
எட்டுதொகையில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்
நற்றிணை

பாடல் 4
4 நெய்தல்
எழுதியவர்: அம்மூவனார்
கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்
நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு
அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை
அரிய ஆகும் நமக்கு எனக் கூறின்
கொண்டும் செல்வர்கொல் தோழி உமணர்
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்
கருங் கால் வெண் குருகு வெரூஉம்
இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே
தலைவன் சிறைப்புறத்தானாக தோழி அலர்
அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது
புனித செபஸ்தியருக்கு நவநாள்
Heritage Vembarites
00:44

From Wikipedia, the free encyclopedia
"Baratha" and "Bharatas" redirect here. For the Vedic tribe, see Bharatas (tribe). For the noctuid moth genus Baratha, see Mocis.
Bharatha People (Sinhalese: භාරත, translit. Bhārata, Tamil: பரதர், translit. Paratar) also known as Bharatakula, is an ethnicity in the island of Sri Lanka.[2] Earlier considered a caste of the Sri Lankan Tamils, they got classified as separate ethnic group in the 2001 census.[3] They are descendant of Tamil speaking Paravar of Southern India who migrated to Sri Lanka under Portuguese rule.[4] They live mainly on the western coast of Sri Lanka and in the cities of Negombo and Colombo.[5]
Etymology:
Scholars derive Bharatha, also pronounced as Parathar, from the Tamil root word para meaning "expanse" or "sea".[6] The word has been documented in ancient Sangam literature, describing them as maritime people of the Neithal Sangam landscape.[7][8] Colonial archives refer them as Paruwa, a corrupted form of "Paravar".[9]
According to other scholars is Bharatha a name the community took from the Hindu epic Mahabharata, the clan of Bhāratas, who were the ancestor of the heroes in the epic, following their origin myth from Ayodhya.[10][11]
History:
See also: Paravar
They were traditionally occupied in seatrade, pearl diving and fishing. They included the chiefs of the coastal regions, who ruled there as subordinates of the Pandyan kings.[12] The Muslims of Kayalpatnam obtained a lease on pearl fishery by Marthanda Varma. The Bharatas aligned with the Portuguese and overthrew the overlordship by the Muslims and for return were over 20,000 Bharathas converted to Roman Catholicism by the saint Francis Xavier.[13]
Several hundreds of Christian converted Bharathas were brought from Indian mainland to the western shores of Sri Lanka by the Portuguese to wrest control on the pearl trade. Cankili I, king of Jaffna Kingdom, ordered the death of 600 Christian Bharathas who were settled in the Mannar District.[14][15]
Paravar are to be found all over Sri Lanka. Amongst Sri Lankan Tamils Paravar are still a fishing and trading caste although commonly confused with the Karaiyar. The Bharatas or Bharatakula identity is maintained by a relatively prosperous merchant group from India that settled amongst the Sinhalese in the Negombo area.[16]
Assimilation:
Along with Colombo Chetty and other relatively recent merchant groups from South India, there is rapid Sinhalisation or assimilation with the Sinhalese majority. But unlike the Colombo Chettys many still speak Tamil at home and even have marital relationships in India.
According to recent Sri Lankan census categories in July 2001, Bharatakula has been moved out of Sri Lankan Tamil category to simply as a separate ethnic group Bharatha. [1]
Areas of inhabitation[edit]
Names:
Common last names adopted by Bharatkulas include Corera's, Croos, de Croos, Fernando, Ferdinandes, Paiva, Peeris, Miranda, Motha, Corera, Costa, Rayan, Rayen, Rodrigo and Rubeiro. Fernando is the commonest last name. The related Paldanos are descended from the Portuguese military officers (Paladinos) who married into the community.
See also:
Notes:
References:
Jump up^ "A2 : Population by ethnic group according to districts, 2012". Department of Census & Statistics, Sri Lanka.
Jump up^ "Census of Population and Housing 2011". www.statistics.gov.lk. Retrieved 2018-01-24.
Jump up^ Orjuela, Camilla (2008-09-16). The Identity Politics of Peacebuilding: Civil Society in War-Torn Sri Lanka. SAGE Publications India. ISBN 9788132100249.
Jump up^ Roberts, Michael; Raheem, Ismeth; Colin-Thomé, Percy (1989). People Inbetween: The burghers and the middle class in the transformations within Sri Lanka, 1790s-1960. Sarvodaya Book Pub. Services. p. 253. ISBN 9789555990134.
Jump up^ Peebles, Patrick (2015-10-22). Historical Dictionary of Sri Lanka. Rowman & Littlefield. p. 55. ISBN 9781442255852.
Jump up^ Rajesh, Vinod Vincent (2018-01-16). Between Water and Fire: Aspects in the History of the Parathavar Community (Collected Articles). Notion Press. ISBN 9781948372466.
Jump up^ Congress, Indian History (1981). Proceedings of the Indian History Congress. p. 84.
Jump up^ The Catholic Church in Sri Lanka: the Dutch period : original documents. Tisara Prakasakayo. 1983.
Jump up^ Maloney, Clarence (1974). Peoples of South Asia. Holt, Rinehart and Winston. p. 234. ISBN 9780030849695.
Jump up^ Sinnakani, R. (2007). Tamil Nadu State: Thoothukudi District. Government of Tamil Nadu, Commissioner of Archives and Historical Research. p. 276.
Jump up^ Ramaiah, T. G. (2013). Role of Exclusive Credit Linkage Programme for Occupational Dynamics Among Fisherwomen: A Study in Andhra Pradesh and Tamil Nadu States. National Institute of Rural Development, Ministry of Rural Development, Government of India. p. 15. ISBN 9788185542898.
Jump up^ Menon, T. Madhava; Linguistics, International School of Dravidian (2002). A handbook of Kerala. International School of Dravidian Linguistics. p. 653. ISBN 9788185692319.
Jump up^ Gunasingam, Murugar (2005). Primary Sources for History of the Sri Lankan Tamils: A World-wide Search. M.V. Publications for the South Asian Studies Centre, Sydney. p. 62. ISBN 9780646454283.
Jump up^ imitri Mascarenhas and the Negombo connection The Nation - August 19, 2007
Jump up^ "Population by ethnic group, census years" (PDF). Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original (PDF) on 13 November 2011. Retrieved 23 October 2012.
Source: www.en.wikipedia.org
Bharatha people
Dev Anandh Fernando
08:40

“தமிழகத்தில் நகரங்களை உருவாக்கியவை
பண்டைய துறைமுகங்கள்தான்”
முனைவர் பா. ஜெயக்குமார் நேர்காணல்
பொதுமக்களுக்கும் ஆய்வறிஞர்களுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி தமிழ்ச் சமூகத்தில் இருக்கிறது. ஒரு முக்கிய முக்கியமான காரணம் பதிப்பகங்கள் ஆய்வறிஞர்களை ஒவ்வாமையுடன் அவர்களுடைய பணி கல்வி புலத்திலே முடியக்கூடியது என முன் தீர்மானத்துடன் அணுகுவது. இலக்கியங்கள்தான் தமிழ் நூல்கள், இலக்கியவாதிகள் எழுதுவதுதான் வரலாறு என்கிற ஒரு போக்கும் இங்கே உள்ளது. இந்த மூடத்தனத்தால் தமிழில் துறைவாரியான ஆய்வு எழுத்துகள் வந்தபோதும் அதை வெகுமக்களிடம் போகாமல் முடங்கிப் போய் உள்ளன.
இலக்கியத்தை மட்டுமே பதிப்பிக்கும் பதிப்பகங்கள் முன்னணி பதிப்பகங்கள் என்கிற முத்திரையுடன் உலாவ வந்தாலும் இலக்கியம் தவிர்த்து, தமிழின் வளத்தைப் பெருக்கக்கூடிய, அல்லது சமூகத்தை அறிவு ரீதியாக தூண்டக்கூடிய பிற துறை நூல்களை பதிப்பிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. அப்படி ஒரு சிலர் செயல்பட்டாலும் அவர்களை சிறுமைப் படுத்தும் எள்ளலை ‘இலக்கிய’வாதிகள் செய்கிறார்கள். இது ஒருவகையில் அறிவுக்குறைபாடு என்பதே எம் எண்ணம். எனவே, வெளியே தெரியாத பல்துறை சார்ந்த தமிழ் அறிஞர்களையும் தமிழ் நிலத்தின் வளத்தை, தொன்மையை விளக்கும் நூல்கள் குறித்தும் இந்தத் தொடரின் மூலம் அறிமுகப்படுத்தலாம் என நினைக்கிறோம்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த முனைவர் பா. ஜெயக்குமார், ‘தமிழக துறைமுகங்கள்’ நூலின் ஆசிரியர். தொன்மையான வரலாற்றைக் கொண்ட தமிழகத் துறைமுகங்கள் குறித்த மிக முக்கியமான ஆய்வு நூல் இது. 2001-ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த ஆண்டின் சிறந்த நூல் என்ற தமிழக அரசின் பரிசையும் இந்நூல் பெற்றது. முனைவர் பா. ஜெயக்குமாருடன் நடத்திய உரையாடலின் தொகுப்பு இங்கே…
‘தமிழக துறைமுகங்கள்’ நூல் எதைப்பற்றியது என சுருக்கமான அறிமுகம் தரமுடியுமா?
“சங்க இலக்கிய குறிப்புகளைக் கொண்டு தமிழகத்தில் காவிரிபூம்பட்டினம், கொற்கை, முசுறி ஆகிய மூன்று துறைமுகங்களை அறிகிறோம். இதில் முசுறி இன்று இல்லை. பூம்புகார், கொற்கை போல முசுறியை இப்போது பார்க்க முடியாது. முசுறி கேரளக் கரையோரம் வரும் துறைமுகம். இப்போது அந்த இடத்தைக் கடல்கொண்டுவிட்டது. 3000 மீட்டர் ஆழத்தில் அந்த இடம் உள்ளதாக புவியியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், சங்க இலக்கியம் காலம் தொட்டு, அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக காவிரிபூம்பட்டினமும் கொற்கையும் இன்று அறியப்பட்ட இடங்களாக உள்ளன.
