ரோமாபுரி, கிரேக்கம், எகிப்து நாடுகளுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்த பரதவர்கள்:
கிபி1774-1789 இடைப்பட்ட ஆண்டுகளில் மலையாள தேசம் வந்திருந்த "பார்த்தலமேயுவின் பவுலீனுஸ்" என்ற ஆஸ்திரிய நாட்டு பயணி தமது நூலில் கிரேக்க, ரோமாபுரி, எகிப்து போன்ற நாடுகளுடன் பரவர்கள் கொண்டிருந்த வர்த்தக தொடர்பை பற்றி விவரிக்கிறார்.
அவற்றுள் சில....
கன்னியாகுமரிக்கு மேற்கே அமைந்துள்ள பரவர்களின் கோவளம் கிரேக்கர்களால் பண்டைய காலம் தொட்டு கொண்டாடப்பட்ட நகரமாகும். கிரேக்கர்கள் பரவர்களின் கோவளத்தை, "கோலிஸ்", "கோலியாஸ்" என்ற பெயர்களில் அழைத்தனர். கிறிஸ்து வாழ்ந்த முதலாம் நூற்றாண்டு முதலே பெருமளவிலான வர்த்தகம் நடைபெறும் நகரமாக பரவர்களின் கோவளம் விளங்கியது.
கோவளத்து பரவர்கள் ரோமாபுரி, கிரேக்கம், எகிப்து நாட்டவர்களுடன் வர்த்தக தொடர்பு கொண்டிருந்தபடியால் பாண்டியநாடு, சோழநாடு, இலங்கை, வங்காளம், பர்மா போன்ற நாடுகளில் உள்ள வணிகர்கள் தங்களுடைய வர்த்தக சாதனங்களை மேற்கண்ட ரோமாபுரி, கிரக்கம், எகிப்து தேசங்களுக்கு ஏற்றுமதி செய்ய முதலில் கோவளம் நகருக்கு அவ்வர்த்தக சாதனங்களை நிலம், நீர் வழியாக அவர்கள் கொண்டு வருதல் அவசியமாக இருந்திருக்கிறது.
ரோமாபுரி, கிரேக்கம், எகிப்து நாட்டு மாலுமிகள் பாதுகாப்பு கருதியும், இயற்கையான விரிகுடா அமைப்பையும் கொண்டுள்ள கோவளம் நகரின் துறைமுகத்திலேயே தான் பெரும்பாலும் தங்களுடைய கப்பல்களை நங்கூரமிடுவது வழக்கம். பாண்டிய நாட்டு வணிகர்கள் பெரும்பாலும் பருத்தி சாதனங்களையே ரோமாபுரி, கிரேக்கம், எகிப்து தேசங்களுக்கு ஏற்றுமதி செய்தனர்.
பாண்டிய நாட்டு வணிகர்கள் அனைத்து வகையான பருத்தி சாதனங்களையும் எருதுகள் மீது ஏற்றிக்கொண்டு கோவளம் நகருக்கு வந்து சேர்வர். இதேபோல் சோழநாடு, இலங்கை, வங்காளம், பர்மா போன்ற நாடுகளில் உள்ள வணிகர்களும் நீர் வழியாகவோ, நிலம் வழியாகவோ தங்களுடைய வர்த்தக சாதனங்களை கோவளம் நகரில் வந்து சேர்ப்பர்.
பின்னர் பரவர்களுக்கு சொந்தமான கோவளம் துறைமுகத்திருந்து ரோமாபுரி, கிரேக்கம், எகிப்து தேசங்களுக்கு செல்லவிருக்கும் கப்பல்களில் பாண்டியநாடு, சோழநாடு, இலங்கை, வங்காளம், பர்மா போன்ற நாடுகளிலிருந்து வந்த வர்த்தக சாதனங்கள் ஏற்றப்படும்.
அதன்பிறகு கோவளம் துறைமுகத்திலிருந்து மேற்சொன்ன நாடுகளின் வர்த்தக சாதனங்களை ஏற்றிக்கொண்டு கப்பல்கள் புறப்பட தொடங்கி செங்கடல் வழியாக பயணித்து எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா துறைமுகத்தில் நங்கூரமிடும். அலெக்சாண்டிரியா துறைமுகத்தில், எகிப்தில் இறக்க வேண்டிய சாதனங்களை இறக்கியபிறகு கப்பல்கள் அங்கிருந்து பயணப்பட தொடங்கி பெர்சிய வளைகுடா வழியாக ஈராக் நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள அல்-பாமா நகரை அடையும்.
