வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 3 January 2021

அகநானூறில் பரதவர்


பாடல் 366


தாழ் சினை மருதம் தகை பெறக் கவினிய

நீர் சூழ் வியன் களம் பொலிய, போர்பு அழித்து,

கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி,

கடுங் காற்று எறிய, போகிய துரும்பு உடன்

5

காயல் சிறு தடிக் கண் கெடப் பாய்தலின்,

இரு நீர்ப் பரப்பின் பனித் துறைப் பரதவர்

தீம் பொழி வெள் உப்புச் சிதைதலின், சினைஇ,

கழனி உழவரொடு மாறு எதிர்ந்து, மயங்கி,

இருஞ் சேற்று அள்ளல் எறி செருக் கண்டு,

10

நரை மூதாளர் கை பிணி விடுத்து,

நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்

பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன,

நலம் பெறு பணைத் தோள், நல் நுதல் அரிவையொடு,

மணம் கமழ் தண் பொழில் அல்கி, நெருநை

15

நீ தற் பிழைத்தமை அறிந்து,

கலுழ்ந்த கண்ணள், எம் அணங்கு அன்னாளே

பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிய இடத்து,தோழி சொல்லியது. 
- குடவாயிற் கீரத்தனார்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com