வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 27 November 2021

உலக சாதனையில் புன்னைக்காயல்

1586 இல் அருட்பணி. அண்டிரிக் அடிகளாரால் புன்னைக்காயலில் முதன் முதலில் அச்சுக்கூடம் நிறுவப்பட்டது.. இந்த அச்சுக்கூடத்தில் FLOS SANCTORUM (அடியார் வரலாறு) என்ற நூல் அச்சிடப்பட்டது என்ற வரலாற்று உண்மையை "UNIVERSAL ACHIEVERS" BOOK OF RECORDS இல் பதிவு செய்து உலகில் தமிழுக்கென்று முதன்முதலில் 1586 இல் அச்சுக்கூடம் புன்னைக்காயலில் இருந்ததை உறுதிசெய்து சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

மதுரையில் 27.11.2021 அன்று நடந்த இந்நிகழ்ச்சியில் அருள்முனைவர் அமுதன் அடிகள், புன்னைக் காயல் ஊர்க் கமிட்டி தலைவர் திரு.அமல்சன், துறைமுகக் கமிட்டி தலைவர் திரு. நாதன், முனைவர் திரு. பெவிஸ்டர், எழுத்தாளர் நெய்தல் அண்டோ, மற்றும் ஊர் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com