பாண்டி நாட்டில், மதுரை நாயக்கர்களின் ஆட்சி முறை:
மதுரையில் நாயக்க அரசை உருவாக்கிய விஜயநகர பிரதிநிதி விசுவநாத நாயக்கர்(கிபி1529-63), பாண்டி நாட்டு பகுதிகள் சிலவற்றை 72 பாளையங்களாக பிரித்து, அதனை 72 பாளையக்காரர்களின் கீழ் கொடுக்கிறார். இதனை பற்றி பழங்கால தமிழ் ஓலைச்சுவடி ஒன்றும், கி.பி.1611 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஏசுசபை பாதிரியாரின் கடிதமும் நமக்கு சான்று பகர்கின்றன.
விசுவநாத நாயக்கர் மதுரையிலே 72 கொத்தளங்களோடு கூடிய உட்கோட்டை சுவரையும், புறக்கோட்டை சுவரையும் உருவாக்குகிறார். போர் சமயங்களில் 72 பாளையக்காரர்களுமே தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கொத்தளங்களிலே பொறுப்பேற்று அதனை எதிரியின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க கடமைபட்டவர்களாகும்.
பாளையக்காரர்களின் அரசாங்கம்:-
பாளையக்காரர்கள் தங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள கிராமங்களில் காவல், நிர்வாகம், நீதிபரிபாலணை, வரி வசூல் ஆகியவை செய்து வந்தனர். வசூல் செய்த பணத்தில் மூன்றில் ஒரு பகுதியை நாயக்கர்களுக்கு வரியாக செலுத்திவிட்டு மற்றொரு பகுதியை படைகள் வைத்திருக்கவும், மீதமுள்ள பணத்தை தங்களது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தினர்.
பாளையக்காரர்களுக்கு கீழ் கொடுக்கப்படாத பகுதி சர்கார் நிலங்களாக இருந்தது, இங்கு வரிவசூல், நீதிபரிபாலணை ஆகியவற்றை செய்ய நாயக்கர்களால் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவ்விரண்டு நிர்வாக முறைக்கும் உட்படாத பாண்டிய நாட்டு பகுதிகள் தனியாக இயங்கியது.
(எ.கா) பரவர் நாடு(திருநெல்வேலி), கள்ளர் நாடுகள்(மதுரை)
பரவர் நாடு பற்றி போர்சுகீசிய பயணியின் குறிப்பு:-
மதுரை நாயக்கர்களின் ஆட்சி காலத்தில், பரவர் நாடு வந்திருந்த "பெர்னாவோ கெரேரோ" என்னும் போர்சுகீசிய பயணி தமது நூலில்.....
"பரவர்கள் தங்களது நிலப்பகுதியின் ஆட்சியாளர்களாக இருந்த பரதகுல தலைவர்களின் அரசாங்கத்தின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலப்பரப்பில் காவல், நிர்வாகம், நீதி பரிபாலனை ஆகியவை அனைத்தும் பரதகுல தலைவர்களிடமே இருந்தன" என்று குறிப்பிடுகிறார்.
________________________________
ஆதாரம்:-
1.The history of the Jesuit mission in madurai by J. S. Chandler pg. 2
2.Oriental Historical Manuscripts In The Tamil Language by William Taylor, Missionary Vol II pg:18
3.Portuguese Jesuit Fernao Guerreiro Pg. 108
கி.பி. 1552ல் பரதவர்க்கும் - ஆரியச் சக்கரவர்த்திக்கும் இடையே நடைப் பெற்ற திரிகோணமலை யுத்தம்..!
திருகோணமலை சமஸ்தானம் இலங்கையின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. திரிகோணமலையின் மன்னர் "வன்னிய ராஜா" இறந்தபோது இவரின் மகன் சிறுவனாக இருந்த காரணத்தால் "வன்னிய ராஜா" தம்பி "காபந்து ஆளுனராக" திரிகோணமலை நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.
