Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

பரதவ தீவுகள் (பகுதி 1)

பரதவ தீவு என பரதவர் நாம் உரிமை பாராட்டி கொண்டாட வேண்டிய தீவுகள் இவை, காரணம்..........

பரதவர் எனும் பண்டை தமிழ் திணை தொல்குடி அயலார்களின் கொடுவாளி லிருந்து தப்பித்து இன்று பரதவர் என சரித்திரங்களை மீட்டெடுக்க உயிர் தந்த பரவனின் கன்னித் தீவுகள் இவை......

(1) 1532ல் முத்து குடி பணியார பாம்பட கலவரம் பரதவன் தலைக்கு நாலு பணம் தலை தலையாய் கொய்யப் பட்ட போது தலைமறைவான பரதவ சமூகத்திற்கு தலைமறைவு வாழ்க்கை தந்து தலை தப்பிக்க வைத்த தலைமன்னார் தீவுகள் நான் சொல்லும் 23 பரதவ தீவுகள். 1532 லிருந்து சுமார் 4,5 வருடங்களுக்கு மேலாக பரதவர்கள் குழந்தையும், குட்டியுமாக தலைமறைந்து வாழ்ந்தது இங்கே தான்

(2) 1537 ல் மதமாற்றம் கிருத்துவ போத்துகீசிய பின் புலத்தில் கடலை மீட்டெடுத்தோம் ஆனால்..... ஆனால் 1539ல் மீண்டும் காவலாய் இருந்த போர்சுகீசிய கடற்படை கொச்சின் திரும்பிய நாளில்  கோழிக்கோடு சமாரின்  படைகளால் குமரி முதல்  வேம்பார் வரை பரதவ கிராமங்களும், பரதவ உயிர்களும் உடமைகளும் சூரையாடப் பட்டது. ஆயிரமாயிரம் பரதவர்கள் மடிந்தார்கள். அப்போதும் தப்பி பிழைக்க பரதவர்கள் தேடியது இந்த தீவுகளைத் தான்.

(3) மீதமிருந்த பரதவ இறைஞர்கள் (இன்று பரதவனாய் நான் வாழ காரணமாய் இருந்த முப்பாட்டன் எனக்கு இறைஞன் தானே) புறநானூறு வீரம் காட்டி வென்றெடுத்த வேதாளை போர்களத்தின் போர் வியூக கேந்திரமே கரைதீவு எனும் முசல் தீவுதான்.

(4) கீழக்கரை, காயல்பட்டணம் எனும் மூர்களின் குடியேற்றங்கள் சிதைக்கபட்டு மீண்டும் கரை வாழ்வு வாழ்ந்த போது பழி வாங்க காத்திருந்த நாயக்க அரசும், மூர் இன சமாரியனும் கை கோர்த்து 15 வருடங்கள் கழிந்து 1555 லே புன்னக்காயலை முற்றுகையிட்டு பெர்சிய கடல் கொள்ளையன் இரப்பாளி மூலம் கையகப்படுத்திய போது கீழக்கரையில் பாய் விலக்கி இளைப்பாறியிருந்த இரப்பாளியின்  கொள்ளையர் பட்டாளத்தை  பரதவ தலைமை பட்டங்கட்டி மார்  பதுங்கி கிடந்தது பாய்ந்து தாவி அடித்து காயல் நகரை மீட்டெடுத்ததும் இந்த தீவுகளின் மூலம் தான்.

இன்னும் இருக்கிறது இதற்கான தரவுகள்

அதற்கு முன்பு  பரதவ தீவுகளின் பெளதீக அமைப்பை பார்ப்போம்.....

1 வான் தீவு [ 0.160 சதுர கிமி ] 
2 காசு பார் தீவு [ 0.195 சதுர கிமி ] 
3 கரையச்சுழி தீவு [ 0.165 சதுர கிமி ]
4 விலங்குச்சுழி தீவு [ 0.010 சதுர கிமி ]
5 உப்புத் தண்ணி தீவு [ 0.295 சதுர கிமி ]
6 புழுவுன்னி சல்லி தீவு [ 0.062 சதுர கிமி ]
7 நல்ல தண்ணி தீவு [ 1.10 சதுர கிமி ]
8 அண பார் தீவு [ 0.11 சதுர கிமி ]
9 வாடை மடை தீவு [ 0.067 சதுர கிமி ]
10 அப்பத் தீவு [ 0.286 சதுர கிமி ]
11 பூவரசன் பட்டி தீவு [ 0.003 சதுர கிமி ]
12 தளரி தீவு [ 0.752 சதுர கிமி ]
13 வலைத் தீவு [ 0.102 சதுர கிமி ]
14 முள்ளி தீவு [ 0.103 சதுர கிமி ]
15 கரைத்தீவு / முசல் தீவு [ 1.31 சதுர கிமி ]
16 மணலி தீவு [ 0.25 சதுர கிமி ]
17 மணலி குட்டித் தீவு [ 0.024 சதுர கிமி ]
18 பூமறிச்சான் தீவு [ 0.166 சதுர கிமி ]
19 புலி வாசல் தீவு [ 0.30 சதுர கிமி ]
20 குருசடி தீவு [ 0.66 சதுர கிமி ]
21 சிங்லே தீவு [ 0.13 சதுர கிமி ]

Thoothukudi (Tuticorin) group (Four Islands):
1. Vaan Tivu, 16.00 ha, 8.83639°N 78.21047°E
2. Koswari Island, 19.50 ha, 8.86879°N 78.22506°E
3. Kariyashulli Island, 16.46 ha, 8.95409°N 78.25235°E;
*4. Vilangushulli Island, 0.95 ha, 8.93815°N 78.26969°E.
*Due to excessive coral mining, 
Vilangushulli Island island is now 
1 metre below mean low tide level.

There were two more islands named Pandayan and Punnaiyadi at 8.78075°N 78.19536°E. But these were destroyed during the construction of the new artificial deep-sea Tuticorn Port.
There are numerous other nondescript islands located close to Thoothukudi city. Of these Muyal (or Hare) Thivu and Nalla Thanni Islands attract visitors during weekends and festival seasons.

Vembar group (Three Islands):
5. Uppu Thanni Island, 22.94 ha, elevation 4 m, 9.08921°N 78.49148°E
6. Puluvinichalli Island, 6.12 ha, elevation 5.5 m, 9.10320°N 78.53688°E
*7. Nalla Thanni Island, 101.00 ha, elevation 11.9 m, 9.10667°N 78.57885°E.
*Nalla Thanni Island island was populated recently.

Kilakarai group (Seven Islands):
8. Anaipar Island, 11.00 ha, elevation 2.1 m, 9.15294°N 78.69481°E
9. Valimunai Island, 6.72 ha, elevation 1.2 m, 9.15354°N 78.73052°E
10. Appa Island, 28.63 ha, elevation 6.4 m, 9.16582°N 78.82596°E
11. Poovarasan Patti, 0.50 ha, elevation 1.2 m, 9.15413°N 78.76695°E
12. Talairi Island, 75.15 ha, elevation 2.7 m, 9.18133°N 78.90673°E
13. Valai Island 10.10 ha, elevation 3.0 m, 9.18421°N 78.93866°E
14. Mulli Island, 10.20 ha, elevation 1.2 m, 9.18641°N 78.96810°E;

Mandapam group (Seven Islans):
*15. Musal or Hare Island, 124.00 ha, elevation 0.9 m 9.19912°N 79.07530°E
16.Manali Island, 25.90 ha, 9.21564°N 79.12834°E
17. Manali-Putti Island, 2.34 ha 9.21581°N 79.12800°E
18. Poomarichan Island, 16.58 ha 9.24538°N 79.17993°E
19. Pullivasal Island, 29.95 ha 9.23699°N 79.19100°E
*20. Kurusadai Island, 65.80 ha 9.24690°N 79.20945°E
21. Shingle Island, 12.69 ha, elevation .6m 9.24174°N 79.23563°E.

