரது அளப்பெரும் சாதனைகளே ஆகும்.

இவர் காலத்திலே தான் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரன் பேரில் பக்தி முயற்சிகள் வேம்பாற்றுவாசிகளிடம் அதிகரித்தன. நிம்பவாசிகள் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரன் பேரில் கொண்ட ஆழ்ந்த பற்றுதலைக் கண்ட சங். ரெமிஜியுஸ் மிஸ்ஸியர் சுவாமிகள், தானும் அப்புனிதர் பேரில் ஆழ்ந்த பற்றுதல் கொண்டு முத்துக்குளித்துறையின் முதல் மேற்றாணியார் வந். திபூர்சியுஸ் ரோச் ஆண்டகையிடம் பரிந்து பேசி உரோமையிலிருந்து ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் கால் மூட்டு எலும்புகளின் சிறு பகுதியை அருளிக்கமாக பெற்றுத் தந்து வேம்பாற்றின் பாதுகாவலரின் உடனிருப்பினை வேம்பாற்றில் நிலைத்திருக்கச் செய்தார்.

(எதிர்பாராத விதமாக 19.06.2006 அன்று வேம்பாறு பரிசுத்த ஆவியானவர் ஆலயத்தில் நடைபெற்ற களவு சம்பவத்தில் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் கால் மூட்டு எலும்புகளின் சிறு பகுதி அருளிக்கம் வேம்பாற்றுவாசிகளிடமிருந்து பறிபோனது. எனினும் அப்போதைய பங்குத்தந்தையாக இருந்து ரஞ்சித்குமார் கர்டோஸா அவர்களின் பெரும் முயற்சியால்  முத்துக்குளித்துறையின் ஆறாம் மேற்றாணியார் வந். இவோன் அம்புரோயிஸ் அவர்களிடம் பரிந்து பேசி  07.01.2007 அன்று வேம்பாற்றுவாசிகளுக்கு ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் திருத்தலை முடியின் சிலவற்றை அருளிக்கமாக பெற்றுத் தந்து வேம்பாற்றின் பாதுகாவலரின் உடனிருப்பினை வேம்பாற்றில் மீண்டும் உறுதி செய்தார் என்பதை இங்கு குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானது.)

இவ்வாறு பல்வேறு பணிகளை வேம்பாற்றில் செய்த சங். ரெமிஜியுஸ் மிஸ்ஸியர் சுவாமிகளை அன்று நிம்பவாசிகள்.....

நல்வரவு  காரியங்கள் 
நலமுடனே மலர் தொழிப்போம் 
நற்குணசாலியாம் எங்கள் நல்ல தந்தை 
நானில மீதினில் நன்கு  வாழ்ந்திடவே ....

திருமந்திர நகர்தனில் திருவருளால் உதித்த சீலன் 
அரும் கல்வி சாஸ்திரங்களை அன்புடன் பயின்ற நூலன் 
பேறு மகிழ் கொண்டுமே உலகாசை ஒன்றையும் நீக்கிய யோகன் 
உறுங்க வினை பொழித்து பரன் திருவழி நடக்கும் ஞானன் 
ரெமிஜியுஸ் மிஸியர் என்னும் நாமம் பூண்ட 
ரெத்தினவரைப் போற்றிப் புகழ்ந்திட ...............

எனப் பாடி மகிழ்ந்தனர். 

அன்று வேம்பாற்றுவாசிகளுக்காக பணி செய்து வாழ்ந்து இன்றைய நாளில் ( 15.11.1979)  இறைவன் பதம் சேர்ந்த பாசமிகு வேம்பாற்றின் பங்குத்தந்தை சங். ரெமிஜியுஸ் மிஸ்ஸியர் சுவாமிகள் அவர்களை இந்நாளில் நினைவு கூறுவோம்.

- நி. தேவ் ஆனந்த் 


நக்கீரர் பரதர் (Nakkeerar / Nakeerar / Nakeeran)


சங்கச் சான்றோருள் கபில பரணரோடு ஒருங்கு வைத்து எண்ணப் பெறுபவர் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆவர். இவர் முத்தமிழ்த் துறையும் முறைபோகிய மூதறிஞர்; ‘யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர்; மறைமொழிவல்ல நிறைமொழி மாந்தர்; நட்புக்கு இலக்கியம்; நன்றியின் நிலைக்களம்; கருதியது கரவாதுரைக்கும் கருத்துரிமைக்குக் குரல் கொடுத்த முதல் எழுத்தாளர்; இலக்கியத்திற்கு புது நெறி புகுத்திய முதல் இறைஞானி; அகப்பாட்டோ என ஐயுறும் அளவுக்கு - ஏன் - அகப்பாட்டே என அறிஞர் துணியும் அளவுக்கு – அகச்சுவை பொதுளப் புறப்பாட்டியற்றிய புலமையர்; அகத்துறைப் பாடல்களிற் கூட வரலாற்றுச் செய்திகளை மடுத்துவைத்த வரலாற்றாளர். அத்தகைய வல்லாளர் நம் பரதகுலத்தவர் என்பது நமக்குப் பெருமையன்றோ!

அவர் பரதகுலத்தவர் என்பதற்கான சான்றுகள்:

சண்பக மாறன் என்னும் வங்கிய சூடாமணிப் பாண்டியன் அவையில் ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் செய்யுளின் பொருளமைதி குறித்துச் சங்கப் புலவராக வந்த சிவபெருமானுக்கும், நக்கீரர்க்கும் ஒரு வாதம் நிகழ்ந்தது. அவ் வாதம் பொருள் பற்றிய நிலையிலிருந்து விலகி, குலம் பற்றிய வாதமாக ஜாதி பற்றிய வாதமாக அமைந்தது. அப்போது சிவபெருமான் கூறியதாக வரும் வெண்பா:


அங்கங் குலுங்க அரிவாளில் நெய்தடவிப்
பங்கப் படவிரண்டு கால்பரப்பிச் - சங்கதனைக்
கீர்கீர் என்அறுக்கும் கீரனோ என்கவியைப்
பாரிற் பழுதென் பவன்

என்பது. இதற்கு எதிராக நக்கீரர்:

சங்கறுப்ப தென்குலமே தம்பிராற் கேதுகுலம்
பங்கமறச் சொன்னாற் பழுதாமே - சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வதில் லை

எனக் கூறினார் என்பர்.

இதில் ‘சங்கறுப்பது என்குலம்’ என்பதிலிருந்து நக்கீரர் பரத குலத்தைச் சார்ந்தவர் என்பது நிரூபணமாகிறது.

இது மட்டுமன்றி நக்கீரனின் இயற்பெயர் கீரன். பாலப்பன் என்பது இவரது பிள்ளைப்பெயர். ‘ஓர் பரவன் இல்லில் புத்தியுள சேயானான் பாலப்பன்
என நாமம் புனையப் பெற்றான்’

என்பதாலும் நக்கீரரை பரதவர் என்றும், தமிழகத்தில் சங்கு அறுக்கும் தொழில் என்பது பரதவர்களின் குலத்தொழில் என்பதாலும் நக்கீரர் பரத குலத்தைச் சார்ந்தவர் என்று முருகதாச சுவாமிகள் கூறுகின்றார்.


