வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 19 May 2016

இறால் ஊறுகாய்

தேவையானவை:


இறால் - 1/4 கி

இஞ்சி பூண்டு விழுது 2 தே . க

மிளகாய் தூள் - 2 தே. க

மஞ்சள் தூள் - 1 தே. க

நல்லெண்ணெய் - 200 கி

வினிகர் - 1/2 கப்

உப்பு - 1 ( அ) 11/2 தே. க

வறுத்து பொடிக்க

கடுகு - 1 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

வெந்தயம் - 1/2 ஸ்பூன்


செய்முறை:

முதலில் இறாலை சுத்தமாக கழுவிய பின்  கொஞ்சம் உப்பு, ம.தூள், மி.தூள், இஞ்சி, பூண்டு விழுது பிசறி அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் பாதி எண்ணெய் விட்டு காய்ந்ததும் இறலை போட்டு நன்கு சிவக்க பொரித்து ஆற விடவும்,

இறாலை பொரித்த எண்ணெயுடன் மீதி எண்ணெயை ஊற்றி . சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். 

அடுத்து பொரித்த இறால் ம.தூள் மி.தூள் போட்ட்டு 5 நிமிடம் கிண்டி விடவும். பின்பு வினிகர் உப்பு சேர்த்து இறக்கி விடவும். 

மேலாக வறுத்து பொடித்த பொடியை கின்டி ஆற வைத்து பாடிலில் போட்டு வைக்கவும். ஊறுகாய்க்கு மேலே 1 இஞ்ச் உயரத்திற்க்கு எண்ணெய் இருக்க வேண்டும்.

பாட்டிலின் வாயை வெள்ளை துணியால் மூடி மூன்று நாள் கழித்து உபயோகபடுத்தலாம். 

உப்பு காரம், புளிப்பு போன்றவை அவரவர் ருசிக்கேற்ப்ப சேர்த்துக் கொள்ளலாம் இந்த ஊறுகாய் 2 மாதம் வரை கெடாமல் இருக்கும்.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com