சங்க இலக்கியம் வெளிப்படையாகப் பேசும் இந்த மூன்று இடங்களைத் தவிர, சங்க இலக்கியம் மறைமுகமாக பேசும் இடங்களையும் நம்முடைய தொல்லியல் துறையினர் கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படியொரு இடம்தான் ராதநாதபுரம் கடற்கரை பட்டினமான அழகன்குளம். இது சங்க இலக்கியங்களில் பாண்டியர்களின் மருங்கூர் பட்டினமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தொன்மையான தமிழக துறைமுகங்களைப் பார்த்தோமானால் அவை அனைத்தும் கடலும் ஆறும் சேரும் கழிமுகப் பகுதியில் உருவாக்கப்பட்டவையாக இருக்கும். உதாரணத்துக்கு காவிரி கடலோடி கலக்கும் இடத்தில் அமைக்கப்பட்டதே காவிரிபூம்பட்டினம். பெயர்காரணமே அதன் அடிப்படையில் வைக்கப்பட்டதுதான். அதுபோல அழகன்குளம் துறைமுகம் வைகை ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கும் இடமாக உள்ளது. தாமிரபரணி கடலில் சேரும் இடம் கொற்கை துறைமுகமாக இருந்திருக்கிறது. பெரியாறு கடலில் சேரும் இடத்தில் முசுறி துறைமுகமாக இருந்ததாக அறிகிறோம்.
இவை மட்டுமல்லாமல் அகழ்வாய்வுகள் மூலமாக அரிக்க மேடு என்ற துறைமுகத்தையும் கண்டறிந்திருக்கிறோம். சங்க இலக்கியத்தில் நேரடியாக ஐந்தாறு துறைமுகங்களே சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் இடைக்காலத்தில் கிபி 8-9-ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி 16-17 -ஆம் நூற்றாண்டு வரையிலும் கிட்டத்தட்ட 23 துறைமுகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை ஒரே காலாத்தில் செயல்பாட்டில் இருந்தவை அல்ல. வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு அரச மரபுகளுக்குச் சொந்தமானவையாக இருந்திருக்கலாம். நான்கைந்து துறைமுகங்கள் ஒரே நேரத்தில் இயங்கி இருக்கலாம். இதுபோன்ற தகவல்களை கல்வெட்டு, தொல்லியல் கண்டுபிடிப்புகள் மூலமாகக் கொண்டு வந்திருக்கிறோம். அதைத்தான் ‘தமிழக துறைமுகங்கள்’ என்ற பெயரில் நூலாக்கியிருக்கிறேன்.
சோழர்களுக்கு உரியதான நாகப்பட்டினம் துறைமுகம் எப்படி இருந்தது. சீனர்கள் முதற்கொண்டு மற்ற நாட்டினர் அங்கு வந்து வணிகம் செய்தது குறித்தும் இங்கே இறக்குமதியாக சீனக் கனகம் எனப்படும் சீன தங்கத்தை தமிழக பொற்கொல்லர்கள் நகைகளாக மாற்றி, அவற்றை ஏற்றுமதி செய்தது குறித்தும் இந்த நூலில் சொல்லியிருக்கிறேன்.
இன்னொரு தகவலையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். தங்கம் இங்கே கிடைக்கவில்லை. ஆனால் தங்கத்தை வரவழைத்து ஆபரணங்களாக செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளனர். இதை தாய்லாந்தில் கிடைக்கப்பெற்ற கிமு 3 நூற்றாண்டைச் சேர்ந்த தமிழகத்து பொற்கொல்லர்கள் பயன்படுத்திய கையடக்க வெட்டுக்கல் ஒன்றின் மூலம் அறிகிறோம். இதில் ‘பெரும்பதன்கல்’ என தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. பொற்கொல்லர்கள், அல்லது பட்டர்களின் தலைவனைக் குறிக்கும் வகையில் பெரும்பதன் கல் என எழுதியிருக்கலாம் என அறிகிறோம்.
வெவ்வேறு நாடுகளில் பழந்தமிழர்கள் கடல்கடந்து தொடர்பு வைத்திருந்ததை அங்கே அகழ்வாய்வுகளில் கிடைக்கும் பொருட்களின் மூலம் அறிகிறோம். முத்துவணிகம் கடல்கடந்து நடந்திருக்கிறது. யானைகளை இங்கிருந்து அனுப்பியிருக்கிறார்கள். அரேபிய குதிரைகளை வரவழைத்து இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு கடல்கடந்து எடுத்துப் போயிருக்கிறார்கள். துணி வகைகள் ஏற்றுமதி செய்வது 17-ஆம் நூற்றாண்டு வரை சிறப்பாக இருந்திருக்கிறது.”
துணிகள் என்றால், பருத்தி துணிகளா?
“பருத்தி துணிகளும் பின்னாளில் மஸ்லின் என்று சொல்லக்கூடிய மெல்லிய ரக துணிகளையும் ஏற்றுமதி செய்திருக்கிறார்கள்.
பதினென்விசையர்கள் என ஒரு வணிக குழுவினர் இருந்திருக்கிறார்கள். 18 நாடுகளுக்கும் அல்லது 18 திசைகளுக்கும் போய் வணிகம் செய்தவர்களாக இருக்கலாம். இந்தக் குறிப்பு கீழக்கரையில் உள்ள ஒரு விநாயகர் கோயில் கல்வெட்டில் உள்ளது. கிபி 14-ஆம் நூற்றாண்டு வரைக்கும் இவர்கள் வணிகத்தில் சிறந்து விளங்கியது தெரிகிறது. பிறகு இவர்கள் மருவிப் போயிருக்கலாம்.”
இந்த நூலுக்கு எத்தகைய எதிர்வினைகள் வந்தன..?
“இந்த நூல் வந்த பிறகு, ஆஸ்திரேலியா, இலங்கை, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் கல்வி புலத்தில் இயங்கும் பலர் தொடர்பு கொண்டு பேசினார்கள். இந்த நூலை ஆதாரமாகக் கொண்டு பல நூல்கள் வந்துள்ளன. 25க்கும் மேற்பட்ட கடல்சார் வரலாறு முனைவர், எம்ஃபில் பட்ட ஆய்வுகள் வெளிவந்துள்ளன. தற்போது தஞ்சை மாவட்டம் மந்திரபட்டினம் அகழ்வாய்வு இந்த நூலை அடியொற்றிதான் செயல்படுத்தப்பட்டிருக்கிறது”.
பழங்கால துறைமுகங்கள் மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தனவா அல்லது வணிகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தனவா?
“நான் சொல்லப்போவது நிரூபிக்கப்பட்ட கருத்து. ஒரு அரசனின் ஆட்சி சிறந்து விளங்கியதற்கோ வீழ்ச்சியடைந்ததற்கோ காரணமாக இருந்தது, அந்நாட்டின் துறைமுகங்களே. துறைமுகங்களை ஒட்டியே நகரமயமாக்கல் நடைபெற்றிருக்கிறது. கிராமங்கள், நகரங்களாக மாற துறைமுகங்கள் முக்கிய காரணியாக இருந்திருக்கின்றன. இதன் அடிப்படையில் பார்க்கும்போது மக்கள் தொடர்புடையவையாக துறைமுகங்கள் இருந்திருக்கின்றன.
துறைமுகங்களை அரசு கட்டுப்படுத்தியிருக்கிறது. ஒழுங்குபடுத்தியிருக்கிறது. ஆனால், வணிகர்களும் துறைமுகங்களை கட்டுப்படுத்துகிறவர்களாக இருந்திருக்கிறார்கள். உதாரணமாக ஆந்திரமாநிலம் மோட்டுப்பள்ளி அருகே கிடைத்த 13-14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டு, வரிகள் மாற்றியமைக்கப்பட்டது குறித்தும் தங்கள் துறைமுகத்தைப் பயன்படுத்த முத்துக்கள் கொண்டுவரும் வணிகர்கள் வர வேண்டும் என்றும் வணிகர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. முத்து வணிகம் செய்தவர்கள் தமிழர்கள், அவர்களுக்காகவே தமிழில் எழுதப்பட்டுள்ளது இந்தக் கல்வெட்டு. இதுபோல சான்றுகள் மூலம் வணிகர்கள் துறைமுகங்கள் மீது தாக்கம் செலுத்தியவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.”
துறைமுகங்களில் மீனவர்களின் பங்கு என்னவாக இருந்தது? அவர்கள் தொழில்முறையில் மீன்பிடிப்பதை மட்டும் செய்தவர்களா?
“மீனவர்கள் என ஒரு பிரிவினர் இருந்திருக்கிறார்கள். மீனர்கள் சுதந்திரமாக தொழில் செய்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் நல்லபடியாக பொருளீட்டியால்தான் அவர்கள் மீது அரசுகள் வரிகளையும் இடைக்காலத்தில் விதித்திருக்கின்றன. சங்க இலக்கியம் பரதவர்களை அதிகம் பேசுகிறது. ஆனால் பரதவர்கள் குறித்து கல்வெட்டுச் சான்றுகள் என்று எதுவும் தமிழகத்தில் கிடைக்கவில்லை. இலங்கையில் கிடைத்திருக்கிறது. ஒரு படகும் அதில் ஒருவர் போவது போன்றும் கோட்டுருவமாக ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது. இது சங்க காலத்தைச் சேர்ந்தது. மீனவர்களோடு தொடர்புடைய செய்திகளாகப் பார்க்கிறோம். பரதவர்கள் என்கிற மீனவர்களும் நம் பண்பாட்டை பிற இடங்களுக்கு எடுத்துச் சென்றவர்களாகவும் சொல்லலாம்.”
அவர்கள் வணிகத்திலும் ஈடுபட்டார்களா?
