Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

அலைகளின் மைந்தர்கள் - 23


மூக்கையூர் கோவில் திறப்புவிழா முடிஞ்சு ஒரு வருஷத்த தாண்டிட்டு.. இன்னும் ஆண்டவர திரும்ப போய் பார்க்கல. திருவிழாவுக்கு வந்தவரும் கோபத்துல உம்முன்னு இருந்தாரு.. எந்த கோரிக்கையும் வைக்காம அவர போய் பார்த்துட்டு வருவம்ன்னு நெனச்ச சந்தியாகப்பர் போனதடவை மாதிரியே தன் கூடப்பிறந்த சகோதரர் யோவானையும் துணைக்கு கூட்டிட்டு போவோம்ன்னு நெனச்சார்..

நீ அவர மதிக்கலைன்னு உன்மேல உள்ள கோபத்தில என்னைய என்ன ஏதுன்னு கூட கேட்கமாட்டேங்காரு.. நான் வரலைன்னு திடமா மறுத்துட்டார் யோவான்..

ஆண்டவரை நெருங்கும் போது..

மோயிசன் அவர் அருகில் நின்று பேசி கொண்டிருந்தார்..

ரெண்டுபேரும் சேர்ந்து எந்த கடலை பொளக்க போறாங்கன்னு தெரியலையே... திடீர்னு ஞாபகம் வந்தவராக மோயிசன் கானான் பிரதேசத்துல செங்கோல வேற தொலச்சுட்டம்னு சொன்னாரு.. இப்ப என்ன பண்ணுவாங்கன்னு தெரியல..

சந்தியாகப்பர பார்த்ததும் உத்தரவு ஆண்டவேரே... அவரிடமிருந்து விலகி சென்றார் மோயிசன்..

என்ன ஆளையே இங்கிட்டு காணோம்.

நோய்களிலிருந்து மக்களை நல்லா பாதுகாக்கிறியாம். மத்த எல்லோரும் சொல்றாங்க... Keep it up என்றார் கடவுள்..

திருதிருவென முழித்த சந்தியாகப்பரிடம் தொடர்ந்து நல்லா பண்ணுயா என்றார் கடவுள்..

அவருக்கென்ன.. உலகம் பூரா சுத்துறவறு. எங்கயாவது பேசுற மொழியை இங்க வந்து நம்மள்ட்ட சொல்லி காமிப்பாரு... வந்த குதிரையில் ஏறி மூக்கையூருக்கு திரும்ப புறப்பட்டார் சந்தியாகப்பர்..

செல்விய பார்த்து ஆறேழு மாசமானதால ரொம்ப சோர்ந்து போய் இருந்தான் ராயப்பு.. கடலுக்கு கூட ஒழுங்கா செல்றதில்லை.. ஒருநாள் செல்விய பார்க்கனும்னு ஆவேசத்துல நரிப்பையூர் வரைக்கும் நடந்து போய் பின் நிதானிச்சு தன்னால அவளுக்கு பிரச்னை வரக்கூடாதுன்னு திரும்பி வந்துட்டான்..

என்னம்மா வைப்பாத்துகாரங்க வீட்ல கூட்டமாயிருக்கு.. ராயப்பு தன் அம்மாவிடம் கேட்க.. அவள் மகள் சமஞ்சுட்டா.. ரெண்டுநாள்ள தலைக்கு தண்ணி ஊத்துறாகளாம்..

வெளுப்புக்கு வள்ளங்கள் கடலுக்கு போகும்போது.. ஒரு வள்ளம் மட்டும் வைப்பாரிலிருந்து விடிவெள்ளிய கணக்கு பன்னி மூக்கையூரை நோக்கி சென்றது... ஒமல்ல உள்ள மீனை கடற்கரையில் கொட்டி குனிந்தவாறு ரகம் பிரித்து கொண்டிருந்தான் ராயப்பு..

திடிரென ஒரு வள்ளம் தன் அருகில் கரை பிடித்து... ஆண்களும், பெண்களுமாக வள்ளத்திலிருந்து இறங்கினார்கள்... வள்ளத்துல இருந்து இறங்கிய செல்விய பார்த்து சத்தோஷத்துல அப்படியே சிலையா நின்னுட்டான் ராயப்பு.. அந்த நேரத்தில அங்காடி விக்கிறவ அவன் பக்கத்துல வந்து கொட்டான தலையிலிருந்து இறக்கினாள்.. திரும்பி பார்த்த செல்வி இவர்கள் இருவரும் ஒன்றாக நிற்பதை பார்த்து ராயப்பை முறைத்து பார்த்தபடியே சென்றாள்..

யாத்தே.. இன்னைக்கு நான் செத்தேன். சும்மாவே வைப்பாத்தா கிண்ணாரம் சுத்துவா.. இன்னைக்கு நம்ம கத முடிஞ்சுச்சு..

அண்ணே மொச்சபயிறு வாங்கலையா.. இவ ஒருத்தி.. மீனை விக்காம அப்படியே போட்டுட்டுஅவளை நோக்கி ஓடினான் ராயப்பு.. தன்னை பின் தொடர்ந்து வேகமாக நடந்து வரும் ராயப்பை பார்த்து தாமசிச்சு நடந்து ஒரு பனையின் மறைவில் நின்றாள் செல்வி..

தனக்கு எதிரே வந்து மூச்சிறைக்க நின்றவனிடம்.. காலைலயே உங்கள தேடி வந்துட்டா போல...?

இன்னொருத்தி இருக்கிறதால தானே என் நெனப்பு உங்களுக்கு வரல.. முன்னமே தெரிஞ்சுருந்தா உங்கள பார்க்க இங்க வந்திருக்க மாட்டேன்னு கோபமாக சொன்னவளிடம்..

கேந்தி ஏத்தாத பார்த்துக்க..

ராயப்பு தன் இரு கைகளையும் செல்வி கழுத்தருகே கொண்டுபோய்... கொதவலைய (குரல்வளை) நெறிச்சு ஒன்னைய கொன்னுபோடுவேன்.. நானே ஒன்னைய பார்க்க முடியாம கோட்டிக்காரன் மாதிரி இந்த ஊர்ல அலையுறேன்.. பக்கத்திலே நின்று உன்னை பார்க்கனும்னு அவ்வளவு ஆசையா ஒடிவந்தா.... எப்படியும் உன் நெனப்புலயே என்னை சாவடிச்சுறுவடி ...

செல்வி... தூர இருந்து அவள் அம்மாவின் குரல் கேட்க.. இந்தா வர்றேன்.. ராயப்பை முறைத்து கொண்டே சென்றாள் செல்வி..

கி.பி. 1658 ல் கொழும்பிலிருந்து வந்த டச்சு படை தூத்துக்குடியையும், அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் முழுவதுமாக ஆக்கிரமித்து. அந்த பகுதியிலுள்ள பெரிய ஆலயங்களான வேம்பார், தூத்துக்குடி, புன்னகாயல், மணப்பாடு இவற்றில் தூத்துக்குடி ஆலயத்தை மட்டும் முற்றிலுமாக தரைமட்டமாக்கிவிட்டு மற்ற மூன்று ஆலயங்களையும் தங்களின் வணிக கிட்டங்கியாக மாற்றியிருந்தார்கள்..

கி.பி.1695 ஆம் ஆண்டு சாதி தலைவர் இடத்தில் கட்டப்பட்ட மணப்பாடு பரலோகமாதா ஆலயம் வாணிப கிட்டங்கியாக மாற்றப்பட்ட போது அங்கு வசித்த சில குடும்பங்கள் கோவில் இல்லாத ஊர்ல குடியிருக்க கூடாதுன்னு மணப்பாட்டிலிருந்து உள் நாட்டிற்க்குள் அமராபுரம் என்ற சிற்றூருக்கு குடிபெயர்ந்தது...

உள் பகுதிகளில் டச்சுகாரர்களின் ஆதிக்கம் இல்லாததால் சிறிய அளவிலான பரிசுத்தஆவி ஆலயம் ஒன்றை கட்டி வழிபட்டார்கள்... 1710 ல் இவர்களுக்கும், பரதவர்களுக்கும் ஏற்ப்பட்ட உடன்படிக்கையை அடுத்து, டச்சு நிர்வாகம் யேசுசபை குருக்களை அழைத்து ஆலயங்களில் திருப்பலி நடத்தி கொள்ள அனுமதி அளித்தது...

இனி பரதவர்களை துன்புறுத்த மாட்டோம் என்ற அவர்களின் வாக்குறுதி செய்தியாக பரவி.. டச்சுகாரர்களின் மிரட்லுக்கு பயந்து உள் நாடுகளில் வசித்த மக்கள் மீண்டும் கடற்கரைக்கு திரும்ப தொடங்கினர்.. அமராபுரத்தில் தங்கியிருந்தவர்கள் பிற்காலத்தில் மணப்பாடு திரும்பி பரலோகமாதா கோவில் அழிக்கப்பட்ட அதே இடத்தில் அமராபுரம் நினைவாக பரிசுத்த ஆவி ஆலயத்தை எழுப்பினார்கள் ...

....... தொடரும் .......

- சாம்ஸன் பர்னாந்து 

அலைகளின் மைந்தர்கள் - 22


தன் கரத்தை பிடித்திருந்த செல்வியின் கைகளை விலக்கி.. இருட்டுறதுக்குள்ள மூக்கையூர் போகனும்.. நான் வர்றேன் என்றவனிடம்.. 

காத்து ஒரமா கெடக்கு அதுலாம் சீக்கிரம் போயிறலாம் நான் சமச்சு தர்றேன்.. என் கையால சாப்பிட்டுட்டு போங்க என்று சொன்னாள் செல்வி.. 

உங்க அம்மா அப்பா ன்னு இழுத்தான் ராயப்பு..

அம்மா விளாத்திகுளம் சந்தைக்கு போயிறுக்காக...  அப்பாவும், தம்பியும் கடற்கரைல நிக்காங்க. எல்லோரும் வீடுவந்து சேர பொழுதடஞ்சுறும்.

உனக்கு எதுக்கு செரமம் நான் கிளம்புறேன்..

ஏன் அந்த அங்காடி விக்கிறவள பார்க்க போகனுமாக்கும்?.. கிண்டலாக செல்வி கேட்க..

சட்டுனு தரையில் உட்கார்ந்த ராயப்பு சோத்த பொங்குடி என்றான்.

கோவம் வருதாக்கும் உங்களுக்கு...

மூணு மாசமா நான் உங்கள பார்க்காம தவிச்ச தவிப்பு எனக்குத்தான் தெரியும்
புருஷன பார்த்துகிட்டே இருக்கனும்... பக்கத்தில உட்கார்ந்திருக்கனும்னு எல்லா பொண்டாட்டிக்கும் ஆசையிருக்கும் இதை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறிக ..