கி.பி. 1552ல் யாழ்ப்பாண மன்னர் ஆரியச்சக்கரவர்த்தி முதலாம் சங்கிலி (1519-1561) என்பவர் இங்கு படையெடுத்து வந்து திரிகோணமலை நாட்டை கைப்பற்றி தனது ராஜ்யத்துடன் இணைத்ததோடு மட்டுமல்லாமல் எட்டு வயது சிறுவனாக இருந்த "வன்னிய ராஜா" குமாரனை கொலை செய்யவும் முற்பட்டார்.
"காபந்து ஆளுநர்" தனது அண்ணன் மகனை எப்படியோ காப்பாற்றி நாற்பது நம்பிக்கைக்குரிய பிரபுக்களுடன் திருநெல்வேலி பரதவர் நாட்டுக்கு தப்பி சென்றார், அங்குள்ள பரதகுல தலைவர்களிடம் உதவி கேட்டார். தங்களை நம்பி வந்தவர்களை கைவிடும் பழக்கம் பரதகுல சமூகத்திற்கு கிடையாது, எனவே அவருக்கு உதவ முடிவு செய்த பரதகுல தலைவர்கள் தங்களுக்கு கீழ் வெடிமருந்து ஆயுதங்களுடன்கூடிய இராணுவத்தை தயார் செய்கின்றனர்.
இப்படையை கொண்டு ஆரியச்சக்கரவர்த்தி முதலாம் சங்கிலி வசமிருந்த தன்னுடைய திரிகோணமலை நாட்டை தாக்குகிறார் "காபந்து ஆளுநர்''. மேற்சொன்ன தகவல் பிரஞ்சு வரலாற்று ஆசிரியரும் ஏசுசபை பாதிரியாருமான "டோமினிக்" அவர்கள் தனது "புனித பிரான்சிஸ் சவேரியார் வாழ்க்கை வரலாற்று" நூலில் பதிவு செய்தவைகளாகும்..
(இப்போரே தமிழர்கள் வெடிமருந்து ஆயுதங்கள் பயன்படுத்திய முதல் போராகும்..)
००००००००००००००००००००००००००००००००००००००००
ஆதாரம்:-
1,The Life of St Francis Xavier of The Society of Jesus, Apostle of Indies And of Japan. by Father Dominick Bohours, Pg 280
2,History of Ceylon An Abridged Translation of Professor Peter Courtenay's Work by MG. Francis. Pg 80
திரிகோணமலை யுத்தம்
Dev Anandh Fernando
05:40

மணப்பாடு நகரில் தான் பிரபல மிஷனரியும் தமிழ் மொழியின் மகா குருவுமான பாதிரியார் பெஸ்கி (வீரமாமுனிவர்) அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது கல்லறையை வீணாக தேடினேன். ஏனெனில் அனேகமாக இந்நகரத்தை ஆக்கிரமித்திருக்கும் மனல்மேடுகளின் கீழ் அவரை அடக்கம் செய்யப்பட்ட இடமிருக்கும். ஆயர் கால்டுவெல் மணப்பாடு நகரில் தான் வீரமாமுனிவர் அடக்கம் செய்யப்பட்டார் என்று கேள்விப்படுகிறார்.
ஆனால் அது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை நகராக இருக்கும் என்று எண்ணி அங்கு சென்றார். ஆனால் மணப்பாறை நகர மக்களும் அங்கு பணியாற்றிவரும் மிஷனரியும் வீரமாமுனிவர் திருநெல்வேலி சீமை மணப்பாடு நகரில் தான் இறந்து அடக்கம் செய்யப்பட்டதாக கூறினார்கள்.
வீரமாமுனிவர் சரியாக கிபி 1746 ஆம் ஆண்டு மரணமடைந்தார். வீரமாமுனிவர் மணப்பாடு நகரில் கிபி 1582 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சிலுவைநாதர் தேவாலயத்தின் பலிபீடம் பகுதியில் மற்ற மிஷனரிகள் அருகில் அடக்கம் செய்யப்பட்டார். ஆனால் அக்கோவில் தற்போது மணலால் மூடப்பட்டு 15 அடிக்கு கீழ் புதையுண்டு கிடைக்கின்றது.
வீரமாமுனிவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை குறிக்கும் வகையில் எந்த ஒரு கல்லறையும் கட்டப்படவில்லை. தற்போது இருக்கும் சிலுவையார் கோவில் கட்டுமான பணிகளின் போது இரண்டு மிஷனரிகளின் எழும்பு கூடு கிடைத்தது. ஆனால் அது யாருடையது என்ற குறியீடு கிடைக்கப்பெறவில்லை.
மணப்பாடு பரவர்களால் வீரமாமுனிவர் பெரிதும் பாரட்டப்படவில்லை என்று நான் நினைக்கிறேன். அற்புத அடையாளங்கள் செய்யக்கூடியர் என்னும் நற்பெயரைப் பெற அவர் அக்கறை கொண்டிருந்தால் கண்டிப்பாக அவர் கல்லறை பரவர்களால் பாதுகாக்கப் பட்டிருக்கும்.. .. என்று முடிக்கிறார் பிஷப் கால்டுவெல்.
----------------------------------------
Foot Notes:-
La Mission Du Madure Vol 3 By French Jesuit Father Joseph Bertrand. Pg: 59
History of Tinneveli By Bishop Caldwell. Pg: 243.
அச்சும் பதிப்பும், மா. சு. சம்பந்தன். பக்: 81
வீரமாமுனிவர் கல்லறை
Dev Anandh Fernando
11:00

பரவர்களின் வாசற்படி மறியல்
பரவர்களின் உயர்வகுப்பைச் சேர்ந்தவர்களின் திருமணம் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்துக்கள் கடைப்பிடிப்பதைப் போன்றே பல இன்றியமையாத அம்சங்களும் நாட்களும் இந்தச் சடங்குகளில் உள்ளன - இவர்கள் ஒரு காலத்தில் இந்துமதத்தினராக இருந்தனர் என்பதை இது ஐயந்திரிபற எண்பிக்கிறது. இவர்களின் திருமணத்தின் ஒரு விசித்திரமான அம்சம், திருமணச் சடங்கு நடைபெறும் தேவாலயத்திலிருந்து மணமகளின் வீட்டிற்கு, பதாகைகளுடன் ஊர்வலம் செல்வது - இது அவர்களின் மூதாதையர்களின் அரசவம்ச அடையாளமாகக் கருதப்படுகிறது.
அப்பதாகைகளில் பாம்பு, மயில், பனைமரம், சங்கு, சூரியன், யானை, மீன் போன்ற உயிருள்ள மற்றும் உயிரிலிப் பொருட்களின் சாயல்களுடன் கூடிய சித்திரத்தையல் செய்யப்பட்ட இருபத்தொரு கொடிச் சின்னங்கள் உள்ளன. இவை தவிர பெரிய குடை, கவசம் இன்னபிற மணசோடனைகளும் எடுத்துச் செல்லப்படுகின்றன. மணமகன், சாதித்தலைவமோரின் அரச ஆடைகளை ஒத்த 'கபா' என்ற விசேட ஆடையை அணிகிறார். மேலும் அவர் வரும் பாதையில் அவர் செல்ல வெண்நிறத் துணிகள் தரையில் விரிக்கப்பட்டன.
இந்துமதத்திலிருந்து வெளியேறிவிட்டபடியால் முன்னைப்போல, முடிந்தவரை ஒருவன் தனது முறைப்பெண்ணை [தந்தை வழி அத்தை மகளையோ / தாய்மாமன் மகளையோ] திருமணம் செய்துகொள்ளும் முறைக் கல்யாண நடைமுறையை அவர்கள் கடைப்பிடிப்பதில்லை; ஆனால் இந்த நடைமுறையையின் முந்தைய கடைப்பிடிப்பை சுட்டிக்காட்டும் ஒரு சுவையான சடங்கு இன்னும் எப்போதாவது நிகழ்த்தப்பெறுகிறது. இஃது 'வாசபாடி மறியல்' [நுழைவுத் தடை] என்று அழைக்கப்படுகிறது.
