பெருவிழா அழைப்பிதழ்
எழுகடற்றுறைக்கும் முதல் துறையாம் வேம்பாற்றின் பாதுகாவலராகிய ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் வருடாந்திர மகோற்சவ பெருவிழா வரும் 11.01.2018 அன்று மாலை 6.30 மணியளவில் திருக்கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகி 28.01.2018 அன்று காலை 8.30 மணியளவில் கொடியிறக்க வைபவத்துடன் நிறைவடைகிறது.
மகா ஆடம்பர பெருவிழாவிற்கான மாலையாராதனையானது 19.01.2018 அன்று மாலை 6.30 மணியளவில் வேம்பாறு திவ்ய இஸ்பிரித்து சாந்து சர்வேஸ்ரனின் ஆலயத்தில் நடைபெருகிறது. பாதுகாவலரின் மகோற்சவ நகர்வலப் பவனியானது 19.01.2018 இரவிலும் 20.01.2018 அதிகாலையிலும் நடைபெறுகிறது. பவனியைத் தொடர்ந்து மகா ஆடம்பர பெருவிழா திருப்பலியானது 20.01.2018 அன்று நண்பகல் 11.30 மணியளவில் நடைபெருகிறது.
ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் திருத்தலத்தில் 20.01.2018 அன்று மாலை 6.30 மணியளவில் மாலையாராதனை நடைபெறும். தொடர்ந்து பாதுகாவலரின் திருத்தலைமுடி இரவு முத்தி செய்ய தரப்படும். 21.01.2018 அன்று காலை 7.00 மணியளவில் திருத்தலத்தில் பெருவிழா திருப்பலியும் நடைபெறுகிறது.
இவ்விழா நிகழ்வுகளில் கலந்து கொண்டு பாதுகாவலரின் அருகிருப்பினைப் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
அழைப்பில் மகிழும்
வேம்பாற்றுவாசிகள்