பொன்மொழிகள் சில .....

> கடலிலே துரும்பு கிடந்தாலும், மன திலே ஒரு சொல் கிடவாது
> கடலிலே பிறக்கும் உப்புக்கும் மலையிலே விளைகிற நார்த்தங்காய்க்கும் தொந்தம்
> கடலிலே போட்டு சாக்கடையிலே தேடுகிறதா?
> கடலிலிட்ட புளி போல
> கடலில் கையைக் கழுவி விடுகிறதா?
> கடலை அடைக்க கரை போடலாமா?
> கடல் உப்பையும் மலை நெல்லையும் கலந்தாற்போல
> கடல் திடலாகும், திடல் கடலாகும்
> கடல் நீர் நிறைந்து என்ன? காஞ்சிரை பழுத்து என்ன?
>கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
> கடல் பெருகினால் கரையும் பெருகுமா?
> கடல் மீனுக்கு நீச்சுப் பழக வேண்டுமா?
> கடல் மீனுக்கு நுளையன் இட்டது சட்டம்
> கடலில் கரைத்த பெருங்காயம் போல
> கடலில் கையைக் கழுவி விடுகிறதா?
> கடலுக்கு கரை போடுவார் உண்டா?
> கடலை அடைக்க கரை போடலாமா?
> கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை
> கடல் வற்றில் கருவாடு தின்னலாமென்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு
> கடலைத் தூர்த்தாவது காரியத்தை முடிக்க வேண்டும்
> ஏலேல சிங்கனின் பொருள் ஏழுகடல் போனாலும் திரும்பும்
>கலக்கினும் தண்கடல் சேறு ஆகாதே—வெற்றிவேற்கை
> கடலாற்றாக் காம நோய், குறள் 1175
> பிறவிப் பெருங்கடல், குறள் 10
> நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் - குறள் 17
> கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடாநிலத்து --குறள் 496
> கடலன்ன காமம் - குறள் 1137
> கப்பல் ஏற்றிக் கடலில் கவிழ்த்தது போல
> கப்பல் அடிப்பாரத்துக்கு, கடற்கரை மண்ணுக்குத் தவுகெட்டாற்போல
> கப்பல் அடிப்பாரத்துக்கு, கடற்கரை மண்ணுக்குத் தவுகெட்டாற்போல
நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெந்தலைப் புணரிக் குட கடற் குளிக்கும் (புறம்.2)
வெந்தலைப் புணரிக் குட கடற் குளிக்கும் (புறம்.2)