மணமகனுக்கும், முறை நடைமுறையையின்படி மணமகளைத் திருமணம் செய்திருக்கவேண்டிய அவளின் உறவினருக்கும் இடையே ஒரு போலி சொற்போர் நடைபெறும். தேவாலய திருமணச் சடங்கு முடிந்து புதிய மணமக்கள் மணமகளின் வீட்டை அடைந்ததும், 'முறை மாப்பிள்ளை' தோன்றி மணமகனை வினவுகிறார்:
"மணம்நிறை மலர் மாலைகளுடன் - மணமகனைப் போல புதிய ஆடைகளும்
தலைப்பாகையுடன் பொருந்தமான சால்வையும் பூண்டு நகர்வீதியில் ஊர்வலமாக ஏன் வந்தீர்கள் என்று சொல்லுங்கள்."
மணவாளன்: "கத்தோலிக்கர்களின் கூட்டமே, என் தரப்பு நியாயத்தைச் சற்று கேளுங்கள்! தெய்வீகக் கன்னியாம் நமது பனிமய அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற தேவாலயத்தில், இன்று காலை நமது அருட்திரு பாதிரியார் எனக்கொரு மணமகளை மணமுடித்தார்; அந்த மணமகளை நாடியே நான் வந்திருக்கிறேன்."
முறை மாப்பிள்ளை: "மணமகளைச் சந்திப்பது சரிதான், அதற்காக நீங்கள் வரத்தான் வேண்டும்; தீபங்களுடன் கூடிய இந்த ஆடம்பர ஊர்வலம் எதற்காக ? இந்தக் கம்பள விரிப்பு, இந்தப் பதாகைகள் மற்றும் இந்த மாபெரும் கூட்டம் எதற்காக? கல்யாணம் ஆனதிலிருந்து இவ்வளவு நேரம் மாப்பிள்ளை காலந்தாழ்த்தியது ஏன்?"
மணவாளன்: "நானிங்கு வருவதற்கான காரணத்தைக் கேட்பீர். நான் இவ்மணமகளை என் மனைவியாக ஏற்றுக்கொள்வது நமது இரட்சகராகிய இயேசுவின் விருப்பம். உங்கள் வீணாடம்பர வாதத்தை நிறுத்த உடன்படுங்கள். என் மணமகளை திருமணப் பந்தலுக்கு வெளியே அழைத்து வாருங்கள்."
முறை மாப்பிள்ளை: "கூடாரத்தில் உள்ள மணமகள் எனக்கு உரிமையான மணவாட்டி. ஆயிரம் பொற்காசுகள், யானைகள், குதிரைகள் மற்றும் கன்றுகளுடன் கூடிய பசுக்களை எனக்குக் கொடுத்தால் நான் அவளை உனக்கு மனைவியாகக் கொடுக்கிறேன்."
மணவாளன்: "நாளைய உதயத்தில் நீ கேட்பதை எல்லாம் தருகிறேன்;
எனது வாக்குறுதியின் அடையாளமாக தற்சமயம் நான் இந்த தங்க மோதிரத்தை உன்னிடம் ஒப்படைக்கிறேன்."
--------------------------------------------------------------------------‐-
Paravans - 'Vasapadi Mariyal'
[The marriage of a member of the upper classes is conducted with much ceremony. The ritual is in many essential features similar to that observed by the Hindus, and dates, no doubt, from the time when the Paravans were a Hindu caste. A peculiar feature of the wedding is the procession from the church (where the rite of marriage is performed) to the bride’s house with virudhus or banners, supposed to be the insignia of the kingly ancestors of the race. The emblems consist of twenty-one flags embroidered with representations of various objects, animate and inanimate, such as a snake, a peacock, a palmyra, a chank, the sun, an elephant, a fish, and so on. In' addition to these a large umbrella, a shield and other trappings are carried. The bridegroom wears a costume called kapa, resembling the state robes of the Jathitalavai-more, and white cloths are spread before him in his path.
