According to “ The Dravidian Tribes of Northern India”
The word Parava means “bird”. They constituted the tribes of “birds.” According to the inscriptions of the Indus Valley, they were a section of the Minas (Fishes), but their country was at time also called PARAVANAD on account of their riches. Their main city seems to have been Paravirpaili, “the city of the Paravas”. Their king always received the title of Minavan, “the fisherman” and his banner had two fishes painted upon it. There were two sub divisions of the Paravas; Pagal Paravas and Nila Parava, “the Paravas of the Sun” and “the Paravas of the Moon.” The latter seem to have been the more important of the two. The Paravas of the Coast of Coromandel and of Ceylon – sometimes wrongly called Bharatar styled themselves Paravas of the Moon. And claim mythical descent from that celestial body. Where are the Paravas of the Sun?
Perhaps we may trace them in the Rgveda. They are not called Paravas, but Paravatas, a change which may easily be explained considering that this word passed from the Dravidian to Sanskrit language. The Rgvedic rsis in the beginning did not know what was the meaning of that word. The Paravatas lived in the territory of the modern Punjab, along the Parusni river, and are described as clothed in woollen robes. They seem to have been slain by Saraswathi, because they scorned her. In one of the Vedic sacrifices, the rites of which are described in the Satapatha Bramana, the tribe of the Birds is mentioned by the adhvaryu, as being the subjects of King Tarksya Vaipasyata.
According to the Markendeya Purana, the Birds took part in the battle of Kuruksetra. In fact, this purana seems to have been the heirloom of the tribe, for its whole narrative practically is put in the mouth of four rsi Birds, named Pingaksa, Vibodha, Supatra and Sumukha. ‘the sons of Drona, the noblest of Birds, versed in the principles of philosophy and meditators on the Sastras”. Their mind is said to be ‘unclouded in the meaning of the Veda and Sastras”. They are described as dwelling ‘in a cave of the Vindhya mountains’.
- Rev. Fr. Henry Heras S.J
கச்சால் என்றால் மீன்பிடிக்கும் ஒருவகை கை வலை கூண்டு, சால் என்பது வலை கை + சால் என்பதே கைச்சால். அதுவே கச்சால் என்று சொல்லப்படும். இன்றும் திருகோணாமலை பகுதி மீனவர்கள் கோலா என்னும் பறக்கும் மீன்களை அள்ளும் வலையை கைச்சால் என்று அழைப்பார்கள். ஆக இத்தீவை தமிழர் நாம் சரியா கைசால் தீவு என்றுதான் சொல்லவேண்டும். வலைகளை உலரவைத்து மீன்பிடிக்கும் தளமாக, முத்துக்குளிக்கும் கடலாக அழகிய நிலமாக இத்தீவு இருந்துள்ளது.
ஆரம்பத்தில் இங்கு "டார்குயின்" என்னும் பச்சை ஆமைகள் இருந்த காரணத்தினால் பச்சை தீவு என அழைக்கப்பட்டது. இது பின்னர் மருவி கச்சை தீவு என அழைக்கப்படலாயிற்று. சித்த மருத்துவத்துக்கு தேவையான அனேக மூலிகைச் செடிகளை இங்கு பெற்றுக்கொள்ளலாம். இதில் "உமிரி" என்னும் மூலிகை நோய்களுக்கு சிறந்த நிவாரணி. உமிரி கீரை நீர் பிடிப்பான தாவரம். கடல் நீரில் இருக்கும் உப்பை நீக்கி தன்னுள் நன்னீரை பிடித்து வைத்திருக்கும் அற்புத தாவரம். சஞ்சீவி மலையின் ஒரு பக்கம் என்றும் இதை சொல்வாருண்டு.
கச்சை தீவை சுற்றியுள்ள கடலில் சங்கு குளிப்பர். இதனால் இத்தீவுக்கு சங்கு புட்டித் தீவு, சங்கு புட்டித் தீடை என்ற புனைப் பெயர்களும் உண்டு. இதற்கு கண்ணகி அம்மன் பள்ளுப் பாட்டுகள் சான்றாக உள்ளது. மேலும் கச்சைத் தீவுக் கடலில் விலையுயர்ந்த இறால் வகைகள் கிடைக்கும். சுருங்கக் கூறின் கச்சை தீவு சூழ் கடல் ஒரு மீன் அரங்கம். மீன் உற்பத்தி ஆகும் தமிழரின் மிக பெரிய கண்டல் மேட்டில் இத்தீவு அமைந்துள்ளது.