Thanks to Mr T. V. Antony Raj Fernando
For more details visit https://tvaraj.com/

- கடல்புரத்தான் 

ஆசந்திப் பவனி பாடல் - 2


பாவத்தின் காத்திரமே – ஓசுவாமி எங்கள்
பாவத்தின் காத்திரமே

பூங்காவிலேகிய – நீங்காத சோகத்தால்
தாங்காமல் செந்நீர் வேர்த்ததும் – உள்ளம் நடுங்க
தாங்காமல் செந்நீர் வேர்த்ததும்

பன்னிருசீஷரில் – துன்மன யூதாசு
கன்னத்தில் முத்தம் செய்ததும் – காட்டிக் கொடுத்து
கன்னத்தில் முத்தம் செய்ததும்

பின்னமிலா உமை – அன்னாசு வீட்டினில்
கன்னத்தடிக்க நேர்ந்ததும் – துஷ்டன் கரத்தால்
கன்னத்தடிக்க நேர்ந்ததும்

பற்றில்லாப் பாதகர் – கற்றூணில் சேர்த்துமை
நிஷ்ரேமாயடித்ததும் – செந்நீரொழுக
நிஷ்ரேமாயடித்ததும்

முண்முடி சூட்டவும் – கண் மறைத்தாட்டவும்
எண்ணில்லா நிந்தை சாட்டவும்  - யூதர்கள் கூடி
எண்ணில்லா நிந்தை சாட்டவும்

முரணுற்ற பாதகக் கரணிக்கன் பிலாத்துவால்
மரணத் தீர்வையை ஏற்றதும் – சிலுவை தன்னில்
மரணத் தீர்வையை ஏற்றதும்

நீளச்சிலுவையை -தோளினில் தாங்கியே
தாழ விழுந்தெழுந்ததும் – கால்கள் தள்ளாடி
தாழ விழுந்தெழுந்ததும்

திருத்துகிலானத்தை – உரித்தலால் நாணியே
பெருத்தவமான முற்றதும் – தலை கவிழ்ந்து
பெருத்தவமான முற்றதும்

அருள் கருணாகர – திருக்கரங்கால்களில்
உருகாணிகள் அறைந்ததும்  - சிலுவை மீது
உருகாணிகள் அறைந்ததும்

குருசினில் தொங்கியே – திருவுரைபோதித்து
இறுதி மரண முற்றதும் – உடல் துடித்து
இறுதி மரண முற்றதும்

தேவனே நீர் சிந்தும் – திருஇரத்தததாலெங்கள்
பாவத்தைப் போக்கி இரட்சியும் – தயை கூர்ந்தெங்கள்
பாவத்தைப் போக்கி இரட்சியும்

எந்தையே நின்திரு – ஐந்து காயங்களை
சிந்தித்து தோத்திரம் செய்குவோம் – அனுதினமும்
சிந்தித்து தோத்திரம் செய்குவோம்

- சித்திரக்கவி செ. முத்தையா ரொட்ரிகோ, வேம்பாறு. 

Tamil saw its first book in 1578

The history of publishing and printing in Tamil is as interesting and rich as the language itself.

The first book dates back to October 20, 1578. On the eventful day, Portuguese missionary Henrique Henriques (also Anrique Anriquez) published ‘Thambiraan Vanakkam' with paper imported from China.

Tamil historian Pulavar S. Raju says the 10x14 cm book had 16 pages of 24 lines each and had the very Tamil font that was then used on palm leaves and stones.

The book was a translation of the Portuguese ‘Doctrina Christam,' authored by Francis Xavier. Mr. Raju says the book was published as a result of Father Henriques' efforts to have a prayer book in Tamil.

The book was printed in Kollam using a printing machine imported from Portugal in 1556. “This was the first book to be published in an Indian language,” he points out.

That was the age when Vijayanagar Empire King Sriranga Rayar the first (1578-1586), Mysore ruler Raja Woodayar (1578-1617), Madurai ruler Veerappa Nayakar (1572-1595) and Thanjavur's Achuthappa Nayakar (1572-1614) were still using copper plates and stones for disseminating information.

Prior to ‘Thambiraan Vanakkam,' a Tamil book was published, but in Portuguese script. Mr. Raju says the book, ‘Carthila e lingoa Tamul e Portugues,' was printed in Lisbon, the capital of Portugal.

Father Henriques was born in 1520 in Vila Vicosa, Portugal. After his education at the University of Coimbra in Portugal, he arrived in India in 1546. The missionary was so fond of Tamil that he replaced ‘Amen' with ‘Om' while greeting people, says Mr. Raju.

He also authored ‘Christiani Vanakkam' (1579), ‘Confesenario' (1580) and ‘Adiyaar Varalaaru' (1586). He died on February 6, 1600 in Punnaikayal and was buried in Tuticorin.

Mr. Raju says much of the books published for long thereafter had to do with Christianity. The first Tamil book to be published in Tamil was Thirukkural in 1812, thanks to the efforts of the then Chennai Collector Francis White Ellis, who established the Chennai Kalvi Sangam.

It was only in 1835 that Indians were permitted to establish printing press.


Thanks: The Hindu

Ancient and Modern Ships.

VICTORIA AND ALBERT MUSEUM
SCIENCE HANDBOOKS.

A N C I E N T  A N D  M O D E R N

S H I P S.

PART I.

WOODEN SAILING-SHIPS.





BY
SIR GEORGE C. V. HOLMES, K.C.V.O., C.B.,

HON. MEMBER I.N.A., WHITWORTH SCHOLAR.
FORMERLY SECRETARY OF THE INSTITUTION OF NAVAL ARCHITECTS
WITH SEVENTY-FOUR ILLUSTRATIONS.
(Revised.)

LONDON:
PRINTED FOR HIS MAJESTY'S STATIONERY OFFICE,
By WYMAN AND SONS, Limited, Fetter Lane, E.C.
——
1906.
To be purchased, either directly or through any Bookseller from
WYMAN & SONS, Ltd., Fetter Lane, London, E.C.; or
OLIVER AND BOYD, Edinburgh; or
E. PONSONBY, 116, Grafton Street, Dublin;
or on personal application
at the Catalogue Stall, Victoria and Albert Museum, S.W


Price One Shilling and Sixpence in Paper Wrapper, or
Two Shillings and Threepence in Cloth.




The Sumerian Flood Story



The Sumerian flood story includes a depiction of a large vessel which is packed with various objects and, presumably, animals, clearly showing a basis for the later Old Testament flood story of Noah and the ark.

The British Museum, London has put on display an amazing 4000 year old ancient Mesopotamian tablet. This is full of Cuneiform inscriptions and it describes Noah's Ark like in the bible, but different. This tablet was discovered some years ago, but now it has been deciphered. It gives more information about how to build Noah's Ark, like construction manual.  This tablet is the first time description of Noah's Ark was found. It has been known for a long time  that the flood story is in origin a  Sumerian story. 

This ancient tablet states that an ark - contrary to what most of us imagine - is a round vessel. In order to survive a major flood, one needs to built it 220 feet in diameter, with 20 feet high walls. It should have two levels and a roof, and be divided in to sections to separate the animals. The cuneiform tablet suggest using ropes, reeds and bitumen as building materials. 

Thanks: www.ancientvisitors.blogspot.com

FOUR THOUSAND YEARS AGO INDIANS LANDED IN AUSTRALIA


A new study has confirmed India’s early arrival in Australia......

Genetic evidence suggests that just over 4 millennia ago a group of Indian travellers landed in Australia and stayed. The evidence emerged a few years ago after a group of Aboriginal men’s Y chromosomes matched with Y chromosomes typically found in Indian men. Up until now, the exact details, though, have been unclear.

But Irina Pugach from the Max Planck Institute for Evolutionary Anthropology may have recently solved the thousand-year-old case. 4,000 years before the First Fleet landed on our fair shores, Indian adventurers had already settled and were accepted into the Indigenous Australian culture.


A lesson in spinning string, Central Australia.
Image: Wikimedia Commons.
By studying the single-nucleotide polymorphisms and their patterns, Dr Pugach revealed a diverse tapestry of ancestry, one different from the lineage of New Guineans or the Philippines. The study found a pattern of SNPs that is only found in Indian genetics, specifically the Dravidian speakers from South India. Dr Pugach’s results were consistent with the Y-chromosome data found years earlier. Using both results she calculated exactly when India arrived in Australia.

Dr Pugach estimates this to be around 2217 BC. An interesting time for both Australia and India. Indian civilisation was just about formed and Australian culture and wildlife were rearranging.

The Indus Valley civilisation (India) emerged between 2600 BC and 1900 BC. During this period, Indus Valley managed to develop seaworthy boats, which they used to trade with their neighbours: The Middle East. This new technology was used to get to Australia.

There is evidence of a shift in technology that coincides with the time Indians were thought to have arrived in Australia. Indigenous Australians switched their palaeolithic crude, stone tools, for neolithic refined tools. Again around about the time India washed up in Australia, the way food was collected and cooked changed, particularly the preparation of the cycad nut. An important source of food for early Australians, the cycad nut is quite toxic until the toxins are drawn out. The indigenous method always involved roasting the nut, but by 2000 BC Indigenous Australians were removing the toxins via water and fermentation. Similarly, the nut, which is found in Kerala in Southern India is commonly dried or roasted. The last rather important piece of evidence that suggests Indian settled in Australia is our beloved dingo.

