நம்ம ஊரு அம்பா
ஏலோ இலோ
ஈலோடு வாங்கு
வாங்குடா தோழா
வாழைத்தார் தருவேன்
தேங்காயும் மிளகும்
தெரிவிட்ட பாக்கும்
மஞ்சள் இஞ்சி
மணமுள்ள செண்பகம்
செண்பக வடிவேல்
திருமுடிக் கழகு
வருகுது பெருநாள்
தேரோட்டம் பார்க்க
தேரான தேரு
நாச்சியார் தேவி
நாயகனைத் தேடி
ஓடியே வருவாள்
ஓடியே வந்து
ஒரு முத்தம் தருவாள்
தருவாள் நாயகி
தந்திடு தாயே .....