வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 9 September 2017

விடிந்தகரை 1.2

அது ஒரு புரட்டாசி மாதம் விஜய வருடம் 
1602 கன்னியாகுமரி அம்மையின் பரிவேட்டைக்கு போய்
பனைப்பெட்டி நிறைய பலகாரங்களும், 
பண்டங்களும் வாங்கிக் கொண்டு
கட்டுமரத்து வழியாக திரும்பி வந்த அந்தக் கூட்டம்,
............................
சந்தானப் பட்டங்கட்டியின் மாமனார்
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்
பிள்ளைதோப்பு நாஞ்சிப் பிள்ளை.
.............................
ஆண் பிள்ளை பிறந்து தொழிலுக்கு போனாலோ
பெண் பிள்ளை பிறந்து ருதுவானாலோ
பாம்படம் அணிவது அந்த காலத்து
பாண்டி பரத்தியரின் வழக்கம்.
....... ......... ...........
உவரியூர் பட்டங்கட்டி
கடலையே கடைவாரம்
பனைமலையையே உடைப்பாராம்
பேயரசி கூட்டத்துக்கெல்லாம் 


பெருவிருந்து வைப்பாராம்
பனங்காட்டு முனியையும்
வேளாகொம்புகொண்டு உதைப்பாராம்
........ ......... ...........
பட்டங்கட்டியின் மண்டைக்குள் சாமிப்பிள்ளையின்
மீதான குரோதம் வெடித்து கிளம்பியது
யார் அந்த சாமிப்பிள்ளை………?
பட்டங்கட்டிக்கும் அவருக்கும் என்ன விரோதம்…?


தொடரும் ...... கடல் புரத்தான்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com