The dingo has always been an enigma. No one really knows how or why it ended up in Australia. We know it probably exterminated the Tasmanian Tiger on Mainland Australia (apart from the dingo-free island known as Tasmania) and we know it didn’t originate here. The dingo has a striking resemblance to wild dogs found in India and so may have travelled with the first Indian settlers to our Island. However, there are similar looking dogs found in New Guinea and South East Asia.

Whatever the case, modern genetics has highlighted a part of Indigenous Ancestry previously lost to the world. Makes you think what else we’ll find.

இலங்கையில் புழங்கிய முத்துக்குளிப்புச் சொற்கள்


இலங்கையில் புழங்கிய முத்துக்குளிப்புச் சொற்கள் என்னும் இக்கட்டுரை, மிகப் பழைய காலம் முதல் ஏறத்தாழ 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இலங்கையின் முத்துக்குளிப்புத் துறையில் பயின்று வந்த சொற்கள் தொடர்பானது. இலங்கையின் முத்துக்குளிப்புப் பகுதி இலங்கைத் தீவின் வட மேற்கில் உள்ள நீர்கொழும்பு முதல் மன்னார் வரையிலான கரையோரப் பகுதியை அண்டிய மன்னார்க் குடாப் பகுதியாகும். இப்பகுதி நீண்டகாலமாகத் தமிழ் அரசான யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அத்துடன், இலங்கையின் முத்துக்குளிப்புத் தொழிலில் இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த கரையோரப் பகுதி மக்களுடன் பெருமளவிலான தமிழ்நாட்டுக் கரையோரப் பகுதி மக்களும் ஈடுபட்டிருந்தனர். தமிழகத்தின் பாண்டிநாட்டுக் கரையோரப் பகுதிகள் பண்டைக்காலம் தொட்டே முத்துக்குளிப்புக்குப் பெயர் போனவை. இதனால், தென் தமிழ்நாடு, இலங்கையின் வடபகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய முத்துக்குளிப்புப் பிரதேசத்தில் இத்தொழில் சார்ந்த பல தமிழ்ச் சொற்கள் உருவாகிப் பயன்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

முத்துக்குளிப்புச் சொற்கள்

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளில் கூட புழக்கத்தில் இருந்த சொற்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதையும் காண முடிகிறது. முத்துச் சிப்பிகள் விளையும் இடங்கள், முத்துகுளிக்கும் முறை, முத்துக் குளிப்போரும் படகோட்டிகளும் வேலை செய்யும் முறையும் அவர்களது பழக்கவழக்கங்களும், முத்துக்களின் தர அளவீடு போன்ற பல்வேறு துறைகளில் தமிழ்ச் சொற்கள் பயன்பட்டுள்ளன

முத்து விளையும் இடங்கள்

பார் - கடலுக்கு அடியில் முத்துச் சிப்பிகள் விளையும் இடம் "பார்" எனப்பட்டது. இலங்கையின் முத்துக்குளிப்புப் பகுதியில் 19 பார்கள் வரை இருந்ததாகத் தெரிகிறது. அவை அவற்றுக்கு அண்மையில் உள்ள இடங்களின் பெயர்களால் அழைக்கப்பட்டன. அவற்றுட்சில பின்வருமாறு:[1]

கொண்டச்சிப் பார்
சிலாபம் பார்
காரைதீவுப் பார்
பெரிய காரைப் பார்
செவ்வல் பார்
மோதரகம் பார்
அரிப்புப் பார்

துணைப் பொருட்கள்

வள்ளம் - வள்ளம் என்பது மரக்கலம், தோணி போன்ற பொதுப் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், முத்துக்குளிப்பில் இதற்குச் சிறப்புப் பொருள் இருந்ததாகத் தெரிகிறது. முத்துக்குளிப்பு நடத்துவதற்கு வாய்ப்பான நிலைமைகள் உள்ளனவா என அறிவதற்கு அக்கால அரசாங்கம் 10,000 தொடக்கம் 20,000 வரையான முத்துச் சிப்பி மாதிரிகளை எடுத்து விளைச்சல் அளவை மதிப்பிடுவது வழக்கம். இதற்குப் பயன்பட்ட மரக்கல வகை வள்ளம் எனப்பட்டது. இவற்றில் சேகரிக்கப்படும் சிப்பிகள் இடுக்குகளுக்குள் மறைந்து விடாதபடி, துருத்திக்கொண்டு இருக்கக்கூடிய வளைகள் எதுவும் இல்லாமல் இதன் உட்புறம் மட்டமாக இருக்கும்.[2]

பருமன் வகைப்பாடு

பெட்டி - முத்துக்களை மதிப்பிடுவதில் அவற்றின் பருமனும் முக்கியமானது. முத்துக்களை அளவின் அடிப்படையில் பிரிப்பதற்குப் 10 வேறுபட்ட அளவுகளைக் கொண்ட சல்லடைகள் பயன்பட்டன. இது பெட்டி எனப்பட்டது. சல்லடைகள் 3 அங்குல விட்டமும் ஒரு அங்குல ஆழமும் கொண்டவையாகப் பித்தளையினால் செய்யப்பட்டிருந்தன. அடிப் பக்கத்தில் சம அளவுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான துளைகள் இடப்பட்டிருக்கும். இவை மொத்தப் பரப்பில் நெருக்கமாக அமைந்திருக்கும். மிகப்பெரிய துளைகளைக் கொண்ட சல்லடை 20 துளைகளைக் கொண்டிருந்தது. அடுத்து, 30, 50, 80, 100, 200, 400, 600, 800, 1000 ஆகிய எண்ணிக்கையான துளைகளைக் கொண்ட சல்லடைகள் இருந்தன. இவற்றுள் 1000 துளைகளைக் கொண்ட சல்லடை மிகச் சிறைய துளைகளைக் கொண்டது. 1000 துளைகளைக் கொண்ட சல்லடையில் தொடங்கி 20 துளைகளைக் கொண்ட சல்லடை வரை ஒன்றன்பின் ஒன்றாகப் பயன்படுத்தி அரித்து முத்துக்களைப் 10 வகையாகப் பிரிக்க முடியும். இச்சல்லடைகள் மூன்று வகைளாகப் பிரிக்கப்பட்டுப் பெயரிடப்பட்டிருந்தன.[3]

செவ்வுப் பெட்டி - 20, 30, 50, 80 துளைகளைக் கொண்ட சல்லடைகள்வடிவுப் பெட்டி - 100, 200, 400 துளைகளைக் கொண்ட சல்லடைகள்தூள் பெட்டி - 600, 800, 1000 துளைகளைக் கொண்ட சல்லடைகள்

செவ்வியத் தன்மை

முத்துக்களின் தரத்துக்கான இன்னொரு அளவீடு அவற்றின் செவ்வியத் தன்மை. இது இரண்டு தன்மைகளில் தங்கியுள்ளது. ஒன்று வடிவம். முத்துக்களைப் பொறுத்தவரை இது அவற்றின் கோளத் தன்மை ஆகும். அடுத்தது, வெள்ளி போன்ற மினுக்கம். இந்த இயல்புகளை அடிப்படையாகக் கொண்டு முத்துக்கள் வகைகளாகப் பிரிக்கப்பட்டன. அவற்றின் பெயர்களும், விளக்கமும் வருமாறு:[4]

ஆணி - வடிவம், மினுக்கம் ஆகிய இரு தன்மைகளிலும் நிறைவாக இருப்பது.

அனதாரி - வடிவம், மினுக்கம் ஆகிய தன்மைகளில் ஏதாவது ஒன்றில் ஓரளவு குறையைக் கொண்டிருப்பது.

மாசங்கு (அல்லது சமதயம்) - வடிவம், மினுக்கம் ஆகிய இரண்டு தன்மைகளிலும் ஓரளவு குறைகளைக் கொண்டிருப்பது.

கலிப்பு (அல்லது கையேறல்) - வடிவம், மினுக்கம் ஆகிய இரண்டு தன்மைகளிலும் கூடிய குறைகளைக் கொண்டிருப்பது.

குறுவல் (அல்லது குறள்) - இரட்டை முத்து. சில வேளைகளில் இரண்டு ஆணிகள் ஒட்டியிருப்பது.

பீசல் - ஒழுங்கற்ற வடிவத்துடன் இரண்டுக்கு மேற்பட்ட முத்துக்கள் இணைந்திருப்பது. 

மடங்கு - மடிந்த அல்லது வளைந்த முத்துக்கள்.

