ஆராதிஷ்ட செபஸ்தியான் முனிந்தீரர் பேரில்
சுந்தரா உபகாரா
சொந்தமாய் நாடி வந்தோம்
மைந்த ரெமைப் பாராய்
நர்போன் நன்னகரில் உதித்தாய்
சர்வேசனைத் துதித்தாய்
துர் ஆசா பாசமே ஜெயித்தாய்
நற்பதவியைப் பெற்றாய்
சத்யமறை யோர்க்காய் நினது
நித்யகடமை செய்தாய்
இத்தாலி யெங்குமே ஜொலித்தாய்
சத்ராதிகளை வென்றாய்
தியோக்ளேசியான் ராயன் உமது
தூய உயிரை அம்பால்
பாய வானோர் கணங்கள் சூழ
நேயன் பதமே சென்றாய்
பஞ்சம் படைக்கொள்ளை நோயால்
நெஞ்சமே நொந்து உம்மை
தஞ்சமாய் ஓடிவந்த மைந்தர்
கொஞ்சமும் வாடினரோ
உம்மையே பாதுகாவலாய்
நிம்பநகரில் கொண்டோம்
எம்மிடி இன்னல்களை நீக்கி
அம்பரன் பதம் சேர்ப்பாய்