Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

நெய்தலில் பூத்த மந்திர மாலை


இராசாதிராச, இராசகுல சிம்ம, வீரபாண்டிய கட்டபொம்மு மகாராசா வருகிறார். பராக்! பராக்!! பராக்!!! என்ற வீரகட்டியம் விண்ணில் முழங்க தாரதப்பட்டை முரசு அதிர கொம்புகள் ஊதப்பட்டது.

ரதகஜ தூரகபதாக்களுடன் படை சூழ, மகாராசா திருச்செந்தூர் வேலவனை பௌர்ணமியில் கண்டு தரிசிக்க திருயாத்திரை புறப்பட்டார் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையிலிருந்து.

கரிசல்காட்டு நரிகள் சலசலப்புக்கு ஒதுங்கின. கரிச்சான் பறவைகள் கூட்டைவிட்டு கிறீச்சீட்டு வானில் பறந்தன. இராமநாதபுரம் சமஸ்தான பெருநாழி ஊர் அருகில் உற்ற காடல்குடியின் கண்மாய் அருகில் படைகள் கூடாரமிட்டன. பதர்வெள்ளையின் வெண்புரவி தீவிரமாக மன்னவனின் கூடாரம் வந்து நின்றது.

இளையவர் ஊமைத்துரையிடம் செய்தி பரிமாறப்பட்டது. பேறுகால வேதனையில் ஊமைத்துரையின் மனைவி அல்லல்படுவதாக மன்னவனிடம் பகரப்பட்டது. கட்டபொம்மு மகராசா மருத்துவச்சிகளிடமும், தேர்ந்த செவிலியரிடமும் உசாவினார். குழந்தை குறுக்காக கிடப்பதால், தாய் சேய்க்கு ஆபத்து என்று பதறினார்.

பதினெட்டு பட்டியிலும் குழந்தைப்பேறு சிகாமணி நெய்தல் நிலத்து சிரோண்மணி மூக்கம்மா என்று அறிந்தனர். அம்மணியை அழைத்து வர வெள்ளையத்தேவன் தான் புரவியுடன் காயம்புதேவன் வழோகாட்ட, உச்சனம் ஊர்வழியாக நெய்தல் நிலத்து வேம்பார் துறை நோக்கி விரைந்தான்.

வேம்பார் துறையில், மாடி வீட்டு முன் நின்றான். வெண்புரவி தான் கால்களைத் தூக்கி வீரியமுடன் கனைத்தது. மாடத்திலிருந்து நெய்தல் நில கன்னிகை வெளிவந்தாள். பருத்தி நூலால் நெய்யப்பட்ட மிருதுவான ஆடை அணிந்திருந்தாள். அடங்கா கார் குழலை தும்பைப் பூ போன்ற சிறுவலை நூலில் நெய்யப்பட்ட குல்லாவில் அடக்கிக் கட்டியிருந்தாள். சொர்ணத்தாலான இருமீன்கள் காதுகளில் கழன்று பாம்பாடி ஜொலித்தது. ஆணி முத்துவாலான மூக்குத்தி சுடரிட, கழுத்தில் முத்துக்களால் சோபிக்கப்பட்ட சிலுவை மாலை, நெஞ்சில் துவண்டிட தோன்றினாள் மூக்கம்மா வென்ற செபமாலையம்மாள்.

அவள் வதனம் தங்க தகடாய் மிளிர்ந்த்து. அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடன் மற்றுமொறு அழகையும் நெய்தல் நிலத்து கிழத்தியிடம் கண்டான் வெள்ளையத்தேவன்.

அகன்ற கயல்விழிகளில், கூறிய வீர ஒளி கனன்று பாய்ந்து, கேள்வி குறியெழ நயனம் புரிந்த கோலம். அஞ்சா நெஞ்சன் பரதர் வெள்ளையே பரவசம் கொண்டார். தான் பதற்றம் செப்பினார்.

பெரும் சங்கு குவளையில் மோர் அமுது பருக பரிமாறினாள் நெய்தல் நிலத்துக்காரி. தன் வீட்டு வில்வண்டியில் தூரிதகால மைலக்காளைக்களை பூட்டப் பணித்தாள். வேம்பையன் தட்டிக் கொடுக்க, வில்வண்டி வேகமெடுத்தது. புரவிகளின் வேகம் புறமுதுகிட காளைகள் சீறிப் பாய்ந்தன.

உச்சனத்தை அடைந்ததும், பழகாத தூரம் கம்பம் புல் காடு செறிந்திருந்தது. ஆறு அடி உயரம் வளர்ந்து தலை கனத்து செழித்திருந்தது. ஒற்றையடிப் பாதையுள்ள புஞ்சைக் காட்டில், மூன்று பாதை அமைத்துப் புகுந்தன மைலக்காளைகள். வேம்பன் செல்லமாக முதுகில் தடவ, கூச்சமுற்று, துள்ளி குதித்து, மூர்க்கமுடன் வழி உடைத்து, தாவியது தூரிதகால மைலக் காளைகள்.

சில மணி துளிகளில் காடல்குடியில் வந்திறங்கினாள் மூக்கம்மாள் வென்ற செபமாலையம்மாள். எங்கும் ஆரவாரம் விண்ணைத் தொட்டது. பசுமை கம்பங்கதிர்களை கொட்டி, தண்ணீர் காட்டினர் காளைகளுக்கு. ஊமைத்துரையின் மனைவி மாளவொன்னா வேதனையில் துடித்தாள். குழந்தை குறுக்கில் சுகமாகப் படுத்துக்கிடந்ததே உச்ச வேதனை.

பதற்றமின்றி வந்தாள் மூக்கம்மா, பெண்ணைப் பார்த்துப் புன்னகைத்தாள்.. சிறு புட்டியிலிருந்து, வேப்பெண்ணையை எடுத்து அடிவயிற்றில் பூப்போலத் தடவினாள். தன் கழுத்திலிருந்த முத்து செபமாலையைக் கழற்றி, பெண்ணின் அடிவயிற்றில் பதித்து, சில கணம் கண்மூடி முணுமுணுத்தாள். உடைந்தது தண்ணீர் குடம் . குழந்தை திரும்பியது. குலவை சத்தம் கும்பிட மீனாட்சி நழுவி வந்தாள் பூமிக்கு. ஆனந்த கரக்கோசம் விண்ணைத் தொட்டது.

மந்திரம் கால, மதி முக்கால் என்று முணுமுணுத்தாள். செவிலி செவிட்டம்மா. தொப்புள் கொடி அறுத்த மூக்கம்மா வதனத்தில் சூரிய பிரகாசம் மங்கியது?

கட்டபொம்மு மாகராசா பெரும் கரிசனத்துடன் மூக்கம்மாவை அணுகினார். எல்லோரும் ஆனந்தமாக இருக்க, தாய்மட்டும் வருந்துவது ஏனோ? வென்று வினாவி மூக்கம்மாவை உற்று நோக்கினார். ராஜாக்களுக்கு மட்டுமே உரித்தான ஆணி முத்து மூக்கில் ஒளிரிட, கழுத்தில் முத்துக்களால் சோபித்த சிலுவை மாலையைக் கண்டு manthira மாலையோ? வென்று வினவினார்.

பரிசாக என்ன வேண்டும் தாயே? என்று தயாளமுடன் உருகினார். பரிசுபெற மறுத்தாள் மூக்கம்மா! குழந்தை மாலை சுற்றி பிறந்ததால், அது குலத்துக்கு ஆகாது என்று நிமித்திகம் கூறினாள் மூக்கம்மா வென்ற செபமாலையம்மா.

மன்னவரோ, ஒரு கணம் திகைத்தார். மூக்கம்மா, கவலை கொள்ளாதே, எம் குல சக்கம்மா, எமை காப்பாள் என்று பொருமினார். பல ஏக்கர் புஞ்சை நிலங்களை பரிசாக கொடுத்தான் மன்னவன். ஊமைத்துரை நன்றியுடன் தாயை நோக்கினான்.

திருச்செந்தூர் முருகனை தரிசிக்காமல், திரும்பினார் படை பரிவாரங்களுடன், பாஞ்சாலங்குறிச்சி சக்கம்மாவை தரிசிக்க!

கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்பதால், வானளாவிய வேப்பமரம் குடை பிடிக்க, புனித மேரி ஜெபமாலையாம்மாளின் குழந்தை ஏசுவை கையில் தூக்கி நினைத்ததை நிகழ்த்தும் அற்புதன் புனித அந்தோணியார், காடல்குடி கோவிலில் குடியமர்ந்தார்.

நெய்தல் வணிகர் திரு. மிக்கேல் பாக்கியம் கர்வாலோ காடல்குடி நிலக்கிழாராக இருந்து, புனிதரின் கோவிலை புண்ணியப்படுத்தினார்.

மணல்பாடும் மணவையம்பதியின் தூய வளனார் உயர்நிலைப் பள்ளி மற்றும் விடுதியின் காப்பாளராக இருந்து நெய்தல் நில இளம் பயிர்களுக்கு உரமூட்டி பண்படுத்திய ஆலந்தலை மண்ணின் ஆணி முத்து, எம் குல ஐயன் வணக்கத்திற்குரிய சற்குருபிரசாதி சுவக்கின் சாமிகளுக்கு மணவை மாணவனின் நெய்தல் நில, மந்திர மாலையினை ஜெபித்து சமர்ப்பிக்கிறேன்.


- A. பிரசாதராஜன் விக்டோரியா

Source: Paravar  Malar 

PANDIYAPATHY


Forgotten valour: Pandiyapathy, the freedom fighter king of the Pearl Fishery Coast


(On the 268th birth anniversary of the fisherfolk leader, writers and historians have tipped their hat to the sacrifices of Parathavarma Pandian, also known as Pandiyapathy)


THOOTHUKUDI: The term 'unsung hero' has become stale from overuse. However, with a land that has witnessed as many riveting epochs as ours, scores of worthy heroes needless to say get overlooked. The Neithal Writers Movement invites our attention to one such leader -- Don Gabriel De Cruz Parathavarma Pandian.

Born on December 13, 1753, Parathavarma Pandian ascended to the throne succeeding Don Caspar Anthony De Cruz Vaz Victoria Parathavarma Pandian in 1779, and ruled over the Pearl Fishery Coast till his death in 1808.

Parathavar or the Paravar is a fishermen community, which was converted to Roman Catholicism by the Portuguese in 1532-34 upon a promise to protect them from the Arabs, who were then trying to conquer the Pearl Fishery Coast. The flourishing pearl fishing and trade in the region had invited unnecessary clashes off the coast.

Ally of the British initially

Parathavarma Pandian had initially joined hands with the British forces to defeat the Dutch forces, who controlled the beach road in the 1780s. However, soon he associated with Panchalankurichi Poligar ruler Veerapandiya Kattabomman to fight against the English rule.

Tamil writer and coordinator of the Neithal Writer Movement Neithal Anto said Parathavarma Pandian was also known as 'Pandiyapathy'. "He had a good relationship with Kattabomman, who sailed to far-off destinations in Pandiyapathy's ship. Following a defeat in the first Poligar War, the Britishers hanged Kattabomman in 1799 and imprisoned his younger brother Oomaithurai at Palayamkottai prison. Oomaithurai managed to escape from prison in February 1801. "It was Pandiyapathy who sheltered and protected Oomaithurai at the nearby Pandian Theevu island after the prison break," Anto said.

Secret meeting to supply explosives

Pandiyapathy, Oomaithurai, Nagaraja Monigar of Tirunelveli and Mayilappan of Ramanathapuram held a secret meeting at Kadalkudi, and Pandiyapathy was entrusted with supplying explosives to retaliate against the British. "As promised, he brought explosives through his sources from Sri Lanka by sea," Anto said. Later, the British ordered the capture of Pandiyapathy, but the leader managed to give authorities the slip till his death at the age of 56 in 1808.

The then British General Collins had mentioned that they found guns and modern weapons at Panchalankurichi fort when they demolished it. Also, professor Rajaiyan of Madurai University had stated in his research book 'South Indian Rebellion' that the Paravar headman had not only joined the rebellion but also supplied guns, wall pieces and gun powder for the promotion of violent struggle.