வீரபரதவர் வாழ்ந்த மணலூர்


ஆறு கடலோடு கலக்குமிடத்தினை அழிமுகம் என்பர். இவ்வழிமுகத்துக் கரையிலே அமைந்த துறைமுகங்கள் யாவுமே சரித்திரம் சமைத்தவையாகும். பண்டைய தமிழகத்தில் சோழத்துப் புகாரும், சேரத்து முசிறியும், தென்புலத்து கொற்கையும் இவ்வாறு அமைந்தவைகளே! இவை மூன்றும் கால சுழற்சியால் அழிந்து பட்டனவாயினும் அவை விட்டுச் சென்றிருக்கின்ற வரலாறும், அவ்வரலாற்றின் வாயிலாக நாமறிகின்ற செய்திகளும், பண்டைய நாகரிகமும், பண்பாடும் நம்மை இன்றும் இரும்பூதெய்தச் செய்கின்றன.

அமிழ்தெனும் தமிழுக்கும் மூத்தத் பொதிகையில் பிறந்து, புகழ்சால் தென்பாண்டிச் சீமையிலே தவழ்ந்தோடும், பொருளுறைச் செல்வி கடலோடு கலக்குமிடத்தில் கொற்கை தலை நிமிர்த்து நின்ற நாட்கள் பண்டையத் தமிழக வரலாற்றின் பொற்காலமாகப் போற்றப்படுகின்றன. முத்தமிழ் புரந்த மூவேந்தர் பரம்பரைக்கும் வித்திட்ட முதல் மாமன்னன் தோன்றியதே கொற்கை மண்ணிலேதான் என்ற கருத்து வரலாற்றுசிரியர்கள் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

கொற்கையின் அமைப்பும் சிறப்பும் அழகுபடக் கூறப்பட்டிருப்பது மதுரைக்காஞ்சியில்தான்:- முழங்கு கடல் தந்த விளக்கு கதிர் முத்துகள், அரம் போழ்ந்தறுத்த நேரிய சங்கு வளைகள், பரதர் தந்த பல்வேறு கூலம், பரந்து விரிந்த உப்பங்கழிகள், அவைகளில் வாரியெடுத்த வெள்ளுப்புக் குவியல்கள், அவற்றை ஏற்றிச் செல்லக் காத்து நிற்கும் நாவாய்கள், நாவாய்களை செலுத்தும் திண்தோள் திமிலர்கள், அவர்கள் சேய்மையிலிருந்து ஏற்றிக்கொண்டு வந்த நிமிற்பரிப்புரவிகள், என்றெல்லாம் பலதும் நிறைந்து மலிந்திருந்த கொற்கையில் .... உயர்ந்த மண்மேடுகளிருந்தன, கடற்கரைச் சோலைகளிருந்தன, அதன் கண் படர்ந்து பேய்போல் தலைவிரித்த தாழை மரங்களிருந்தன. அவை மடல்விழ்த்துக் கடற்கரைப் புயலுக்கு மாற்றுச் செய்து கொண்டிருந்தன.

அத்தகைய கொற்கை இன்று மிகச்சிற்றூராய்க் குறுகிப் பொலிவிழந்து கடலைவிட்டு நான்கைந்து மைல்கள் உட்தள்ளி உறங்கிக்கொண்டிருக்கிறது. பொருநையின் வெள்ளத்தோடு விரவி அடித்து வரப்பட்ட வண்டல் பல்லாண்டுகளாய்க் கூடி மேடாகித் தூர்ந்து போய் இத்தகையதோர் அவலத்திற்கிலக்காகி விட்டது. ஏறத்தாழ 12 ம் அல்லது 13 ம் நூற்றாண்டிற்குப் பிறகு கொற்கை வணிகப் பெருந்துறையென்ற நிலையினை இழந்து அழிந்துபட்டது எனலாம்.

கொற்கை என்ற பெயரையல்லாது..... மணலூர், மதுரோதயநல்லூர், சோழேந்திர சிம்ம சதுர்வேதிமங்கலம் என வேறு பல பெயர்களாலும் அழைக்கப்பட்டதாக அறிகின்றோம். இவைகள் அனைத்துமே காரணப்பெயர்கள் என்பது எனது துணிவு.

மணலூர் என்று பெயர் தொல் பழங்கால முதலே வழக்கிலிருந்து இன்று வரை நின்று நிலவு மென்றாகும். மகாபாரதத்திலே அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை செய்ததைக் கூறுமிடத்து அவன் கலிங்கத்திற்கு கூடாகச் சென்று, கோதாவரியையும், கீழ்த்தொடர் மலையிலேயுற்ற மகேந்திரத்தையும் தாண்டி காவேரியைப் புறமாக விட்டு கீழ்க்கடலோரத்திலிருந்த மனலூரையடைந்தான் என்று சொல்லப்படுகின்றது. ( Tamilian Autiquray – Vol 2 No 1 – notes on sangam Age –by PAndit D Sararirayan) மதுரைக்காஞ்சியிலே கொற்கை மணல் மிகுந்த திட்டுகளையுடைதாயிருந்தது என்ற வருணனையிலிருந்தும், 

“ மாடமோங்கிய மணன் மலி மறுகிற் 

பரதர் மலிந்த பல்வேறு தெருவில்” 

என வரும் பெரும்பாணாற்றுப்படை வரிகளாலும் கொற்கையில் மணல் மிகுதியாயிருந்தது தெளிவாகின்றது. மணல் மிகுந்த ஊராதலின்..’மணலூர்’ என்று அழைக்கப்பட்டது.

கொற்கையில் மலிந்து கிடந்த கடல்படு திரவியங்களும் கடல் வழிவந்த பொருட்களும் பாண்டித் தலைநகராயிருந்த மதுரையின் செல்வ செழிப்பிற்கும் சீருக்கும் காரணமாயிருந்தமையால் மதுரோதய நல்லூர் எனச் சிறப்பித்து அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லின் செல்வர் ரா.பி. சேது பிள்ளை கருதுகின்றார். 

