16 ஆம் பொற்றேர் அறிவிப்பு
முத்துக்குளித்துறை மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முத்துக்குளித்துறையின் ஏக அடைக்கலமாம் திவ்ய சந்த மரிய தஸ்நேவிஸ் ஆண்டவளின் பொற்றேர் 16 ஆம் முறையாக திரு மந்திர நகரில் வலம் வர இருக்கிறது என்பதை பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.....
உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி திவ்ய சந்த மரிய தஸ்நேவிஸ் ஆண்டவளின் பேராலயத்தின் 440-வது ஆண்டு திருவிழா ஜூலை மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்காத நிலையில், இந்த ஆண்டு வழக்கம் போல் விழா நாட்களில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகிறது.
05.08.2022 திருவிழா அன்று திவ்ய சந்த மரிய தஸ்நேவிஸ் ஆண்டவளின் மகோன்னத பெருவிழாவின் ஆடம்பர கூட்டுத் திருப்பலி 7.30 மணிக்கு முத்துக்குளித்துறை (தூத்துக்குடி) மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டுத் திருப்பலியில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன்அவர்களால், முத்துக்குளித்துறை (தூத்துக்குடி) மறை மாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி முதல் சனிக்கிழமையன்று திவ்ய சந்த மரிய தஸ்நேவிஸ் ஆண்டவளின் பொற்றேர் திருமந்திர நகர் வீதிகளில் பவனி நடைபெறும் என அதிகாரப் பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து "Te deum" என்ற லத்தீன் நன்றி பாடலும், அதை தொடர்ந்து "Louado Seja" என்ற போர்த்துகீசிய பாடலும் பாடப்பட்டது.