தமிழரின் மிகப்பெரிய குமரி கண்டத்தில் பல ஆயிரம் தீவுகளுடன் எழு மண்டல நாடுகளாக ஐம்பத்து ஆறு நாடுகள் இருந்தன. அவற்றில் இன்று எம்மிடம் இருக்கும் தமிழகம், ஈழம் ஆகிய இரண்டு நாடுகளும், தீவுகளும், கடல் வளங்களும் ஆக்கிரமிப்பாளரின் கைகளில் சிக்கி கிடக்கின்றன. மிக வளமான சரித்திர புகழ் மிக்க தீவாகிய எங்கள் கைச்சால் தீவும் ஈழமும் சிங்களவன் ஆக்கிரமிப்புள் சிக்கி கிடக்கின்றன.
ஆதித்தமிழன் வாழ்ந்த இடம் லெமுரியாக் கண்டம். கடற்கோள் காரணமாக லெமுரியாக் கண்டத்தின் பல பகுதிகள் கடலில் மூழ்கின. அதில் எஞ்சிய பன்னிராயிரம் தீவுகளில் ஒன்றே இன்று கச்சை தீவு என்று சொல்லப்படும் கைச்சால் தீவு. இத்தீவை அண்மித்து நெடுந்தீவு, வேலணை, காரைதீவு, பருத்திதீவு, ஊறி தீவு, கண்ட்மேடு என்று பல நூறு தீவுகளும் மணல் திட்டுகளும் உள்ளன.
இத்தீவானது நெடுந்தீவிலிருந்தும் இராமேஸ்வரத்திலிருந்து 10 மைல் தொலைவில் தமிழகத்துக்கும், ஈழத்துக்கும் சரி பங்கு சொந்தமான எல்லை நடுவில் உள்ளது. இத்தீவின் பரப்பளவு 285 ஏக்கர் நில பரப்பை கொண்டுள்ளது. தமிழக மக்களின் ஈழ மக்களின் தாய் பூமி, தமிழகம், ஈழம் பன்நெடும் காலமாக தமிழரின் தொடுகை உறவு முறை தாய் வீடாக இருந்துவந்த நிலம். நாடுகள் என பிரிந்த சோகத்தில் இன்று தமிழனின் நிலம் காணாது அவன் முகம் காணமுடியாதபடி, ஆக்கிரமிப்பாளனின் காலடியில் கிடக்கின்றது. இத் தீவானது, 79° 31’ நெடுங்கோட்டிலும், 9° 23’ வடக்கு அகலக்கோட்டிலும் அமைந்துள்ளது.
1974 காலத்துக்கு முன் தமிழக மீனவரின் சொர்க்கமாக இருந்த இந்த தீவை காங்கிரசு அரசு தமிழன் அனுமதி இன்றி சிங்களவனிடம் கொடுத்தது. தமிழக மீனவரின் பாவனைக்கும், வலை காயவிடுதல், வாடி அமைத்தல் என்பவற்றிற்கும் உரிமை உடையவர்களாக தமிழக மீனவர்கள் இருந்தார்கள். தமிழர்கள் வந்து செல்லும் ஒரு தளம் என்றும் கூறப்பட்டது.
இத்தீவின் மேற்கே உயர்ந்த பாறைகள் தெரியும். உட்பகுதியில் வெண்மணல் திட்டுக்களும், ஆங்காங்கே குழிகளும் காணப்படும். பசும் புல் தரைகளும் உண்டு. நடுப்பகுதி கல்லுமலை என அழைக்கப்படும். இது கடல்மட்டத்திலிருந்து 20 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் அருகே ஆழ்கிணறு ஒன்று உள்ளது. அதன் நீர் குடிப்பதற்கு நன்று.
சோழர் ஆட்சியில் கச்சை தீவு
சோழர் ஆட்சிக் காலத்தில் கீழ் கடலும், குமரிக் கடலும் சோழர்களுக்கே சொந்தம். அக்கடற்பரப்பிலிருந்த அனைத்து தீவுகளும் சோழரின் ஆட்சியின் கீழே இருந்தது. சோழ மன்னர்களே முதன் முதல் உலகில் கடற்படை அமைத்தவர்கள். சோழ குல வேந்தனான இராசராச சோழன் உலகம் வியக்கும் அளவுக்கு கடற்பேரரசை நிறுவி கடற்போரை நிகழ்த்தினான். பத்தாம் நூற்றாண்டில் உலகக் கடலின் காற்பகுதியில் சோழர்களின் மரக்கலங்களே மிதந்தது. இவற்றில் பொருத்தப்பட்ட ஒளிப்பெருக்காடி மூலம் கடலின் நெடுந்தொலைவை கண்டறிந்தனர். இவ்வாறாக சோழ அரசு தென் கடல் தீவுகளை எல்லாம் கைப்பற்றி ஆட்சி செய்தது.
