வேம்பாற்றுவாசிகளின் மரபு கீதம்
வேம்பாற்று மண்ணின் மைந்தர் மேதகு முனைவர். பிடேலிஸ் லயனல் இம்மனுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் மன்னார் மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராக பொறுப்பேற்கும் நிகழ்வினை நினைவு கூறும் விதமாக ஒலி வடிவில் தயார் செய்யப்பட்ட வேம்பாற்றுவாசிகளின் மரபு கீதம் 01.01.2018 அன்று புத்தாண்டு நள்ளிரவு திருப்பலிக்குப் பின்னர் அதிகாலை 2.00 மணியளவில் வேம்பார் பரிசுத்த ஆவி ஆலய வளாகத்தில் வெளியிடப்பட்டது. பங்குத்தந்தை. அருட்பணி. பிரதிபன் லிபோன்ஸ் குறுந்தகட்டினை அறிமுகம் செய்து வைத்தார். குறுந்தகட்டின் முதல் பிரதியை கிராம தலைவர் திரு. கெளதமராஜ் பர்னாந்து அவர்கள் வெளியிட திரு. அபூர்வம் கோமஸ் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.