இந்த வைப்பாத்தாளோட காலம் தள்ளுறது கொஞ்சம் கடுசுதான்..

ராயப்பை மொறச்சு பார்த்து.. புருஷன் பட்டினியா கெடக்க கூடாதுன்னு நெனப்பா வைப்பாத்துகாரி..

அடுக்கு பானைக்குள்ள இருந்த நெத்திலி கருவாட்ட எடுத்து கொஞ்ச நேரத்தில சமச்சு முடிச்சுட்டா செல்வி.. நெல்லுசோறு சாப்பிட்டு அசதில வீட்டு நடு சட்டத்தில சாய்ந்திருந்த ராயப்பிடம்.. என்னங்க என்று கூப்பிட்ட செல்வியிடம் என்ன என்பது போல் பார்த்தான் ராயப்பு..

ஊருக்கு போனவுடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க... உங்கள பார்க்காம என்னால இருக்க முடியல..

எனக்கு ஒரு பிரச்னையிருக்கு கொஞ்சகாலம் ஆகட்டும்..

கண்டிப்பா என்னைய கல்யாணம் கட்டுவியல்ல..?

நான் உன் புருஷன்னுதானே என்ன நடந்தாலும் பரவாயில்லைனு நடு வீட்ல உக்காந்திருக்கேன்.. வாசலில் நின்றவளை வேண்டுமென்றே உரசிக்கொண்டு
வீட்டிலிருந்து வெளியே வந்தான் ராயப்பு.. 

நெனப்பு இருக்குல அப்ப சீக்கிரம் தாலிகட்ட பாருங்க...

ம்ம்.. தலையாட்டிகொண்டே கடந்து போனவனை..

மச்சான்.. சினுங்கிகொண்டே செல்லமாக கூப்பிட்ட செல்வியை திரும்பி பார்த்தான் ராயப்பு. ஒன்னுமில்லை...நீங்க போங்க

கோட்டி புடுச்சுறுக்கு போல.

ஆம.. உங்க மேல என்றாள்...

கட்டுமரம் மறையும் வரை ஒரு எருக்கஞ்செடிக்கு பின்னால் மறைந்து நின்று கடலையே பார்த்து கொண்டிருந்தாள் செல்வி...

கி.பி. 1538 ஆம் ஆண்டு கொச்சி மறைமாவட்ட அனுமதியுடன் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட புனித இராயப்பர் ஆலயம்தான் தூத்துக்குடியின் முதல் ஆலயம். அதுவே தூத்துக்குடி கிறிஸ்துவ மக்களின் பங்கு ஆலயமாக இருந்தது. பிறகு வேறு எந்த ஒரு ஆலயமும் தூத்துக்குடியில் கட்டப்படவில்லை..

1712 ஆம் ஆண்டு தஸ்நேவிஸ் மாதா ஆலயம் கட்டி முடித்து திறக்கப்பட்டாலும் கோவிலின் வேலைகள் முழுமையடையாமல் இருந்தது.. 1714 ஆம் ஆண்டு வேலைகள் முற்றுப்பெற்று திருவழிபாடுகள் முறையே நடைபெற்று வந்ததால் புதிய பனிமய அன்னை ஆலயமே தூத்துக்குடி மக்களின் பங்கு கோவிலாக மாறியது. (1733 ஆம் ஆண்டு பெரிய ஆலயமாக அங்கீகரிக்கப்பட்டது. 1982 ல் (Basilca) திருத்தலமாக மாறியது.)

1710 ஆம் ஆண்டு கொச்சின் வந்த கான்ஸ்டாண்டைன் பெஸ்கி முத்துக்குளித்துறை பகுதிகளான மணப்பாடு, தூத்துக்குடி, புன்னகாயல் பகுதிகளுக்கு வந்து பின் தமிழையும் வேதபோதக பனிகளையும் தெளிவாக கற்க 1714 இல் வேம்பார் வந்தார். கற்று தேர்ந்து பின்னர் வீரமாமுனிவர் என்று பெயர் மாற்றி தேம்பாவணி போன்ற சிறந்த நூல்களை படைத்தார்..

செல்வ செழிப்பான வேம்பார் அடிக்கடி நாயக்கரின் படைகளால் சூறையாடப்பட சில குடும்பங்கள் பரவ நாட்டை விட மறவநாடு பாதுகாப்பானது என்று மறவ நாட்டில் கீழக்கரை மற்றும் நரிப்பையூரிலும் குடியேறினார்கள்..

ஐந்தாறு வருடங்களில் ஐம்பது குடும்பங்கள் என்ற அளவுக்கு பெருகி போயிருந்தது.. மற்ற பரவ ஊர்களை போலவே நரிப்பையூரிலும் சாதி தலைவர் (அடப்பன்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.. மூக்கையூரிலிருந்து வியாபர நிமித்தமாக வெளியேறி கடலாடியில் நிரந்தரமாக தங்கியிருந்தவர்கள் கருவாடு விற்க மீண்டும் ஒரு சந்தையை கண்டு பிடித்தார்கள்..

வியாபாரத்திற்காக கடலாடி, மூக்கையூரிலிருந்தும் மக்கள் சென்று கமுதியிலும் நிரந்தரமாக குடியேற தொடங்கினார்கள்... பின் ஒரு சில வருடங்களிலேயே பார்த்திபனூர், விருதுநகரிலும் மூக்கையூர் மக்கள் குடியேறினார்கள். பிற்காலத்தில் கருவாடு மட்டுமல்ல மற்ற தொழிலும் சிறந்து விளங்கினார்கள்..

மாலிக்காபூரால் பரதவர்களின் மொத்த வணிகமும் சிதறடிக்கப்பட்டாலும் அதிலிருந்து வெகுவிரைவில் மீண்டு.. முத்து குளித்தலும்.. மேலைநாடுகள் வரை பிற வணிகமும் செய்து போர்த்துகீசியர்களுக்கும், டச்சுக்காரர்களுக்கு போட்டியாக விளங்கினார்கள்..

1710 ஆம் ஆண்டு பரதவர்களின் ஒத்துழையாமையால் டச்சுகாரர்களின் கடல் வணிகம் சரிய தொடங்கி பின் பரதவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையின் மூலம் (கோவில் கட்ட அனுமதி) மீட்டெடுத்தாலும்.... பரதவர்களின் வணிகத்தை அழிக்க இலங்கையிலுள்ள டச்சு தலைமை நிர்வாகம் முடிவெடுத்தது...

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வணிக பொருட்களை சூழ்ச்சியால் இவர்களுக்கு கிடைக்கவிடாமல் தடுக்க கிரேக்கம், ரோமாபுரி போன்ற மேலை நாடுகளின் வணிகம் முற்றிலுமாக நின்றுபோனது.. ரங்கூன், மலேசியா, கொழும்பு போன்ற கீழ்திசை நாடுகளுக்கு மட்டுமே சிறிய அளவில் வணிகம் நடந்தது..

பரதவ வணிக பட்டினங்களான மணப்பாடு, வீரபாண்டியன் பட்டணம், தூத்துக்குடி ,வேம்பார் போன்றவற்றின் கடல் வணிகம் சரிய தொடங்கியது...

........ தொடரும் ........
- சாம்ஸன் பர்னாந்து 

அலைகளின் மைந்தர்கள் - 21

பாண்டியாபதியின் உத்தரவையடுத்து...

டச்சுகாரர்கள் கடல் வணிகம் செய்வதற்கு தோணிகளை அவர்களுக்கு கொடுக்க கூடாதென்று தூத்துக்குடி பரதவர்கள் முடிவெடுத்தார்கள். இவர்களால் மட்டுமே எந்த நாட்டிற்கும் வணிக கப்பலை துல்லியமாக கொண்டு செல்ல முடியும் என்ற நிலையில்.. யாருமே கடலுக்குள் போகமாட்டோம் என்று திடமாக மறுத்ததால்.. டச்சுகாரர்களின் கடல் வணிகம் முற்றிலுமாக தடைபட்டது...

இலங்கையிலிருந்த டச்சுவின் தலைமை நிர்வாகம் தூத்துக்குடி வந்து பாண்டியாபதியோடு பேச்சுவார்த்தை நடத்தியதின் விளைவாக.. இடிக்கப்பட்ட ஆலயத்தை மீண்டும் கட்டிக்கொள்ளவும் திருப்பலி நிறைவேற்றவும் டச்சு நிர்வாகம் அவர்களுக்கு அனுமதியளித்ததை தொடர்ந்து, பரதவர்கள் கடல் வணிகத்தை தொடர்ந்தார்கள்.. அதே நேரம் வேம்பாரில் பரிசுத்த ஆவி ஆலயத்தை சுற்றி மிக பெரிய கோட்டை எழுப்பி (டச்சு கோட்டை) ஏற்றுமதி இறக்குமதிக்கான பண்டகசாலையாகவும் ஆயுதகிடங்காகவும் ஆலயத்தை மாற்றி இருந்தார்கள்...

கொச்சியிலிருந்து பாதிரியார்கள் திரும்ப தூத்துக்குடி வந்து சேர்ந்தனர்.. 1713 ஆம் ஆண்டு ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு பரதவகுல சாதி தலைவர்களாலும், பாண்டியாபதியாலும் கொற்கை, சிவாந்தாகுளம், துப்பாசிபட்டி, வேம்பார், பாண்டியன் தீவு ஆகிய ஊர்களி
லும் கடைசியாக பாண்டியாபதியின் வீட்டிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த பரதவரின் அன்னை ஏழுகடல்துறை ஏக அடைக்கல தாயாகிய திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் மாதா முத்துக்களாலும், தங்கத்தினாலும் அலங்கரிக்கப்பட்டு பாண்டியாபதியின் தலைமையில் ஊர்வலமாக தூத்துக்குடி வீதிகளில் நகர்வலம் வந்து மீண்டுமாய் கோவில் பீடத்தில் கம்பீரமாக நிலை நிறுத்தப்பட்டாள்...

மரியே வாழ்க.. மரியே வாழ்க...

1716 இல் தூத்துக்குடியில் முத்து வணிகம் சிறப்பாக இருந்ததால் அப்போதைய பரதகுல சாதி தலைவர் தொன் கப்பிரியேல் ஆரோக்கிய தெக்குரூஸ் கோமஸ் அவர்கள் அன்னை நகர்வலம் வர ஒரு சிறு தேர் செய்ய முடிவெடுத்தார்.. இதுதான் பனிமய அன்னை தூத்துக்குடி வீதிகளில் நகர்வலம் வந்த முதல் தேர்.. 1720 லிருந்து 1779 வரை நகர்வலம் வந்தது. 