நெய்தல் நில ஊராதலின் கொற்கையில் பெரும்பாலும் பரதவரே வாழ்ந்தனர் என்பதில் ஐயப்பாடில்லை. இப்பரதவர் 

‘வளைபடு முத்தம் பரதவர் பகரும்’ (ஐங்195) 
என்ற ஐங்குறுநூறு வரிகளாலும்,

‘நான்வலை முகந்த கோள்வல் பரதவர்’ (அகம் 300) 

‘பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்’ (அகம் 140) 

என்ற அகநானூற்றுச் செய்திகளாலும் முத்துக்குளிக்கும் தொழிலையல்லாது, மீன் பிடித்தல், கடலிலே வேட்டையாடுதல் போன்ற தீரச் செயல்களிலும் சூரர்களாய் இருந்தனர் என்று தெரிகிறது. சுழலுக்கும் சுறாவுக்கும் இடையில் மூழ்கி முத்தெடுக்கும் பரதவர் நல்ல உடல் வலிமை பெற்றிருந்தனர். சிவந்து விரிந்த கண்களும் குன்றக மன்ன வளர்ந்த கருமேனியும் அவர்கள் பெருவீரர்களென விளம்பிற்று. உடலிலும் உள்ளத்திலும் உரமிகுந்த இப்பரதவர் கொலைத் தொழிலிலும் வல்லவராயிருந்தனர். சிறிய குடிசைகளில் வாழும் இப்பரதவர் படகுகளில் ஏறிச்சென்று பெரிய மீன்களைக்குறிய இறப்பினையுடைய உளிகொண்டு தாக்குவர். அங்ஙனம் தாக்கப்பட்ட பெரிய மீன்கள் விண்ணை அணி செய்யும் வில் போலத் தாவி அந்தக் கடலையே கலக்கி மறுப்படச் செய்து கடைசியில் வலிமைகுன்றி கரை பொதூங்கும், 

..குறி இறைக் குரம்பை கொலைவெம் பரதவர் 

எறியுளி பொருத ஏமுறு பெருமீன் 

புண்ணுமிழ் குருதி புலவுக்கடல் மறுப்பட 

விசும் பணி வில்லிற் போகிப் பசும் பிசிர்த் 

திரைப்பயில் அழுவம் உழக்கி உரனழிந்து 

நிரைதிமில் மருங்கில் படர்தருத் .....(அகம் 10)

என்ற அகநானூற்றுச் செய்தி பரதவர் வீரவாழ்விற்கும் கொல்லும் வண்மைக்கும் சான்றாய் நிற்கின்றது. கொழுத்த மீனையும் இறைச்சியையும் தின்று கொழுத்த உடலையுடைய பரதவர் விற்கலையிலும் வல்லுநராயிருந்தனர். இவர்களது வீரத்தன்மையும் போர்த்திறனும் கண்டு பகைவர் அஞ்சினர்.

“செற்ற தெவ்வர் கலங்கத் தலைச் சென்று 

அஞ்சுவரத் தட்கும் அணங்குடைத் துப்பிற் 

கெழு உன் குறைக் கொழுவல்சிப் 

புலவுவிற் பொலி கூவி 

ஒன்று மொழி ஒலியிருப்பில் 

தென்பரதவர் போரேறே!” (மதுரைக்காஞ்சி 139-144)

போர்த்திறம் கொண்ட அவர்களை வெல்லவே இயலாது. அப்படிப்பட்ட வெல்ல முடியாத தென்பரதவரை வென்றவன் நெடுஞ்செழியன். எனவே தான், ‘ தென்பரதவர் போரேறே’ எனப் போற்றப்படிருக்கிறான். 

வீரத்திற்கும் போர்த்திறத்திற்கும் பெயர் பெற்ற பரதவரே பாண்டிய நாட்டுப்படைகெல்லாம் கருவூலமாயமைந்தனர். செருக்கேனத்தே வீறுகொண்டு செல்வர். மாற்றார் படை எத்தன்மைத்தாயினும் அழித்தே மீள்வர். எப்போதெல்லாம் பரதவர் வலிமை குன்றி வீரமிழந்து வாளாவிருந்தனரோ அப்போதெல்லாம் பாண்டி மண்டலம் மாற்றார் கைமாறியது. இது வரலாற்று பேருண்மை. ஏறத்தாழ கி.பி. 300 ல் தொண்டை நாட்டிலிருந்து பல்லவர்க்குப் புறமுதுகு காட்டிவந்த களப்பிரர், சோழ, பாண்டியர் நாடுகளின் மீது படையெடுத்தனர். சோழ, பாண்டிய மண்டலங்கள் வடுகர் வாட்களுக்கு அடிபணிந்தன. பாண்டியன் கடுங்கோன் களப்பிரரை ஒழித்து அரசுக் கட்டிலேறியது வரை பாண்டியநாடு வடுகராட்சியில் வாடியது. இதோ புறநானூறு பேசுகின்றது. 

‘தென் பரதவர் மிடல்சாய வட வடுகர் வாளோட்டிய (புறம் 378) போரில் வீரத்தின் தன்மையும், வெற்றியுன் திண்மையும் பகைவரைக் கொல்லும் திறனைப் பொறுத்ததேயாகும். எனவே வீரனின் கை – கொல்லும் கை! கொல்வதிலே, மிகவும் திறன் கொண்ட கைகளையுடைய வீரபரதவர் வாழ்ந்த மணலூர் ‘கொல் + கை – கொற்கை’ என அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒருவேளை கொற்கையிலிருந்து, அதாவது மணலூரிலிருந்து சென்ற பரதவர் படை பாண்டியர்க்கெதிராய் வந்த களிற்றுப் படையைக் கண்டக் கோடாரிகள் கொண்டு தகர்த்திருக்கலாம். அவ்வெற்றிக்குப் பின் இவ்விலஞ்சினையைப் பரிசாகப் பெற்றிருக்கலாம். அப்படியொரு கருத்தோடு நோக்குமிடத்து பாண்டியர்க்கெதிராய் களிற்றுப்படை மிகுதியாய் உபயோகிக்கப்பட்டது தலையாலங்கானத்துச் செறுவிலும், அச்செறுவிலும் அச்செறுவிலே வாகைசூடிய பாண்டியன் சேரநாட்டுத் துறையாகிய முசிறியை முற்றுகை இட்டபோது தான் மேற்கூறிய இரு போர்களிலும் கொற்கைப் பரதவரே வெற்றிக்குக் காரணமாய் இருந்திருத்தல் வேண்டும். அந்தப் போர்களிலே உபயோகப்படுத்தப்பட்ட மழுவும் அவற்றால் அழிக்கப்பட்ட களிறும் வெற்றிச் சின்னங்களாக கருதி மணலூர் மன்னன் ஏற்றிருக்க வேண்டும் எனவே, மணலூர் கொற்கை என்று அழைக்கப்பட்டது.

- செல்வராஜ் மிராந்தா

இரத்த பூமி - 13

வந்தேறிகளுக்கும், வழித்தப்பிகளுக்கும் புகலிடம் தந்த மீன் கொடி கொண்ட‌ மீன் குடியோன் நாடு

கிழக்கு மேற்காக நீண்டிருந்த அந்த அறையில் மேற்கிலிருந்த சிலுவையின் முன்பு இரப்பாளி மண்டியிட்டு பிராத்தனை செய்ததாக, கதவை திறந்து உள்ளே சென்ற பரதர்களுக்கு தோன்றியது.

உண்மையில் இரப்பாளி அந்த நேரத்தில் இஸ்லாமிய இறைசின்னமான கஃபாவின் திசை நோக்கி இஸ்லாமியர்களின் தவிர்க்க முடியாத இறை தொழுதல் கடைமையை ஆற்றிக்கொண்டிருந்தான். உடன் வந்த அனைவரையும் கொற்கைகோ சைகைக்காட்டி அமைதியாக்கிய பின்பு அங்கிருந்த இருக்கைகளில் அனைவரும் அமர்ந்தனர். இரப்பாளியின் தொழுகை முடியும் வரை அனைவரும் அமைதி காத்திருந்தனர்.