வடிவு - பல்வேறு அளவுகளையும், வகைகளையும் கொண்ட அழகிய தொகுதி. 

தூள் - பொடி போன்ற மிகச் சிறிய முத்துக்கள்.

மாசுதூள் (அல்லது மாசிற்றூள்) - பத்தாவது சல்லடையூடாகச் செல்லக்கூடிய தூள் முத்துக்கள், கறைகளுடன் கூடியவை.

ஒட்டுமுத்து - சிப்பியின் ஓட்டுடன் ஒட்டி இருக்கக்கூடிய முத்துக்கள். இவை அரித்துப் பிரிக்கப்படுவது இல்லை. அவற்றின் அளவுகளைக் கருத்தில் எடுக்காமல் இன்னொரு வகையாகக் கொள்ளப்படுகின்றன.

எடை அலகுகள்

முத்துக்களின் பெறுமதியை அறிவதற்கு அவற்றில் எடையை அளப்பது முக்கியமானது. இலங்கையில் முத்துக்கள் பின்வரும் அலகுகளில் அளக்கப்பட்டன:[5]

கழஞ்சு - இது 7.75 ஆங்கில "கிரெய்ன்" (ஏறத்தாழ 502.19 மில்லிகிராம்) ஒரு பித்தளை எடைக்குச் சமமானது.

மஞ்சாடி - மஞ்சாடி ஒரு மரத்தின் விதை. முழுமையாக முதிர்ந்த விதைகள் ஏறத்தாழ ஒரே எடை கொண்டவை. 20 மஞ்சாடிகள் ஒரு கழஞ்சு எடைக்குச் சமம்.

குண்டுமணி - இதுவும் ஒரு விதையே. அளவில் சிறிய இது அரை மஞ்சாடிக்குச் சமம்.

செவ்வு எடை - தரம் குறைந்த வகை முத்துக்களின் பண மதிப்பை அறிவதற்கு, அவற்றின் மஞ்சாடி எடையை நேரடியாக அவற்றின் சந்தை விலையால் பெருக்கி அறிந்தனர். ஆனால் தரம் கூடிய முத்துக்களின் பண மதிப்பை அறிவதற்கு முத்துக்களின் மஞ்சாடி எடையின் இருபடியின் முக்காற் பங்கைச் சந்தை விலையால் பெருக்குவது வழக்கம். இந்த "மஞ்சாடி எடையின் இருபடியின் முக்காற் பங்கு" செவ்வு எடை எனப்பட்டது.
செவ்வு எடை = (மஞ்சாடி எடை)2 x 3/4

குறிப்புகள்

Vane, G., Perl Fisheries in Ceylon, Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society Volum X No. 34, 1887. p. 16.
Vane, G., Perl Fisheries in Ceylon, 1887. p. 19.
Vane, G., Perl Fisheries in Ceylon, Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society Volum X No. 34, 1887. p. 39.
Vane, G., Perl Fisheries in Ceylon, 1887. p. 21, 22, 33, 34.
Vane, G., Perl Fisheries in Ceylon, 1887. p. 16.

இவற்றையும் பார்க்கவும்


.

ஏலேல சிங்கன் கதை

“ஏலேலசிங்கனின் பொருள் ஏழுகடல் போனாலும் திரும்பும்” – என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்தப் பழமொழிக்குப் பின்னால் சுவையான ஒரு கதை உண்டு.

தமிழ் வேதமாகிய திருக்குறளை நமக்குத் தந்த திருவள்ளுவரின் புரவலர் ஏலேல சிங்கன். அவர் பெரும் கடல் வணிகர். ஏராளமான செல்வத்தைக் குவித்தவர். ஆயினும் அந்தச் செல்வத்தை அறவழிகளில் செலவிட்டார். திருவள்ளுவரையும் ஆதரித்தார். இவரைப் பற்றி செவிவழியாக வந்த பல செய்திகளைச் சுருக்கமாக தமிழ் என்சைக்ளோபீடியா ‘அபிதான சிந்தாமணி’ தருகிறது.

திருவள்ளுவர் நெசவுத் தொழில் செய்து வந்தார். இவரிடம் நூல் வாங்கப்போவது வழக்கம். ஒருநாள் ஏலேல சிங்கன் வீட்டுக்குப் போனார். அவர் சிவபூஜையில் இருப்பதாச் சொல்லி வள்ளுவரை வீட்டு வாசலிலேயே தடுத்து நிறுத்திவிட்டனர். வள்ளுவர் உடனே புன்சிரிப்புடன், அவர் குப்பத்தில் பூஜை செய்கிறாரா அல்லது வீட்டு அறையில் பூஜை செய்கிறாரா? என்று கேட்டார். இதைக் கேட்ட ஏலேலசிங்கன் அவரிடம் ஓடி வந்து வெட்கத்துடன் நின்றார். அதாவது த்ரிகால முனிவரான வள்ளுவருக்கு ஏலேல சிங்கன் மனம் அலைபாய்வதும், அலைகடலில் வரும் கப்பல் பற்றி எண்ணிக் கொண்டிருப்பதும் தெரிந்துவிட்டது. உடல் பூஜை அறையில் இருந்தாலும் உள்ளம் கப்பல் வணிகத்தில் உலா வந்தது. அன்று முதல் வள்ளுவரை அவர் ஆன்மீக குருவாக ஏற்றார்.

ஒரு முறை ஏலேலசிங்கனின் பொருட்களை ஏற்றி வந்த கப்பல் தரை தட்டியது. வள்ளுவரிடம் ஓடோடி வந்து வழி ஏதும் உண்டா என்று கேட்டு விழி பிதுங்க நின்றார். அறவழியில் சேர்த்த பொருள் ‘போ’ என்றாலும் போகாது என்பது வள்ளுவருக்குத் தெரியும். ஆகவே ஏலேலசிங்கன் பெயரைச் சொல்லி கப்பலை கயிறு கட்டி இழுக்கச் சொன்னார். கப்பல் கரை சேர்ந்தது. அதிலிருந்துதான் கடலில் செல்லுவோர் பாதுகாப்பாகச் சென்று திரும்ப ‘’ஏலேல ஐலசா’’ என்று கோஷம் இடும் வழக்கம் வந்ததோ என்று எண்ண வேண்டி இருக்கிறது!!

ஏலேல சிங்கனிடம் ஏராளமான பொருட் செல்வம் குவியவே அதைத் தங்க கட்டிகளாக மாற்றி வைத்திருந்தார். அற வழிகளில் செலவிட்டது போக எஞ்சியதைக் கடலில் கொண்டு போட்டு விட்டார். சில காலம் கழித்து மீனவர்கள் பலர் அவர் வீட்டை நோக்கி ஓடி வந்தனர். அவர்கள் பிடித்த சுறாமீனின் வயிற்றில் தங்கக் கட்டிகள் இருந்ததாகவும் அதில் ஏலேல சிங்கனின் பெயர் பொறிக்கப் பட்டிருப்பதால் திருப்பிக் கொடுக்க ஓடிவந்த தாகவும் சொன்னார்கள். வள்ளுவர் வாய்மொழிப்படி வாழ்க்கை நடத்தினால் செல்வத்தை ‘’போ, போ’’ என்று விரட்டினாலும் போகாது!! இதை ஒட்டித்தான் வள்ளுவனும் பாடினான்:

அழக்கொண்ட எல்லாம் அழப் போம், இழப்பினும்
பிற்பயக்கும் நற்பாலவை (குறள் 659)

பிறர் கண்ணீர் சிந்துமாறு அழ, அழ பொருட்களைச் சேர்த்தால் அவர்களுடைய பொருட்கள் எல்லாம் அவர்களை அழ, அழ வைத்துவிட்டு ஓடிப் போகும். ஆனால் தூய்மையான வழியில் வந்த பொருட்களை, ஒருவர் இழந்தாலும், பின்னர் நல்லபடியாகவே முடியும் (குறள் 659)

இலங்கையில் ஏலேரா என்றொரு தமிழ் மன்னன் நீதியும் நேர்மையுமிக்க சீர் மிகு ஆட்சி நடாத்தினான். அவனை மனுநீதிச் சோழன் என்பாரும், ஏலேலா (காண்க: கல்கியின் பொன்னியின் செல்வன்) என்பாரும் உளர். ஆயினும் ஒரே பெயரில் பலர் இருந்ததால் இந்திய சரித்திரத்தில் இன்று வரை குழப்பம் நீடித்து வருவதை நாம் அறிவோம்.