1480 ஆம் ஆண்டு சோழ மன்னர்கள் யாழ்ப்பாணம் சென்றனர். இடையில் கச்சை தீவை அடைந்தனர். அங்கு பாண்டிய மன்னர்கள் தங்கள் நாட்டு விளைபொருட்களான மிளகு, திப்பிலி, இலவங்கம், சந்தனம், யானையின் தந்தம், விலையுயர்ந்த முத்துக்கள் முதலிய பொருட்களை கச்சை தீவுக்கு ஏற்றுமதி செய்தனர்.
இருநாட்டு மன்னர்களும் கச்ச தீவு கடலில் முத்துக்குளித்தல், சங்கு குளித்தல், மீன் பிடித்தல் ஆகிய தொழில்களை நடத்தினர். இது குறித்து அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, சிலப்பதிகாரம் முதலிய சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது. மேலும் எகிப்திய சுற்றுலாப்பயணியான தாஸ்மோஸ் இண்டிக்கோ யூலுயெஸ்டஸ், ஆறாம் நூற்றாண்டில் தான் எழுதிய வரலாற்றுக் குறிப்பில் கூறியுள்ளார்.
11 ஆம் நூற்றாண்டில் இராசராச சோழன் பாண்டிய இராச்சியத்தை வென்றதோடு, இலங்கைத் தீவினையும் வென்றான். அன்று இராமேஸ்வரம் கடற்பாதையை கண்காணிப்பதற்கு சோழ மறவர்களை அமர்த்தினான். 16 ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சி நலிவுற்றது. பாண்டியரது ஆட்சி மறைந்தது. இராசராச சோழனால் அமர்த்தப்பட்ட தளபதிகள் தனி ஆட்சி நிறுவினர்.
15 ம் நூற்றாண்டில் வந்த ஐரோப்பியர்கள் இத்தீவை தமது உல்லாச நிலமாக அமைத்து மகிழ்ந்தனர். இன்றும் அங்கு ஒன்றுகூடும் மக்கள் மகிழ்ந்து வருவார்கள்.
நன்றி : ஏகாம்பரம் மணிவண்ணன்
கச்சை தீவு
Heritage Vembarites
08:36

கடல் மூச்சுவிடுவது தெரியுமா உங்களுக்கு? ஆடு, மாடு மனிதர்கள் மூச்சு விடுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மரங்கள்கூட மூச்சுவிடுகின்றன என்றுப் படித்திருப்பீர்கள். ஆனால் யாராவது கடல் மூச்சுவிடுவதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
இப்புவியின் பெரும் காடுகளில் உள்ளக் மரங்களில் இருந்து நமக்கு பிராணவாயுவான ஆக்சிஜன் கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அது பாதிதான் உண்மை. மீதி உண்மை என்னவென்று சொல்லட்டுமா? இவ்வுலகின் மொத்த ஆக்சிஜன் அளவில் வெறும் முப்பது விழுக்காடு மட்டுமே நமக்குக் காடுகளில் இருந்து கிடைக்கிறது. எழுபது விழுக்காடு கடலில் இருந்து கிடைக்கிறது.
என்ன கடலிலிருந்து ஆக்சிஜனா, ஆச்சரியமாக இருக்கிறதா?
ஆம் உண்மைதான், நம் பூமியின் பரப்பில் ஒரு சிறுபகுதியான (29%) நிலப்பரப்பில் வெறும் முப்பொத்தொன்று விழுக்காடு மட்டுமே காடுகள் உள்ளன. அதாவது மொத்தக் உலகப் பரப்பளவோடு ஒப்பிடும்போது காடுகளின் பரப்பளவோ மிக மிகக் குறைவு. ஆதேநேரத்தில் உலகின் எழுபத்தொன்று விழுக்காடு பரப்பை ஆக்கிரமித்துள்ள கடலில் இருக்கும் கடற்தாவரங்களின் பரப்பளவோ மிக மிக அதிகம். இந்தக் கடற்தாவரங்கள் தம் ஒளிச்சேர்க்கையின்போது வெளியிடும் ஆக்சிஜனே பூமியின் ஆக்சிஜன் தேவையின் எழுபது விழுக்காடைப் பூர்த்தி செய்கிறது.