ஆனாலும் இளம் பரதவர்களுக்கு மனதுக்குள் ஆக்ரோஷமும் கோபமும் தலை தூக்கியது பரதவர்களை சுட்டு இம்சைபடுத்தி, தூயதந்தையை கொடுமைப்படுத்தி, ‍ பரத்திகளை இழிவுபடுத்திய ஈன இரப்பாளிக்கு ஏனிந்த மரியாதை என‌ பொங்கிக் கொண்டிருந்த இளம் பரதர்களின் எண்ணம் போல பாடனும் துடித்து கொண்டிருந்தான். 

தொழுகை முடிந்த இரப்பாளி திரும்பிப் பார்த்தபொழுது... அறையெங்கும் பரதவக்கூட்டம் நிரம்பியிருந்தது. ஒரு வினாடியில் இரப்பாளியின் சப்த நாடியே ஒடுங்கி போனது இரப்பாளியின் கண்களில் மரணபயம் தெரிய எதையும் காட்டி கொள்ளாமல் அங்கே நட்ட நடுவே தனக்காக காலியாக இடப்பட்ட இருக்கையில் போய் அமர்ந்தான்.

இரப்பாளி அந்த இருக்கையில் அமர்கின்ற வேளையிலே கொதித்து போயிருந்த‌ பாடன் கூட்டத்தின் மெளனத்தை உடைக்கும் விதமாக‌ ஆவேச கூச்சலிட்டான். சின்னையா என்ன எழவுக்கு இவனைத் தேடி வந்தீய இவன கண்டம்துண்டமா வெட்டி இந்த புன்னக்காயல் மண்ணுல புதைக்கனும்யா."என பதட்டப்பட‌

தூரத்திலிருந்த சடையனார் எழுந்து மக்களே.. பாடா.. உன் ஒத்த கைக்கு இவன் தாங்கமாட்டான். ஆனாலும் பாண்டியமார் நமக்கு சில போர் தர்மம் இருக்கு பாத்துக்கோ...அதுவுமில்லாம‌ "இவன புதச்சா நம்ம காத்தவரானையும், தூயத்தந்தையாரையும் ம‌ற்றும் கேப்டன் குடும்பத்தாரையும், எப்படி காப்பாற்ற முடியும். அது சரியான முடிவல்ல" என சொன்னபடிதூரத்தில் இருந்த சடையனார் இரப்பாளியின் அருகே போய் அமர்ந்தார்.

இரப்பாளியின் பயத்தை போக்கும் விதமாக அரபியிலே குசலம் விசாரித்தவர். ஏதேதோ பேச ஆரம்பிக்க, சடையனாரின் அரபு வார்த்தைகளைக் கேட்ட இரப்பாளி திகைத்துப் போனான்.

பழங்குடி பாண்டியர்கள் எவனுக்கும் அடங்காத படுபாதகர்கள் கடலுயிரிகளுக்கு தன் பகை உயிரை பரிசளிக்கும் ஏமகாதகர்கள் ஆனாலும்உலகறிவில்லா உன்மத்தரை படைபலம் கூட்டி பகடியாடலாம் என‌ விதாலன் விதித்த விதியையும், முதற்கடவுள் முகமது நபியை மறுதலித்து மூரினத்தை முறியடிக்கும் முரட்டு பரதவரை முடமாக்கி அடிமையாக்கிட வேண்டும் என்ற சமாரியனின் கட்டளையையும் நிறைவேற்ற துடித்த இரப்பாளிக்கு அரபு மொழியிலே நாகரீகமாக பேசுகின்ற சடையனாரின் பேச்சே ஓராயிரம் குழ‌ப்பங்களை உள் மனதில் உருவாக்க..... தான் தான் மாபெரும் போராளி சூத்திரதாரி என நினைத்தவனுக்கு கூடியிருக்கின்ற ஓவ்வோரு தலையும் சூத்திரங்களின் அகராதியாக இருக்குமோ என‌ தோன்றியது

இரப்பாளியும் சடையனாரும் நீண்ட காலத்து நண்பர்கள் போல அராபிய மொழியிலே பேசிக்கொண்டனர். பாடனது எண்ணத்தை ஆமோதித்த இளம் பரதவர்கள் தங்களுக்குள் ஏதேதோ பேசி சலசலத்துக் கொண்டிருக்க‌.... பெரியவர் சடையனும் இரப்பாளியும் என்னதான் பேசிக்கொண்டார்கள் என்பதை கேட்டப்படி புரியாமல் கூட்டமே வேடிக்கை பார்த்தது. 

முத்து மகுடம் தரித்த
மீனாட்சி அம்மை 
தர்மசங்கடத்தை உணர்ந்த நீக்கு போக்கு அறிந்த பாண்டிய பதியின் மகன் இளம் தலைவர் எழுந்து அதை தீர்க்கும் விதமாக‌ வேம்பார் சடையனாரை பரதவகுலத்தவர் அறிந்திருந்தாலும் அவரை கூட்டத்தில் கெளரப்படுத்தும் விதமாக பாண்டிய பரதர்களே..... எங்கையா பாண்டியம்பதியின் பிள்ளைகளே ......இதோ வேம்பார் சடையனார் இவரும், இவரது பாரம்பரியமும் பாண்டியம்பதியின் பாரம்பரிய பரதவ குலத்து ஞானக்குருக்கள். 

இவர்களுக்கு சமஸ்கிருதமும், இந்தியும் அதையும் தாண்டி அரபியும் தெரியும். பரதவர்களது சிவன், முருகன், அம்மன் கோவில்களில் பூசை புனஸ்காரம் செய்கின்றவர்களும் இவர்களே. உண்மையில் சொல்லப்போனால் பரதவ குலத்து அந்தனர்கள் என்று சொல்லிவிட்டு உங்களது சங்கடத்தை தீர்க்கும் முறையில் இவர்களது உரையாடலை நானே தமிழில் சொல்கிறேன் என்றார்.

பெரியவர் சடையனார் போல சின்னையாவுக்கும் அரபு தெரியுமா என்று இளம் பரதர்கள் ஆச்சரியத்தில் அமிழ்ந்தனர். சடையனார் நிலமையை உணர்ந்து புன்சிரிப்போடு அப்படி தொடு என்றார். பரதவ கூட்டத்து ஒப்புதலோடு  இரப்பாளியும் சடையனாரும் உரையாட கொற்கைகோ மொழிபெயர்த்தார்.

