திவ்ய பாலனின் பேரில் புகழ் பாடல்
வேம்பாறு சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ அவர்களின்
எழுத்தோவியத்தில் உருவாகிய திவ்ய பாலனின் பேரில் புகழ் பாடல்
திரிலோக நாத தெய்வீகா
திவ்ய பாலன் ஆனீரோ
தேவசுரும் மேவு நரரும்
பாவிசைகளால் கூறவே
காவில் ஏவை செய்த பாவக்
கசடனைத்தும் தீரவே
வாச மெய்யதவா சூசை மாமுனி
ஆசையுற்றுத் தாலாட்டவே
மாசில்லாத தேவதாயார்
மகிழ்ந்தே அமுதூட்டவே
வெல்லை மலையில் அல்லிராவினில்
புல்லணைப் பசு மேடையில்
நல்லிடையர்கள் கண்டு போற்ற
நலிந்தே குளிர் வாடையில்
மின்னுமாமுடி மன்னர் மூவர்கள்
துன்னி வந்தடி போற்றவே
உன்னும் சவியேர் இஞ்ஞாசி துதி
பண்ணும் கவிகள் சாற்றவே