வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 22 December 2016

திவ்ய பாலனின் பேரில் புகழ் பாடல்
வேம்பாறு சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ அவர்களின் 

எழுத்தோவியத்தில் உருவாகிய திவ்ய பாலனின் பேரில் புகழ் பாடல் 




திரிலோக நாத தெய்வீகா

திவ்ய பாலன் ஆனீரோ



தேவசுரும் மேவு நரரும்

பாவிசைகளால் கூறவே

காவில் ஏவை செய்த பாவக்

கசடனைத்தும் தீரவே


வாச மெய்யதவா சூசை மாமுனி

ஆசையுற்றுத் தாலாட்டவே

மாசில்லாத தேவதாயார்

மகிழ்ந்தே அமுதூட்டவே


வெல்லை மலையில் அல்லிராவினில்

புல்லணைப் பசு மேடையில்

நல்லிடையர்கள் கண்டு போற்ற

நலிந்தே குளிர் வாடையில்


மின்னுமாமுடி மன்னர் மூவர்கள்

துன்னி வந்தடி போற்றவே

உன்னும் சவியேர் இஞ்ஞாசி துதி

பண்ணும் கவிகள் சாற்றவே
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com