சடையன், "ஐயா இராப் அலி, நாங்க பாண்டியர்கள். இந்த நாட்டின் உரிமையாளர்கள். வஞ்சகமாக எங்கள் நிலத்தையும் எங்களையும் அடிமைபடுத்தவும் அபகரிக்கவும் நினைக்கின்ற நாயக்கனோடு சேர்ந்துவந்து எங்களை துன்புறுத்துவது சரியாகுமா? "

இரப்பாளி, 
"இந்த கடலின் உரிமையாளர்கள் நாங்கள் எங்களிடம் அடிமையாக முத்துகுளித்தவர்கள், கடலை சொந்தம் கொண்டாடலாமா? முத்துக்களை கொள்ளையடிக்கலாமா? எமக்கு தரவேண்டிய வரி, திரை, வட்டி இவைகளை தராது மறுப்பது நியாயமா?

சடையனார்,  கால கொடுமை..கொள்ளைகாரர்கள் எங்களை பார்த்து கொள்ளைகாரன் என்பது.....

வட்டம், அனுவட்டம், அம்பு, முதுங்கறடு, குறுமுத்து, கோத்தமுத்து, ஒப்புமுத்து, இரட்டை நிம்பளம், பயிட்டம், அம்பு, சப்பத்தி, குளிந்த நீர், சிவந்த நீர். என்பது என்னவென்றாவது தெரியுமா ?

இரப்பாளி, ….…… ………… ………..?

சடையனார், 
முத்துக்களின் வகை தெரியாத .... உங்களுக்கு முத்துக்கள் சொந்தமா?

இரப்பாளி எனக்கும் தெரியும், அரபி அல் இத்ரசியின் ஆவணத்திலுள்ளது. நீங்கள் உரிமை கொண்டாடும் கடல் அரபு குலத்து வாரிசு, காயல்பட்டிணம் முதலியார் பிள்ளை மரைக்காயருக்கு உரியது. 

சடையனார், அடேய் இரப்பாளி இது பரதவ கடலடா.... பாரம்பரிய பாண்டிய கடலடா... கடலுக்குள்ளே புதையுண்டு கிடக்கிறதே... எமது ஆதி குமரி நாடு அதுவும் அரபியருக்கு சொந்தமா? வந்தேறிகளுக்கும் வழித்தப்பிகளுக்கும் புகலிடம் தந்த மீன் கொடி கொண்ட‌ மீன் குடியோன் நாடு.

செய்த நன்றிக்குத் தான் எங்களது கடலை கூர் கூராக பிரித்தார், நாயக்கருக்கு 97 கல்லும், சேதுபதிக்கு 59 கல்லும், திருவிதாங்கூருக்கு 76 கல்லும் உண்டு. ஆனால் நாயக்கன் வெறும் 10 கல்லை மட்டுமே முதலியாருக்கு கொடுத்தார், அது எமது புன்னை கல்லாகும். 

எமது முத்து பேட்டைகளை தங்கள் வசமாக்கி கொண்டதால், வரலாற்றை திருத்தாதீர்கள். இரண்டு நூற்றாண்டுகளுக்கான போர் இது தெரியுமா உனக்கு ?

அரசை இழந்து அலங்கோல அரசியலில் மடிந்து ஒடுக்கப்பட்ட எம் வம்சத்து வீழ்ச்சியை எம்முயிர் பாண்டிய பரம்பரை மரபுகளை கதையாக, பாடலாக‌, வாய் வழி செய்தியாக, பரம்பரைக்கு கடத்தி வந்தவர்கள் நாங்கள்.

ஓடாவி எனும் எங்கள் குமரித்துறை மேதாவியும், பரதவர்களின் ஒச்சியங்களை பாடும், குமரி ஒச்சிய கவிராயரும் 90 வயதிலும் எம்மோடு இருக்கிறார்கள்.

அவர்களின் வாய் வழி எம் பரதகுலத்து பழங்கதைகளையும் பாடல்களையும் கேட்கிறாயா..?

அரபியிலே இரப்பாளியொடு சடையனார் கதைத்தபோதும் ஓடாவி, ஒச்சியகாரர் என்னும் பெயர் புரிந்து கூட்டமே தலையை திருப்பி அவர்களை தேடியது. ஓடாவி 90 வயதுகாரராகயில்லை கூன் போடாத நிமிர்ந்த நடை, பொக்குவாயில்லை ஆனாலும் வெத்திலை வாய். ஒச்சியகாரர் உயரம் குறைந்த திரண்ட உருவத்தோடு மேலாடை அணியாத கூன் வளைந்தவராய் இருந்தார்.

அவர்களுக்கு அந்த சபையில் கிடைத்த அறிமுகமே வாழ்க்கை சாதனையாக நினைத்து கொண்டார்கள். பரதவரின் வரலாற்றை பரம்பரைக்கு கடத்தி வரும் மூதுரைஞன் தாங்கள் என்பதின் கர்வத்தோடு நிமிர்ந்தார்கள்.

கொற்கை கோ வை தழுவிய ஒச்சியகாரர் கரகரத்த குரலிலே சின்னையை என்ன வேணும் கேளுங்க‌ என சொல்ல கொற்கை கோ சைகை காட்டி பூட்டா .. அங்கே.. என சடையனாரை சுட்டினார்.

எப்பா, இந்த துலுக்கமாரு எப்படி இங்க வந்தானுவப்பா சொல்லுங்க இந்த இரப்பாளிக்குனு சொல்ல...

ஒச்சியகாரர் மக்கா நா பாட்டு பாடினா நம்ம பயலுவளுக்கே புரியாது. இதுல இந்த ஈனங்கெட்ட இரப்பாளிக்கு என்ன யழவு புரிய போது. ஓடாவிட்ட கேளுங்கயா...மாப்ள சொல்லுவோய் என எடக்கு மடக்காக சொன்னார், கோபக்கார ஒச்சியகார‌ர்  சபையிலே பேசாமல் இருப்பதே நல்லது என நினைத்த ஓடாவியார் பேச ஆரம்பித்தார் .

எய்யா, நீங்க சடையன் தானே சடையவர்ம பாண்டியன் தானே மக்களே இதுகெல்லாம் காரணம், நம்ம‌ பூட்டாமாரும்.. பூட்டிமாரும் தான் ரொம்ப காலத்துக்கு முன்னே ஒரு 20 தலை முறைக்கு முன்னே மேக்கே பரவமாரோடு பாய்மரக் கப்பல் பெர்சியாவுக்கு போன போது

பாரசீகத்துல (ஈராக்) பஸ்ராவின் கொடுங்கோல் அரசன் ஹிஜாஜ் இபுனு யூசுப்பிடமிருந்து தப்பிய (ஹிஜ்ரி வருடன் 41 முதல் 95 வரை) ஹாஷிம் வம்சம், பாருக் வம்சம், பாக்கீர் வம்சம், உமையா வம்சம் என கடலுல தத்தளிச்ச 200, 300 துலுக்கமாரை அவங்க குடும்பத்தை மீட்டு இங்கே நம்ம கொற்கை பாண்டியருக்கிட்ட குலசேகர பாண்டியன்னு நினைக்கிறேன். அவரு கிட்ட கொண்டு விட்டாங்க....