Being no longer Hindus, they do not observe the morai system by which a man should always marry, where possible, a particular relation ; but a picturesque ceremony which points to the former observance of this rule is still occasionally performed. It is known as the “ Vasapadi Mariyal — “obstruction of the entrance ” — and consists in a mock contest of words between the bridegroom and the bride’s cousin, who, according to the morai rule, should have taken her in marriage. When the bridegroom reaches the bride’s house, after the church ceremony is over, the “ morai candidate ” appears and asks :—
Tell me why you came here in procession through the town With garlands of sweet-scented flowers —Attired like a bridegroom in head-dress and new cloths With a scarf over all to match.
Bridegroom — Hear, you assembly of Catholics, the justness of my cause !
In the glorious church, dedicated to the Virgin, Our Lady of the Snows, Our holy priest gave me a bride this morning in marriage;
To seek for that bride have I come.
Morai-bridegroom — Meet and right is it that you should come ; But why comes not the bridegroom all this while since the marriage was made ? What means all this pompous procession with torches, This spreading of carpets, these banners and this great gathering ?
Bridegroom — Hear the reason of my coming.
It is the will of Jesus our Saviour that I take the bride to be my wife. A truce to your prating vainglorious chatter ! Bring out the bride to the marriage- tent.
Morai-bridegroom — The bride in the tent is my rightful bride. Give me a thousand pieces of gold, Elephants, horses, and cows with calves, And I give her to you to be your wife.
Bridegroom-- At sunrise tomorrow I give all that you ask ; In token of my promise I surrender this gold ring
*You know well, as the old poetess Auvaiyar says; In making gifts we are the foremost.]
(NS: Liberius Fernando)
வாசற்படி மறியல்
Dev Anandh Fernando
22:47

Digital Rare Book :
Indian Shipping - A history of the sea-borne trade and maritime activity of the Indians from the earliest times.
Published by Longmans, Green & Co., London - 1912
Download pdf book:
https://bit.ly/4edOY3I
Radha Kumud Mukherjee (also spelled Radhakumud Mookerji; (25 January 1884 – 9 September 1963), also known as Radha Kumud Mukhopadhyaya, was an Indian historian and a noted Indian nationalist during the period of British colonial rule. He was the brother of the sociologist Radhakamal Mukerjee.
Mukherjee obtained a doctorate from the University of Calcutta in 1905 and joined the newly established National Council of Education, teaching at the Bengal National College. After 1915, he embarked on a series of tenures at universities in Benares, Mysore, and Lucknow.
He published Indian Shipping: A History of Seaborne Trade and Maritime Activity of the Indians from the Earliest Times in 1912. He was an advocate of the notion of Greater India in which Indian merchants and adventurers with huge fleets brought Indians to Southeast Asia and became the foundation of kingdoms in that region.
He was awarded the Padma Bhushan in 1957 for his contribution to Public Affairs.
- Wiki
Indian Shipping - A history of the sea-borne trade and maritime activity of the Indians from the earliest times.
By Radhakumud Mookerji
Published by Longmans, Green & Co., London - 1912
Download pdf book:
https://bit.ly/4edOY3I
Radha Kumud Mukherjee (also spelled Radhakumud Mookerji; (25 January 1884 – 9 September 1963), also known as Radha Kumud Mukhopadhyaya, was an Indian historian and a noted Indian nationalist during the period of British colonial rule. He was the brother of the sociologist Radhakamal Mukerjee.
Mukherjee obtained a doctorate from the University of Calcutta in 1905 and joined the newly established National Council of Education, teaching at the Bengal National College. After 1915, he embarked on a series of tenures at universities in Benares, Mysore, and Lucknow.