“அவர்களும் வணிகத்திலும் ஈடுபட்டிருக்கலாம். உதாரணத்துக்கு மரைக்காயர்கள் என்று இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் உண்டு. இவர்கள் 18-ஆம் நூற்றாண்டில் தான் கடல்சார்ந்த வாணிகத்தில் இருந்தததாக சொல்வார்கள். மரைக்கல ராயர் என்ற சொல்லில் இருந்துதான் மரைக்காயர்கள் சொல் வந்துள்ளதாக 18-ஆம் நூற்றாண்டை ஆய்வு செய்யும் வரலாற்றாசிரியர்கள் சொல்வதுண்டு. முதலாம் குலோத்துங்கன் காலத்திய பண்டைய பாரூஸ், இன்றைய இந்தோனேஷியாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் மரைக்கல ராயர் என்ற சொல் வருகிறது. இது தமிழில் கிடைத்த கல்வெட்டு. எனவே, 700, 600 ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் தொழிலில் மரைக்காயர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறோம். ராதநாதபுரம் கடற்கரையொட்டி மரைக்காயர் பட்டினம் என்ற ஊரின் பெயரும் இதனால்தான் வந்துள்ளது. இதுபோல பரதவர்களும் வணிகர்களாக இருந்திருக்கலாம்.”
கப்பல் கட்டும் தொழிலில் தமிழர் சிறந்து விளங்கியதாக சொல்லப்படுவதுண்டு. இது குறித்த சான்றுகள் கிடைத்துள்ளனவா?
“Trational nevigation and ship building techniques அதாவது மரபு சார்ந்த கப்பல் கட்டும் கலை மற்றும் கப்பல் செலுத்தும் கலை என்று ஒரு திட்டத்தை CSR க்காக ஐந்தாண்டுகளாக ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தோம். கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் மரபார்ந்த கப்பல் கட்டும் பணிகளை இன்னமும் செய்கிறார்கள். கடலூரில் யார்டு என சொல்லப்படும் கப்பல் கட்டும் தளங்கள் செயல்படுகின்றன. ’கோர்டியா’ எனப்படும் களங்களை செய்து வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இதை நம்முடைய தண்ணீரில் பயன்படுத்த முடியாது; வளைகுடா நாடுகளில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய Vessel.
இந்தத் தளங்களில் மரபார்ந்த முறையில் பல தொழிற்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதை ஆவணப்படுத்தியிருக்கிறோம். உதாரணமாக Blank எனச் சொல்லப்படும் படகின் அடிப்பகுதியில் பயன்படுத்தப்படும் மரப்பலகையில் வளைவுகளை உண்டாக்க இயந்திரங்களைப் பயன்படுத்த முடியும். ஆனால், மரபார்ந்த முறையில் சுறா எண்ணெய், மேலும் சில எண்ணெய்கள் சேர்த்து வளைவுகளை உண்டாக்குகிறார்கள். தீயைப் போட்டு, அதன் மேல் மரப்பலகையை வைத்து அதில் எண்ணெய்களை ஊற்றி எவ்வளவு வளைவு வேண்டுமோ அதற்கேற்றப்படி வளைக்கிறார்கள்.”
மரபார்ந்த தொழிற்நுட்பங்களை இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்குக் கடத்தப்படுகிறதா?
“அப்படி எதுவும் நடப்பதில்லை. எப்படி ஒரு போலீஸ்காரர் தன்னுடைய மகன் போலீஸ் ஆக விரும்புவதில்லையோ அதுபோல இவர்களும் தங்களுடைய பிள்ளைகள் இந்தத் தொழிலுக்கு வருவதை விரும்புவதில்லை. இதுல என்ன சாதிக்கப்போறான் என்கிற மனநிலை மக்களிடம் உள்ளது. இன்றைய வாழ்க்கை முறையும் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு வாழக்கூடியதாக மாறிவிட்டது. பக்கத்து வீட்டில் இருப்பவர் வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிக்கும்போது தன்னுடைய பிள்ளை மரபுசார்ந்த படகு கட்டும் தொழிலை செய்துகொண்டிருக்கிறான்; இரண்டு பேருடைய பொருளாதார நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அதில் வித்தியாசம் அதிகமாக உள்ளது. எனவே இதே தொழிலில் நீடிப்பதை அவர்கள் விரும்பவில்லை.”
தொல்லியல், கல்வெட்டியல் போன்ற படிப்புகளுக்கு மாணவர்கள் ஆர்வமாக வருகிறார்கள்?
“வருகிறார்கள்…இதை நாங்கள் ஆய்வுக்களமாக பார்ப்பதால் அதற்குரிய பாடத்திட்டங்கள். தொல்லியல், கல்வெட்டியல் என சொல்லும்போது அகழ்வாய்வு செய்து பழங்கால மக்கள் விட்டுச்சென்ற பொருட்களை எடுப்பது, அவற்றை எப்படி வரலாற்று மீட்டுருவாக்கத்துக்கு உட்படுத்துவது, Newinterpretation என்று சொல்லக்கூடிய புதிய விளக்கங்கள், புதிய தரவுகளைக் கொண்டு வெளிக்கொண்டுபோவது, கல்வெட்டுகளை எப்படி படிப்பது, என்னென்ன எழுத்து முறைகள் நம் பண்பாட்டில் இருந்திருக்கின்றன என 19 பாடங்கள் உள்ளன. இதில் கடல்சார் வரலாறும் உண்டு. இவைமட்டுமல்லாமல் பல்வேறு பட்ட நிலைகளில் அவர்களுடைய ஆய்வுகளை கொண்டு செல்லும் வகையில் கற்பித்தல் இருக்கும்.
இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்க வருகிறார்கள். தாய்ப் பல்கலைக்கழகமான சென்னை பல்கலை, தஞ்சை பல்கலை என தமிழகத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே இந்தத் துறையில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் (எம்.ஏ எம்.பில், பி. எச்டி) படிப்புகள் உள்ளன. மாணவர் சேர்க்கையும் 10, 15க்குள்தான் இருக்கும். ஓரளவுக்கு வசதி இருப்பவர்கள்தான் வந்து சேரக்கூடிய நிலை இருக்கிறது. ”
’தமிழக துறைமுகங்கள்’ நூல் மறுபதிப்பு எப்போது வெளிவரும்…?
“விரைவில் வெளிவரும். நாகப்பட்டினம் அகழாய்வுகளையும் நூலில் சேர்க்க வேண்டியுள்ளது. பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. விரைவில் மறுபதிப்பு வரும்”
பரந்த மக்கள் தொகைக் கொண்ட தமிழ் சமூகத்தில், ஆய்வு நூல்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காகத்தான் (கல்வி புலத்தில் இருப்பவர்களுக்காகத்தான்) என்ற நிலை உள்ளது. இந்த அறிவெல்லாம் சாமானியர்களையும் எட்டும்போதுதானே அந்தத் துறையும் விசாலமடையும். இந்த நிலைக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?
“பொதுமக்களும் சேர்ந்து படிக்க வேண்டும் என்று இதுபோன்ற நூல்கள் பதிப்பிக்கப்படுவதில்லை. மிகப்பெரிய ஸ்காலர்கள், ஆய்வாளர்கள் தங்களுடைய நூல்கள் ஆங்கிலத்தில் வருவதை பெருமைக்குரியதாக, மரியாதையாக நினைக்கிறார்கள். ஆனால் அந்த நூல்கள் உலகம் முழுமைக்கும் 30 படிகள்தான் விற்கும். ஆங்கிலத்தில் எழுதியதால் அடுத்த வீட்டுக்காரருக்கூட இவர் நூல் எழுதியிருப்பது தெரியாது. இது ஒரு காரணம்.
இன்னொரு காரணம், கல்வி பின்புலம் இல்லாமல் படிக்க மட்டுமே தெரிந்த ஒருவருக்கு புரியும்படியாக ஆய்வு நூல்கள் எழுதப்படுவதில்லை. அடுத்து, இந்த நூல்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்லக்கூடிய பொறுப்பு நூலாசிரியருடையது மட்டுமல்ல. ஊடகங்கள், அரசு, ஆசிரியர்களுக்கும் இருக்கு.
இப்போது என்னுடைய நூல்களையே எடுத்துக்கொள்ளுங்கள் 1200 படிகள் பதிப்பித்தோம். 800 படிகள் நூலகத்துக்கும் மீதியிருந்தவை ஆய்வு புலத்தில் இயங்குகிறவர்களுக்கும்தான் போய் சேர்ந்தது. பொதுமக்களில் எத்தனை பேர் இந்த நூலைப் படித்திருப்பார்கள்? முன்பே சொன்னதுபோல அரசு நூலகங்களுக்கு ஒரு படி என்பதற்கு பதிலாக 10 படிகள்கூட வாங்கி வைக்கலாம். கிராமப்புற நூலகங்களிலும் இதுபோன்ற ஆய்வு நூல்களை வாங்கி வைக்க வேண்டும்.
இதையெல்லாம் செய்தால் இதுபோன்ற இன்னும் பல துறைகள் இருக்கின்றன, தேடுதல்களைத் தொடங்க வேண்டிய துறைகள் இருக்கின்றன என வருங்கால இளைஞர்களுக்கு ஆர்வம் ஏற்படும். பொதுமக்களுக்குப் போய்ச் சேராதவரை எந்தத் துறையும் புதிய உயரங்களை எட்டாது!”.