கடலில் பலவிதமானத் தாவரங்கள் காணப்படுகின்றன. ஒரு செல் தாவரங்கள் முதல் அடர்ந்த மரங்கள் போன்ற பல செல் தாவரங்கள்வரை கடலின் ஆழம், சூரிய ஒளி, வெப்பம் இவற்றைப் பொறுத்து பலவிதமான தாவரங்கள் கடலில் உள்ளன. ஆல்காக்கள், பிளாங்க்டன்கள் எனப்படும் தாவர மிதவை உயிரிகள், கடற்புற்கள், கெல்ப் எனப்படும் கடற்தாவரங்கள், பவழப்பாறைகள் போன்றவை கடலின் முக்கியத் தாவரங்களாகும். தரைவாழ் தாவரங்கள் போன்றே இந்தக் கடற்தாவரங்களில் பல ஊட்டச்சத்துமிக்கத் தாவரங்களிலிருந்து கடும் விஷம் கொண்டத் தாவரங்கள்வரை காணப்படுகின்றன. கெல்ப் எனப்படும் கடற்தாவரங்கள் பிரம்மாண்ட மழைக்காடுகள் போன்று 250 அடிகள் உயரம்வரைகூட வளரக்கூடியவை. இந்த தாவர வளமிக்கக் கடல்களில் இருந்துதான் நாம் மூச்சுவிடும் காற்றின் பெரும்பகுதியை நாம் பெறுகின்றோம்.
ஆனால் இங்கு கவலைதரக்கூடிய செய்தி என்னவென்றால் நிலத்தின் காடுகள் பெருமளவில் வேகமாய் அழிக்கப்படுவது போலவே கடல்களின் தாவரங்களும் மனித நடவடிக்கைகளால் வேகமாய் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆறுகள் மூலம் கடலில் கலக்கும் இரசாயனங்கள், கடலின் தரைப்பரப்பை நாசம் செய்யும் மீன்பிடிக்கருவிகள், உலக வெப்பமயமாதலால் உயரும் கடல்களின் வெப்பநிலை போன்றவை கடல்வாழ் தாவரங்களைப் பெரும் அழிவுக்குத் தள்ளியிருக்கின்றன.
மரங்களை மட்டுமல்ல மனிதர்களுக்காய் மூச்சுவிடும் கடல்களையும் கொண்டாடுவோம்!
மூச்சுவிடும் பெருங்கடல்கள்
Heritage Vembarites
08:09

ததோ ஹேமமயம் தி³வ்யம்
முக்தாமணிவிபூ⁴ஷிதம்.
யுக்தம் கவாடம் பாண்ட்³யானாம்
க³தா த்³ரக்ஷ்யத² வானரா꞉..4.41.19.
பொன்மனமானதும் முத்துக்கள் பதிக்கப்பட்டதுமான பாண்டியனின் கதவைப் பார்ப்பீர்கள் என்று வானரர்களைப் பார்த்து கூறுகிறான். பாண்டியர் கதவு முத்துக்கள் பதிக்கப்பட்டு எழிலோடு விளங்கியமை தெரியவருகிறது. அர்த்தசாஸ்த்ரத்தில் கௌடல்யர் முத்துக்களின் வகைகளைக் குறிக்கும்போது பாண்ட்ய காவடிகம் என்று பாண்டியர் கதவில் பொருத்தப்பட்டது என்றே குறிப்பிடுகிறார்.
பாண்டியர் கவாடம்
Heritage Vembarites
08:05

Jesuits and Paravas on the Pearlfishing Coast (16th century)
The mission among the Parava pearlfishing community in South India - the first Jesuit mission established by the first Jesuit missionary and saint Francis Xavier - became a topos in pious, apologetic Catholic literature and artistic production from the late 16th century onwards, and even spilled into 19th c. entertainment culture all the way to a famous Orientalizing phantasy opera by George Bizet, Les pêcheurs de perles (1863). This talk will focus on the first century of encounters between the Jesuits and the coastal people in the Gulf of Mannar during which the Parava community of (pearl) fishermen forged its Catholic identity and established its elite status on the regional political chessboard. Neither under the direct rule of the Portuguese Estado da Índia, nor subject to excessive tax demands of the local rulers of southern Tamilnadu, such as nayakas, pāḷaiyakkārars and Muslim merchant guilds, the Catholic Paravas profited during the interim political vacuum before the arrival of the Dutch and British to make themselves into a “bounded community,” held together by Catholic rituals and beliefs. As the most successful Jesuit mission, it also became a laboratory of theological, pastoral, linguistic and anthropological tools that would be used elsewhere in “global” Jesuit missions in the early modern period.
Thanks: www.medievalstudies.ceu.edu
Fishing for Souls
Dev Anandh Fernando
00:03