அதிலுள்ள அரேபிய பெண்கள் உயிர் மானம் காத்த பரதவ பாண்டியர்களை மணமுடித்து கொண்டார்கள். அவர்களோடு உறவு முறை பாராட்டி பாசம் கொண்டார்கள். பாண்டிய நாடே தன் தாயகமாக மனதில் கொண்டார்கள்.

அரசரது பாதுகாப்பிலே..... அரசாங்கத்து வம்சாவழியில‌ .... வந்த நம்ம பிள்ளைங்கதான் மரைக்காயர்மார். நம்ம வம்சத்து சண்டையிலே சோழன் செஞ்ச கருமத்திலே தாய்பிள்ளையாக அடிச்சி மோதினோம். நாம பாசமாத்தான் இருக்கோம் அவங்களும் நம்ம மறக்கலை.

ஆனாலும் அதை மிஞ்சிய ஒன்று உண்டு, எம் குலத்தவன் காயல்பட்டண‌த்து முதலி மரக்காயன். மதத்தால் துலுக்கனோடு இனைந்தவன் தான். நாங்களும் தான், முதலில், மாறுதலை வேண்டி நற்செய்திகளை கேட்டு இங்குள்ளவர்களின் பாதி தலைமுறை இசுலாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தான். அதிகாரத்தையும், பொருளாதாரத்தையும் பெருக்கி கொள்ள இசுலாத்தை தழுவியவர்கள் தான். ஆனால்.... ஆனால்.....

தமிழை வளர்த்த பாண்டியர்கள் நாங்கள் பிறமொழியிலே தொழுதிட வேண்டுமோ... எம் மன்றாட்டை உணராத பிறமொழி கடவுளிடம் இறைந்திட வேண்டுமோ...பனை உயர் அலை எதிர்த்து உயிர் பிழைத்து பாடுபட்டு வந்தவர்கள். 

பனங்கள்ளை பருகி பசியார உண்டு மணல் மெத்தையில் இளைப்பாறுவதற்கு உம் மதம் தடை சொல்லுமோ..?

தமிழையும் கள்ளையும் பறிக்க நினைத்த நீ  உன்னை சார்ந்ததால் எம் கடலையும் பறிக்க நினைத்தாயே... பாண்டிய வீரத்தை விலை பேசி விற்றுவிட்ட பொசங்கெட்ட பாண்டியரில்லடா நாங்க பரதவ பாண்டியர்கள்... அனைவரையும் அழித்து புதைத்தாலும் எம் ஆதிதாய் கடல் நுறையிலிருந்து பொங்கி வரும் அதிசய பிறவிகளடா நாங்கள்..

உணர்ச்சிகரமான இந்த வார்த்தைகளை இரப்பாளிக்கு மொழி பெயர்த்த கொற்கை கோ விற்கு குருதி கொதிக்க உணர்ச்சி வெடித்தது. ஒன்றுமே அறியாத இரப்பாளி குமரிதுறை ஓடாவியாரின் வார்த்தைகள் யாவும் பரதவரால் புனையப்பட்ட புது கதையோ என்று பதற்ற‌துடன் அவனும் வார்த்தைகளை விரசமாக வீசினான்.

இரப்பாளி: 
காயல்பட்டிணம் முதலி மரக்காயரின் அடிமைகள் நீங்கள் அவரை விட்டுவிட்டு பரங்கிகளோடு சேர்ந்தது எப்படி..?

சடையனார்:
அடேய்.. இரப்பாளி என் சகோதரனுக்காக‌ கடமைபட்டவன், அவன் வாழ என் உயிரையும் கொடுப்பவன். முன்னொரு காலத்தில் காந்தாரியோடு வந்து மஹா பரதவரை விரட்டிய சகுனி போல‌ அவனது மாமனுக்கு அதுதான் துலுக்கனுக்கு, நான் அடிமையில்லை. கற்பையும் கடமையும் போற்றும் பாண்டியர்கள் நாங்களடா..

இரப்பாளி:
கற்பு.. ஆ... கருத்த பரவனின் பங்காளி, முதலி மரக்காயர் வெள்ளை அரபியாம் ஆ.. ஆஹ.... பரத்திமாரின் …………தெரியுதே என கொடுரத்தனமான அவலட்சணமான வார்த்தைகளை உச்சரித்து முடிப்பதற்க்குள்.....கூட்டமே ஓங்கார கூச்சலிட புன்னை கோட்டையே அதிர்ந்தது.

சொந்தங்களின் ஆசியால் மீண்டும் உங்கள்

….….கடல் புரத்தான்……..

Kings Warriors Traders Fishers - (Parathavars/Paravas/Bharathars) - 1


Muslim Rule in south India:

Pandyas were repeatedly in conflict with the Pallavas, Cholas, Hoysalas and finally the Muslim invaders from the Delhi Sultanate. The Pandyan Kingdom finally became extinct after the establishment of the Madurai Sultanate in the 14th century. The Pandyas excelled in both trade and literature. They controlled the pearl fisheries along the south Indian coast, between Sri Lanka and India, which produced one of the finest pearls known in the ancient world.

The early medieval period saw the rise of Muslim in South India. The defeat of the Kakatiya dynasty of Warangal by the forces of the Delhi Sultanate in 1323 CE. and the defeat of the Hoysalas in 1333 CE.

Whereas on the South-Western Coast of South India, a new local economical and political power arose into the vacuum created by the disintegration of Chera power. The Zamorins of Calicut, with the help of the Muslim-Arab merchants, dominated the maritime trade on Malabar Coast for the next few centuries.

During this period Vijayanagara empire rose in southern India. the empire eventually came under the rule of Krishna Deva Raya, the son of Tuluva Narasa Nayaka. In the following decades the Vijayanagara empire dominated all of Southern India and fought off invasions from the five established Deccan Sultanates.The empire reached its peak during the rule of Krishna Deva Raya when Vijayanagara armies were consistently victorious.

The empire went into a slow decline regionally, although trade with the Portuguese continued, and the British were given a land grant for the establishment of Madras.

Ok let us stop here... the above are true history.. during mid of 13th century to 15th century the pandyan dynasty was lost and was ruled by Vijayanagara (Nayak) empire. Mean while Sultanate who came for trading and business also ruled southern India. Now Bharthars who rule over Pearl Fishery are in conflicts with both Muslim Business man (Ruled by Madurai sultanate) and Nayaks... This typifies the Bharathars who belong to pandiyan kingdom are degarding..... Now during this same period a "Miracle Happens"...

That is the Arrival of Vasco da Gama..

Da Gama sailed from Lisbon on July 8, 1497 with a crew of 170 men. He arrived at Calicut (now Kozhikode) on May 20, 1498.

Ill continue next week what happens then......... The picture depicts his arrival and departure from Portugal to India...