பின்னாளில் தூத்துக்குடி பரத இனம் தொழில் ரீதியாக கஷ்டப்பட (முத்து சிலாபம் இல்லாமல் போக) தேரோட்டம் நின்று போனது.. பின் 1802 ல் தேர்மாறன் என்று அழைக்கப்பட்ட தொன் கப்ரியேல் தெக்குரூஸ் தங்கத்திலான தேர்செய்து பரதவரின் அன்னையை தூத்துக்குடியெங்கும் நகர்வலம் வர செய்தார்.. தஸ்நேவிஸ் மாதாவிற்கு தூத்துக்குடி சாதி தலைவர் தேர் செய்து கொண்டிருப்பது.. இடிந்தகரையிலிருந்து மூக்கையூர் வரைக்கும் பரவியது..

கட்டுமரத்திலும், சின்ன வள்ளத்திலும் தூத்துக்குடி வந்து புதிதாக செய்து கொண்டிருக்கும் தேரை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு சென்றார்கள்.. மூக்கையூரிலிருந்து இளைஞர்கள் கட்டுமரத்தில் கடல் வழியாக தூத்துக்குடிக்கு புறப்பட்டு... வைப்பாற கடந்து ஒடிக்கிட்டு இருக்கும்போது திடிரென கடல்ல வெப்பல் வுழுந்து கட்டுமரங்களால் தொடர்ந்து ஒட முடியல. எதிர்த்த நீவாடு வேற... தொளவைய போட்டு போனாலும் போய் சேர முடியாதுன்னு கட்டுமரத்த சாயவுட்டு வைப்பாரில் கரையேறி கடற்கரைல நின்றிருந்த பசங்கள் உதவியோடு கட்டுமரங்களை கரைய ஏத்தும்போது... மாதாவே.. மாதாவேன்னு சொல்லி கட்டுமரத்த மேலே இழுத்தாங்க.. (வைப்பாத்துகாரங்க வாயில எப்போதுமே மாதா.. மாதான்னுதான் வரும். ஏன்னா... தங்களின் குடும்ப உறுப்பினராகவே ஏற்று கொண்டிருந்தார்கள் ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் பரலோகமாதா என்னும் மோட்ச அலங்காரி தாயை..)

நடந்து வந்த ஒன்றிரண்டு வேம்பார் இளைஞர்களோடு இவர்களும் சேர்ந்து தூத்துக்குடிக்கு நடந்து போனார்கள். ராயப்பு மட்டும் அவர்களோடு தயங்கி தயங்கி பின்னால் நடந்து வந்தான்.. முதன் முதலாக தஸ்நேவிஸ் அன்னையின் கருணை நிறைந்த முகத்தை மிக அருகில் போய் பார்த்து அதிசயித்து சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கிவிட்டு.. அன்னை நகர்வலம் வர செய்து கொண்டிருக்கும் அழகிய தேர் முக்கால் வாசி முடிந்த நிலையில் இருந்ததை ஆச்சரியமாக பார்த்தார்கள்.. 

வைப்பாறை மீண்டும் அடைந்ததும் கோவிலுக்கு போய்ட்டு போவோம்னு தன்னோடு கூட வந்தவர்களை கட்டாய படுத்தி கூட்டி சென்றான் ராயப்பு ..
(எதுக்குன்னு அவனுக்கு மட்டும்தானே தெரியும்).

வழியெங்கும் பார்வையாலே செல்வியை தேடிக்கொண்டு அவளை காணாது சோர்ந்து போய் கோவில்ல நெடுஞ்சாண்டையாய் விழுந்து... எம்மா.. எப்படியாவது அவளை என் கன்னுல காமிச்சுறுங்க..

(இதுக்குலாமா வேண்டுவானுக.... பீடத்தில் கொலு வீற்றிருந்த மோட்ச அலங்காரி தாய் மனதுக்குள் சிரித்து கொண்டாள்)

கோவிலிலிருந்து கடற்கரையை நோக்கி வரும்போது.. ஒரு வீட்டிற்குள்ளிருந்து ஒரு பெண் செருமும் சப்தம் கேட்டு அது யாரென்று புரிந்து ராயப்பு மற்றவர்களிடமிருந்து பின் வாங்க.. உள்ளே வாங்க என்றாள் செல்வி.. புது பொண்ணு மாதிரி அலங்கரித்து நின்ற செல்வியை பார்த்து அப்படியே மெய்மறந்து போனான்....

உனக்கு கல்யாணமான்னு நக்கலாக கேட்ட ராயப்பிடம்.. ஆம் என்பது போல் தலையை மேலும் கீழுமாக அசைக்க அவன் முகம் வாடுவதை பார்த்து.. எனக்கு கல்யாணம் முடிஞ்சு மூனுமாசம் ஆயிட்டு இப்ப நான் என் புருஷன் வந்திருக்கார்னு அலங்கரிச்சு நிக்கேன்னு அவன் அருகில் போய் நின்றாள் செல்வி.. ராயப்பின் கை செல்வியின் கரத்தை ஆதரவாக பற்றியது.. அவள் விடுவிக்க விரும்பவில்லை..

ஊர்ல சண்டிதனம் பன்றீயலாம்.. செல்வி ராயப்பிடம் கேட்க அதெல்லாம் இல்லை என்று மறுத்தான். போனமாசம் நீங்க குடிச்சுட்டு தொளவையை வச்சு ஒருத்தன மண்டய ஒடச்சது தெரியும்.. மீன் வாங்க வந்தவனை நீங்க அடிச்சதும் தெரியும்.. இன்ன ஒன்னும் சொல்லவா.. ராயப்பு மௌனமாக நிற்க .. அங்காடி விக்கிறவள்ட்ட சிரிச்சு சிரிச்சு பேசுனதும் எனக்கு தெரியும்..இவள்ட்ட இதைலாம் யார் வந்து சொல்லிட்டு போறா.. ம்ம் ..சந்தியாகப்பர் குதிரைல ஏறி வந்து என்னட்ட சொல்லிட்டு போனாறு.. நான் ஊருக்கு வந்துக்கிறேன் அப்புறம்ல இருக்கு உங்களுக்கு.. 

கல்யாணம் முடியுறதுக்கு முன்னாடியே இப்படின்னா... கல்யாணம் முடிஞ்சா நம்மள என்ன பாடுபடுத்துவாளோ.. நீங்க தொட்டால் நான் சுருங்கிறுவேன் மச்சான் என்றாள் செல்வி... நான் நினைப்பதெல்லாம் இவளுக்கு எப்படி தெரியும்னு ராயப்பு கண்ணை சுருக்கும் போது... புருஷன் என் நினைக்கிறார்னு பொண்டாட்டிக்கு தெரியாதா என்றாள் செல்வி..

....... தொடரும் ......

- சாம்ஸன் பர்னாந்து 

அலைகளின் மைந்தர்கள் - 20


கி.பி. 1708 லிருந்து 1710 வரை பெயர் தெரியாத ஒரு கொள்ளை நோய்க்கு (ப்ளேக்) ஏழுகடற்றுறையின் இரண்டாம் கடற்துறை வைப்பாறு மிகவும் பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட மூவாயிரத்துக்கும் அதிகமானோர் நோயால் இறந்தார்கள். மூக்கையூரும், வேம்பாரும் அதிகம் பாதிக்கப்படவில்லை. அதற்கு காரணம் வேம்பாரில் புனித செபஸ்தியாரும், மூக்கையூரில் சந்தியாகப்பரும் குதிரையிலேயே வலம் வந்து ஊர் எல்லையிலேயே நோயை தடுத்து நிறுத்திட்டாங்கன்னு.. வைப்பாரில் பேசிக்கொண்டார்கள்.. (குதிரை கால் தடயம் எல்லாம் பார்த்தார்களாம்)..

அன்றிலிருந்து வைப்பார் மக்கள் மூக்கையூரில் நடக்கும் திருவிழாக்களுக்கு வந்து போக தொடங்கியிருந்தார்கள்.. கி. பி. 1713 சேதுபதி படைகள் வேம்பாரை கைப்பற்றியபோது இலங்கைக்கும், உள் நாடுகளுக்குள்ளும் தப்பித்து சென்றவர்கள் போக மீதி பேர் அருகிலுள்ள தீவுகளில் தஞ்சம் புகுந்தனர். போகும்போது செபஸ்தியார் சுருபம் உட்பட அனைத்து சுருபங்களையும் தீவுகளுக்கு கொண்டுபோய் பாதுகாத்தார்கள்..(நாயக்கர் மற்றும் சேதுபதியிடம் கடற்படை இல்லாததால் ஒவ்வொரு படையெடுப்பிலும் தங்களை தற்காத்து கொள்ள அருகிலுள்ள தீவுகளில் தஞ்சம் புகுந்தனர். சில தீவுகளில் (வான்தீவு) பாண்டியாபதியின் வேண்டுதலுக்கு இணங்க போர்த்துகீசிய படைகள் இவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தது..)

1715 இல் மூக்கையூர் சந்தியாகப்பர் கோவில் திறப்பு விழாவிற்கு வந்த வைப்பாறு மக்கள் வேம்பாரை கடந்து வரும்போது அங்கு எந்த சுருபங்களும் இல்லாததால். ஆண்கள் கடல்வழியாக நல்லதண்ணி தீவிற்கு சென்று அங்கிருந்த செபஸ்தியாரை கும்பிட்டுவிட்டு தன் உறவுகளிடம் நலம் விசாரித்துவிட்டு மூக்கையூர் சென்றார்கள்.. பெண்கள் அனைவரும் கடலில் கால்களை நனைத்தபடி மூக்கையூரை நோக்கி நடந்து வந்தார்கள்.

இந்த வருஷமாவது நல்ல சம்மந்தம் வரட்டும்ன்னு சந்தியா ராயப்பருக்கு நேர்ச்சை போட்டு கோவில் திருவிழாவிற்கு போகமாட்டேன் என்று சொன்ன தன் மகளை சமாதானப்படுத்தி அவள் அப்பத்தாவோடு மூக்கையூருக்கு அனுப்பியிருந்தாள் செல்வியின் அம்மா...

தன் ஒன்றுவிட்ட சித்தியின் வீட்டில் தங்கியிருந்த செல்வி.. திருவிழாவில் பார்த்த அவனை வைப்பாறுக்கு திரும்ப போறதுக்கு முன்னாடி எப்படியாவது அவனை திரும்ப சந்திக்கனும்னு அடுத்தநாள் காலையில் அவனை பார்ப்பதற்க்கு ரொம்ப மெனக்கெட்டா..

