வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 14 July 2018

கோரிகள் குறித்து சங்க இலக்கிய கூற்று

நற்றிணை  199


ஓங்குமணல் உடுத்த நெடுமாப் பெண்ணை 
வீங்குமடற் குடம்பைப் பைதல்வெண் குருகு
நள்ளென் யாமத்து உயவுதோ றுருகி 
அள்ளல் அன்னஎன் உள்ளமொடு உள்ளுடைந்து 5

உளனே வாழி தோழி வளைநீர்க் 
கடுஞ்சுறா எறிந்த #கொடுந்திமில் #பரதவர்
வாங்குவிசைத் தூண்டில் ஊங்கூங் காகி 
வளிபொரக் கற்றை தாஅய் நளிசுடர் 
நீல்நிற விசும்பின் மீனொடு புரையப் 10
பைபய இமைக்குந் துறைவன் 
மெய்தோய் முயக்கங் காணா ஊங்கே. 

உரை :

வளைந்த அனிகத்தை உடைய சோழ நாட்டு வள்ளத்தில் தூண்டில் கயிறுக்கு சென்ற பரதவர்கள் புலால் (பெரிய சுறா 150 கிலோவுக்கு அதிகமான பெரிய சுறாவை புலால் என்பர் பரதவர்) பிடிக்க போட்ட தூண்டிலை இழுக்கும் சமயத்தில் காற்று மிக அதிகமாக அதாவது அடிகாத்தாக இருந்ததால் வாங்குவதற்கு கப்பியை உபயோகித்தார்கள் என்று பரதவர் மீன் பிடிக்கும் உக்தியை பறைசாற்றுகிறது.

கடற்கரை கோரிகளில் ஏற்றபடும் விளக்கின் சுடர் மினிக்கி மினிக்கி எரிவதை கடலில் பொழுது சாயும் நேரத்தில் மேகத்தில் காணப்படும் இயற்கை அழகை ஒப்பிடுகிறது.

இந்த விருத்தத்தை பரதவரை தவிர வேறு யாரும் எழுதி இருக்க முடியாது என்பதும் தின்னம்.

பாடலை எழுதியவர் - பேரிசாத்தனார்.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com