1947 – பனிமய மலரிலிருந்து இரு சிறு கவிதைகள்


”சில வருடங்கட்கு முன் பரோடா மகாராஜா கன்னியாகுமரிக்கு விஜயம் செய்யும் பொழுது, நம் நிலையை கண்ணுற்று மனம்தாளாது, கூறியதாக பரத குல வித்துவான் ஒருவர் பாடி இருப்பதாவது:-

பார்த்திபன்: பரோடா தேசத்தை ஆளுபவன்
பரதரைக் கன்னியாகுமரியில்
பார்த்துப் பகர்ந்த மெய்மொழியை நீயும்
பாரினில் கேட்டிலையோ!
அந்த நாளுங்களைக் காத்த முனிவராம்
அன்பு வளரும் பிதா சவியர்
இந்த நாளுங்களைக் கண்டால் அவருமே
ஏங்கி அழுவார் என்றுரைத்தான்
ஒற்றுமை கெட்டதும்
கல்வி குறைந்ததும்
உட்பகை விரோதமதனால்;
கொற்றவன் பரோடா வள்ளல் இவ்வாறு
கூறினான் இது உண்மை என கும்மியடி – “

மற்றுமொரு கவிதை :-

”உங்கள் நிலைதனை உயர்த்துகிறேன் கல்விதனைத் தருகிறேன்” என நம்மிடம் சொன்ன பிக்ஷப் கால்டுவெல்லிடம் பரதர்கள் என்ன பதிலுரைத்தார் என பரத குல வித்துவான்களில் ஒருவர் பாடி இருப்பது :-

“கால்டுவெல் எனுப் பெரியோன்
மந்த்ரவூர் கட்டினான்; பாடசாலை கட்டினான்.
பரதருக்காய் !
பால்மணம் மாறா பால பரதர்கட்கு
பந்நூலும்; ஆடையும்; ஊண் உணவும்
தருவேன் என்றான்.”
சொன்ன பதிலென்ன?
நால்வகை சேனை தந்து – “எமை
நர பதியாக்கிடினும் – நஞ்சுயீன
பால்துளி கலக்க வொண்ணாது எனப்
பகர்ந்தார் – கால்டுவெல் மனம் சோர்ந்தார்.
இத்துணை வைராக்யம் தம் மதத்தில்
இசைந்த பரதர்கட்கு உயர்கல்வியை
சித்தம் மகிழ்ந்தூட்ட – ஏற்பாடு
செய்தவர் இதுகாறு ஒருவருமில்லை.”

The offer of Bishop Caldwell was reportedly frowned by the paravas, as it was an offer by a protestant Bishop to us – the paravas who were staunch catholics.

That is why the verse “நஞ்சுடனே பால்துளி கலக்க வொண்ணாது”.

It used to be exclaimed “பரவனும் பதிதன் ஆவானோ!”

நன்றி: www.globalparavar.org

கன்னியாகுமரியை ஆண்ட வில்லவராயர்கள்


800 ஆண்டுகள் கன்னியாகுமரியை ஆண்ட பரதவ அரசர்கள் வில்லவராயர்கள்.

வில்லவராயன், பூபாலராயன், கலிங்கராயன், (காலிங்கராயன்), மழவராயன் ஆகிய தொழில் ஆகுபெயர்கள் எல்லாம் தொல்பழங்காலத்தொட்டு பரதவர் குடும்பப் பெயர்களாக நிலவியதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. பண்டைய தமிழகத்தில் பரதவர் 'அரையர்' என்று அழைக்கப்பட்டனர். பரதவர் அல்லது அரையர் என்பதன் பொருள் குறுநில மன்னர் என்று சூளாமணி திவாகர நிகண்டுகள் கூறுகின்றன. தொழில் இனம் இவற்றின் அடிப்படையில் மக்கள் அழைக்கப்படும் பொது, தொழில் பெயர் முதலிலும் இனப்பெயர் கடைசியுமாக சேர்ந்து அழைக்கப்படுவது வழக்கு. உதாரணமாக, தச்சன் என்பது தொழில் பெயர், ஆசாரி என்பது இனப்பெயர் இரண்டும் சேரும்போது தச்சாசாரி என வரும்; அது போலவே கொல்லன் + ஆசாரி = கொல்லாசாரி என வரும் பரதவரில் ஒரு சாரார் போர் வீரர்களாயிருந்தனர் என்பதற்கும் வில்வித்தையில் கைதேர்ந்தவராய் இருந்தனர் என்பதற்கும் சான்றாக பத்துப்பாட்டில் ஒன்றாகிய மதுரைக் காஞ்சிவரிகள் 139 முதல் 144 வரையிலும் கூறப்பட்டிருக்கிறது. 

பாலிமொழியில் எழுதப்பட்ட இலங்கை வரலாற்று நூலாகிய 'மகாவம்ச'வின் இணைநூலான 'சூளவம்ச' என்ற நூலில் பக்கம் 72 - பிரிவு 76 (LXXVI) வரி 94 - ல் முதலாம் பாரக்ரமாகுவிற்கு ஆதரவாக போர் தொடுத்த ஐந்து போர்களில் வில்லவராயர என்பவரும் ஒருவர் எனவும் பக்கம் 79 - பிரிவு 76 (LXXVI) வரி 163 -இல் வில்லவராயர கொல்லப்பட்டார் என்ற விவரமும் கூறப்பட்டிருக்கிறது. விற்போர் செய்பவன் = வில்லவன் இது தொழிற் பெயர் இனப்பெயர் அரையன் வில்லவன்+அரையன் = வில்லவரையன். தெலுங்கு மொழித்தாக்கத்தால் 'வில்லவரையன்' என்பது 'வில்லவராயன்' என்று ஆகியிருக்கலாம்.

அதுபோன்று நிலச்சுவான்தார்கள், நிலபரிபாலனர், நிலவரி வசூலிப்போர்கள், பூபாலன்+அரையன் = பூபாலரையன் - 'பூபாலராயன்' ஆகியிருக்கலாம். பரதவர் குறுநில மன்னர்களாய் ஆண்டகாலத்தில் நிலவரி வசூலித்தனர் என்பதற்கு இக்குடும்பப் பெயர்கூட ஒரு வரலாற்றுச் சான்றாகலாம். கலிங்கம் என்றால் புடவை என்று பொருள். எனவே புடவை வணிகர்கள் 'காலிங்கராயன்' என்றும், போரில் மாலு ஏந்திய வீரர்கள் 'மழுவராயன்' என்றும் அழைக்கப்பட்டிருக்கலாம். இன்றுகூட கடின இதயம் படைத்த ஒருவனை " மழுவன் " என்றே பரதவர் மத்தியில் அறியப்படுகின்றான். அதுவே மழுவராயன் என்று மருவியிருக்கலாம். 

1931 Travancore census- 800ஆண்டுகள் கன்னியாகுமரியை ஆண்ட பரதவ அரசர்கள் வில்லவராயர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. வில்லவராயன் என்ற அரசன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் திருப்பணி செய்த செய்தி அக்கோயிலில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. 

இப்பகுதியில் ஆய்வு செய்யப்பட்ட போர்த்துகீசிய குடும்பப் பெயர்களை சிலர் குலப்பெயர்களாகவே கொள்வது வருந்தத்தக்கது. போர்த்துகீசியர் வாழ்ந்த கேரளம், கோவா மற்றும் இலங்கையிலும் பல குலத்தவரிடையே இதே குடும்பப் பெயர்கள் வழக்கிலிருப்பது நோக்கத்தக்கது. -http://www.jaffnaroyalfamily.org/villavarayar.html ( The official website of the royal family of Jaffna(srilanka)

இங்கு அருள்பணியாளர் இயேசு சபை அதிரியான் கௌசானல் அடிகளார் (1850-1930) எழுதிய ‘Historical Notes on Tinneveli District’என்ற ஆங்கில கையெழுத்துப்படியில் உள்ள கீழ்வரும் வரிகள் குறிப்பிடத்தக்கவை! "பரதவர் பரதவராக மட்டுமே இருக்க விரும்புகின்றனர். வேறு எந்தப் பட்டத்தையும் விரும்புவதில்லை. பிற சாதியினருக்கு சாதிப்பட்டங்கள் தேவை. ஐயங்கார், ஐயர், சாஸ்திரிகள், என்று பிராமணரும், பிள்ளை என்று வேளாளரும், தேவர் என்று மறவரும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் பரதவர் தங்களுக்கு எந்தப் பட்டமும் வேண்டுவதில்லை தங்களை பரதவர் என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறார்கள். பட்டங்கட்டி, பெர்னான்டோஸ் என்று பெயர்களுக்குப் பின்னால் சேர்த்துக் கொள்வதெல்லாம் இன்றைய 'சர்' பட்டம் போன்ற ஒன்றே ஆகும். இவற்றை சாதிப் பட்டங்களாக இவர்கள் ஒத்துக் கொள்வதில்லை. எனவே சாதிப்பட்டங்களைப் பொறுத்தவரைப் பரதவர் பிற இந்தியரிடமிருந்து வேறுபட்டு நிற்கின்றனர். 

மொழிபெயர்ப்பு வெளியீடு : நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்,தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி) பாளையங்கோட்டை-627002,2006: பக்கம் 16) 

கடலோரக்கவிச் சோலை - பக்கம் - 501, 502 தொகுப்பாசிரியர்-அருட்திரு.ஸ்டீபன் கோமஸ்

- Faustin Rayan

பரதவரின் குடும்பப் பெயரும் அதன் பொருளும்


போர்ச்சுக்கீசியர்கள் முத்துக்குளித்துறைக்கு தந்த குடும்பப் பெயர்கள் ஏறத்தாழ எண்பது.

பெர்னாண்டோ (பர்னாந்து), அல்மெய்தா, கோமஸ், லோபோ, மச்சாடோ, மோத்தா, வாஸ், வாய்ஸ், பெரைரா, கொரையா, மஸ்கரனாஸ், பீரிஸ், கூஞ்ஞே, தற்குரூஸ், தல்மேத்தா, கல்தேரா, கொரேரா, டி கோஸ்தா, ரோட்ரிகஸ், ரொட்ரிகோ, மிராண்டா, டிவோட்டா, பாய்வா, கர்டோசா, மெதடிஸ், டி சில்வா, டி சூசா, டி குரூஸ், டி ரோஸ், பிஞ்ஞோரா, அல்வாரிஸ், வல்தாரிஸ், வதேரா, கர்வாலியோ (கர்வாலோ), ரோச், விக்டோரியா, மொரேய்ஸ், சில்வேரா, காகு, குத்தாலினி, லோபஸ், லியோன், மொரேல், மெல், மென்டிஸ், மெனஸ், மென்டோன்கா, கல்தேரா, பசங்கா, பிமன்டோ, ராயன், ராவேல், செக்குய்ரா, சோரிஸ்...

போன்றவை அவற்றுள் சில.

இவை தவிர நம் வாயில் நுழையாத, நம் பக்கம் புழக்கத்தில் இல்லாத போர்ச்ச்கீசிய குடும்பப் பெயர்களும் ஏராளமாக உள்ளன.

கவுத்தோ, சல்தான்கா, ஓர்த்தா, வர்த்தமா, மெஸ்கிட்டா, டி மெல்லோ, லிஸ்போவ, நொரன்கா, காமா, மெயினுர்லெஸ், காம்போய, அமரால், அல்பர்க்கர், அப்ரியு, வெய்ரா, டி வாலே, ஆசிவெய்ரா, மான்சான்றோ போன்றவறை அவற்றுள் சில...

போர்ச்ச்கீசிய குடும்பப் பெயர்களுக்கு உள்ள அர்த்தங்கள் விசித்திரமானவை.

எடுத்துக்காட்டாக :
  • டி கோஸ்தா என்ற பெயர் மாலுமியைக் குறிக்கிறது.
  • டி கோஸ்தா என்ற சொல்லுக்கு கடற்கரையில் இருந்து வந்தவர் என்றும் அர்த்தமாம்.
  • டி குரூஸ் என்றால் சிலுவையில் இருந்து வந்தவர் என்று அர்த்தமாம்.
  • லோபோ என்றால் ஓநாய் என்று அர்த்தம்.
  • (லோபோக்கள் வருத்தப்படவேண்டாம். ஐரோப்பாவில் சிங்கம்,புலி இல்லை. அங்கு மதிக்கத்தக்க பெரிய விலங்கு ஓநாய்தான். தவிர, ரோமானிய நாகரீகத்தைத் தோற்றுவித்த ரோமுலஸ், ரெமுசுக்கு பாலூட்டி அவர்களை வளர்த்தது ஓர் ஓநாய்தான்)
  • கோமஸ் என்றால் நல்ல மனிதர்.
  • டி சில்வா என்றால் காட்டில் இருந்து வந்தவர் என்று அர்த்தம்.
  • பெரைரா என்றால் இரும்புச் சுரங்கத்தில் இருந்து வந்தவர்.
  • செக்குய்ரா என்றால் வறண்ட பாலைநிலத்தில் இருந்து வந்தவர். சல்தான்கா என்றால் அவர் ஸ்பெயின் நாட்டின் சல்தான்கா நகரில் இருந்து வந்தவர் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • தோல் பதனிடும் வேலை செய்பவருக்கு கொரியா என்று பெயர்.
  • பியர் மரங்கள் சூழ்ந்த சோலையின் நடுவே குடியிருந்தால் அவர் பெரைரா,
  • மொரெய்ஸ் என்றால் மல்பெரி மரங்களுக்கு நடுவில் வாழ்பவர் என்று அர்த்தம்.
  • கவுத்தோ என்றால் சுற்றிலும் புல்வெளி சூழ்ந்த இடத்தில் இருந்து வந்தவர்.
  • மிராண்டா என்றால் அற்புதமானவர், அன்பு நிறைந்தவர் என்று அர்த்தம்.
  • கொன்சால்வஸ் என்றால், ஆயுதமின்றி வெறும் கையால் சண்டையிடக் கூடிய வீரர்.
  • பிண்டோ என்றால் கண்ணாடி அணிந்தவர் என்று அர்த்தமாம்.
- மோகன ரூபன்
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com