வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 17 September 2018

விடிந்தகரை 3.03
நம்ம ஆத்தா இப்போ கடல்ல குளிக்காத மலையாள பகவதி 
……………………………………

பரதவ வர்மன் தான் வந்த நோக்கத்தை பூபாளன் ஆராச்சாரிடம் சொல்ல துவங்கினான். நமது அம்மாச்சி, அம்மச்சா, ஆத்தா தேர் முத்தாரம்மன் சன்னிதி முன்னாலே பொதஞ்சிகிடக்கு எல்லாரும் வந்து வாரக்கணக்கா இழுத்தும் அசைக்க முடியல்ல அதுக்கான பரிகாரம் பண்ணி தன்னிலைப்படுத்த சடங்கு சம்பிரதாயங்கள் செய்யணும்.

அதுவும் பாரம்பரிய இடத்திலிருந்துதான் செய்ய வேண்டியுள்ளது. அதான், அம்மச்சா ரதவீதியில மேக்கால உள்ள ஆச்சாரியார்கள் கோட்டாரத்தை திறக்கணும்…! என……. அரை குறையாய் எடுத்துக்கூற கேட்டும் கேட்காமலும் கோபாவேசத்துடன் சீறிப்பாய்ந்தார் பூபாளன் ஆராச்சார்.

என்னது அம்மச்சாவா.....?

அம்மச்சா இல்லை மாப்ளே! நம்ம ஆத்தா இப்போ கடல்ல குளிக்காத மலையாள பகவதி மாத்திப்புட்டானுவே மந்திரி தந்திரி இந்த நம்பூதிரிமாரு ஆத்தாவையே மாத்தியவங்க கங்கனையும் மாத்த மாட்டானுவளா….?

அதான் மாப்ளே !!
இந்த பயந்தாங்கொள்ளி ராசாமாருக்காக ஆராச்சார் தாத்தாவிடம் தரகனாய் வந்திருக்கீளோ!

இவகளுக்காக உங்க ஐயா செய்யாததா…. மாப்ளே !! நன்றி கெட்ட ராசமாருக்கு நாஞ்சில் நாட்டவனின் அருமை தெரியலை! தன் நாட்டு மக்களை காக்க தெரியாதவன் பரதவ தெய்வத்தை பகவதியாக மாத்தி முடிச்சவனுவ …… 

பேசப்பேச ஆராச்சாரின் முகம் சிவக்க கை, கால் நடுங்குவதையும் கவனித்த பரத வர்மனுக்கும் பதட்டம் ஏற்பட ஆராச்சார் விட்டபாடில்லை. குச்சிப் பிள்ளையாவே நீரு... உங்க ஐயா இரவீந்திர கங்கனார் இருந்திருந்தா இவனுவகளுக்காக இந்த பயந்தாங்கொள்ளி ராசாமாருக்காக பரிந்து பேச வந்திருப்பாரா?

நீ யாருன்னு உனக்கு தெரியிலியா ?
தன்னப்பத்தி தன் குலத்தபத்தி தெரியாதவனா நீ ?
ஆத்தாவும் ஐயாவும் இப்படியா வளத்தாவ பாரம்பரிய வீரம், பண்பாடு, அரசாங்க கவுரதி, இதெல்லாம் தெரியாத புழுக்கனா நீ ?
உன்ன இப்பவே கயித்தான் கிட்ட சொல்லி, கயித்த கட்டி கடல்ல தாத்துருவேன் பாத்துக்கோ! என அதற்கு மேல் பேச முடியாமல் கோபத்தை அடக்க தெரியாமல் முண்டை உதறி தோள்ல போட்டு கைத்தடி ஊன்றி எழுந்து நடந்து போய் கொண்டிருந்தார் பூபாளன் ஆராச்சார். 

அன்பாக கவுரதியாக பேசிய முதியவர் கண நேரத்தில் வெடித்து கிளம்பியது அதுவும் கடல்ல தாத்துருவேன்னு உறுதி பட சொன்னதை நினைத்ததுமே கங்கனுக்கு இனம் புரியாதொரு தற்காப்பு எண்ணம் ஆட்கொண்டது. 

தன்ன சுத்தி வலை ஏதோ விரிக்கப்படுகிறதோ என திடுக்கிட்டபடி சுத்து முத்தி பார்க்க நடந்து போய் கொண்டிருந்த முதியவர் தன் குரல் திரட்டி ஆணையிட்டார். 

ஒரே போடு தலை கொண்டயில போடு முனியா…….? 

குரல் கேட்டதும் மின்னும் வாளெடுத்து வீச காத்து நின்றார் கங்கன் பரதவ வர்மன்.

இப்போ சற்று முன்புதான் கங்கனாரின் கொண்டையை சிலாகித்த பூபாளன் கொண்டையிலேயே போடு என்றால் அதையும் தான் பார்ப்போம்.


உங்களை போல தயாராக நிற்கும்

........கடல் புரத்தான்........
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com