கோவிலுக்கு பலமுறை போவதும் வருவதுமாக இருந்தும் ஒருமுறை கூட அவன் கண்ணில் தென்படல. சோர்ந்து போய் அமர்ந்திருந்த செல்வியை அவள் சித்தி கூப்பிட்டு.. ரெண்டு வீடு தள்ளியுள்ள எங்க மதினி வீட்ல போய் கருப்பட்டி வாங்கிட்டுவா.. நீ ஊருக்கு போகும்போது ஏதாவது பலகாரம் செஞ்சு கொடுத்தது அனுப்பனும்ல...

பனை ஓலையால் வேயப்பட்ட சுற்றுவேலி கதவை திறந்தவள்.. வீட்டிற்கு முன்னால் போடப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்து கடலுக்கு கொண்டு செல்லும் ஒமல்ல உள்ள பீத்தலை பொத்தி கொண்டிருந்தான் ராயப்பு ..

அவனை பார்த்த சந்தோஷத்தில் உடம்பெல்லாம் புல்லரிச்சுபோய் நிற்க.. நிமிர்ந்து அவளை பார்த்தவன் என்ன என்பதுபோல் பார்வையால் கேட்டான்..
திக்கி தினறிபோய் .. எங்க சித்தி கருப்பட்டி வாங்கிட்டு வரசொன்னாங்க..

யாரு வைப்பாரு அத்தையா ..?

ம்ம் ..

(முன்பெல்லாம் அவர்களின் குடும்பத்து வர்க்க பெயரை சொல்லி அழைத்தவர்கள் இப்போதெல்லாம் அந்த குடும்பம் எந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து வருகிறதோ அந்த ஊரின் பெயரை சொல்லியே அழைத்தார்கள்.. உவரியான், மணப்பாட்டான், தாழையான், கமுதியான், கடலாடியான் இப்படி அழைக்கப் பட்டார்கள்...)

வீட்டிற்குள் நுழைந்து ஒரு கொட்டான் நிறைய கருப்பட்டிகளை கொண்டுவந்து கொடுக்க.. கைககள் நடுநடுங்க கொட்டானை வாங்கியவள் இவன் விரல் தீண்டியதும், வியர்த்துபோய் மயக்கமாகி கீழே சாய்ந்தவளை தாங்கிபிடித்து குவித்து வைத்திருந்த ஒமல்ல சாய்த்து வைத்தான் ராயப்பு..

தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிந்தவள் ..

கொட்டானை தலையில் தூக்கி நடந்தவாறு... மாதாவே.. மாதாவே.. ன்னு ஏதோ முனங்கி கொண்டே போனாள் ..

ஏய்.. என்ன சொல்ற..

வாசல்வரை போனவள் திரும்பி வந்து

கண்டிப்பாக சொல்லனுமா என்றாள்..?

ம்ம்..

மாதாவுக்கு நன்றி சொன்னேன்.

எதுக்கு..?

என் புருஷன கண்ணுல காமிச்சதுக்கு.

ஒமல் மேலே உட்கார்ந்திருந்த ராயப்பு ரெண்டு கையவும் விரிச்சமேனிக்கு தரையில சாஞ்சிட்டான்..

(வீட்டுக்கு அருகில் நின்ற பனைமரத்திலுள்ள பச்சை ஓலைகளும் சந்தோஷத்தில் தலையாட்டியது. அங்கு ஒரு ஆன்மா இன்னும் உயிரோடு இருப்பது யாருக்கும் தெரியாது.. )

திருவிழா முடிஞ்சு ஊருக்கு திரும்புறவுங்க நல்ல வெப்பல் போட்டு கடல்ல அலைகளே இல்லாதாலே தங்களுடைய குடும்பங்களையும் கட்டுமரத்திலும், சிறு வள்ளங்களிலும் ஏறி வைப்பாறுக்கு புறப்பட்டார்கள். சிலர் மட்டும் நடந்து சென்றார்கள்.. அன்னைக்கு சரியான பாடு என்பதால் வலைகளிலிருந்து மீன்களை பிரித்து எடுப்பதில் தீவிரமாயிருந்தான் ராயப்பு. தன்னை கடந்து சென்ற செல்வியை அவன் கவனிக்கவில்லை..

க்க்கூம்.. செருமிக்கொண்டே அவனை கடந்து சென்ற செல்வியை நிமிர்ந்து பார்த்தான்.

கொஞ்சதூரம் தன் அப்பத்தாவோடு சென்றவள் தனியாக திரும்பி வந்து அவனிடம் என்னங்க என்றாள்..

(இந்த குரலும் வார்த்தையும் ஏற்கனவே கேட்து மாதிரி இருந்தது ராயப்புக்கு)

நீங்க எப்ப என்னை தாங்கிபுடிச்சியலோ அப்பவே நான் உங்க பொண்டாட்டி.. நீங்க என் புருஷன்.. உங்களுக்கு என்னைக்குமே நான்தான்.. மறந்துறாதிக.. ன்னு சொல்லிவிட்டு ஒட்டமும் நடையுமாக தன் அப்பத்தாவை நோக்கி சென்றாள் செல்வி..

குவிச்சு வச்சிறுந்த மீனை கள்ளபிராந்தும் (பருந்து), காக்காவும் எவ்வளவு தூக்கிட்டு போச்சுனு ராயப்புக்கு தெரியாது ...

........ தொடரும் ........
- சாம்ஸன் பர்னாந்து 

The Tuticorin-Sri Lanka link

Tracing the history of maritime trade with Sri Lanka through traditional mode of shipment by vessels from Tuticorin, S. Lasington Fernando, secretary, Coastal Mechanised Sail Vessel Owners Association, said maritime relations between people of these countries were still evolving.

It was through the dry fish trade in Sri Lanka by merchants of coastal hamlets in Tuticorin, relations were established between the people of both sides centuries ago. Besides, merchants had been long-time settlers in the island nation. With the festival season of Our Lady of Snows Basilica in Tuticorin, about to commence, Christian pilgrims from Sri Lanka were expected to arrive here to join the celebration of reunion, Mr. Fernando told The Hinduhere on Monday. The 11-day annual festival would begin with a flag hoisting on July 26. During this occasion, wedding proposals, involving Sri Lankan nationals, would take place here, he said. “Yet there is a striking similarity between localities of the St. Anthony’s Shrine at Kochchikade in Colombo and the street houses close to Our Lady of Snows Basilica in Tuticorin. The activities and social mores of the two communities are similar in these two locales,” he said.

In those days, Sri Lankans came here under the visa-on-arrival rule, now they had to apply for short-term visas at the Indian Embassy in Colombo, said S.M. Chandrakumar Paldona, a resident of Manal Street.

Bonaventure Roche, a resident of Beach Road and grandson of J.M.B. Roche Victoria, the first elected chairman of the Tuticorin Municipality in 1886, said that since Tuticorin was situated near the Colombo port many merchants from Tuticorin established departmental and provision stores in Colombo. Besides, companies and tea estates founded by the British in Sri Lanka created jobs and many from the coastal hamlets of Manapad, Veerapandianpattinam and Alandhalai benefitted from them, Mr. Roche recalled.

- J. Praveen Paul Joseph

அலைகளின் மைந்தர்கள் - 19

இலங்கைக்கு சென்றிருந்த சலேத்மேரியின் அண்ணன் அங்கேயே பத்து வருங்களாக தங்கி அங்கு தனக்கு முன்னால் குடியேறிய தன் இனத்தை சேர்ந்த பெண்ணை கல்யாணம் செய்தவன்.. டச்சுக்காரர்களோடு (ஹாலந்து) தொழில் ரீதியாக இணக்கமாகி ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் மூலம்... (முத்து வணிகம் தவிர.. இது பாண்டியாபதியின் வாரிசுகளுக்கு மட்டுமே...) இலங்கையில் பெரும் செல்வந்தனாக மாறி போயிருந்தான்..

தன் மனைவி மற்றும் குழந்தைகளோடு மரக்கலனில் தன் சுற்றத்தை பார்க்க மூக்கையூர் வந்தவன்.. தன் மாமா சூசையின் இறப்பை கேள்விப்பட்டு அதிர்ந்து.. தன் அடுத்த தலைமுறையும் கடல்ல கஷ்டப்பட வேண்டாம்னு... தன் தங்கை சலேத்மேரியையும், அவளது மகன்களையும் தன்னோடு இலங்கைக்கு கூட்டி சென்றான் பிலேவேந்திரன்..

சூசை சலேத்மேரியின் மகள் குழந்தை தெரஸ் அம்மாங்க மடத்துல சேர்ந்து பத்து வருஷம் ஆகியிருந்தது.. ஒருநாள் இரவில் பெய்த கனத்த மழையில் மேற்கூரைகள் இல்லாமல் பாதி அழிந்து கிடந்த நிலையில் இருந்த தடிமனான மண்சுவர் முற்றிலுமாக கரைந்து போய் அந்த இடத்தில் வீடு இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போனது.. பல வருடங்களாக அந்த வீட்டில் வசித்து வந்த ஒரு ஆன்மா வீடில்லாமல் பனை மரத்தில் குடியேறி கடலையே பார்த்து கொண்டிருந்தது..

மாரியம்மா...

ஒரு புனிதமான காதல் இங்கு வாழ்ந்து காட்டப்பட்டது என்பதற்கான எந்த தடயங்களுமே இல்லாமல் போயிற்று மூக்கையூரில்..


******************************************

கி. பி. 1713.... 

வேம்பாரும், மூக்கையூரும் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியதால் செல்வ செழிப்பான ஊராக மாறி போயிருந்தது. டச்சுக்காரர்கள் கிறிஸ்தவ மதம் என்றாலும் அவர்கள் வேறு சபை பிரிவினர் (கால்வீனிஸ்ட்)... அவர்கள் ரோமன் கத்தோலிக்க மதத்தை அழிக்க உலகமெங்கும் தீவிரம் காட்டினார்கள்..

டச்சுக்காரர்களின் தீவிர வற்புறுத்தலின் பேரில் விஜயன் சேதுபதி இரண்டு ஊர்களின் மீதும் படையெடுத்து (மூக்கையூர் மறவநாடு ஆனால் வேம்பார் பரவநாடு) சென்று மூக்கையூரிலுள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்தை தரை மட்டமாக்கியதோடு செல்வங்களையும் கொள்ளை அடித்து சென்றான்...

