வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 26 February 2019

சேர்ப்பன்


சேர்ப்பன்- என்று சங்க இலக்கியத்தில் அழைத்த பரதகுல தலைவர்

முகத்துவாரம் அதாவது கடலும் ஆறும் சேரும் இடத்தில் (கழிமுகப்பகுதி) வாழ்த பரதவர் ஊர் தலைவர் தான் சேர்ப்பன்.

வேம்பாறு, வைப்பாறு, கடலூர், புன்னைக்காயல் போன்ற பரதகுல ஊர் தலைவர்களுக்கு உரிய பரதகுல பட்டம். இவை பரதகுல மக்கள் அனைவரும் அறிவோம் இதை உலகம் தெரிந்து கொள்ள இந்த பதிவு.

இன்றளவும் வேம்பாற்றில் பாடப்படும் வேம்பார் பெயர் காரணப் பாடலில் 'வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லுரே வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லுரே' என்ற வரிகள் இப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன.

சேர்ப்பன் என்றால் பரதவர் படை தலைவன் என்றும் கொள்ளலாம். இது  இரண்டு அர்த்தம் கொண்டது. சேர்ப்பன் தேரில் தான் பயணிப்பார். சங்க இலக்கிய சான்றுகள் பல உள்ளன.

சான்று-1

குறுந்தொகை

49-நெய்தல் - தலைவி கூற்று

அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து 
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப 
இம்மை மாறி மறுமை யாயினும் 
நீயா கியரென் கணவனை 
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. 
-அம்மூவனார்.

சான்று-2

குறுந்தொகை

51-நெய்தல் - தோழி கூற்று

கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர் 
நூலறு முத்திற் காலொடு பாறித் 
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை 
யானும் காதலென் யாயுநனி வெய்யள் 
எந்தையுங் கொடீஇயர் வேண்டும் 
அம்ப லூரும் அவனொடு மொழிமே. 
-குன்றியனார்.

சான்று-3

குறுந்தொகை

145-நெய்தல் - தலைவி கூற்று

உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடி 
கானலஞ் சேர்ப்பன் கொடுமை ஏற்றி 
ஆனாத் துயரமொடு வருந்திப் பானாள் 
துஞ்சா துறைநரொ டுசாவாத் 
துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே. 
-கொல்லனழிசியார்.

சான்று-4

குறுந்தொகை

175-நெய்தல் - தலைவி கூற்று

பருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதி 
உரவுத்திரை பொருத திணிமணல் அடைகரை 
நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம் 
மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற் 
கிரங்கேன் தோழியீங் கென்கொ லென்று 
பிறர்பிறர் அறியக் கூறல் 
அமைந்தாங் கமைக அம்பலஃ தெவனே. 
-உலோச்சனார்.

சான்று-5

குறுந்தொகை

205-நெய்தல் - தலைவி கூற்று

மின்னுச்செய் கருவிய பெயன்மழை தூங்க 
விசும்பா டன்னம் பறைநிவந் தாங்குப் 
பொலம்படைப் பொலிந்த வெண்டேர் ஏறிக் 
கலங்குகடல் துவலை ஆழி நனைப்ப 
இனிச்சென் றனனே இடுமணற் சேர்ப்பன் 
யாங்கறிந் தன்றுகொல் தோழியென் 
தேங்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே. 
-உலோச்சனார்.

சான்று-6

குறுந்தொகை

219-நெய்தல் - தலைவி கூற்று

பயப்பென் மேனி யதுவே நயப்பவர் 
நாரில் நெஞ்சத் தாரிடை யதுவே 
செறிவுஞ் சேணிகந் தன்றே யறிவே 
ஆங்கட் செல்கம் எழுகென வீங்கே 
வல்லா கூறியிருக்கு முள்ளிலைத் 
தடவுநிலைத் தாழைச் சேர்ப்பர்க் 
கிடமற் றோழியெந் நீரிரோ வெனினே. 
-வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார்.

சான்று-7

குறுந்தொகை

226-நெய்தல் - தலைவி கூற்று

பூவொடு புரையுங் கண்ணும் வேயென 
விறல்வனப் பெய்திய தோளும் பிறையென 
மதிமயக் குறூஉ நுதலு நன்றும் 
நல்லமன் வாழி தோழி அல்கலும் 
தயங்குதிரை பொருத தாழை வெண்பூக் 
குருகென மலரும் பெருந்துறை 
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ வூங்கே. 
-மதுரை எழுத்தாளனார் சேந்தம்பூதனார்.

சான்று-8

குறுந்தொகை

236-நெய்தல் - தோழி கூற்று

விட்டென விடுக்குநாள் வருக அதுநீ 
நேர்ந்தனை யாயின் தந்தனை சென்மோ 
குன்றத் தன்ன குவவுமணல் அடைகரை 
நின்ற புன்னை நிலந்தோய் படுசினை 
வம்ப நாரை சேக்கும் 
தண்கடற் சேர்ப்பநீ உண்டவென் னலனே. 
-நரிவெரூஉத் தலையார்.