வள்ளுவர் இறந்த பின்னர் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்தது ஏலேலன் என்றும் அவருக்கு மயிலையில் கோயில் எழுப்பித்தவன் ஏலேலன் என்றும் செவிவழிச் செய்திகள் கூறும்.

காமராஜருக்கு ஓர் கடிதம்






நன்றி:  கடல் புரத்தான் 

பால பரதன் 1947






Bharatha people's of Canada

Vandana Kattar Miller, 
Deputy Director of Outreach, 
Office of the Prime Minister of Canada.

Vandana Kattar shaking hands with the Indian PM during the official visit of Canadian PM to India

Vandana Kattar shaking hands with First Lady of Canada

கடந்த (2018) பெப்ரவரி திங்கள் நிகழ்ந்த கனேடியப் பிரதமர் ஜஸ்டின் டிரூடியோவின் 7 நாள் இந்திய சுற்றுப்பயணத்தின் பொழுது இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தக மற்றும் முதலீடு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளல் தொடர்பாக உடன்படிக்கைகள் கைச்சாத்திடப் பெற்றன. இப்பயணத்தில் அவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை பெப்ருவரி 23 ம் தேதி சந்தித்தார். அச்சந்திப்பின் பொழுது அவரின் முதன்மை செயலாளர் வந்தனா கற்றாரும் உடனிருந்தார். வந்தனாவின் மூதாதையர்கள் தென்னிந்தியாவின் தூத்துக்குடி மாவட்ட ஊரான வீரபாண்டியன்பட்டனத்தைச் சேர்ந்தவர்கள்.


Vandana was born and raised in Mississauga, Ontario. She attended the University of Toronto where she studied Political Science, History and French. After completing her degree, Vandana worked at TD Bank when she began volunteering for Navdeep Bains, then Member of Parliament (Mississauga-Brampton South). She eventually left TD Bank to pursue a career in politics and served in the provincial and federal governments until she started helping to get Justin Trudeau, Member of Parliament (Papineau), elected as Leader of the Liberal Party of Canada in 2013 and subsequently the Prime Minister of Canada in 2015. Most recently she was Director of Operations for the Hon. Navdeep Bains, now Minister of Innovation, Science and Economic Development Canada before going on maternity leave. She will assume her role in the Prime Minister's office upon her return.


Thanks: Jenson Fernando 

நூல் அறிமுகம்



பண்டைய தமிழரும் பரதவர் வாழ்வும் (ஆய்வு நூல்)

நாள் : 03-07-2004

ஆசிரியர்: கவிஞர் மீனவன் 

பதிப்பகம் : சிவசக்தி பதிப்பகம், நாகப்பட்டினம் .

பொன்மொழிகள் சில .....

> கடலிலே ஏற்றம் போட்ட கதை

> கடலிலே துரும்பு கிடந்தாலும், மன திலே ஒரு சொல் கிடவாது

> கடலிலே பிறக்கும் உப்புக்கும் மலையிலே விளைகிற நார்த்தங்காய்க்கும் தொந்தம்

> கடலிலே போட்டு சாக்கடையிலே தேடுகிறதா?

> கடலிலிட்ட புளி போல

> கடலில் கையைக் கழுவி விடுகிறதா?

 > கடலை அடைக்க கரை போடலாமா?

> கடல் உப்பையும் மலை நெல்லையும் கலந்தாற்போல

> கடல் திடலாகும், திடல் கடலாகும்

> கடல் நீர் நிறைந்து என்ன? காஞ்சிரை பழுத்து என்ன?

>கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?

> கடல் பெருகினால் கரையும் பெருகுமா?

> கடல் மீனுக்கு நீச்சுப் பழக வேண்டுமா?

> கடல் மீனுக்கு நுளையன் இட்டது சட்டம்

> கடலில் கரைத்த பெருங்காயம் போல

> கடலில் கையைக் கழுவி விடுகிறதா?

> கடலுக்கு கரை போடுவார் உண்டா?

> கடலை அடைக்க கரை போடலாமா?

> கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை

> கடல் வற்றில் கருவாடு தின்னலாமென்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு

> கடலைத் தூர்த்தாவது காரியத்தை முடிக்க வேண்டும்

> ஏலேல சிங்கனின் பொருள் ஏழுகடல் போனாலும் திரும்பும்
>கலக்கினும் தண்கடல் சேறு ஆகாதே—வெற்றிவேற்கை

> கடலாற்றாக் காம நோய், குறள் 1175

> பிறவிப் பெருங்கடல், குறள் 10

> நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் - குறள் 17

> கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடாநிலத்து --குறள் 496

> கடலன்ன காமம் - குறள் 1137

> கப்பல் ஏற்றிக் கடலில் கவிழ்த்தது போல

> கப்பல் அடிப்பாரத்துக்கு, கடற்கரை மண்ணுக்குத் தவுகெட்டாற்போல
நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெந்தலைப் புணரிக் குட கடற் குளிக்கும் (புறம்.2)

திரிசடைத் தீவு - 2


மறுநாள் டக்ளஸ் தன்னிடமிருந்த வானியல் வரைபடங்களைக் கொண்டு காற்றடிக் காலம் துவங்குவதற்கு எவ்வளவு நாட்கள் இருக்கிறது என்று கணித்தான். எழுபத்திமூன்று நாட்கள் மீதமிருந்தன. அதுவரை காத்திருக்க வேண்டியதுதான் என்றபடியே அவனும் தீவுவாசிகளைப் போலவே பகலில் மரநிழலில் படுத்துக் கிடக்கத் துவங்கினான். ஆனால் அவனது துப்பாக்கி வீரர்களால் அப்படியிருக்க முடியவில்லை. தன்னோடு பேச மறுப்பவர்களுடன் சண்டையிடவும் சிலவேளைகளில் அவர்களைத் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தவும் முயற்சித்தார்கள். ஒரு துப்பாக்கி வீரன் பட்டங்கட்டி வீட்டுப் பெண் ஒருத்தியின் உதடை அறுத்து எடுத்து விட்டதுகூட நடந்தேறியது. டக்ளஸ் கடலைப் பார்த்தபடியே இருந்தான். கடல், உலகின் ஆதி நிகழ்வுகளின் சாட்சிபோலவே தோன்றியது. கடல் எவ்வளவு மனிதர்களைக் கண்டிருக்கும். எவ்வளவு மாற்றங்களை உள் வாங்கியிருக்கும்.

கடலைப் பார்த்துக் கொண்டேயிருப்பது துப்பாக்கி வீரர்களுக்குச் சித்ரவதை தருவதாக இருந்தது. ஆரம்ப நாட்களில் தங்களுக்குள்ளாகப் பேசிக் கொண்டிருந்த துப்பாக்கி வீரர்கள் மெல்ல அதைத் தவிர்க்கத் துவங்கினார்கள். சமையற்காரன் தன்னையே வேறு ஆளாக நினைத்துக் கொண்டு பேசிக் கொள்பவனாகிப் போனான். மற்றவர்கள் அந்தத் தீவில் உள்ள மரம் செடிகளின் இலைகளோ அல்லது பறக்கும் வண்டுகளில் ஏதோவொன்று தங்களுடன் பேசினால் கூடப் போதும் என்பது போன்ற தீவிர மனநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தீவுவாசிகளுக்குக் கிடைப்பது போன்ற மீன்கள் தங்களுக்கு ஏன் கிடைப்பதில்லை என்று அவர்களுடன் சண்டையிட்டார்கள். எதைச் சாப்பிட்ட போதும் நாவில் ஒரே ருசியாக ஏன் இருக்கிறது என்று அவர்களுக்குப் புரியவேயில்லை.

டக்ளஸ் ஒவ்வொரு நாளும் அந்தத் தீவுவாசிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்தபடியே இருந்தான். ஆரம்ப நாட்களில் தொடர்பற்றது போல தெரிந்த பல விஷயங்கள் பிரமாதமான ஒழுங்கு ஒன்றின் வரிசையில் செயல்படுவதை அவன் உணரத் துவங்கினான். அந்தத் தீவு வாழ்க்கை பகலில் செயலற்றது போல தெரிந்தாலும் நூற்றுக்கணக்கான செயல்களால் பின்னப்பட்டிருந்தது அவனுக்குப் புரிந்தது. அலைகளை அவதானிப்பது, படகில் செல்வது, மீன்பிடிப்பது, சங்கு அறுப்பது, பிரார்த்தனை செய்வது, மழைக்காலத்திற்கான நெருப்பிற்கு வேண்டி காய்ந்த விறகுகளைச் சேகரிப்பது, கடினமான மீன் எலும்புகளை அறுத்து கத்தி செய்வது என்று அங்கே ஒரு தினசரி வாழ்க்கை எளிமையாக நடந்தேறிக் கொண்டிருந்தது.