யூப்ரடீஸ், டைக்ரிஸ் நதிநீர் போக்குவரத்து:
யூப்ரடீஸ், டைக்ரிஸ் நதிகளில் சரக்கு கப்பல்கள் வந்து செல்லும்படி நீர்வழி போக்குவரத்து அமைக்கப்பட்டிருந்தது. யூப்ரடீஸ், டைக்ரிஸ் நதிகள் துருக்கி நாட்டில் உற்பதியாகி சிரியா நாட்டு வழியாக ஓடி ஈராக் நாட்டில் ஒன்றிணைந்து அந்நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள அல்-பாமா நகரில் பெர்சிய வளைகுடாவில் கடலில் கலக்கிறது.
எகிப்தின் அலெக்சாண்டிரியா துறைமுகத்தில் சரக்குகளை இறக்கிவிட்டு பெர்சிய வளைகுடா வழியாக அல்-பாமா நகர் வரும் கோவளத்து கப்பல்கள் அந்நகரில் இணைக்கப்பட்டுள்ள யூப்ரடீஸ், டைக்ரிஸ் நதிநீர் போக்குவரத்து வழித்தடத்தில் பயணிக்க தொடங்கி அது முடியும் இடமான துருக்கி நாடு வரை செல்லும்.
பின்பு கோவளத்து கப்பல்களில் வந்துள்ள பாண்டியநாடு, சோழநாடு, இலங்கை, வங்காளம், பர்மா போன்ற நாடுகளின் வர்த்தக சாதனங்கள் அங்கு இறக்கப்பட்டு துருக்கியின் துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்படும். இறுதியாக துருக்கி தேசத்து துறைமுகங்களிலிருந்து அந்த வர்த்தக சாதனங்கள் கிரேக்க, ரோமாபூரி நாடுகளுக்கு கொண்டு சென்று சேர்க்கப்படும்.
இதன்மூலம் பரவர்கள் எப்படி வர்த்தக சாதனங்களை எகிப்து, கிரேக்கம், ரோமாபூரி போன்ற நாடுகளுக்கு கப்பல்களில் கொண்டு சேர்த்தனர் என்பதனை ஆதாரபூர்வமாக அறியமுடிகிறது.
______________________________________________________
ஆதாரம்:-
VOYAGE TO EAST INDIES BY FRA PAOLINO DA SAN BARTOLOMEO Pg.56, 57, 120
- UNI
பாண்டியாபதி அரண்மனை
Dev Anandh Fernando
07:54

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் மாகாண இராணுவ பிரிவு அதிகாரிகளில் ஒருவரான கர்னல் "ஜேம்ஸ் வெல்ஷ்" என்பவர் தனது நூலில் பரதவர்களின் கன்னியாகுமரியை பற்றி குறிப்பிட்டவைகளை இப்பதிவிலே பார்ப்போம்....
(குறிப்பு: கிழக்குலகு, மேற்குலகு என்று இவ்வுலகம் இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தது.)
கிழக்குலகில் சூரிய உதயமாவதையும், அஸ்தமனமாவதையும் கன்னியாகுமரி கடலில் மட்டுமே பார்த்து ரசிக்க முடியும். வெளிநாட்டவர்களால் இந்நகரம் "கேப் காமரின்" என்றும் உள்ளூர் மக்களால் கன்னியாகுமரி என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
பரதவர்களின் வீடுகளையும், சில வணக்கத்திற்குரிய இந்து சமய கோயில்களையும் மற்றும் ஒரு தேவாலயத்தையும் உள்ளடக்கியதே புகழ்பெற்ற கன்னியாகுமரி நகரம்.
००००००००००००००००००००००००००००००००००००००
கன்னியாகுமரி தேவாலய வரலாறு:-
கன்னியாகுமரியில் முன்பு பரதவர்களுக்கு சொந்தமான மகிழ்ச்சி மாதா குடிசை கோவில் இருந்துள்ளது. இது பதினேழாம் நூற்றாண்டில், அலங்கார மாதா கோயிலாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது.
கோவளத்தை தலைநகராக கொண்டு நாஞ்சில் நாட்டை ஆட்சி புரிந்து வந்த செண்பகராமன் காலிங்கராயன் என்னும் பரதகுல மன்னர் மேற்சொன்ன அலங்கார நாயகி கோவில் கட்ட உதவிகள் பல செய்துள்ளார்.
