பரிசுத்த பனிமய அன்னை பேரில் கழிநெடிலடி விருத்தம்
மங்கள தின இறுதி மன்றாட்டு மணிமாலை
அனந்தசு போதன் ஆகண்டவி ணோதன்
ஆனந்த ஞானச மேதன்
அமலஉற் பவம்நீ விமலகற் பகம்நீ
ஆதிசு கந்தமும் நீயே !
அம்புவி நிலவும் அணிமறைத் தருவில்
அற்புத மானபைங் கனிநீ
அருமைநீ எமது இகபர சுகம்நீ
அன்புயர் அன்னையும் நீயே !
மனந்தனிவ் புகுந்து மறைநலம் புகன்று
வரந்திகழ் எமதுநல் லாயன்
மாதவன் சவியேர் முனிவரன் உனையே
மைந்தரெம் கெதிஎனத் தந்தே
மந்த்ரமா நகர்நீ வந்தநா ளிருந்தே
மாபெருங் கருணையால் எம்மை
மகிழ்வுடன் காவல் புாியும்நின் தயவை
மறக்கவும் முடியுமோ அம்மா !
கனந்தனில் மிகுந்த எமதுபாப் பரசும்
கவினுயர் மேற்றிரா சனமும்
கன்னியர் குருக்கள் சந்நியாசிகளும்
கலைபயில் மாணவர் நெறியும்
கடலிலும் கரையிலும் தொழில் புாிபவரும்
கருதும்நல் லெண்ணமும் இனிதே
கலங்கறத் துலங்க கண்கண்ட தாய்நின்
கமலபொற் பதம்பணிந் தோமே !
தினந்தினம் உந்தன் தொிசனம் வேண்டும்
தீயவர் திருந்தவும் வேண்டும்
திகிலுறு பஞ்சம் பசிகொள்ளை நோயும்
தீர்ந்துநல் லிதம்பெற வேண்டும்
திகழும்பொன் ரதத்தில் பவனியாய் எழுந்த
தேவிஉன் திருவருள் வேண்டும்
திருமந்த்ர நகாில் இலங்கும் தெய்வீக
திவ்யதஸ் நேவிஸ் மாதாவே !
- பாவலர் மாிய அலங்காரம் பீாிஸ்