வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 22 February 2018

பொருநராற்றுப்படையில் பரதர்

பொருநராற்றுப்படையில் இருந்து பரதர் பற்றிய வரலாற்று சான்றுகள்


குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்

நறும்பூங் கண்ணி குறவர் சூடக்

கானவர் மருதம் பாட அகவர் .... 220


பொருநராற்றுப்படை எழுத்தாளர்: முடத்தாமக்கண்ணியார்


பாடியவர் :: முடத்தாமக் கண்ணியார்

பாடப்பட்டவன் :: சோழன் கரிகால் பெருவளத்தான்

திணை :: பாடாண்திணை

துறை :: ஆற்றுப்படை

பாவகை :: ஆசிரியப்பா

மொத்த வரிகள் :: 248




அறாஅ யாணரகன் றலைப் பேரூர்ச்

சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது

வேறுபுல முன்னிய விரகறி பொருந

குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல்

விளக்கழ லுருவின் விசியுறு பச்சை ...5



எய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற்

றைதுமயி ரொழுகிய தோற்றம் போலப்

பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை

அளைவா ழலவன் கண்கண் டன்ன

துளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி ....10



எண்ணாட் டிங்கள் வடிவிற் றாகி

அண்ணா வில்லா அமைவரு வறுவாய்ப்

பாம்பணந் தன்ன வோங்கிரு மருப்பின்

மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும்

கண்கூ டிருக்கைத் திண்பிணித் திவவின் ... 15



ஆய்தினை யரிசி யவைய லன்ன

வேய்வை போகிய விரலுளர் நரம்பின்

கேள்வி போகிய நீள்விசித் தொடையல்

மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன

அணங்குமெய்ந் நின்ற அமைவரு காட்சி ....20



ஆறலை கள்வர் படைவிட அருளின்

மாறுதலை பெயர்க்கு மருவுஇன் பாலை

வாரியும் வடித்தும் உந்தியு முறழ்ந்தும்

சீருடை நன்மொழி நீரொடு சிதறி

அறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதற் ... 25



கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்

இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப்

பலஉறு முத்திற் பழிதீர் வெண்பல்

மயிர்குறை கருவி மாண்கடை யன்ன

பூங்குழை ஊசற் பொறைசால் காதின் ... 30



நாண்அடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தின்

ஆடமைப் பணைத்தோ ளரிமயிர் முன்கை

நெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரற்

கிளிவா யப்பி னொளிவிடு வள்ளுகிர்

அணங்கென உருத்த சுணங்கணி யாகத் ... 35



தீர்க்கிடை போகா ஏரிள வனமுலை

நீர்ப்பெயற் சுழியி னிறைந்த கொப்பூழ்

உண்டென வுணரா உயவும் நடுவின்

வண்டிருப் பன்ன பல்காழ் அல்குல்

இரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கின் ... 40



பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப

வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி

அரக்குருக் கன்ன செந்நில னொதுங்கலிற்

பரற்பகை யுழந்த நோயடு சிவணி

மரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்குள் ... 45



நன்பக லந்தி நடையிடை விலங்கலிற்

பெடைமயி லுருவிற் பெருந்தகு பாடினி

பாடின பாணிக் கேற்ப நாடொறும்

களிறு வழங்கதர்க் கானத் தல்கி

இலைஇல் மராஅத்த எவ்வந் தாங்கி .... 50



வலைவலந் தன்ன மென்னிழன் மருங்கிற்

காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றைப்

பீடுகெழு திருவிற் பெரும்பெயர் நோன்றாள்

முரசுமுழங்கு தானை மூவருங் கூடி

அரசவை யிருந்த தோற்றம் போலப் .... 55



பாடல் பற்றிய பயனுடை எழாஅற்

கோடியர் தலைவ கொண்ட தறிந

அறியா மையி னெறிதிரிந் தொராஅ

தாற்றெதிர்ப் படுதலு நோற்றதன் பயனே

போற்றிக் கேண்மதி புகழ்மேம் படுந ... 60



ஆடுபசி யுழந்தநின் இரும்பே ரொக்கலொடு

நீடுபசி யராஅல் வேண்டி னீடின்

றெழுமதி வாழி ஏழின் கிழவ

பழுமர முள்ளிய பறவையின் யானுமவன்

இழுமென் சும்மை யிடனுடை வரைப்பின் ... 65



நசையுநர்த் தடையா நன்பெரு வாயில்

இசையேன் புக்கென் இடும்பை தீர

எய்த்த மெய்யே னெய்யே னாகிப்

பைத்த பாம்பின் துத்தி யேய்ப்பக்

கைக்கச டிருந்தவென் கண்ணகன் தடாரி ... 70



இருசீர்ப் பாணிக் கேற்ப விரிகதிர்

வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்

ஓன்றியான் பெட்டா அளவையி னொன்றிய

கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி

வேளாண் வாயில் வேட்பக் கூறிக் ... 75



கண்ணிற் காண நண்ணுவழி இரீஇப்

பருகு அன்ன அருகா நோக்கமொடு

உருகு பவைபோ லென்பு குளிர்கொளீஇ

ஈரும் பேனும் இருந்திறை கூடி

வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த ... 80



துன்னற் சிதாஅர் துவர நீக்கி

நோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந்து

அரவுரி யன்ன அறுவை நல்கி

மழையென மருளும் மகிழ்செய் மாடத்து

இழையணி வனப்பி னின்னகை மகளிர் ... 85



போக்கில் பொலங்கல நிறையப் பல்கால்

வாக்குபு தரத்தர வருத்தம் வீட

ஆர வுண்டு பேரஞர் போக்கிச்

செருக்கொடு நின்ற காலை மற்றவன்

திருக்கிளர் கோயி லொருசிறைத் தங்கித் ... 90



தவஞ்செய் மாக்கள் தம்முடம் பிடாஅ

ததன்பய மெய்திய வளவை மான

ஆறுசெல் வருத்தம் அகல நீக்கி

அனந்தர் நடுக்க மல்ல தியாவதும்

மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து ... 95



மாலை யன்னதோர் புன்மையுங் காலைக்

கண்டோட் மருளும் வண்டுசூழ் நிலையும்

கனவென மருண்டவென் னெஞ்சே மாப்ப

வல்லஞர் பொத்திய மனம்மகிழ் சிறப்பக்

கல்லா இளைஞர் சொல்லிக் காட்டக் ... 100



கதுமெனக் கரைந்து வம்மெனக் கூஉய்

அதன்முறை கழிப்பிய பின்றைப் பதனறிந்து

துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்

பராஅரை வேவை பருகெனத் தண்டிக்

காழிற் சுட்ட கோழூன் கொழூங்குறை ... 105



ஊழின் ஊழின் வாய்வெய் தொற்றி

அவையவை முனிகுவ மெனினே சுவைய

வேறுபல் லுருவின் விரகுதந் திரீஇ

மண்ணமை முழவின் பண்ணமை சீறியாழ்

ஒண்ணுதல் விறலியர் பாணி தூங்க .... 110



மகிழ்ப்பதம் பன்னாட் கழிப்பி யருநாள்

அவிழ்ப்பதங் கொள்கென் றிரப்ப முகிழ்த்தகை

முரவை போகிய முரியா அரிசி

விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல்

பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப ... 115



அயின்ற காலைப் பயின்றினி திருந்து

கொல்லை உழுகொழு ஏய்ப்பப் பல்லே

எல்லையு மிரவும் ஊன்றின்று மழுங்கி

உயிர்ப்பிடம் பெறாஅ தூண்முனிந் தொருநாள்

செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய .... 120



செல்வ சேறுமெந் தொல்பதிர் பெயர்ந்தென

மெல்லெனக் கிளந்தன மாக வல்லே

அகறி ரொவெம் ஆயம் விட்டென

சிரறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடு

துடியடி யன்ன தூங்குநடைக் குழவியடு .... 125



பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத்

தன்னறி யளவையின் தரத்தர யானும்

என்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண்டு

இன்மை தீர வந்தனென் வென்வேல்

உருவப் ப·றேர் இளையோன் சிறுவன் ... 130



முருகற் சீற்றத் துருகெழு குருசில்

தாய்வயிற் றிருந்து தாய மெய்தி

எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்பச்

செய்யார் தேஎம் தெருமரல் கலிப்பப்

பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி ... 135



வெல்வெஞ் செல்வன் விசும்புபடர்ந் தாங்குப்

பிறந்துதவழ் கற்றதற் றொட்டுச் சிறந்தநன்

னாடுசெகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப

ஆளி நன்மான் அணங்குடைக் குருளை

மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி ... 140



முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத்

தலைக்கோள் வேட்டங் களிறட் டாஅங்கு

இரும்பனம் போந்தைத் தோடுங் கருஞ்சினை

அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும்

ஒங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த .... 145



இருபெரு வேந்தரு மொருகளத் தவிய

வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாட்

கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்

தாணிழல் மருங்கி னணுகுபு குறுகித்

தொழுதுமுன் னிற்குவி ராயிற் பழுதின் ... 150



றீற்றா விருப்பிற் போற்றுபு நோக்கிநும்

கையது கேளா அளவை ஒய்யெனப்