வேம்பாரில் திருத்தலமாக (Baslica) மாறிபோயிருந்த பரிசுத்த ஆவி ஆலயத்தை தன்னுடைய இருப்பிடமாக மாற்றினான் விஜயன் சேதுபதி. (ஏற்கனவே டச்சுபடையினர் ஆலய பீடத்தை முற்றிலுமாக சேதப்படுத்தியிருந்தார்கள்) பாதிரியார்களை அனைவரையும் அடித்து துரத்தியதால் அவர்கள் அனைவரும் காடுகளிலும், அருகில் உள்ள தீவுகளிலும் மறைந்து வாழ்ந்து மக்களுக்கு திருப்பலி நிறைவேற்றினார்கள்.

டச்சுகாரர்களின் அராஜாகத்தால் நிறைய குடும்பங்கள் இலங்கை மன்னாருக்கு குடிபெயர்ந்தது (இன்று இலங்கையில் வாழும் பரதவ இனத்தவரில் பாதிபேர் வேம்பாரை பூர்வீகமாக கொண்டவர்கள் ).. வேம்பாரில் கிட்டத்தட்ட 50 வருடங்களாக பரிசுத்த ஆவி ஆலயத்தில் திருப்பலி நடைபெறவில்லை.. 

மூக்கையூரில் நடந்தவைகளை கேள்விபட்ட ஆப்பநாட்டு தலைமையும், சாயல்குடி ஜமீனும் விஜயன் சேதுபதியை சந்தித்து மூக்கையூர் மக்கள் அரசகுடிகள் என்று விளக்கி கூற..மீண்டும் அவர்களை கோவில் கட்ட அனுமதித்தார் விஜயன் சேதுபதி. வேம்பாரை விட்டு படைகளை விலக்க கூடாது என்று விஜயன் சேதுபதிக்கு கடுமையான உத்தரவு போட்டிருந்தது டச்சுபடை.. முத்து வணிகத்தில் இவர்களுக்கும் தூத்துக்குடி பரதவ வணிகர்களுக்கும் நடந்த உரசல்களே காரணம். 

(பரத இனத்தின் பாதுகாவலி தஸ்நேவிஸ் அன்னை நகர்வலம் வர தேர் செய்து கொடுத்த தேர்மாறன் என்று அழைக்கப்பட்ட தொன் கபிரியேல் தெக்குரூஸ் வாஸை கைது செய்வதற்கு இலங்கையிலிருந்து திருப்பி அனுப்புங்கள் என்று உத்தரவிட்ட ஆங்கிலேயர்களின் கோரிக்கையை இலங்கை டச்சு நிர்வாகம் நிராகரிக்கும் அளவுக்கு பரதவரோடு பின்னாளில் நெருக்கமானார்கள் டச்சுகாரர்கள்...)

மூக்கையூரில் கோவில் கட்ட சேதுபதி நிர்வாகம் அனுமதித்ததன் பேரில் தகவல் கொச்சின் தலைமைக்கு செல்ல ஆலோசனைக்கு பின்.. போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டு புனித சவேரியார் உடல் பாதுகாக்கப்பட்டிருக்கும் குழந்தையேசு ஆலய வடிவில் கட்ட தீர்மானித்தார்கள்..

மூக்கையூருக்கு எதிரே உள்ள உப்புதண்ணி தீவை சுற்றியுள்ள பாறைகளை பெயர்த்தெடுத்து சுண்ணாம்பு காய்ச்சப்பட்டது.. கோவில் கட்டுவதற்கான முக்கிய மூலப்பொருட்கள் சுண்ணாம்பும், கருப்பட்டியும் இவர்களுக்கு எளிதாக கிடைத்ததால் தாங்களே கட்டிட வேலை செய்து இரண்டே வருடத்தில் பிரம்மாண்டமான ஆலயத்தை கட்டி முடித்தார்கள்..

மூக்கையூரில் புதிய சந்தியாகப்பர் ஆலயம் உருவானது... அவன் சொன்ன கோரிக்கைககளை நான் நிறைவேத்தலைன்னு கோவில் திறப்புக்கு கூட என்னை கூப்ட மாட்டேங்கிறானே.. மீன் திங்குறவன்ல ரோஷம் கூடத்தான் இருக்கும்.. அவன் கூப்பிடலைனாலும் நம்ம போவோம்னு முடிவெடுத்த கடவுள்.. 

சந்தியாகப்பர் மேல் கோபத்தோடு தன் படைகளுடன் (புனிதர்கள்) மூக்கையூரை நோக்கி சென்றார்.. வேறு ஊர்களில் குடியேறிய மூக்கையூர்காரர்களுக்கு திறப்புவிழா அழைப்பு சொல்லப்பட்டது.. புனித சந்தியாகப்பர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கம்பீரமாக தெருக்களில் வலம்வர புறப்பட்டார்.. இளைஞர்கள் பெருங்கூட்டத்தை லாவகமாக விலக்கி சப்பரத்தை முன்னெடுத்தார்கள். அவர்களை உடம்பெங்கும் திட்டு திட்டாக முறுக்கேறிய ஒரு இளைஞன் வழிநடத்தினான்..

வயசுக்கு வந்த புள்ளைகல்லாம் சந்தியாகப்பரை விட இவனைத்தான் பார்த்துச்சு.. கூட்டத்தில் நின்ற செல்வியை அவன் பார்வை நிலைகுத்தாமல் கடந்து சென்றது.. சப்பரத்தின் பின்னாலயே சென்று கொண்டிருந்தாள் செல்வி.. மாதாவே.. மாதாவே.. அவன் என்னை திரும்ப பார்க்கனும்.. வேண்டிகொண்டே போனாள் ..

ரொம்ப தூரம்வரை நேராக சென்றது சப்பரம்.. செல்வி தன் நெற்றியில் சிலுவை வரைய ஆரம்பித்தாள்..
பிதா சுதன் இஸ்பிரித்து சாந்து நாமத்தினாலே..
சப்பரம் டக்கென திரும்பி எதிரே செல்லும்போது மீண்டுமாய் அவன் பார்வை அவள்மீது பட்டது.. கண்களில் மின்னலாய் இறங்கிய அவன் பார்வை இதயத்தில் இறங்கி நிலைகுத்தி நின்றது செல்விக்கு..

ஆமென் ....
...... தொடரும் ......
- சாம்ஸன் பர்னாந்து 

அலைகளின் மைந்தர்கள் - 18

புள்ள பெத்தவங்களுக்கு இடிமருந்து கொடுப்பதற்கு அதற்கான மருந்து பொருட்களை (ஒமம், சதகுப்பை, வசம்பு, வால்மிளகு, கருஞ்சீரகம், அரிசிதிப்பிலி, பெருங்காயம், சுக்கு, மஞ்சள், கருப்பட்டி, நல்லெண்ணெய்) உரலில் போட்டு இடித்து கொண்டிருந்தாள் மாரியம்மா..

தன் மனைவி சலேத்மேரியோடு மாரியம்மா வீட்டிற்குள் நுழைந்த சூசை.. எதுக்கு என் மகள்ட்ட சலேத்மேரி அண்ணன் மகனை கல்யாணம் கட்டாதேன்னு சொன்ன.. கோபத்தோடு கேட்ட சூசையிடம்..

உங்களுக்கு அவனை பத்தி தெரியுமா? எனக்கு அவனை பத்தி தெரியும்.. தெனமும் கள்ளு குடிச்சுட்டு பனை மரத்து கீழே படுத்து கெடப்பான். அவனுக்கு வேற தப்பான பழக்கம்லாம் இருக்கு.. நான் உங்கள்ட்ட சொல்லமாட்டேன்.. நம்ம மகளை அவனுக்கு கட்டி கொடுக்க மாட்டேன். கல்யாணத்துக்கு அப்புறம் திருந்திருவான்க்கா என்ற சலேத்மேரியிடம்..

சின்ன வயசுல மோசமா திரியுறவன், கல்யாணம் முடிஞ்ச பிறகும் அப்படித்தான் இருப்பான் என்ற மாரியம்மாவிடம்..

என்னடி..பெத்தவ சொல்றா.. நீ ஏன் கேட்க மாட்டேங்கிற.. கோபத்தில் சூசை கண்ணத்தில் ஓங்கி அறைவிட குப்புறபோய் மணலில் விழுந்தாள் மாரியம்மா.
ரெண்டு சுருக்கு பையை விரிச்சு அதிலிருந்த தங்க ஆபரணங்களை சலேத்மேரியின் சேலை மடியில் அள்ளி போட்டு இதை கொண்டு போ.. இது எல்லாம் நம்ம மகளுக்கு நான் சேர்த்து வச்சது. என்னை அடிச்சாலும் கொன்னாலும் அவனுக்கு நம்ம மகளை கட்டி கொடுக்கமாட்டேன். மாரியம்மாவின் ஆக்ரோஷத்தை பார்த்து ..

மாமா இன்னொரு நாள் பேசிக்கிறுவோம். வாங்க போவோம் தன் கணவன் சூசையை கூட்டி சென்றாள் சலேத்மேரி ..

வீட்டிற்குள் நுழையும் போதே தன் மகள் குழந்தை தெரஸ் அழும் சப்தம் கேட்டு பதறிபோய் உள்ளே போனாள் சலேத்மேரி ..

மச்சான் போதைல வீட்டுக்குள்ள வந்து நீதான் என் பொண்டாட்டின்னு சொல்லிட்டு போறாக.. எனக்கு கல்யாணமே வேண்டாம்மா.. நான் அம்மாங்களா போயிர்றேன்.. வேம்பாருல உள்ள மடத்துல என்னை சேர்த்து விட்டுறுங்கன்னு காலை பிடித்து கதறிய மகளை பார்த்து.. அவனுக்கு கட்டி குடுக்ககூடாதுன்னு கணவனும் மனைவியும் அப்பவே முடிவெடுத்தார்கள் ..

எதுக்கு மாமா அவுகள அடிச்சிய.. கைல ஒன்னு வயித்துல ஒன்னு இருக்கும் போது நம்ம மகளை அவுகதானே வளர்த்தாக .. அந்த உரிமைல சொல்றாக.. இப்ப எதுக்கெடுத்தாலும் ரொம்ப கோபப்படுறிய.. போய் சமாதானப்படுத்திட்டு வாங்க.. தன் கணவனை மாரியம்மா வீட்டிற்க்கு அனுப்பி வைத்தாள் சலேத்மேரி ..

நான்தான் அவனுக்கு கல்யாணம் கட்டி கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்ல.. மறுபடி எதுக்கு அழுகுற.. தன் மடியில் தலைவைத்து படுத்து அழுது கொண்டிருந்த மாரியம்மாவை அதட்டினான் சூசை.. வயசானவுடனே கோபம் பொத்துக்கிட்டு தான் வருது.. எழுந்து போய் அடுப்பை பத்த வைத்தாள்..