காற்றடிக் காலம் துவங்கப் போகிறது என்பதை ஒரு மாலைநேரத்தின் ஓயாத கடல் அலையின் எழுச்சி காட்டித் தந்தது. அது போன்று உயரமாக அலைகள் சீறுவதை அதன் முன்பு அவன் கண்டதேயில்லை. அலைகள் சீறும்பாம்பின் நாக்கு போல துடித்துக் கொண்டேயிருந்தன. அலை வேகம் கண்டு மணலில் முளைத்த சிறுசெடிகள் கூட வேக வேகமாக நடுங்கிக் கொண்டிருந்தன. அன்றிரவு காற்று விசை கொள்ளத் துவங்கியது. பெருந்துயரம் ஒன்றின் ஆவேசமான கதறல் போன்று காற்றின் ஊளையிடும் சப்தம் உயர்ந்து கொண்டேயிருந்தது. அது கட்டுக்கடங்காமல் ஆவேசமாகி மொத்த தீவையே பிடுங்கி எறிந்துவிடுவது போலிருந்தது. டக்ளஸின் கூடாரத்தைக் காற்று பிடுங்கி வீசியது. மணலை வாரி அடித்தது. துப்பாக்கி வீரர்கள் தனியே நடப்பதற்குக் கூட பயந்தார்கள். யாரோ பதுங்கி வந்து முதுகில் அடிப்பது போல காற்று வீசியது. காற்றின் வேகம் அலைகளை உயரச் செய்தபடியே இருந்தது. வானம் தெரியாதபடி அலைகள் உயர்ந்தன.

அதன் பிந்திய நாட்களில் பகல் இரவாக காற்று வேகமெடுத்தபடியே சீறியது. ஆனால் காற்றடிக் காலத்திற்குப் பழகிய தீவுவாசிகள் எப்போதும் போல இயல்பாக தங்களது படகில் மீன்பிடிக்கச் செல்வதும் சமைப்பதும் விளையாடுவதுமாக இருந்தார்கள். ஆனால் டக்ளஸிற்கும் அவனது துப்பாக்கி வீரர்களுக்கும் காற்றின் உரத்த சப்தம் கேட்டுக் கேட்டு காது நரம்புகள் சிவந்து போய் துடித்துக் கொண்டிருந்தன. ஓசை அதிகமாகியதும் மண்டைக்குள் நரம்புகள் வெடித்து விடுவது போல வேதனை கொள்ளத் துவங்கின. காற்றில் அங்கிருந்த பாறைகள் கூடப் பறந்து போய்விடுமோ என்பது போலிருந்தது.

தீவுவாசிகள் எப்படிக் காற்றை எதிர்கொள்கிறார்கள் என்று டக்ளஸ் கற்றுக்கொள்ள முயற்சித்தான். ஆனால் அந்த சூட்சுமம் புரியவேயில்லை. காற்றடிக் காலத்தின் பகல் மிக மெதுவாக இருந்தது. உறக்கம், விழிப்பு இரண்டுமே வேதனை தருவதாக மாறியது. உலர்ந்துபோன கண்களுடன் அவர்கள் வெளிறிய வானத்தைப் பார்த்தபடியே இருந்தார்கள். காற்றின் வேகத்தில் கிழித்து எறியப்பட்ட இலைகள் தீவெங்கும் சிதறிக் கிடந்தன. காற்று ஒடுங்கவேயில்லை.

டக்ளஸ் உள்ளுர பயப்படத் துவங்கினான். எதற்காக இந்த வீண் முயற்சி. அவர்களைத் துப்பாக்கி முனையில் கடலில் அழைத்துச் சென்று முத்து குளிக்கும்படியாக வற்புறுத்தினால் என்ன குறைந்து விடப் போகிறது என்று ஒரு குழப்பம் உருவாகத் துவங்கியது. தன்னுடைய மன இயல்பைக் காற்று சிதைத்து வருவதை அவன் உணரத் துவங்கினான். அவனை மீறியே அவன் கோபப்பட்டான். கத்தினான். பசியும் தூக்கமும்காம உணர்ச்சிகளும் கூட தீவைச் சுற்றியிருந்த கடலின் எழுச்சியால் தூண்டப்படுவதும் கட்டுப்படுத்தப்படுவதையும் அவன் அறிந்து கொண்டபோது வியப்பாக இருந்தது. பல நேரங்களில் எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காமல் இருப்பதற்கு அங்கு வீசும் கடற்காற்றே காரணமாக இருந்தது.

சூறைக்காற்று உச்சத்தை தொட்ட ஒரு நாள் டக்ளஸ் ஆவேசமாகி, துப்பாக்கியை வானை நோக்கி வெடித்தான். பிறகு வெறி கொண்டவன் போல கத்தினான். இன்றைக்கு அவனுடன் படகை எடுத்துக் கொண்டு முத்துக் குளிக்க அவர்கள் உடனே புறப்பட வேண்டும் என்று மிரட்டினான். தீவுவாசிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை. சினத்துடன் அவன் தனது துப்பாக்கியால் பட்டங்கட்டி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆளின் பாதங்களில் சுட்டான். ரத்தம் பெருகியோடியபோதும் அந்த ஆள் வலியால் கத்தவேயில்லை. மற்ற ஆண்கள் டக்ளஸை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். காற்றடிக் காலம் முடியும்வரை அவனது மிரட்டல்களுக்கு அவர்கள் செவிசாய்க்கவேயில்லை. பின்பு ஒரு நாள் காலை சுக்ருத இலைகள் அசைவற்றுப் போயின. காற்று ஒடுங்கிக் கொண்டு விட்டது. கடல் இப்போது அலைகள் ஒடுங்கித் தணிந்திருந்தது. ஆலா குடும்பத்தின் ஆள் டக்ளஸைத் தேடிவந்து மறுநாள் காலை அவர்கள் முத்துப்படுகையைக் காண கடலுக்குள் போகலாம் என்று சொன்னான்.

விடிகாலையில் அவர்கள் இரண்டு நாட்டுப் படகில் புறப்பட்டார்கள். ஒரு படகில் டக்ளஸ் மற்றும் இரண்டு துப்பாக்கி வீரர்களும் மற்ற படகில் ஆலா குடும்பத்து மூன்று ஆண்களுமிருந்தார்கள். படகை வலித்தபடியே கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் முன்னால் செல்லச் செல்ல அடிவானம் வேக வேகமாகப் பின்னால் போய்க் கொண்டேயிருந்தது. திசை அறிய முடியாத கடலின் ஒரு புள்ளியில் அவர்களது படகு நின்றது.

ஆலா குடும்பத்தின் இரண்டு ஆண்கள் பிறை வடிவக் கல்லைக் காலில் கட்டிக் கொண்டு நீண்ட கயிற்றோடு கடலில் குதித்தார்கள். அவர்களுடன் தானும் காலில் ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு டக்ளஸ் குதித்தான். கடலின் அடிப்பகுதியை நோக்கி அவர்கள் சென்றபடியே இருந்தனர். கண்ணை யாரோ கையால் பொத்துவது போல நீர் முகத்தை மறைத்துக் கொண்டது. எடையற்ற உடல் சரிந்து அடியாழம் நோக்கி நழுவிக் கொண்டிருந்தது. பவளப்பாறை போல ஏதோ மினுங்கிக் கொண்டிருந்தது.

