வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 27 February 2018

எட்டுதொகையில் பரதவர்

எட்டுதொகையில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்


நற்றிணை

நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர்


பாடல் 4

4 நெய்தல்

எழுதியவர்: அம்மூவனார்


கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்

நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ

தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி

அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு

அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை

அரிய ஆகும் நமக்கு எனக் கூறின்

கொண்டும் செல்வர்கொல் தோழி உமணர்

வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி

கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்

மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்

கருங் கால் வெண் குருகு வெரூஉம்

இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே

தலைவன் சிறைப்புறத்தானாக தோழி அலர்

அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது


Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com