Tiruchendur Murugan temple car

Pandiyapathy had also shared the traditional right to pull the rope of Tiruchendur Murugan temple car during carnivals. However, Catholic priests asked him to give up the right when he embraced Christianity, Mamannar Vanangamudi Parathar Peravai general secretary Roosvelt told TNIE. To follow the same tradition, Pandiyapathy later offered a golden chariot for the Our Lady of Snows Church in Thoothukudi, which was the head centre for the seven fishing jetties in 1806. Thus he was also called as "Thermaran", he added.

Upon his death, Pandiyapathy was buried in Thoothukudi, and his tomb is still preserved at the La Salle Higher Secondary School campus.

'Honour the memories'

The Neithal Writers Movement has urged the state government to recognise the freedom struggle of Parathavarma Pandian. They also want the beach road stretch between Trespuram and Roche Park to be named after Pandiyapathy. On the 268th birth anniversary of the fisherfolk leader, writers and historians have tipped their hat to the forgotten valour and sacrifices of Pandiyapathy.

* Neithal is a Sangam era literature based on land classification of sea and surroundings

Express News Service

கோகிலா


கோகிலா - 1977 அக்டோபரில் வெளியான கன்னட திரைப்படம். இந்த திரைப்படத்தை தயாரித்தவர் சிப்பிகுளம் என்ற பரதவ கிராமத்தில் இருந்து வந்து சென்னையிலும், இலங்கையிலும் தொழில் செய்து முன்னேறிய டி. மோட்சம் பெர்னாண்டோ அவர்கள், பாலு மகேந்திரா (இலங்கை தமிழர்) என்ற மாபெரும் கலைஞனை திரையுலகில் இயக்குனராக அறிமுகம் செய்தார்.

அதுமட்டுமின்றி கமல்ஹாசன் (தமிழர்), சோபா (மலையாளி) ரோஜா ரமணி (தெலுங்கு) ஆகியோர் கன்னடத்தில் அறிமுகம் ஆன முதல் திரைப்படம். பிரபலமான நடிகர் மோகன் (கன்னடர்) நடித்த முதல் திரப்படம். இசை சலில் சௌவ்த்ரி ( பெங்காலி). எவ்வளவு மொழி பேசுபவர்களை இணைத்திருக்கிறார் மோட்சம் பெர்னாண்டோ.

இதில் மோகன் தவிர யாருக்கும் கன்னடம் தெரியாது. ஆனால் கமல்ஹாசன் கன்னடத்தில் பேசி நடித்தார். இது ஒரு கிளாசிக்கல் திரைப்படம் தமிழில் ஓடுவது கடினம் எனக் கருதி கன்னடத்தில் தயாரித்தார் மோட்சம் பெர்னாண்டோ. ஆனால் என்ன அதிசயம் தமிழகத்திலும் 100 நாள் ஓடியது கோகிலா~ கன்னட திரைப்படம்.

இந்த திரைப்படம் பல தேசிய விருதுகளையும் வென்றது. இன்டர்நேஷனல் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. மேலும் இந்தி உட்பட பல மொழிகளில் தயாரிக்கப்பட்டது.



1978 – National Film Award for Best Cinematography (Black-and-white motion picture) at the 25th National Film Awards.

1978 – Best Screenplay from the Government of Karnataka for Balu Mahendra.

Thuppatti


Thuppatti used by Parava Catholic married women since long following the dress style of Mother Mary....That tradition was almost compulsory in Coastal area.. Unfortunately every women not in a position to purchase Thuppatti..

Hence they avoided attending Holy Mass.. Seeing this pitiyable condition Rev Fr Antony Suasainathar Fernando introduced First Mass for the poor woomen priorto to the sunrise.. Also he made it a point to prepare Thuppatti locally at UVARI and gave it free to the poor ladies.. 

In Sippikulam and Keelavaippar Villages use of Thuppatti was almost upto 1960 as far as I remember. It was made out of Long Cloth a thick fabric with Lace to decorate.

- Kalaban Vaz 


“Thupatti,” a traditional long white cloth which wraps the body from head to foot, leaving the face open. Mr Ali of Bismi Textiles (located in Dunlop street) shared with me that in the past, the full Thupatti was 12 metres long. The longer it was, the easier it was to wrap around the body. By the 1990s, the length of the Thupatti reduced to 8 metres and the version that is commonly used today is just 4 metres long.

While the 100% cotton 12 metre cloth known as “cambric” used to come from England, presently, the material is produced in Thailand and stitched in Singapore. Some forms of Thupatti are also produced domestically in India. You can still observe the full Thupatti being used in some parts of Tamil Nadu such as Lalpettai, Parangipettai and Nagapattinam to name a few. 

As not much studies have been done on this traditional attire, do share with us if you know more information!

-FNZB

Sources: J.P. More, “The Marakkayar Muslims of Karikal, South India,” Journal of Islamic Studies vol 2 no.1 1991.

உலக சாதனையில் புன்னைக்காயல்


1586 இல் அருட்பணி. அண்டிரிக் அடிகளாரால் புன்னைக்காயலில் முதன் முதலில் அச்சுக்கூடம் நிறுவப்பட்டது.. இந்த அச்சுக்கூடத்தில் FLOS SANCTORUM (அடியார் வரலாறு) என்ற நூல் அச்சிடப்பட்டது என்ற வரலாற்று உண்மையை "UNIVERSAL ACHIEVERS" BOOK OF RECORDS இல் பதிவு செய்து உலகில் தமிழுக்கென்று முதன்முதலில் 1586 இல் அச்சுக்கூடம் புன்னைக்காயலில் இருந்ததை உறுதிசெய்து சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

மதுரையில் 27.11.2021 அன்று நடந்த இந்நிகழ்ச்சியில் அருள்முனைவர் அமுதன் அடிகள், புன்னைக் காயல் ஊர்க் கமிட்டி தலைவர் திரு.அமல்சன், துறைமுகக் கமிட்டி தலைவர் திரு. நாதன், முனைவர் திரு. பெவிஸ்டர், எழுத்தாளர் நெய்தல் அண்டோ, மற்றும் ஊர் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

குரூஸ் பர்னாந்தீஸ்க்கு மணிமண்டபம்



`தூத்துக்குடி மாநகர மக்களின் தந்தை’ என்று அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ்க்கு மணிமண்டபம் அமைக்கப்படும்’ என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகர மக்களின் நலன் காக்க தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ். ஏறத்தாழ 30 ஆண்டுகள் நகர்மன்ற உறுப்பினராகவும், 5 முறை நகர்மன்ற தலைவராகவும் இருந்த காலத்தில் ஜாதிமத பேதமின்றி தூத்துக்குடி மக்களின் அடிப்படைக்கல்வி மேம்பாடு, குடிசை வீடுகள் மேம்பாடு, தீண்டாமை எதிர்ப்பு, கூட்டுறவு வங்கிக்கடனுதவி, சுகாதார மையங்கள், சனிக்கிழமைச் சந்தை, அங்காடிகள், பொதுவான கல்லறைத் தோட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தி சாதனை படைத்தார். குறிப்பாக 1927-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சத்தில் சிக்கித் தவித்த போது, மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன் நெல்லை தாமிரபரணி ஆற்றில் இருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்தி வெற்றி கண்டார். தன்னலமற்ற தனது தியாகத்தால் அம்மாவட்ட மக்களின் மனங்களில் இன்றும் உயர்ந்து நிற்கும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸின் நினைவினை போற்றிடும் வகையில், அவரின் பிறந்த நாளை நவம்பர் 15-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றதும் ராவ் பகதூர் பர்னாந்தீஸ்க்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதற்கிணங்க, அவருடைய பிறந்த நாளில் அவரின் புகழுக்கு மென்மேலும் பெருமை சேர்க்கும் வகையில், தூத்துக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசின்சார்பில் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அலைகளின் மைந்தர்கள் - 29


தூத்துக்குடி பாண்டியாபதியின் ஆலோசனையின் பேரில் ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுத போரை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். ஆகவே வேம்பாரிலிருந்து புரட்சியணி கொண்டுவரும் ஆயுதங்களையும், வெடி பொருட்களையும்.. அவர்களிடமிருந்து பத்திரமாக வாங்கி எங்கள் படையணியிடம் கொடுத்தனுப்புங்கள் என்று கட்டபொம்மன் ஏற்கனவே மேல்மாந்தை ஜமினுக்கு தகவல் அனுப்பியிருந்ததால் நேரடியாக கோட்டையின் வாசலில் நின்று புரட்சியணியை வரவேற்று மாளிகைக்கு கூட்டி சென்றார் மேல்மாந்தை ஜமீன்..

துப்பாக்கி போன்ற அதிநவீன ஆயுதங்களை கட்டபொம்மனின் படையணிக்கு கையாள தெரியாததால் ஏற்கனவே ஆயுதங்களை கையாள்வது சம்மந்தமாக இலங்கைக்கு சென்று ஆங்கிலேயருக்கு எதிராக டச்சு படையினரிடம் பயிற்சி பெற்று வந்த பாண்டியன் அவர்களுக்கு எவ்வாறு கையாள்வது என்று சொல்லி கொடுத்தான்.. அவன் ஆயுதங்களை கையாளும் வேகத்தை பார்த்து மிரண்டுபோனது கட்டபொம்மனின் அரசபடை..

கட்டபொம்மன் கொடுத்து அனுப்பிய வெகுமதியை அவர்களிடம் வாங்க மறுத்தும்.. உணவு சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள் என்று மேல்மாந்தை ஜமீன் எவ்வளவோ வற்புறுத்தி சொல்லியும் அவர்களிடமிருந்து பச்சதண்ணீர் கூட வாங்கி குடிக்கவில்லை.. இது பாண்டியாபதி அவர்களின் பாதுகாப்பிற்காக புரட்சியணிக்கு இட்ட உத்தரவு ..

பாண்டியாபதியின் உத்தரவை நல்லபடியாக தாங்கள் நிறைவேற்றிவிட்டதற்கு நன்றி சொல்லும் விதமாக வேம்பார் வந்ததும் பரிசுத்த ஆவி ஆலயத்திற்கு சென்று வணங்கிவிட்டு கோவிலை விட்டு வெளியே வரும்போது.. இவர்களை வரவேற்க கோவிலுக்கு வெளியே காத்திருந்த வேம்பார் அடப்பனார் பாண்டியனையும், மற்றவர்களையும் வரவேற்று எல்லோரும் பசியா இருப்பீங்க.. வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு போங்க என்றார்...

நெல்லு சோறும், சுடசுட மீன் குழம்பும் புரட்சியணிக்கு பறிமாறிக்கொண்டிருந்த அடப்பனாரின் தங்கை மகள் ராஜகன்னி.. சற்று தள்ளி அமர்ந்திருந்த பாண்டியனிடம் குனிந்து பறிமாறிக்கொண்டே தலைநிமிராமல்.. என்னையும் புரட்சியணியில் சேர்த்துகிருங்களேன் என்றாள்..

பெண்களுக்கு எங்கள் அணியில் இடமில்லை..

நான் போராடுறதுக்கு கேட்கல.. உங்க அணியில் நானும் இருந்தால் உங்கள எப்பவுமே பக்கத்துல இருந்து பார்த்துகிட்டு இருப்பன்ல..

அவளுக்கு திரும்ப பதிலேதும் சொல்லாமல் குனிந்தவாறு சாப்பிட தொடங்கினான் பாண்டியன்..

ஒரு மறைவான இடத்தில் நின்று தன் முகத்தை மறைத்து துணியால் கட்டிக்கொண்டிருந்த பாண்டியன் அருகில் வந்த ராஜகன்னி..

நான் உங்கள்ட்ட கேட்டதுக்கு பதில் சொல்லாம போறிய..என்றாள்

நான் யார்னு தெரியுமா..?

தெரியும்.. புரட்சியணியை வழிநடத்துபவர்..

என்னோட இறப்பை இன்னொருத்தன் தீர்மானிப்பான். நாளைக்கு நான் உயிரோடு இருப்பனான்னு எனக்கு தெரியாது. என்று பாண்டியன் சொல்ல..

அப்ப கடலுக்கு போற நம்ம ஆட்களும் போர்க்களத்துக்கு செல்றது மாதிரிதான போறாங்க.. நம்ம இனத்துக்கு நம்பிக்கை மட்டும் தான வாழ்க்கையாயிருக்கு.. விரும்புனவனோடு ஒருநாள் வாழ்ந்துட்டு செத்தாலும் இந்த பொறப்பு திருப்திதானே..