பின்னாட்களில் அலங்கார மாதா கோவிலை பரதவர்கள் மேலும் விரிவுபடுத்தி பிரமாண்டமாக கட்டியெழுப்பினர். இது இன்று அலங்கார உபகார மாதா கோயில் என்று அழைக்கப்படுகிறது.
----------------------------------------
ஆதாரம்:-
MILITARY REMINISCENCES Vol I By Colonel James Welsh. Pg 217
- UNI
கன்னியாகுமரி
Dev Anandh Fernando
08:10

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் மாகாண இராணுவ பிரிவு அதிகாரிகளில் ஒருவரான கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ்(கிபி 1830) தனது குறிப்பில்....
இந்நகரில் ஐரோபியர்கள் அல்லாத 5,000 பூர்வக்குடிமக்கள் வாழ்கின்றனர். அவற்றில் பெரும்பாண்மை பரவர்களே ஆகும். இப்பரவர்களின் முதன்மையான ஐரோப்பிய தகுதி என்னவென்றால் Dram Drinking (மதுபானம் அருந்துவதாகும். அதுவும் அளவுக்கு அதிகமாக......
கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர் தினத்தன்று இயேசுநாதர் மற்றும் அவரது தாயார் மரியன்னை படங்களால் அலங்கரிக்கப்பட்டு அதனை சுற்றி சிறிய தேவதூதர்களின் சொருபங்கள் பொருத்தப்பட்ட அழகிய தேரை நகரின் அனைத்து வீதிகளில் ஊர்வலமாக இழுத்து செல்கின்றனர்.
----------------------------------------
MILITARY REMINISCENCES Vol I
By
Colonel James
Welsh. Pg 50,51
Welsh. Pg 50,51
- UNI
தூத்துக்குடி
Dev Anandh Fernando
08:13

சங்ககால நம் முன்னோர்கள் பொருளீட்டும் முயற்சியில், கடல் வாணிகத்தில் சிறந்து விளங்கினர். அவர்கள் தலைசிறந்த கடலாடிகள் என்பதைச் சங்ககாலப் பதிவுகள் பல எடுத்துரைக்கின்றன. வத்தை, வல்லம், நாவாய், திமில், அம்பி என பலவகைக் கலங்கள் செய்து, காற்றை அடக்கி, திசையறிந்து, கடலை ஆண்டு வணிகம் செய்துள்ளனர் என்பதற்குச் சங்க காலக் புலவர்கள் தம் பாடல்கள்வழி வரலாற்றுச் செய்திகள் பலவற்றைப் பகர்கின்றார்கள்.
மதுரை நாகனார் அகநானூற்று பாடலில் கலங்கரை விளக்கம் பற்றிச் செய்தி பகர்கின்றார்.
"உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீர் இடைப் போழ
இரவும் எல்லையும் அசைவின்று ஆகி,
விரைசெலல் இயற்கௌ வங்கூழ் ஆட்டக்
கோடு உயர் திணிமணல் அகன்துறை, நீகான்
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய"
விளக்கம்: உலகம் புடைபெயர்ந்தது போன்று அச்சம் விளைவிக்கும் நாவாய்கள், புலால் மணமுடைய அலைகள் கொண்ட பெரிய கடலின் நீரிடையிலே நீரைப் பிளந்து கொண்டுசெல்லும் இரவும், பகலும் தங்கியிருத்தல் ஏதும் இல்லாதபடியாக விரைந்து செல்லும் இயற்கையினதாகிய காற்றானது, அவற்றை அசைந்து செல்லுமாறு செய்ய, நாவாய் ஓட்டுபவன் கரை உயர்ந்த மணல் செறிந்த துறையினிடத்தே இருக்கும் மாடத்து மீதுள்ள ஒளிவிளக்கால் திசையறிந்து அவற்றைச் செலுத்த என்பதாம்.
அன்றைய தமிழகக் கடல் வணிகத்தில் மிகப் பிரமாண்டமான, அச்சம் தரக்கூடிய நாவாய்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன. அவை நீரைப் பிளந்து கொண்டு செல்லும் பேராற்றல் திறன் படைத்திருந்தன என்பதும் பாடல்வழி அறியும் செய்தியாகும். மேலும், கலங்களுக்குத் திசைகாட்டுவதற்குக் கலங்கரை விளக்கங்கள் கடற்கரைப் பகுதிகளில் ஆங்காங்கே இருந்துள்ளன என்பதும் பாடல்வழி புலப்படும் வரலாற்றுத் தரவாகும்.
- திருச்சி பார்த்தி
ஒள் எரி மாடம்
Dev Anandh Fernando
08:03
