![]() |
10.11.1978 ல் மாங்குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு |
இலங்கையில் கிடைத்த பழைய காசு ஒன்றின் பக்கத்தில் பரத திசக என்று பாகத எழுத்திலும் தமிழி (தமிழ் பிராமி) எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. பரதனாகிய திசனுடையது என்பது அதன் பொருளாம். அக்காசின் மறுபுறத்தில் பாண்டியனின் மீன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த காசில் காணும் பரத என்னும் குறிப்பு, கடலோடிகளான பரதவரைக் குறிக்கும். இருபதுக்கும் மேற்பட்ட இலங்கைக் கல்வெட்டுகளில் பரதன் என்னும் பெயர் காணப்படுவதாகக் கூறுகிறார்கள். கடலன் என்னும் கடற்படை அதிகாரிகளில் பெரும்பாலானோர் பரதவர்களாயிருந்தனர் என்பது இதனால் விளங்குகிறது.
தொன்மையில் பாண்டிய நாட்டிலிருந்தும், சேர நாட்டிலிருந்தும், ஈழத்திலிருந்தும் பொருள்வழிப் பிரிந்து கடல் கடந்து சென்ற தமிழர்களான கடலன்களின் வழிவந்தோர், பின்னர் வடக்கு எசுபானியாவிலுள்ள பைரனீசு மலைத்தொடருக்கு தெற்கே குடியேறியுள்ளனர். இரும்புக் கொல்லுலைகளையும், இரும்பை ஆக்கும் தொழில் நூட்பத்தையும் தமிழகத்திலிருந்து தம்முடன் அவர்கள் கொண்டு சென்றுள்ளனர். கடலன் கொல்லுலைகளை வைத்தே ஐரோப்பாவில் இரும்பு எக்கு தொழில் அரும்பியது. அக்கடலன்கள் தாய்நாட்டுடனான கொப்புள் உறவுகளிக் காலப்போக்கில் இழந்து தனியொரு தேசிய இனமாயினர். தமிழை முற்றிலும் மறந்து உரோமானிய மொழிகளின் தாக்கத்தால் புதியதொரு மொழியை உருவாக்கிக் கொண்டனர்.