எட்டுதொகையில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்
எட்டுதொகையில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்
எழுத்தாளர்: ஆரிய வரசன் யாழ்ப்பிரமதத்தன்
நெய்தல் 185
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை
குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே
இதற்கிது மாண்ட தென்னா ததற்பட்
டாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்சம்
மயிற்கண் அன்ன மாண்முடிப் பாவை
நுண்வலைப் #பரதவர் மடமகள்
கண்வலைப் படுஉம் கான லானே.
குறுத்தொகை
எழுத்தாளர். கணக்காயர் தத்தனார்
நெய்தல் 305
கொல்வினைப் பொலிந்த கூர்வா யெறியுளி
முகம்பட மடுத்த முளிவெதிர் நோன்காழ்
தாங்கரு நீர்ச்சுரத் தெறிந்து வாங்குவிசைக்
கொடுந்திமிற் #பரதவர் கோட்டுமீ னெறிய
நெடுங்கரை யிருந்த குறுங்கா லன்னத்து
வெண்டோ டிரியும் வீததை கானற்
கைதையந் தண்புனற் சேர்ப்பனொடு
செய்தனெ மன்றவோர் பகைதரு நட்பே.
குறுத்தொகை
எழுத்தாளர். தும்பிசேர் கீரனார்
நெய்தல் 321
பெருங்கடற் #பரதவர் கொண்மீன் உணங்கல்
அருங்கழிக் கொண்ட இறவின் வாடலொடு
நிலவுநிற வெண்மணல் புலவப் பலவுடன்
எக்கர்தொறும் பரக்குந் துறைவனொ டொருநாள்
நக்கதோர் பழியு மிலமே போதவிழ்
பொன்னிணர் மரீஇய புள்ளிமிழ் பொங்கர்ப்
புன்னையஞ் சேரி யிவ்வூர்
கொன்னலர் தூற்றந்தன் கொடுமை யானே.
பாடியவர்: அம்மூவனார்
வளை பத்து 5
வளைபடு முத்தம் #பரதவர் பகரும்
கடல்கெழு கொண்கன் காதல் மடமகள்
கெடலரும் துயரம் நல்கிப்
படலின் பாயல் நல்கி யோளெ.