சாப்பிட்டு முடித்து கிளம்பியவனிடம்.. என்னங்க.. என்னமோ நடக்க போறது மாதிரி நெஞ்சு படபடன்னு அடிக்குது பயமாயிருக்கு.. நான் தூங்கின பிறகு நீங்க போங்க.. மீண்டும் மடியில் படுத்து அவன் தொடைகளை தன் இரு கைகளாலும் இறுக்கி பிடித்திருந்தாள் மாரியம்மா..

மீன்பாடு சரியில்லாததால் ஒருவாரமாக எந்த கட்டுமரமும் கடலுக்கு செல்லவில்லை.. அதிகாலையில் தன் மகன்களை எழுப்பிய சூசை.. நாளைக்கு கனத்த நாளு (அமாவாசை) எப்படியும் இன்னைக்கு பாடுவரும். நல்லதண்ணி தீவை நெருக்கி பாருக்குள்ள போக வேண்டாம்.

சேத்துக்கால்ல இழுப்போம்னு சொல்லி தன் மகன்களை கடற்கரைக்கு கூட்டி சென்றான் சூசை. அப்பா நீங்க கடலுக்கு வரவேண்டாம் என்று சொன்ன தன் மூத்த மகன் இருதயராசாவை அதட்டி.. அப்பா சாகுற வரைக்கும் கடலுக்கு வருவேன் ஏறு.. மரத்துல தன் மூன்று மகன்களோடு கடலுக்கு சென்றான் சூசை ..  கொண்டுவந்த ரெண்டு ஒமலும் மீன்களால் நிறைந்திருந்தது..

நான் பெரிய கம்மாருகாரண்டா ..

தன் அப்பா தன்னை பார்த்த பார்வையிலே புரிந்து கொண்டான் இருதயராசா.. கட்டுமரம் கரையை நெருங்கும் போது கச்சான் காத்து ரொம்ப ஒரமா இருந்துச்சு.. மார்சா (அலை) கூட கெடக்கு.. ரொம்ப கவனம்னு சூசை சொல்லும் போதே.. மரம் குறுக்க ஆடியது..

தம்பீ..தொளவையை போட்டு மரத்தை நேர்க்கட்டுன்னு இருதயராசா சொல்லி முடிக்குமுன் ஒங்கி வந்த மார்சா அப்படியே கட்டுமரத்தை புரட்டி போட்டது.. தண்ணீருக்குள்ளிருந்து எழுந்த சூசை தன் மகன்கள் மூன்று பேரும் கரையை நோக்கி நீந்தி கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருக்கும்போது.. மார்சாவில் புறண்டு வந்த கட்டுமரம் சூசையின் பின்னந்தலையில் ஒங்கி அடிக்க... நீருக்குள் மூழ்கினான் சூசை.

அப்பா.. அப்பா.. இருதயராசா தன் தம்பிகளோடு ஏங்கி ஏங்கி அழுதவாறு கடற்கரையெங்கும் தேடி கொண்டிருந்தான். சூசை கரையேறவேயில்லை.. சூசை உடல் கடற்கரைல அடஞ்சு கெடக்குன்ன அதிகாலையில் ஊரெங்கும் செய்தி பரவியது.. அவனின் உடலை கிடத்தி பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருக்கும் போதுகூட சலேத்மேரியின் கண்கள் மாரியம்மாவை தேடியது..

துஷ்டி வீட்டுக்குள் மாரியம்மாவை எங்குமே கானோம்.. பொழுது சாஞ்சவுடனே அடர்ந்த பனைமர கூட்டத்திற்குள் புதைக்க பட்டிருந்த தன் அப்பா கல்லறைக்கு விளக்கு வைக்க போன இருதயராசா.. கல்லறையில் குவித்து வைத்திருந்த மணல் மேல் ஒரு பெண் குப்புற படுத்திருப்பதை கண்டு ஓடிபோய் தலையை திருப்பி பார்த்தான்..

மாரியம்மா

வாயிலிருந்து இரத்தம் வெளியேறி உறைந்து போய் இருந்தது.. முகமெல்லாம் ஈக்கள் மொய்க்க இறந்து கிடந்தாள் மாரியம்மா.. கல்லறைக்கு அருகில் அரளி செடிகள் பூத்து குலுங்கி கிடந்தது.. ஒரு காதல் தேவதையின் எரியூட்டப்பட்ட சாம்பல் மூக்கையூரிலுள்ள மரம் செடி கொடி அனைத்திலும் அடர்ந்து படர்ந்து கிடந்தது..  
....... தொடரும் ......
- சாம்ஸன் பர்னாந்து 

அலைகளின் மைந்தர்கள் - 17



இருபத்தைந்து வருடங்கள் கடந்திருந்தது.......

ஆண்டவரை நேரடியா பார்த்து மூக்கையூர் பங்கு விஷயமாக சில கோரிக்கைகள் சொல்லனும்னு கிளம்பி போக நெனச்ச சந்தியாகப்பர் போன தடவை தான் சொன்னதை கடவுள் எதையுமே காதுல வாங்கல.. அதுனால இந்தமுறை சிபாரிசுக்கு தன் உடன் பிறந்த சகோதரர் யோவானையும் சேர்த்து கூட்டிட்டு போவோம்னு முடிவெடுத்தார்.. என்னை யாருமே மகிமை படுத்துவதில்லை. இயேசுவுக்கு நெருக்கமான சீடர்னு சொன்னானுக.. நற்செய்திலாம் எழுதியிருக்கேன். திருச்சபை கூட என்னை கண்டுக்கல. புனிதர் பட்டம் கொடுத்ததோட என்னை ஊத்தி மூடிட்டானுவ.. உனக்கு தான் உலகம் முழுவதும் ஆலயங்கள்.. உன்னை தான் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள். நீ சொல்லி கேட்காததையா நான் சொல்லி கேட்டுறப்போறாரு ஆண்டவரு..

நான் வரல.. என்று சொன்ன தன் சகோதரர் யோவானை சமாதானப்படுத்தி அவரையும் கூட்டி சென்றார் சந்தியாகப்பர்.. அண்ணன் தம்பி ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கியலே.. என்ன விஷேசம்னு கேட்ட கடவுளிடம்..

ஒன்னும் பெருசா இல்ல ஆண்டவரே.. எனக்கு பெரியவீடு கட்டி தர்றம்னு சொன்னிய.. அதுவும் செய்யல இப்ப மூக்கையூர் ஆலயத்தை தரம் உயர்த்தியாவது தாங்க என்றார் சந்தியாகப்பர்..

தரம் உயர்த்துறதுன்னா.. கடவுள் புருவத்தை உயர்த்த..

ஆண்டவருக்கு இப்ப உள்ள தூய தமிழ் வார்த்தை தெரியாதுல.. வேற ஒன்னுமில்ல ஆண்டவரே மூக்கையூர் தனி பங்காக மாறனும்...
கடவுள் கண்ணைமூடினார்..

மூக்கையூரின் முதல் பங்குகுரு கூட்டப்பனையை சேர்ந்த ஜோப்டீரோஸ். அவன் அப்பனே பிறக்க இன்னும் பத்து வருஷம் இருக்கு.. கண்ணை திறந்த கடவுள் சந்தியாகப்பரிடம் இன்னும் அறுபது வருஷம் பொறுத்துக்க.. அதுவரைக்கும் நான் சொன்ன வேலையை மட்டும் பாரு ..

உத்தரவு ஆண்டவரே.. சகோதர்கள் இருவரும் திரும்பி செல்லும் போது சந்தியாகப்பர் ஏதோ முனங்குவது மாதிரி தெரிஞ்சுச்சு கடவுளுக்கு.. எதற்கெடுத்தாலும் பொசுக் பொசுக்னு ஓடி வர்றான்... இவன் வர்ற குதிரை காலை ஒடச்சு விட்டாத்தான் ஊர்லயே இருப்பான் போல..கடவுள் நினைத்தார்.

தன் சிறு வயதிலிருந்தே தன் அம்மாச்சி பிரசவம் பார்க்க செல்லும் வீடுகளுக்கெல்லாம் ஒத்தாசைக்கு (உதவி) சென்ற மாரியம்மா அவள் அம்மாச்சி செத்த பிறகு அந்த பகுதியில் பிரபலமான மருத்துவச்சியாக மாறி போயிருந்தாள். பிரசவம் பார்க்க இரவில் கூட அவளை மாட்டுவண்டியில்அழைத்து செல்லவார்கள். வெகுமதியாக பத்து ஆழாக்கு அவுச்ச நெல்லும், வேம்பாறு வண்ணப்பெட்டி நிறைய கருப்பட்டியும் பெரும் அளவுக்கு மதிப்புமிக்கவளாக மாறிப்போயிருந்தாள் மாரியம்மா.. கழுத்தில் தாலிகயிறு தொங்கியதால் பிரசவத்திற்க்கு செல்லும் இடமெல்லாம் அவளை தாயாகவே மதித்தார்கள்...

சூசையின் மனைவி சலேத்மேரியின் முதல் பிரசவம் மட்டுமே அவள் அம்மாச்சி பார்க்க.. மற்ற ஏழு குழந்தைகளுக்கும் மாரியம்மாவே பிரசவம் பார்த்தாள். கடைசி குழந்தை பிறந்து கண்விழித்த சலேத்மேரி.. மாரியம்மாவை கூப்பிட்டு அக்கா.. நானும் எட்டு புள்ள பெத்துட்டேன்.. நீங்க இதுவரைக்கும் என்னட்ட எதுவுமே வாங்குனதில்ல... கேட்டதுமில்ல...
நான் எது கேட்டாலும் தருவியா..?

புள்ள பெத்த வலியையும் தாண்டி எதுனாலும் தர்றேன் என்றாள் சலேத்மேரி..

சிரித்து கொண்டே என் புருஷனை என்னட்ட தர்றியா என்றாள் மாரியம்மா..

சரிக்கா.. என்றாள் சலேத்மேரி.

அவளின் பதிலை கேட்டு அதிர்ந்து போனவளிடம்..
இந்த நெரஞ்ச வாழ்க்கை நீங்க எனக்கு போட்ட பிச்சை என்றவள்.. இத்தன வருஷமா மாமாவுக்கும் உங்களுக்கும் என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியும்..
தினமும் அவுக உங்களை பார்க்க வருவாக.. ஒருவேளை சோறு உங்க கையால சாப்பிடனும் கொஞ்சநேரம் நீங்க மாமா மடியில தொடையை இறுக்கி பிடிச்சுட்டு தூங்குவிய..

