மரபுக்கீதம் - TRADITIONAL ANTHEM
மாமணமேவு மதுரமா நிம்பை
மதிகுல பரதவர் மகிழ்பதியே
வாமமார் நகராம் வளமிகு நகராம்
வயப்படு மாணவர் (பரதவர்) உறை நகராம்
நேம ஊக்கம் உயர்வே நிலைபெறு திரவியமே
சேமமும் பல செல்வமும் அளி ஜெயமொழி விருதாமே
சீர்பெறும் கலைஞர் சித்திரக் கவிஞர்
பக்த குருமார் ஈன்ற பழநாடே
தியாகசீலர் வாழ்ந்ததோர் வன்னரும் பொன்னாடே
தியாகமும் நயதிண்யமும் வளர்தென்னவர் புகழ்நாடே
எந்தையர் ஞானம் எளிதினில் காண
வந்தனன் சவியேர்முனி அறிவீர்
வேதஞானபோதம் முன்பே முகிலவன் அளித்தனனே
ஆதலால் அவன் கோதிலாத் திருக்காவலும் ஜெகமீதே
இப்புகழ்ப்பாடல், வேம்பார் புனித சவேரியார் மாணவர் கழகத்தினரின் மரபுக்கீதம்
(TRADITIONAL ANTHEM) ஆகும். கழகத்தின் சார்பில் நடைபெறும் எல்லா நிகழ்விலும் இப்பாடல் பாடப்படும். எல்லாரும்
சேர்ந்தே பாடும் இப்பாடலை இயற்றியவர் புன்னைகாயலை சேர்ந்த சிங்கராயன்
லோபோ சுவாமிகள் ஆகும். இப்பாடல் சற்று திருத்தப்பட்டு சமீப காலம் வரையிலும் ஊர்
நிகழ்வுகளில் பாடப்பட்டு வந்தது. தற்போது மறக்கப்பட்ட பாடலாக மாறி வருகிறது. ஊர் சிறப்பினை வெளிபடுத்தும் விதமாக இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளது.