வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 30 March 2024

தென்குமரி வட்டார வழக்குகள்

நூல் அறிமுகம் : 


பாண்டிய காலத்தில் முத்துக்குளித்தலும், சங்க எடுத்தலும் நேரடியாக அரசரின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்படுகின்றது. இன்று பெரும்பாலும் அழிந்துவிட்ட தொழிலான இந்த முத்துகுளித்தலின் அரசியலும், அது தென் தமிழக வரலாற்றில் ஏற்படுத்திய பெரும் தாக்கமும் நாம் இன்று உணர முடியாது. 

கடலில் இருந்து சிப்பியை எடுத்து, அதனை அழுகவிட்டு அதிலிருந்தே முத்துக்கள் பிரித்து எடுக்கப்பட்டன. சிப்பியில் இருந்து முத்து எடுத்த பிறகு அதனை தரம் பிரித்து விலை நிர்ணயிக்க முத்துச் செட்டிகள் இருந்ததாக கூறப்படுகின்றது. இவர்களைப் பற்றிய பாடல் ஒன்று திரு. பொன்னீலன் எழுதிய, தென்குமரி வட்டார வழக்குகள் நூலில் கூறப்படுகின்றது. 

இவர்களை அந்த பாடல் முத்து அளக்கும் செட்டி என குறிப்பிடுகின்றது. அதில் 

"முத்தளக்கும் செட்டி
முதலுக்கும் பொன்னாகி
வச்சளக்கச் சொல்லி
வரிசையிட்டார் உன் மாமன்
திரும்ப அளந்தாராம்
தெய்வப் பிறவி உன் மாமன்
ஆராரோ ஆரிரரோ எங்க கண்ணே

..... " என பல செய்திகளைச் சொல்லி தொடருகிறது அப்பாடல். 

நூல்: தென்குமரி வட்டார வழக்குகள் 
விலை: ₹220
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com