கண்களை உயர்த்தி ராஜகன்னியை பார்த்த பாண்டியன் மேலும் அவளிடம் விவாதிக்க விரும்பாமல் அந்த இடத்தை விட்டு அகன்றான்.. மூக்கையூருக்கு திரும்பி போவதும் மீண்டும் வேம்பார் வந்து மேல்மாந்தைக்கு வெடிபொருட்களை கொண்டு போவதுமாக கிட்டத்தட்ட இரண்டு மாதத்தில் பத்துக்கு மேற்பட்ட முறை சென்றிருப்பார்கள்.

தன் வீட்டில் அணியினரோடு சாப்பிட்டு கொண்டிருந்த பாண்டியனிடம் நாளை காடல்குடியில் நடக்கப்போகும் இரகசிய கூட்டத்திற்கு இராமநாதபுரம் மயிலப்பன் வருகிறார் என்று அடப்பனார் சொல்ல..

எதற்கு ..? அவரை யார் அனுப்புறாங்க திருப்பி கேட்டான் பாண்டியன்..

ஆங்கிலேயரிடம் பிடிபட்ட கமுதி கோட்டையை மீட்பதற்கு டச்சு ஏஜண்ட் ஐசக் ஆராச்சி மூலம் இலங்கையிலிருந்து ஆயுதம் வாங்க பாண்டியாபதியிடம் இராமநாதபுரம் சேதுபதி அனுப்புகிறார்..

உடனே.. நான் காடல்குடி கூட்டத்திற்கு வரவில்லை என்ற பாண்டியனிடம்...

நீ எதுக்கு வரலைன்னு சொல்றது எனக்கு தெரியும்..

1713 ஆம் ஆண்டு நாயக்க மன்னரின் உத்தரவின் பேரில் சேதுபதி அரச படைகள்தான் மூக்கையூர் சந்தியாகப்பர் கோவிலை தீயிட்டு கொழுத்தி வீடுகளை சூறையாடி முத்துக்களை கொள்ளையடித்து சென்றவர்கள்.. இதுதானே உன் கோபம்..

ஆம் என்றான் பாண்டியன்... 

சாயல்குடி ஜமீன் மூலமும் ஆப்பநாட்டு தலைவர் மூலமும் நாம் யார் என்று அறிந்து உடனே கோவிலை கட்ட அனுமதித்தார்கள்.. எது எப்படியோ மயிலப்பன் கலந்து கொள்ளும் காடல்குடி கூட்டத்தில் நாம் பாண்டியாபதியோடு கலந்துகொள்ள வேண்டியது அரச உத்தரவு என்றார் அடப்பனார்..

சரி என்று தலையாட்டினான் பாண்டியன்..

தன் இரண்டு கைகளையும் விரித்து பாண்டியனை வெளியே விடாமல் வாசலை மறித்து கண்கள் கலங்கியபடி நின்ற ராஜகன்னி.. சட்டென அவன் இரண்டு கரங்ளையும் பிடித்தபடி... என் உசுர உங்கள்ட்டதான் ஒப்படச்சிறுக்கேன். நீங்க என்னை தூக்கி சுமந்தாலும் சரி... இல்ல உங்க கால்கள்ல போட்டு மிதிச்சாலும் சரி.. சொல்லிக்கொண்டே அவள் ஏங்கி ஏங்கி அழுக ..

பாண்டியன் அந்த இடத்தை விட்டு அகலாமல் கொஞ்ச நேரம் அப்படியே நின்றான்...

சில நாட்கள் கழித்து.. ஆங்கிலேயர்கள்களின் அதி நவீன ஆயுதங்களுக்கு தாக்குபிடிக்காமல் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர்களிடம் வீழ்ந்தது என்றும் கட்டபொம்மனும் அவரின் தம்பி ஊமைத்துரையும் சிறைபிடிக்க பட்டார்கள் என்றும் வேம்பாருக்கு தகவல் வந்தது..

1799 ஆம் ஆண்டு... எங்களை எதிர்ப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்.. தங்களை எதிர்க்கும் மற்ற பாளையக்காரர்களை அச்சுறுத்துவதற்க்காக கயத்தாறில் பொதுமக்கள் முன்னிலையில் புளியமரத்தில் தூக்கிலடப்பட்டு ஆங்கிலேயர்களால் கொல்லபட்டார் கட்டபொம்மன்... ஊமைத்துரையை சிறையிலிருந்து மீட்க புரட்சியணி தயாரானது...
........ தொடரும் ......
- சாம்ஸன் பர்னாந்து 

பரவனாறு



உலகத்தின் ஒரே பொங்கு நீர் ஊற்று ஜீவநதி (artesian)


தமிழ்நாட்டில் இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் இருந்து அழிக்கப்பட்ட அந்த ஜீவநதியின் இருண்ட வரலாறு உங்களுக்கு தெரியுமா?

ஆம், பழைய தென்னாற்காடு மாவட்டத்தில்தான் இந்த ஆறு பாய்ந்தது.  வருடம் முழுதும் பெருக்கெடுத்து பெருவெள்ளமாக ஓடி கடலில் கலந்தது. சேமக்கோட்டை காட்டில் உற்பத்தியாகி பழைய நெய்வேலி கிராமம் தற்போதைய என்எல்சி சுரங்கம், கத்தாழை, கரிவெட்டி, இளவரசம்பட்டு, கரைமேடு, எல்லைக்குடி வழியாக பெருமாள் ஏரியில் அடைந்து பின் 26 கிமீ பயணித்து பூண்டியாங்குப்பம் வழியாக கடலூர் துறைமுகம் அருகில் கடலில் கலக்கிறது.

பரவனாறு உண்மையில் பூமியின் ஆழத்திலிருந்து உற்பத்தி ஆகிறது என்பதே இதன் சிறப்பு. இந்த ஆற்றுக்கான நீர ஆதாரம் ஆர்ட்டீசியன் பொங்குநீர் ஊற்றுகளே. இரண்டாம் பராந்தக சோழன் பரவனாற்றை சீரமைத்து இதன் கரைகளில் நிறைய ஏரிகளை அமைத்ததுடன் அதன் உச்சமாக 16 கிமீ நீளமுள்ள பெருமாள் ஏரியை வெட்டினான். வெள்ளையர் காலத்தில் இந்த ஏரியின் குறுக்கே மக்கள் பயணிக்க பாலங்கள் அமைத்ததுடன் பெருமாள் ஏரி வாலாஜா ஏரிகளை சீரமைத்து மேம்படுத்தினர்.

இந்த பரவனாறு எந்த காலத்திலும் வற்றாத ஜீவ நதி 850 சதுர கிமீ பரப்பிலான நிலங்களின் நீராதாரமாக ஒரு காலத்தில் விளங்கியது. இந்த பரவனாறு வளமான செம்மண்ணில் உற்பத்தியாகி சுக்காங்கல் பாறை களிமண் வண்டல்மண் வெள்ளைப்பாறை களர்மண் மணல்பாறை இளுவைமண் என் பல்வேறான மண்வளத்தில் பாய்ந்தோடும் சிறப்பு கொண்டது. இந்த ஆற்றில் உலகத்தில் வேறெங்கும் காணப்படாத அறியவகை நீர்ப்பூனைகளும் அறியவகை நீர் விலங்குகளும் நூற்றுக்கும் மேற்பட்ட மீன் இனங்கள் வாழ்ந்தன.

மழைகாலத்தில் தென்னாற்காடு மாவட்டமே பரவனாற்றால் நீர் கொப்பளித்து பொங்கி ஓடும். இவையெல்லாம் என்எல்சி என்னும் நாசக்கார சுரங்கம் வரும் வரைக்கும்தான். நிலக்கரி ஆலை மற்றும் சுரங்கத்திலிருந்து வெளிப்படும் பாதரசக்கழிவுகளால் அறியவகை நீர்விலங்குகள் அழிந்தன. 

தென்னாற்காடு மாவட்டத்தின் நன்னீர் கடலாக விளங்கிய பரவனாற்றை என்எல்சி அழித்து நாசப்படுத்திவிட்டது. தலை இழந்த முண்டமாக தன் உயிர்குடித்த என்எல்சியால் இரத்தபேதியாகிக்கொண்டிருக்கிறது பரவனாறு. 

என்எல்சி இன்னும் சில ஆண்டுகளில் மூடப்பட்டுவிடும். ஆனால் தொலைந்த ஆறு கிடைக்குமா? இழந்த நீர் வளமை திரும்ப வருமா?

4000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பரவனாறு என்எல்சியால் 40 வருடத்தில் சூரையாடப்பட்டது. 

சிறு வயதில் அந்த ஆர்ட்டீசியன் ஊற்றுகளில் குளித்திருக்கிறேன். குளிர் காலத்தில் இந்த ஆர்ட்டீசியன் ஊற்றில் மிதமான சூட்டில் வென்னீர் வரும் அது ஒரு சுகமான அனுபவம். நான் படித்த காலத்தில் 1980 காலத்தில் நெய்வேலி ஆர்ட்டீசியன் ஊற்று குறித்த பாடங்கள் இருந்தது. 

தமிழ்நாட்டின் பள்ளி வரலாறு புவியியல் பாடபுத்தகங்களில் இருந்தும் பரவனாறு குறித்த பாடங்கள் அழிக்கப்பட்டதுதான் சோகத்திலும் சோகம். 

என் தகப்பன் காலத்தில் எம் முன்னோர்களின் அறியாமையாலும் விழிப்புணர்வற்ற தன்மையாலும் அழிக்கப்பட்ட பரவனாற்றின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுசெல்வோம்.

கண்ணில் வழியும் கண்ணீருடன் அந்த ஆர்ட்டீசியன் ஊற்றில் குளித்த சாட்சி!

- சித்தர் திருத்தணிகாசலம்

கொற்கை முத்து


இலக்கியச் சான்றுகளும் அகழ்வாய்வுச் சான்றும் 


ஈண்டு நீர்
முத்துப் படு பரப்பின் கொற்கை முன்துறைச்
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல்"
- நற்றிணை 23 :5-7

(பொருள்: கொற்கைத் துறையின் கடல் நீரில் முத்துக்கள் விளையும்.)

.............................

"அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய்"

-ஐங்குறுநூறு 185: 1 – 2

(பொருள்: கொற்கைத் துறையின் நுழைவாயிலில் சிதறிக் கிடக்கும் முத்துகளைப் போன்ற ஒளிரும் பற்களையுடைய இளம்பெண்.)

......................................

"புகழ் மலி சிறப்பின் கொற்கை முன் துறை
அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து"

-அகநானூறு 201:4 – 5

(பொருள்: பாண்டியனின் கொற்கைத் துறையில் ஒளிர்விடும் முத்துக்களும் வலம்புரிச் சங்குகளும் சிதறிக் கிடக்கின்றன.)

..............................................

"கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு"

-சிலப்பதிகாரம். 14:180

(பொருள்: கொற்கையின் பெருந்துறை முத்துக்களை பெற்றுள்ளது.)

..............................................


மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கை அம் பெருந்துறை முத்தின் அன்ன

-அகநானூறு 27: 8 – 9

(பொருள்: பல போர்களில் வீரத்துடன் போரிட்டுக் காத்து வந்த பாண்டியர்களின் கொற்கையின் பெரிய துறையின் முத்தைப் போலப் புன்னகை பூக்கும் ஒளிபொருந்திய பற்களும் பவளம் போன்று சிவந்த வாயும் கொண்ட தலைவி.)

..............................................


புகழ் மலி சிறப்பின் கொற்கை முன் துறை
அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து

-அகநானூறு 201; 4 – 5

(பொருள்: ஒளிர்விடும் பொன்னால் செய்த நெற்றிப்பட்டம் அணிந்த வெற்றிக் களிறுகளை உடைய பாண்டிய மன்னனின் கொற்கைத் துறையில் ஒளிர்விடும் முத்துக்களும் வலம்புரிச் சங்கும் சிதறிக் கிடக்கிறது.)

..............................................


