வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 30 August 2018

அகநானூறில் பரதர்
அகநானூறில் இருந்து பரதர் பற்றிய வரலாற்று சான்றுகள்


300 நெய்தல்


நாள் வலை முகந்த கோள் வல் #பரதவர்

நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார்,

பறி கொள் கொள்ளையர், மறுக உக்க

மீன் ஆர் குருகின் கானல் அம் பெருந் துறை,

5

எல்லை தண் பொழில் சென்றென, செலீஇயர்,
தேர் பூட்டு அயர ஏஎய், வார் கோல்

செறி தொடி திருத்தி, பாறு மயிர் நீவி,

''செல் இனி, மடந்தை! நின் தோழியொடு, மனை'' எனச்

சொல்லியஅளவை, தான் பெரிது கலுழ்ந்து,

10

தீங்கு ஆயினள் இவள்ஆயின், தாங்காது,

நொதுமலர் போலப் பிரியின், கதுமெனப்

பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல்; அதனால்,

சேணின் வருநர் போலப் பேணா,

இருங் கலி யாணர் எம் சிறு குடித் தோன்றின்,

15

வல் எதிர் கொண்டு, மெல்லிதின் வினைஇ,

''துறையும் மான்றன்று பொழுதே; சுறவும்

ஓதம் மல்கலின், மாறு ஆயினவே;

எல்லின்று; தோன்றல்! செல்லாதீம்'' என,

எமர் குறை கூறத் தங்கி, ஏமுற,

20

இளையரும் புரவியும் இன்புற, நீயும்


இல் உறை நல் விருந்து அயர்தல்

ஒல்லுதும், பெரும! நீ நல்குதல் பெறினே.

பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. - உலோச்சனார் மணி மிடை பவளம் முற்றும்நித்திலக் கோவை
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com