வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 12 March 2020

அகநானூறில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்



அகநானூறு 

பாடல் 350

நெய்தல்


கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப,

எறி திரை ஓதம் தரல் ஆனாதே;
துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின்

இருஞ் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப,

5

வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே;

கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி

வடி மணி நெடுந் தேர் பூண ஏவாது,

ஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகச்

சேந்தனை சென்மோ பெரு நீர்ச் சேர்ப்ப!

10

இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி,

வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர்

ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென,

கலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும்

குவவு மணல் நெடுங் கோட்டு ஆங்கண்,

15

உவக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே!

பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது.

 - சேந்தன் கண்ணனார்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com