இவர் திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர் நடைப் புரவிக் கால் வடுத் தபுக்கும் 10
நற்தேர் வழுதி கொற்கை முன் துறை

-அகநானூறு 130; 9 – 11, 

(பொருள்: கொற்கைத் துறையில் கடல் அலை கரையில் முத்துக்களைக் குவிக்கின்றன. கடற்கரையில் சிதறிக் கிடக்கும் இந்த முத்துக்கள் செல்வந்தர் ஏறிவரும் குதிரையின் காலடிக் குளம்புக்குள் மாட்டி அவற்றிற்கு இடையூறாக அமைகிறது. இந்த அளவிற்கு முத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றனவாம்.)

..............................................


சீர் உடைய விழு சிறப்பின்
விளைந்து முதிர்ந்த விழு முத்தின்
இலங்கு வளை இரும் சேரி
கள் கொண்டி குடி பாக்கத்து
நல் கொற்கையோர் நசை பொருந

-மதுரைக்காஞ்சி 134 – 138

மதுரைக் காஞ்சி வரிகளில் கொற்கைத் துறைமுகத்தின் சிறப்பு வியந்து போற்றப்படுகிறது.

கீழடியில் மீன் அடையாளம்


கீழடி அகழ்வாய்வில் உறைகிணற்றில் `அழகுபடுத்தப்பட்ட மீன்` அடையாளம் (Decorated Fish Symbol ) கிடைக்கப் பெற்றுள்ளது.

அழகுபடுத்தப்பட்ட மீன்` அடையாளம் கீழடி அகழ்வாய்வில் கிடைப்பது இதுவே முதல் முறை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே `மீன்` அடையாளம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயமும் கீழடியில் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது (படம் 3).







அலைகளின் மைந்தர்கள் - 28


கி.பி. 1529 லிருந்து 1736 வரை மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு 62 பாளையங்களாக பிரிக்கப்பட்டது.. ஒவ்வொரு பாளையத்திற்கும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.. இத்தகைய பாளையங்களில் ஒன்றுதான் பூலித்தேவன் ஆண்ட நெற்கட்டான் செவல் பாளையம்.. (தற்போதைய நெல்லை மாவட்டம்)

ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுக்காமல் அவர்களை எதிர்த்து இங்கிருந்துதான் இந்திய சுதந்திரத்துக்கான முதல் குரல் ஒலித்தது... இந்தியாவின் முதல் விடுதலை போர் என்று அழைக்கப்படும் சிப்பாய் கலகத்திற்கு (1856) முன்பாகவே இவர் அறியப்பட்டு பின் ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் கி.பி 1761 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்..

முத்துக்குளித்துறையின் தலைநகர் தூத்துக்குடியை ஆங்கிலேயர்களும், டச்சுகாரர்களும் மாறி மாறி ஆண்டு வந்தாலும் 1795 ஆம் ஆண்டு தூத்துக்குடி முற்றிலுமாக ஆங்கிலேயர் வசம் வந்தது.. பாண்டியாபதி என்று அழைக்கப்பட்ட பரதவ அரசர் தொன் கப்ரியேல் தெக்குரூஸ் என்பவருக்கு மட்டுமேயான முத்து படுகைளில் முத்து சிலாபம் சிறப்பாக நடைபெற்றாலும் இவருக்கான மானியம் ஆங்கிலேயர்களால் வெகுவாக குறைக்கப்பட்டது....

மீண்டும் மற்றொரு பாளையமான கட்டபொம்மன் தலைமையிலான பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து.. வெள்ளையர்களுக்கு இனி நாங்கள் கப்பம் கட்ட மாட்டோம் என்ற இந்திய விடுதலைக்கான குரல் ஒங்கி ஒலிக்க தொடங்கியது. காடல்குடியில் நடந்த வெள்ளையர் எதிர்ப்பு கூட்டத்தில் பாஞ்சாலகுறிச்சியின் கட்பொம்மன், திருநெல்வேலி, இராமநாதபுரம் சிற்றறசர்கள் மற்றும் மருது சகோதரர்களுடன் தூத்துக்குடியிலிருந்து பாண்டியாபதியும் கலந்து கொண்டார்..

வெள்ளையர்களை நாட்டைவிட்டு விரட்டுவதில் கட்டபொம்மனுக்கும், பாண்டியாபதிக்கும் ஒருமித்த கருத்து இருந்ததால்.. வெடிமருந்தும், ஆயுதங்களும் நாங்கள் தருவித்து உங்களுக்கு தருகிறோம் விடுதலைக்கான போரை ஆயுத போராட்டமாக மாற்றுங்கள் என்ற பாண்டியாபதியின் ஆலோசனையை ஏற்று கொண்டார் கட்டபொம்மன். பாண்டியாபதியின் தலைமையில் புரட்சியணி உருவாகியது..

தூத்துக்குடியில் ஆங்கிலேயர்களின் கடல் கண்காணிப்பு அதிகமாக இருந்தபடியால் பாண்டியாபதியின் உத்தரவை அடுத்து வேம்பார் அடப்பனார் அங்கு வசித்த டச்சு ஏஜென்ட் ஐசக் மூலம் இலங்கை மன்னாரிலிருந்து கடல் வழியாக வள்ளத்தில் கொண்டுவந்த வெடிபொருட்களையும், ஆயுதங்களையும் வேம்பார் கடற்கரையில் நின்றபடி அவருடைய நேரடி கண்காணிப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட புரட்சியணியை சேர்ந்த மூக்கையூர், வேம்பாரை சேர்ந்த ஏழெட்டு இளைஞர்கள் கரையில் கவனமாக பொருட்களை இறக்கி வைத்தார்கள்..

இருபத்தைந்து வயதுடைய திடகாத்திரமான இளைஞன் ஒருவன் தன் முகத்தை துணியால் மறைத்தபடி தாங்கள் மூக்கையூரிலிருந்து கொண்டுவந்த கோவேறு கழுதையிலும், வேம்பாரில் உள்ள மாட்டு வண்டியிலும் ஆயுதங்களையும் வெடி பொருட்களையும் ஏற்றினான். தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஆங்கிலேயர்களிள் கண்காணிப்பை மீறி பாஞ்சாலங்குறிச்சிக்கு வெடிபொருட்களை கொண்டு செல்வது சிரமம் என்பதால் வேம்பாருக்கு பக்கத்து பாளையமான மேல்மாந்தை ஜமீனில் ஒப்படைத்துவிடுங்கள். அவர்கள் எளிதாக பாஞ்சாலகுறிச்சிக்கு கொண்டு செல்வார்கள் என்ற தகவலை பாண்டியாபதி ஏற்கனவே வேம்பார் அடப்பனாருக்கு சொல்லி அனுப்பியிருந்தார் ..

மேல்மாந்தைக்கு போறதுக்கு முன்னாடி பரிசுத்த ஆவி கோவிலுக்கு போய் வேண்டிட்டு போங்கப்பா.. என்ற வேம்பார் அடப்பனாரின் சொல்லுக்கு பணிந்து கோவிலுக்கு சென்றார்கள்.. (ஏற்கனவே டச்சு படையால் சிதிலமாக்கப்பட்ட Basilica... பெரிய கோவில் என்று அழைக்கப்பட்ட பரிசுத்த ஆவி ஆலயம் கி.பி.1730 இல் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகியது.. பின் 1743 ல் வேம்பாருக்கு இறைபணியாற்ற வந்த வீரமாமுனிவர் அங்கு சிறு ஆலயத்தை எழுப்பியிருந்தார். அந்த ஆலயத்தில் தான் தற்போதுவரை (1798) திருப்பலி நடைபெறுகிறது..)

புரட்சியணியை பார்ப்பதற்காக கோவில் வாசல் அருகே ஆண்களும், பெண்களுமாய் பத்து பதினைந்து பேர் நின்றிருந்தார்கள்.. 

மாமா.. முகத்த துணியால மூடிட்டு கோவிலுக்குள்ள போறாருல.. அவரு யாரு.. தன் அருகில் நின்ற வேம்பார் அடப்பனாரிடம் கேட்டாள் ராஜகன்னி..

அவன்தான் இந்த அணியை வழிநடத்துபவன். மூக்கையூர்காரன்......... 

நம்ம ஆட்களா..?

ஆம்.. பெரிய குடும்பத்தை சேர்ந்தவன்... அவனுடைய பெயர் பாண்டியன்.. கோவிலிலிருந்து திரும்பி வந்த பாண்டியன் நேராக வேம்பார் அடப்பனாரிடம் சென்று அவர் கைகளை பிடித்து கொண்டு ஐயா நாங்கள் வருகிறோம் என்றவனின் பார்வை அவர் அருகில் நின்றவளை நோக்கியது...

ராஜகன்னி தன்னையறியாமலே அவனை பார்த்து கையெடுத்து கும்பிட்டு தோஸ்த்திரம் என்றாள்.. 

பாண்டியன் சிரித்தபடியே தலையாட்டினான். 

கோவிலை கடந்து சிறிது தூரம் சென்றபின் பின்னாலிருந்து என்னங்க.. கொஞ்சம் நில்லுங்க...  

துள்ளளோடு ஓடிவந்து பாண்டியன் அருகில் நின்றவள்..

உங்க முகத்த மூடி கட்டியிருக்கிற துணிய அவுத்துட்டு எனக்கு மட்டும் உங்க முகத்த காமிங்களேன்.. கெஞ்சலாக கேட்டாள் ராஜகன்னி.

சற்று தயங்கி பின் சிரித்தபடியே தான் முகத்தை மறைத்து கட்டியிருந்த துணியை அவிழ்த்தான் பாண்டியன்.. 

ம்ம் .. நல்லாத்தான் இருக்கீங்க... போய்ட்டு பத்திரமா திரும்பி வாங்க .. 

சிறிது தூரம் பாண்டியன் நடந்து சென்று திரும்பி பார்க்கையில் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தாள் ராஜகன்னி ...

......... தொடரும் ....
- சாம்ஸன் பர்னாந்து

அலைகளின் மைந்தர்கள் - 27

அதிகாலையிலேயே நாலைந்து கட்டுமரமும், ரெண்டு சின்ன வள்ளமும்வைப்பாறிலிருந்து மூக்கையூர் திருவிழாவிற்க்கு கெளம்பி போக தொடங்கிட்டு.. இப்பவே நடக்க தொடங்குனாதான் பொழுதடையுறதுக்கு முன்னால ஊர் போய் சேர்ந்து சப்பரத்த பார்க்க முடியும்னு ஒரு பத்து பதினஞ்சு பேர் பொடிநடையா மூக்கூர நோக்கி நடக்க தொடங்குனாங்க...

குடும்பமே ரொம்ப நேரம் கெஞ்சி கூப்பிட்டும் அடுத்த வாரம் புதுவலையை கடல்ல தாக்கனும்.. எனக்கு வலை முடிக்கிற வேலை நெறய இருக்கு... நான் திருவிழாவுக்கு வரலைன்னு மறுத்துட்டான் செல்வி அண்ணன்.. முன்னால கிளம்பி போன கட்டுமர கருப்புலாம் கடல்ல மறஞ்ச பிறகுதான் செல்வி வள்ளம் கெளம்புச்சு..

தன் மகள் கண்களில் தெரிந்த தவிப்பை பார்த்து.. நல்லா வெளங்க ஒடி.. பாயை சுத்திவிட்டம்னா கரைக்கு சீக்கிரம் போயிரலாம்னு சொன்ன தன் அப்பாவை பார்த்து.. கண்கள் அகல சரிப்பா என்றாள் செல்வி..

இந்நேரம் வைப்பாறு வள்ளங்கள் மூக்கையூர்ல கரை புடிச்சுறுக்கும்.. மச்சான் எப்படியும் கடற்கரைல நின்று என்னை கானோம்னு தேடுவாங்க.. உடம்பெல்லாம் சிலிர்த்து இன்னும் கொஞ்ச நேரத்தில கரைக்கு வந்துருவேன் அங்கேயே நில்லுங்கன்னு செல்வி தன் மனதுக்குள் கற்பனையை ஓட விட்டு கொண்டிருக்கும் போது.. லேசான குளிர்ந்த காற்று அடிக்க தொடங்கியது..

மாதாவே.. என்ன மேகம் திடீர்னு இப்படி கருத்துட்டு வருதுன்னு வானத்தை அன்னாந்து பார்க்கும்போது .. பெரும் துளி விழ தொடங்கியது.. கருக்களோட கடுங்காத்து வருதுன்னு செல்வி அப்பா சொல்லி கொண்டிருக்கும்போதே.... நாலு பக்கமும் சுத்திக்கிட்டு வர்ற சுழி காத்த பார்த்து ஒடிபோய் வள்ளத்து பிந்தலையில கட்டியிருந்த தாமான் கயிற அவுக்கு முன்னாடி சுழி காத்துல வள்ளத்து பாய் சப்பைல அடிச்சு வள்ளம் உடனே கடலுக்குள்ள குப்புற கவுந்துட்டு..

