Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

பேட்டை



திருநெல்வேலி பேட்டை

பாண்டி நாட்டு கடலிலிருந்து எடுக்கப்படும் முத்துக்களை சந்தைப்படுத்த பரவர்கள் மூன்று அல்லது நான்கு பேட்டைகளை உருவாக்கியிருந்தனர். அவற்றுள் ஒன்றான திருநெல்வேலி டவுன் அருகிலிருக்கும் 'பேட்டை' முன்பு முத்து வணிகம் நடைபெற்று வந்த பரவர்களின் நகராக மட்டுமே இருந்தது...

பிரான்ஸ் நாட்டு ஏசுசபை பாதிரியார் மார்ட்டின் மற்றொரு பிரஞ்சு பாதிரியார் ஜோசப் பெர்ட்ராண்ட்க்கு கிபி 1838 ஜூலை மாதம் 14 ஆம் தேதி புன்னைகாயலிலிருந்து எழுதிய கடிமொன்றில்....

பரவர்களின் மிகப்பெரிய ஊராகிய 'பேட்டை' திருநெல்வேலிக்கு மிக அருகிலும் பாளையங்கோட்டையிலிருந்து ஒரு லீக் தூரத்திலும் உள்ளது என்று பதிவு செய்கிறார்...

குறிப்பு: இராமநாதபுரம் கடல்பகுதியில் குழிக்கபடும் முத்துகளின் விற்பனை மையம் பெரியபட்டிணத்தை அடுத்துள்ள முத்துபேட்டை. இங்கு பூர்வீக பரவர்கள் இன்றும் வாழ்கிறார்கள். முத்துகுழித்தல் வழக்கொழிந்தபின் இப்பரவர்கள் மீன்பிடித்தொழிலுக்கு மாறாமல் விவசாயம் சார்ந்த வெற்றிலை கொடிக்கால் தொழிலை முதன்மையாகச் செய்கிறார்கள்.

சோழமண்டல கடற்கரையில் மல்லிபட்டிணம் அருகே ஒரு முத்துபேட்டை உண்டு.

----------------------------------------

Encounters On The Opposite Coast by Markus Vink. Pg 77। 











டச்சுக்காரர்க்கு உதவிய பரதவர்



ஆங்கிலேய - பிரஞ்சு கூட்டு படையினருக்கு எதிராக டச்சுக்காரர்க்கு படையுதவி செய்த பரதவர்கள்..!
 
கி.பி. 1672 முதல் கி.பி. 1678 வரை ஐரோப்பியாவில், பிரெஞ்சு நாட்டவர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் இடையே மிகப்பெரிய போர் நடைபெற்று வந்தது. இங்கிலாந்து இப்போரிலே பிரான்ஸ் நாட்டுடன் கூட்டணி வைத்திருந்தது. கி.பி. 1673 ஆம் வருடம் இங்கிலாந்து, பிரானஸ் கூட்டு படையினர் டச்சுக்காரர்கள் வசமிருந்த இலங்கை மீது தாக்குதல் நடத்த இருப்பதாக அபாயம் ஏற்பட்டிருந்தது.

டச்சுக்காரர்கள், பிரான்ஸ் - இங்கிலாந்து கூட்டு படையினருக்கு எதிராக திருநெல்வேலி பரதவர் நாட்டு தலைவர்களிடம் உதவி கேட்டனர். பரதகுல தலைவர்கள் டச்சுக்காரர்களுக்கு ஆதரவாக 500 பரதவர்களை அங்கு அனுப்பி வைத்தனர்.
 
இப்படையை கொண்டு, இலங்கையில் தங்கள் வசமிருந்த கோட்டைகளை, எதிரி படையினரின் தாக்குதலுக்கு எதிராக வலுப்படுத்தினர். படையுதவி செய்த பரதவர்களுக்கு 250 கலம் நெல்லும், 138 கிலோ வெள்ளியும் கொடுத்தனர்.
 
----------------------------------------

ஆதாரம்:-

Encounters on the opposite coast by Markus P.M.Vink Pg 293







பரதவரின் படைபலம்



பரதவர்களின் பழமையான நாட்டமைப்பு & படைபலம்:
 
(விசுவநாத நாயக்கருக்கு முன்)
கி.பி. 1529 முதலே விசுவநாத நாயக்கர், விஜயநகர பிரதிநிதியாக மதுரையில் ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் திருநெல்வேலி அவருக்கு கட்டுபட்ட பகுதியாக இருக்கவில்லை. கி.பி. 1550 மேல் தான் திருநெல்வேலியை விஜயநகர படை உதவியுடன் தனது கட்டுப்பாட்டில் கீழ் கொண்டு வருகிறார். விசுவநாத நாயக்கரின் ஆட்சி திருநெல்வேலியில் ஏற்படும் முன்னரே அங்கு பரதவர்கள் நாட்டமைப்பு, படை பலத்துடன் இருந்ததை பற்றி ஆதாரத்துடன் காண்போம்.

