வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 9 January 2018

சங்க இலக்கியத்தில் பரதவர்
சங்க இலக்கியத்தில் பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்

பதிற்றுப்பாட்டு

பேர் எழில் வாழ்க்கை
எழுத்தாளர்: காசறு செய்யுட் பரணர்

ஐந்தாம் பத்து 8

துறை: இயன்மொழிவாழ்த்து

வண்ணம்: ஒழுகு வண்ணம்

தூக்கு: செந்தூக்கு

பெயர்: பேர்எழில் வாழ்க்கை

பைம்பொன் தாமரை பாணர்ச் சூட்டி
ஒண்நுதல் விறலியர்க்(கு) ஆரம் பூட்டிக்
கெடல்அரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக்
கடலொ(டு) உழந்த பனித்துறைப் #பரதவ!
ஆண்டுநீர்ப் பெற்ற தாரம் ஈண்(டு)இவர் 5

கொள்ளாப் பாடற்(கு) எளிதின் ஈயும்
கல்லா வாய்மையன் இவன்எனத் தத்தம்
கைவல் இளையர் நேர்கை நிரைப்ப
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
முனைசுடு கனைஎரி எரித்தலின் பொரிதும் 10

இகழ்கவின் அழிந்த மாலையொடு சாந்துபுலர்
பல்பொறி மார்பநின் பெயர்வா ழியரோ
நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும்
மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவின்
பொழில்வதி வேனில் *பேர்எழில் வாழ்க்கை* 15

மேவரு சுற்றமோ(டு) உண்(டு)இனிது நுகரும்
தீம்புனல் ஆயம் ஆடும்
காஞ்சிஅம் பெருந்துறை மணலினும் பலவே.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com