பாசி வேரின் மாசொடு குறைந்த

துன்னற் சிதாஅர் நீக்கித் தூய

கொட்டைக் கரைய பட்டுடை நல்கிப் .... 155



பெறலருங் கலத்திற் பெட்டாங் குண்கெனப்

பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர

வைகல் வைகல் கைகவி பருகி

எரியகைந் தன்ன வேடில் தாமரை

சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி .... 160



நூலின் வலவா நுணங்கரில் மாலை

வாலொளி முத்தமொடு பாடினி யணியக்

கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்

ஊட்டுளை துயல்வர வோரி நுடங்கப்

பால்புரை புரவி நால்குடன் பூட்டிக் .... 165



காலி னேழடிப் பின்சென்று கோலின்

தாறுகளைந் தேறென் றேற்றி வீறுபெறு

பேரியாழ் முறையுழிக் கழிப்பி நீர்வாய்த்

தண்பணை தழீஇய தளரா விருக்கை

நன்பல் லூர நாட்டொடு நன்பல் ... 170



வெரூஉப்பறை நுவலும் பரூஉப்பெருந் தடக்கை

வெருவரு செலவின் வெகுளி வேழம்

தரவிடைத் தங்கலோ விலனே வரவிடைப்

பெற்றவை பிறர்பிறர்க் கார்த்தித் தெற்றெனச்

செலவுகடைக் கூட்டுதி ராயிற் பலபுலந்து ... 175



நில்லா வுலகத்து நிலைமை தூக்கிச்

செல்கென விடுக்குவ னல்ல நொல்லெனத்

திரை பிறழிய விரும் பெளவத்துக்

கரை சூழ்ந்த அகன் கிடக்கை

மா மாவின் வயின் வயினெற் ... 180



றாழ் தாழைத் தண் டண்டலைக்

கூடு கெழீஇய குடி வயினாற்

செஞ் சோற்ற பலி மாங்திய

கருங் காக்கை கவவு முனையின்

மனை நொச்சி நிழலாங் கண் ... 185



ஈற்றி யாமைதன் பார்ப்பு ஓம்பவும்

இளையோர் வண்ட லயரவும் முதியோர்

அவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் சொலவும்

முடக் காஞ்சிச் செம் மருதின்

மடக் கண்ண மயில் ஆலப் ... 190



பைம் பாகற் பழந் துணரிய

செஞ் சுளைய கனி மாந்தி

அறைக் கரும்பி னரி நெல்லின்

இனக் களமர் இசை பெருக

வற ளடும்பி னிவர் பகன்றைத் ... 195



தளிர்ப் புன்கின் றாழ் காவின்

நனை ஞாழலொடு மரங் குழீஇய

அவண் முனையி னகன்று மாறி

அவிழ் தளவி னகன் தோன்றி

நகு முல்லை யுகுதேறு வீப் .... 200



பொற் கொன்றை மணிக் காயா

நற் புறவி னடை முனையிற்

சுற வழங்கும் இரும் பெளவத்

திற வருந்திய இன நாரை

பூம் புன்னைச் சினைச் சேப்பின் .... 205



ஒங்கு திரை யலிவெரீ இத்

தீம் பெண்ணை மடற் சேப்பவும்

கோட் டெங்கின் குலை வாழைக்

கொழுங் காந்தண் மலர் நாகத்துத்

துடிக் குடிஞைக் குடிப் பாக்கத்துக் .... 210



யாழ் வண்டின் கொளைக் கேற்பக்

கலவம் விரித்த மட மஞ்ஞை

நில வெக்கர்ப் பல பெயரத்

தேனெய் யடு கிழங்கு மாறியோர்

மீனெய் யடு நறவு மறுகவும் .... 215



தீங் கரும்போ டவல் வகுத்தோர்

மான் குறையடு மது மறுகவும்

குறிஞ்சி #பரதவர் பாட நெய்தல்

நறும்பூங் கண்ணி குறவர் சூடக்

கானவர் மருதம் பாட அகவர் .... 220



நீனிற முல்லைப் ப·றிணை நுவலக்

கானக் கோழி கதிர் குத்த

மனைக் கோழி தினைக் கவர

வரை மந்தி கழி மூழ்க

கழி நாரை வரை யிறுப்பத் .... 225



தண் வைப்பினா னாடு குழீஇ

மண் மருங்கினான் மறு வின்றி

ஒரு குடையா னென்று கூறப்

பெரி தாண்ட பெருங் கேண்மை

அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல் .... 230



அன்னோன் வாழி வென்வேற் குருசில்

மன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மாண்

எல்லை தருநன் பல்கதிர் பரப்பிக்

குல்லை கரியவுங் கோடெரி நைப்பவும்

அருவி மாமலை நிழத்தவு மற்றக் .... 235



கருவி வானங் கடற்கோள் மறப்பவும்

பெருவற னாகிய பண்பில் காலையும்

நறையும் நரந்தமு மகிலு மாரமும்

துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுகி

நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும் .... 240



புனலாடு மகளிர் கதுமெனக் குடையக்

கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து

சூடுகோ டாகப் பிறக்கி நாடொறும்

குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை

கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும் .... 245



சாலி நெல்லின் சிறைகொள் வேலி

ஆயிரம் விளையுட் டாகக்

காவிரி புரக்கு நாடுகிழ வோனே. ..... 248
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com