Thanks : www.thetimestamil.com
பண்டைய துறைமுக நகரங்கள்
Dev Anandh Fernando
08:38

பொருநராற்றுப்படையில் இருந்து பரதர் பற்றிய வரலாற்று சான்றுகள்
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும்பூங் கண்ணி குறவர் சூடக்
கானவர் மருதம் பாட அகவர் .... 220
பொருநராற்றுப்படை எழுத்தாளர்: முடத்தாமக்கண்ணியார்

பாடப்பட்டவன் :: சோழன் கரிகால் பெருவளத்தான்
திணை :: பாடாண்திணை
துறை :: ஆற்றுப்படை
பாவகை :: ஆசிரியப்பா
மொத்த வரிகள் :: 248
அறாஅ யாணரகன் றலைப் பேரூர்ச்
சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது
வேறுபுல முன்னிய விரகறி பொருந
குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல்
விளக்கழ லுருவின் விசியுறு பச்சை ...5
எய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற்
றைதுமயி ரொழுகிய தோற்றம் போலப்
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
அளைவா ழலவன் கண்கண் டன்ன
துளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி ....10
எண்ணாட் டிங்கள் வடிவிற் றாகி
அண்ணா வில்லா அமைவரு வறுவாய்ப்
பாம்பணந் தன்ன வோங்கிரு மருப்பின்
மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும்
கண்கூ டிருக்கைத் திண்பிணித் திவவின் ... 15
ஆய்தினை யரிசி யவைய லன்ன
வேய்வை போகிய விரலுளர் நரம்பின்
கேள்வி போகிய நீள்விசித் தொடையல்
மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன
அணங்குமெய்ந் நின்ற அமைவரு காட்சி ....20
ஆறலை கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கு மருவுஇன் பாலை
வாரியும் வடித்தும் உந்தியு முறழ்ந்தும்
சீருடை நன்மொழி நீரொடு சிதறி
அறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதற் ... 25
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்
இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப்
பலஉறு முத்திற் பழிதீர் வெண்பல்
மயிர்குறை கருவி மாண்கடை யன்ன
பூங்குழை ஊசற் பொறைசால் காதின் ... 30
நாண்அடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தின்
ஆடமைப் பணைத்தோ ளரிமயிர் முன்கை
நெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரற்
கிளிவா யப்பி னொளிவிடு வள்ளுகிர்
அணங்கென உருத்த சுணங்கணி யாகத் ... 35
தீர்க்கிடை போகா ஏரிள வனமுலை
நீர்ப்பெயற் சுழியி னிறைந்த கொப்பூழ்
உண்டென வுணரா உயவும் நடுவின்
வண்டிருப் பன்ன பல்காழ் அல்குல்
இரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கின் ... 40
பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப
வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி
அரக்குருக் கன்ன செந்நில னொதுங்கலிற்
பரற்பகை யுழந்த நோயடு சிவணி
மரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்குள் ... 45
நன்பக லந்தி நடையிடை விலங்கலிற்
பெடைமயி லுருவிற் பெருந்தகு பாடினி
பாடின பாணிக் கேற்ப நாடொறும்
களிறு வழங்கதர்க் கானத் தல்கி
இலைஇல் மராஅத்த எவ்வந் தாங்கி .... 50
வலைவலந் தன்ன மென்னிழன் மருங்கிற்
காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றைப்
பீடுகெழு திருவிற் பெரும்பெயர் நோன்றாள்
முரசுமுழங்கு தானை மூவருங் கூடி
அரசவை யிருந்த தோற்றம் போலப் .... 55
பாடல் பற்றிய பயனுடை எழாஅற்
கோடியர் தலைவ கொண்ட தறிந
அறியா மையி னெறிதிரிந் தொராஅ
தாற்றெதிர்ப் படுதலு நோற்றதன் பயனே
போற்றிக் கேண்மதி புகழ்மேம் படுந ... 60
ஆடுபசி யுழந்தநின் இரும்பே ரொக்கலொடு
நீடுபசி யராஅல் வேண்டி னீடின்
றெழுமதி வாழி ஏழின் கிழவ
பழுமர முள்ளிய பறவையின் யானுமவன்
இழுமென் சும்மை யிடனுடை வரைப்பின் ... 65
நசையுநர்த் தடையா நன்பெரு வாயில்
இசையேன் புக்கென் இடும்பை தீர
எய்த்த மெய்யே னெய்யே னாகிப்
பைத்த பாம்பின் துத்தி யேய்ப்பக்
கைக்கச டிருந்தவென் கண்ணகன் தடாரி ... 70
இருசீர்ப் பாணிக் கேற்ப விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்
ஓன்றியான் பெட்டா அளவையி னொன்றிய
கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறிக் ... 75
கண்ணிற் காண நண்ணுவழி இரீஇப்
பருகு அன்ன அருகா நோக்கமொடு
உருகு பவைபோ லென்பு குளிர்கொளீஇ
ஈரும் பேனும் இருந்திறை கூடி
வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த ... 80
துன்னற் சிதாஅர் துவர நீக்கி
நோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரி யன்ன அறுவை நல்கி
மழையென மருளும் மகிழ்செய் மாடத்து
இழையணி வனப்பி னின்னகை மகளிர் ... 85
போக்கில் பொலங்கல நிறையப் பல்கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
ஆர வுண்டு பேரஞர் போக்கிச்
செருக்கொடு நின்ற காலை மற்றவன்
திருக்கிளர் கோயி லொருசிறைத் தங்கித் ... 90
தவஞ்செய் மாக்கள் தம்முடம் பிடாஅ
ததன்பய மெய்திய வளவை மான
ஆறுசெல் வருத்தம் அகல நீக்கி
அனந்தர் நடுக்க மல்ல தியாவதும்
மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து ... 95
மாலை யன்னதோர் புன்மையுங் காலைக்
கண்டோட் மருளும் வண்டுசூழ் நிலையும்
கனவென மருண்டவென் னெஞ்சே மாப்ப
வல்லஞர் பொத்திய மனம்மகிழ் சிறப்பக்
கல்லா இளைஞர் சொல்லிக் காட்டக் ... 100
கதுமெனக் கரைந்து வம்மெனக் கூஉய்
அதன்முறை கழிப்பிய பின்றைப் பதனறிந்து
துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்
பராஅரை வேவை பருகெனத் தண்டிக்
காழிற் சுட்ட கோழூன் கொழூங்குறை ... 105
ஊழின் ஊழின் வாய்வெய் தொற்றி
அவையவை முனிகுவ மெனினே சுவைய
வேறுபல் லுருவின் விரகுதந் திரீஇ
மண்ணமை முழவின் பண்ணமை சீறியாழ்
ஒண்ணுதல் விறலியர் பாணி தூங்க .... 110
மகிழ்ப்பதம் பன்னாட் கழிப்பி யருநாள்
அவிழ்ப்பதங் கொள்கென் றிரப்ப முகிழ்த்தகை
முரவை போகிய முரியா அரிசி
விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல்
பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப ... 115
அயின்ற காலைப் பயின்றினி திருந்து
கொல்லை உழுகொழு ஏய்ப்பப் பல்லே
எல்லையு மிரவும் ஊன்றின்று மழுங்கி
உயிர்ப்பிடம் பெறாஅ தூண்முனிந் தொருநாள்
செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய .... 120
செல்வ சேறுமெந் தொல்பதிர் பெயர்ந்தென
மெல்லெனக் கிளந்தன மாக வல்லே
அகறி ரொவெம் ஆயம் விட்டென
சிரறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடு
துடியடி யன்ன தூங்குநடைக் குழவியடு .... 125
பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத்
தன்னறி யளவையின் தரத்தர யானும்
என்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண்டு
இன்மை தீர வந்தனென் வென்வேல்
உருவப் ப·றேர் இளையோன் சிறுவன் ... 130
முருகற் சீற்றத் துருகெழு குருசில்
தாய்வயிற் றிருந்து தாய மெய்தி
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்பச்
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்பப்
பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி ... 135
வெல்வெஞ் செல்வன் விசும்புபடர்ந் தாங்குப்
பிறந்துதவழ் கற்றதற் றொட்டுச் சிறந்தநன்
னாடுசெகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப
ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி ... 140
முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத்
தலைக்கோள் வேட்டங் களிறட் டாஅங்கு
இரும்பனம் போந்தைத் தோடுங் கருஞ்சினை
அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும்
ஒங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த .... 145
இருபெரு வேந்தரு மொருகளத் தவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாட்
கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்
தாணிழல் மருங்கி னணுகுபு குறுகித்
தொழுதுமுன் னிற்குவி ராயிற் பழுதின் ... 150
றீற்றா விருப்பிற் போற்றுபு நோக்கிநும்
கையது கேளா அளவை ஒய்யெனப்
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னற் சிதாஅர் நீக்கித் தூய
கொட்டைக் கரைய பட்டுடை நல்கிப் .... 155
பெறலருங் கலத்திற் பெட்டாங் குண்கெனப்
பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர
வைகல் வைகல் கைகவி பருகி
எரியகைந் தன்ன வேடில் தாமரை
சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி .... 160
நூலின் வலவா நுணங்கரில் மாலை
வாலொளி முத்தமொடு பாடினி யணியக்
கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஊட்டுளை துயல்வர வோரி நுடங்கப்
பால்புரை புரவி நால்குடன் பூட்டிக் .... 165
காலி னேழடிப் பின்சென்று கோலின்
தாறுகளைந் தேறென் றேற்றி வீறுபெறு
பேரியாழ் முறையுழிக் கழிப்பி நீர்வாய்த்
தண்பணை தழீஇய தளரா விருக்கை
நன்பல் லூர நாட்டொடு நன்பல் ... 170
வெரூஉப்பறை நுவலும் பரூஉப்பெருந் தடக்கை
வெருவரு செலவின் வெகுளி வேழம்
தரவிடைத் தங்கலோ விலனே வரவிடைப்
பெற்றவை பிறர்பிறர்க் கார்த்தித் தெற்றெனச்
செலவுகடைக் கூட்டுதி ராயிற் பலபுலந்து ... 175
நில்லா வுலகத்து நிலைமை தூக்கிச்
செல்கென விடுக்குவ னல்ல நொல்லெனத்
திரை பிறழிய விரும் பெளவத்துக்
கரை சூழ்ந்த அகன் கிடக்கை
மா மாவின் வயின் வயினெற் ... 180
றாழ் தாழைத் தண் டண்டலைக்
கூடு கெழீஇய குடி வயினாற்
செஞ் சோற்ற பலி மாங்திய
கருங் காக்கை கவவு முனையின்
மனை நொச்சி நிழலாங் கண் ... 185
ஈற்றி யாமைதன் பார்ப்பு ஓம்பவும்
இளையோர் வண்ட லயரவும் முதியோர்
அவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் சொலவும்
முடக் காஞ்சிச் செம் மருதின்
மடக் கண்ண மயில் ஆலப் ... 190
பைம் பாகற் பழந் துணரிய
செஞ் சுளைய கனி மாந்தி
அறைக் கரும்பி னரி நெல்லின்
இனக் களமர் இசை பெருக
வற ளடும்பி னிவர் பகன்றைத் ... 195
தளிர்ப் புன்கின் றாழ் காவின்
நனை ஞாழலொடு மரங் குழீஇய
அவண் முனையி னகன்று மாறி
அவிழ் தளவி னகன் தோன்றி
நகு முல்லை யுகுதேறு வீப் .... 200
பொற் கொன்றை மணிக் காயா
நற் புறவி னடை முனையிற்
சுற வழங்கும் இரும் பெளவத்
திற வருந்திய இன நாரை
பூம் புன்னைச் சினைச் சேப்பின் .... 205
ஒங்கு திரை யலிவெரீ இத்
தீம் பெண்ணை மடற் சேப்பவும்
கோட் டெங்கின் குலை வாழைக்
கொழுங் காந்தண் மலர் நாகத்துத்
துடிக் குடிஞைக் குடிப் பாக்கத்துக் .... 210
யாழ் வண்டின் கொளைக் கேற்பக்
கலவம் விரித்த மட மஞ்ஞை
நில வெக்கர்ப் பல பெயரத்
தேனெய் யடு கிழங்கு மாறியோர்
மீனெய் யடு நறவு மறுகவும் .... 215
தீங் கரும்போ டவல் வகுத்தோர்
மான் குறையடு மது மறுகவும்
குறிஞ்சி #பரதவர் பாட நெய்தல்
நறும்பூங் கண்ணி குறவர் சூடக்
கானவர் மருதம் பாட அகவர் .... 220
நீனிற முல்லைப் ப·றிணை நுவலக்
கானக் கோழி கதிர் குத்த
மனைக் கோழி தினைக் கவர
வரை மந்தி கழி மூழ்க
கழி நாரை வரை யிறுப்பத் .... 225
தண் வைப்பினா னாடு குழீஇ
மண் மருங்கினான் மறு வின்றி
ஒரு குடையா னென்று கூறப்
பெரி தாண்ட பெருங் கேண்மை
அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல் .... 230
அன்னோன் வாழி வென்வேற் குருசில்
மன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மாண்
எல்லை தருநன் பல்கதிர் பரப்பிக்
குல்லை கரியவுங் கோடெரி நைப்பவும்
அருவி மாமலை நிழத்தவு மற்றக் .... 235
கருவி வானங் கடற்கோள் மறப்பவும்
பெருவற னாகிய பண்பில் காலையும்
நறையும் நரந்தமு மகிலு மாரமும்
துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுகி
நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும் .... 240
புனலாடு மகளிர் கதுமெனக் குடையக்
கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து
சூடுகோ டாகப் பிறக்கி நாடொறும்
குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும் .... 245
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கு நாடுகிழ வோனே. ..... 248
பொருநராற்றுப்படையில் பரதர்
Dev Anandh Fernando
01:12

சிறுகதை
திரிசடைத் தீவு முத்து குளிப்பதற்குப் பிரசித்தி பெற்றது. அங்கு விளையும் முத்துகள் குழந்தைகளின் கண்களைப் போல வசீகரமும் மென்னொளியும் கொண்டவை என்றும் அது போன்ற ஒளிரும் முத்துகள் மன்னார் வளைகுடா பகுதியில் வேறு எங்கும் கிடைப்பதில்லை என்றும் கடற்வணிகர்கள் தெரிவித்தனர். அதனினும் கூடுதலாக ஒரு காரணமிருந்தது. அது, விக்டோரியா மகாராணியின் கவனம் பெறவேண்டுமானால் திரிசடை முத்துகளில் ஒன்று கைவசம் இருந்தால் கூடப் போதும் என்பதே.
லண்டனில் நடைபெற்ற விக்டோரியா மகா ராணியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது உத்கலா ராஜா காலிப் அலியின் மனைவி பேகம் உம்ரா அணிந்திருந்த வெண் முத்துமாலையின் மீது வசீகரமான மகாராணி, தனக்கு அது போன்ற மாலையொன்று உடனடியாகத் தேவை என உத்தரவிட்டாள்.
அவை மிக அரிதான கேசி முத்துகள் என்றும் தென்னிந்தியாவில் உள்ள திரிசடை தீவில் மட்டுமே கிடைக்கக் கூடியது என்றும் கம்பெனி வணிகர்கள் தெரிவித்தார்கள். முத்துகளைத் தேடி அதன் மறுநாளே ராயல் ரெஜிமெண்ட்டின் இரண்டு பிரிவுகள் திரிசடை தீவிற்குப் புறப்பட்டன.
ஆனால் ஒன்றரை ஆண்டுகாலமாகியும் அவர்களில் ஒருவர் கூட திரும்பி வரவேயில்லை என்பதுடன் அவர்கள் உடல்கள் கூட கிடைக்கவில்லை. மறுமுயற்சியாக, 104வது படைப்பிரிவின் முப்பது வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களாலும் திரிசடை முத்துகளைக் கொண்டுவர முடியவில்லை. ஆனால் அந்த முப்பது உடல்களும் விஷம் பாரித்த நிலையில் கடலில் மிதந்ததை வணிகக்கப்பல்கள் கண்டு பிடித்தன. அதிலிருந்து திரிசடைக்கு முத்துகளைச் சேகரிக்கச் செல்வது துர்சாபமான செயல் என்று கருதப்பட்டது.
தொடர்ந்த ஏமாற்றத்தால் ஆத்திரமடைந்த கவர்னர் ரபேல் வாலீஸ் இது குறித்து விசாரிக்கும்படி மத ராஸ் கோட்டைக்கு அனுப்பிய கடிதத்திற்கு ஒரு வரைபடத்துடன் பதில் வந்திருந்தது. அதில் திரிசடை தீவில் உள்ளவர்களைத் தவிர வேறு ஆட்களால் அந்த முத்துப் படுகையை அறிந்து கொள்வதோ அறுத்து எடுப்பதோ இயலாது என்றும், அங்கே முத்து கிடைப்பதற்கு அதிர்ஷ்டம் மட்டுமே துணை நிற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை கவர்னரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனே தனது படைப் பிரிவில் இருந்து பதினோரு நபர்களைத் தேர்வு செய்து திரிசடைக்கு அனுப்ப உத்தரவிட்டார். அதில் ஒருவனாகவே டக்ளஸ் தீவிற்குப் புறப்பட்டான். ஒன்பது நாள் கடற்பயணத்தின் ஊடே கப்பலில் அவன் கடலோடிகள் அந்தத் தீவைப் பற்றி எழுதி வைத்த குறிப்புகளை வாசித்தபடியே வந்தான். தேவதைக் கதைகளில் வரும் மந்திரத் தீவைப் போன்று எண்ணிக்கையற்ற கதைகள் திரிசடையைப் பின்னியிருந்தன.
திரிசடை தீவில் வசிப்பவர்கள் கடலுக்குள் நாள் கணக்கில் மூச்சடக்கி வாழ முடியும் என்றும் அவர்கள் முத்துகளை ஒருபோதும் விலைக்கு விற்பதில்லை என்றும் மாறாக, தங்களது குலதெய்வமான சூதனியின் உதிர்ந்து விழுந்த பற்கள் தான் கடலில் முத்தாக விளைவதாகவும் ஆகவே அதை அறுவடை செய்து சூதனிக்குப் படைப்பது தங்களது பிறவிக்கடமை என்றும் நம்பினார்கள். திரிசடை தீவில் வாழ்வது மிக போராட்டமான ஒரு கலை. அங்கே கடல் உறங்குவதேயில்லை.
தீவுவாசிகள் மிக எளிமையானவர்கள். அவர்கள் கடல்நண்டுகளைப் போல தங்கள் வளைக்குள்ளாகவே ஒளிந்து வாழ்பவர்கள். வெளிஉலகம் மீது அவர்களுக்கு ஈர்ப்போ. அக்கறையோ இருப்பதேயில்லை. அந்த தீவு சங்கு போன்ற வடிவத்திலிருக்கிறது. எந்த சப்தமும் அதற்குள் சென்றால் அதிகமாகி விடும். ஆகவே அங்கே ஓசை அடங்குவதேயில்லை.
அதிலொன்று, அந்தத் தீவில் உள்ள கற்களில் ஒன்று கடலில் மிதக்கக் கூடியது என்றும் அதைத்தான் தீவுவாசிகள் படகு போல பயன்படுத்துவதாகவும் சொன்னது. மிகையான கதைகள் என்று டக்ளஸ் சிரித்தபடியே கடலோடிகளின் பயம் தான் கதைகளாக உற்பத்தியாகியிருக்கிறது என்று சக வீரர்களிடம் சொன்னான். ஒன்பது நாள் கடல் பயணத்திற்குப் பிறகு அவர்கள் திரிசடை தீவுக்கு ஒரு கல் தொலைவில் கப்பலை நிறுத்திக் கொண்டு நான்கு நாட்டுப்படகில் தீவை நோக்கிச் சுமைகளுடன் புறப்பட்டார்கள். அப்போது கோடை துவங்கி இரண்டு வாரமாகியிருந்தது.
திரிசடை தீவு மிகச்சிறியது. அங்கே இரண்டு குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்தன. முதல் குடும்பம் ‘ஆலா‘ என்று அழைக்கப்பட்டது. அவர்கள் கடலில் முத்துவிளையும் படுகையை அறிந்து சொல்லக் கூடியவர்கள். மற்ற குடும்பம் ‘பட்டங்கட்டி‘ என்று அறியப்பட்டிருந்தது. அவர்களே முத்து அறுத்து எடுத்து வருபவர்கள். இரண்டிலுமாகச் சேர்ந்து பதினெட்டு பேர் இருந்தார்கள். அதில் மூன்று குழந்தைகள். ஐந்து பெண்கள்.