நீங்க முழிக்கிற வரைக்கும் மாமா அப்படியே உட்கார்ந்திருப்பாக.. இதுதானே இன்னை வரைக்கும் நடக்குது.. இன்னும் எத்தன வருஷம் ஆனாலும்அது மட்டும் தான் நடக்கும். நான் என்னை நம்புறத விட நீ என்னை அதிகம் நம்புற.. மாமாவை உங்களவிட அதிகம் நம்புவேன்க்கா..

தரையில் படுத்து கிடந்த சலேத்மேரியின் தலைமுடியை வருடியவாறு.. நான் சாகுறவரைக்கும் உன்னுடைய இந்த நம்பிக்கை மட்டுமே எனக்கு போதுமென்றவள்..

என் பூர்வீக சொத்து நான் வாழுற பெரிய வீடு நான் வாங்கிய நிலம் நகைகள் எல்லாமே என் புருஷனுக்கும், நம்ம புள்ளைகளுக்கும் தான். நான் எதுக்கு உன்னட்ட கூலி வாங்கனும்..

எழுந்து போன மாரியம்மாவை கண்ணில் நீர் மல்க பார்த்து கொண்டேயிருந்தாள் சலேத்மேரி ..

சூசையும் அவனுடைய புள்ளைகளும் சாப்பிடுவதற்க்கு வீட்டுக்குள் வட்டமா உட்கார்ந்து இருந்தார்கள்.. கேப்பை களியை தட்டு நெறைய வச்சு, அகப்பையால நடுவுல அகலமா குழி தோண்டி அதுக்குள்ள சுடசுட மீன் கொழம்ப சலேத்மேரி ஊத்தி கொடுக்க, நாலாவதா பொறந்த ஒத்த பொம்பளபுள்ள பதினஞ்சு வயசு முடிஞ்ச குழந்தைதெரஸ் எல்லோருக்கும் சாப்பாட்டு தட்டை தூக்கி கொடுத்தாள்.. அம்மா என்று தன் மூத்த மகன் கூப்பிட... என்னடா என்று சலேத்மேரி சாப்பிட்டவாறே கேட்டாள்.

அப்பாவை நாளைக்கு கடலுக்கு வரவேண்டாம்னு சொல்லுங்கத்தா..

அணியத்துல (கட்டுமரத்தின் முன் பகுதி) அப்பாவால நிக்கமுடியல. பிந்தலைக்கு (பின்பகுதி) வாங்கன்னு கூப்பிட்டா வரமாட்டேங்கிறாக. ரொம்ப தள்ளாடுறாக. நாளைக்கு அப்பாவை இறக்கி விட்டுட்டு தம்பியை (இன்னும் 12 வயசு முடியல) கடலுக்கு கூட்டிட்டு போறோம்னு சொன்னான் சூசையின் மூத்த மகன் இருபத்திரெண்டு வயதுடைய இருதயராசா...

....... தொடரும் ....
- சாம்ஸன் பர்னாந்து

அலைகளின் மைந்தர்கள் - 16


கல்யான பறை இசைக்க திருமண வீடு களை கட்டியிருந்தது. குருத்தோலை தோரணங்கள் கல்யாண பந்தலை நிரப்பியிருக்க... மணமகள் சலேத்மேரியின் அண்ணன் பிலேந்திரன் மணமகன் சூசையை கையை பிடித்து அழைத்து பந்தலுக்கு கூட்டி வந்தான்.. மாப்பிள்ளைக்கு சிலுவை போடுங்கப்பா.. ஒரு பெரியவரின் குரலை தொடர்ந்து முழங்காலிட்டிருந்த மணமகனுக்கு அனைவரும் நெற்றியில் சிலுவை வரைந்தார்கள்..

மாப்பிள்ளையை வாசலில் நிறுத்தி பந்தல்கால் நட்டி ( மூகூர்த்தகால் ).. இவர்கள் கிறிஸ்துவத்திற்கு மாறியபின்.. சொல்லப்படும் ஆசரியம் (மந்திரம்) சொல்லப்பட்டது...
சுத்த திருச்சிலுவை தூய அடையாளத்தால்...
சத்துருவை நீக்கி தாழ்பணியும் நித்தியனே..
எங்கள் பிதா சுதன் பரிசுத்த ஆவியின் நாமத்தினிலே ..
ஆமென்..

மூக்கையூரில் இவர்களுக்கு துணிகளை வெளுக்கும் சலவைகாரர்கள் மணமகன் நடந்து போகும் பாதையெங்கும் தரையில் மாத்து விரித்தார்கள். பாண்டிய அரசகுடி திருமணங்களில் பட்டு கம்பளம் விரிக்கப்படும். இங்கு சலவைக்கு வரும் புது துணிகளை வெள்ளாவியில் வைத்து வெளுத்து மாத்தாக பயன்படுத்தினார்கள்..

மணமகன் குடைசுருட்டியின் கீழ் தரையில் விரித்திருந்த மாத்தை விட்டு அகலாமல் கம்பீரமாக நடக்க தொடங்க பறை இசையோடு ஊர்வலம் கிளம்பியது.. கல்யாண கட்டியம் காதை பிளந்தது..
அயோத்தி நாட்டை விட்டு பாண்டிய நாட்டிற்க்கு அதிபதியாய் வந்த பங்கமில்லா தங்கமே.. ஒரு பெரியவர் கட்டியம் கூற..
இளைஞர்கள் உரத்த குரலில் "பராக்"  என்றார்கள்..

கடலுக்கு அரசன் பரதகுலபாண்டியன் 
திருமுடி சூடி கொழுவீடு விட்டு தெருவீடு வாறார்.. பராக்....

உத்திரகோசமங்கை கல்தேர் ஒட்டிய  
அஸ்தினாபுரத்து மாவீரன் தெருவீதி வாறார்.. பராக் ..

சுந்தர பாண்டியனே... 
மீன்கொடி கண்டவனே ..
வணங்காமுடியே ... பராக் .... பராக்...... 

மணமகன் ஊர்வலம் மணமகள் வீட்டை அடைந்தும் மணமகளுக்கு பெரியவர்கள் நெற்றியில் சிலுவை வரைந்து ஆசிர்வதித்து...

மணமகனும் மணமகளும் ஒருவர் பின் ஒருவராக நடந்து கோவிலை நோக்கி செல்ல..

மங்கையர்க்கரசியே..
பாண்டியனின் அரசியே...
தொல்குடி மன்னன் மகளே..
கடலுக்கு அரசியே..
மனைவி என பெயர் பெற போகும்
மங்கையர் செல்வியே..
எங்கள் குல கொடியே..
பராக்...

ஊர்வலம் கோவிலை அடைந்தது ..

அத்தனை நிகழ்சிகளையும் தன்னை மறைத்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மாரியம்மா பிரமித்து போய் நின்றாள்..

கோவிலுக்கு வடக்கு புறம் இருந்த வீடுகள் வடக்கு தெருவாகவும், தெற்கு புறம் இருந்த வீடுகள் தெற்கு தெருவாகவும் மூக்கையூரில் தெருக்கள் உருவாகியிருந்தது..

பந்தல் கூடிவிட்டபடியால் ஆங்காங்கு இருக்கும் உறவுகள் கல்யாண பந்தலுக்கு வரும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.. இரண்டு தெருக்ககளிலும் பறையடித்து தண்டோரா போடப்பட்து... எல்லோருக்கும் உணவு பறிமாறிய பின்.. மணமகளின் தந்தை இடுப்பில் துண்டை கட்டியவாறு..ஏதாவது குற்றம் குறை இருந்தாலும் என்னை மன்னிச்சு சாப்பிடுங்க.. என்று சொல்லியபின் தான் அனைவரும் சாப்பிட்டார்கள்...

இதுதான் கல்யாண விருந்தின் மரபு...

தொடர்ந்து இரண்டு நாட்களாக சூசையை பார்க்காததால்.. வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த மாரியம்மா.. இன்னைக்கு எப்படியும் தன் கணவனை பார்த்துடனம்னு அதிகாலையிலயே அங்காடி பெட்டியை தலையில் வைத்தவாறு கடற்கரை நோக்கி நடக்க தொடங்கினாள்...

வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கொண்டிருந்த சலேத்மேரியை பார்த்தவுடன் அருகில் சென்று.. கல்யாண பொண்ணு கோலத்துல நீ ரொம்ப அழகாய் இருந்த..
புதுபெண்ணின் கண்ணம் வெட்கத்தால் சிவந்தது.. சரி வர்றேன்னு சொல்லிட்டு கடற்கரை சென்றவள் ... தன் கணவனை அங்கும் இங்கும் தேடி கானாமல்.. தான் கொண்டுவந்த அங்காடிகளை கூட யாருக்கும் விற்காமல் சோர்ந்து போய் நடந்து வந்தவள்...

எப்படியும் தன் கணவனை இன்னைக்கு பார்த்துறனம்னு சலேத்மேரி வீட்டை கடக்கும் போது அருகில் சென்று எட்டி பார்த்தாள் மாரியம்மா.. பின்னாலிருந்து அக்கா மாமா வீட்டுக்குள்ள தூங்குறாக.. சலேத்மேரியின் குரல் கேட்டு வெலவெலத்து போனாள் மாரியம்மா..

கொட்டானிலிருந்த அங்காடிகள் கீழே விழுந்து மணலில் சிதறி கிடந்தது..

உங்கள் இருவருக்குமான உறவு எனக்கு தெரியும்..நேத்து நீங்க என் மாமா மடியில் படுத்து கிடந்து அழுதது வரை எல்லாம் எனக்கு தெரியும்..

எப்படி என்பது போல் கண்களை உயர்த்தினாள் மாரியம்மா ..

முதல்நாள் ராத்திரி உங்க ரெண்டுபேர் கதையைத்தான் விடிய விடிய எனக்கு சொன்னாங்க மாமா.. எனக்கு என் மாமாவை ரொம்ப பிடிக்கும்.. எனக்கு முன்பே தெரிஞ்சுறுந்தா என் மாமா வாழ்க்கையை கெடுத்திருக்க மாட்டேன்.. நான் எங்க ஊர் இடிந்தகரைக்கு திரும்ப போயிறுப்பேன்.. மாரியம்மாவின் கைககளை பிடித்து கொண்டு கலங்கிய கண்களோடு என்னை மன்னிச்சுறுங்க என்றாள்..

ஐயோ ...

அவுங்க அரசகுடி வாரிசு.. நான் பண்டம் விற்ப்பவள்.. நான் தகுதியே இல்லாதவள்.. நான் உன் வாழ்க்கையை கெடுக்கமாட்டேன்.. அவுங்களை விட்டு விலகி போய்றேன் என்ற மாரியம்மாவின் கைகளை இறுக்கி.. என் மாமாவின் ஒழுக்கம் எனக்கு தெரியும்.. அதுனால நான் உங்களை நம்புறேன். நீங்க இல்லைனா மாமா செத்துருவாங்க மாரியம்மாவின் கால்களை கட்டிபிடித்தாள் சலேத்மேரி.. இரண்டு பேரின் உடைகளும் ஏங்கி ஏங்கி அழுத கண்ணீரால் தெப்பலாக நனைந்திருந்தது.. 