தன்முன்னே அசையும் நிழல்களைத் துரத்தியபடியே டக்ளஸ் கடலுக்குள் சென்றான். அவன் கண்கள் மெல்லிய வெளிச்சத்தை உணர்ந்தபோது தன்னோடு சேர்ந்து குதித்த இருவரையும் காணவில்லை. எது முத்து விளையும் படுகை, அவர்கள் எங்கே போனார்கள் என எதுவும் தெரியவில்லை. அவனுக்கு ஆத்திரமாக வந்தது. எப்படித் தன் கண்ணில் இருந்து மறைந்தார்கள். அவன் கடலுக்குள்ளாகத் தேடி அலைந்தான். ஓய்ந்து சலித்துப் போய் டக்ளஸ் படகிற்கு வந்தபோது துப்பாக்கி வீரர்கள் மயங்கிக் கிடந்தார்கள். டக்ளஸ் தனி ஆளாகப்படகை வலித்தபடியே திரிசடை தீவிற்கு வந்து சேர்வதற்குள் இரவாகியிருந்தது. தனது துப்பாக்கியுடன் அவன் ஆலா குடும்பத்தை நோக்கி ஓடினான். அவர்கள் ஒரு வரும் வீட்டில் இல்லை. கடலுக்குள்ளாகவே மூச்சடக்கி இருக்கக் கூடுமோ என்று தோன்றியது. விடிகாலை அவன் மறுபடியும் நாட்டுப் படகில் புறப்பட்டுச் சென்றான். அவனால் அந்த இடத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

ஆனால் அவன் திரும்பி வந்தபோது அதே ஆலா குடும்பத்து ஆண்கள் மிக இயல்பாக வீட்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தன்னை அவர்கள் ஏமாற்றி விட்டதாகக் கத்திக் கூச்சலிட்டான். வயதான மனிதன் மட்டும் பதற்ற மற்ற குரலில் முத்துப்படுகையில் விளைச்சல் இல்லை. காத்திருக்க வேண்டும் என்று சொன்னான். டக்ளஸால் அதை நம்பமுடியவில்லை. அவர்களைக் கொன்று விடப் போவதாக மிரட்டினான். அதை எவரும் சட்டைசெய்யவேயில்லை. கடலின் கூச்சலுக்குப் பழகிப் போனவர்கள் தனது மிரட்டலுக்கா பயப்படப் போகிறார்கள் என்று அவனுக்கே தோன்றியது. தான் இனி என்ன செய்வது என்று புரியாமல் அவன் குழப்பமடைந்தான்.

காற்றில் கிழிந்துபோன கூடாரத்திற்குப் பதிலாக ஒரு பாறையின் ஓரமாக மரத்தடுப்பு ஒன்றை உருவாக்கி அதில் தங்கியிருந்த டக்ளஸ் தனது கூடாரத்திற்குள்ளாகவே நாளெல்லாம் படுத்துக்கிடந்தான். அவனது உடல் கொதிப்பு கொண்டது. கண்கள் சிவந்து எரிச்சலூட்டின. மூத்திரம் கூட கடுகடுத்தது. இரவில் அவன் ஒளிரும் நட்சத்திரங்களைக் கண்டு பயந்து அலறினான். அவனுக்காகத் துப்பாக்கி வீரர்கள் பிரார்த்தனை செய்தார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு டக்ளஸ் படுக்கையில் இருந்து எழுந்து கொண்டான். தீவில் மஞ்சள் வெயிலடித்துக் கொண்டிருந்தது. உடலின் நீர்மை உறிஞ்சப்பட்டு தான் ஒரு காய்ந்த இலை போல உணர்ந்தான்.

இது நடந்த ஐந்தாம் நாளில் ஒரு துப்பாக்கி வீரன் கடலை நோக்கி ஓடி கத்திக் கூச்சலிட்டபடியே தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டான். அது மற்றவர்களின் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்தியது. அவர்கள் நடுக்கத்துடன் அந்தத் தீவிலிருந்து கிளம்பிப் போக இருப்பதாகச் சொன்னார்கள். டக்ளஸ் ஆத்திரமடைந்தான். அவர்களைத் தானே கொன்றுவிடப் போவதாகக் கத்தினான். அந்த மிரட்டல் அவர்களைத் தீவில் தங்க வைக்கப் போதுமானதாகயில்லை. முடிவில் டக்ளஸ் அறியாமல் அவர்கள் இரவோடு தப்பிப் போக முயற்சித்தார்கள். ஆனால் ஓநாய் போல அலைந்து கொண்டிருந்த டக்ளஸ் அவர்களை மடக்கிப் பிடித்து ஆயுதங்கள் மட்டும் தனக்கு வேண்டும் என்று வாங்கி வைத்துக்கொண்டு அவர்களை விடி காலையில் கிளம்பும்படியாகச் சொன்னான். மறுநாள் காலை துப்பாக்கி வீரர்களின் படகு செல்வதைத் தொலைவில் நின்று தீவுவாசிகள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். டக்ளஸ் மட்டும் தீவிலிருந்து போகவேயில்லை.

அவன் கடல்நண்டுகளைப் பிடித்து சமைத்துத் தின்பதும், காற்றில் அலையும் சுக்ருத இலைகளின் சப்தத்தை ரசித்தபடியும் நாட்களைக் கழித்தான். அந்தத் தீவும் மனிதர்களும் அவனுக்குப் பழகியிருந்தார்கள். தீவுவாசிகளால் தன்னை நேசிக்க முடியாது. தன்னாலும் அவர்களை நேசிக்க முடியாது. ஒருவேளை என்றாவது மனவேகம் முற்றி அவர்களைத் தானே கொன்று விடக்கூடும் அல்லது அவர்கள் வெறுப்பின் உச்சத்தில் என்றாவது தன்னைக் கொல்லவும் கூடும் என்று அவனுக்குத் தோன்றியது. இதில் யார் புலி – யார் வேட்டைக்காரன் என்று அவனுக்குப் புரியவேயில்லை.

மழைக்காலம் துவங்கியது. பகலிரவாக மழைபெய்தபடியே இருந்தது. கடலில் விழும் மழைத்துளிகள் அடையாளமின்றி பிரம்மாண்டத்தில் ஒளிந்து கொண்டுவிடுகின்றன. மிகுமழையில் கடற்கரையே தெரியவில்லை. நுரைத்துப் பொங்கி வழிகிறது கடல். காற்றில்லாத அடர் மழை. நனையாத இடம் என்று உள்ளங்கை அளவு கூட அந்தத் தீவில் இல்லை. முத்துக் குளிப்பவர்கள் ஒண்டியிருந்த குகையின் வாசலை டக்ளஸ் மழைக்குள்ளாகவே ஒரு நாள் கடந்தபோது அவர்கள் தண்ணீருக்குள் உட்கார்ந்திருப்பதைக் கண்டான். அப்போதும் அந்தக் கண்கள் அவனை வெறுப்பதையே உணர்ந்தான்.

டக்ளஸின் துப்பாக்கி வீரர்கள் பெங்கால் போய்ச் சேருவதற்குள் நோயுற்றுக் கடலிலேயே இறந்து போனார்கள். அவர்களில் ஒருவனாக டக்ளஸ் இறந்து போயிருக்கக் கூடும் என்று கவர்னர் முடிவு செய்திருக்க வேண்டும். அவனைத் தேடி வேறு படைப்பிரிவுகள் வரவேயில்லை. காலம் உருமாறிக் கொண்டேயிருந்தது.

ஒவ்வொரு ஆண்டின் காற்றடிக் காலத்திலும் அவர்கள் முத்துக் குளிக்க கிளம்புவார்கள். முன்பு போலின்றி இப்போது ஒரே படகில் அவர்கள் ஒன்றாகச் சென்றார்கள். டக்ளஸ் அவர்களோடு ஒன்றாகவே குதிப்பான். ஆனால் கடலின் உள்ளே அவனால் ஒருபோதும் முத்துப்படுகையைக் காண முடிந்ததேயில்லை. அவர்கள் எப்போதும் போல அவனைத் தனித்துவிடுத்துக் கரையேறிப் போய்விடுவார்கள். இன்னமும் முத்து விளையவில்லை என்ற பதில் அவனை அதே தீவில் காத்திருக்க வைத்தபடியே இருந்தது.

அவன் உருமாறிக் கொண்டேயிருந்தான். அவனுக்குள் நல்முத்துகளை அடைய வேண்டும் என்பதைத் தவிர வேறு ஆசைகள் அத்தனையும் வடிந்து போயிருந்தன. சில வேளைகளில் அவன் அந்தத் தீவில் அலையும் காட்டுப்பூனையொன்றைப் போலவே தன்னை உணர்ந்தான். சில வேளைகளில் அவன் தன்னை மணலில் துளையிடும் குழி எறும்பு போல நினைத்துக் கொள்வான். அவன் மனதில் இருந்த வேட்கைகள் வடிந்து விட்டன. ஒரேயொரு நெருப்பு. அதுவும் அணையாத பெருநெருப்பாக எரிந்து கொண்டேயிருந்தது. அது நல்முத்துகள் தனக்கு வேண்டும் என்பதே.. அதைத் தான் அறுவடை செய்த மறுநாள் அந்தத் தீவை விட்டு விலகிப் போய்விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். அதற்காக கடலைப் பார்க்கும் போதெல்லாம் அவன் மனது முத்துகள் விளைந்துவிட்டதா என்று உள்ளூர கேட்டுக் கொண்டேயிருந்தது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் படகில் ஐந்து வணிகர்கள் அந்தத் தீவிற்கு வந்து இறங்கினார்கள். அவர்கள் அன்னாசிப்பழங்களும் காடாத் துணிகளும் சாம்பி ராணியும் ஊதுபத்திகளும் கொண்டு வந்து தீவின் உள்ளே இருந்த சூதனி கோவிலில் வைத்து வழிபட்டார்கள். தீவுவாசிகள் அவர்களை வரவேற்றுக் கடற்சிப்பிகளையும் சங்கையும் அள்ளி அள்ளித் தந்தார்கள்.. தீவுவாசிகள் முத்துகளை ஒருபோதும் விற்பதில்லை என்பதையும் அவர்கள் அறுத்து எடுத்த முத்துகளை மருத்துவம் செய்வதற்காக அருகாமையில் உள்ள சூதனி கோவிலில் வைத்துப் போய்விடுவார்கள் என்றும் வணிகர்கள் சொன்னார்கள்.