திருநெல்வேலியில் கூட்டப்புளி முதல் வேம்பார் வரையிலான கிராமங்களை உள்ளடக்கியதே பரதவர் நாடு..!

பரதவர் நாடு பற்றி போர்சுகீசியரின் குறிப்பு:-

"மனுவேல் டி மொரையஸ் என்னும் போர்சுகீசியர் கி.பி. 1549 ஜனவரி 3 ஆம் தேதி தான் எழுதிய கடிதத்தில் இந்நிலப்பரப்பை பரதவர் ராஜ்யம் என்றே தான் பதிவு செய்கிறார்" முத்துக்குளித்தலுக்கு இந்நாடு உலகபுகழ்பெற்று விளங்கியதால் பரதவர் நாட்டை மேலைநாட்டு ஆவணங்களில் "முத்துக்குளித்துறை" என்றும் பதிவு செய்திருப்பதை நாம் காணலாம்.

பரதவர்களின் நாட்டமைப்பு பற்றி ஸ்பெயின் நாட்டவரின் குறிப்பு:-
கி.பி. 1542ல் பரதவர் நாட்டுக்கு வந்திருந்த ஸ்பானிஷ் மிஷனரி பிரான்சிஸ் சேவியர் தனது குறிப்பில்.....

"பரதகுல கிராமங்கள் தனி அரசாங்கத்தை கொண்டிருக்கிறது, அங்கு மன்னர்களின் தலையீட்டின்றி முழு அதிகாரமிக்கவர்ளாக பரதகுல தலைவர்களே இருக்கிறார்கள்" என்று குறிப்பிடுகிறார்.

பரதவர்களின் படைபலம்:-
நாடாளும் நட்பு அரசுகள் தங்களது போருக்கு வீரர்கள் தேவைப்பட்டால் பல்லாயிரக்கணக்கான போர்வீரர்களை தயார் செய்யும் கட்டமைப்பிலிருந்தது இந்த பரதவர் நாடு. 
 
எடுத்துக்காட்டாக ....
கி.பி. 1478ல் சிங்கை பரராசசேகரன் என்பவர் யாழ்ப்பாணத்து மன்னராக முடிசூட்டிக் கொண்டார். இம்மன்னர் முதல் மனைவி இராசலட்சுமியம்மாள் மூலமாக சிங்கவாகு, பண்டாரம் என்னும் இரண்டு பிள்ளைகளையும், இரண்டாவது மனைவி வள்ளியம்மை மூலமாக பரநிருபசிங்கம் என்னும் பிள்ளையும், மற்றொரு பெண் மங்கத்தம்மாள் மூலமாக சங்கிலி என்னும் குமாரனையும் பெற்றார்.

முதல் மனைவியின் மூத்த மகன் சிங்கவாகுவை சங்கிலி விசம் வைத்து கொன்று விட்டான். முதல் மனைவியின் இரண்டாவது மகன் பண்டாரத்தையும், அவரின் இரண்டாயிரம் ஆதரவாளர்களையும் சங்கிலி வாளால் வெட்டி கொன்றான்.

இரண்டாவது மனைவியின் மகனான பரநிருபசிங்கத்திடம் அதிகார பங்கீடு செய்து கி.பி. 1519ல் தனது ஆட்சியை தொடங்கினான் சங்கிலி. இது வெகுநாட்கள் நீடிக்கவில்லை, சீக்கிரமே யாழ்ப்பாண அரசை தனக்கென வைத்து கொண்டான் சங்கிலி. கி.பி. 1546ல், பரநிருபசிங்கம் தனது குடும்பம், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் போர்சுகீசியர்களிடம் தஞ்சம் அடைந்தார்.

போர்சுகீசியர்களோ திருநெல்வேலியில் படை பலத்துடன் திகழ்ந்த பரதவர் நாட்டு தலைவர்களிடம் உதவி வேண்டி ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தினார். முடிவில் யாழ்ப்பாணத்தை சங்கிலியிடமிருந்து கைப்பற்றி முறையான வாரிசான பரநிருபசிங்கத்திடம் ஒப்படைப்பதற்க்காக 10,000 போர்வீரர்களை தங்களுக்கு கீழ் திரட்டத் தயார் என்று பரதகுல தலைவர்கள் தெரிவித்தனர்.

மேலும் பரதகுல தலைவர்களின் அறிவுறுத்தலின்படி செப்டம்பர் மாதத்தில் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து செல்ல போர்சுகீசிய பேரரசு முடிவு செய்தது..!

இப்படி பழமையான நாட்டமைப்பு முறை, படைபலம் போன்றவை எல்லாம் விசுவநாத நாயக்கர் திருநெல்வேலியில் கால்பதிக்கும் முன்னரே பரதவர்கள் கொண்டிருந்தனர்.

----------------------------------------
ஆதாரம்: 

1. St. Fransis Xavier His life, His times Vol 3
By Father George Schurhammer Page 334, 371
2. St. Fransis Xavier His life, His times Vol 2 by Father George Schurhammer Page 307




















தாலமி குறிப்பிடும் கரையூர்வர் நாடு



கிரேக்க பயணி தாலமி'யின் குறிப்பில் பரதவர் நாடு..!
 
கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாலமி என்னும் கிரேக்க பயணி தனது பயணக் குறிப்பில் பரதவர் நாட்டை பற்றியும், அதன் முக்கிய நகரங்கள், முத்து குளித்தல் ஆகியவற்றை பற்றியும் பதிவு செய்கிறார்......
 
தாலமியின் குறிப்பு பரதவர் நாட்டை பற்றி கூறும் நான்கு விஷயங்களை இங்கு நாம் பார்ப்போம்.....
 
1. பரதவர் நாடு என்பது இன்றைய திருநெல்வேலி சீமையின் கடற்கரை பகுதி என்று குறிக்கப்படுகிறது. (குறிப்பு: மேற்சொன்ன கிரேக்க பயணி தாலமி தனது குறிப்பில் பரதவர் நாட்டை, பரதவர்களுக்கு வழங்கப்படும் மற்றொரு பெயரான கரையூர்வர் என்ற பெயரில் கரையூர்வர் நாடு என்று பதிவு செய்கிறார்)
 
2. முத்து குளித்தல் நடைபெறும் இடமாக கொற்கை வளைகுடா குறிக்கப்படுகிறது(இது இன்று மன்னார் வளைகுடா என்று அழைக்கப்படுகிறது)
 
3. தூத்துக்குடி, பரதவர் நாட்டின் முக்கிய துறைமுக நகரமாக குறிக்கப்படுகிறது.
 
4. தாமிரபரணி ஆற்று முகத்துவாரத்தில் அமைந்துள்ள, பரதவர் நாட்டின் முக்கிய நகரமான "கொற்கை" வர்த்தக ஸ்தலமாக திகழ்கிறது என்று குறிப்பிடுகிறது.

பரதவர் சமூகத்திற்கு கரையூர்வர் என்ற மற்றொரு பெயர் ஆதிகால தொட்டு உண்டு. இதனை பற்றி பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த காங்கேயனின் வலைவீசி ஓலைச்சுவடியும் பதிவு செய்கிறது பக்கம் எண். 53ல்.

__________________________________

ஆதாரம்:

Ancient India As Described by Ptolemy by J. W. McCrindle. Pg 57










வில்லவராயர்



பரதகுல வில்லவராயர் கல்வெட்டுகள்:

வில்லவராயர் கல்வெட்டு: 1

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் ஐயா "ராவ் சாகிப் குஞ்சன் பிள்ளை"அவர்கள் தனது "Census of India, 1931 Travancore Part 1 பக்கம் எண். 381ல் பரதர் என்ற தலைப்பின் கீழ்......
 
"கத்தோலிக்க சமயத்துக்கு மாற்றப்பட்ட கன்னியாகுமரி பகுதி வில்லவராயர்கள், வில்லவராயர் என்னும் பரதவர்குல மகாராஜாவின் வம்சாவளியினராக தங்களை அடையாளம் காண்கின்றனர்" என்று குறிப்பிடுகிறார்.

மேலும் "ராவ் சாகிப் குஞ்சன் பிள்ளை" கூறுகையில்....

"கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருக்கும் 800 வருடங்கள் பழமையான கல்வெட்டு மேற்கூறிய பரதவர்குல மகாராஜாவின் ஆட்சி அதிகாரத்தை குறித்து நமக்கு சான்று பகர்கின்றன" என்று பதிவுசெய்கிறார்.

வில்லவராயன் என்னும் பட்டப் பெயரை இன்றும் திருநெல்வேலி சீமை மற்றும் நாஞ்சி வளநாட்டில் பரதவர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். "சூசன் பெய்லி" என்னும் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர் தனது "புனிதர்கள், பெண் தெய்வங்கள் மற்றும் அரசர்கள்" என்னும் நூலில்....

"பரதவர்கள் மத்தியில் இன்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் கிரிஸ்துவமல்லாத பரம்பரை பெயர்களாக வில்லவராயர், காலிங்கராயர்,
பூபாலராயர் மற்றும் ராயர் ஆகியவை என்று பதிவு செய்கிறார்.

வில்லவராயர் கல்வெட்டு: 2

மாவட்டம்: திருநெல்வேலி
வட்டம்: பாளையங்கோட்டை
ஊர்: மணப்படைவீடு
அரசு: -
அரசன்: -
வரலாற்று ஆண்டு: கி.பி. 1441
இடம்: முன்றீஸ்வரமுடைய நாயனார் கோவில் மகாமண்டபம் தெற்கு அதிட்டானம்
கல்வெட்டு குறிப்புரை: "மார்த்தாண்டப் பெருமாளான வில்லவராயர்" என்பவருக்கு நொந்தாவிளக்கு எரிவதற்காக கோயில் தேவன் மகள் 100 பணம் வழங்கிய செய்தியைத் தருகிறது.

----------------------------------------

Foot Notes:-

Census of India, 1931 Travancore Part 1 by Rao Sahib N. Kunjan Pillai. Pg 381.











About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com