வீட்டை கடந்து செல்லும்போது அக்கா என்ற கூப்பிட்ட சலேத்மேரியின் குரலுக்கு திரும்ப.... வீட்டுக்கு போய் சீக்கிரம் சோறு பொங்குங்க.. மாமா பசிதாங்க மாட்டாங்க. எந்திச்சதும் உங்க வீட்டுக்கு வர சொல்றேன் என்றாள் சலேத்மேரி..
......... தொடரும் .........
- சாம்ஸன் பர்னாந்து

Misionero con los Paravas


Cinco meses más tarde, se enteró Javier de que en las costas de la Pesquería, que se extienden frente a Ceilán desde el Cabo de Comorín hasta la isla de Manar, habitaba la tribu de los paravas. Estos habían aceptado el bautismo para obtener la protección de los portugueses contra los árabes y otros enemigos; pero, por falta de instrucción, conservaban aún las supersticiones del paganismo y practicaban sus errores... Javier partió en auxilio de esa tribu que "sólo sabía que era cristiana y nada más". El santo hizo trece veces aquel viaje tan peligroso, bajo el tórrido calor del sur de Asia. A pesar de la dificultad, aprendió el idioma nativo y se dedicó a instruir y confirmar a los ya bautizados. Particular atención consagró a la enseñanza del catecismo a los niños. Los paravas, que hasta entonces no conocían siquiera el nombre de Cristo, recibieron el bautismo en grandes multitudes. A este propósito, Javier informaba a sus hermanos de Europa que, algunas veces, tenía los brazos tan fatigados por administrar el bautismo, que apenas podía moverlos. Los generosos paravas, que eran considerados de casta baja, extendieron a San Francisco Javier una acogida calurosa, en tanto que los brahamanes, de clase alta, recibieron al santo con gran frialdad, y su éxito con ellos fue tan reducido que, al cabo de doce meses, sólo había logrado convertir a un brahamán. Según parece, en aquella época Dios obró varias curaciones milagrosas por medio de Javier.

Por su parte, Javier se adaptaba plenamente al pueblo con el que vivía. Con los pobres comía arroz y dormía en el suelo de una pobre choza. Dios le concedió maravillosas consolaciones interiores. Con frecuencia, decía Javier de sí mismo: "Oigo exclamar a este pobre hombre que trabaja en la viña de Dios: 'Señor no me des tantos consuelos en esta vida; pero, si tu misericordia ha decidido dármelos, llévame entonces todo entero a gozar plenamente de Ti '". Javier regresó a Goa en busca de otros misioneros y volvió a la tierra de los paravas con dos sacerdotes y un catequista indígena y con Francisco Mansilhas a quienes dejó en diferentes puntos del país. El santo escribió a Mansilhas una serie de cartas que constituyen uno de los documentos más importantes para comprender el espíritu de Javier y conocer las dificultades con que se enfrentó.


மொழி பெயர்ப்பு: 

ஐந்து மாதங்களுக்குப் பிறகு, கேப் கொமரோனிலிருந்து  (கன்னியாகுமரி) இராமேஸ்வரம், மன்னார் தீவு, இலங்கை வரை பரவர் என்ற பழங்குடியின மக்கள் வசிக்கிறார்கள் என்பதை புனித சவேரியார் அறிந்து கொண்டார். இவர்கள் அரேபியர்கள் மற்றும் பிற எதிரிகளுக்கு எதிராக போர்த்துகீசியர்களின் பாதுகாப்பைப் பெற ஞானஸ்நானத்தை ஏற்றுக்கொண்டனர்; ஆனால், எவ்வித சமய வழிகாட்டுதலும் இல்லாததால், அவர்கள் தமது மதத்தின் மூடநம்பிக்கைகளைப் பாதுகாத்து, தங்கள் தவறுகளைச் செய்தார்கள். 

புனித சவேரியார் அந்த பழங்குடியினரின் உதவிக்குச் சென்றார், "அவர்கள் கிறிஸ்துவர் என்று மட்டுமே தெரியும், அதற்கு மேல் எதுவும் அவர்களுக்கு தெரியாது." பரவர்களுக்கு சமயப்பணி செய்ய புனிதர் அந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார், தெற்காசியாவின் கடுமையான வெப்பத்தின் கீழ். சிரமம் இருந்தபோதிலும், அவர் சொந்த மொழியைக் கற்றுக்கொண்டார் மற்றும் ஏற்கனவே ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கு சமயத்தை கற்பிக்கவும், உறுதிப்படுத்தவும் தன்னை அர்ப்பணித்தார். குழந்தைகளுக்கு செபங்கள் கற்பிப்பதில் குறிப்பாக கவனம் செலுத்தினார். 

அதுவரை கிறிஸ்துவின் பெயரைக் கூட அறியாத பரவர்கள், திரளான கூட்டங்களில் ஞானஸ்நானம் பெற்றார்கள். இது சம்பந்தமாக, புனித சவேரியார் ஐரோப்பாவில் உள்ள தனது சபை சகோதரர்களுக்கு அறிவித்தார், சில சமயங்களில், ஞானஸ்நானம் அளிப்பதில் அவரது கைகள் மிகவும் சோர்வாக இருந்தன, அதனால் அவைகளை நகர்த்த முடியவில்லை. பரவர்கள் புனித பிரான்சிஸ் சவேரியாருக்கு அன்பான வரவேற்பை அளித்தனர், அதே சமயம் உயர் வகுப்பு பிராமணர்கள் புனிதரை மிகுந்த கவனத்துடன் கையாண்டனர், அவர்களுடனான வெற்றி மிகவும் குறைவாக இருந்தது, பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவர் ஒரு பிராமணரை மாற்றுவதில் மட்டுமே வெற்றி பெற்றார். அந்த நேரத்தில் கடவுள் புனித சவேரியார் மூலம் பல அற்புத செயல்களை வெளிப்படையாக செய்தார். 

  அவரது பங்கிற்கு, புனித சவேரியார் அவர் வாழ்ந்த ஊரில் முழுமையாகத் தங்கினார். ஏழைகளுடன் அவர் அரிசி உணவு சாப்பிட்டு ஒரு ஏழை குடிசையின் தரையில் தூங்கினார். கடவுள் அவருக்கு அற்புதமான உள்ளார்ந்த ஆறுதல்களை வழங்கினார். அடிக்கடி, புனித சவேரியார் தன்னைப் பற்றி இவ்வாறு கூறினார்: "கடவுளின் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யும் இந்த ஏழை கூக்குரலிடுவதை கேட்டருளும். ஆண்டவரே, இந்த வாழ்க்கையில் எனக்கு இவ்வளவு ஆறுதல்களைத் தர வேண்டாம்; ஆனால், உங்கள் கருணையினால் அவற்றை எனக்குக் கொடுக்க முடிவு செய்தால், தாராளமாகக் கொடுங்கள்; நான் உங்களை முழுமையாக அனுபவிக்க வேண்டும்." 

புனித சவேரியார் மற்ற சேசுசபைக் குருக்களைத் தேடி கோவாவுக்குத் திரும்பினார். பின்னர் இரண்டு சேசுசபைக் குருக்கள் மற்றும் ஒரு உள்ளூர் கணக்குப் பிள்ளைக மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமயப்பணிக்கு சென்று திரும்பிய பிரான்சிஸ்கோ மான்சில்ஹாஸுடன் மீண்டும் பரவர் நிலத்திற்குத் திரும்பினார். புனிதர் மான்சில்ஹாஸுக்கு தொடர்ச்சியாக கடிதங்களை எழுதினார், இது புனித சவேரியாரின் உணர்வைப் புரிந்துகொள்வதற்கும் அவர் எதிர்கொண்ட சிரமங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் அவைகள் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.

துருப்பிடித்துப்போன துறைமுகம்


தூத்துக்குடிக்கு தெற்கே...
துயரத்தின் பிடியில்
அலைகடலின் அரவணைப்பில்
கருவேல மரங்களின் கண்காணிப்பில்

இன்றைய தேதியில்
இதுதான் கொற்கை...
ஆமாம்
சரித்திரத்தின் பக்கங்களில்
தன் பெயரை
பொன் எழுத்துக்களால்
பதித்துக்கொண்ட
இந்த
துறைமுகம்
இன்று
துருப்பிடித்துக் கிடக்கிறது..!
கால மாற்றத்தில்
காற்று
கடல் மணலை இறக்குமதி செய்ய
அலைகள்
இந்த துறைமுகத்தையே
ஏற்றுமதி செய்துவிட்டன.. ?
கிழக்கு திசையில்
சற்றே நகர்ந்தால்
கொற்கை நகரம்
ஒரு
குக்கிராமத்தைப் போல
தலைகுனிந்து கிடக்கிறது. .
மாட மாளிகைகளும் இல்லை
வானத்தை வருட கோபுரங்களும் இல்லை.
எங்கு நோக்கினும்
ஏழை ஜீவன்களும்
எருமை மாடு களும்தான்...
ஊருக்கு நடுவில்
பொற்கை செழியன் கட்டிய
கொற்கை தேவி கோயில்
ஆரவாரமில்லா விட்டாலும்
அர்ச்சனை மட்டும்
அன்றாடம் நடக்கிறது.
அதன்
அருகே இருக்கும்
முருகன் கோயிலின்
சுற்றுச்சுவர்களை
சுற்றிப் பார்த்தால்
அச்சில் விட முடியாத
அசிங்க வார்த்தைகள்
எல்லாம்
இக்கால மன்னர்களின்
கரிக்கட்டை கல் வெட்டுக்கள்தாம்.
அன்றும்
அலைகள் அடித்து
கிழித்துப் போட்ட
பூம்புகாரை
புதுப்பித்து
புது வடிவம் தந்ததோடு
சங்க தமிழுக்கு
குங்குமத்தில் பொட்டு வைத்த முதல்வரே..
வங்கக் கடலோரம்
வாழுகின்ற வரலாற்றை
வாட விடலாமா?
இந்த முறை
உங்களை
கோட்டைக்கு கொணர்ந்ததும்
ஒரு துறைமுகம்தானே..!
அதற்காகவேனும்
கொற்கைக்கு நீங்கள்
குடமுழுக்கு நடத்தலாமே?
- அருள்செழியன்
ஜூனியர் விகடன், மே, 1989.
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com