கோரிகள் குறித்து சங்க இலக்கிய கூற்று
நற்றிணை 199
ஓங்குமணல் உடுத்த நெடுமாப் பெண்ணை
வீங்குமடற் குடம்பைப் பைதல்வெண் குருகு
நள்ளென் யாமத்து உயவுதோ றுருகி
அள்ளல் அன்னஎன் உள்ளமொடு உள்ளுடைந்து 5
உளனே வாழி தோழி வளைநீர்க்
கடுஞ்சுறா எறிந்த #கொடுந்திமில் #பரதவர்
வாங்குவிசைத் தூண்டில் ஊங்கூங் காகி
வளிபொரக் கற்றை தாஅய் நளிசுடர்
நீல்நிற விசும்பின் மீனொடு புரையப் 10
பைபய இமைக்குந் துறைவன்
மெய்தோய் முயக்கங் காணா ஊங்கே.

கடற்கரை கோரிகளில் ஏற்றபடும் விளக்கின் சுடர் மினிக்கி மினிக்கி எரிவதை கடலில் பொழுது சாயும் நேரத்தில் மேகத்தில் காணப்படும் இயற்கை அழகை ஒப்பிடுகிறது.
பாடலை எழுதியவர் - பேரிசாத்தனார்.