He published Indian Shipping: A History of Seaborne Trade and Maritime Activity of the Indians from the Earliest Times in 1912. He was an advocate of the notion of Greater India in which Indian merchants and adventurers with huge fleets brought Indians to Southeast Asia and became the foundation of kingdoms in that region.
He was awarded the Padma Bhushan in 1957 for his contribution to Public Affairs.
- Wiki
Indian Shipping
Dev Anandh Fernando
21:49

மின் > மீன்
மீன் என்றால் இன்றைய தமிழரில் பலரும் கடலில் வாழும் மீனினையே ( fish) நினைப்பர், உண்மையில் மீன் என்பது கடலில் மின்னும் மீன்களை மட்டுமல்லாது, வானில் மின்னும் மீனினையும் குறிக்கும். சங்க இலக்கியங்களில் மீன் என விண்மீன்கள் குறிக்கப்படுவதனைப் பல இடங்களில் காணலாம். மீன் என்பது தமிழில் இவ்வாறு நீர்நிலை மீனினையும் விண்மீனையும் சேர்த்துக் குறிப்பது போன்றே சிந்துவெளி முத்திரைகளிலும் மீன் என்பது குறித்தது.
அண்மையில் வெளிவந்த 'அகிம்சா' (Ahimsha) எனும் சிந்துவெளி நாகரிகம் பற்றிய நூலிலும் தேவ்தத் பட்நாயக் என்பவர் சிந்துவெளி முத்திரைகளிலுள்ள மீன் குறியீடானது விண்மீனையும் சேர்த்தே குறிக்கின்றது என்பதனை மீனின் உடம்பினில் வரையப்பட்டுள்ள ******* ( நட்சத்திர) வடிவத்தினைக் கொண்டு விளக்குவார். சிந்துவெளி நாகரிகத்துக்கும் தமிழுக்குமான தொடர்பினை வெளிக்கொண்டு வரும் மற்றொரு கூறு இதுவாகும்.
அரப்பா முத்திரைகளில் எழுமீன் (ஏழு மீன்கள்) பற்றியும் குறிப்பிடப்படுவதனைப் படங்களில் காணலாம். எழுமீன் என்பது வானில் எளிதாக வெற்றுக் கண்களால் பார்க்கக் கூடியதாகவுள்ள விண்மீன் கூட்டமாகும். இதனை பெருங்கரடி (Usra Major) என இன்று அழைக்கின்றனர். எழுமீன் பற்றிச் சங்க இலக்கியமான நற்றிணைப் பாடலும் குறிப்பிடுகின்றது.
"மை அற விளங்கிய மணி நிற விசும்பில் கை தொழும் மரபின் எழுமீன் போல" ( நற்றிணை 31 : 1-2) .
மூவேந்தர்களின் சின்னங்களான மீன், புலி, வில் ஆகிய மூன்றுமே சிந்துவெளி முத்திரைகளிலும் முகன்மை வகித்திருப்பதனையும் நாம் இங்கு நோக்கலாம்.
மின்னுவதால் மீன், அதாவது மீன்கள் (விண்மீன்) தாமாக ஒளிரக் கூடியவை, அதனால் மின்னுவதால் மீன் எனப்பட்டது . கோள்கள் அவ்வாறு தாமாக ஒளிர மாட்டாதவை, அவை மீன்களிலிருந்து ஒளியினைக் கொண்டு ஒளிரும், அதனால் கொள்வதனால் 'கோள்' எனப்படுகின்றது. எத்தகைய அறிவார்ந்த பெயரிடல் பார்த்தீர்களா!
மின்னுவதால் மீன்,
கொள்வதால் கோள்,
மீன், கோள் ஆகியன முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்கள்
Star = மீன் = விண்மீன்
நட்சத்திரம்
Planet = கோள் = கிரகம்.
- இலங்கநாதன் குகநாதன்
எழுமீன்
Dev Anandh Fernando
21:44