நூற்றாண்டு காலமாக அதே தீவில் வசித்து வந்த அந்தக் குடும்பங்கள் ஒன்றுக்குள் ஒன்று திரு மணம் செய்து கொண்டன. இறந்து போனவர்களை அவர்கள் புதைப்பதில்லை. மாறாக, சவத்தோடு பெரியகல் ஒன்றைச் சேர்த்துக்கட்டி கடலின் அடி ஆழத்திற்குக் கொண்டு போய் போட்டுவந்து விடுவார்கள். இறந்தவரின் ஆன்மா ஓளிரும் குமிழ்களாக கடலாழத்தில் மிதந்து கொண்டேயிருக்கும் என்றும் அந்த நீலக்குமிழ்களே முத்துப் படுகைகளை அடையாளம் காட்டுகின்றதாகவும் அவர்கள் நம்பினார்கள்.
இங்கிலாந்திலிருந்து தனது பத் தொன்பதாவது வயதில் இந்தியாவிற்கு வருகை தந்த டக்ளஸ் பிராங் பெங்கால் ரெஜிமெண்டில் ஐந்தரை வருஷங்கள் வேலை செய்து கொண்டிருந்தான். அவனது துப்பாக்கி சுடும் திறமை அசாத்தியமானது. காற்றில் மிதக்கும் இலையின் நரம்புகளைக் கூட அவனால் குறிவிலகாமல் சுட்டுவிட முடியும். அதன்காரணமாகவே அவனை கவர்னரின் வேட்டைப்பிரிவில் எட்டாம் ஆளாகச் சேர்த்திருந்தார்கள்.
கவர்னர் வாலீஸ் மாதம் ஒருமுறை வேட்டைக்குக் கிளம்பிவிடுவார். அவருக்கு மிருகங்களைச் சுடுவதில் அதிக ஈடுபாடு கிடையாது. மாறாக, கொல்லப்பட்ட மிருகங்களின் தலைமீது தனது காலை வைத்துக் கொண்டு கம்பீரமாக புகைப்படம் எடுத்துக் கொள்வதில்தான் ஆர்வம் அதிகம். அதற்காகவே அவருடன் ஜான் மெக்கே என்ற புகைப்படக் கலைஞர் இருந்தார்.
கவர்னரின் இந்த வேட்டைப் பிரிவில் பன்னிரெண்டு துப்பாக்கி வீரர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒவ்வொரு மாதமும் முழுநிலா நாளில் கவர்னர் தனது வேட்டைக் குழுவினருடன் வனவிஜயம் கிளம்பி விடுவார். அவரை வரவேற்றுக் காட்டிற்குள் அழைத்துப் போவதற்காக நவாப்பின் ஆட்கள் யானைகள், குதிரைகளுடன் தயாராக இருப்பார்கள்.
அந்த வேட்டைக் குழுவில் டக்ளஸ் பிராங்கே அதிக புலிகளைக் கொன்றவன். தான் கொன்ற புலியின் உடலில் இருந்து ஒரு கொத்து மயிர்களை மட்டும் டக்ளஸ் தனியே வெட்டி எடுத்து ஒரு குப்பியில் அடைத்துக் கொள்வான். எப்போதாவது அந்த மயிர்களைக் கையில் தொடும்போது புலியின் சீற்றமான துடிப்பும் மூச்சும் அதில் இருப்பது போலவே உணர்வான்.
மற்றபடி டக்ளஸை வசீகரிப்பது, சுடப்போகும் மிருகத்திற்காக காத்திருப்பது மட்டுமே. அவன் காட்டிற்குள் நுழையும்போதே இன்று தான் எந்த மிருகத்தைக் கொல்லக்கூடும், அது இப்போது என்ன செய்து கொண்டிருக்கும் என்று யோசிக்கத் துவங்கிவிடுவான். எந்தப் புள்ளியில் தானும் அந்த மிருகமும் சந்திக்கப் போகிறோம், அது ஏன் தன் கையால் சாகிறது என்று ஏதேதோ மனதில் தோன்றியபடியே இருக்கும். கவர்னர் யானை மீது அமர்ந்தபடியே வனத்தை ஒரு மாபெரும் விளையாட்டு மைதானம் போல நினைத்து உவகை கொள்வார்.
அவர்கள் காய்ந்துபோன நாணலை மிதித்து நடந்து ஆற்றைக் கடந்து வனத்தின் அடிவயிற்றை நோக்கிச் செல்லும்போது டக்ளஸின் கண்கள் ஒவ்வொரு இலை அசைவையும் ஊடுருவிச் செல்லும். வாசமும் கவனமும்தான் அவனது வழித்துணைகள்.
புலியின் வருகையை அவனது உள்ளுணர்வு எப்போதுமே முன் கூட்டி அறிவித்து விடுகிறது. அவன் புலியின் கண்களைச் சந்திக்கும்வரை எந்த சலனமும் இல்லாமல் காத்துக் கொண்டேயிருப்பான். எங்கிருந்தோ புலியின் பாதங்கள் பூமியில் மிக நிதானமாக நடந்து தன்னை நோக்கி முன்னேறி வருவது அவனால் உணரமுடியும். அந்த நிமிடங்களில் அவன் பரபரப்பு கொள்வதில்லை. மாறாக, சொல்லமுடியாத ஒரு வலியை உணர்வான்.
அந்த வலி சில நிமிஷங்கள் விருட்டென மீனொன்று நீரின் மீது துள்ளி விழுவது போல அசைந்து ஒடுங்கி விடும். பிறகு அவனுக்குப் புலி, அடித்து வீழ்த்தவேண்டிய வெறும் இலக்கு மட்டுமே. தனது துப்பாக்கியின் விசையை அவன் விரல்கள் அழுத்திய பிறகு அவன் பெருமூச்சிட்டுக் கொள்வான். நிச்சயம் அது புலியைக் கொன்றிருக்கும் என்று நம்புவான். அவனது நம்பிக்கை ஒருபோதும் பொய்யாகவேயில்லை.
செத்துக் கிடக்கும் புலி அவனை வசீகரிப்பதேயில்லை. புலி தன்னை நோக்கி வரும்வரை காத்திருந்த அந்த அரிய நிமிஷங்களை நினைத்த படியே அவன் ஏதாவது மரநிழலில் படுத்துக் கொள்வான். அவனது சுபாவத்தை கவர்னர் உணர்ந்திருக்கக் கூடும். அதனால்தானோ என்னவோ டக்ளஸை பெங்கால் ரெஜிமெண்டில் இருந்து முத்துகளைச் சேகரம் செய்து வருவதற்காக திரிசடை தீவிற்கு அனுப்பி வைத்தார்.
மகாராணியின் விருப்பத்தை நிறைவேற்றினால் நிச்சயம் தான் மதராஸ் ரெஜிமெண்டின் லெப்டினென்டாக நியமிக்கப்படக்கூடும் என்பதற்காகவே டக்ளஸ் திரிசடை பயணத்திற்குத் தலைமை ஏற்க ஒப்புக்கொண்டான். தனது அதிகாரம் மற்றும் வீரத்தால் எதையும் எளிதாக அடைந்துவிட முடியும் என்று நம்பினான். ஆகவே அவனோடு ஐந்து துப்பாக்கி வீரர்களும் ஒரு சமையல் ஆளும் மட்டுமே போதுமானவர்கள். வேட்டைத் துப்பாக்கிகளைத் தவிர வேறு ஆயுதங்கள் எதுவும் தேவையுமில்லை என்று உறுதியாகச் சொன்னதோடு, அதன் மறுநாளே கப்பலில் பயணம் கிளம்பினான். அப்போது அவன் திரிசடை தீவில் ஒன்பது வருஷங்கள் தான் காத்துக்கிடக்கப் போவதை அறிந்திருக்கவில்லை.
திரிசடை தீவிற்கு அருகில் வேறு தீவுகள் இல்லை. அது, கண்ணில் விழுந்த மணல் இமை ஓரமாக ஒதுங்கிக் கொள்வது போல கடலின் கிழக்கு ஓரமாக ஒதுங்கியிருந்தது. ஒன்றிரண்டு மீன்பிடிப் படகுகள் எப்போதாவது அதைக் கடந்து போவதுண்டு. திரிசடை தீவின் நடுவே ஒரு சிறிய குன்று இருந்தது. அதன் மேற்குப்பகுதியில் இரண்டு குகைகள் இருந்தன. மழைக்காலத்தில் முத்துக் குளிக்கும் குடும்பங்கள் அந்த குகைக்குள் ஒதுங்கிக் கொண்டு வசித்தனர். மற்ற நாட்களில் அவர்கள் தரையில் இருந்து ஐந்தடி அடி உயரத்தில் அமைக்கப்பட்ட மர வீட்டில் வசித்தனர்.
கடற்தாழைகளும் நீர்ச்செடிகளும் மணலெங்கும் வளர்ந்திருந்தன. அந்தத் தீவிலிருந்த அடர்பச்சை நிற தவளைகள் அளவில் மிக சிறியவையாக இருந்தன. அவை எழுப்பும் ஓசை கூட விக்கல் எடுப்பது போன்றே இருந்தது. தீவின் உட்புறத்தில் கருஞ்சுனையொன்று இருந்தது. அதிலிருந்து சொட்டும் தண்ணீரைத் தான் தீவுவாசிகள் குடித்துவந்தார்கள்.
தாமரை இலைகள் போன்று அகன்று விரிந்த இலைகள் கொண்ட சுக்ருதம் என்ற செடிகள் தீவெங்கும் அடர்ந்து வளர்ந்திருந்தன. அதிலிருந்து வீசும் நாள்பட்டு போன சாணம் போன்ற வாசனை எப்போதும் காற்றில் இருந்துகொண்டேயிருந்தது . காற்றில் சுக்ருத இலைகள் எழுப்பும் ஓசை யாரோ கையால் அடித்து தாளமிசைப்பது போன்ற ஒரு அதிர்வைத் தந்தபடியே இருந்தது. தீவின் தென்கிழக்கில் கல்லால் ஆன பந்தல் ஒன்றும் ஒரு பலிபீடமும் காணப்படுகிறது. அதைத் தங்களது குலதெய்வமான சூதனி என்று தீவுவாசிகள் வழிபட்டார்கள்.
