வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 8 October 2022

மூதாக்கரை குடியேற்றம்


கொல்லம் பரதவர் குடியேற்றம்

Johan Nieuhof என்னும் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் தளபதி கிபி 1662 ஜனவரி மாதம் கொல்லம் வருகிறார். இவர் தனது குறிப்பில் ரோமாபுரியை தலைமையிடமாக கொண்ட கத்தோலிக்க திருச்சபையின் அங்கத்தினரான ஏசுசபை கொல்லம் நகரின் தெற்கு பகுதியில் கடற்கரையோரம் பரதவர்களுக்கு ஒரு பெரிய கிராமத்தை கட்டியிருந்தனர்.


இங்கு திருவாங்கூர் மகாராஜாவின் ஆளுநர் மற்றும் திருவாங்கூர் மகாராஜாவின் குறுநில மன்னர் வரியத்த பிள்ளை தங்கள் அரண்மனைகளை இங்கு அமைத்து வாழ்ந்து வருகின்றனர். அரசர் வரியத்த பிள்ளை மற்றும் திருவாங்கூர் அரசரின் ஆளுநர் அரண்மனைகள் அமைத்து வாழ்ந்து வந்த இந்த பரதவர் கிராமம் ஒரு மையில் சுற்றளவு கொண்டதாக இருந்தது.

இதனை சுற்றி கோட்டையரண்கள் எழுப்பபட்டு கொத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மீது பெரிய பீரங்கிகளை பொருத்திய உள்ளனர். அரசர் வரியத்த பிள்ளையின் அழைப்பை ஏற்று டச்சு தளபதி Johan Nieuhof அவரை சந்திக்க அவர் அரண்மனைக்கு சென்றார்.

அங்கு அரசர் வரியத்த பிள்ளை அவருக்கு விருந்து அளித்து அவருக்கு தங்க கை சங்கிலி  பரிசு அளித்தார். திருவாங்கூர் மகாராஜாவின் ஆளுநர் அவருக்கு பட்டாலான ஆடையை  பரிசளித்தார். 

இந்த புதிதாக உருவாக்கப்பட்ட பரதவர் குடியேற்றம் இன்றைய கொல்லம் மாநகரில் மூதாக்கரை ஊராகும்.


Foot Notes:
1.Voyages to East Indies and Brazil by Johan Nieuhof, Pg. 220,232.
2.Jesuits in Malabar by Ferroli, Vol 1,Pg.14, 15.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com