இலங்கை பரதர்
இலங்கை முழுதும் பரவி வாழும் பரதர் சமூகத்தின் நலன்கருதி மறைந்த வள்ளல் ஏ.எஸ்.செல்லையா பெர்ணாந்து அவர்கள் தன் 36 இலக்கம் கொண்ட வீட்டை அன்பளிப்பாக சங்கத்திற்கு வழங்கி அடிக்கல் நாட்டும் போது எடுத்த படத்தை பதிவேற்றி இருக்கிறேன் .36 இலக்கம் கன்னாரத்தெருவில் அடிக்கல் நாட்டும் போது அன்றைய கட்டத்தில் இருந்தோர் பலர் நம்மத்தியில் இன்று உயிருடன் இல்லை. அடிக்கல் நாட்டும் விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டான்லி திலகரத்தின, மொடர்ன் கொன்பெக்ஷனரி வேர்க்ஸ் உரிமையாளரும், பரதசங்கத்தின் போஷகருமான செல்வம் காகு, சங்கத்தலை வராக விளங்கிய சட்டத்தரணி பிரான்ஸிஸ் பெர்ணாந்து, வர்த்தகர் போஷகருமான லூக்கஸ் பெர்ணாந்து, சட்டத்தரணி வின்சன் பெர்ணாந்து, எம்.எஸ்.பெர்ணாந்து, செயலாளராக விளங்கிய. ஜெ.சந்தியாகு பெர்ணாந்து, பல்தசார் பெர்ணாந்து, வாஸ், தோமாஸ் பெர்ணாந்து, சி.ஆர்.தாஸன் பெர்ணாந்து, பார்த்தீபன் அல்மெயிடா, சட்டத்தரணி வில்லவராயர், எம்.எஸ்.பெர்ணாந்து, அண்டனிதாஸ் பெர்ணாந்து, இன்னும் பலர் படத்தில் காணப்படுகின்றனர். இப்படத்தை எனக்கு தந்துதவியவர் மொடர்ன் கொன்பெக்ஷனரி வேர்க்ஸ் உரிமையாளர் திரு.எட்வர்ட் காகு அவர்களுக்கு பெருநன்றி.... (1964)