அரைநீத்துல மெதந்த வள்ளத்த புடுச்சுறுந்த செல்வி தன் அப்பாவை காணாது அப்பா.. அப்பா.. என்று கத்த.. இந்த மழை முடிஞ்சவுடனே அப்பாவ பார்த்துரலாம்.. நீ வள்ளத்த நல்லா புடிச்சுக்கன்னு சொன்னாள் செல்வியின் அம்மா தன் மகளின் தோளை இறுக்கி பிடித்தவாறு..

ஒருமணி நேரமாகியும் மழை நின்றாலும் மார்சாவின் வேகம் குறையாமல் அப்படியே இருந்தது.. தன் உடல் விறைப்பதை அறிந்து தன் உடம்மை செல்வி தன்னையறியாமல் வேகமாக சிலிர்க்க... சோர்ந்துபோய் அவள் முதுகை பிடித்திருந்த அவள் தாயின் கரம் வழுக்கி நீவாட்டால் இழுத்து செல்லப்பட்டு நீருக்குள் மூழ்கிபோனாள்..

அம்மா.. அம்மா.. செல்வியால் கத்தக்கூட முடியவில்லை..

நான் என் மச்சானோடு வாழனும்... நான் அவரோடு வாழனும் தன்னையறியாமல் பிதற்றி கொண்டிருந்த செல்வியின் முகத்தில் ஒங்கி அடித்த மார்சாவால் வள்ளத்த பிடிச்சுறுந்த அவளது மரத்து போன கைகள் கொஞ்சம் கொஞ்சமாக அவளையறியாமலே நழுவி கொண்டு போனது...

மூக்கையூரில் திருவிழா திருப்பலிக்கான முதல் ஆலயமணி அடிக்க தொடங்கியபோது... கடலுக்குள் மூழ்கி கிடந்த செல்விக்கு கேட்கல... மழையோடு நீந்தி மூக்கையூரில் கரை சேர்ந்த செல்வியின் அப்பாவால்.. திருவிழாவுக்கு வந்த வைப்பாறு வள்ளம் கடல்ல தாந்துட்டுன்னு செய்தி மூக்கையூரில் பரவ.. திருவிழா திருப்பலி பார்த்து கொண்டிருந்த ராயப்பு பதறி அடித்து கொண்டு கடற்கரைக்கு ஓடினான்.

ராயப்பை பார்த்த செல்வியின் அப்பா ஒடிவந்து அவனை கட்டிபிடித்தவாறு.. என் மகளையும் பொண்டாட்டியவும் இழந்துட்டனப்பா.. கதறி கதறி அழுதார்...

செல்வியா..? அப்படியே மணலில் சரிந்தான் ராயப்பு...

காலையில் செல்வியின் உடலும், அவள் அம்மாவின் உடலும் மூக்கையூர் கடற்கரையில் அருகருகே ஒதுங்கி கிடந்தது..

நூற்றி ஐம்பது வருடங்களுக்கு முன்பாக சூசை புதைக்கப்பட்டு இன்று எந்த எச்சங்களும் இல்லாமல் போய் கட்டாந்தரையாகி போன இடத்தில் குழிதோண்டி திருவிழாவுக்கு வந்த வைப்பாறு பெரியவர்கள் முன்னிலையில் கல்லறையில் வைத்து பாதிரியாரால் மந்திரிக்கப்பட்டு செல்வியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது...

வீட்டில் குப்புற படுத்து நாள் முழுவதும் அழுது கொண்டிருந்த தன் மகன் தலையை தன் மடியில் கிடத்தி ஆறுதல் சொல்லிய ராயப்பின் தாய்.. இரவில் அப்படியே தூங்கி போய்.. திடிரென கண் விழித்து பார்த்த போது வீட்டில் ராயப்பை கானாது பதறிபோய் தன் மூத்த மகன் தோமாஸை எழுப்பி விஷயத்தை சொல்ல தாயும் மகனும் அழுதுகொண்டே கடற்கரைக்கு ஒடினார்கள்..

கரையில் ஏத்தி வச்சிறுந்த ராயப்பு கட்டுமரத்த கானோம்.. அந்த இரவிலும் தோமாஸ் தன் தம்பியை கடற்கரையில் அங்குட்டும் இங்குட்டுமாக தேடி வெகுதூரம் ஒடினான்.. அந்த நடுநிசி இரவிலும் மூக்கையூருக்கு எதிரே உள்ள உப்புதண்ணி தீவை சரியாக அடைந்து கீழே இறங்கி இரண்டு பெரிய பாறாங்கல்லை கட்டுமரத்தில் தூக்கிபோட்டு தானும் மரத்தில் ஏறி அமர்ந்து கட்டுமரத்த வலிய விட்டான் ராயப்பு..

கச்சான் காத்து காலம்னால கட்டுமரம் மூக்கையூரை நோக்கி மெதுவா வலிஞ்சு வர தொடங்கியது.. செல்வி இல்லாம தன்னால் இனி வாழவே முடியாது.. தன் உயிரை மாச்சுக்கிறனும்னு ஏற்கனவே திட்டமிட்டு கொண்டுவந்த கயிறை ஒவ்வொரு பாறாங்கல்லோடும் தன் கால்களையும் சேர்த்து இறுக்கி கட்டி...

உப்புதண்ணி தீவுக்கும் மூக்கையூருக்கும் நடுவுல கட்டுமரம் வலிஞ்சு வந்துகிட்டு இருக்கும் போது மரத்திலிருந்து இரண்டு கற்களையும் கடலில் தள்ளிவிட்டு கற்களோடு கற்களாக ராயப்பும் கடலில் மூழ்கி போனான்.

அடுத்த நாள் காலைல சந்தியாகப்பர் கோவிலுக்கு மேற்க்கே செல்விய அடக்கம் பன்ன கல்லறைக்கு நேர ராயப்பு கட்டுமரம் கரையில குறுக்க அடஞ்சு கெடந்துச்சு... எத்தனையோ இறப்புகளை தந்த கடல் இந்த மரணத்தையும் இயல்பாய் ஏற்றுக்கொண்டு.... வெளங்க இருந்து உரத்த சப்தத்துடன் மீண்டுமாய் அலைகள் கரையை நோக்கி வர தொடங்கியது..

....... தொடரும் ......

அலைகளின் மைந்தர்கள் - 26


கடலில் மந்திரம் ஒதுவதற்கு பணம் கொடுக்காததால் டச்சுகாரர்களால் ஒரு வருட சிறை தண்டனை வழங்கப்பட்டு பின் பரதவர்களின் கடுமையான எச்சரிக்கையால் உடனே விடுதலை செய்யப்பட்ட புன்னகாயல் சாதி தலைவரை பார்த்து நலம் விசாரிக்க பாண்டியாபதியும் முத்துகுளித்துறையின் மற்ற சாதி தலைவர்களும் வந்திருந்தனர்..

ஏற்கனவே இயேசுசபை குருக்களால் அர்ச்சிக்கப்பட்டு ஆலய பீடத்தில் அமர்ந்திருக்கும் இளவரசி ராஜகன்னி மாதாவின் சுருபத்தை அகற்றும் உத்தரவுக்கு பணிவதில்லை என்றும்.. இரண்டாம் வருடம் நடக்கும் பரதவரின் தாய் தேரோட்ட நிகழ்ச்சிக்கு இலங்கையிலுள்ள டச்சு தலைமைக்கு அழைப்பு விடுப்பதில்லை எனவும் பாண்டியாபதி கூற...

தங்களின் அரசரின் உத்தரவை முழு மனதோடு ஏற்றுக்கொண்டார்கள் முத்துக்குளித்துறையின் சாதி தலைவர்கள்.. கிறிஸ்து பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய பேரரசை நிறுவி 3 ஆம் நூற்றாண்டின் முடிவு வரை மதுரையை தலைநகரகவும், கொற்கையை துனை தலைநகரமாகவும் கொண்டு ஆண்ட பரதவ வம்சம் களப்பிரர்களின் வருகைக்கு பின் கடற்கரை ஒரங்களில் சிற்றரசர்களாக சுருங்கி போனது ...

மூவேந்தர் காலத்தில் திறை செலுத்தி.. பின்வந்த போர்ச்சுகீசியர்களுக்கும், டச்சுக்காரர்களோடு இணைந்து முத்து வணிகம் செய்த போதும் பரதவர்கள் மதிப்பு மிக்கவர்களாகவே நடத்த பட்டார்கள்.. அதற்கு காரணம் இவர்கள் கடலுக்கு அரசன் போர்க்குணம் கொண்டவர்கள். சிறிய அளவிலான தங்களின் படையை வைத்து வேதாளையில் மூர் இன படையின் ஆயிரக்கணக்கான பேரை கொன்று கடலிலே வீசிய வீரம் மிக்க பரம்பரை என்பதால் மற்ற எல்லா பாளையக்காரர்களை போல் அல்லாமல் முத்துக்குளித்துறை பரதவர்கள் நாயக்கர் மன்னராலும், டச்சு நிர்வாகத்தாலும்... இன்றுவரை (17 ஆம் நூற்றாண்டின் நடு பகுதி) ஒருவித பயம் கலந்த மரியாதையுடன்.. எப்போதுமே மதிப்பு மிக்கவர்களாகவே நடத்தப்பட்டார்கள்...

மாதா (பனிமயதாய்) புகழ்பாடும் கட்டியம் போட்டு கடலில் மூழ்கி கிடந்த வள்ளம் கரைக்கு வந்தவுடன்.. அங்கு நின்ற பெரியவர்களிடம்..

சரி நான் வர்றேன்... என்று கிளம்பிய ராயப்பிடம்..

தம்பி பத்து வருஷத்துக்கு முன்னால உங்க ஊர்ல செத்துபோன செபத்தியான உங்களுக்கு தெரியுமா.? ஒரு பெரியவர் அவனிடம் கேட்க..

நான் அவருடைய ரெண்டாவது பையன் என்றான் ராயப்பு..

சந்தோஷமாக அவனை கட்டியணைத்து.. உங்க அப்பாவுடைய ஒன்னுவிட்ட தங்கச்சியத்தான் நான் கட்டியிறுக்கேன்..

கள்ளு குடிச்ச இடத்தில எனக்கும் அவருக்கும் நடந்த சண்டையில கோவிச்சுக்கிட்டு வைப்பாருக்கு வந்துட்டேன். எங்க மச்சான் செத்ததே எனக்கு அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் தெரியும்.. 25 வருஷமா எங்களுக்குள்ள எந்த தொடர்புமில்ல....ஒரு நடை எங்க வீட்டுக்கு வந்து உங்க அத்தையை பார்த்துட்டு போங்கப்பா.. ஒங்கள பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவாள்னு ராயப்பை வலுக்கட்டாயமாக தன் வீட்டிற்க்கு அழைத்து சென்றார்.

வீட்டுக்குள் நுழைந்த ராயப்பை பார்த்து யார் என்று தன் கணவரிடம் கேட்க..

மூக்கூர்ல செத்துபோன உங்க அண்ணன் செபத்தியான் மகன் என்றார் தன் மனைவியிடம்..

என் அண்ணன் மகனா.... ஓடி வந்து ராயப்பை அனைத்து ரொம்ப நேரம் தேம்பி தேம்பி அழுதாள்.

தன் குடும்ப குசலம் விசாரித்த தன் அத்தையிடம் எல்லாவற்றிற்கும் பாசத்தோடு பதில் சொல்லிவிட்டு.. அத்தை நேரமாகுது.. நான் கெளம்புறேன் என்றவனிடம் கொஞ்சம் இருங்கப்பா.. எங்க வீட்டுக்கு இதுவரை வராதவுக இப்ப வந்துருக்கிய.. கையை நனச்சுட்டு போங்கப்பான்னு சொல்லி..

