வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 29 October 2015

ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரர் பேரில் பாடல்

எமைக்கண் பார்த்திடுவீர் - செபஸ்தியாரே
என்றுங் காப்பாற்றிடுவீர்

உம்மை அடைக்கலமாய் ஊரில் தெரிந்து கொண்டோம்
இம்மைத் துயர்பிணிகள் இடர் அற நேர்ந்து கொண்டோம்

வேத உண்மைக்காய்த் தந்தீர் - உயிர்ப்பலியாய்
வேதனை துன்பம் நொந்தீர்
பாதமுதல் சிரசில் பாழும் அம்பாலே நொந்தீர்
ஆதிக்கடவுள் திவ்ய அம்புயர் பதஞ்சோந்தீர்

நோயும் பிணியும் தீரும் - குடும்பமெல்லாம் 
நித்தம் உம் தஞ்சம் சேரும்
தாய்போல் அணைத்துக் காத்து சர்வ துன்பமும் நீக்கும்
சேயர்களாக எம்மைத் தினமும் தயவாய் நோக்கும்

நிம்பை நகரைப் பார்ப்பாய் - செபஸ்தியாரே
சொந்த மைந்தரைக் காப்பாய்
நிந்தைக்குரிய பேய்கள் நீடித்து ஆழல் ஏனோ
வந்துஉன் புஜவீர வலியைக் காட்டாததேனோ

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com