டக்ளஸ் வந்து இறங்கிய நாளில் தீவுவாசிகள் எவரும் அவனைத் தடுக்கவோ, வரவேற்கவோ செய்யவில்லை. அவனும் துப்பாக்கி வீரர்களும் படகிலிருந்து தங்களது பொருட்களைக் கரை இறக்கிக் கொண்டிருக்கும்போது தொலைவில் இருந்து ஒரு சிறுமி அவர்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். பத்து வயதிருக்கக் கூடும். அவளது சுருண்ட கேசம் காற்றில் அசைந்தபடியே இருந்தது. டக்ளஸ் அவளை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்தான். அவளிடம் சலனமேயில்லை. மணலில் கால் புதைய அவளை நோக்கி நடக்கத் துவங்கினான். அவள் வெறித்த கண்களுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்தப் பார்வை அவள் தன்னை வெறுக்கிறாள் என்பதைத் துல்லியமாக வெளிப்படுத்தியது. அதைக் கண்டுகொள்ளாதவன் போல அவளை நோக்கிச் சிரித்தான் டக்ளஸ். பதிலுக்கு அவள் சிரிக்கவில்லை. தன் வெறுப்பைக் கண்களின் வழியே உமிழவிட்டாள். அவன் பொய்க் கோபத்துடன் அடிப்பது போல கையை ஓங்கினான். நிச்சயம் அதற்குப் பயந்து அவள் ஓடிவிடக்கூடும் என்று நினைத்தான். ஆனால் அவள் டக்ளஸைப் பொருட்படுத்தவேயில்லை.
அவளிடம் தீவில் உள்ள மற்றவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்று சைகையில் கேட்டான் டக்ளஸ். அவள் பதில் சொல்லாமல் அவனையே மேலும் கீழுமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது பற்கள் நறநறவென கடிக்கப்படும் சப்தம் டக்ளஸிற்குக் கேட்டது. அவன் இறுக்கமான முகத்துடன் அவளது தலை மயிரைத் தொட முயன்றான். ஆவேசமாக அவள் அந்தக் கைகளைத் தட்டிவிட்டபடியே அவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
படகில் இருந்த பொருட்களைச் சுமந்து வந்தவர்கள் அதை எங்கே கொண்டு செல்வது என்று கேட்டார்கள். டக்ளஸ் அவர்களை அங்கேயே காத்திருக்கும்படி சொல்லிய படியே அந்தச் சிறுமியின் கையைப் பிடித்து தன்னை அழைத்துப் போகும்படியாகச் சொன்னான். அவள் திமிறிக் கொண்டு முறைத்தாள். டக்ளஸ் அவளைப் புறக்கணித்து நடந்து மேடேறித் தீவின் உள்ளே நடந்து கொண்டிருந்தான். அந்தச் சிறுமி அவன் பின்னால் மெதுவாக நடந்து வந்தாள்.
அன்றைய பகலில் டக்ளஸ் அங்கிருந்த இரண்டு குடும்பங்களையும் பார்த்து வந்தான். அவர்களில் ஒருவர் கூட அவனோடு ஒரு வார்த்தை பேசவேயில்லை. வெளியாட்கள் அங்கே வருவதை அவர்கள் விரும்பவில்லை என்பது அவர்கள் முகத்திலே தெரிந்தது. கடல் தனக்கு விருப்பமில்லாதவர்களுக்கு எதுவும் தருவதில்லை. வெளியாட்கள் கடலை ஒருபோதும் தங்களுக்குள் நிரப்பிக் கொள்வதில்லை. கண் வழியாக இதயத்தில் கடல் நிரம்பாதவரை அதை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது என்று தீவுவாசிகள் நம்பினார்கள். ஆகவே தங்களது மறுப்பை அவர்கள் பார்வையின் வழியாகவே தெரியப்படுத்தினர்.
பேசாத அந்த உதடுகள் அவன் மீது மௌனமாகவே ஏளனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. தனது முகத்தின் ஆழத்திற்குள் கண்களால் ஊடுருவிப் போய்விட முடியும் என்பது போல அந்த பார்வைகள் இருந்தன. அவர்களது கண்களை டக்ளஸ் உற்றுப் பார்த்தபோது திட்டுத் திட்டாக மேகம் செல்வது போல வெறுப்பு மிதந்து கொண்டிருந்ததை உணர்ந்தான்.
டக்ளஸ் தனது ஆட்களுடன் தீவின் வடக்குப் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கிக் கொண்டான். வெளிச்சத்தின் துளி கூட அந்தத் தீவில் இல்லை. கூடாரத்தில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கைப் பிடித்துத் தின்பதற்காகவே ஒரு வகை பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. அவை ஆசையோடு சுடரை விழுங்கிக் கொண்டு பறந்தன. தீவுவாசிகள் விளக்கைப் பயன்படுத்துவதேயில்லை. அவர்கள் இருட்டிற்குள்ளாகவே நடமாடப் பழகியிருந்தார்கள்.
தீவில் இருள் கருஞ்சாந்து போன்ற பிசுபிசுப்புடன் அடர்ந்திருந்தது. அவர்கள் தங்களது கண்களால் இருட்டைத் துளைக்க முடியாததை உணர்ந்தார்கள். டக்ளஸ் படுக்கையில் கிடந்தபடியே இருட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். நேரமாக ஆக தீவு மறைந்து போய் தான் கடலின் மீது உறங்குவது போலவே தோன்றியது. பின்னிரவு வரை விழித்துக் கிடந்த அவனைத் தூக்கம் தன்னையறியாமல் பீடித்தது.
விழித்தபோது காலை வெளிச்சம் கடற்கரையில் பிரகாசம் கொண்டிருந்தது. கடல் நண்டு ஒன்று அவசரமாக நடந்து மணலேறிச் சென்றது. இளவெயிலின் மிருதுவும் நுரை ததும்பும் அலைகளின் மெல்லோசையும் அவன் மனதை சாந்தம் கொள்ளச் செய்வதாக இருந்தது. தனியே கடற்கரையில் நடந்து கொண்டிருந்தான். தாடை போல துருத்திக் கொண்டிருந்த ஒரு திட்டில் உட்கார்ந்து கொண்டபடியே கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான். கடலும் தன்னைப் பார்த்துக் கொண்டு இருப்பது போலவே உணர்ந்தான். முன்பு ஒருபோதும் இவ்வளவு நெருக்கமாக கடலைத் தான் அறிந்ததில்லை என்பது போலிருந்தது. கடல் எதையோ சொல்வது போல தோணியது. என்ன சொல்கிறது என்று அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஒரு நாளைக்குள்ளாகவே முத்து குளிப்பவர்களை எளிதாக மிரட்டிப் பணிய வைக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டான். பிறகு தான் கொண்டு வந்திருந்த முகம் பார்க்கும் கண்ணாடி, வாசனை சோப்புகள், அலங்காரத் துணிகள், மெழுகு வர்த்திகள், பீங்கான் கோப்பைகள் போன்றவற்றைப் பரிசாக எடுத்துக் கொண்டு அந்தக் குடும்பங்களைத் தேடிச் சென்றான்.
பட்டங்கட்டியிடம் தான் இங்கிலாந்து மகாராணியின் விருப்பத்தின்படி முத்துகள் வேண்டி வந்திருப்பதாகவும் அதைக் கடலில் இருந்து அறுவடை செய்து தரவேண்டியது அவரது பொறுப்பு என்றும் அன்பான குரலில் சொன்னான்.
பட்டங்கட்டி அதற்கு பதில் பேசவேயில்லை. மாறாக, தரையில் ஒரு குச்சியால் கோடு கிழித்தபடியே பதில் பேசாமல் உட்கார்ந்திருந்தார். அவருக்கு வயது எழுபதைக் கடந்திருக்கும். செம்பட்டை படிந்த தலை. பருத்த உதடுகள், ஆள் மெலிந்து உயரமானவராக இருந்தார். கழுத்தில் மீன் எலும்பு ஒன்றை மாலையாகப் போட்டிருந்தார். அவரது வீட்டுப் பெண்கள் டக்ளஸின் துணைக்கு வந்திருந்த துப்பாக்கி வீரர்களை வெறித்துப் பார்த்த படியே இருந்தனர். பிறகு பட்டங்கட்டி எதுவும் சொல்லாமல் எழுந்து வெளியே சென்றுவிட்டார்.
இதுபோலவே தான் ஆலா குடும்பத்திலும் நடந்தது. அவர்களும் டக்ளஸின் பரிசை ஏற்றுக் கொள்ளவேயில்லை. ஆத்திரத்தில் அந்தப் பரிசுகளை கடற்கரையில் வீசி எறிந்து வந்தான் டக்ளஸ். கடலில் விளைவதை அறுவடை செய்து தருவதற்கு எதற்கு இவ்வளவு பிடிவாதம். கடல் முத்துகள் இவர்களது சொத்துக்களா என்ன? அதைத் தனக்குத் தருவதன் வழியே என்ன இழந்துவிடப் போகிறார்கள். ஏன் இப்படி முரண்டு பிடிக்கிறார்கள் என்று யோசித்தபடியே இருந்தான்.
சில வாரங்கள் அங்கே தங்கி அவர்களது தினசரி வாழ்க்கையை அவதானிப்பதன் வழியே முத்துக் குளிப்பவர்களை வசீகரித்துவிட முடியும் என்று டக்ளஸ் நம்பத் துவங்கினான். அதற்காக அவன் பகலிரவாக அந்தத் தீவில் நடப்பதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒவ்வொரு நாளும் அதிகாலை வெளிச்சம் அந்தத் தீவை ஒரு பெரிய மலரைப் பூக்கச் செய்வதைப் போல ஒளிர்வு கொள்ள வைக்கிறது. புலரியில் ஒரு ஆள் படகில் கிழக்கு நோக்கிப் போவதையும் அந்த ஆள் திரும்பி வரும்போது படகு நிறைய மீன்களும் கடற்சிப்பிகளும் வந்து சேர்வதையும் டக்ளஸ் பார்த்துக் கொண்டேயிருந்தான். அந்த மீன்கள்தான் தீவுவாசிகளின் பிரதான உணவு. நாளின் பெரும்பான்மை நேரங்கள் அவர்கள் கடலை வெறித்துப் பார்த்தபடியே கரையோரம் உட்கார்ந்திருப்பதைக் கண்டான்.