பீங்காட்டுக்குள்ள மேய்ஞ்சுக்கிட்டுறுந்த சேவலை புடுச்சு.... அடிச்சு கொளம்பு வச்சு சுட சுட நெல்லு சோறு ஆக்கி தன் அண்ணன் மகனுக்கு கொடுத்துக்கிட்டு இருக்கும் போது... ஆத்துல குளிச்சுட்டு ஈரத்தலையோட வீட்டுக்குள் நுழைந்த செல்வி..

தன் அம்மா ராயப்புக்கு சோறு கொடுத்து கொண்டிருப்பதை பார்த்து ஆச்சரியமாகி.. இந்த மனுசன் என்னத்த சொல்லி வீட்டுக்குள்ள வந்தார்னு தெரியலையே.. சளுவ இழுக்காம போகமாட்டார் போலேன்னு நெனக்கும்போது...

சாப்பிட்டு கொண்டிருந்த ராயப்பை காட்டி... இவரு மூக்கூர்ல உள்ள ஒன்னுவிட்ட என் அண்ணன் மகன் என்றாள் தன் மகளிடம்...

வேண்டுமென்றே செல்வியை பார்க்காமல் தலை குனிந்தவாறே சாப்பிட்டு கொண்டிருந்தான் ராயப்பு ..

மதினி எப்படி புள்ள வளர்த்திருக்காகன்னு ஆச்சரியப்பட்ட செல்வி அம்மா .. ஒரு பாத்திரத்தில கறிகொளம்பு ஊத்தி .. நான் அக்காட்ட போய் கொடுத்துட்டு வர்றேன்.. நீ மருமகன் தட்டுல கறி கொறையாம பார்த்துக்கன்னு தன் மகளிடம் சொல்லிவிட்டு சென்றாள் செல்வி அம்மா...

நடிப்பு போதும் அம்மா போய்ட்டாங்க.. என்று சொன்ன செல்வி.. தட்டில் தனக்கும் சோறுபோட்டு சாப்பிட அவன் அருகில் உட்காரும் போது..

ராயப்பு அவளை பலமாக தன் பக்கம் இழுத்து அவளை அணைக்க ... வேண்டாம்.. உங்க அத்தை உங்கள ரொம்ப நல்ல பையன்னு நினைக்கிறத கெடுத்துறாதிய என்றாள் செல்வி.. 

ராயப்பு வீட்டை விட்டு சென்றவுடன் மூக்கையூர்ல என்னைக்கு திருவிழான்னு தன் மகளிடம் தாய் கேட்க... 

இந்தமாச கடைசிலம்மா என்றாள் செல்வி...

இந்த வருஷம் குடும்பத்தோடு திருவிழாவுக்கு கண்டிப்பா போகனும் என்ற சொன்ன தன் அம்மாவின் நோக்கம் தெரிந்து சந்தோஷமானாள் செல்வி...

தூத்துக்குடில நடக்கிற மாதாவின் ரெண்டாவது தேரோட்டத்துக்கு நீ வருவியாம்...

இயேசு உன்னட்ட சொல்ல சொன்னார்னு யோவான் தன் தம்பி சந்தியாகப்பரிடம் சொன்னார்.

பரதர்மாதா, உபகார மாதா, ஜெபமாலை மாதா, காணிக்கை மாதா, ராஜகன்னி மாதா, செல்வமாதா, செங்கோல் மாதா, சகாயமாதா, பாத்திமா மாதா, மோட்ச அலங்காரினு அவுக அம்மாவுக்கு பெயரை மாத்தி மாத்தி வச்சு...உலகத்தில பாதிக்கு மேல் உள்ள ஆலயங்களில் தன் அம்மாவை தங்கவச்சுறுக்காறு..

தேரோட்டத்த போய் பார்க்க போகலைனா இந்த பகுதில நமக்கு கொடுத்த ஒத்த வீட்டையும் பறிச்சுக்கிட்டு அவுக அம்மாவ தங்க வச்சாலும் வச்சுறுவாறு
இயேசுபிரான் ..

நமக்கு எதுக்கு வம்பு ..தூத்துக்குடி போய் மாதாவை பார்த்துட்டு வந்துற வேண்டியதுதான்னு சந்தியாகப்பர் முடிவெடுத்தார்..

........... தொடரும் .....
- சாம்ஸன் பர்னாந்து 

Global Paravar


According to Rev Fr. Henry Heras S.J., one of the early experts on the Indus Civilization, the genuine descendents of Mohenjo Daro are Paravars, who live now on the south coast of Gulf Mannar and Sri Lanka. He even referred to the Indus Valley as Paravar Land.

The Adichanallur excavations, which date back 2600 years, provide substantial evidence of the presence of seafaring community in the area. Late Keeladi excavations are shedding further light on South Tamil Nadu’s previous maritime activities..

According to the 2300-year-old Tamil Sangam Literatures, Paravar is one of the Tamil land’s oldest communities. Paravar are described as the strongest people in Madurai Kaanchi, with more riches and bravery, and Korkai, the oldest Indian harbour, is mentioned as their strongest principal town. This community is described as ”Korkai Paravar” in multiple old Tamil records. Many other Sangam works, such as Ettuthokai and Paththupaattu, frequently mention the lives of paravars.

The Periplus Maris Erythraei (Periplus of the Erythrian Sea), written in the second half of the first century A.D. (about 60 A.D.) by an unknown Alexandrian-Greek author, discusses a passage to the east coast of India via the Gulf of Mannar, which runs between India and Sri Lanka. It covers the pearl fishing in the Gulf of Mannar, primarily on the Indian side of the Gulf, as well as the pearl fishery on Epidprus (Mannar Island) on the Sri Lankan side.

The old name “Taprobane” for Ceylon (now Sri Lanka) may have been called after the Paravars, according to Simon Casie Chitty in The Ceylon Gazetteer..

Claudius Ptolemy (AD 100 – c. 170), an Alexandrian-Roman geographer, wrote about the pearl fishery in the Gulf of Mannar. Marco Polo, a 12th-century traveller, visited the southern coastal settlements and made numerous references to the Paravar people.

In exchange for large monetary sacrifices, the Pandiyan Kings emancipated the Pravar from taxation and enabled them to govern themselves. According to S Rajendran and Freda Chandrasekaran’s book “History of the Indian Pearl Banks of the Gulf of Mannar,” the paravars enjoyed a near-monopoly on the Gulf of Mannar until the 16th century.

Paravar were a significant element of Tamil richest religion Saivism as one of Tamil’s earliest communities. The current Manapad sand hill was the site of Soorasamharam. Lord Murugan, a South Indian important deity, is still considered a relative of the Paravar. Paravar built Uthirakosamangai, one of the world’s oldest Hindu temples. The Paravar people have nurtured and cultivated the historically significant Trichendur Murugan temple for ages. In Paravar Community, there were many learned and spiritually boosted Saivites.

Madurai Meenachi was the Goddess of the Paravar. Paravar King Villavarayan oversaw the construction of Bhagavathi Amman temple in Kanniyakumari for their Sea Goddess in the 12th century.

When the Krishnanagar kingdom was founded in the fifteenth century, the Paravar Communinty aided financially in the making of the Hindu Kingdom to oppose the Muslim rising dominance. However, in later years the same Vijayanagar empire Madurai representative Nayak began backing Muslim commerce rather than the Paravar community for financial reasons. In this situation, the oldest Tamil community made a significant decision that altered the political and cultural landscape of Southern India forever.

In the mid-16th century, the Paravar were the first entire community in India to convert to Christianity. In actuality, the community paid money to the Portuguese in order to be converted. Paravar authorities embarrassment of Christianity was primarily a political and financial decision. The name ‘Fernando,’ a common surname, and other surnames were given to the Paravas by the Portuguese, who influenced them. Fernando, Fernandez, Motha, Mascarenhas, Victoria, Miranda, Devotta, De Cruz, De Souza, Gomez, Dalmeida, Vaz, Vaiz, Desoyza, Rodrigo, Rodriguez, and other surnames were given by St. Francis Xavier, other missionaries, and Portuguese officers during the 16th century.

The Paravas resided in a region known as “Costa da Pescaria” – or Land of the Pearls – by the Portuguese. Their spiritual, cultural, and literary prowess resulted in the first Tamil book to be published in modern print media. In 1554, the Tamil Bible, ‘Cardila,’ was printed, making Tamil the first Indian language to be printed. This occurred even before the arrival of the first printing press in Goa, India, in 1556. Cardila was printed at the request of the Portuguese government in Lisbon, spurred on by the visits of three paravars from Tuticorin, India, Vincent Nasareth, Joj Kavalko, and Thomas Cruz. The Parvar community of Tuticorin provided financing for the press.

During the Indian Independence Wars, Paravar leaders played a crucial role. In south India and Sri Lanka, business people from the Paravar Community were nourshed till 1950. J.L.P Roche of the Tuticorin Paravar Community was the first Tamil Nadu Food Minister after independence. I.X Pereira from Tuticorin was the second leader in the Sri Lankan government under Bhandaranayaka after independence..

Francis Tiburtius Roche, the first Latin Rite Indian Bishop, was from the Paravar community. Immanuel Fernando, the present Bishop of Mannar, is also from the same community.

அலைகளின் மைந்தர்கள் - 25

கொற்கை அருகே கரையடியூர் என்ற இடத்தில் (ஆறுமுக மங்கலம் குளக்கரையில்) பராமரிக்க படாமல் இடிந்த நிலையில் கிடந்த ஆலயத்தை ஒரு பெரியவர் கண்ணீரோடு அசையாமல் நின்று பார்த்து கொண்டிருந்தார். அருகில் வந்த இளைஞன்.. ஏன் அந்த கட்டிடத்தை பார்த்து அழுகிறீங்க என்று கேட்க....

கட்டிடமா.. இல்லையப்பா இது ஆலயம்.. பரதவர் அன்னை குடியிருந்த ஆலயம்..

பனிமய மாதாவா..?


ம்ம்.. 1668 ஆம் ஆண்டு டச்சுகாரர்களால் தூத்துக்குடியில் உள்ள நம் அன்னையின் ஆலயம் இடிக்கப்பட.. நம் தாயை தூத்துக்குடி சாதி தலைவர் கொற்கையில் உள்ள இந்த ஆலயத்தில் தான் முதன் முதலாக மறைத்து வைத்திருந்தார். அப்போது கொற்கை முத்து குளித்துரையின் தலைநகமாக இல்லை..

தூத்துக்குடி தானே நம் தலை நகரம்..? 

அது இப்ப ..

கொற்கை தலைநகரமா...?

பாண்டிய நாட்டை நம் மன்னர்கள் ஆளும்போது துறைமுக நகராகவும் துணை தலைநகராகவும் இருந்தது கொற்கை..

நம் பாண்டிய மன்னன் நெடியோன் பேரன் இரண்டாம் நெடுஞ்செழியன் மதுரையை ஆளும்போது அவருடைய மகன் வெற்றிவேல் செழியன் கொற்கையின் இளவரசராக பொறுப்பேற்றார்..

மாசாத்துவான் (கடல் வணிக பெருங்குடி) மகள் பரவத்தி கண்ணகிக்கு கொடுத்த தவறான தீர்ப்பால் இரண்டாம் நெடுஞ்செழியன் தன் உயிரை மாய்த்து கொண்டதால் கொற்கையில் இளவரசராக இருந்த அவருடைய மகன்.. வெற்றிவேல் செழியன் பாண்டிய பேரரசின் அரசராக மதுரையில் பொறுப்பேற்றார்.. தன் தகப்பன் செய்த தவறுக்காக கொற்கையில் கண்ணகிக்கு ஒரு கோவில் ஒன்றை கட்டிவிட்டுதான் (வெற்றிவேல் செழியன் நங்கை) மதுரை சென்றார் ..

கி.பி. 1 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கடல் பின் வாங்கியதால் கொற்கை மேடான நிலப்பகுதியாக மாறிபோக பாண்டியர்கள் பழையகாயலை துறைமுகமாக மாற்றி பின் பரதவர்களின் கடல் வணிகம் பெருக பெருக புன்னகாயலையும் துறைமுகமாக மாற்றினார்கள்.. 

கடலிலிருந்து தூரமாக போனதால் கொற்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிய தொடங்கியது.. யாரும் பராமரிக்காததால் நம் அன்னையின் ஆலயம் இப்படி கிடக்கிறது...  அந்த ஆலய வரலாற்றை சொல்லிமுடித்தார் பெரியவர் ...