டக்ளஸ் கடந்த மூன்று வருஷங்களாக முத்துகளுக்காக காத்திருப்பதாகச் சொன்னான். வணிகர்கள், முத்துகள் கடலில் விழும் கண்ணீர்த் துளிகள் என்றும் சூதனியின் கண்ணீர்த்துளிகள் கடலில் விழுந்தே முத்தாகிறது என்று அந்த மக்கள் நம்புவதாகச் சொன்னார்கள். சிறு வயதில் அப்படியான மாயக்கதையைத் தானும் கேட்டிருப்பதாக டக்ளஸ் சொன்னான். வணிகர்கள் தீவுவாசிகள் தந்த பொருட்களைத் தங்களது படகில் ஏற்றிக்கொண்டு புறப்படும் போது அவன் விரும்பினால் அவர்களோடு கூட வரலாம் என்றார்கள். டக்ளஸ் மறுத்துவிட்டான். அவன் கனவில் முத்துகள் வளர்ந்து கொண்டேயிருந்தன.

ஒன்பது வருஷங்களுக்குப் பிறகு ஒரு நாள் அதிகாலை திரிசடை வாசிகள் முத்துக் குளிப்பதற்காக டக்ளஸை அழைத்துக் கொண்டு கடலுக்குள் போனார்கள். டக்ளஸ் ஒடுங்கியிருந்தான். அவனிடம் பர பரப்பில்லை. கடலில் வீசி எறியப்பட்ட மரத்துண்டு மிதப்பதைப் போலவே தன்னை உணர்ந்தான். கடல் அவனுக்குப் பழகியிருந்தது. கண்ணால் காணும் கடல் வெறும் பொய்த் தோற்றம் என்பது புரிந்திருந்தது. தான் கடலினுள் முத்தைத் தேடிக் குதிக்கப் போவதில்லை என்று சொல்லி அவர்கள் உடலோடு சேர்த்துக் கட்டியிருந்த கயிற்றைப் பிடித்து இழுப்பவர்களில் ஒருவனாகப் படகில் இருக்கப் போவதாகச் சொன்னான்.

அவர்கள் கடலில் குதித்தார்கள். அடுத்த இரண்டாவது நிமிஷம் கடலின் உள்ளிருந்து ஒருவன் வெளிப்பட்டு முத்து விளைந்துவிட்டதாகவும் மறுநாள் அறுத்துவிடலாம் என்றும் உற்சாகமாகச் சொன்னான். முதன்முறையாக அவர்கள் தன்மீது அக்கறையோடு பேசுவதை டக்ளஸ் உணர்ந்தான். அவனால் நம்ப முடியவில்லை. ஒன்பது வருஷங்கள் காத்திருந்த முத்துகள் நாளை அவன் கைக்கு வந்துவிடும் என்பது மனதைக் களிப்படையச் செய்தது. தனது பயணத்திற்கான நாட்டுப்படகைத் தயார் செய்யத் துவங்கினான்.

மறுநாள் விடிகாலை பட்டங்கட்டியும் இரண்டு ஆண்களும் தயாராக இருந்தார்கள். டக்ளஸ் அவர்களுடன் கடலுக்குள் சென்றான். அன்றும் அவன் கயிற்றைப் பிடித்துக் கொள்பவனாகவே இருந்தான். இரண்டு மூங்கில் கூடைகள் நிறைய முத்துகளை அறுத்துக்கொண்டு வந்திருந்தார்கள். கரைக்கு வந்த பிறகு அவர்கள் சூதனி கோவில் முன்பாக இருந்த கல்பாறையில் சிப்பிகளைத் திறந்து பார்த்தார்கள். பெரிது பெரிதாக முத்துகள். சுக்ருத இலையொன்றைப் பறித்து அதில் முத்துகளை அள்ளி சூதனி முன்பாகப் படைத்து மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தார்கள். டக்ளஸ் முத்துகளை வியப்புடன் பார்த்தபடியே இருந்தான். அதன் வசீகரமும் அழகும் கடித்துத் தின்றுவிடலாம் போலிருந்தது. பிறகு பட்டங் கட்டி அவன் விரும்பினால் அத்தனை முத்துகளையும் அள்ளிக் கொண்டு புறப்படலாம் என்று சொன்னார்.

டக்ளஸ் ஆவேசத்துடன் முத்துகளை அள்ளி அதற்காகவே வைத்திருந்த சுருக்குப் பையிலிட்டுத் தனது இடுப்போடு சேர்த்துக் கட்டிக் கொண்டான். அங்கிருந்த ஒருவரோடும் பேசவில்லை. தனது நாட்டுப் படகை எடுத்துக்கொண்டான். கடலில் அவன் புறப்படத் தயார் ஆனபோது அதே குடும்பங்கள் கரையில் வந்து நின்று அவனை வெறித்துப் பார்த்தபடியே இருந்தன. அந்தக் கண்களில் இப்போது வெறுப்பில்லை. மாறாக ஏளனம், கேலி மட்டுமே ததும்பிக் கொண்டிருந்தது.

அவன் துடுப்பை வேகவேகமாக வலிக்கத் துவங்கினான். தீவு கண்ணை விட்டு மறையத் துவங்கியது. நடுக்கடலுக்கு வந்தபோது தொண்டை காய்ந்து தாகமாக இருந்தது. வெளிர்நீல வானத்தின்கீழ் அவன் மட்டுமே இருந்தான். கடலின் பிரம்மாண்டம் கண்கொள்ள முடியாமலிருந்தது. தனது நீர்க் குடுவையை வாயில் வைத்து உறிஞ்சியபடியே கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான். கடலின் மீது தயங்கித் தயங்கி வெயில் ஊர்ந்து கொண்டிருந்தது. தீவுவாசிகளின் கேலிப்பார்வை அவன் கூடவே வருவது போலிருந்தது.

எங்கோ அதிகாரத்தில் உள்ள ஒருவரின் அற்ப சந்தோஷத்திற்காகத் தனது இத்தனை ஆண்டு கால வாழ்க்கையை அர்த்தமற்றுச் செய்துவிட்டதைத் தான் தீவுவாசிகளின் கேலி வெளிப்படுத்துகிறதா? கடல் இத்தனை நாட்களாக அவனிடம் சொல்ல விரும்பியது இதுதானா? யோசிக்க யோசிக்க தீவுவாசிகளின் பரிகாச முகத்தின் உண்மை அர்த்தம் புரியத் துவங்கியது. துடுப்பு வலிப்பதை நிறுத்தி விட்டு அவன் இடுப்பில் கட்டியிருந்த சுருக்குப் பையை வெளியே எடுத்து முத்துகளைக் கையில் கொட்டிப் பார்த்தான்.

ஏனோ வாய்விட்டு அழவேண்டும் போலிருந்தது. அந்த முத்துகளைத் தடவிப் பார்த்தான். முத்துகளின் மீது தீவுவாசிகளின் தீராத வெறுப்பு பிசுபிசுப்பாகப் படிந்து போயிருப்பதை அவனால் உணர முடிந்தது. தான் ஒரு இழிபிறவி என்று தன்னைத் தானே சபித்துக் கொண்டான். கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதான். அவனை ஆறுதல்படுத்த அங்கே யாருமேயில்லை.

முடிவில் அடங்கமுடியாத மன வலியோடு தன் கையில் இருந்த முத்துகளைக் கடலில் வீசி எறிந்தான். பிறகு எந்தப் பக்கம் போவது என்று புரியாமல் கடலை வெறித்துப் பார்த்தபடியே இருந்தான். காற்று அவன் தலையைக் கலைத்து விளையாடிக் கொண்டிருந்தது. கடற்பறவையொன்று அவனைக் கடந்து மேற்காகச் சென்றது. நீண்ட யோசனையின் பிறகு மெதுவாக திரிசடை தீவை நோக்கித் தனது படகைச் செலுத்தத் துவங்கினான்.

About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com