அகர குற்றுயிர் மடக்கு வெண்பா
வேம்பாறு சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ அவர்கள்
அமலோற்பவத் தாயின் பேரில் அருளிய
அகர குற்றுயிர் மடக்கு வெண்பா
அமலோற்பவத் தாயின் பேரில் அருளிய
அகர குற்றுயிர் மடக்கு வெண்பா
வெண்பா :
ககன பரம கரம மரப
வகன லகல மகத வதன
வமல சனன வரச மரப
கமல சரண மபய
பொருள் :
விண்ணாட்டின் பரமனாகிய கடவுளின் திருக்கரத்தில் அமர வரம் பெற்றவளும், பாவக்கனலாகிய நரகாக்கினையை அகலும்படி, மாதவத்தின் மேன்மை கொண்டு, அமலோற்பவமாக ஜெனித்தவளும், அரசக் குலத்தவளுமாகிய தேவ தாயின் தாமரை மலரையொத்த திருவடிகளெனக் கடைக்கலமாமென்றவாறு....