(கீழடி தொல்பொருள் ஆராய்ச்சி பாண்டியர்களின் பெருமை என்பது போல் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி கொற்கையில் வாழ்ந்த பரதவர்களின் எச்சங்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை என்பதுதான் சோகம்) .....

இரண்டு வருடங்களுக்கு பின் இலங்கையிலிருந்து வந்த ராயப்பு அண்ணன் தோமாஸ் தன் தம்பியை கூப்பிட்டு வேம்பாறுலயும் வைப்பாத்திலயும் நான் சொல்ற ஆள்ட்ட இந்த பொட்டலத்த கொடுத்துட்டு வா என்று சொல்ல, ராயப்பு கண்கள் நன்றியோடு.. சந்தியாகப்பர் கோவிலை பார்த்தது..

சரின்னா...

சொன்ன சொல் தட்டாத தம்பிய பார்த்து நெகிழ்ந்து போனான் தோமாஸ்..

( இவன் எதுக்கு போறான்னு அவனுக்கு எப்படி தெரியும்)

வேம்பாரில் இறங்கி தன் அண்ணன் சொன்ன பெயரை சொல்லி வீட்டை கண்டுபிடித்து பொருளை கொடுத்து விட்டு வேகமாக திரும்பினான்..

(அவனுக்கு இந்த ஊர் முக்கியமில்லைல)..

வைப்பாறில் இறங்கி செல்வி வீட்டை கடக்கும் போது வீட்டுக்குள்ளிருந்து இரண்டு மூன்றுபேர்குரல் கேட்டதால் பதறிகிட்டு திரும்பாமலே கடந்து போய் மூனுவீடு தள்ளி ஒரு வீட்டின் முன் பெயர் சொல்லி கூப்பிட..

கதவை திறந்தவள் இவனை பார்த்து பின்வாங்கியவுடன்.. உங்க அண்ணன் இலங்கையிலிருந்து கொடுத்துவுட்றுக்காறு.. இவ்வளவு தூரத்தில இருந்து வந்தும் இன்னைக்கு செல்விய பார்க்க முடியாது போல.. விரக்தியோடு பக்கத்திலிருந்த மாதா கோவிலுக்குள் நுழைந்தான்..

ராயப்பு கோவிலுக்குள் நுழைவதை பீடத்திலிருந்து பார்த்த மோட்ச அலங்காரி மாதா.. இவனா.. கட்டிக்க போறவள கண்ணுல காமிங்க அம்மான்னுல வேண்டுவான்.. ஒரு அம்மாட்ட என்ன கேட்கனும்னு கூட தெரியாதவன்ல இவன்..

எம்மா .. என் பொண்டிட்டிய கண்ல காமிங்க.. ராயப்பு சாஷ்டாங்கமாக கோவில் தரையில் குப்புறபடுத்தான்.

தேவமாதா தலையிலடித்து கொண்டார்கள்...

கோவிலை விட்டு வெளியே வந்த ராயப்பு நடந்து வரும்போது, அவனிடம் பொருள் வாங்கியவள் அவள் வீட்டு வாசலில் நின்றிருந்த செல்வியிடம் தன் கையிலிருந்த கிராம்பையும் ஏலக்காயையும் காட்டி இதுலாம் இவுங்கதான் கொண்டு வந்து தந்தாங்கன்னு ராயப்பை பார்த்து வெட்கத்தோடு சொன்னாள்.

ராயப்பு வேண்டுமென்றே செல்வியை பார்க்காதாவாறு தலையை குனிந்து கொஞ்ச தூரம் நடக்க..

ஊருக்கு ஊரு ஆள் இருக்கும் போது நான் எதற்கு.. பின்னாலிருந்து செல்வி அவனை சீண்டியபடி நடந்து வர... விருட்டென்று செல்வியின் வீட்டுக்குள் நுழைந்தான் ராயப்பு ..

எப்படி இவ்வளவு தைரியமா எங்க வீட்டுக்குள்ள நுழையுறிய..

உங்க அப்பா கேட்டா நான் உங்க மருமகன்னு சொல்லுவேன்..

ம்ம் .. கொழுப்புத்தான் ..

அவன் அருகில் வந்து அவன் கையில்

தன் தலையை சாய்த்தவாறு நின்றாள் செல்வி..

திருவிழா முடிஞ்சு அடுத்த வாரம் நமக்கு கல்யாணம். அம்மா சொல்லிட்டாங்க...

சரி .. நான் கெளம்புறேன்..

அவன் கைகளை இறுக்கி பிடித்தவாறு.. இன்னும் கொஞ்ச நேரம் சினிங்கினாள்..

மூக்கையூருக்கு புறப்பட கட்டுமரத்தில் ஏறியவன் பக்கத்தில் தண்ணீருக்குள் மூழ்கி கிடந்த வள்ளத்த கயிறு கட்டி கூட்டமா நெறைய பேரு மாதாவே.. மரியேன்னு சொல்லி கரைய இழுக்குறத பார்த்து அவுங்க பக்கத்துல போய்..

நான் மாதாவுக்கான அம்பா பாடல் பாடவா என்றான் ராயப்பு..

சரி... பாடு என்றார்கள் சந்தோஷமாக..

ஏலோ .. இலா

ஈலோட்டி வாங்கு

அட ... வாங்குட தோழா ..

வந்தா தருவேன்..

தேங்காயும் மிளகும்..

தெரிவட்ட பாக்கும்..

அட ..பரிவட்டம் பார்க்க..

மஞ்சே நெஞ்சே ..

அட.. மஞ்சே நெஞ்சே

மணமுள்ள செண்பகம் ..

மணமுள்ள சென்பகம்..

சென்பக வடிவே ..

சென்பக வடிவே ..

திருமுடிக்கழகே..

வருகுது திருநாள்..

வருகுது திருநாள்..

தேரோட்டம் பார்க்க..

தேரோட்டம் பார்க்க..

தேரான தேரில் நாச்சியா தேரில்

நாம் என்னும் தேரில்

ஒடியே வருவாள் ...

ஒடியே வருவாள் ஒரு முத்தம் தருவாள்

தந்திடு தாயே ..

தந்திடு தாயே..

ஒவல்ல ஒவே ..ஏலல்ல ஏலோ ...

(ராகத்தோடு படிக்கவும்)

ஏய் .. நல்லா அம்பா போடுறானே இவன் எந்த ஊர்க்கார பையன்..?

நான் மூக்கூர்காரன் ....

.......... தொடரும் .....

- சாம்ஸன் பர்னாந்து 

அலைகளின் மைந்தர்கள் - 24

செல்வி கோபமாக அந்த இடத்தை விட்டு கடந்து சென்ற பிறகு.. ராயப்பு கடற்கரைக்கு திரும்பி அங்கே சென்று பார்க்க... விற்பதற்காக மணலில் குவிச்சு வச்சுட்டு வந்த மீன்கள் அருகே அங்காடி விற்ப்பவள் பாதுகாப்பாக நின்றாள்.. நான் மட்டும் இல்லைனா இந்நேரம் காக்காவும் கள்ளபிராந்தும் பாதி மீனை கொண்டுபோயிறுக்கும்.. அண்ணா.. ஒரு அக்கா பின்னாடி போனியள்ள அவுங்க நீங்க கட்டிக்கப்போறவுகளா..?
ஆம.. உனக்கெப்படி தெரியும்..

அவுக மொறச்சு பார்த்ததும் பதறிக்கிட்டு பின்னாடி ஒடினியள்ல அதான் கேட்டேன்.. இப்பவுலாம் நண்டும், சிண்டும் அக்குறும்பு புடிச்சதாதான் இருக்கு.. மீன்களை விற்று முடித்து வலைகளை கட்டுமரத்திலிருந்து இறக்கி கடற்கரை மணலில் நல்ல அகலமாக விரித்து காயப்போட்டுட்டு... எல்லா வேலையும் முடிஞ்சுட்டுன்னு கறிமீனை கையில எடுத்துட்டு வீட்டுக்கு செல்லும் போது பக்கத்து வீட்டு வாசல்ல நின்ற செல்வி அவனிடம் எதுவும் பேசாமல் தலையை குனிந்தவாறு மௌனமாக நின்றாள்..

வீட்டுவாசல் வரை சென்ற ராயப்பு திரும்பி செல்வியிடம்..
வீட்டுக்குள்ள வா.. என்றதற்கு

நான் வரல என்றாள்..

ஊருக்கு திரும்பி போறதுக்குல்ல வைப்பாத்தா அடி வாங்காம போகமாட்டா போல.. ராயப்பு வாய்க்குள் முனங்க..

ம்ம்.. அடிப்பிய இவுகளுக்கு சும்மாதான் பெத்து போட்டுறுக்கு..

அப்ப நீ என் பொண்டாட்டி இல்லையா..?

மௌனமாக நின்றாள் செல்வி..

வீட்டில் தன் அம்மா இல்லாததால் கொண்டுவந்த மீனை தரையில உட்கார்ந்து அருவாமனையில சுரண்டி கொண்டிருந்தான் ராயப்பு..

அங்காடி விக்கிறவள வர சொல்லியிருக்கலாம்ல.. சோறு கொளம்பு பொங்கி கொடுப்பால்ல... முதுகுக்கு பின்னாலிருந்து கிண்டலாக கேட்ட செல்வியை பார்த்து கோபமாக திரும்பியவனை.. மொதல்ல எந்திரிங்க.. தரையில் அமர்ந்து மீனை சுரண்டி சுத்தம் செய்து, சோறு பொங்க அடுப்பு பத்தவச்சா செல்வி ..

சமச்சு முடிச்சவுடனே நான் கிளம்புறேன் என்றவளை கையை பிடித்து இழுத்து பக்கத்தில் உட்காரவைத்து.. இன்னைக்கு ரெண்டு பேரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடுவோம் என்ற ராயப்பிடம்...

கையைவிடுங்க எனக்கு எதுவும் வேண்டாம்...

அப்ப நீ சமச்சத எடுத்துட்டு போ.. நான் பட்டினியா கெடந்துக்கிறேன்.. 

ராயப்பு அருகில் அமர்ந்து தலை குனிந்தவாறு விசும்பி கொண்டே சாப்பிட்டாள்..

நமக்கு கல்யாணம் முடியுறதுக்குள்ள என்னைய நீ சாகடிச்சுறுவ.. ராயப்பு உடைந்த குரலில் சொல்ல..

கண்ணீரோடு நிமிர்ந்து பார்த்த செல்வி.. ஊர்ல என்னோடு சேர்ந்து திரியுறவள்ளாம் புள்ள பெத்துட்டா தெரியுமா உங்களுக்கு.. எல்லாரும் என்னை கேலி பன்றாளுவ.. கொமரி முத்திட்டா கல்யாணம் நடக்காதாம்.. ஏதாவது குறையாஇருக்கும்னு சொல்லுவாங்கலாம்...

என் நிலைமையை புரிஞ்சுக்கடி... வியாபாரத்துக்கு வேம்பார் கூட்டாளியோடு ரெண்டுவருஷத்துக்கு முன்னாடி இலங்கைக்கு போன எங்க அண்ணன் அடுத்த மாசம் நடக்கிற ஊர் திருவிழாவுக்கு வர்றானாம்.. அவனுக்கு எங்க அக்கா மகளை பேசி முடிக்கத்தான் எங்க அம்மா கடலாடியில இருக்கிற அக்கா வீட்டுக்கு போயிறுக்காக.. எங்க ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ள கல்யாணம்னு எங்க அம்மா சொல்லியிருக்காக.. கண்கள் கலங்கியவாறு எனக்கு மட்டும் உன்மேல ஆசையில்லையா..அவளை தன் அருகில் இழுத்து தன் தொடையை செல்வியின் தொடைமேல் வைத்து கடைசி சோத்துருண்டையை அவளுக்கு ஊட்டினான் ..

வழிந்தோடிய கண்ணீரோடு உள்வாங்கிய அவள் வெகுநேரம் வரை சோத்துருண்டையை விழுங்கவுமில்லை... ராயப்பு அவள்மீது படிந்திருந்த தன்
தொடையை அகற்றவுமில்லை... 