சான்று-9

குறுந்தொகை

243-நெய்தல் - தலைவி கூற்று

மானடி யன்ன கவட்டிலை அடும்பின் 
தார்மணி யன்ன ஒண்பூக் கொழுதி 
ஒண்தொடி மகளிர் வண்ட லயரும் 
புள்ளிமிழ் பெருங்கடற் சேர்ப்பனை 
உள்ளேன் தோழி படீஇயர்என் கண்ணே. 
-நம்பி குட்டுவனார்.

சான்று-10

குறுந்தொகை

269-நெய்தல் - தலைவி கூற்று

சேயாறு சென்று துனைபரி யசாவா 
துசாவுநர்ப் பெறினே நன்றுமற் றில்ல 
வயச்சுறா எறிந்த புண்தணிந் தெந்தையும் 
நீனிறப் பெருங்கடல் புக்கனன் யாயும் 
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய 
உப்புவிளை கழனிச் சென்றனள் இதனால் 
பனியிரும் மரப்பிற் சேர்ப்பற் 
கினிவரி னௌியள் என்னும் தூதே. 
-கல்லாடனார்.

சான்று-11

குறுந்தொகை

306-நெய்தல் - தலைவி கூற்று

மெல்லிய இனிய மேவரு தகுந 
இவைமொழி யாமெனச் சொல்லினு மவைநீ 
மறத்தியோ வாழியென் னெஞ்சே பலவுடன் 
காமர் மாஅத்துத் தாதமர் பூவின் 
வண்டுவீழ் பயருங் கானல் 
தண்கடற் சேர்ப்பனைக் கண்ட பின்னே. 
-அம்மூவனார்.

சான்று-12

குறுந்தொகை

334-நெய்தல் - தலைவி கூற்று

சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோ 
டெறிதிரைத் திவலை யீர்ம்புற நனைப்பப் 
பனிபுலந் துறையும் பல்பூங் கானல் 
விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பி னொருநம் 
இன்னுயி ரல்லது பிறிதொன் 
றெவனோ தோழி நாமிழப் பதுவே. 
-இளம்பூதனார்.

சான்று-13

குறுந்தொகை

349-நெய்தல் - தலைவி கூற்று

அடும்பவிழ் அணிமலர் சிதைஇமீன் அருந்தும் 
தடந்தாள் நாரை இருக்கும் எக்கர்த் 
தண்ணந் துறைவற் றொடுத்து நந்நலம் 
கொள்வாம் என்றி தோழி கொள்வாம் 
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய 
கொடுத்தவை தாவென் சொல்லினும் 
இன்னா தோநம் இன்னுயிர் இழப்பே. 
-சாத்தனார்.

சான்று-14

குறுந்தொகை

351-நெய்தல் - தோழி கூற்று

வளையோய் உவந்திசின் விரைவுறு கொடுந்தாள் 
அளைவாழ் அலவன் கூருகிர் வரித்த 
ஈர்மணல் மலிர்நெறி சிதைய இழுமென 
உருமிசைப் புணரி உடைதரும் துறைவர்க்கு 
உரிமை செப்பினர் நமரே விரியலர்ப் 
புன்னை ஓங்கிய புலாலஞ் சேரி 
இன்னகை ஆயத் தாரோடு 
இன்னும் அற்றோஇவ் வழுங்க லூரே. 
-அம்மூவனார்.

சான்று-15

குறுந்தொகை

397-நெய்தல் - தோழி கூற்று

நனைமுதிர் ஞாழற் தினைமருள் திரள்வீ 
நெய்தல் மாமலர்ப் பெய்தல் போல 
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப 
தாயுடன் றலைக்கும் காலையும் வாய்விட் 
டன்னா வென்னுங் குழவி போல 
இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும் 
நின்வரைப் பினளென் தோழி 
தன்னுறு விழுமங் களைஞரோ இலளே. 
-அம்மூவனார்.

சான்று-16

ஐங்குறுநூறு

நெய்தல் பத்து 3

கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்
குறும்பொறை நாடன் நல்வய லூரன்
தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்
கடும்பகல் வருதி கையறு மாலை
கொடுங்கழி நெய்தலும் கூம்பக்
காலை வரினும் களைஞரோ இலரே.

சான்று-17

ஐங்குறுநூறு

தாய்க்குரைத்த பத்து 108

அன்னை வாழிவேண் டன்னை கழிய
முண்டக மலரும் தண்கடற் சேர்ப்பன்
எந்தோள் துறந்தனன் ஆயின்
எவன்கொல் மற்றவன் நயந்த தோளே.

சான்று-18

ஐங்குறுநூறு

தோழிக்குரைத்த பத்து -112

அம்ம வாழி தோழி பாசிலைச்
செருந்தி தாய இருங்கழிச் சேர்ப்பன்
தான்வரக் காண்குவம் நாமே
மற்ந்தோம் மன்ற நாணுடை நெஞ்சே.

சான்று-19

ஐங்குறுநூறு

தோழிக்குரைத்த பத்து -117

அம்ம வாழி தோழி நலனே
இன்ன தாகுதல் கொடிதே புன்னை
யணிமலர் துறைதொறும் வரிக்கும்
மணிநீர்ச் சேர்ப்பனை மறவா தோர்க்கே.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com