ஆசந்திப் பவனி பாடல் - 2
பாவத்தின் காத்திரமே – ஓசுவாமி எங்கள்
பாவத்தின் காத்திரமே
பூங்காவிலேகிய – நீங்காத சோகத்தால்
தாங்காமல் செந்நீர் வேர்த்ததும் –
உள்ளம் நடுங்க
பன்னிருசீஷரில் – துன்மன யூதாசு
கன்னத்தில் முத்தம் செய்ததும் –
காட்டிக் கொடுத்து
கன்னத்தில் முத்தம் செய்ததும்
பின்னமிலா உமை – அன்னாசு வீட்டினில்
கன்னத்தடிக்க நேர்ந்ததும் – துஷ்டன் கரத்தால்
கன்னத்தடிக்க நேர்ந்ததும்
பற்றில்லாப் பாதகர் – கற்றூணில்
சேர்த்துமை
நிஷ்ரேமாயடித்ததும் – செந்நீரொழுக
நிஷ்ரேமாயடித்ததும்
முண்முடி சூட்டவும் – கண் மறைத்தாட்டவும்
எண்ணில்லா நிந்தை சாட்டவும் - யூதர்கள் கூடி
எண்ணில்லா நிந்தை சாட்டவும்
முரணுற்ற பாதகக் கரணிக்கன்
பிலாத்துவால்
மரணத் தீர்வையை ஏற்றதும் – சிலுவை
தன்னில்
மரணத் தீர்வையை ஏற்றதும்
நீளச்சிலுவையை -தோளினில் தாங்கியே
தாழ விழுந்தெழுந்ததும் – கால்கள்
தள்ளாடி
தாழ விழுந்தெழுந்ததும்
திருத்துகிலானத்தை – உரித்தலால் நாணியே
பெருத்தவமான முற்றதும் – தலை கவிழ்ந்து
பெருத்தவமான முற்றதும்
அருள் கருணாகர – திருக்கரங்கால்களில்
உருகாணிகள் அறைந்ததும் - சிலுவை மீது
உருகாணிகள் அறைந்ததும்
குருசினில் தொங்கியே –
திருவுரைபோதித்து
இறுதி மரண முற்றதும் – உடல் துடித்து
இறுதி மரண முற்றதும்
தேவனே நீர் சிந்தும் – திருஇரத்தததாலெங்கள்
பாவத்தைப் போக்கி இரட்சியும் – தயை
கூர்ந்தெங்கள்
பாவத்தைப் போக்கி இரட்சியும்
எந்தையே நின்திரு – ஐந்து காயங்களை
சிந்தித்து தோத்திரம் செய்குவோம் –
அனுதினமும்
சிந்தித்து தோத்திரம் செய்குவோம்
- சித்திரக்கவி செ. முத்தையா ரொட்ரிகோ, வேம்பாறு.