புன்னகாயல் கடல் வணிகத்திற்கு மட்டுமல்ல முத்து குளித்தலுக்கும், போர்த்துகீசிய மறை போதகர்களுக்கும் தலைமையாய் இருந்தது.. தூத்துக்குடி, புன்னகாயல் பரதவர்களை முத்துகுளித்தலுக்கு டச்சு நிர்வாகம் அழைத்தபோது.. முத்து சலாபத்திற்க்கு செல்லுமுன் உங்களின் மறை போதகர்கள் எங்களை மந்திரிக்க கூடாது.. உங்களின் பேராசைக்காக கடலை வசியப்படுத்தும் மந்திரவாதிக்கு நாங்கள் பணம் கொடுக்க மாட்டோம். எங்களின் இயேசு சபை குருக்கள் முத்து சலாபத்திற்க்கு எங்களோடு வந்து மந்திரித்தால் மட்டுமே முத்து குளித்தலுக்கு செல்வோம் என துணிவாக அறிவிக்க ..

தங்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டி ஊர் தலைவர்கள் இருவரை ஓராண்டு சிறையில் அடைத்தார்கள். அப்போதும் கூட பரதவர்கள் அடிபணியவில்லை. யாரும் டச்சுகார்கள் கோவிலுக்கு செல்லகூடாது என்று முத்துகுளித்துறையின் ஊர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.. டச்சுகாரர்களால் அவர்களுக்கு மதரீதியாக எவ்வளவோ இடஞ்சல் வந்தாலும் இருநூறு வருடத்திற்க்கு முன்பு அவர்களின் அரசர் பாண்டியாபதியின் உத்தரவை அடுத்து அனைவரும் கிறிஸ்த்துவத்திற்கு மாறியதை இதுவரை அரச கட்டளையாகவே நினைத்து வாழ்ந்து வந்தது பரதவ இனம்..

வீட்டுக்குள் அசந்து தூங்கி கொண்டிருந்த ராயப்ப தட்டி எழுப்பி போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு நகரும் போது அவன் கால்ல லலுக்னு ஒரு மிதி மிதிச்சுட்டு போனா செல்வி அப்பத்தான் தன்னப்பத்தின நெனப்பு இருந்துகிட்டே இருக்கும்னு...

நடுநிசி நேரம்.. பனைமரத்திலிருந்து ஒரு உருவம் கீழே இறங்கும் போது வேகமாக தன்னை நெருங்கி கொண்டிருக்கும் குதிரையின் காலடி சப்தம் கேட்டு பயந்து போய் மீண்டும் மரத்தில் ஏறி அமர்ந்தது.. சந்தியாகப்பர் வாளோடு குதிரையில் கடந்து போய் கொண்டிருந்தார்.. இந்தாளு ஒருத்தரு.. குதிரை வச்சிறுக்கம்னு ஊரை காக்கிறம்னு சொல்லி நேரம் காலம் தெரியாம பொசுக்கு பொசுக்னுதான் சுத்திகிட்டு திரிவாறு..

இந்த நேரத்தில தான் புருஷன் பக்கத்துல உட்கார்ந்து ஆசைதீர பார்த்துட்டு வரலாம். அதையும் கெடுத்து போட்டாறு...ஏக்கத்தோடு பனைமரத்திலிருந்து ராயப்பு வீட்டையே பார்த்து கொண்டிருந்தாள் நூறு வருடங்களுக்கு மேலாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் உருவமற்ற மாரியம்மா....

........ தொடரும் .......
- சாம்ஸன் பர்னாந்து 

அலைகளின் மைந்தர்கள் - 23


மூக்கையூர் கோவில் திறப்புவிழா முடிஞ்சு ஒரு வருஷத்த தாண்டிட்டு.. இன்னும் ஆண்டவர திரும்ப போய் பார்க்கல. திருவிழாவுக்கு வந்தவரும் கோபத்துல உம்முன்னு இருந்தாரு.. எந்த கோரிக்கையும் வைக்காம அவர போய் பார்த்துட்டு வருவம்ன்னு நெனச்ச சந்தியாகப்பர் போனதடவை மாதிரியே தன் கூடப்பிறந்த சகோதரர் யோவானையும் துணைக்கு கூட்டிட்டு போவோம்ன்னு நெனச்சார்..

நீ அவர மதிக்கலைன்னு உன்மேல உள்ள கோபத்தில என்னைய என்ன ஏதுன்னு கூட கேட்கமாட்டேங்காரு.. நான் வரலைன்னு திடமா மறுத்துட்டார் யோவான்..

ஆண்டவரை நெருங்கும் போது..

மோயிசன் அவர் அருகில் நின்று பேசி கொண்டிருந்தார்..

ரெண்டுபேரும் சேர்ந்து எந்த கடலை பொளக்க போறாங்கன்னு தெரியலையே... திடீர்னு ஞாபகம் வந்தவராக மோயிசன் கானான் பிரதேசத்துல செங்கோல வேற தொலச்சுட்டம்னு சொன்னாரு.. இப்ப என்ன பண்ணுவாங்கன்னு தெரியல..

சந்தியாகப்பர பார்த்ததும் உத்தரவு ஆண்டவேரே... அவரிடமிருந்து விலகி சென்றார் மோயிசன்..

என்ன ஆளையே இங்கிட்டு காணோம்.

நோய்களிலிருந்து மக்களை நல்லா பாதுகாக்கிறியாம். மத்த எல்லோரும் சொல்றாங்க... Keep it up என்றார் கடவுள்..

திருதிருவென முழித்த சந்தியாகப்பரிடம் தொடர்ந்து நல்லா பண்ணுயா என்றார் கடவுள்..

அவருக்கென்ன.. உலகம் பூரா சுத்துறவறு. எங்கயாவது பேசுற மொழியை இங்க வந்து நம்மள்ட்ட சொல்லி காமிப்பாரு... வந்த குதிரையில் ஏறி மூக்கையூருக்கு திரும்ப புறப்பட்டார் சந்தியாகப்பர்..

செல்விய பார்த்து ஆறேழு மாசமானதால ரொம்ப சோர்ந்து போய் இருந்தான் ராயப்பு.. கடலுக்கு கூட ஒழுங்கா செல்றதில்லை.. ஒருநாள் செல்விய பார்க்கனும்னு ஆவேசத்துல நரிப்பையூர் வரைக்கும் நடந்து போய் பின் நிதானிச்சு தன்னால அவளுக்கு பிரச்னை வரக்கூடாதுன்னு திரும்பி வந்துட்டான்..

என்னம்மா வைப்பாத்துகாரங்க வீட்ல கூட்டமாயிருக்கு.. ராயப்பு தன் அம்மாவிடம் கேட்க.. அவள் மகள் சமஞ்சுட்டா.. ரெண்டுநாள்ள தலைக்கு தண்ணி ஊத்துறாகளாம்..

வெளுப்புக்கு வள்ளங்கள் கடலுக்கு போகும்போது.. ஒரு வள்ளம் மட்டும் வைப்பாரிலிருந்து விடிவெள்ளிய கணக்கு பன்னி மூக்கையூரை நோக்கி சென்றது... ஒமல்ல உள்ள மீனை கடற்கரையில் கொட்டி குனிந்தவாறு ரகம் பிரித்து கொண்டிருந்தான் ராயப்பு..

திடிரென ஒரு வள்ளம் தன் அருகில் கரை பிடித்து... ஆண்களும், பெண்களுமாக வள்ளத்திலிருந்து இறங்கினார்கள்... வள்ளத்துல இருந்து இறங்கிய செல்விய பார்த்து சத்தோஷத்துல அப்படியே சிலையா நின்னுட்டான் ராயப்பு.. அந்த நேரத்தில அங்காடி விக்கிறவ அவன் பக்கத்துல வந்து கொட்டான தலையிலிருந்து இறக்கினாள்.. திரும்பி பார்த்த செல்வி இவர்கள் இருவரும் ஒன்றாக நிற்பதை பார்த்து ராயப்பை முறைத்து பார்த்தபடியே சென்றாள்..

யாத்தே.. இன்னைக்கு நான் செத்தேன். சும்மாவே வைப்பாத்தா கிண்ணாரம் சுத்துவா.. இன்னைக்கு நம்ம கத முடிஞ்சுச்சு..

அண்ணே மொச்சபயிறு வாங்கலையா.. இவ ஒருத்தி.. மீனை விக்காம அப்படியே போட்டுட்டுஅவளை நோக்கி ஓடினான் ராயப்பு.. தன்னை பின் தொடர்ந்து வேகமாக நடந்து வரும் ராயப்பை பார்த்து தாமசிச்சு நடந்து ஒரு பனையின் மறைவில் நின்றாள் செல்வி..

தனக்கு எதிரே வந்து மூச்சிறைக்க நின்றவனிடம்.. காலைலயே உங்கள தேடி வந்துட்டா போல...?

இன்னொருத்தி இருக்கிறதால தானே என் நெனப்பு உங்களுக்கு வரல.. முன்னமே தெரிஞ்சுருந்தா உங்கள பார்க்க இங்க வந்திருக்க மாட்டேன்னு கோபமாக சொன்னவளிடம்..

கேந்தி ஏத்தாத பார்த்துக்க..

ராயப்பு தன் இரு கைகளையும் செல்வி கழுத்தருகே கொண்டுபோய்... கொதவலைய (குரல்வளை) நெறிச்சு ஒன்னைய கொன்னுபோடுவேன்.. நானே ஒன்னைய பார்க்க முடியாம கோட்டிக்காரன் மாதிரி இந்த ஊர்ல அலையுறேன்.. பக்கத்திலே நின்று உன்னை பார்க்கனும்னு அவ்வளவு ஆசையா ஒடிவந்தா.... எப்படியும் உன் நெனப்புலயே என்னை சாவடிச்சுறுவடி ...

செல்வி... தூர இருந்து அவள் அம்மாவின் குரல் கேட்க.. இந்தா வர்றேன்.. ராயப்பை முறைத்து கொண்டே சென்றாள் செல்வி..

கி.பி. 1658 ல் கொழும்பிலிருந்து வந்த டச்சு படை தூத்துக்குடியையும், அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் முழுவதுமாக ஆக்கிரமித்து. அந்த பகுதியிலுள்ள பெரிய ஆலயங்களான வேம்பார், தூத்துக்குடி, புன்னகாயல், மணப்பாடு இவற்றில் தூத்துக்குடி ஆலயத்தை மட்டும் முற்றிலுமாக தரைமட்டமாக்கிவிட்டு மற்ற மூன்று ஆலயங்களையும் தங்களின் வணிக கிட்டங்கியாக மாற்றியிருந்தார்கள்..

கி.பி.1695 ஆம் ஆண்டு சாதி தலைவர் இடத்தில் கட்டப்பட்ட மணப்பாடு பரலோகமாதா ஆலயம் வாணிப கிட்டங்கியாக மாற்றப்பட்ட போது அங்கு வசித்த சில குடும்பங்கள் கோவில் இல்லாத ஊர்ல குடியிருக்க கூடாதுன்னு மணப்பாட்டிலிருந்து உள் நாட்டிற்க்குள் அமராபுரம் என்ற சிற்றூருக்கு குடிபெயர்ந்தது...

உள் பகுதிகளில் டச்சுகாரர்களின் ஆதிக்கம் இல்லாததால் சிறிய அளவிலான பரிசுத்தஆவி ஆலயம் ஒன்றை கட்டி வழிபட்டார்கள்... 1710 ல் இவர்களுக்கும், பரதவர்களுக்கும் ஏற்ப்பட்ட உடன்படிக்கையை அடுத்து, டச்சு நிர்வாகம் யேசுசபை குருக்களை அழைத்து ஆலயங்களில் திருப்பலி நடத்தி கொள்ள அனுமதி அளித்தது...

இனி பரதவர்களை துன்புறுத்த மாட்டோம் என்ற அவர்களின் வாக்குறுதி செய்தியாக பரவி.. டச்சுகாரர்களின் மிரட்லுக்கு பயந்து உள் நாடுகளில் வசித்த மக்கள் மீண்டும் கடற்கரைக்கு திரும்ப தொடங்கினர்.. அமராபுரத்தில் தங்கியிருந்தவர்கள் பிற்காலத்தில் மணப்பாடு திரும்பி பரலோகமாதா கோவில் அழிக்கப்பட்ட அதே இடத்தில் அமராபுரம் நினைவாக பரிசுத்த ஆவி ஆலயத்தை எழுப்பினார்கள் ...

....... தொடரும் .......

- சாம்ஸன் பர்னாந்து 
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com