அவர்கள் கடலோடு பேசுகிறார்கள். கடலும் அவர்களுடன் பேசுகிறது போலும். காற்றையும் இருளையும் வெயிலையும் அவர்கள் வரவேற்கிறார்கள். தாங்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டதற்காக நன்றி தெரிவிக்கிறார்கள். பலநேரங்களில் காற்றில் சிறுசெடியின் இலை அசைவதைப் போல நளினமாக அவர்கள் கடலின் முன்னே நடனமாடுகிறார்கள்.
திரிசடைவாசிகளாக இருந்த பெண்கள் பருத்த ஸ்தனங்களும், குள்ளமான உருவத்துடனும் இருந்தனர். அவர்கள் சங்கு அறுப்பதில் தேர்ச்சி கொண்டிருந்தனர். ஒவ்வொரு பெண்ணும் ஒரு மூங்கில் சீப்பைத் தலையில் செருகியிருந்தாள். ஒருவர் சீப்பைப் போல மற்றவரிடம் இல்லை. சீப்பு தலையில் இருந்து நழுவி விழுந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.
ஒவ்வொரு நாளின் மாலையும் அந்தப் பெண்கள் சிவப்பும் மஞ்சளுமான மலர்களைத் தங்களது தலை நிறைய சூடிக் கொண்டு குழந்தையைச் சீராட்டும் குரலில் கடலை நோக்கி எதையோ பாடுகிறார்கள். கடல் அதைக் கேட்டுத் துயில்கிறது போலும். அந்தப் பெண்களில் ஒருத்திக்கு இடது கால் இல்லை. சுறா கடித்துத் தின்றுவிட்டதைப் போல எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன. அவள் டக்ளஸை எங்கே கண்டபோதும் உடனே குனிந்து கைப்பிடியளவு மணலை அள்ளிக் காற்றில் பறக்கவிட்டு எதையோ தனக்குள்ளாக முணு முணுப்பாள். என்ன சொல்ல விரும்புகிறாள் அவள். அதுவும் வெறுப் பின் அடையாளம்தானா?
கோடானு கோடி மணல் துகள்களில் ஒன்றைப் போல அவனது வாழ்க்கையும் விதியின் கைகளால் மட்டுமே அடித்துக் கொண்டு செல்லப்படுகிறது என்பதைத் தான் அவள் உணர்த்துகிறாள் என்று டக்ளஸ் அன்று அறிந்திருக்கவில்லை.
வெயிலேறிய பகலில் பெண்களும் குழந்தைகளும் கடற்சிப்பிகளைச் சுழற்றிப் போட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள். சில நேரங்களில் மரநிழலில் ஒன்றாக உட்கார்ந்து எதையோ முணுமுணுத்துக் கொண்டிருப்பதும் நடந்தது. அவனை தீவுவாசிகள் கண்டுகொள்ளவேயில்லை. தீவைப்பற்றி கடலோடிகள் எழுதியதில் ஒன்றிரண்டைத் தவிர அத்தனையும் கற்பனை என்றே தோன்றியது.
ஒரு நாளிரவு துப்பாக்கி வீரர்களில் ஒருவன் தன்மீது ஒட்டிக் கொண்டிருந்த கொசுவைத் துரத்துவது போல கைகளை ஆவேசமாக வீசி எதையோ விரட்டிக் கொண்டிருந்தான். எதைத் துரத்துகிறான் என்று புரியாமல் மற்றவர்கள் அவனை விசித்திரமாகப் பார்த்த போது அவன் கூக்குரலிட்டுக் கத்தினான். என்ன செய்கிறது என்று மற்றவர்கள் அவனைப் பிடித்து உலுக்கிக்கேட்கவே ‘தீவுவாசிகளின் வெறுப்பு, தன்மீது சாக்கடைப் புழுக்கள் போல ஊர்ந்து கொண்டேயிருக்கிறது. அந்த வெறுப்பைத் தன்னால் தாங்க முடியவேயில்லை. உடல் முழுவதும் கம்பளிப் பூச்சிகள் அப்பிக் கொண்டிருப்பது போல வெறுப்பு ஒட்டிக் கொண்டிருக்கிறது. சிறுவர்களும் கூட நம்மை வெறுக்கிறார்கள். அந்தக் கண்கள் நம் உடலைத் துளைக்கின்றன. ஊசிமுனை போல குத்துகின்றன. அதை என்னால் தாங்க முடியவில்லை‘ என்று அரற்றினான். அந்த உண்மையை யாவருமே உணர்ந்திருந்தார்கள். ஆனால் அதைப் பகிர்ந்து கொள்ளாமலே இருந்தார்கள். டக்ளஸை அது ஆத்திரப்படுத்தியது.
மறுநாள் டக்ளஸ் பட்டங்கட்டி குடும்பத்தில் இருந்த ஒரு பெண்ணைப் பிடித்துத் தனது கூடாரத்திற்கு இழுத்து வந்து மணலில் பாதி உடம்பு வெளித்தெரியும்படியாக புதைத்து வைத்து அவர்களில் எவராவது தன்னோடு பேசும்வரை அவளை விடப்போவதில்லை என்று கத்தினான். அந்தப் பெண்ணின் கண்களில் பயமேயில்லை. அவளது கூந்தல் காற்றில் அலைந்தபடியே இருந்தது. அதுபோன்ற உக்கிரமான கண்கள் எதையும் டக்ளஸ் கண்டதேயில்லை.
காட்டுப்புலிகள் கூட தன்னை அவன் கொல்ல வந்திருக்கிறான் என்று அறிந்த போதும் இப்படியான வெறுப்பை உமிழ்ந்ததில்லை. ஏன் இவர்களிடம் இத்தனை உக்கிரமான வெறுப்பு. அவன் தன் முன்னே புதையுண்டிருந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் பல்லை உடைக்க வேண்டும் போன்ற ஆத்திரம் உருவானது. ஏன் அவர்களில் ஒருவரும் அவனை எதிர்ப்பதேயில்லை. அவனைத் தாக்கிக் கொல்ல வரும் புலியின் ஆவேசம் அவனுக்குத் தேவைப்பட்டது. அப்போது தான் அவனது ரத்தம் சூடாகும். ஆனால் அவர்கள் தணிந்து போகிறார்கள். உறுதியான தங்கள் மறுப்பைக் கண்களில் மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள்.
என்ன தந்திரமிது. ஒருவேளை இந்த யுக்தியால் தன்னை அவர்கள் துரத்திவிடவும் கூடுமோ. அவன் புதையுண்டு கிடந்த பெண் முகத்தருகே குத்துக்காலிட்டு உட்கார்ந்த படியே தன்னோடு ஏதாவது பேசும் படியாகக் கட்டாயப்படுத்தினான். அவள் முகத்தில் அசைவேயில்லை. அவன் தனது கைவிரல்களால் அவள் பற்களைத் திறந்து பேச்சை வெளியே பீறிடும்படி செய்ய முயற்சிப்பவன் போல பலத்தைப் பிரயோகம் செய்தான். அந்தப் பற்கள் திறந்து கொள்ளவேயில்லை. அவள் காதிற்குள் மிக மோசமான வசையைக் கத்தினான். அப்போதும் அவள் தலை கவிழ்ந்தேயிருந்தது.
அன்றிரவு ஆலா குடும்பத்தின் வயதான ஒருவர் ஆமை ஓடு ஒன்றில் அவித்த மீனும் நீரிணிபழத் துண்டுகளும் கொண்டு வந்து டக்ளஸிடம் தந்து, கடலடியில் முத்து விளையும் படுகையைக் காற்றடி காலம் முடிந்த பிறகே அறிந்து வர முடியும் என்றும் சொல்லி அந்தப் பெண்ணைத் தன்னோடு அழைத்துக் கொண்டு போனார். காற்றடி காலம் எப்போது என்று டக்ளஸ் கேட்க விரும்பினான். ஆனால் அதற்குள் அந்தப் பெண்ணும் முதியவரும் அங்கிருந்து விலகிப் போகத் துவங்கியிருந்தார்கள்.
அன்றிரவு டக்ளஸ் தான் சுட்டுக்கொன்ற புலியின் ரோமங்களை ஒவ்வொன்றாகக் கையில் எடுத்து வைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தான். தீவுவாசிகளின் செயல்பாடு அவனது புலிவேட்டை சாகசங்களைக் கேலி செய்வது போலவே இருந்தது. திடீரென அவர்களை நள்ளிரவில் தாக்கிக் கொன்றுவிட்டால் என்னவென்று கூட தோன்றியது.
அவன் மனது தடுமாறிக் கொண்டேயிருந்தது. தனது சாகசங்கள் வெறும் கற்பனைகள் தானோ என்று தோன்றத் துவங்கியது. ஒருவேளை புலிகள் தன்னைக் கொல்வதற்கு அவனை அனுமதித்திருக்கின்றன என்பதுதான் நிஜமா? தனது வேட்டை அத்தனையும் மிருகங்களின் ஒப்புக்கொடுத்தலால் ஏற்பட்டதுதானா? எந்தப் புலியும் ஏன் தன்னைத் தாக்கிக் கொல்ல முயற் சிக்கவேயில்லை. ஏன் ஒரு புலி அவனிடம் சுடப்பட்டுச் சாக விரும்புகிறது. அவனுக்குள் வாழ்வில் முதன் முறையாக பயத்தின் ஒரு துளி கசியத் துவங்கியது. அவன் விடியும்வரை மணலில் படுத்தே கிடந்தான். நல் முத்துகள் இல்லாமல் வெறும்கையோடு திரும்பிப் போகமுடியாது. எப்படியாவது காத்திருக்க வேண்டும். இது புலிக்காகக் காத்திருப்பதைவிட அதிக பொறுமையும் கவனமும் கொண்டது. அதில் தான் தோற்றுப் போய்விடக்கூடாது என்பதில் மிகுந்த உக்கிரம் கொள்ளத் துவங்கினான்.
தொடரும்
Thanks: www.sramakrishnan.com
திரிசடைத் தீவு - 1
Heritage Vembarites
07:48
